Tuesday, 24 July 2018

தமிழகத்தின் முதல் Scientific corruption ஆரம்பமானது 1981ல்தான். ஆரம்பித்தது MGR.

தமிழகத்தின் முதல் Scientific corruption ஆரம்பமானது 1981ல்தான். ஆரம்பித்தது MGR.

முழு ஆதாரங்களும் 1981-87 வரை நடந்த ஊழலும் MGR இன் இரட்டை வேடங்களும்

ஆதாரங்களுடன் 👇


The anti-corruption warrior had run a reputedly clean government in his first term (June 1977-February 1980) but it proved too good to last. The day on which TASMAC was incorporated as a company, 23 May 1983, can be regarded as the founding date of Tamil Nadu’s scientific system of political corruption. Vesting TASMAC with “the exclusive privilege of wholesale supply of IMFL

Indian-made foreign liquor (IMFL)
for the whole state of Tamil Nadu as per Section 17(C)(1-A)(a) of the Tamilnadu Prohibition Act 1937” proved to be an ingenious idea.

In The Image Trap, a study of what made MGR immensely popular among “the subaltern classes”, MSS Pandian argues that, contrary to the image of the charismatic actor-and-politician being openhanded to a fault, the AIADMK government under him regularly “taxed the poor (and the middle classes) to profit the rich”. Noting that the poor contributed quite heavily to excise revenue, he points out that largely as a consequence of the MGR government relaxing the prohibition on liquor consumption, the share of excise in the total revenue of the state rose sharply, from 1 per cent during 1975-1980 to nearly 14 per cent during 1980-1985. And 80 per cent of this excise revenue came from country liquor, which was mostly consumed by the urban and rural poor. Pandian’s comment is telling:

“The manner in which the AIADMK government implemented a perversely unique liquor policy, which profited the liquor manufacturers enormously, is now well-known. It allowed the liquor manufacturers to decide the price at which they would supply Indian Made Foreign Liquor...to...TASMAC...Unlike anywhere else in India, it was not the manufacturers who paid the excise duty on IMFL in Tamil Nadu but the state government, via...TASMAC. Again, the AIADMK government exempted the liquor manufacturers from paying any excise duty on rectified spirit.”

The creation of TASMAC and vesting it with a monopoly of wholesale supply of Indian Made Foreign Liquor (IMFL) was widely perceived to be an innovative way of financing the state’s welfare schemes, especially MGR’s ambitious nutritious midday meal programme of July 1982, which quickly expanded to become India’s largest in terms of beneficiaries and a model for other states. Less known at the time was the stream of illicit revenues that began to flow from the favoured owners of distilleries and breweries manufacturing the liquor into a political fund that was now at the disposal of the chief minister.

https://scroll.in/article/851760/how-did-political-corruption-begin-in-tamil-nadu-n-ram-has-some-answers



MGR came to power in 1977 and lifted prohibition four years later, only to reintroduce it now, five years afterwards. In 1981, he had changed his mind on the issue because, in the absence of free sale. bootlegging had become so widespread that the administration could no longer hold it down.

In that year, MGR had even liberalised rules for the selection and appointment of new wholesale and retail outlets, both for arrack as well as IMFL. Apart from the smell of legal liquor, there was also more than a breath of scandal that time: the MGR Government was accused of favouring certain liquor barons with licences for wholesale IMFL distribution as also for arrack-bottling plants (INDIA TODAY, October 15, 1982). Today, the MGR Government faces strikingly similar charges.

If the state Government is willing to forego an annual revenue loss of a staggering Rs 200-crore in excise revenue, it is because, apart from other things, there is also political capital to be gained. There are about a crore regular arrack drinkers, with whose wives the liquid is not popular because of the expense and the tensions it causes. MGR clearly had his eye on the women's vote which traditionally welcomes a crackdown on drinking. It also helped counter DMK allegations that he was encouraging growth of the habit in Tamil Nadu.

It had also initially appeared to some in the ruling party that the step was aimed at 'hitting MGR's former cabinet colleague, R.M. Veerappan, who had recently been sacked from the ministry. Speculation on this score was fuelled by the belief that a majority of the arrack vendors were close to the former minister. In fact, AIADMK leaders felt that the chief minister decided to come down heavily on the arrack trade only after first ridding himself of Veerappan.

But the design was much more devious than most people realised. In a state where Swaminathan forcefully talked of enforcing the Directive Principles of the Constitution, the Excise Department's actions seemed totally at variance. While, on the one hand, the department was ordering closure of all arrack shops and, bottling plants, on the other, it was issuing new licences for outlets of IMFL. Between September and December last year, the Excise Department appointed 978 new IMFL dealers in addition to the 953 who already existed to bring the total to 1,931 for the entire state (see chart).



"We are bound to ensure total prohibition. It is a commitment our leader MGR gave to the people of Tamil Nadu."
V.V. Swaminathan minister for excise and information

Charged Karunanidhi: "Liquor trade means money. This Government has made frequent changes in the excise policy only to help a few people. We want total prohibition but under the new law, rich people and expensive liquor have been left out. It is patently obvious that it has been designed to help the IMFL trade.

Indeed, the entire business was handled peculiarly, and particularly odd was the method of selecting new IMFL retail vendors. Applications for licences were invited through advertisements as early as May 1985 and more than 1,900 people responded before the last date, July 31, 1985. At that point, the question of introducing prohibition had not even been raised.

Allotments were to have been made by January 1986 but, instead, the department sat tight on them until September 1986. This unexplained delay strengthened the allegation of the local liquor trade that the MGR Government was under pressure from the IMFL lobby, led by a north India-based 'distillery, to close down the arrack trade and aid the sales of their own products.

Suspicion grew to certainty when the selection of new IMFL vends got underway along with the ban on arrack sales. Moreover, the selection process could only be described as extraordinary. Instead of auctioning outlets to the highest bidder, as is the normal practice with most state governments, the MGR Government preferred to prescribe a beggarly fee of Rs 20,000 per shop.

If auctions had been carried out, the state Government could have earned about Rs 20 crore, assuming a rough going rate of Rs 2 lakh per vend. But by going in for a small flat fee, the state has inexplicably settled to lose Rs 18 crore. Since the excise commissioner was the final arbiter to decide on allotment, inevitably, over a dozen parties have gone to the courts questioning his orders and seeking redress.

As if the gross violation of all established norms in deciding on the sellers was itself not enough, what was also shocking was the sheer number of licences issued. Madras district (population: 32.76 lakh, 1981 census), now has 412 shops selling IMFL compared to a total of 323 until last fortnight - 118 for arrack and 205 for IMFL. In Coimbatore district (population: 30.60 lakh, 1981 census), 132 new IMFL licences were issued, more than doubling the number of liquor shops to 242. The Government, it was apparent, had deliberately and with considerable forethought chosen large towns with sizeable affluent populations to site new liquor shops.



Traders in Tamil Nadu allege favouritism in the selection. According to them, every second application has been rejected on flimsy grounds. An application in Madras, for instance, was turned down because the proposed premises were near a school, That would seem fair reason, except that at least three other vendors in Madras have got the go-ahead although their locations too violate rules and are adjacent to either restaurants, places of worship or schools.

A section of the opposition parties believes that the powerful industrial and liquor lobbies from other states were also instrumental in changing the state Government policy. Tamil Nadu, with an annual production of over 700 lakh litres of raw alcohol, which is required to produce IMFL, is comparatively better placed in alcohol production as compared to other states.

However, since 500 lakh litres were being allotted for arrack production, alcohol-based industries and IMFL units were being denied their full requirement of raw alcohol. Some distilleries had made representations to the state Government on this count and some had even gone to court to get more favourable allocations. But they had had little success.

Now, with the ban on arrack production, 500 lakh litres of raw alcohol has suddenly become available. Though there is no official announcement, according to well-placed sources, the major beneficiaries are not only local industries who have been allotted an additional 150 lakh litres, but also liquor business in other states, which will get the rest. Said V. Gopalsamy, a DMK Rajya Sabha member: "The MGR Government has already made a deal under which the extra alcohol will be allotted to all the liquor manufacturing units in north and western India.

We know these units have been hobnobbing with state Government officials." He also pointed out that it was similar export of alcohol by Karnataka which led to the allegations of corruption against Chief Minister Ramakrishna Hegde's Government.


It was the inauguration of grand corruption in Tamil Nadu – a corrupt set of acts committed at the top level of government that manipulated and distorted policies (prohibition and its relaxation), institutions (TASMAC as the sole wholesale supplier of IMFL), and processes (price-rigging, sweetheart deals, nepotism) to enable leaders to benefit at the expense of the public good.


https://www.indiatoday.in/magazine/indiascope/story/19870131-tamil-nadu-chief-minister-m.g.-ramachandran-reintroduced-prohibition-798461-1987-01-31

Monday, 23 July 2018

கலைஞர் கருணாநிதி: 95 சுவாரஸ்ய தகவல்கள்

கலைஞர் கருணாநிதி: 95 சுவாரஸ்ய தகவல்கள்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி ஆகும்.

கருணாநிதி தம் பெற்றோருக்கு மூன்றாவது குழந்தை. அவருக்கு முன்பாக பெரியநாயகம், சண்முகசுந்தரம் என இரு சகோதரிகள் உண்டு. சண்முகசுந்தரம் அம்மாளின் மகன்கள்தான் முரசொலி மாறனும் முரசொலி செல்வமும். பெரியநாயகம் அம்மாளின் மகன் அமிர்தம்.

கிரிக்கெட் காதலர் கருணாநிதி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், சிறு வயதில் அவருக்கு பிடித்தமான விளையாட்டாக இருந்தது ஹாக்கி. போர்ட் ஸ்கூல் ஹாக்கி டீமிற்காக விளையாடி இருக்கிறார் கருணாநிதி.

கருணாநிதியின் முதல் மேடை பேச்சு 'நட்பு' குறித்து.  எட்டாம் வகுப்பு மாணவராக இருந்த போது (1939) பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டியில் 'நட்பு' என்ற தலைப்பில் பேசினார்.

கருணாநிதி முதன்முதலில் துவங்கிய பத்திரிகையின் பெயர் மாணவ நேசன். 1941ல் வெளியான மாணவ நேசன் ஒரு மாத இதழ்.

முதன் முதலில் கருணாநிதி தொடங்கிய அமைப்பு தமிழ் மாணவர் மன்றம்.

நீதிக்கட்சியை சேர்ந்த அழகிரிசாமியால் தன் சிறுவயதில் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர் கருணாநிதி. அதன் காரணமாகவே தம் மகனுக்கு அழகிரி என்று பெயர் சூட்டினார்.

தான் திராவிட சிந்தனையால் ஈர்க்கப்படாமல் இருந்தால் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருப்பேன் என்று ஒரு முறை கருணாநிதி கூறினார்.



9. எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் நட்பு ஏற்பட்டது சேலம் மாடர்ன் தியேட்டரில்தான்.

10. மூன்று முறை திருமணம் செய்துகொண்டவர் கருணாநிதி . முதல் மனைவி பத்மாவதி. அவகுப் பிறந்தவர், மு.க.முத்து. திருமணமான சில ஆண்டுகளிலேயே மரணமடைந்தார் பத்மாவதி. கலைஞரின் இரண்டாவது மனைவியான தயாளு அம்மாளுக்கு பிறந்தவர்கள் அழகிரி, ஸ்டாலின், செல்வி மற்றும் தமிழரசு. அவரது மூன்றாவது மனைவியான ராஜாத்தியம்மாளுக்குப் பிறந்தவர் கனிமொழி.

11. கருணாநிதி எழுதி முதன் முதலில் அரங்கேற்றப்பட்ட நாடகம், 'பழனியப்பன்'. திருவாரூர் பேபி டாக்கீஸில் 1944ல் அரங்கற்றப்பட்டது.

12. 50களிலிருந்து 70கள் வரை தமிழ்த் திரையுலகில் கோலோச்சிய சிவாஜி கணேசன், எம்.ஜி. ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கும் மிகப் பெரிய வெற்றிப்படங்களை அளித்தவர் கருணாநிதி. சிவாஜிக்கு பராசக்தி, மனோகரா. எம்.ஜி.ஆருக்கு மந்திரி குமாரி,மலைக்கள்ளன் .

13. கருணாநிதி முதன் முதலில் வசனம் எழுதிய திரைப்படம் 1947ல் வெளியான ராஜகுமாரி. இந்தப் படம்தான் முதன் முதலில் எம்.ஜி.ஆர் முன்னணி வேடத்தில் நடித்த படம்.

14. 1947ல் வெளியான ராஜகுமாரி தொடங்கி, 2011ல் வெளியான பொன்னர் - சங்கர் வரை சுமார் 64 வருடங்கள் திரையுலகில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என பல்வேறு துறைகளிலும் பணியாற்றியிருக்கிறார் கருணாநிதி.

15. பராசக்தி படம் வெளிவந்தபோது, அந்தப் படத்தை கிண்டல் செய்து ஒரு இதழில் பரப்பிரம்மம் என்ற பெயரில் கார்ட்டூன் வெளியிடவே, அதே பெயரில் ஒரு நாடகத்தை எழுதி மாநிலம் முழுவதும் நடத்தினார் கருணாநிதி.

16. கருணாநிதி கடைசியாக வசனம் எழுதிய தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ஸ்ரீ ராமானுஜர் - மதத்தில் புரட்சி செய்த மகான். அந்தத் தொடருக்கு அவர் எழுத ஆரம்பித்தபோது அவரது வயது 92. எழுதிவந்தபோதே அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது.

17. கருணாநிதி பத்து சமூக நாவல்களையும் 6 சரித்திர நாவல்களையும் எழுதியிருக்கிறார்.



18. 21 நாடகங்களை கருணாநிதி எழுதியிருக்கிறார். 1957ல் தி.மு.கவுக்குக் கிடைத்த உதயசூரியன் சின்னத்தைப் பிரபலபடுத்துவதற்காக உதயசூரியன் என்ற நாடகத்தை எழுதினார்.


19.இனியவை 20 என்ற பெயரில் பயண நூல் ஒன்றையும் கருணாநிதி எழுதியிருக்கிறார்.

20. கருணாநிதி பணியாற்றிய படங்களின் எண்ணிக்கை 69.

21. கருணாநிதி கதை - வசனம் எழுதி எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் எண்ணிக்கை 9.

22. கருணாநிதியை ஆரம்பகாலத்தில் எம்.ஜி.ஆர் 'ஆண்டவரே' என்று அழைத்திருக்கிறார்.

23. கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன், 1969ல் கருணாதியிடம் பணியில் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக உதவியாளராக இருந்துவருகிறார். இரண்டு முறை கோபித்துக்கொண்டு வெளியேறி, மீண்டும் கருணாநிதியிடம் சேர்ந்திருக்கிறார்.

திராவிட பிரிவினைவாதமும் திராவிட ஜனசங்கமும்

’தேசிய கீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும் ஒன்றா?': சங்கரமடம் கேள்வி

24. கருணாநிதிக்கு 'கலைஞர்' என்ற அடைமொழியை வழங்கியது நடிகவேள் எம்.ஆர்.ராதா தான். கருணாநிதி எழுதிய, 'தூக்குமேடை' என்ற நாடகத்தை பார்த்து இந்த பட்டத்தை வழங்கினார்.

25.இதுவரை 13 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டிருக்கும் கருணாநிதி, இதுவரை ஒரு தேர்தலில்கூட தோல்வியடைந்ததில்லை.

26.சென்னை சேப்பாக்கம் தொகுதியில்தான் அதிகபட்சமாக மூன்று முறை தேர்வுசெய்யப்பட்டுள்ளார் கருணாநிதி. சைதாப்பேட்டை, அண்ணாநகர், திருவாரூர், துறைமுகம் ஆகிய பகுதிகளில் தலா இரண்டு முறை தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

27.1957லிருந்து தற்போதுவரை 60 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துவரும் கருணாநிதி மிகக் குறுகிய காலத்திற்கு சட்ட மேலவை உறுப்பினராக இருந்திருக்கிறார்.

28. 33 வயதில் முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினரானார் கருணாநிதி.



29. கருணாநிதி 45 வயதில் முதலமைச்சராகப் பதவியேற்றார்.

30. கருணாநிதி சட்டமன்றக் கன்னிப் பேச்சே மிகவும் கவனிக்கப்பட்டது. அதில் நங்கவரம் பண்ணை விவசாயிகளுக்காகப் பேசினார் கருணாநிதி. பிறகு இதற்காக 20 நாட்கள் போராட்டமும் நடத்தி, பிரச்சனைக்குத் தீர்வு கண்டார்.

31. தமிழக சட்டப்பேரவையில் தி.மு.க. சட்டமன்றக் கட்சிக் கொறடா, எதிர்க் கட்சி துணைத் தலைவர், பொதுப் பணித் துறை அமைச்சர், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பதவிகளை கருணாநிதி வகித்திருக்கிறார்.

32. முதல்முதலாக (1957) குளித்தலை தேர்தலில் தொகுதியில் போட்டியிட்ட  கருணாநிதி  தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் கே.ஏ. தர்மலிங்கத்தைவிட 8,296 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

33. இரண்டாவது முறையாக அவர் வெற்றி பெற்றது தஞ்சாவூர் தொகுதியில். 1962 சட்டமன்ற தேர்தலில் அவரை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் பரிசுத்த நாடாரை 1,928 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார் கருணாநிதி.

34. இந்த 1962 சட்டமன்ற தேர்தல் குறித்து சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று உண்டு.தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய கருணாநிதி முதல் முதலாக வாக்கு சேகரிக்க சென்றது அவரை எதிர்த்து நின்ற பரிசுத்த நாடார் வீட்டிற்குதான் என்ற தகவலை தருகிறார் தஞ்சாவூரை சேர்ந்த முதியவர் ஒருவர்.

35. 1967 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுதான் திமுக முதல்முதலாக ஆட்சியை பிடித்தது.  சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார் கருணாநிதி. தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் விநாயக மூர்த்தியைவிட 20, 484 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.



36. 1971 ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் அவர் சைதாப்பேட்டை தொகுதியிலிருந்துதான் போட்டியிட்டார்.  தம்மை எதிர்த்த ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் ராமலிங்கத்தை விட  சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வென்றார். கருணாநிதி பெற்ற வாக்குகள் 63,334.

37. 1971ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரை, திமுக மற்றும் காங்கிரஸ் இடையே இருந்த போட்டி, 1977 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக - அதிமுக என்று மாறியது. ஆம், எம்.ஜி ஆர் அதிமுக என்ற கட்சியை தோற்றுவித்து, தனது நீண்டகால நண்பரான கருணாநிதிக்கு எதிராக அரசியல் களத்தில் நின்றார். எம்.ஜி.ஆர் ஆதரவு அலை கடுமையாக வீசியது. இந்த அலையிலும் துடுப்பு போட்டு வென்றார் கருணாநிதி. அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி தன்னை எதிர்த்து போட்டியிட்ட கிருஷ்ணமூர்த்தியைவிட 16, 438 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார். ஆனால், திமுக ஆட்சியை இழந்தது.

38. கருணாநிதி மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தேர்தல் 1980ஆம் ஆண்டு தேர்தல். அண்ணா நகர் தொகுதியில் எச்.வி. ஹண்டேவை எதிர்த்துப் போட்டியிட்ட கருணாநிதி வெறும் 699 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

39. எம்.ஜி.ஆர் மரணத்திற்கு பின் நடந்த 1989 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டார் கருணாநிதி. அதிமுக இரண்டாக உடைந்து ஜெயலலிதா அணி, ஜானகி அணி என்று நின்றது. இந்த தேர்தலில் கருணாநிதி பெற்ற வாக்குகள் 41,632. அவரை எதிர்த்து நின்ற முஸ்லீம் லீக்கின் வஹாப் பெற்ற வாக்குகள் 9641. அதாவது 31,991 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் கருணாநிதி.

40. ஜெயலலிதா முதல்முதலாக முதல்வரானது 1991 சட்டமன்றத் தேர்தலில்தான். ராஜீவ் மரணத்தினால் ஏற்பட்ட அனுதாப அலையினால் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றி கண்டது. துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதியும், எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட பரிதி இளம்வழுதியும் மட்டும்தான் வெற்றி பெற்றனர். கருணாநிதி பெற்ற வாக்குகள் 30932. அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்பு பெற்ற வாக்குகள் 30042.

41. 'ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது' என்ற ரஜினி சொன்னது 1996 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில்தான். அதிமுகவுடனான கூட்டணி தொடர்பாக முரண்பட்ட காங்கிரஸ் தலைவர் ஜி. கே. மூப்பனார் கட்சியை விட்டு வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.  தி.மு.க மற்றும் த.மா.க கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில், சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி, காங்கிரஸ் வேட்பாளர் நெல்லை கண்ணனை 35,784 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். மீண்டும் முதல்வரானார்.

42. தி.மு.கவும் பா.ஜ.கவும் 2001 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்தன. இந்த தேர்தலிலும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 4834 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.



43. தி.மு.க 2006 சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்தது. திமுக அணியில் காங்கிரஸ், பா.ம.க மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்தன. கருணாநிதி சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு 34,188 வாக்குகள் பெற்று வென்றார்.

44. 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், திமுக 31 இடங்களில் மட்டுமே வென்றாலும், திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 50, 249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

45. 2016ஆம் தேர்தலில்தான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். திருவாரூர் தொகுதியில் 68366 வாக்கு வித்தியாசம். மாநிலத்திலேயே இது அதிக அளவு.

கருணாநிதிக்கு ஆ. ராசா உருக்கமான கடிதம்

ஓராண்டிற்குப் பிறகு தி.மு.க. தலைமையகத்திற்கு வந்த கருணாநிதி

46. சட்டசபை விவாதங்களிலும் எப்போதும் சிறப்பாக செயல்பட கூடியவர் கருணாநிதி. ஒரு முறை, "தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருவறைக்குள் செல்ல உரிமை இல்லையே" என்று பேசிக்கொண்டிருந்த கருணாநிதியைப் பார்த்து, "கோயிலுக்கே போகாத கருணாநிதிக்கு இதுபற்றி எதற்குக் கவலை?" என்றார் இந்திய தேசிய காங்கிரஸை சேர்ந்த டி.என்.அனந்தநாயகி. "கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குப் போகிறார்கள். வாதாடுபவர்களும் தானே போக வேண்டும்?" என்றவர் கருணாநிதி.

47. கருணாநிதி முதன்முறையா சட்டமன்றத்தில் பேசிவிட்டு அமர்ந்ததும், அப்போது சட்டப்பேரவை தலைவராக இருந்த யு. கிருஷ்ணாராவ் ஒரு காகிதத்தில், 'Very Good Speech' என்று எழுதி கொடுத்தார்.

48. 1974க்கு முன்பாக முதலமைச்சர்கள் சுதந்திர தினம், குடியரசு தினங்களில் கொடியேற்ற முடியாது. ஆளுனர்தான் அதைச் செய்வார். 1974ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் இது குறித்துப் பேசிய கருணாநிதி, முதல்வர்கள் சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் வழக்கத்தை உருவாக்கினார். 1974 ஆகஸ்ட் 15ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றிய கருணாநிதி, சுதந்திர தினத்தன்று கொடியேற்றிய முதல் முதலமைச்சர்.

49. மனிதர்களை மனிதர்களே இழுத்துச் செல்லும் கை ரிக்ஷா வழக்கம் இந்தியாவின் சில மாநிலங்களி்ல் இன்னும் உள்ள நிலையில், 1973லேயே தமிழகத்தில் அதைத் தடை செய்தார்.

50. 1953ல் திருப்பத்தூரில் நடந்த கார் விபத்தில்தான் கருணாநிதியின் இடது கண் பார்வை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அடுத்தடுத்த விபத்துகளிலும் அதே கண்ணில் அடிபட்டது.



51. அண்ணா மறைவுக்குப் பிறகு முதல்வரான போதுதான் "உடன்பிறப்பே" என முரசொலியில் கடிதம் எழுதத் துவங்கினார் கருணாநிதி. 1971 முதல் "உயிரினும் மேலான உடன்பிறப்பே" என்று பேசவும் துவங்கினார்.

52. கருணாநிதி முரசொலியில் எழுதிவந்த "உடன்பிறப்பே" என்ற கடிதத் தொடர், உலகின் நீண்ட தொடர்களில் ஒன்று. முரசொலி துவங்கியதிலிருந்து, 2016ல் உடல்நலம் குன்றும்வரை இதனை எழுதிவந்தார் கருணாநிதி.

53. உடன்பிறப்பே என விளித்து கருணாநிதி எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை 7,000க்கும் மேல்.

54. `சங்­கத்­தமிழ்', `தொல்­காப்­பிய உரை', `இனி­யவை இரு­பது', `கலை­ஞரின் கவிதை மழை',உட்­பட 150-க்கும் மேலான நூல்­களை கரு­ணா­நிதி எழு­தி­யி­ருக்­கிறார்.

55. உடன்­பி­றப்­பு­க­ளுக்கு இவர் எழு­திய கடி­தங்கள் தொகுக்­கப்­பட்டு 12 தொகு­தி­க­ளாக வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

56. முதல்வராக இருக்கும்போதும், இல்லாதபோதும் அதிகாலையிலேயே பத்திரிகைகளைப் படித்துவிட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு தொலைபேசியில் பேசுவது கருணாநிதியின் வழக்கம்.

57. 'நெஞ்சுக்கு நீதி' என்ற தலைப்பில் தன் வாழ்க்கை வரலாற்றை முரசொலி மற்றும் குங்குமம் இதழில்  எழுதினார் கருணாநிதி.

58. ஒரு சினிமா வசனகர்த்தாவாக கருணாநிதியை உச்சத்திற்கு கொண்டு சென்றது 'பராசக்தி` திரைப்படம்தான்.  இத்திரைப்படம் வசனத்திற்காகவே திரும்ப திரும்ப பார்க்கப்பட்டது.

59. கல்லக்குடி போராட்டம்தான் அவரை அரசியல் தளத்தில் முக்கிய தலைவராக பரிணமிக்க செய்தது. இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கல்லக்குடியில் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து, ரயில் மறியலில் இறங்கினார்.



60. இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு, ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு"  என்று அக்டோபர் 13, 1957 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பேசினார் கருணாநிதி.

61. சென்னையின் மிகப் பிரபலமான ஜெமினி மேம்பாலம் எனப்படும் அண்ணா மேம்பாலம் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் 21 மாதங்களில் கட்டப்பட்டு, 1973 ஜூலை 1ஆம் தேதி போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் நாட்டிலேயே இம்மாதிரி கட்டப்பட்ட மூன்றாவது பாலம் அது.

62. தன் மூளையே தனக்கு டைரி என்பார் கருணாநிதி. அந்தளவுக்கு ஞாபக சக்தி கொண்டவர் அவர்.

63. சி.என். அண்ணாதுரையின் முதலாவது நினைவு நாளின்போது, மத்திய அரசு அவரது புகைப்படத்துடன் தபால் தலை வெளியிட விரும்பியபோது, அவரது கையெழுத்தையும் அந்த புகைப்படத்தின் மீது இடம்பெறச் செய்தார் அப்போது முதல்வராக இருந்தார் கருணாநிதி. "அப்போதுதான் தமிழ் எழுத்துகள் அந்த தபால்தலையில் இருக்கும்" என்றார்.

64. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய "நீராடும் கடலுடுத்த" பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு விழாக்களில் பாடும் வழக்கத்தை 1970ல் கருணாநிதி ஏற்படுத்தினார். முதன் முதலாக திரைப்பட விருது வழங்கும் விழாவில் இந்தப் பாடல் பாடப்பட்டது.

65. சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருவூலத்தில், கருணாநிதி குறித்த அனைத்து தகவல்களும் தொகுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

66. 1970ல் லண்டனில்கூட ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி இருக்கிறார் கருணாநிதி. பாரீசில் நடந்த மூன்றாவது உலகத் தமிழ் மாநாட்டிற்குச் செல்லும் வழியில் இந்த செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.

67. தமிழக முதலமைச்சர்களில் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணங்களை மேற்கொண்டவர் கருணாநிதி. அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் அவர் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்.

68. எம்.ஜி.ஆருக்கு புரட்சி நடிகர் என்ற பட்டத்தைக் கொடுத்தது கருணாநிதிதான்.



69. சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்திற்கு காரணகர்த்தாவாக இருந்தது கருணாநிதிதான்.ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியதும் கருணாநிதிதான்.

70. நாட்டிலேயே முதல் முறையாக 1997லேயே தகவல்தொழில் நுட்பத் துறைக்கென ஒரு கொள்கையை அறிவித்தது கருணாநிதி தலைமையிலான அரசுதான். அந்தத் தருணத்தில் தரமணியில் கட்டப்பட்ட டைடல் பார்க், தமிழகத்தின் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலையே நிகழ்த்தியது.

71. 1959ஆம் ஆண்டு நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் 100ல் 45 இடங்களைப் பிடித்தது தி.மு.க. இதற்காக மோதிரம் ஒன்றை கருணாநிதிக்கு பரிசளித்தார் சி.என். அண்ணாத்துரை.

72. 1967ல் முதன் முதலில் சி.என். அண்ணாதுரை முதல்வரானபோது, அண்ணா, நெடுஞ்சழியன் ஆகியோருக்குப் பிறகு அமைச்சரவையில் மூன்றாவது இடத்தில் பொதுப்பணித்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.

73. நெருக்கடி நிலை காலகட்டத்தில் பத்திரிகைகளுக்கு தணிக்கை முறை அமலில் இருந்ததால், கைதுசெய்யப்பட்ட தி.மு.கவினரின் பட்டியலை வெளியிட யுக்தி ஒன்றைக் கடைப்பிடித்தார் கருணாநிதி. 1976 பிப்ரவரி 3ஆம் தேதி அண்ணா நினைவு நாளன்று அண்ணா சதுக்கத்திற்கு மலர் வளையம் வைக்க வர இயலாதோர் பட்டியல் என்று ஒரு பட்டியலை வெளியிட்டார். அதில் மாவட்டவாரியாக கைதுசெய்யப்பட்டவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது.

74. உடல்நலம் நன்றாக இருந்தவரை, காலை 4.30 மணிக்கு எழுந்து, எல்லாப் பத்திரிகைகளையும் படித்துவிடும் பழக்கம் கொண்டவர் கருணாநிதி. சில சமயங்களில் சம்பந்தப்பட்ட பத்திரிகை அலுவலகங்களுக்கும் அதிகாலையிலேயே அழைத்துப் பேசுவார்.



75. கருணாநிதியை மிகவும் பாதித்த மரணங்களில் முரசொலி மாறனின் மரணம் முக்கியமானது. "அவனுக்கு முன்னாடி நான் போயிருக்கனும்" என்று கருணாநிதி அடிக்கடி கூறுவதாக அவரது உதவியாளர் சண்முகநாதன் சொல்கிறார்.

76. கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு யாரும் தொலைபேசியில் அழைத்து தகவல் பெறமுடியும். தொலைபேசி ஒலித்தவுடன், "வணக்கம், தலைவர் இல்லம்" என்ற குரல் ஒலிக்கும்.

77. கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் வாங்கப்பட்டது, 1955ல். சரபேஸ்வரய்யர் என்பவர் இந்த வீட்டை விற்றார்.

78. கருணாநிதியின் வீட்டில் உள்ள தனி நூலகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உண்டு.

79. தன்னுடைய கோபாலபுரம் இல்லம் தயாளு அம்மாளின் காலத்திற்குப் பிறகு மருத்துவமனையாக இயங்க வேண்டுமென்று கூறி, அன்னை அஞ்சுகம் அறக்கட்டளைக்கு எழுதிக் கொடுத்துள்ளார்.

80. தன் வீட்டை ஒட்டியுள்ள வேணுகோபலா சுவாமி கோவிலுக்கு இதுவரை சென்றதில்லை என்கிறார் கருணாநிதி.

81. தமிழ் ஆண்டு வரிசைக்கு திருவள்ளுவர் ஆண்டு என்ற பெயரை அளித்தவர் கருணாநிதிதான்.

82. உடல் நலம் நன்றாக இருந்த காலகட்டத்தில் பெரும்பாலான நாட்களில் கட்சி அலுவலகத்திற்கு காலை, மாலை என இரு வேளையும் சென்றுவிடுவார் கருணாநிதி.

83. 2018ல்தான் இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு என்ற இலக்கு எட்டப்பட்டது. ஆனால், 1969லேயே இதற்கான முயற்சிகளைத் துவங்கி, நாட்டிலேயே முதலிடம் வகித்தது தமிழ்நாடு.. பல காலகட்டங்களில் தேசிய அரசியலில் கருணாநிதி செல்வாக்கு செலுத்தியிருந்தாலும் ஒரு போதும் நாடாளுமன்றத் தேர்தலில் கருணாநிதி போட்டியிட்டதில்லை.

85. நேரம் தவறாமை கருணாநிதியின் முக்கியப் பண்புகளில் ஒன்று. எந்த ஒரு நிகழ்வுக்கும் குறித்த நேரத்திற்கு முன்பே வந்துவிடுவார் கருணாநிதி.

86. கருணாநிதி செயல்படுத்திய திட்டங்களில் அவருக்கு மிகவும் பிடித்த திட்டங்களில் ஒன்று பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம். 1998ல் மதுரை மாவட்டம் மேலக்கோட்டையில் முதல் சமத்துவபுரம் துவங்கப்பட்டது. 237 சமத்துவபுரங்கள் தமிழகத்தில் அமைக்கப்பட்டன. இதில் தலித்துகளுக்கு 40 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டன.

87. ராஜாஜியில் துவங்கி, டி பிரகாசம், ஓ.பி. ராமசாமி ரெட்டியார், பி.எஸ். குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவத்சலம், சி.என். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம் என 11 முதல்வர்களின் ஆட்சிக்காலத்தில் அரசியல் செய்திருக்கிறார் கருணாநிதி.


88. கருணாநிதி தலைவராக இருந்த காலத்தில் இரு முறை கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டது. முதல் முறை எம்.ஜி.ஆரால். இரண்டாவது முறை வைகோவால். இரு முறையும் கட்சியை மீட்டெடுத்தார் கருணாநிதி.

89. உணவுப் பாதுகாப்பிற்காக, இந்திய உணவுக் கழகத்தைப்போல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை உருவாக்கி வளர்த்தெடுத்தார் கருணாநிதி.

90. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டதுதான். ஆனால், வீடுகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கும் அவரது திட்டம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

91. ஒரு முறை சட்டமன்றத்தில், மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி. சாமி பேச எழுந்த போது, அவரை சுருங்க பேச சொல்வதற்காக, ' அயிரை மீன் அளவுக்குப் பேசவும்' என்று துண்டு சீட்டு  எழுதி கொடுத்தார் கருணாநிதி.

92. 2001-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே கருணாநிதியை கைது செய்யப்பட்டார். ஜூன் 30 - ஆம் தேதி நள்ளிரவு மேற்கொள்ளப்பட்ட அந்த கைது தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. மூத்த தலைவரை கண்ணியமாக நடத்தவில்லை என்று கண்டனங்களும் எழுந்தன.



93. எம்.ஜி.ஆர் ஆட்சியில், தமிழக சட்டசபை சபாநாயகராக க.ராஜாராம் இருந்தார். அப்போது ஒரு விவாதத்தின் போது, எதிர்க்கட்சியான தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து முழக்கமிடுகின்றனர். கூச்சலை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார் சபாநாயகர். ஆனால் கூச்சல் குறையவில்லை. "எப்படியோ போங்க. இனி உங்களை அந்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்" என்று கூறிவிட்டு அமைதியாகி விட்டார் சபாநாயகர். அதன்பின் எழுந்த கருணாநிதி "இவங்களை எல்லாம் ஆண்டவன்தான் காப்பாத்தணும்னு நீங்க சொன்னீங்க. அதான் நான் எல்லோரையும் அமைதிப்படுத்தினேன். ஏன்னா, இதற்கு முன்பு ஆண்டவன் (ஆட்சியில் இருந்தவன்) நான்தானே" என்கிறார். இது போன்ற பல நகைச்சுவையான தருணங்கள் அவரது சட்டமன்ற வரலாற்று பக்கத்தில் உள்ளது.

94. அரசியல் விமர்சனங்களை எள்ளலுடன் எதிர்கொள்ளக் கூடியவர் கருணாநிதி. டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை ஒரு மணி நேரம் குறைத்தது குறித்து கருத்து தெரிவித்து இருந்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ், "நான் கேட்டது அறுவை சிகிச்சை... கருணாநிதி செய்ததோ முதலுதவி" என்று கூறி இருந்தார். இது தொடர்பாக பதில் அளித்த கருணாநிதி, "அறுவை சிகிச்சைக்கு முன்னர் முதலுதவிதான் அவசியம். சாதாரணமாக எல்லாருக்கும் தெரிந்த விஷயம் மருத்துவம் படித்த மருத்துவருக்கு புரியாமல் இருப்பது ஆச்சர்யம்" என்றார்.

95. ”மனசாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது.” - இது அவர் அடிக்கடி மேற்கோள்காட்டிய வரி.

By BBC

Sunday, 22 July 2018

1980 ல் திமுக- காங்கிரஸ் கூட்டணி வர யார் காரணம்?

1978 கடைசியில் சிக்மகளூர், தஞ்சாவூர் MP சீட் காலியாக இருந்தது. இந்திரா தஞ்சையில் போட்டியிட விரும்ப MGR அன்றைய மத்திய அரசுக்கு பயந்து அதை ஏற்கவில்லை. பிறகு சிக்மகளூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார் இந்திரா.

அதன் பிறகே இந்திரா கலைஞருக்கு கூட்டணி அமைக்க தூது அனுப்பினார். கலைஞர் எதிர்த்தாலும் ஆதரித்தாலும் அதில் உறுதியாக இருந்தார் என பாராட்டினார்

அதற்கு பதில் அளித்த கலைஞர், நெருக்கடி நிலைக் கொடுமைகளுக்கு வருத்தம் தெரிவித்தால் கூட்டணி அமைப்பது குறித்து பேசலாம் என்றார். இதையடுத்து நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்ததற்கு வருத்தம் தெரிவித்த இந்திரா, இனி இந்தியாவில் நெருக்கடி நிலைப் பிரகடனம் வரவே வராது என்று உறுதியளித்தார்.


கலைஞர் கேட்டுக்கொண்டதன் பேரில் இந்திரா காந்தி அம்மையார் சென்னை கடற்கரையில் பேசியது சுருக்கமாக

"நங்கள் தவறு செய்துள்ளோம். அதை உணர்ந்து நாங்கள் செய்த தவறுகளை ஏற்றுக்கொண்டு, அந்த தவறுகளால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். நாங்களும் மனிதர்கள் தான். மனிதர்கள் எல்லோரும் தவறு செய்யக்கூடியவர்கள் தான்! தவறுகள் செய்த பிறகு அதை உணர்ந்து, தவறுகளில் இருந்து தங்களை மாற்றிகொள்ள்கிறார்களா என்றேதான் நீங்கள் பார்க்கவேண்டும். தவறுகளை செய்த நான் மக்களுக்கு உறுதிமொழி தருகிறேன். அன்று நடைப்பெற்ற தவறுகள் மீண்டும் நடைபெறாது. என்னுடைய கவனத்திற்கு வராமல் நிறைய காரியங்கள் நடந்தேறியது. பிரதமர் என்ற முறையில் அந்த தவறுகளுக்கு முழு அளவில் தார்மீக பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன். திமுக தலைவர் கருணாநிதி நண்பராக இருந்தாலும் எதிரியாக இருந்தாலும் உறுதியாக இருப்பவர். ஒரு நோக்கத்தைவைத்து, இலட்சியத்தை வைத்து, தேசிய அடிப்படையில் மக்கள் நல்வாழ்விற்கு காங்கிரஸ் திமுக இரண்டு கட்சிகளும் இணைந்து செயல் படவேண்டும்"

காங்கிரஸை ஆதரித்து அதை கைவிட்ட எம்ஜியார் ஜனதாக் கட்சியின் அடிமையாக இருந்தார்

அதன் பிறகே 1980 இல் திமுக- காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டது.

இந்த முட்டாள்கள் கலைஞர் வழிய போய் இந்திராவை வாழ்த்தி வரவேற்றது போல் பேசுகிறார்கள்

Saturday, 21 July 2018

#சர்க்காரியாகமிசன்_கலைஞரின்_ஆண்மைக்கு_கிடைத்த_பரிசு

#சர்க்காரியாகமிசன்_கலைஞரின்_ஆண்மைக்கு_கிடைத்த_பரிசு
கச்சத்தீவு கைவிட்டு போனது MGR இன் கோழைத்தனத்தால் வந்த வினை.

1966 ஜனவரி முதல் மார்ச் 1977 வரை இந்திராதான் இந்தியாவின் பிரதம மந்திரி.

1967 இல் திமுக ஆட்சிக்கு வருகிறது.1969 இல் காங்கிரஸ் உடைகிறது. 1969முதல் 1971 வரை திமுக தயவில் இந்திரா ஆட்சி நடத்துகிறார்.

1971 ல் தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது MP தேர்தலும் நடக்கிறது.

இந்த இரு தேர்தல்களிலும் திமுக இந்திரா காங்கிரஸ் கூட்டு சேர்ந்து மிகப்பெரிய வெற்றிகளை பெறுகிறது.

ஆனால் இந்திரா- கலைஞர் மோதல் இங்கேதான் ஆரம்பம்.
காங்கிரஸ் 15 MP சீட்டும் 30 MLA சீட்டும் கேட்க திமுக 5 முதல் 7 MP தொகுதிகளும் 10 முதல் 15 MLA சீட்டுகள் மட்டுமே தரமுடியும் என தெரிவித்து விட்டது.

பத்து நாட்கள் பேச்சு வார்த்தை எதுவுமே நடக்கவில்லை. கடைசியில் புதுச்சேரி + தமிழ்நாடு க்கு 10 சீட்டை காங்கிரஸ் பெற்று
திமுக- காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது.

ஆனால் அப்போதே திமுகவை ஒழிக்கும் எண்ணம் இந்திராவிற்கு வந்துவிட்டது.

1972 ஆம் ஆண்டு திமுக 184 தொகுதிகளில் வெற்றிபெற்று அசைக்கமுடியாத பலத்துடன் இருந்தது.

இது இந்திராவுக்கு பிடிக்கவில்லை. ஏனெனில், மாநிலத்துக்கு தனிக்கொடி, மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் என்று கலைஞர் பேசிவந்த நேரம்.

திமுகவின் பலத்தை சீர்குலைக்க எம்ஜியாரை இந்திரா அச்சுறுத்தி வந்த நேரம்.

திமுகவை ஒழிக்க இந்திரா எடுத்த ஆயுதம்தான் MGR. வருமானவரித் துறை மூலம் நடவடிக்கை வரும் என பயந்த MGR கலைஞர் மீது பழி போட்டு 1972 நவம்பரில் அதிமுகவை தொடங்கி ஒரு ஊழல் பட்டியல் என பெரிய பட்டியலை தயாரித்து அதை ஜனாதிபதியிடம் கொடுக்கிறார்.

அதாவது பட்டியலை தந்த MGR அதில் எந்த வித ஆதாரத்தையும் இணைக்கவில்லை.

21-5-1972 அன்று தமிழகத்திற்கு  இந்திரா காந்தி வருகிறார்,
அதன் பிறகு 29-5-72, 29-4-73, 9-10-73 ஆகிய நாட்களில் காவேரி பேச்சு வார்த்தை தொடங்குகிறது

அதாவது மே 1972 லேயே காவேரி வழக்கு தற்காலிக வாபஸ் ஆகிறது.

ஆனால் MGR ஊழல் புகார் தந்ததோ நவம்பர் 1972 .

ஊழல் புகாருக்கு பயந்து காவேரி வழக்கை கலைஞர் வாபஸ் பெற்றதாக கூறுகிறார்கள் அறிவிலிகள்😁

இந்திராவின் தீய எண்ணத்தை புரிந்துக் கொண்ட கலைஞர் 1972 க்கு பின்னர் இந்திராவின் நம்பர் 1 எதிரியாக மாறுகிறார்.

1974 இல் கச்சத்தீவை இந்திரா இலங்கைக்கு தாரை வார்த்தபோது அதை தமிழகத்தில் எதிர்த்த ஒரே ஆண்மகன் கலைஞர்தான்.
இந்திராவின் அடிமை MGR ஒரு வார்த்தை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் நெடுமாறன் இருந்த இடம் தெரியவில்லை.

1974 கட்சத்தீவு ஒப்பந்தத்தில் தமிழகத்தின் எந்த உரிமையும் பறிபோகவில்லை என்பதும் அந்த ஒப்பந்தமே இன்றும் சட்டப்படி செல்லாது என்பதே உண்மை.

சர்க்காரியா கமிசன் ஒரு பழிவாங்கும் நடவடிக்கைதான்


1) 1974-ல் மாநில முதல்வர்களுக்கு தேசியக் கொடியை ஏற்றும் உரிமை பெற்றார் கலைஞர்

2)1974 ஏப்ரல் 20ல் தமிழக சட்டமன்றத்தில் திமுக மாநில சுயாட்சி தீர்மானத்தை நிறைவேற்றியது.

3)1975 ஜூன் 12-ஆம் தேதி இந்திராகாந்திக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்ப வழங்க கலைஞர் இந்திராகாந்தி பதவி விலக வேண்டும் என்று பேட்டி அளித்தார்.

4)1975 ஜூன் 27ம் தேதி திமுக செயற்குழுவில் எமர்ஜென்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

5) 1975 ஜூலை 21 தேதி மக்களவையிலும், மாநிலங்களவையிலும் திமுக எம்பிக்கள் எமர்ஜென்சிக்கு எதிராக கண்டன குரல்

6)1975 ஆகஸ்ட் 9,10 மற்றும் டிசம்பர் 28ல் நடைபெற்ற திமுக மாநாட்டில் எமர்ஜென்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

7) எமர்ஜென்சி விதிகளை கலைஞர் சரியாக கடை பிடிக்காதது இந்திராவிற்கு மிகப்பெரிய எரிச்சல்


மேற்கண்ட காரணங்களால் கொண்டுவரப்பட்டதுதான் சர்க்காரியா கமிசன்.

கலைஞரை ஒழிக்க வேண்டும் என்றே தமிழக ஆளுநரிடம் கட்டாயப்படுத்தி அறிக்கையில் ஒப்பம் பெற்றார் இந்திரா.

1976 பிப்ரவரி 15ம் நாள் சென்னை கடற்கரை கூட்டத்தில் பேசிய பிரதமர் இந்திராகாந்தி, இலங்கையுடனான இந்தியாவின் நட்புறவு கெடுவதற்கு கருணாநிதி தான் காரணமாக இருக்கிறார் என்றார்.


நமது கேள்விகள்

1) எமர்ஜென்ஸி போது எமர்ஜென்சியை ஆதரிக்கக் கோரி பலமுறைகள் கலைஞருக்கு தூது அனுப்பினார் இந்திரா.

கலைஞர் நினைத்திருந்தால் இந்திராவுடன் சமாதானமாக போயிருக்க முடியும். சமாதானமாக போயிருந்தால் ஆட்சிக்கலைப்பும் வந்திருக்காது
சர்க்காரியா கமிஷனே வந்திருக்காது என்பது உண்மையா இல்லையா?

2) தன் நலம் கருதியிருந்தால் இந்திராவிற்கு MGR போல ஜால்ரா போட்டு கலைஞர் சர்க்காரியா கமிசனே வரவிடாமல் தடுத்து இருக்க முடியுமே.

கலைஞர் ஆண்மகன் என்பது இப்போதாவது புரிகிறதா?

3) 1972 நவம்பரில் MGR கொடுத்த ஊழல் பட்டியலில் ஆதாரம் இருப்பின் இந்திரா 1972 லேயே சர்க்காரியா கமிசன் போட்டு நடவடிக்கை எடுத்திருக்கலாமே ஏன் எடுக்கவில்லை?

1976 ஜனவரி மாதம் 3 வருடம் கலைஞரின் எதிர்ப்பிற்கிடையே இந்திரா அமைதி காத்தது ஏன்?

4) உண்மையில் கலைஞர் ஊழல் செய்திருந்தால் நேரடியாக போலிஸ் நடவடிக்கை கலைஞர் மேல் 1976 லேயே எடுத்திருக்கலாமே , வழக்கும் போட்டிருக்கலாமே ஏன் போடவில்லை? ஜெ மீது கலைஞர் நேரடியாக வழக்கு போடவில்லையா? தண்டனை பெற்று தரவில்லையா?

5) சர்க்காரியா கமிசன் அறிக்கை முதல் பகுதி 1976 லேயே வெளியிடப்பட்டதே அப்போதே இந்திரா நடவடிக்கை எடுக்காதது ஏன்?

6) 1977 இல் ஆட்சிக்கு வந்த MGR சர்க்காரியா இறுதி அறிக்கையை வைத்து கலைஞர் மீது வழக்கு போடாதது ஏன்?

7) 1980 இல்தான் திமுக- இந்திரா கூட்டு வந்தது. அதன் பிறகு 1984 இல் ராஜீவ் அதிமுகவுடன் கூட்டு வைத்து பிரதமானார்.

இந்த நேரத்திலாவது ராஜீவ் காந்தியும் எம்ஜி ஆரும் சேர்ந்து சர்க்காரியா கமிசன் ரிப்போர்ட் மீது நடவடிக்கை எடுத்து கலைஞர் மீது வழக்கு போட்டு இருக்கலாமே. ஏன் வழக்கு போடவில்லை?


மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல யாராவது தயாரா?

8) எமர்ஜென்சியின் போது நடந்த சர்க்காரியா கமிசன் விசாரணை எப்படி ஒரு பக்க சார்பாக நடந்தது என்பதாவது தெரியுமா?

அரசு சாட்சிகளை விசாரிக்க  கலைஞர் தரப்பிற்கு  அனுமதி இல்லை என்பதாவது தெரியுமா?

பிறகு எப்படி விசாரணை நேர்மையாக இருந்திருக்கும்?

நடந்தது இதுதான்**

MGR 1977 இல் ஆட்சிக்கு வந்ததும் முதலில் அவர் சர்க்காரியா கமிசன் மீதுதான் மிகவும் அக்கறை கொண்டார்.

இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் சர்க்காரியா கமிசனே கலைஞர் மீதான வீராணம் திட்டம் உட்பட முக்கிய ஊழல் குற்றச்சாட்டுகளை ஒத்துக்கொள்ளவில்லை. அப்போதைய முதல்மந்திரி எம்ஜிஆர் 1977 நவம்பர் 15 இல் அப்போதைய அட்வகேட் ஜெனரல் V.P. ராமனிடம் சர்க்காரியா கமிசன் தொடர்பாக அவரது ஆலோசனையை கேட்கிறார். அதற்கு ராமன் வெறும் வழிமுறைகள் கடைபிடிக்கப்படாமை ( impropriety) என்ற ஒரு விசயத்தை வைத்து கலைஞர் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கை எடுப்பது என்பது சாத்தியமும் அல்ல எனவும் அதற்கு பரிந்துரை செய்வதும் இயலாது எனவும் பதிலாக தெரிவித்து விட்டார்.

ஆனால் ஹெலிகாப்டர் மூலம் பூச்சி மருந்து அடித்தது தொடர்பானஎம்ஜிஆரின் குற்றச்சாட்டு வ.எண் 11(B) க்கு மட்டும் நடவடிக்கைக்கு பரிந்துரைத்தார்.

ஆனால் சிபிஐ ஆல் கையாளப்பட்ட அந்த வழக்கும் பதிவு செய்யப்பட்டு போதிய ஆதாரம் இல்லாததால் பின்னர் மத்திய அரசாலேயே வாபஸ் பெறப்பட்டது.

இதுதான் சர்க்காரியா கமிசன் தொடர்பாக நடந்தது. ஆனால் கடந்த 40 வருடங்களாக இந்த நீர்த்து போன உப்பு சப்பில்லாத சர்க்காரியா கமிசன் கதையை வைத்தே கலைஞரை ஊழல்வாதியாக தொடர்ந்து பிரட்சாரம் செய்து வருகிறார்கள்.
ஒரே பொய்யை 2G மாதிரி தொடர்ந்து சொல்ல சொல்ல உண்மை போலவே மனதில் பதிந்து விடும்.

Even the Commission did not accept the major charges including that on Veeranam scheme. The then Chief Minister MGR sought the opinion of the then Advocate General, Mr. V.P. Raman. On November 15, 1977, the AG said it was ``neither advisable nor possible'' to launch prosecution on mere impropriety. Then again, in October 24, 1979, the AG said ``except the allegation 11(B) relating to aerial spraying the others cannot be successfully perused in a criminal prosecution.'' Even the spraying case, which was handled by the CBI, was withdrawn by the Union Government.

The Government could not act on the Commission's recommendations since there was nothing significant in them. Hence, after the DMK came to power, it dropped the charges on November 23, 1989, based on the advise of the then AG, tendered on November 15, 1989

By Antony Parimalam





Friday, 20 July 2018

காமரஜர் காங்கிரசில் இருந்த திராவிட கொள்கையாளர் என்பதை பலமுறைகள் நிரூபித்தவர்.

காமரஜர் காங்கிரசில் இருந்த திராவிட கொள்கையாளர் என்பதை பலமுறைகள் நிரூபித்தவர்.

காமராஜர்  கடவுளை ஏற்றுக்கொள்ளாதவர். மக்களை நேசித்தவர். காங்கிரசில் இருந்தாலும் அசுரர் குலத்தலைவர். காரணம் காங்கிரசிலேயே இருந்த அவாளின் ஆதிக்கத்தை எதிர்த் தவர்  காமராஜர்.

காங்கிரசுக்குள்ளேயே ஆச்சாரியாருக்கு எதிரணியில் இருந்தவர் காமராஜர்.

அதனால், ஆச்சாரியாரின் சம்பந்தியான காந்தி அரிஜன் இதழில் காமராஜரை கிளிக் (சிறீவீஹீமீ) என்ற சொல்லால் குறைவுபடுத்தி விமரிசித்து எழுதினார். சுயமரியாதையால் உந்தப்பட்ட காமராஜர் காந்தியின் மீதே கடுமையாக கோபப்பட்டார்.

தமிழ்நாட்டில் தந்தை பெரியாரால் நடத்தப்பட்ட போராட்டத்தின் காரணமாக அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவர நேர்ந்த போது, அதற்கு காங்கிரஸ் எதிராக இருந்தாலும், அதே காங்கிரசுகாரரான காமராஜர் பெரியாரின் போராட்டத்திற்கு ஆதரவாக பிரதமர் நேருவிடம் பேசினார்.
ஆங்கிலத்தை எடுத்துவிட்டால் இந்தி வந்து அங்கே குந்திக்கும் என்று சொன்னவர் காமராஜர்

 தந்தை பெரியார் காமராஜரை தமிழர்களின் ரட்சகர் என்றும், பச்சைத்தமிழர் என்றும் குறிப்பிட்டார்

வரதராஜூலு அவர்களின் வீட்டில் வைத்து காமராஜரை, முதலமைச்சர் பதவியை ஏற்கச் சொல்லி சம்மதிக்க வைத்தவர் பெரியார்.

குணாளா! குலக்கொழுந்தே! என்று வாழ்த்தியவர் அண்ணா .

யாரை வைத்து குலக்கல்வியை ராஜாஜி கொண்டு வந்தாரோ, அதே சி.சுப்பரமணியத்தை வைத்து அந்தக் குலக்கல்வியை திரும்பப்பெற வைத்தவர் காமராஜர்.

 யாரை கோயிலுக்குள் நுழைய விடமுடியவில்லையோ, அந்த ஜாதியைச் சேர்ந்த அயோத்திதாச பண்டிதரின் மைத்துனரும், இரட்டைமலை சீனிவாசனின் பேரனுமான பரமேஸ்வரனை மடாலய மந்திரியாகப் (அறநிலையத் துறை அமைச்சர்) போட்டு, சிதம்பரம் கோயிலுக்குள் அமைச்சரை வரவேற்க வைத்து, அவருக்கு பரிவட்டமும் கட்டவைத்து பார்ப்பனர்களை பழிவாங்கியவர் காமராஜர்.

ராஜாஜியை அரசியலில் இருந்து ஒழிக்க நினைத்த பெரியாரின் தேர்வே காமராஜர்.

1953 ல் குடியாத்தம் இடைதேர்தலில் தந்தை பெரியார் காமராஜரை குடியாத்தத்தில் போட்டியிட சொல்கிறார்.

பெரியாரின் நோக்கம் பார்பனர் கைகளிலிருந்த அதிகாரத்தை பறிக்கவேண்டும் அதற்கு காமராஜர் தான் சரியான கருவியென தீர்மானித்து செயல்படுகிறார்.

தமிழர்கள் அனைவரும் காமராஜரை ஆதரியுங்கள் என்கிறார் பெரியார்

இதன் மூலம் தமிழர்கள் வேறு பார்பனர்கள் வேறு என்பதை மிகதெளிவாக சொன்னவர் பெரியார்.

அறிஞர் அண்ணாவும்
திமுக தொண்டர்கள் காமராஜரின் வெற்றிக்கு பாடுபடவேண்டுமென கேட்டுக்கொண்டார்.

காயிதெமில்லத்தும் பெரியார் நிற்கவைத்திருக்கிறார் அண்ணா சொல்லிவிட்டார் என காமராஜரை  ஆதரித்தார்.

இப்படி ஒட்டு மொத்த திராவிடர்களின் ஆதரவோடு முதல்வர் ஆனவர்தான் காமராஜர்.

Friday, 13 July 2018

108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் 5600 கோடி ஊழலா? அன்புமணி ராமதாசின் சுகாதாரத்துறை தந்த பதில் என்ன?


108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் 5600 கோடி ஊழலா? அன்புமணி ராமதாசின் சுகாதாரத்துறை தந்த பதில் என்ன?


2008 நவம்பரில் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் 5600 கோடி ஊழல் நடந்துள்ளது என்று இரண்டு NGO க்கள் உச்சநீதி மன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
ஆதாரம்👇
https://m.timesofindia.com/india/Rs-5600-cr-scam-in-ambulance-services/articleshow/3724428.cms

உடனே அலறியடித்துக் கொண்டு அன்புமணியின் சுகாதார துறை சொன்ன பதில் இதுதான்.

2005 இல் கிராமப்புற சுகாதாரத் திட்டம்(NRHM) அறிமுகப்படுத்தப்பட்டது. அதிலிருந்து மாநிலங்களுக்கு பல்வேறு  சுகாதார திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது.  அந்த நிதியை அவர்கள் விரும்பும் 108 ஆம்புலன்ஸ் திட்டம் உட்பட பல சுகாதார  திட்டங்களுக்கு பயன்படுத்துகிறார்கள்.

In some cases, state governments have preferred to operate ambulance services run by their own facilities. In other cases, the state governments have chosen to provide emergency response services through the public-private participation (PPP) route. In both these cases, funds have been released to state governments through the NRHM,’’ எற்று  சுகாதார துறை விளக்கம் அளிக்கிறது.

மேலும் மாநிலங்கள் தங்களுக்கு கிடைக்கும் நிதியினை எப்படி பயன்படுத்துவது என்பது அந்தந்த மாநிலங்களே முடிவெடுக்கிறது. அதில் மத்திய அரசுக்கு எந்த பங்கும் இல்லை என நீதிமன்றத்தில் பதில் அளிக்கிறது.

அதாவது 108 திட்டத்திற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று 2008 ல் நீதி மன்றத்தில் சொல்லியுள்ளது.

ஆதாரம்👇
http://creative.sulekha.com/108-ambulance-services-launched-by-anbumani-ramadoss-rs-5600-crores-scam-exposed_454186_blog

108 திட்டம் நான்தான் கொண்டு வந்தேன் என்ற அன்புமணி ராமதாஸ் அதில் 5600 கோடி ஊழல் என்று வழக்கு வந்ததும் மாநிலங்களே திட்டத்தை தங்கள் விருப்பப்படி  நடைமுறை செய்வதாக உச்சநீதி மற்றத்தில்
Affidavit தாக்கல் செய்தது ஏன்?

2005 ஆம் ஆகஸ்டு 15 அன்று ஆந்திரா காங்கிரஸ் முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டியால் துவக்கப்பட்ட திட்டம்தான் இது.

அந்தத் திட்டத்தின் பயனைப் பார்த்த அன்றைய தேசிய ஆலோசனைக் கவுன்சில் தலைவராக இருந்த அன்னை சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங்கிடம், ‘108 ஆம்புலன்ஸ் திட்டம் ஆந்திர காங்கிரஸ் முதல்வரால் அறிமுகப்படுத்தப்பட்டு ஏழை எளியவர்களுக்கு பயனாக இருக்கிறது. இதை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்’ என்று பரிந்துரை செய்தார்.

அதன்பிறகு கொண்டுவரப்பட்டு திட்டம்தான் 108 ஆம்புலன்ஸ் திட்டம். இது கொண்டுவரப்பட்டபோது அன்புமணி மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார்.
அவ்வளவுதான்.

மற்றபடி இதன் முன்னோடி காங்கிரஸ் முதல்வர் மறைந்த ராஜசேகர ரெட்டி

முதன் முதலில் 2005ஆம் ஆண்டு 108 ஆம்புல்ன்ஸ் சேவை முதன்முதலாக ஆந்திராவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆந்திர மாநில அரசு, Emergency Management and Research Institute(EMRI) நிறுவனம் ஆகியவற்றின் கூட்டுடன் இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு EMRI நிறுவனம் இந்தியாவின் மற்ற மாநில அரசுகளுடன் இணைந்து தனது சேவையை விரிவுபடுத்தியது

இன்று ஆந்திரா, தமிழ்நாடு, குஜராத், உத்ரகாண்ட், கோவா, கர்நாடகா, உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இச்சேவை நடைமுறையில் உள்ளது. இப்போது நாடு முழுவதும் உள்ள 108ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை 4535. இதன் மூலம் ஆண்டுக்குப் பத்து லட்சம் உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.

தமிழ்நாட்டில் 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 15இல் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. இன்று தமிழ்நாட்டில் 629 ஆம்புலன்ஸ்கள் சேவையில் உள்ளதாக EMRIஇன் அறிக்கை சொல்கிறது. இச்சேவை தொடங்கப்பட்ட 2ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 4,11,288 உயிர்கள் காப்பற்றப்பட்டுள்ளன எனத் தமிழ்நாட்டின் சுகாதாரத் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது

இந்த திட்டத்தை விரும்பிய மாநில முதல் மந்திரிகள் மட்டுமே ஏற்றுக்கொண்டனர். கலைஞர் மனது வைக்காதிருந்தால் இத்திட்டம் தமிழகத்தில் வந்தே இருக்காது

அன்புமணி காலத்தில் வந்தது அவ்வளவுதான்.

2005 ஆம் ஆகஸ்டு 15 அன்று ஆந்திரா காங்கிரஸ் முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டியால் துவக்கப்பட்ட  108 ஆம்புலன்ஸ் திட்டத்தை  அன்புமணி ராமதாஸ் நினைத்திருந்தால் 2005 லேயே இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கலாமே  ஏன் செய்யவில்லை.? 2008-09 வரை ஏன் செய்யவில்லை?

காரணம் 108 ஆம்புலன்ஸ் திட்ட செயல்முறை மாநிலங்களின் விருப்பம்

இன்றும் 14 மாநிலங்களில் யூனியன் பிரதேசங்களில் 108 ஆம்புலன்ஸ் திட்டம் கிடையாது.

Antony Parimalam 

Saturday, 7 July 2018

தமிழகத்திற்கு பிரபாகரன் தாயாரை வரவிடாமல் தடுத்தது யார்?

தமிழகத்திற்கு பிரபாகரன் தாயாரை வரவிடாமல் தடுத்தது யார்?

இந்தியாவில் சிகிச்சை பெற பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் விரும்பினார். இதற்காக முறையான விசாவுடன் சென்னைக்கு வந்த அவரை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் மனிதாபிமானம் சற்றும் இல்லாமல் விமானத்திலிருந்து கூட இறங்க விடாமல் தடுத்து திருப்பி மலேசியாவுக்கே அனுப்பி விட்டனர்.

ஏன் தடுக்கப்பட்டார்?

பிரபாகரனின் பெற்றோர்கள் திருச்சியிலிருந்து இலங்கை திரும்பியிருந்த நிலையில், 2003 ஆம் அண்டு மே மாதத்தில், அப்போதைய அதிமுக அரசு, அவர்களுக்கும் தமிழர் தேசிய இயக்கம் உள்ளிட்ட பல அமைப்புக்களுக்கும் இருந்த தொடர்பின் காரணமாக அவர்கள் மீண்டும் இந்தியா வர அனுமதிக்கப்படக்கூடாது என மத்திய உள்துறைக்கு கடிதம் எழுதியிருந்தது.
அந்த அடிப்படையில் மத்திய அரசு பிரபாகரன் பெற்றோர் பெயர்களை இந்தியா வர தடைசெய்யப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது.
அதனால்தான் திருப்பி அனுப்பப்பட்டார்

தங்களின்  அரசியல் லாபம் கருதி  தமிழகத்தில் இருந்த தமிழ் தேசியவாதிகள்
பார்வதி அம்மாள் வருகையை ரகசியமாக வைத்திருந்தனர்.

அவர் வந்தது இரவு 10.45

கலைஞர் நண்பர் ஒருவர் மூலம்  இரவு 12 மணிக்கு தகவல் கலைஞருக்கு கிடைக்கிறது. கலைஞர் உடனே விமான நிலைய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது  பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாக கலைஞருக்கு சொல்லப்படுகிறது.

இதுதான் நடந்தது

நாடாளுமன்றத்தில் பார்வதிஅம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட பிரச்சினை திமுகவாலேயே எழுப்பப்பட்டது
முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு பார்வதி அம்மாள் பிரச்சினை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை, தவிரவும் குற்றப் பின்னணி இல்லாத அவருக்கு, மருத்துவ சிகிச்சைக்காக விசா வழங்கப்பட்டும் அவர் திருப்பி அனுப்பப்பட்டது ஏன் என்று வினவினார்

முதல்வர் கலைஞர் சட்டசபையில்  அரசுக்குத் தெரிவிக்காமல் பார்வதி அம்மாள் வந்து விட்டார்  அவருக்கு சிகிச்சை அளிக்க அனுமதிக்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும் என்றார். அதன்படி மத்திய அரசுக்கும் கடிதம் எழுதினார்.

இதையடுத்து நிபந்தனைகளுடன் பார்வதி அம்மாள் சிகிச்சை பெற மத்திய அரசு அனுமதி அளித்தது. இதை  சட்டசபையில் முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

பார்வதி அம்மாள் பாதுகாப்பு கருதி, அரசின் அரவணைப்பில் அந்த அம்மையார் அரசு குறிப்பிடுகிற மருத்துவமனையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அரசு செலவில் அவர்கள் சிகிச்சை பெற வேண்டும் என்பதுதான் அரசு கூறியிருந்த நிபந்தனை.

ஆனால் மத்திய அரசின் நிபந்தனையுடன் கூடிய சிகிச்சை வாய்ப்பை பார்வதி அம்மாள் தரப்பு நிராகரித்து விட்டது.  திடீரென மலேசியாவிலிருந்து பார்வதி அம்மாள் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கேள்விகள்
1) தமிழக முதலமைச்சருக்கு பார்வதி அம்மாள் வருகையை முன் கூட்டியே தெரிவிக்காமல் மறைத்தது யார்? ஏன்?

2) பார்வதி அம்மாள் வருகையே முதலமைச்சரிடம் தெரிவிக்காமல் அவர் பார்வதி அம்மாள் வருகையை தடுத்ததாக எப்படி கலைஞரை குற்றம் சாட்டுகிறீர்கள்?

3) விமான நிலையம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது மாநில முதல்மந்திரியால் எப்படி ஒரு பயணியின் இந்திய வருகையை தடுக்க முடியும்?

4) பிரபாகரன் பெற்றோர் இந்திய வருகைக்கு தடை வாங்கிய ஈழத்தாய் ஜெயலலிதாவை குறை சொல்லாமல் கலைஞரை குறை கூறுவது ஏன்?

உண்மை என்னவென்றால் பார்வதி அம்மாளை வரவழைத்து அதன் மூலம் அரசியல் லாபம் பார்ப்பதுடன் வசூலிலும் இறங்கி கூத்தடிக்க நினைத்தனர் தமிழ் தேசியவியாதிகள்.

அது நடக்கவில்லை என்றவுடன் கலைஞர் மீது பாய்ந்து பிராண்டுகிறார்கள்