Friday 10 August 2018

கட்சத்தீவு* நடந்தது என்ன? முழுவிபரம்




கட்சத்தீவு*
நடந்தது என்ன?
முழுவிபரம்
பக்தவச்சலம் காலத்திலேயே அப்போது மந்திரியாக இருந்த ராமநாதபுரம் ராஜா முன்னிலையிலேயே 1964 லேயே கட்சதீவை பற்றி பேசி முடிவெடுத்து விட்டனர்.
திடீரென்று இந்திராகாந்தி மந்திரிசபையை கூட்டி கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்படைக்க முடிவெடுத்து விட்டார்.
சட்டப்படி மாநில அரசின் தீர்மானமோ லோக்சபா ஒப்புதலோ பெறப்படவேயில்லை.
ஏன் இந்த அவசரம் தெரியுமா?
முதல் காரணம் 1974 நியூக்லியர் டெஸ்ட்க்கு இந்தியவிற்கு கிடைத்த எதிர்ப்பு.
2வது காரணம் 1976 ல் இலங்கையில் நடைபெற இருந்த
NAM summit. மேலும் president of UNGA பதவி இலங்கைக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு.
அவசர அவசரமாக கட்சத்தீவு ஒப்பந்தம் 26th June,1974 அன்று கொழும்புவிலும்
28 June, 1974 அன்று டெல்லியிலும் கையெழுத்தானது.
ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்
1)ஒப்பந்த விதிமுறைகளின்படி அந்த ஒப்பந்தம் இந்திய சட்டப்படி ratification செய்யப்பட வேண்டும்.
"It shall enter into force on the date of exchange of the instruments of ratification which will take place as soon as possible"
இன்று வரை இந்த ஒப்பந்தம் பார்லிமென்டால் அங்கீகரிக்கப்படவில்லை.
ஒப்பந்தமே அங்கீகரிக்கபடாத நிலையில் இந்த ஒப்பந்தமே இந்தியச் சட்டப்படி செல்லாது
2)This 1974 agreement had secured the rights of Indian fishermen to dry their nets and use Church for religious observance.
3) இந்த ஒப்பந்தத்தின் Article 5 மற்றும் 6 படி கச்சத்தீவு அருகே இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமை ஏற்கப்பட்டிருந்தது.
Article 6 categorically stipulated that vessels of India and Srilanga will enjoy in each others' water such rights as they have traditionally enjoyed therein.
இந்தியாவில் இந்திராவால் 25 June 1975 முதல் 21 March 1977 வரை எமர்ஜென்ஸி காலம் நடந்தது.
திமுக ஆட்சி 1976 ஜனவரியில் கலைக்கப்பட்டது.
இதற்கு பிறகு மன்னார் வளைகுடா பகுதியில் 23.3.1976 இல் இந்திய இலங்கை எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ஆனால் இந்த ஒப்பந்தம் கச்சத்தீவு பகுதிகளை தவிர்த்து மீதமுள்ள பகுதிகளையே உட்படுத்தியது.
அதனால் 1974 மற்றும் 1976 க்கும் சம்பந்தமில்லை.
(In 1976, delimitation of International Maritime Boundary Line (IMBL) was agreed upon as required by the UNCLOS)
ஆனால் 1976 ஏப்ரலில் இந்தியஅரசு வெளியிட்ட அறிவிப்பில் இந்திய மீனவர்கள் இந்திய மீனவர்கள் இந்திய எல்லைக்குள் மீன்பிடிக்க அறிவுறுத்தப்பட்டனர்.
நமது கேள்விகள்
1) இன்று வரை கச்சத்தீவு 1974 ஒப்பந்தம் மத்திய பார்லிமென்டால் அங்கீகரீக்கப்படவில்லை என்பதால் இந்திய சட்டப்படி ஒப்பந்தமே செல்லாது என்பதே உண்மை.
ஒப்பந்தமே செல்லாதபோது கலைஞரை எந்த அடிப்படையில் குறைசொல்கிறீர்கள்?
2) ஒப்பந்தத்தை கலைஞர் மட்டுமே எதிர்த்தார்.
இந்திராவின் அடிமையாக அப்போதிருந்த அதிமுக MGR , காங்கிரஸ் நெடுமாறன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வாயில் விரல் சூப்பிக்கொண்டு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காதது ஏன்?
3) முறையாக இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது 1982 இல்தான் . அப்போது MGR ஆட்சி.
1977-1987 வரை அதிமுக ஆட்சியில் இருந்த அதிமுக கட்சத்தீவை மீட்க எடுத்த நடவடிக்கை என்ன?
4)இன்று ஒப்பந்தத்தை எதிர்த்து கலைஞரை வசைபாடும் எதிர்கட்சிகள்
அன்று இந்திராவுக்கு பயந்து கழிப்பறையில் ஒளிந்து கொண்டது ஏன்?
அன்று ஆண்மையோடு எதிர்த்த திமுக மீது இந்திரா கடும் சினம் கொண்டு 1976 மத்தியில் எமர்ஜென்ஸி மூலம் பழி தீர்த்ததுடன் 1976 ஆரம்பத்தில் திமுக ஆட்சியையே கலைத்து விட்டார்.
1974 இல் தமிழகத்தின் எதிர்கட்சிகள் கலைஞரோடு சேர்த்து ஒற்றுமையாக இந்திராவை எதிர்த்து போராடியிருந்தால் கட்சத்தீவு ஒப்படைக்கப்பட்டதை தடுத்து இருக்கலாமே.
கட்சத்தீவு ஒப்படைக்கப்பட்ட போது திமுகவுடன் சேர்ந்து இந்திராவை எதிர்த்து கருத்து தெரிவிக்காத எவனுக்கும் கலைஞரை கேள்வி கேட்க யோக்கியதை இல்லை
இணைப்பு (கலைஞர் மத்திய அரசுக்கு எழுதிய கடிதம் 2008)

இதுதாங்க 1974 கச்சத்தீவு ஒப்பந்த நகல்.
இதை முழுசா படிங்க.
கலைஞரால் ஒப்பந்தத்தை தடுக்க முடியாது என்பது ஒருபுறம் இருந்தாலும் 1974 ஒப்பந்தத்தினால் தமிழக மீனவன் நலன் காக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.
இணைப்பு :- 1974 கட்சத்தீவு ஒப்பந்த நகல்.👇



No comments:

Post a Comment