Wednesday 20 March 2019

இந்தக் கலைஞர்கருணாநிதியைப் போல விபரம் இல்லாத மனிதர் இந்தியாவிலேயே இருக்க முடியாது.

இந்தக் கலைஞர்கருணாநிதியைப் போல விபரம் இல்லாத மனிதர் இந்தியாவிலேயே இருக்க முடியாது.

1) ஐடிக்கு என தலைமைச்செயலகத்தில் தனித்துறையை 1998ல் உருவாக்கினார்.

2) முதலமைச்சர் தலைமையில் ஐடி டாஸ்க் போர்ஸ் உருவாக்கினார்.

3)
இந்திய மாநிலங்களிலேயே முதன்முதலாக ஐடி பாலிசியை தமிழகம் தான் உருவாக்கியது.

4)
டாக்டர் ஆனந்தகிருஷ்ணனை இ கவர்னன்ஸ் ஆலோசகராக நியமித்துக் கொண்டார்.

5)
அரசுத்துறையை கம்யூட்டர் மயமாக்க முனைந்தார்.

6)
பள்ளிக் கல்வியில் தகவல் தொழில் நுட்பத்தை இணைத்தார்.

7)
தமிழ் மென்பொருளை உருவாக்கிப் பரப்ப முனைந்தார்.

8)
340 கோடியில் டைட்டல் பார்க்கை 2000ம் ஆண்டில் கட்டினார்.

9)
கிண்டி முதல் கேளம்பாக்கம் வரை சைபர் கேரிடார் அமைக்க காரணம் ஆனார்.

10)
டைட்டல் பார்க்கில் மின்சாரம் தடைபடாமல் இருக்க துணைமின்நிலையம் அமைத்தார்.

11)
நாட்டிலேயே முதன்முதலாக தமிழ்நாடு மென்பொருள் நிதி உருவாக்கி மென்பொருள் முனைவோருக்கு முதலீட்டு நிதி கொடுத்தார்.

12)
சிறுசேரியில் வன்பொருள்/ மென்பொருள் பூங்கா அமைத்தார்.

13)
தரமணி முதல் பழைய மாமல்லபுரம் வரையிலான சாலையை ஐடி ஹைவே ஆக்கினார்.

14)
வேர்ல்ட் டெல் நிறுவனத்துடன் பேசி சமுதாய மையங்கள் தமிழகம் முழுக்க அமைக்கத் திட்டமிட்டார்.

15)
பூமிக்கடியில் ஆப்டிக் ஃபைபர் கேபிள் பதித்திடத் தனிக் கொள்கை வகுத்த மாநிலம் தமிழகம்.

16)
கடலுக்கடியில் ஃபைபர் கேபிள் அமைக்கும் பேச்சைத் தொடங்கினார்.

17)
தமிழ்நெட் 1999 மாநாடு நடத்தினார்.
யுனிக்கோட் கன்சோர்டியத்தில் இணைந்த முதல் இந்திய மாநிலம் தமிழகம்.

18)
உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உருவாக்கினார்.

19)
அரசு மேனிலைப்பள்ளிகளில் கணினி மையம் உருவாக்கினார்.

20)
கல்லூரிகளிலும் கணினி பயிற்சி தொடங்கினார்.

21)
தமிழ் இணைய ஆய்வு மையம் அமைப்பு.
டானிடெக் அமைத்தார்.

22)
1996க்கு முன்னால் 34 ஐடி நிறுவனம் தான் தமிழ்நாட்டில் இருந்தது. 96 – 2000 காலக்கட்டத்தில் 632 நிறுவனங்கள் வந்தது.

23)
94ம் ஆண்டு 12 கோடியாக இருந்த மென்பொருள் ஏற்றுமதி 2000ம் ஆண்டில் 1900 கோடி ஆனது.

24)
ஒரே இடத்தில் அனைத்து தொழில்களும் நடக்கும் சிப்காட் உருவாக்கியவர் இவர்.
ராணிப்பேட்டை/ ஓசூர் /ஶ்ரீபெரும்புதூர்/ இருங்காட்டுக்கோட்டை/ கும்மிடிப்பூண்டியில் தொழில்வளாகம் அமைத்தார்.

25)
ஹூண்டாய் வந்தது.

மிட்சுபிசி வந்தது.

ஃபோர்டு வந்தது.

சென்னை இந்தியாவின் டெட்ராய்டு என்று பைனான்சியல் எக்ஸ்பிரஸ் எழுதியது.

இந்தக் கலைஞர் கருணாநிதிக்கு இதெல்லாம் தேவையா?

யாராவது அவரிடம் கேட்டார்களா?

 அனுபவிப்பவர்களாவது நன்றி சொல்கிறார்களா?

இவை எல்லாமே 18 ஆண்டுகளுக்கு முன்னால்…!

நன்றி :-பத்திரிக்கையாளர் திருமாவேலன்

A.Parimalam

2 comments:

  1. Good article!! Has to reach as much as people to understand our thalaivar's actions to improve TN.

    ReplyDelete