Monday 18 March 2019

TTV தினகரன் பாஜக எதிர்ப்பாளரா😜 !!!

TTV தினகரன் பாஜக எதிர்ப்பாளரா😜 !!!

அப்படி சொல்லிக் கொண்டு அவரை ஆதரிக்கும் முஸ்ஸீம் நண்பர்களின் கவனத்திற்கு சில விசயங்கள்

(1)மோடி கேட்காமலேயே மோடியின் காலில் விழுந்து ஆதரவு அளித்தவர் தினகரன்.

ஜனாதிபதி தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவு: டிடிவி தினகரன் அறிவிப்பு

https://tamil.indianexpress.com/tamilnadu/presidential-election-ttv-dinakaran-expressed-his-support-to-bjp/

(2)என்ன இருந்தாலும் மோடி இந்தியாவின் பிரதமர், அவருக்கு கருப்புக்கொடி காட்டக்கூடாது: டிடிவி தினகரன்

https://m-tamil.webdunia.com/article/regional-tamil-news/dinakaran-party-not-participated-in-black-flag-protest-against-pm-118041200004_1.html

(3) இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து வந்த பின்னர் நிருபர்கள் கேட்ட போதுகூட, மத்திய அரசுக்கு எதிராக பேசவில்லை.

‘மத்திய அரசு எனக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி எடுப்பதாக தெரிந்தால் சொல்கிறேன்’ என்று வழுக்கலாக பதில் சொன்னார்.

(4) மதுரையில் முதல் பொதுக்கூட்டம் பேச இருந்த நிலையில், நமது எம்.ஜி.ஆர். இதழில் ‘மோடியா லேடியா?’ என்று ஜெயலலிதா கேட்டதை ஞாபகப்படுத்தி, பாஜக எப்படியெல்லாம் அதிமுகவை உடைக்கிறது என்று கடுமையான விமர்சனங்களோடு கவிதை எழுந்தியிருந்தார், அந்த நாளிதழின் ஆசிரியர், அழகுராஜ் என்ற சித்திரகுப்தன்.

தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை இந்த கவிதை பெற்றுத் தந்தது. ஆனால் டிடிவி தினகரன் வேறு மாதிரி பார்த்தார்.

 ‘நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையில் சில கருப்பு ஆடுகள் புகுந்து விட்டது. கவிதை எழுதிய சித்திரகுப்தன் பணியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார்’ என்று பேட்டியளித்தார்.

 மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிஜேபியை பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.

(5) நீட் தேர்வு போன்ற முக்கிய பிரச்னைகளின் போது கூட அவர், மத்திய அரசுக்கு எதிராக மென்மையான போக்கையே பயன்படுத்தி வந்தார்.

(6) பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் முதலாண்டு நினைவு நாளின் போது கூட, ‘திட்டம் நல்ல எண்ணத்தோடுதான் கொண்டு வரப்பட்டது. ஆனால் செயல்படுத்திய விதம்தான் சரியில்லை’ என்று மழுப்பலாக பதில் சொன்னார்.

எதிர்கட்சிகள் எல்லாம் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய போதும், டிடிவி தினகரன் அதை செய்யவில்லை.

(7) இப்போது கூட அதிமுகவில் உள்ள குழப்பங்களுக்கு பாஜக காரணம் இல்லை என்கிறார்.

இதெல்லாம் வெறும் சாம்பிள்தான்.

2016 தேர்தலின் போது பிடிபட்ட  மூன்று கண்டைனர்களில் என்ன இருந்தது என்பது மோடிக்கு நன்கு தெரியும்

சசி- தினகரன் கூட்டத்தின் மொத்த ஊழல் ஜாதகமும் மத்திய அரசிடம் உள்ளது.

அதனால்தான் தினகரன் பிஜேபியுடன் நட்பை நாடினார். மோடி மட்டும் லேசாக தலையாட்டியிருந்தால் சசி- தினகரன் கூட்டம் மோடியிடம் எப்போதோ சரணாகதி அடைந்திருந்திருப்பார்கள்.

அவ்வளவு பெரிய வீராதி வீரர்கள்
இந்த சசி- தினகரன் கூட்டம்

No comments:

Post a Comment