Friday 23 August 2019

இந்தியாவில் இந்த பொருளாதார தடுமாற்றம் ?

இந்தியாவில் இந்த பொருளாதார தடுமாற்றம் ?

" ஏன் ஓட்டலில் டீ க்கு வரி விதிக்கிறீர்கள் எனக் கேட்டால் வீட்டிலேயே டீ போட்டு குடிங்க" என அரசு சொன்னால் ஓட்டல் தொழில் வளருமா?

ஒரு தொழிலை ஒழிக்க வேண்டுமென்றால் அதிகமாக வரி விதிக்க வேண்டும்.

அதிக வரி விதித்தால் அந்த பொருளின் விலை கூடும்.

விலை அதிகமானால் மக்கள் வாங்குவது குறையும்.அதாவது விற்பனை குறையும்

விற்பனை  குறைந்தால் அந்த பொருளின் உற்பத்தி குறையும்

தொழிலாளர்கள் வேலை இழப்பர்.
வேலை இல்லா திண்டாட்டம் பெருகும்.

மக்களிடம் பணமில்லாததால் அவர்களின் வாங்கும் திறன் குறையும்.

வாங்கும் திறன் குறைவு, பணப்புழக்கம் இல்லாததால் தொழில் நஷ்டமடையும்.

தொழில் நஷ்டமடைந்தால் அரசுக்கு செலுத்தப்படும் வரி குறையும். அரசுக்கு வரி இழப்பே ஏற்படும்.

அரசு பணமதிப்பு இழப்பு செய்ததால் மக்களிடையே பணப் புழக்கம் குறிப்பாக Illegal transfer of money குறைந்தது.

மேலும் GST வரி விதிப்பு என்பது மிகவும் கடுமையாக தொழில்களை பாதித்து விட்டது.

ஆரம்பத்தில் அதிகப்படியான GST வரிவிதிப்பால் அதிக வருமானம் அரசுக்கு வந்ததாக புள்ளி விபரம் வந்தாலும் நீண்ட காலத்திற்கு அது Negative விளைவுகளையே ஏற்படுத்தும்

அதுதான் இப்போது நடந்துள்ளது.

மாறாக வரிகளை குறைத்தால் தொழில்கள் பெருகும். லாபம் கிடைப்பதால் முதலீடு அதிகமாகும்.
வேலைகள் உருவாகும். அதிக பணப்புழக்கம் ஏற்படும். மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும். அதனால் அரசின் வரி வருவாய் அதிகமாகும்

இதுதாங்க பொருளாதாரம்

By Antony Parimalam


No comments:

Post a Comment