Wednesday 9 October 2019

திராவிடமும் திராவிடர்களும்

இந்தியாவில் ஆரியர்கள் நுழைவதற்கு

முன்பே ஒரு இனம் குடியேறி வாழ்ந்து வந்தது.

அந்த இனத்தை திராவிடர் என பெயரிட்டு

அழைத்தார்கள். அந்த இனம் பேசிய 72-80

மொழிகளிலும் தமிழ் கலந்துள்ளதால் அந்த

இனத்தின் தலைமையாக தமிழும் தமிழனும்

பார்க்கப்படுகிறான்.

யார் ஏற்றாலும் ஏற்காவிடிலும் தமிழனே திராவிட

இனத்தின் தலைவன். தமிழே திராவிட

மொழிகளின் தலைமை மொழி.

திராவிடர்களுக்கு பின் இந்தியாவில் குடியேறிய

ஆரியர்கள் திராவிட இனத்தை தங்களின் முதல்

எதிரியாக பாவித்து அவர்கள் மீது போர்தொடுத்து

திராவிட இன மக்களை அடிமையாக்கி

வேதங்களை ..புராணங்களை உருவாக்கி

அவர்களது கலாட்சாரம் மற்றும் அவர்களது

மொழியான சமஸ்கிருதத்தை திராவிட

மொழிகளோடு கலந்து திராவிட மொழிகளை

திராவிட கலாட்சாரத்தை சிதைத்தனர் ஆரியர்கள்

திராவிடர்களை ஏமாற்றி நான்கு வர்ணங்களை

உருவாக்கி அதன் மூலம் மன்னர்களை

அடிமைபடுத்தி ராஜகுருக்களாக மொத்த திராவிட

இனத்தையும் சீரழித்தனர்

தங்களின் சொந்த அடையாளத்தை மறந்த

திராவிட இனத்தோர் இன்று முழுமையாக

ஆரியர்களின் அடிமையாக இந்தியா முழுவதும்

குறிப்பாக தென் இந்தியாவில் வாழ்கின்றனர்

ஆங்கிலேய ஆட்சியில் ஆரியர்களின்

அடக்குமுறையை எதிர்த்து மதராஸ்

சமஸ்தானத்தில் திராவிடர்கள் அடிமைகளாக

வாழ்வதை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட

இயக்கத்திற்கு திராவிட இயக்கம் என

பெயரிடப்பட்டது.

ஆரிய அடிமைத்தனத்தில் இருந்து விடுபடவே
 " திராவிடம் " என்ற தத்துவம் உருவானது

மொழி அடிப்படையில் தமிழ்நாடு உருவான பின்

திராவிடத்தை தன் பெயரில் வைத்துள்ள திமுக

" திராவிடம்" என்ற தத்துவத்தை முன்னெடுத்து

செயல்பட்டு வருகிறது.

இதை பெரிய தவறாக காண்பிக்கவும் திராவிடம்

மற்றும் திராவிடர் போன்ற வார்த்தைகளை

தவறான இழிவான வார்த்தைகளாக காட்ட சிலர்

முயற்சிப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

No comments:

Post a Comment