Friday 20 July 2018

காமரஜர் காங்கிரசில் இருந்த திராவிட கொள்கையாளர் என்பதை பலமுறைகள் நிரூபித்தவர்.

காமரஜர் காங்கிரசில் இருந்த திராவிட கொள்கையாளர் என்பதை பலமுறைகள் நிரூபித்தவர்.

காமராஜர்  கடவுளை ஏற்றுக்கொள்ளாதவர். மக்களை நேசித்தவர். காங்கிரசில் இருந்தாலும் அசுரர் குலத்தலைவர். காரணம் காங்கிரசிலேயே இருந்த அவாளின் ஆதிக்கத்தை எதிர்த் தவர்  காமராஜர்.

காங்கிரசுக்குள்ளேயே ஆச்சாரியாருக்கு எதிரணியில் இருந்தவர் காமராஜர்.

அதனால், ஆச்சாரியாரின் சம்பந்தியான காந்தி அரிஜன் இதழில் காமராஜரை கிளிக் (சிறீவீஹீமீ) என்ற சொல்லால் குறைவுபடுத்தி விமரிசித்து எழுதினார். சுயமரியாதையால் உந்தப்பட்ட காமராஜர் காந்தியின் மீதே கடுமையாக கோபப்பட்டார்.

தமிழ்நாட்டில் தந்தை பெரியாரால் நடத்தப்பட்ட போராட்டத்தின் காரணமாக அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவர நேர்ந்த போது, அதற்கு காங்கிரஸ் எதிராக இருந்தாலும், அதே காங்கிரசுகாரரான காமராஜர் பெரியாரின் போராட்டத்திற்கு ஆதரவாக பிரதமர் நேருவிடம் பேசினார்.
ஆங்கிலத்தை எடுத்துவிட்டால் இந்தி வந்து அங்கே குந்திக்கும் என்று சொன்னவர் காமராஜர்

 தந்தை பெரியார் காமராஜரை தமிழர்களின் ரட்சகர் என்றும், பச்சைத்தமிழர் என்றும் குறிப்பிட்டார்

வரதராஜூலு அவர்களின் வீட்டில் வைத்து காமராஜரை, முதலமைச்சர் பதவியை ஏற்கச் சொல்லி சம்மதிக்க வைத்தவர் பெரியார்.

குணாளா! குலக்கொழுந்தே! என்று வாழ்த்தியவர் அண்ணா .

யாரை வைத்து குலக்கல்வியை ராஜாஜி கொண்டு வந்தாரோ, அதே சி.சுப்பரமணியத்தை வைத்து அந்தக் குலக்கல்வியை திரும்பப்பெற வைத்தவர் காமராஜர்.

 யாரை கோயிலுக்குள் நுழைய விடமுடியவில்லையோ, அந்த ஜாதியைச் சேர்ந்த அயோத்திதாச பண்டிதரின் மைத்துனரும், இரட்டைமலை சீனிவாசனின் பேரனுமான பரமேஸ்வரனை மடாலய மந்திரியாகப் (அறநிலையத் துறை அமைச்சர்) போட்டு, சிதம்பரம் கோயிலுக்குள் அமைச்சரை வரவேற்க வைத்து, அவருக்கு பரிவட்டமும் கட்டவைத்து பார்ப்பனர்களை பழிவாங்கியவர் காமராஜர்.

ராஜாஜியை அரசியலில் இருந்து ஒழிக்க நினைத்த பெரியாரின் தேர்வே காமராஜர்.

1953 ல் குடியாத்தம் இடைதேர்தலில் தந்தை பெரியார் காமராஜரை குடியாத்தத்தில் போட்டியிட சொல்கிறார்.

பெரியாரின் நோக்கம் பார்பனர் கைகளிலிருந்த அதிகாரத்தை பறிக்கவேண்டும் அதற்கு காமராஜர் தான் சரியான கருவியென தீர்மானித்து செயல்படுகிறார்.

தமிழர்கள் அனைவரும் காமராஜரை ஆதரியுங்கள் என்கிறார் பெரியார்

இதன் மூலம் தமிழர்கள் வேறு பார்பனர்கள் வேறு என்பதை மிகதெளிவாக சொன்னவர் பெரியார்.

அறிஞர் அண்ணாவும்
திமுக தொண்டர்கள் காமராஜரின் வெற்றிக்கு பாடுபடவேண்டுமென கேட்டுக்கொண்டார்.

காயிதெமில்லத்தும் பெரியார் நிற்கவைத்திருக்கிறார் அண்ணா சொல்லிவிட்டார் என காமராஜரை  ஆதரித்தார்.

இப்படி ஒட்டு மொத்த திராவிடர்களின் ஆதரவோடு முதல்வர் ஆனவர்தான் காமராஜர்.

No comments:

Post a Comment