Tuesday 3 July 2018

கலைஞரின் சொத்தை பற்றி கேள்வி கேட்கும் அதிமுக பாமாகா ,நாம் தமிழர், பாஜா கட்சியினரே

கலைஞரின் சொத்தை பற்றி கேள்வி கேட்கும் அதிமுக பாமாகா ,நாம் தமிழர், பாஜா கட்சியினரே...... தங்கள் தலைவர்கள் கட்சி ஆரம்பிக்கும் முன்பு என்ன சொத்து வைத்திருந்தனர்.?

தங்கள் தலைவர்கள் கட்சி ஆரம்பிக்கும் முன்பு என்ன சொத்து வைத்திருந்தனர்.?

இன்று அவர்களிடம் என்ன சொத்துக்கள் உள்ளது என என்றாவது சிந்தித்தது உண்டா?
அதை அறிந்துக் கொள்ள முயன்றது உண்டா?

ஆட்டு மந்தைகள் போலத்தானே இருக்கிறீர்கள்.

உங்கள் தலைவர்கள் அக்மார்க் யோக்கியர்கள் என்பதை உறுதி செய்த பின்தானே நீங்கள் மற்றக் கட்சித் தலைவர்களை கேள்வி கேட்க முடியும்?

உங்கள் தலைவர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதை மறக்க வேண்டாம் ஆட்டு மந்தைகளே.

கொஞ்சம் மூளையை உபயோகிங்க.

1)1976 ஜனவரியில் திமுக ஆட்சியை கலைத்த இந்திராவால் ஏன் எமர்ஜென்சி காலத்திலேயே கலைஞர் மீதான குற்றச்சாட்டுகளின் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை? ஏன் வெட்டித்தனமா கமிசன் போடனும்? ஒரு FIR கூட போட முடியாதது ஏன்?

2) 10 வருசம் ஆட்சியிலிருந்த MGR ரால் கலைஞர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதது ஏன்?

3)1991 இல் ஆட்சியை பிடித்த ஜெயலலிதா பழிவாங்காத ஆளே கிடையாதே.
கலைஞர் மீது 1996 வரை எந்த நடக்கையையும் எடுக்க முடியாதது ஏன்?

4) 1996 முதல் 2016 வரை சொத்துக்குவிப்பு வழக்கால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஜெ மற்றும் சசி குடும்பத்தினர்  கலைஞர் மீது மிக மோசமான கோபத்தில் இருந்திருப்பார்கள்.

10 வருட ஆட்சி அதிகாரம் அவர்கள் கையில்தானே இருந்தது.

 கலைஞர் குடும்பச்சொத்தை நீங்களெல்லாம் பதிவு போடும் போது அந்த விபரம் கலைஞரை பழிவாங்க காத்திருந்த உளவுத் துறையையே கையில் வைத்திருந்த  அவர்களுக்கு தெரியாதா?

ஏனென்றால் கலைஞர் சொத்துக்கள் என நீங்கள் போட்ட பட்டியலே டுபாக்கூர்தான்.

 18 வயது முதல் 90 வரை 72 வருடங்கள் ஆண்டுகள் உழைத்தவருக்கு சொத்துக்கள் இல்லாமலா இருக்கும்?

அவற்றுக்கு முறையாக கணக்கு காண்பித்திருந்ததால்தான் ஜெயாவினால் கலைஞர் மீது ஒரு
FIR கூட போடமுடியவில்லை.

கலைஞரால் 20 வருடம் நிம்மதியிழந்த சகல அதிகாரம் படைத்த ஜெயலலிதாவாலேயே
எதுவும் செய்ய முடியாத போது
இந்த சில்லரை கட்சி மூடர்கள் தினம் தினம் கலைஞரை பற்றி கதை கட்டுவது கேடு கெட்ட
#மொள்ளமாரித்தனமே
Antony Parimalam

No comments:

Post a Comment