Sunday 7 April 2019

கடந்த காலங்களில் வன்னியர்களுக்கு நன்மை செய்தவர்கள் திமுகவா? அதிமுகவா?

அய்யா மருத்துவர் ராமதாசே
கடந்த காலங்களில் வன்னியர்களுக்கு நன்மை செய்தவர்கள் திமுகவா? அதிமுகவா?

1)
*வன்னியர் சங்கம் இட ஒதுக்கீடு கேட்டு போராடியபோது ஆட்சியில் இருந்தவர்கள் யாருமே உங்களை அழைத்துப் பேசாத நிலையில் உங்களை அழைத்து கோரிக்கையை ஏற்று வன்னியர்களுக்கும் நம்மைப்போல் மிகவும் பின்தங்கிய 107 சாதியினருக்கும் MBC என பிரித்து 20% இடஒதுக்கீடு தந்தது திமுகவா? அதிமுகவா?

2)
*அதிமுக ஆட்சியில் ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் வன்னியர்கள் மீது போடப்பட்ட 11ஆயிரம் வழக்குகளை தள்ளுபடி செய்தது திமுகவா? அதிமுகவா?


3)
*ஒருவார சலைமறியலில் உயிர் இழந்த 24 வன்னியர்கள் குடும்பத்துக்கு 3 லட்சம் நிதியும், மாதம் 3000 பென்ஸனும் வழங்கியது திமுகவா? அதிமுகவா?


4)
*சட்டமன்றத்தில் வன்னியர்கள் மரம் வெட்டிகள் என்று சொன்ன ஜெயலலிதாவுக்கு, இல்லை வன்னியர்கள் இட ஒதுக்கீட்டுப் போராளிகள் என்று அதே சட்டமன்றத்தில் முழங்கியது (கலைஞர் ) திமுகவா? அதிமுகவா?

5)
*ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நீங்கள் போராட்டம் நடத்திய போது உங்களை வேலூர் சிறையில் அடைத்தாரே! அப்போது உங்கள் துணைவியார் சரஸ்வதி சென்று ஜெயலலிதாவை சந்தித்து என்கணவரை விடுதலை செய்யுங்கள் அவர் உடல் நலமில்லாமல் இருக்கிறார் என்று கேட்டதாகவும், பொதுவாழ்க்கைக்கு வருபவர்கள் இதற்கெல்லாம் தயாராக இருக்கவேண்டும் என்று சட்டமன்றத்திலேயே கிண்டல் செய்தவர் ஜெயலலிதாவா? கலைஞரா?


6)
*வன்னியர் சமுதாயத் தலைவர் திரு. ராமசாமி படையாச்சியாருக்கு சென்னையில் சிலை வைத்தது திமுகவா? அதிமுகவா?


7)
*தென்னாற்காடு மாவட்டமாக இருந்ததை இரண்டாகப் பிரித்து ஒரு மாவட்டத்திற்கு திரு. இராமசாமி படையாச்சியார் மாவட்டம் என பெயர்வைத்தது திமுகவா? அதிமுகவா?


8)
*ஒருசாதிக்கு ஒரு மாவட்டமா என அரியலூர் மாவட்டத்தை எடுத்த ஜெயலலிதாவின் ஆணையை ரத்துசெய்து அரியலூரை தனி மாவட்டமாக அறிவித்தது (கலைஞர்) திமுகவா? அதிமுகவா?


9)
*வன்னிய வள்ளல்களின் (செங்கல்வராய நாயக்கர் அரக்கட்டளை) சொத்துக்களை ஒருங்கிணைத்து வன்னிய அறக்கட்டளை அமைத்துக்கொடுத்தது திமுகவா? அதிமுகவா?

10)
*பிற்படுத்தப்பட்டோர் & மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என தனி இலாக்காவை துவங்கி அதற்கு ஒரு அமைச்சரையும் நியமித்து ( எம். ஆர். கே. பன்னீர்செல்வம் ) அந்தத்துறையில் முறையாக இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறதா என கண்காணித்தது திமுகவா? அதிமுகவா?


11)
*மூன்று ஆண்டுகளுக்கு முன் மாமல்லபுறத்தில் நடைபெற்ற வன்னியர் இளைஞர் மாநாட்டின்போது ஏற்பட்ட கலவரத்தில் வன்னியர்கள் மீது சுமார் 150 வழக்குகள் போட்டது திமுகவா? அதிமுகவா?


12)
*மாமல்லபுரம் கலவரத்தில் சுமார் 8000 வன்னியர்கள் மீது வழக்கு போட்டது திமுகவா? அதிமுகவா?


13)
*அதே சம்பவத்தில் 122 வன்னியர்களை குண்டர் சட்டத்திலும், தேசியபாதுகாப்பு சட்டத்திலும் கைது செய்தது திமுகாவா? அதிமுகவா?


14)
*அந்த விழாவே இனி மாமல்லபுரத்தில் வன்னியர்கள் நடத்தக்கூடாது என தடை விதித்தது திமுகவா? அதிமுகவா?


15)
*முதன் முதலாக தேர்தலிலேயே நிற்காமல் அன்புமணிக்கு மாநிலங்களவை உறுப்பினர் தந்து மத்தியில் சுகாதாரத்துறை கேபினேட் அமைச்சர் பதவியும் வாங்கித்தந்தது திமுகவா? அதிமுகவா?


இப்படி பலவழிகளில் வன்னியர்களுக்கு உதவிய திமுகவின் பக்கம் ஒட்டுமொத்த வன்னியர்களும் நிற்கிறார்கள்.

நீங்களோ எச்சை சீட்டுக்கும், பிச்சை நோட்டுக்கும் பச்சையாய் விலை பேசி பாமகவை வித்து விட்டீர்கள்.
'நன்றியை நான்மறவேன்'

நன்றி
மு.ஞானமூர்த்தி

Friday 5 April 2019

நீட் தேர்வின் கொடூர முகம்...


நீட் தேர்வின் கொடூர முகம்...
மருத்துவப்படிப்பில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தனைபேர்? ஆர்.டி.ஐ. தரும் அதிர்ச்சித் தகவல்
தமிழகத்தில், அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நீட் தேர்வு தகர்த்து வருகிறது.
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில், 2018-19-ம் கல்வி ஆண்டில், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 4 மாணவர்களுக்குத்தான் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது.
அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்தவர்களில் 3 பேருக்குத்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.
தனியார் பள்ளி மாணவர்களில் 20 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.
அதேநேரத்தில், சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களில் 611 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.
மேலும், தமிழகத்தின் பல்வேறு நகரங்களின் இருப்பிடச் சான்றிதழைச் சமர்ப்பித்து, வெளிமாநிலங்களில் பள்ளிப் படிப்பை முடித்த 191 மாணவர்களுக்கு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளதாக RTI தகவல் மேலும் தெரிவிக்கிறது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஒரே ஒரு மாணவருக்குத்தான் இடம் கிடைத்துள்ளது.
அதேநேரத்தில் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 3 பேருக்கும், சி.பி.எஸ்.இ பள்ளிகளைச் சேர்ந்த 283 பேருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.
தமிழக இருப்பிடச் சான்றிதழை சமர்ப்பித்து, வெளிமாநிலங்களில் பள்ளிப் படிப்பை முடித்த 70 பேருக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.
மேலும், கடந்த ஆண்டுகளில் மருத்துவப் படிப்பை முடித்து, இந்த ஆண்டு அரசு மருத்துவக்கல்லூரிகளில் 1,277 பேருக்கும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 557 பேருக்கும் இடம் கிடைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறிவியல் பாடத்தை எடுத்துப் படித்த 3 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களிலிருந்து, 5 பேருக்குத்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்துள்ளது

குறிப்பாக, கடந்த ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, பின்னர் ஓராண்டு நீட் பயிற்சி எடுத்து 1,834 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
மொத்தமுள்ள 3,456 இடங்களில் இது 50 சதவிகிதத்துக்கும் அதிகம். நீட் தேர்வில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக, வெளிமாநிலங்களில் கோச்சிங் எடுக்கின்றனர்.
தமிழகத்தில் முன்பெல்லாம் 99 சதவிகிதம் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்குத்தான் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்து வந்தது. ஒரு சில இடங்களிலேயே சி.பி.எஸ்.இ மாணவர்களுக்குக் கிடைக்கும்.
தற்போது கோச்சிங் சென்டர் செல்பவர்கள் மற்றும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படிப்பவர்களுக்குத்தான் மருத்துவ சீட் என்ற நிலையை நீட் ஏற்படுத்தியுள்ளது

தனியார் கோச்சிங் சென்டர்கள் வருடம் முழுவதும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன
ஆனால், தமிழக அரசின் கோச்சிங் சென்டர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே இயங்கி வருகின்றன.
நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள தீமைகள்
1) ஏழை மாணவர்களுக்கு பெரும் அநீதி
மருத்துவப் படிப்பில் சேருவோரில் 99 விழுக்காட்டினர் தனியார் பயிற்சி மையங்களில் படித்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள மாற்றம் என்பது கோடீஸ்வரர்களால் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடியும் என்பது தான்.
2) அரசுப்பள்ளியில் தமிழக அரசின் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களாக அதிகம் செலவு செய்து பயிற்சி வகுப்புகளில் சேர இயலுமா?
அல்லது
மீண்டும் அடுத்த வருடம் செலவு செய்து NEET தேர்வை எழுத காத்திருக்க முடியுமா?
3) 12 ஆண்டுகள் ஒரு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களிடம் வேறு ஒரு பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்டது அயோக்கியத்தனமில்லையா?
4) அது மட்டுமின்றி வெளிமாநிலங்களுங்கு அனுப்பி அலைக்கழிதல் வேறு
இது உளவியல் ரீதியாக அவர்களை பாதிக்காதா?
ஏழைகளுக்கு சமவாய்ப்பு தராத எந்த தேர்வும் ஒழிக்கப்பட வேண்டும்.
இது காலப்போக்கில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

இந்த நிலையை மாற்ற நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும்.
Antony Parimalam