Sunday 16 June 2019

கலைஞர் கருணாநிதி கொண்டு வந்த முத்தான 94 திட்டங்கள்

கலைஞர் கருணாநிதி கொண்டு வந்த முத்தான 94 திட்டங்கள்
காலம் கடந்தும் அனைவரின் வாழ்விலும் நீங்காத இடம் பெற்றிருக்கும் கருணாநிதி தமிழர்களுக்கும் தமிழுக்கும் அளித்த பெருங்கொடைகள் ஒரு பார்வை
கருணாநிதி அறிமுகப்படுத்திய திட்டங்கள் :
கலைஞர் கருணாநிதி சட்டமன்றத்தில் காலடி வைத்து சுமார் 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. திமுக தலைவராக  பொன்விழா கண்ட பின்பே திராவிட நாயகனை காலன் அவரை அழைத்துக் கொண்டான்.
திமுகவும் அதன் கழகக் கொள்கைகளும் இன்றைய தமிழகத்தின், ஏனைய இந்தியாவில் இருந்து முற்போக்குடன் சிந்திக்கும் தமிழகத்தின் முதுகெலும்பு என்பதில் யாருக்கும் மறுப்பேதுமில்லை.
கலைஞரின் ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட சலுகைகள் திட்டங்கள் இந்த மாற்றங்களுக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்பதிலும் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. தமிழுக்கும் தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் கலைஞர் கருணாநிதி அறிமுகப்படுத்திய திட்டங்கள் ஒரு பார்வை.
கருணாநிதி அறிமுகப்படுத்திய திட்டங்கள்
1. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கப்பட்டது.
2. கை ரிக்சாவின் பயன்பாடு ஒழிக்கப்பட்டு சைக்கிள் ரிக்சா அளிக்கப்பட்டது. ஒரு மனிதனை மற்றொரு மனிதன் ரிக்சாவில் வைத்து தள்ளிச் செல்லும் முறையை ஒழித்தார்.
3. சின்னஞ்சிறு கிராமங்களுக்கும் கூட சாலை வசதிகள் உருவாக்கப்பட்டது. தனியார் வசம் சிக்கியிருந்த போக்குவரத்துத் துறை அரசுடமையாக்கப்பட்டது.
4. சிப்காட் தொழில் வளாகங்கள் உருவாக்கப்பட்டது.
5. சிட்கோ தொழில் வளாகங்கள் கொண்டுவரப்பட்டது
6. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தொழிற்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்பட்டது
7. சேலத்தில் உருக்காலை கொண்டு வரப்பட்டது
8. தமிழக கிராமங்கள் அனைத்திற்கும் மின்சார வசதி உருவாக்கப்பட்டது
9. தடையற்ற மின்சாரம் கிடைக்க 8 இடங்களில் மின் நிலையங்கள் உருவாக்கப்பட்டது
10. தமிழகம் வளர்ச்சியின் பாதையில் செல்ல கருணாநிதி அறிமுகப்படுத்திய திட்டங்கள்
1997ல் தரமணி டைடல் பார்க் தகவல் தொழில் நுட்பதிற்கென புதுக் கொள்கைகள் உருவாக்கப்பட்டது.
11. 14,600 கோடி ரூபாய் மதிப்பிலான சென்னை மெட்ரோ திட்டம் கலைஞர் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டதாகும்
12.  108 ஆம்புலன்ஸ் சேவைகள் கருணாநிதியின் ஆட்சியில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது
13. குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டு நகரங்களில் இருந்து குடிசைகள் அனைத்தும் அடுக்குமாடி குடியிருப்புகளாக உருப்பெற்றன. 2010ம் ஆண்டு கலைஞர் இலவச வீடு வழங்கும் திட்டம் தமிழகத்தில் எங்குமே குடிசைகள் இருக்கக் கூடாது என்ற காரணத்தால் உருவாக்கப்பட்டது.
14. சென்னையில் அதிக அளவு கார் தொழிற்சாலைகளை உருவாக்கி தமிழகத்தின் பொருளாதரத்தில் ஒரு மைல் கல்லை அடைய வைத்த பெருமை கருணாநிதிக்கு உண்டு. அதனால் தான் சென்னை ஆசியாவின் டெட்ராய்ட் என்று அறியப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
15. மினிபஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
அரசு ஊழியர்களுக்கு கொண்டு வரப்பட்ட திட்டங்கள்
16. அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் உருவாக்கப்பட்டது.
17. தமிழக காவல்துறையினருக்கு ஆணையம் அமைக்கப்பட்டது.
18. மே 1ம் தேதி ஊதியத்துடன் கூடிய அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
19. அரசு ஊழியர்கள் உயிர் இழக்கும் பட்சத்தில் அவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி அளிக்கும் பழக்கம் ஆகியவற்றையும் கூட கருணாநிதி கொண்டுவந்தார்.
விவசாயிகளுக்காக கருணாநிதி அறிமுகப்படுத்திய திட்டங்கள்
20. விவசாயத்திற்கு இலவச மின்சாரம் (இந்தியாவிலேயே இது போன்ற திட்டம் உருவாக்கப்பட்டது அப்போது தான்)
21. உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டு விளைபொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் வாடிக்கையாளர்களிடம் சென்று சேர்த்தவர் கலைஞர் கருணாநிதி.
22. விவசாயிகளுக்காக 7 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்து அறிவித்தது.
23. விவசாயக் கூலிகளுக்கு சம்பள நிர்ணயம் கொண்டு வரப்பட்டது
24. கிராமப்புற வளர்ச்சிக்கென நமக்கு நாமே திட்டம் உருவாக்கப்பட்டது. அரசு மானியத்துடன் தங்களின் தேவைகளே தாங்களே பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று அறிமுகமாக்கப்பட்டது.
25. கிராமப்புற மேம்பாட்டிற்காக அண்ணா மறுமலர்ச்சித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
பெண்களுக்கான திட்டங்கள்
26. திமுக கட்சியின் மூத்த பெண் தலைவர் மூவலூர் ராமாமிர்தம் அவர்களின் நினைவாக  ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் திட்டம்
27. கைம்பெண்களின் மறுமணத்தை ஊக்குவிக்கும் விதமாக கைம்பெண் மறுமண நிதி உதவித் திட்டம் ஆகியவற்றை கொண்டுவந்தவர் கலைஞர் கருணாநிதி.
28. அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.
29. சொத்தில் பெண்களுக்கு சம உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது.
30. பெண்களுக்கான இலவசப் பட்டப் படிப்பிற்கான திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
31. 33% பெண்களுக்கான இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு மிகவும் வெற்றி கரமாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன.
32. கர்பிணிப் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டது.
33. ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்புகள் வழங்கப்பட்டது
34. 1989ல் பெண்களுகள் பொருளாதாரத்தில் யாரையும் நம்பாமல் சுயமாக இயங்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது பெண்கள் சுய உதவிக் குழுக்கள். இதன் மூலம் தமிழகத்தில் பெண்களால் சுய தொழில்கள் அதிகம் உருவாகின.
தமிழுக்காக கருணாநிதி அறிமுகப்படுத்திய திட்டங்கள்
35. இந்தியாவின் இறுதிப் புள்ளி அல்லது மறுமலர்ச்சி இந்தியாவின் தொடக்கப்புள்ளியாக இருக்கும் தமிழகத்தின் தென் முனையில் அய்யன் வள்ளுவனுக்கு வைக்கப்பட்டது 133 அடி உயரமுள்ள சிலை.
36. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் தமிழ் மொழிக்கு செம்மொழி அங்கீகாராத்தினை பெற்றுக் கொடுத்துவர் கருணாநிதி.
37. கோவையில் மிக பிரம்மாண்டமாய் தமிழ் அறிஞர்கள் படை சூழ வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது செம்மொழி மாநாடு.
38. சிலப்பதிகார நாயகியான கண்ணகிக்கு தமிழர் கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது.
39. தமில் ஆண்டு வரிசைக்கு திருவள்ளுவர் ஆண்டு என்று பெயரிட்டார்
40. சித்திரை ஒன்று தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டாலும் தைத்திருநாளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது
41. மெட்ராஸ் மாகாணம் அண்ணாவின் உழைப்பால் தமிழ் நாடு என்றானது. கலைஞரின் முயற்சியால் மெட்ராஸ் சென்னை என்றானது
42. மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை அவர்களின் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்து 1970களில் இருந்து அனைத்துவிதமான பொது நிகழ்ச்சிகளிலும் பாடப்பட்டது.
43. ஆளுநர்கள் இல்லாமல் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் போன்ற நாட்களில் மாநில முதல்வர்கள் கொடியேற்ற வழிவகை செய்தவர் கலைஞர்.
44. தமிழ் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கும் வகையில் 20% இட ஒதுக்கீடு வழங்கியவர் கருணாநிதி
பொதுவுடமை
45. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அறிவிப்பினை வெளியிட்டவர் கருணாநிதி.
46. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர்களுக்கான கல்வி தொகை உயர்த்தப்பட்டது.  அவர்களுக்கான விடுதிகள் அதிகமாக திறக்கப்பட்டன.
47. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 31 சதவீதம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 18 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது
48. அனைத்து சமூகத்தினரும் சேர்ந்து வாழும் வகையில் சமத்துவபுரங்கள் தமிழகமெங்கும் உருவாக்கப்பட்டன
49. இஸ்லாமிய சமூகத்தினருக்கு 3.5% இட ஒதுக்கீட்டினை அளித்தார்
50. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இணைத்தார்.
51. ஆதி திராவிட மக்களுக்கு இலவச வீடுகள் கட்டித்தரப்பட்டது
52. கலப்புத் திருமணங்கள் பெருமளவில் ஊக்குவிக்கப்பட்டது. கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு ஊக்கத் தொகை தந்து கௌரவம் செய்தது திமுக அரசு
கல்வித்துறையில் கொண்டு வரப்பட்டத் திட்டங்கள்
53. பொறியாளர் பட்டப்படிப்பிற்காக நடைமுறையில் இருந்த நுழைவுத் தேர்வினை ரத்து செய்யப்பட்டது.
54. மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கப்பட்டது.
55. அதிமுக அல்லது திமுக என்று யார் ஆட்சிக்கு வந்தாலும் காமராஜரால் கொண்டுவரப்பட்ட மத்திய உணவுத்திட்டத்தினை ஒரு போதும் நிறுத்தியது கிடையாது. 2006ம் ஆண்டு ஆட்சியின் போது மாணவர்களுக்கு மத்திய உணவில் வாரம் இரண்டு முட்டை தந்து சிறப்பு ஆணை வெளியிட்டார்.
56. மாவட்டந்தோறும் அரசு மருத்துவமனைகளுடன் கூடிய அரசு மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டது.
57. தமிழகத்தில் அதிக அளவு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டது.
58. நெல்லையில் மனோன்மணியம் பல்கலைக்கழகம் தொடங்கி, சேலத்தில் பெரியார் பல்கலைக் கழகம், சென்னையில் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழங்கள் கட்டப்பட்டது.
கருணாநிதி அறிமுகப்படுத்திய இதர திட்டங்கள்
59. நில விற்பனை வரையறை சட்டம்
60. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம்
61. தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கான ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது
62. தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தினை நிறுவியவர் கலைஞர் கருணாநிதி
63. பிச்சைக்காரர்கள் மற்றும் தொழுநோயாளிகளுக்கான மறுவாழ்வு மையங்கள் இவரின் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது
64. ஊனமுற்றோர் மறுவாழ்வுத் திட்டத்தினை கொண்டுவந்தார்
65. ரேசன் கடைகளில் ஒரு கிலோ அரிசியினை 2 ரூபாய்க்கும் பின்னர் 1 ரூபாய்க்கும் விற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
66. மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்  அல்லது கலைஞர் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்பட்டது.
67. மக்களுக்கு இலவச கண் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு பின்னர் இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது
68. அரவாணிகள் என்று அழைக்கப்பட்ட மூன்றாம் பாலித்தினவர்களுக்கு திருநங்கைகள் திருநம்பிகள் என்று பெயர் சூட்டி அவர்களுக்கான தனி நல வாரியம் அமைக்கப்பட்டது.
69. நாட்டுப்புற கலைஞர்களுக்கான நலவாரியத்தினையும் அமைத்துக் கொடுத்தது திமுக தலைமை
70. மொழிப்போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கப்பட்டது
71. சுதந்திரந்திரப் போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி அறிவித்தது
72. ஏழை மக்களுக்கு இலவச வேஷ்டி சேலைகள் இவரது ஆட்சியில் இருந்து தான் தரப்பட்டது
.
73. சீரான போக்குவரத்து வசதிகளை மக்கள் அடைய நான்கு வழிச் சாலைகள் அதிகம் உருவாக்கப்பட்டன.
74. போக்குவரத்துத் துறையை அரசுடமையாக்கியது மற்றுமின்றி அதற்கென துறையை உருவாக்கியவர் கலைஞர்
75. நேரடி நெல் கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட்டது.
76. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவுத் தேர்தல்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது.
77. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அம்பேத்கர் பெயரில் சட்டக் கல்லூரி உருவாக்கப்பட்டது
78. இஸ்லாமியர்களுக்காக உருது அகாதெமி உருவாக்கப்பட்டது.
79. தேர்வுகளில் மாவட்ட மாநில அளவில் முதல் மூன்று இடம் பிடிப்பவர்களுக்கு மேற்படிப்புக்கு உதவித் தொகை வழங்கி சிறப்புச் செய்தவர் கருணாநிதி
80. சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த சுமார் 23 மேம்பாலங்கள் கட்டப்பட்டது.
81. ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன
.
82. மாவட்டங்களுக்குள் நதி நீர் இணைப்பு சாத்தியப்படுத்தப்பட்டது
.
83. காமராஜரின் பிறந்த நாளை கல்வி மேம்பாட்டு நாளாக அறிவித்தவர்
84. 420 பேரூராட்சிகள் உருவாக்கப்பட்டது
85. ராமநாதபுரம் – பரமக்குடி கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது
86. மாலை நேரம் மற்றும் விடுமுறை தின நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டது.
87. மதுரையில் உயர் நீதிமன்றக் கிளை நிறுவப்பட்டது.
88. ராஜராஜன் ஆயிரமாவது ஆண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
89. இவர் ஆட்சியின் கீழ் 12 அரசு பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன.
90. பேருந்து போக்குவரத்துக் கட்டணம், பால் விலை, மற்றும் மின்சாரக் கட்டணங்களின் விலை உயர்த்தப்பட்டது கிடையாது
91. இலவச வண்ண தொலைக்காட்சிகளை கொடுத்தார்
92. உணவுப் பொருட்களை மலிவு விலையில் ரேசன் கடைகளில் இருந்து பெற்றுக் கொள்ளும் படி புதிய அறிவிப்புகளை எப்போதும் வெளியிடுவார் கருணாநிதி.
93. 10 வகுப்பு வரை தமிழ் கட்டாயப்பாடமாக்கப்பட்டது
94. சுயமரியாதை என்ற பெயருக்கு சொந்தக்காரராய் என்றும் நிலைத்து நிற்கும் கருணாநிதி சுயமரியாதை தமிழகத்தை தமிழர்களுக்காக உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.

திமுக ஆட்சியில் குடிநீர்த் திட்டங்கள்

திமுக ஆட்சியில் குடிநீர்த் திட்டங்கள்
ராமநாதபுரத்தின் வறட்சியைக் கணக்கில் கொண்டு 1996-ல் திமுக ஆட்சியில் ரூ. 72.20 கோடியில் உவர் நீரை நன்னீராக்கும் 11 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது
இதன் மூலம் 237 கிராமங்கள் குடிநீர் வசதியைப் பெற்றன.


ரூ. 671 கோடி மதிப்பிலான ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு 30-1-2007-ல் பரமக்குடியில் நடைபெற்ற விழாவில் கலைஞர் அடிக்கல் நாட்டினார்


இத்திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, கீழக்கரை ஆகிய நகராட்சிகள், மண்டபம், சாயல்குடி, முதுகுளத்தூர், கமுதி, அபிராமம் ஆகிய போரூராட்சிப் பகுதிகளுக்கும் 27-6-2009-ல் குடிநீர் வழங்கப்பட்டன.


2வது கட்டமாக இத்திட்டத்தின் வழியோரப் பகுதிகளான புதுக்கோட்டை மாவட்டத்தில் 32 குடியிருப்புகளுக்கும், சிவகங்கை மாவட்டத்தில் 799 குடியிருப்புகளுக்கும், ராமநாதபுரத்தின் ஊரகப் பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கப்பட்டன.
மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே திமுக ஆட்சியில் 1971ம் ஆண்டு குடிநீர் வடிகால் வாரியம் தொடங்கப்பட்டது.


1995-96ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் குடிநீர் வழங்கும் பணிகளுக்காக ரூ. 213.82 கோடி செலவிடப்பட்டது. ஆனால், 2000-01-ல் திமுக ஆட்சியில் குடிநீர் பணிகளுக்காக ரூ. 842 கோடி ஒதுக்கப்பட்டது.


ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் திமுக ஆட்சியில் ரூ. 51 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டு, 27-6-1999-ல் தொடங்கி வைக்கப்பட்டது.
கிருஷ்ணா குடிநீர்த் திட்டம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஆகியவற்றை நிறைவேற்றுவதற்கான பணிகள் திமுக ஆட்சியில்தான் நடைபெற்றன.



மீஞ்சூரில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டாலும் அது திமுக ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டது.

நெம்மேலியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் பெருமளவு பணிகள் திமுக ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டன.

Saturday 8 June 2019

திமுக மீதான சில வீண் பழிகளும் அதற்கான சில பதில்களும்

அப்பப்பா ...
எத்தனை எத்தனை அபாண்டங்கள்  எத்தனை எத்தனை அவதூறுகள்  எத்தனை எத்தனை பொய் பிரச்சாரங்கள்
அத்தனையும் திமுகவின்  மேல்  அதன் தலைவர்கள் மேல்..
எல்லாமே  ஊடகங்கள் வழியாக செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட  பார்ப்பன சதி.
அத்தனை சதிகளுக்கும் திமுகதான் பலிகடா...
அவற்றில் சிலவற்றை பார்ப்போம்
(1)திருட்டு ரயில் புருடா**
கலைஞர் திருட்டு ரயிலேறி சென்னை போனாராம். உண்மையில்  அவர் சென்னைக்கு போக வில்லை. திருவாரூரில் இருந்து சேலம் தான் சென்றார்.  மாடர்ன் தியேட்டர்ஸில் பணியில் சேர்ந்தார். கண்ணதாசன் தனது வனவாசம் புத்தகத்தில் தான் திருட்டு ரயில் ஏறி சென்றதாக குறிப்பிட்டு இருக்கிறாரே தவிர  கலைஞரை அல்ல.
கண்ணதாசன் 8th Grade dropout.
கலைஞர் SSLC ல் தோல்வி
கண்ணதாசன்  8th grade dropout என்றும் தன்னை நான் என்று சொல்லாமல் "அவன்" என்றே வனவாசம் புத்தகம் முழுவதிலும் சொல்கிறார்.
தான் திருட்டு ரயிலேறி சென்றதையும் தன் சுயசரிதையில் விளக்கியுள்ளார்
பொறுக்கிகள் அதை அப்படியே திரிச்சிட்டானுங்க https://t.co/JLHb187HAU
(2) பாவாடை நாடா அவதூறு**
கலைஞர் பாவாடை நாடா பற்றி சொன்னதாக அவர் மேல் வதந்தி பரப்பினர். விஜயகாந்தும் அப்படி சொல்ல.. கலைஞர் அவர் மீது அவதூறு வழக்கு போட... கடைசியில் சட்டசபை குறிப்பில் அப்படி ஏதும் இல்லை எனக் கண்டறிந்த விஜயகாந்த் கடைசியில் மன்னிப்பு கேட்டுள்ளார்
(3) மாதவிடாய் கதை**
இந்திரா நெற்றியில் மாதவிடாய்   என கலைஞர் விமர்சித்ததாக சொன்னார்கள் .
இந்திராவுக்கு சிறு காயம் கூட படவில்லை என்கிறார் நெடுமாறன்  அவரது பேட்டியில்.  காயமே படாத போது ரத்தம் எப்படி வந்திருக்கும் .  என்ன ஒரு பொறுக்கித்தனம் பாருங்கள்.
(4) விஞ்ஞான ஊழல் கப்சா**
இந்திரா மத்திய அமைச்சர் ஓம் மேத்தா என்பவரை தூதுவராக 1975 வருட இறுதியில் கலைஞரை சந்திக்க அனுப்புகிறார்.
கலைஞரை சந்தித்த மத்திய அமைச்சர் கலைஞர் எமர்ஜென்சியை ஆதரித்தால் கலைஞரின் அரசை மேலும் ஒரு வருடம் நீடித்து தருவதாக கலைஞரிடம் தெரிவிக்கிறார்.
கலைஞர் திட்டவட்டமாக எமர்ஜென்சியை ஆதரிக்க மறுக்கவே அதன் பிறகே கலைஞர் அரசும் கலைக்கப்பட்டு 1972 MGR புகாரை தூசிதட்டி 1976 ல் சர்க்காரியா கமிசன் போடப்படுகிறது.
சர்க்காரியா கமிசனில் எந்த இடத்திலும் விஞ்ஞான ஊழல் என்ற வார்த்தையே இல்லாதபோதும் கலைஞர் மீது அவதூறு இன்றும் பரப்பப்படுகிறது.

பொறுக்கிகள்
24 மணி நேரமும் சர்க்காரியா கமிசன் பத்தி பேசுவர்.
MGR மீதான பால் கமிசன், ரே கமிசன், ராபின்சன் ஊழல், பால்டிகா கப்பல் பேர ஊழல், சாராய ஊழல், ஏரிகள் தாரை வார்ப்பு, மருத்துவக்கல்லூரி இட ஒதுக்கீட்டு ஊழல், ஜெ-சசி கூட்டுக் கொள்ளை பற்றி பேசவே மாட்டான்.
அவன்தான்
தமிழ்தேசிய பார்ப்பனீய அடிமை.
(5) GAIL பைப் லைன் திரிப்பு**
GAIL பைப் லைன் ஜெயலலிதா முன்னிலையில்தான் 2012 ல்
கையொப்பம் ஆனது என்பதற்கான ஆதாரம் இதுதான்
படிக்க. 👇
(6) மீத்தேன் வீண் பழி**
மீத்தேன் என்றாலே உடனே ஸ்டாலினை திட்டுகிறார்கள். 1984 ல் ஸ்டாலினா முதல் மந்திரி?
திரு.ஸ்டாலின் கையொப்பமிட்டது ஒரே ஒரு மீத்தேன் திட்டம்தான். அது GEECL கம்பெனியுடன் போடப்பட்ட MOU மட்டுமே. அது ஆய்வுக்காக போடப்பட்டது
அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள்
கீழே உள்ளது
வேறு எந்த மீத்தேன்/ ஹைடிரோ கார்பன் திட்டத்திலும் திரு.ஸ்டாலின்  கையெழுத்து இடவில்லை.
👇
மீத்தேன் இரண்டு வழிகளில் எடுக்கப்படுகிறது
1)Conventional method
2)UnConventional method
திரு ஸ்டாலின் கையொப்பமிட்ட Coalbed மீத்தேன் பணி என்பது unconventional method.
அது தமிழகத்தில் நடைபெறவில்லை.
உண்மை நிலவரம் இதோ👇
https://t.co/c5iUorwZxM
(7) கட்சத்தீவு கப்சா கதை**
ஒரு முதல்வரால் எப்படிடா கட்சத்தீவை தாரை வார்க்க முடியும்?
கட்சத்தீவு ஒப்பந்தத்தை கலைஞரை தவிர வேறு யாருமே எதிர்க்காத போது கலைஞரை கைக்காட்ட எவருக்கும் யோக்கியதை இல்லை
1974 கட்சத்தீவு ஒப்பந்தம் article 8 இன் படி பார்லிமென்டால்
அங்கீகரிக்கப்படாததால் அந்த ஒப்பந்தம் செல்லாது
அதில் உள்ள உரிமைகள்
Atl 5 pilgrimage
Atl 6 traditional rights
எமர்ஜென்சியில் கலைஞர் ஆட்சிக் கலைப்பிற்கு பின்1976 ல் எல்லை நிர்ணயம் போதே கச்சத்தீவு இலங்கை எல்லைக்குள் போனது.
1974 ஒப்பந்தமே செல்லாது என்பதும் 1976 எல்லை நிர்ணயத்தால்தான் கட்சத்தீவு இந்திராவால் இலங்கைக்கு கொடுக்கப்பட்டது என்பதுமே உண்மை
1976 ல் கலைஞர் ஆட்சியிலேயே இல்லை
புளுகினி பொறுக்கிகள் கலைஞர் தாரை வார்த்தார் என புளுகி தள்ளுறானுங்க.
ஆட்சியிலேயே இல்லாத போது எப்படிடா தாரை வார்த்தார்?
(8)நில அபகரிப்பு டுபாக்கூர் புகார்**
நிலஅபகரிப்பை செய்தது யார்?
A) கொட நாடு நிலத்தை மிரட்டி நில அபகரிப்பு செய்தது ஜெ -சசி கும்பல்
B) இசை அமைப்பாளர் கங்கை அமரனின் பையனூர் பங்களாவை மிரட்டி எழுதி வாங்கியதும் அதே கும்பல்தான்
C) சென்னையில் உள்ள பீனீக்ஸ் மால், ஜாஸ் சினிமாஸ் அபகரிக்கப்பட்டது யாரால்?
4) பாலு ஜுவல்லர்ஸ் உரிமையாளரை மிரட்டி இறுதியில் அவர் தற்கொலை செய்து கொண்டாரே அது யாரால்?
5) புதுப்படங்கள் வரும் போது அந்த படத்தின் ஒளிபரப்பு உரிமை ஜெயா டிவிக்கே தர வேண்டும் என்று மிரட்டப்பட்ட தயாரிப்பாளர்கள் பட்டியல் தெரியுமா?
எல்லாவற்றுக்கும் மேலாக
அரசுக்கு சொந்தமான டான்சி நிலத்தையே குறைந்த விலைக்கு
அபகரித்தவர்கள் இந்தக் கும்பல்தான்
இந்த உத்தமர்கள்தான் திமுக ஆட்சியில் நிலஅபகரிப்பு நடந்ததாக கூறி அதற்காக தனி பிரிவையே காவல் துறையில் ஏற்படுத்தினர்.
அதன் மூலம் எத்தனை திமுகவினர் தண்டனை பெற்றனர் என்பதை யாராவது சொல்லமுடியுமா?
ஆனால் கொடநாட்டு வழக்கில் தீர்ப்பு வந்து தண்டனையும் வழங்கப்பட்டு விட்டது தெரியுமா இல்லை தெரியாதா குருடர்களே
(9) நியூட்ரினோ பித்தலாட்ட கதை**
நியூட்ரினோக்கு அனுமதி வழங்கியது மோடி மந்திரிசபை
(5 Jan2015).
On 19 Mar 2018,Ministry of Environment (India) overturned the NGT verdict as a special case
அதற்கு முன் Feb 2012 நியூட்ரினோவிற்கு இடம் ஒதுக்கியது ADMK அரசே
காங்கிரஸ்18 Oct 2010ல் சுற்றுசூழல் அனுமதி மட்டுமே வழங்கியது https://t.co/CsxsW438BT
(10) "இடுப்புகிள்ளிதிமுக" என பொறுக்கிகள் சொல்றானுங்க
யாருன்னு பார்த்தா
பூரா பொம்பள பொறுக்கி பயலுக
இடுப்பை கிள்ளியதாக சொன்ன பெண் காவல்துறையில் தன்னை யாரும் கிள்ளவில்லை என்று எழுதி தந்துள்ளது
ஒழுங்கு மரியாதையா அந்த வழக்கில் திமுககாரன் மீது அதிமுக போலிஸ் எடுத்த நடவடிக்கையை சொல்லுங்கடா


11)ஓட்டுக்கு பணம் என்பதை யார் தொடங்கியது? எந்த ஆண்டில்?
திருமங்கலம் பார்முலா என்பது சரியா? ஜெ பார்முலா என்பது சரியா?
1954 ல் முதல்வராகிறார் காமராஜர். அதன் பின் நடந்த குடியாத்தம் இடைத்தேர்தலில் காங்கிரசால் ஓட்டுக்கு ஒரு ரூபாயும் ஓட்டலில் உப்புமா காபி சாப்பிட டோக்கனும் வழங்கப்பட்டது.
1962 ல் காஞ்சிபுரத்தில் அண்ணாவை தோற்கடிக்க காங்கிரஸ் நடேச முதலியார் ஓட்டுக்கு 5 ரூ தந்து வெங்கடாஜலபதி படத்தில் சத்தியம் வாங்குகிறார்.
ஆதாரம்.
MGR 1982 சட்டசபை தேர்தலில் பணம் கொடுத்து வென்றார்
The fledgling party, backed by the Janata Party, was voted to power in the post-Emergency 1977 election. The victory was short-lived. In the subsequent Lok Sabha election his party was routed, and Indira Gandhi, who became Prime Minister again in 1980, dismissed the MGR government together with seven other non-Congress ruled states.
In the following Tamil Nadu Assembly election in 1982, MGR paid cash for votes for the first time and set a bad precedent which has now spread to other states as well
ஜெயலலிதாவின் Cash for Vote
Story 

2003 சாத்தான் குளம் இடைத்தேர்தல் அதிமுகவால்
வாக்காளர்களுக்கு சேலை, டி சர்ட், பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது
2005 பிப்ரவரி காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல்களில்
அதிமுகவால் லட்டுக்குள் மூக்குத்தி வைத்து வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது
இதற்கு பிறகு 2009 ல் தான் திருமங்கலம் தேர்தல்.
1954 ல் இருந்து 2008 வரை நடந்த எல்லாவற்றையும் விட்டு விட்டு 2009 திருமங்கலத்தில்தான் ஏதோ பணப்பட்டுவாடா புதிதாக நடந்தது போல் ஏன் கதையளக்கிறார்கள் வஞ்சகர்கள்?
திமுக நடத்தியது ஒரு திருமங்கலம் மட்டுமே அதுவும் அழகிரி பொறுப்பு வகித்ததால்.
அதிமுகவோ 232 திருமங்கலத்தை 2016 இல் நடத்திக்காட்டியதுடன் 3 கண்டைனர்கள் 570 கோடியுடன் பிடிபட்டு பின்னர் மாயமாய் மறைந்ததும் அதிமுக ஆட்சியில்தான்.


கலைஞரின் தனிப்பட்ட வாழ்க்கையை பேசுகிறார்கள்.
அதுபோல எம்ஜிஆர் ஜெயலலிதா சீமான் வாழ்க்கையை பற்றி பேசினால் என்ன ஆகும்?
ரொம்ப கேவலமாக அல்லவா போய்விடும்
இன்னும் பல நூறு கட்டுக் கதைகள்
உள்ளது. பதில் சொல்லி தீராது

Antony Parimalam 

Friday 7 June 2019

திரு ஸ்டாலின் கையொப்பமிட்ட Coalbed மீத்தேன் பணி என்ன ஆனது? உண்மை நிலவரம் இதோ👇

திரு ஸ்டாலின் கையொப்பமிட்ட Coalbed மீத்தேன் பணி என்ன ஆனது? உண்மை நிலவரம் இதோ👇


ஹைடிரோ கார்பன் எடுக்கும் பணி ONGC யால் தொடங்கப்பட்ட ஆண்டு 1984

1985 ல் நரிமணம் மற்றும் களப்பால் ஆகிய இடங்களில் இயற்கை எரிவாயு( மீத்தேன்) மற்றும் பெட்ரோலியம் கண்டு பிடிக்கப்படுகிறது.

அந்த பகுதியில் 1986 ல் மத்திய மாநில அரசுகளால் எண்ணை எடுக்க லைசென்ஸ் வழங்கப்படுகிறது.
1989 முதல் எண்ணை உற்பத்தி வியாபார ரீதியில் தொடங்கப்படுகிறது.


அதன் பின்னர் இன்று வரை 712 கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன.

இன்றைய தேதியில் 181 கிணறுகளில் எண்ணை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த 181 கிணறுகளில் கதிராமங்கலமும் ஒன்று.
அதற்காக ONGC தமிழக அரசுக்கு ராயல்டியாக ரூ250-350 கோடி வரை ஆண்டுதோறும் கொடுத்து வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில்   ரூ1,816.43 கோடி தமிழக அரசிற்கு ராயல்டி மற்றும் வாட் ஆக கொடுக்கப்பட்டுள்ளது


தற்போதைய அதிமுக அரசு 2017 லேயே டெல்டாவை பெட்ரோலிய மண்டலமாக அறிவித்து உத்தரவு போட்டு விட்டது.

மே 12, 2019ல் காவேரி டெல்டா பகுதியில்
மத்திய அரசு யாரும் எதிர்பாராத வகையில் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான வேதாந்தா நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டே மத்திய பெட்ரோலியம் அமைச்சகத்துடன் இணைந்து ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்ட அனுமதி பெற்று விட்டது.


274 கிணறுகளும் பூமியின் கீழ் உள்பகுதிக்கு ஏற்ப 3,500 மீட்டர் முதல் 4,500 மீட்டர் ஆழம் வரை தோண்டப்படும். காவிரிப் படுகையில் கடல் பகுதியில் சுமார் 4 ஆயிரம் கி.மீ. பரப்பளவுக்கு இந்த கிணறுகளில் பல இடங்களில் அமைக்கப்படும்.


 நிலப்பகுதிகளைப் பொருத்த வரை நாகை, காரைக்கால், விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் கிணறுகள் அதிகம் அமையும்.


இவ்வாறு மீத்தேன் எடுக்கும் தொழில்நுட்பத்தை "Conventional natural gas reservoir Method" என்பர்.


ஆனால் 2011 ஜனவரி 5 ல் திரு ஸ்டாலின் ஆய்வு மட்டுமே MOU கையொப்பம் இட்டது
"Unconventional natural gas" தொழில் நுட்ப முறையில் Coalbed methane
எடுப்பதற்காக GEECL என்ற கம்பெனியுடன். 


Coalbed methane is an unconventional natural gas, and its reservoir has distinctly different characteristics compared with the conventional natural gas reservoir.


இத்திட்டம் விவசாயிகளால் கடுமையாக எதிர்க்கப்பட்டது.


மேலும் இத்திட்டத்தால் சுற்று சூழலும் கடுமையாக பாதிக்க வாய்ப்புள்ளது எனத் தெரிந்ததால்
திரு.ஸ்டாலின் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.


செப்டம்பர் 2012 ல்  மத்திய அரசின் சுற்று சூழல் அனுமதி இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நம்மாழ்வார் தலைமையில் COALBED மீத்தேன் எதிர்ப்பு கிளம்பியதால் ஜெயலலிதா இத்திட்டத்தை 2013 லேயே நிறுத்தி விட்டார்.

 GEECL கம்பெனியும் விலகிவிட்டது.


10 நவம்பர் 2016 ல் தர்மேந்திர பிரதான் இத்திட்டத்தை கைவிட்டதாக அறிவித்தார்.
இத்துடன் ஸ்டாலின்-GEECL  ஒப்பந்தம் முடிந்து விட்டது


திரு ஸ்டாலின் ஒப்புதல் அளித்த முதல் மற்றும் கடைசி ஒப்பந்தம் இன்று நடைமுறையில் இல்லை.


அதாவது COALBED மீத்தேன் பணி தமிழகத்தில் எங்குமே தொடங்கப்பட வில்லை.


ஆனால் 1986 முதல்
"Conventional natural gas reservoir Method" மூலம் மீத்தேன் மற்றும் கச்சா எண்ணெய் எடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதிதான் டெல்டாவை
பெட்ரொலிய மண்டலமாக அறிவித்து 274 இடங்களில் மீத்தேன் எடுக்கும் பணிக்காக தற்போது மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள அனுமதி.


வித்தியாசம் புரியுதா

A.Parimalam

Monday 3 June 2019

கலைஞர் இலங்கை இறுதிப்போரில் பிரபாகரனையும் புலிகளையும் காப்பாற்றியிருக்க முடியுமா? 

கலைஞர் இலங்கை இறுதிப்போரில் பிரபாகரனையும் புலிகளையும் காப்பாற்றியிருக்க முடியுமா? - என். ராம் பேட்டி

கேள்வி : இலங்கை தமிழர்கள் - விடுதலை புலிகள் மீதான கருணாநிதியின் நிலைப்பாடு குறித்த உங்களின் பார்வை என்ன?

என். ராம் : ''விடுதலை புலிகள் எப்போதுமே கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் ஆட்சியை விரும்பியது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. டெலோ தலைவர் சிறீ சபாரத்தினம் கொலை செய்யப்பட்டதிலிருந்து அவருக்கு விடுதலை புலிகள் மீதிருந்த மரியாதை தகர்ந்தது .

ராஜிவ் காந்தியை விடுதலை புலிகள் கொன்றது மன்னிக்க முடியாதது என ஒரு பேட்டியில் கூட கூறியிருந்தார் கருணாநிதி. அவர் முதல்வராக இருந்தபோது ஆக்கப்பூர்வமாகவே செயல்பட்டார்.

இலங்கை இறுதிக்கட்ட போரின்போது கூட அவரால் முடிந்த அளவு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்தார். அப்போது கூட அவர் விடுதலை புலிகளை நேரடியாக ஆதரிக்கவில்லை. இறுதிக்கட்ட போருக்கு பிறகு கருணாநிதி மீதே வசவுகள் விழுந்தன''.

''இலங்கை விஷயத்தை பொருத்தவரையில், அவருடன் நான் பலமுறை பேசியிருக்கிறேன். அதனால்தான் சொல்கிறேன் அவர் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை கொண்டவர்.

 அவர் வெளியில் ஈழத்துக்கு தீவிர ஆதரவு தருவதுபோல சொல்லி வந்தாலும் அவருடைய நிலை என்னவெனில், இலங்கைக்குள் தமிழர்கள் தங்களது அரசியல் உரிமைகளைப் பெற வேண்டும். தங்களின் வாழ்க்கையை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் நிலை உருவாக வேண்டும். வேறு வழியில்லையென்றால், ஈழம் மலர வேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருந்தது. சிலர் பிடிவாதவே தமிழ் ஈழம் மட்டுமே வேண்டும் எனச் சொல்வது போன்றதோர் நிலை எடுப்பவராக அவர் இருந்ததில்லை.''

"இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு சுயாட்சி மேற்கொள்ளும் வாய்ப்பு அமைய வேண்டும் என்பதே அவரது உண்மையான கோரிக்கையாக இருந்தது. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என தெரியும்போது தமிழீழம் தான் ஒரே தீர்வு என்ற வெளிப்படையான நிலையை எடுக்கும்போது அவர் பிடிவாதமாகவோ திடமாகவோ அம்முடிவை எடுக்கவில்லை என்பதை நான் நன்றாகவே அறிவேன். அவர் விடுதலை புலிகளின் அட்டூழியங்களை ஆதரிக்கவில்லை".

''ஒருமுறை நான் அவரிடம் பேசும்போது, 'ஒரு முட்டாள்தனமான தவறு, குற்றத்தை விட மோசமானது' என ஒருவரின் மேற்கோளை காட்டி ராஜிவ் காந்தி கொலை குறித்து சொல்லிக்கொண்டிருந்தேன். விடுதலை புலிகளின் முட்டாள்தனமான தவறுகள் குறித்து நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். ஒன்று, இந்திய அமைதி காப்புப் படையுடன் விடுதலை புலிகள் வெறித்தனமாக போர் நடத்தியது. இரண்டு, ராஜீவ் காந்தி படுகொலையை கட்டாயமாக பிரபாகரனே திட்டமிட்டது. அது ஒரு மிகப்பெரிய குற்றம். மேலும் முட்டாள்தனமான தவறு" என்றேன்.

''மூன்றாவதாக, ராஜபக்சவைத் தேர்ந்தெடுத்தது என்றேன்''. எப்படி? என கேட்டார்.

''ரணில் விக்ரமசிங்க Vs ராஜபக்சே மோதிய அந்த அதிபர் தேர்தல் கடும் போட்டி நிறைந்ததாக இருந்திருக்கும். ஆனால் தேர்தலை புறக்கணிக்கச் சொல்லி தமிழர்களிடம் கூறியது விடுதலை புலிகள். இதனால் கணிசமாக ரணிலுக்கு கிடைக்க வேண்டிய ஆதரவு வீணாய்ப்போனது என்றேன்.''

''அவர்கள் இன்னொரு தவறு செய்தார்கள் அது என்ன தெரியுமா?'' என்று கருணாநிதி என்னிடம் கேட்டார்.

''சிறீ சபாரத்தினம் என்னுடைய சகோதரர் மாதிரியானவர். அவரை கைது செய்து கொல்லப்போகிறார்கள் எனக் கேள்விப்பட்டேன். அதைச் செய்யக்கூடாது என நான் சொல்வதாய் பிரபாகரனிடம் சொல்லுங்கள் என பேபி சுப்ரமணியத்திடம் பேசினேன். ஆனால் சபாரத்தினத்தை சித்திரவதை செய்து படுகொலை செய்தனர். இதனால் விடுதலைபுலிகள் மீது பெரும் ஏமாற்றம் உண்டானது.'' என்று சொல்லி கருணாநிதி என்னிடம் கவலைப்பட்டார்.

''ஆகவே கருணாநிதிக்கு கண்மூடித்தனமான விடுதலை புலிகள் ஆதரவு நிலை இருந்ததில்லை. அதே நேரத்தில் விடுதலை புலிகள் மற்றும் ஈழத் தமிழர்கள் குறித்து அவர் குழப்பிக்கொள்ளவில்லை.''

''ஈழத்தமிழர் நலன், உரிமைகள் மற்றும் அவர்களது அரசியல் உரிமைகள், மனித உரிமைகள் ஆகியவற்றை காப்பதுதான் கருணாநிதியின் நோக்கம்''.

''ஈழத்தமிழர்கள் குறித்து நாங்கள்தான் ஒரே பிரதிநிதிகள் என விடுதலை புலிகள் எடுத்த நிலையை அவர் ஒப்புக்கொண்டதாக எனக்குத் தெரியவில்லை.''

''இலங்கையில் இறுதிக் கட்ட போரில் யாரும் விடுதலை புலிகளையும் பிரபாகரனையும் காப்பாற்ற முடியாது என்பது எனக்குத் தெரியும். ஏனெனில், பிரபாகரன் அசட்டையாக ஓர் நிலையை எடுத்துவிட்டார்.''

''அந்த நேரத்தில் பிரபாகரனையும் புலிகளையும் உலகில் யாருமே காப்பாற்றியிருக்க முடியாது என்பதே உண்மை. அந்நேரத்தில் இந்தியா தலையிடும் என பிரபாகரனுக்கு யாரோ நம்பிக்கை அளித்ததாக கேள்விப்பட்டோம். ஆனால் ஆதாரமில்லை. இந்த நிலையில், திமுகவால் மட்டும் காப்பாற்றியிருக்க முடியுமா என்ற கேள்வியே தேவையற்றது.''