Friday 7 June 2019

திரு ஸ்டாலின் கையொப்பமிட்ட Coalbed மீத்தேன் பணி என்ன ஆனது? உண்மை நிலவரம் இதோ👇

திரு ஸ்டாலின் கையொப்பமிட்ட Coalbed மீத்தேன் பணி என்ன ஆனது? உண்மை நிலவரம் இதோ👇


ஹைடிரோ கார்பன் எடுக்கும் பணி ONGC யால் தொடங்கப்பட்ட ஆண்டு 1984

1985 ல் நரிமணம் மற்றும் களப்பால் ஆகிய இடங்களில் இயற்கை எரிவாயு( மீத்தேன்) மற்றும் பெட்ரோலியம் கண்டு பிடிக்கப்படுகிறது.

அந்த பகுதியில் 1986 ல் மத்திய மாநில அரசுகளால் எண்ணை எடுக்க லைசென்ஸ் வழங்கப்படுகிறது.
1989 முதல் எண்ணை உற்பத்தி வியாபார ரீதியில் தொடங்கப்படுகிறது.


அதன் பின்னர் இன்று வரை 712 கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன.

இன்றைய தேதியில் 181 கிணறுகளில் எண்ணை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த 181 கிணறுகளில் கதிராமங்கலமும் ஒன்று.
அதற்காக ONGC தமிழக அரசுக்கு ராயல்டியாக ரூ250-350 கோடி வரை ஆண்டுதோறும் கொடுத்து வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில்   ரூ1,816.43 கோடி தமிழக அரசிற்கு ராயல்டி மற்றும் வாட் ஆக கொடுக்கப்பட்டுள்ளது


தற்போதைய அதிமுக அரசு 2017 லேயே டெல்டாவை பெட்ரோலிய மண்டலமாக அறிவித்து உத்தரவு போட்டு விட்டது.

மே 12, 2019ல் காவேரி டெல்டா பகுதியில்
மத்திய அரசு யாரும் எதிர்பாராத வகையில் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான வேதாந்தா நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டே மத்திய பெட்ரோலியம் அமைச்சகத்துடன் இணைந்து ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்ட அனுமதி பெற்று விட்டது.


274 கிணறுகளும் பூமியின் கீழ் உள்பகுதிக்கு ஏற்ப 3,500 மீட்டர் முதல் 4,500 மீட்டர் ஆழம் வரை தோண்டப்படும். காவிரிப் படுகையில் கடல் பகுதியில் சுமார் 4 ஆயிரம் கி.மீ. பரப்பளவுக்கு இந்த கிணறுகளில் பல இடங்களில் அமைக்கப்படும்.


 நிலப்பகுதிகளைப் பொருத்த வரை நாகை, காரைக்கால், விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் கிணறுகள் அதிகம் அமையும்.


இவ்வாறு மீத்தேன் எடுக்கும் தொழில்நுட்பத்தை "Conventional natural gas reservoir Method" என்பர்.


ஆனால் 2011 ஜனவரி 5 ல் திரு ஸ்டாலின் ஆய்வு மட்டுமே MOU கையொப்பம் இட்டது
"Unconventional natural gas" தொழில் நுட்ப முறையில் Coalbed methane
எடுப்பதற்காக GEECL என்ற கம்பெனியுடன். 


Coalbed methane is an unconventional natural gas, and its reservoir has distinctly different characteristics compared with the conventional natural gas reservoir.


இத்திட்டம் விவசாயிகளால் கடுமையாக எதிர்க்கப்பட்டது.


மேலும் இத்திட்டத்தால் சுற்று சூழலும் கடுமையாக பாதிக்க வாய்ப்புள்ளது எனத் தெரிந்ததால்
திரு.ஸ்டாலின் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.


செப்டம்பர் 2012 ல்  மத்திய அரசின் சுற்று சூழல் அனுமதி இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நம்மாழ்வார் தலைமையில் COALBED மீத்தேன் எதிர்ப்பு கிளம்பியதால் ஜெயலலிதா இத்திட்டத்தை 2013 லேயே நிறுத்தி விட்டார்.

 GEECL கம்பெனியும் விலகிவிட்டது.


10 நவம்பர் 2016 ல் தர்மேந்திர பிரதான் இத்திட்டத்தை கைவிட்டதாக அறிவித்தார்.
இத்துடன் ஸ்டாலின்-GEECL  ஒப்பந்தம் முடிந்து விட்டது


திரு ஸ்டாலின் ஒப்புதல் அளித்த முதல் மற்றும் கடைசி ஒப்பந்தம் இன்று நடைமுறையில் இல்லை.


அதாவது COALBED மீத்தேன் பணி தமிழகத்தில் எங்குமே தொடங்கப்பட வில்லை.


ஆனால் 1986 முதல்
"Conventional natural gas reservoir Method" மூலம் மீத்தேன் மற்றும் கச்சா எண்ணெய் எடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதிதான் டெல்டாவை
பெட்ரொலிய மண்டலமாக அறிவித்து 274 இடங்களில் மீத்தேன் எடுக்கும் பணிக்காக தற்போது மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள அனுமதி.


வித்தியாசம் புரியுதா

A.Parimalam

No comments:

Post a Comment