Thursday 31 October 2019

திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்ட மற்றும் திறக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள்

திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்ட மற்றும் திறக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள்

1997 திருச்சி மருத்துவக்கல்லூரி
2000 தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி
2001வேலூர் மருத்துவக்கல்லூரி

2010திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆரம்பம்

2007 தர்மபுரி மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டப்பட்டது

2011 விழுப்புரம் மருத்துவக்கல்லூரி

2009 அரசு ஆயூர்வேத மருத்துவக்கல்லுரி கோட்டார்
நாகர் கோயில்

26.2.2011 ல் 400 கோடி ஒதுக்கி
அடிக்கல் நாட்டப்பட்ட மருத்துவ கல்லூரிகள்

சிவகங்கை
விருதுநகர்
புதுக்கோட்டை
திருவண்ணாமலை

மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என்ற திட்டம் கொண்டு வந்ததே திமுகதான்

நாகர்கோயில் மருத்துவமனை அடிக்கல் 2001ல் நாட்டியது திமுக

 கடலூர், திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி 2011ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது
1988ல் அடிக்கல் நாட்டப்பட்ட சேலம் மருத்துவகல்லூரிக்கு நிதி ஒதுக்கி செயல்பாட்டிற்கு கொண்டு வந்து  மருத்துவமனை Super specialty ஆக மாற்றியதும் திமுக

2010 பெரம்பலூர் மருத்துவ கல்லூரி இடம் கையகப்படுத்தி நிதி ஒதுக்கீடு செய்து  அடிக்கல் நாட்டப்பட்டதும்  திமுக ஆட்சியில்தான்


திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட மருத்துவ கல்லூரியை தொடங்க அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை தமிழக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு  சொன்னதற்கான ஆதாரம்



Monday 28 October 2019

ஈழத்தமிழர் பிரட்சினையில் கலைஞரை குறை சொல்லும் கிறுக்கனுங்களுக்கு சில கேள்விகள்.

ஈழத்தமிழர் பிரட்சினையில் கலைஞரை குறை சொல்லும் கிறுக்கனுங்களுக்கு சில கேள்விகள்.

(1)MGR ரிடம் நன்கொடை பெற்றுக் கொண்டு கலைஞர் தந்த நன்கொடையை வாங்க பிரபாகரன் மறுத்தது ஏன்?

(2) சகப் போராளிகளை கொல்ல வேண்டாம் என கலைஞர் கோரியும் பிரபாகரன் அதை மதிக்காதது ஏன்?

(3) 1976 க்கு பின் 14 வருடம் கழித்து தமிழகத்தில் 1989 ல் திமுக ஆட்சி அமைத்த நேரத்தில் பத்மநாபாவை 1990 ல் கோடம்பாக்கம் வந்து கொன்றது ஏன்?

(4) ராஜீவ் கொலைப்பழி கலைஞர் மேல் விழுந்த போது பிரபாகரன் அமைதியாக இருந்தது ஏன்?

(5) வைக்கோவை மட்டும் தனியாக அழைத்து திமுகவை பிரபாகரன் கூறுபோட நினைத்தது ஏன்?

(6) ராஜபக்சேவுக்கு மறைமுக ஆதரவளிக்கும் நோக்கத்தோடு
தேர்தலை புறக்கணித்ததால்தானே
ரணில் விக்ரமசிங்கே தோற்றார்

ராஜபக்சே ஆட்சிக்கு வர மறைமுக புலிகள் ஆதரவு தந்ததேன்?

(7) மாவிலாறு அணையை மூடி போரை தொடங்கியது ஏன்?

(8) புலிகள் தங்களின் எந்த ஒரு நடவடிக்கைக்கும் கலைஞரை ஆலோசித்ததில்லை.

கலைஞரின் வேண்டுகோளையோ அவரது ஆலோசனையையோ கேட்டு தங்களது நடவடிக்கைகளை நிறுத்தியதும் இல்லை.

கலைஞர் தமிழர் தலைவர் அவர்  போரை நிறுத்திருக்கனும் எனப் புலம்புகிறீர்களே புலிகள் ஏன் கலைஞரிடம் எந்த சூழலிலும் எந்த ஆலோசனையையும் பெறவில்லை?

இந்த கேள்விக்கு பதில் என்ன?

(9) 1991 க்கு பின் புலிகளுக்கும் கலைஞருக்கும் எந்த நேரடி உறவும் அல்லது மறைமுக உறவும் இல்லாத பொழுது  கலைஞரால் போரை( தடுக்க முடியுமா என்ற கேள்வியைத் தாண்டி) தடுக்க வேண்டிய அவசியம் எப்படி வரும்?

(10) போரில் புலிகளை காப்பாற்ற கலைஞர் உண்ணாவிரதம் இருக்கவில்லை. அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படக் கூடாது என்பதற்காகவே உண்ணாவிரதம் இருந்தார்.
அந்த சமயம் போரை நிறுத்துவதாக இலங்கை அரசு அறிவித்ததை உலகறியும். அதன் பின்னர் இலங்கை தன் அறிவிப்பில் இருந்து பின் வாங்கியது.

அதற்கு கலைஞர் எப்படி பொறுப்பாவார்?

இருந்தும் கலைஞரை தூற்றுவது ஏன்?

(11) உச்சக்கட்ட போரின் போது பாராளுமன்ற தேர்தல் நடந்தது. திமுக MP க்களின் பதவிக் காலமே முடியும் தருவாயில் அவர்கள் ஏன் ராஜினாமா செய்யவில்லை எனக் கேட்பது முட்டாள்தனம் இல்லையா?


(12) கலைஞரின் அரசு 1991 ல் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டிய நேரத்தில் அதை கெடுத்தது யார்?

யாருக்காக ஏன் கலைஞர் தனது மாநில அரசை 2009 ல் கலைத்திருக்க வேண்டும்?. அதனால் யாருக்கு என்ன நன்மை?

(13) கலைஞருக்கும் புலிகளுக்கும் உறவு என்ற ஒன்றே இல்லாதபோது அங்கே துரோகம் வார்த்தைக்கு அர்த்தமே இல்லையே.

பரஸ்பர நம்பிக்கையே இல்லாத போது துரோகம் எங்கிருந்து வரும்?

(14) எந்த ஒரு போரின் தோல்வியும் ஒரு சில நாட்களில் நிர்ணயிக்கப்படுவதில்லை.

ஈழப்போர் 1983 ல் தொடங்கி 2009 ல் முடிந்துள்ளது. 26 வருடங்களில் நடந்த போருக்கும் புலிகளின் வெற்றி தோல்விகளுக்கும் கலைஞருக்கும் எந்த தொடர்பாவது எப்போதாவது இருந்ததுண்டா?

2009 போரில் மட்டும் கலைஞரை சம்பந்தப்படுத்துவதும் அவர் மேல் சேற்றை வாரி இறைப்பதும் ஏன்?

கலைஞர் புலிகளுக்கு எதிராக என்றுமே பேசியதில்லை

அதை தவறாக பயன்படுத்திக் கொண்டு ஈன எச்சப் பொறுக்கிகள்  வேண்டுமென்றே கலைஞரை அவதூறு செய்கிறார்கள்

நாசமா போவீங்கடா






Wednesday 9 October 2019

திராவிடமும் திராவிடர்களும்

இந்தியாவில் ஆரியர்கள் நுழைவதற்கு

முன்பே ஒரு இனம் குடியேறி வாழ்ந்து வந்தது.

அந்த இனத்தை திராவிடர் என பெயரிட்டு

அழைத்தார்கள். அந்த இனம் பேசிய 72-80

மொழிகளிலும் தமிழ் கலந்துள்ளதால் அந்த

இனத்தின் தலைமையாக தமிழும் தமிழனும்

பார்க்கப்படுகிறான்.

யார் ஏற்றாலும் ஏற்காவிடிலும் தமிழனே திராவிட

இனத்தின் தலைவன். தமிழே திராவிட

மொழிகளின் தலைமை மொழி.

திராவிடர்களுக்கு பின் இந்தியாவில் குடியேறிய

ஆரியர்கள் திராவிட இனத்தை தங்களின் முதல்

எதிரியாக பாவித்து அவர்கள் மீது போர்தொடுத்து

திராவிட இன மக்களை அடிமையாக்கி

வேதங்களை ..புராணங்களை உருவாக்கி

அவர்களது கலாட்சாரம் மற்றும் அவர்களது

மொழியான சமஸ்கிருதத்தை திராவிட

மொழிகளோடு கலந்து திராவிட மொழிகளை

திராவிட கலாட்சாரத்தை சிதைத்தனர் ஆரியர்கள்

திராவிடர்களை ஏமாற்றி நான்கு வர்ணங்களை

உருவாக்கி அதன் மூலம் மன்னர்களை

அடிமைபடுத்தி ராஜகுருக்களாக மொத்த திராவிட

இனத்தையும் சீரழித்தனர்

தங்களின் சொந்த அடையாளத்தை மறந்த

திராவிட இனத்தோர் இன்று முழுமையாக

ஆரியர்களின் அடிமையாக இந்தியா முழுவதும்

குறிப்பாக தென் இந்தியாவில் வாழ்கின்றனர்

ஆங்கிலேய ஆட்சியில் ஆரியர்களின்

அடக்குமுறையை எதிர்த்து மதராஸ்

சமஸ்தானத்தில் திராவிடர்கள் அடிமைகளாக

வாழ்வதை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட

இயக்கத்திற்கு திராவிட இயக்கம் என

பெயரிடப்பட்டது.

ஆரிய அடிமைத்தனத்தில் இருந்து விடுபடவே
 " திராவிடம் " என்ற தத்துவம் உருவானது

மொழி அடிப்படையில் தமிழ்நாடு உருவான பின்

திராவிடத்தை தன் பெயரில் வைத்துள்ள திமுக

" திராவிடம்" என்ற தத்துவத்தை முன்னெடுத்து

செயல்பட்டு வருகிறது.

இதை பெரிய தவறாக காண்பிக்கவும் திராவிடம்

மற்றும் திராவிடர் போன்ற வார்த்தைகளை

தவறான இழிவான வார்த்தைகளாக காட்ட சிலர்

முயற்சிப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.