Wednesday 29 August 2018

GAIL திட்டத்தை தமிழகத்தில் கொண்டு வந்தது ஜெயலலிதாதான். அவர் முன்னிலையில்தான் ஒப்பந்தம் கையொப்பமானது.

GAIL திட்டத்தை தமிழகத்தில் கொண்டு வந்தது ஜெயலலிதாதான். அவர் முன்னிலையில்தான் ஒப்பந்தம் கையொப்பமானது. ஜெயலலிதா இதை தமிழக சட்டமன்றத்தில் அறிவித்தார்
ஆதாரம் 👇
TN signs pact with GAIL for gas pipeline infrastructure

https://www.thehindubusinessline.com/economy/policy/tn-signs-pact-with-gail-for-gas-pipeline-infrastructure/article23118095.ece

GAIL (India) Ltd will invest over Rs 6,000 crore in Liquified Natural Gas distribution network and power project in Tamil Nadu.

The Chief Minister Ms J. Jayalalithaa said the agreement signed between GAIL and the Tamil Nadu Industrial Development Corporation (Tidco) on Thursday provides for the establishment of a natural gas pipeline network to supply fuel to industries, households and for use as automobile fuel. GAIL will invest in the infrastructure and Tidco will facilitate the implementation of the projects.

GAIL, is a Rs 32,000 crore company in transmission and distribution of natural gas and petroleum gas and gas based power projects. Tidco is a State-run industry development agency.

Addressing the Legislature today, Ms Jayalalithaa said the investments will bring down the State’s dependence on coal and petroleum products as fuel and enable fuel self sufficiency for industrial development. Tamil Nadu needs two LNG terminals each of about 5 million tonnes a year.

An agreement between Tidco and the Central Government Enterprise Indian Oil Corporation in March provides for the oil company to set up a 5 million tonne LNG import terminal near Ennore Port to the North of Chennai. This facility will be ready in 2016 and supply over 18 million cubic metres of fuel daily for industrial, household and automobile fuel use.

The agreement with GAIL provides for the pipeline infrastructure.

Also, GAIL’s LNG pipeline between Kochi LNG import terminal and Bangalore will run 310 km through Tamil Nadu traversing Coimbatore, Salem, Erode, Tiruppur, Namakkal, Dharmapuri and Krishnagiri Districts.

GAIL will implement a Rs 1,000 crore LNG distribution pipeline network to distribute the fuel to consumers. The company will also set up a Rs 500-crore pipeline between Salem and Cuddalore to carry 6 million cubic metres of gas daily. It will also set up a floating storage degasification unit in South Coastal Tamil Nadu at a cost of Rs 2,500 crore.

GAIL and Tidco will also set up a joint venture project for a 500 MW, LNG-based power project at a cost of Rs 2,000 crore, she said. This can be expanded with additional investments of Rs 10,000 crore.

Industrial estate

To facilitate industrial investments, the State Government will create industrial estates with adequate infrastructure to provide a competitive environment for manufacturing sector. The first of the modern industrial zones will come up in Tuticorin over a 1,500-acre area, Vellore 2,000 acres and in Krishnagiri over a 4,000 acre area.

A 1000-acre industrial hub for heavy engineering industries with access to Ennore Port will also be established, she said. The road links to the Port are being upgraded to benefit the industrial units in Oragadam to the west of Chennai, which use the Port for exports.

Industrial infrastructure fund

A Rs 100 crore industrial infrastructure fund will be established to maintain the infrastructure in the industrial estates. Tidco will bring in Rs 80 crore and the State Government Rs 20 crore. This fund will be used to upgrade road link, implement pollution control measures and other basic facilities.

Published on May 11, 2012

Tuesday 28 August 2018

நான் புதிதாய் பிறக்கிறேன்: திமுக தலைவராக தளபதி ஸ்டாலின் அவர்களின் முதல் உரை

நான் புதிதாய் பிறக்கிறேன்: திமுக தலைவராக தளபதி ஸ்டாலின் அவர்களின் முதல் உரை

என் உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன் பிறப்புகளே..

உங்கள் அனைவருக்கும் வணக்கம். ஒரு பேருண்மையைச் சொல்லி உரையைத் தொடங்குகிறேன். நான் தலைவர் கலைஞர் இல்லை. அவர் போல் பேசத்தெரியாது. பேசவும் முடியாது. அவரைப்போல் மொழியை ஆளத்தெரியாது. ஆனால் எதையும் முயன்று பார்க்கும் துணிவைக் கொண்டவனாக உங்கள் முன் நிற்கிறேன். இது பெரியார் அண்ணா வழியாக எனக்குள் விதைத்திருக்கக் கூடிய விதை. இன்று நம் மத்தியில் தலைவர் இல்லாவிட்டாலும். தலைவருடைய கொள்கை தீபம் இருக்கிறது. தலைவரின் கொள்கை தீபம் நம் கையில் இருப்பது முப்படையும் நம் கையில் இருப்பதற்கு சமம். அந்த முப்படை நம்மிடத்தில் இருக்கிறது என்ற தைரியத்தில் துணிச்சலில் இந்த தலைவர் பொறுப்பை உங்கள் அன்போடு ஆதரவோடு நான் ஏற்றுக் கொள்கிறேன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று நான் வாழ்ந்ததாக தலைவர் கலைஞர் என்னைபாராட்டியிருக்கிறார். உழைப்பு உழைப்பு உழைப்பு என்று எனது பெயருக்கு விளக்கம் சொல்லி உச்சி முகர்ந்தார் தலைவர் கலைஞர். அந்த வார்த்தைக்கு உதாரணமானவாக என் வாழ்க்கை முழுவதும் உழைப்பு உழைப்பு உழைப்பு என்றுதான் வாழ்வேன்.

என்னைவிட கழகம் பெரிது என்றார் கலைஞர். அவர் வழியில் நானும் சொல்கிறேன் என்னைவிட கழகம் பெரிது. திமுகதான் எந்த தனிமனிதனையும்விட பெரியது. உதயசூரியன் சின்னம்தான் எந்த பெரிய மனிதனைவிடவும் பெரியது.  இந்த மேடையில் எனக்கு ஒரே ஒரு குறைதான்.

இந்த காட்சியைப் பார்க்க தலைவர் கலைஞர் இல்லையே என்ற குறைதான். ஆனால், கலைஞரிடத்தில் பேராசியர் இருக்கிறார். வாழும் திராவிட தூணாக பேராசிரியர் அன்பழகன் இருக்கிறார்.

எனக்கு அக்கா உண்டு அண்ணன் இல்லை..என்று கலைஞர் குறிப்பிட்டிருக்கிறார். ஆதலால், பேராசிரியர் அப்பாவுக்கு அண்ணன். எனவே, பேராசிரியர்தான் எனக்கு பெரியப்பா. அப்பாவுக்கு முன்னரே என்னை தலைவராக முன்மொழிந்தவர் பெரியப்பா. அப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவது 100 மடங்கு சிரமம். பெரியப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவது 200 மடங்கு சிரமம் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அடுத்த தலைவராவதற்கு ஸ்டாலின் தான் தகுதியானவர் என்று கூறியவர் பெரியப்பா.

அந்த பேராசிரியருக்கு முன்னால் நின்று தலைவராக தேர்வு பெற்றதை நான் பெருமையாகக் கருத்துகிறேன். அரங்கத்தில் இருப்பவர்கள் முகத்தைப் பார்த்தேன்.

என்னை பள்ளி சிறுவன், கல்லூரி மாணவனாக, கழக பேச்சாளராக, இளைஞரணி செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக, மேயராக, அமைச்சராக, துணை முதல்வராக பொருளாளராக, செயல்தலைவராக எனது வளர்ச்சியை படிப்படியாகப் பார்த்தவர்கள் இங்கே இருக்கிறீர்கள். படிப்படியாக வளர வேண்டும் என்றுதான் கலைஞர் விரும்பினார். நானும் படிப்படியாக முன்னேறவே விரும்பினேன். தலைவர் கலைஞரின் மகன் என்பதைவிட தலைவரின் தொண்டன் என்பதிலேயே மகிழ்ச்சி.
பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவம், எனும் 4 தூண்களால் எழுப்பிய கோட்டை நமது திராவிட முன்னேற்ற கழகம். சுயமரியாதை இல்லாத மாநில அரசு. சமத்துவத்தையும் சமூகநீதியையும் பகுத்தறிவையும் சிதைக்கக்கூடிய மத்திய அரசையும் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. மாநில மக்களின் நலனை காவு கொடுத்து அரசு என்ற பெயரால் பகல் கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தை திருடர்கள் கையில் இருந்து விடுவிப்பதுதான் நம்முடைய முதல் கடமையாக இருக்க வேண்டும். நாட்டின் மாபெரும் ஆபத்து எதுவென்றால் கொள்கைகளே இல்லாமல் இயங்கக்கூடிய அரசியல் கட்சிகள். தமிழக ஆட்சியர்களை பார்க்கும்போது நெஞ்சு பொருக்குதில்லையே என்ற பாரதியின் வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகிறது.

வெளியில் இருந்து எதிர்கொள்ளும் சவால்களுக்கு இடையே, நாம் யார்? நம் கொள்கைகள் என்ன? நமக்குள் இருக்கும் குறைகள் என்ன? காலத்திற்கேற்ப நாம் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் என்ன? இந்த கேள்விகள் சில நாட்களாக என்னைத் தூங்கவிடவில்லை.

விழித்துக் கொண்டே ஒரு கனவு கண்டேன். ஒரு அழகான எதிர்காலத்தை நான் கனவு கண்டேன்! இந்த நாளில் அந்தக் கனவின் சில துளிகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நாம், நம் கழகம், நம் தமிழினம், நம் நாடு, நம் உலகம் இவை அனைத்தும் புத்தம் புதிதாய் பேரழகாய் மகிழ்ச்சியில் வாழும் கனவு அது. காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளாத விலங்கோ இனமோ இந்த மண்ணில் நீடித்து நிற்பதில்லை. மாற்றங்கள் நம்மில் இருந்து தொடங்கட்டும். இன்று நீங்கள் பார்க்கும் கேட்கும் மு.க.ஸ்டாலினாகிய நான் புதிதாய் பிறக்கிறேன். இது வேறு ஒரு நான். திமுகவின் மரபணுக்களோடு; நல்ல ஒரு எதிர்காலத்தை உருவாக்கும் கனவுகளோடு.. இதோ உங்கள் முன் பிறந்திருக்கிறேன். நான் மட்டுமா!? என்னோடு பிறந்திருக்கக்கூடிய இந்த கோடிக்கணக்கான உடன்பிறப்புகளுக்கு எனது வாழ்த்துகள். இது புதிய நாம்.  அந்த அழகான எதிர்காலத்தில் நம் கழகத்தினர்.

யார் அந்த கழகத்தினர். தன் சாதியே உயர்ந்தது என நினைப்போர் அல்ல. உலகில் பிறந்த அனைவரையும் தன் உடன்பிறப்பாக நினைப்பவர்கள் தான் அந்த கழகத்தினர். எளியோருக்கு கரம் கொடுப்பவர்கள். கடவுள் எதிர்ப்பாளர்கள் அல்ல. தான் நம்பவில்லை எனினும் என்றாலும் பிறர் நம்பிக்கைகளுக்கு மரியாதை கொடுப்போர். யார் தவறு செய்தாலும், நானே செய்தாலும் அதை எதிர்த்து குரல் கொடுப்பவர்கள்.

அந்த அழகான எதிர்காலத்தில் நம் கழகத்தின் கொள்கை என்ன? அந்த அழகான எதிர்காலத்தில் நம் கழகத்தின் கொள்கைகள் என்ன? பகுத்தறிவு மூலம் உலகைக் காணுவோம் என உரக்கச் சொல்லுதல். ஆணும் பெண்ணும் இங்கு சமம் என மதித்தல். திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் சம உரிமைகளைப் பெற்றுத் தருதல். தனி மனித மற்று ஊடக கருத்து சுதந்திரத்தை மீட்டெடுத்தல். கருத்து சுதந்திரத்தைப் போற்றிப் பாதுகாத்தல். பிற மொழிகளை அழித்து இந்தியா முழுவதற்கும் மதச்சாயம் பூச நினைக்கும் கட்சிகளை எடுத்தல். இவையெல்லாம் எனது நீண்ட கனவின் சில துகள்கள். இந்த எதிர்காலம் தூரத்தில் இல்லை.

கனவு இன்றுமுதல்  மெய்ப்படப்போகிறது. இதை மெய்ப்பிக்க துடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், இந்த பெருங்கனவை நான் தனியாக மெய்ப்பிக்கமுடியாது. என் உயிரினும் மேலான என் கலைஞரின் உடன்பிறப்புகள் இல்லாமல் இதை மெய்ப்பிக்க முடியாது. இது என் கனவு மட்டுமல்ல.  நம் கனவு. இது கழகத்தின் கனவு. தமிழகத்தின் கனவு அதுதான்.

வா என்னோடு கைகோர்க்க வா..

ஒன்றாக முன்னேற மட்டுமல்ல.. தேவைப்பட்டால் சில அடிகள் பின்னே வைக்கக் கூட

சில அடிகள் பின்னே வைப்பதும் முன்னேற்றமே!

இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வா..

முதுகெலும்பில்லாத இந்த மாநில அரசை தூக்கி எறிய வா..

நான் முன்னே செல்கிறேன்.. நீ பின்னே வா என அழைக்கவில்லை..

நாம் சேர்ந்தே செல்வோம் வா.. என்று அழைக்கிறேன்

இந்தக் கூட்டத்தில் உள்ள என் அண்ணன்கள் அக்காள்கள் இளையோர் அனைவரும் தம்பிகள் தங்கைகள்

இதுதான் நம்முடைய குடும்பம்; இதுதான் என்னுடைய குடும்பம்

நானும் ஒரு தொண்டன். இங்கு அனைவரும் சமம்.

யார் பெரியவர்கள் என்ற போட்டியில் சுயநலத்தில் கட்சியின் எதிர்காலம் பற்றி கவலைப்படாதவர்களாக யாரும் மாறிவிடக்கூடாது. தலைமைக்கு கட்டுப்பட்டவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். உங்கள் எண்ணங்களின் பிரதிபலிப்பாக தலைமை நிச்சயம் இயங்கும்.

Monday 27 August 2018

திரு ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு பகுதி 2

1990
1990ஆம் ஆண்டு பிப்ரவரி 9, 10 ஆகிய நாள்களில் தி.மு.கழகத்தின் ஆறாம் மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது. அம்மாநாட்டின் முதல் நாளில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் கழக இளைஞர் அணியினரின் வெண்சீருடைப் பேரணி மகத்தானது. அம்மாநாட்டு வளாகத்திற்குள் தி.மு.க. இளைஞர் அணி திராவிட இயக்க வரலாற்றுக் கண்காட்சியை அமைத்தது. இக்கண்காட்சியைத் தலைவர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்தார். அக்கண்காட்சியில் இயக்க வரலாற்றை விளக்கும் புகைப்படங்களும், ஓவியங்களும் எழிலுற அமைக்கப்பட்டன. அத்துடன் சேதுசமுத்திரத் திட்டம், கிழக்குக் கடற்கரைச் சாலை, போக்குவரத்துத் திட்டம் ஆகிய தமிழகம் காண வேண்டிய முன்னேற்றத் திட்டங்களை விளக்கும் செயல்விளக்கக் காட்சிகளும் அமைக்கப்பட்டன. எண்ணற்ற கழகத் தோழர்களும், பொதுமக்களும் கண்காட்சியைக் கண்டு மகிழ்ந்து பயனடைந்து பாராட்டினர்.
அதன்பின் அதே ஆண்டு (1990) ஜூன் மாதத்தில் நடைபெற்ற தமிழிக முதல்வர் – தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளின் போது சென்னை கலைவாணர் அரங்கில் தலைவர் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் செய்திகளை புகைப்பட – ஓவியக் கண்காட்சியாக இளைஞர் அணி ஏற்பாடு செய்தது. இப்பணியை தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலுடன் – இளைஞர் அணி மாநில துணை செயலாளர் மா.உமாபதி, தஞ்சை இரத்தினகிரி ஆகியோர் அமைத்தனர். இக்கண்காட்சியை அசாம் முதல்வர் பிரபுல்லகுமார் மொகந்தா அவர்கள் திறந்து வைத்துச் சிறப்பித்தார்.
1991
1991ஆம் ஆண்டு மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு வழங்கினார் பிரதமர் வி.பி.சிங் அவர்கள். பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவதை ஏற்றுக் கொள்ளாத பாரதீய ஜனதா கட்சி தன் ஆதரவை விலக்கிக் கொண்டதால், வி.பி.சிங் அவர்களின் தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டது. பின் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் சந்திரசேகரின் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்றனர். சந்திரசேகர் 116 நாள்கள் மட்டுமே ஆட்சி செய்தார். எனினும் அக்குறுகிய காலத்தில் சந்திரசேகர் ஆட்சி செய்த ஒரே செயல் தமிழ்நாட்டில் கழக ஆட்சியைக் கவிழ்த்ததுதான். தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த கழக அரசை பொய்யான காரணங்களைக் கூறி ஆளுநர் பர்னாலா பரிந்துரை செய்ய மறுத்தும் குடியரசுத் தலைவராக இருந்த ஆர்.வெங்கட்ராமன் துணையோடு ஆட்சியைக் கலைத்தனர்.
அதற்குப் பிறகு 1991ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த ராஜீவ்காந்தி திருப்பெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். அதனால் ஏற்பட்ட அனுதாப அலையின் விளைவாக கழகம் பெரும் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. அத்தேர்தலில் துறைமுகம் தொகுதியில் தலைவர் கலைஞரைத் தவிர மற்ற அனைவரும் தோல்வியைத் தழுவ நேரிட்டது.
1992
பிப்ரவரியில் மதுரையில் திராவிட இயக்கப் பவளவிழா மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் தி.மு.க. இளைஞர் அணியினரின் வெண்சீருடை அணிவகுப்பு காண்போரை வியக்க வைத்தது. அப்பேரணி அணிவகுப்பில் தென்னார்க்காடு தெற்கு மாவட்ட அமைப்பாளர் தயாளமூர்த்தி முதல் பரிசை வென்றார். அவருக்குத் தலைவர் கலைஞர் கேடயம் வழங்கி பாராட்டினார். மதுரை தமுக்கம் திடலில் நடைபெற்ற அம்மாநாட்டில் தி.மு.க. இளைஞர் அணியின் சார்பில் திராவிட இயக்க வரலாற்றுக் கண்காட்சி அமைக்கப்பட்டது.
1993
19.01.1993இல் சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் திருமண மண்டபத்தில் வடசென்னை மாவட்ட இளைஞர் அணியின் சார்பில் தமிழர் திருநாள் விழா மிகச் சிறப்பாக எடுக்கப்பட்டது.
கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் என பல்வேறு நிகழ்ச்சிகள் கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்தாக நடைபெற்றன. தலைவர் கலைஞர் நிறைவு உரையாற்றினார்.
1994
19.09.1994இல் கழக மதுரை மண்டல மாநாட்டில் முதல் நாள் நடைபெற்ற வெண்சீருடை அணிவகுப்பிற்கு தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தினார்.
7.10.1994இல் தலைவர் கலைஞர் அவர்களின் இல்லம் வந்த இந்திய முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு தளபதி மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார்.
1995
13.03.1995இல் திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை மாநகர் மாவட்டங்களில் மு.க.ஸ்டாலின் ஒருவார காலம் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு கழக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இரண்டு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய் நிதி திரட்டினார். அத்தொகையில் ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாயை இளைஞர் அணி வளர்ச்சி நிதியில் சேர்த்து, ரூபாய் ஒரு லட்சத்தை பொதுத் தேர்தலுக்கான தேர்தல் நிதியாக இளைஞர் அணியின் சார்பில் தலைவர் கலைஞர், பொதுச் செயலாளர் பேராசிரியர் ஆகியோரிடம் வழங்கினார்.
18.7.1995இல் இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு ஆளாவதைக் கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் பொருளாளர் ஆர்க்காடு நா.வீராசாமி அவர்கள் முன்னிலையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த உண்ணாவிரதத்தை தலைவர் கலைஞர் அவர்கள் நிறைவு செய்து பேருரையாற்றினார்.
18.9.1995இல் கழக முப்பெரும் விழாவையொட்டி சென்னை இராயபுரம் அறிவகம் முதல் அண்ணா அறிவாலயம் வரை சென்னை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணியினரின் மாபெரும் சைக்கிள் பேரணிக்கு தளபதி மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.
1996
28.1.1996இல் தி.மு.கழகத்தின் 8ஆம் மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது. மாநாட்டுப் பேரணியில் தி.மு.க. இளைஞர் அணியின் சிறப்பான அணிவகுப்பைத் தலைவர் கலைஞர், பொதுச் செயலாளர் பேராசிரியர், முரசொலி மாறன் உள்ளிட்ட கழக முன்னணியினர் வள்ளுவர் கோட்டம் வடிவில் அமைக்கப்பட்ட சிறப்பு மேடையில் நின்று கண்டு களித்தனர்.
மாநாட்டில் இளைஞர் அணியின் சார்பில் ஏ.வி.கே. நினைவு திராவிட இயக்க வரலாற்று கண்காட்சி அமைக்கப்பட்டது. அதில் அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் துயிலுமிடங்களின் மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
10.8.1996இல் தமிழக முதல்வர் கலைஞர் 10ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ மாணவியருக்கு அரசுப் பேருந்துகளில் இலவச பாஸ் வழங்கினார். இத்திட்டத்தை +2 படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கும் நீட்டித்து அனுமதி வழங்க வேண்டுமென சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கையை ஏற்று +2 வரை இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது.
சென்னை மேயர்
1996 அக்டோபரில் சென்னை மாநகராட்சியின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயராக தளபதி மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். உலகிலேயே 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களித்து தேர்வு செய்யப்பட்ட மாநகராட்சி மேயர் என்னும் சிறப்புத் தகுதி பெறுகிறார்.
28.12.1996இல் தி.மு.க. இளைஞர் அணியால் பல்வேறு கழகச் செய்திகளை உள்ளடக்கிய – நமது இயக்க நாள் குறிப்பு – 1997 வெளியிடப்பட்டது. இதன் முதல் பிரதியை கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் வெளியிட, கழகத் தலைவர் கலைஞர் அதனைப் பெற்றுக் கொண்டார்.
1997
28.6.1997இல் சேலத்தில் தி.மு.கழக சிறப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டுப் பேரணியில் தி.மு.க. இளைஞர் அணி வெண்சீருடை அணிவகுப்பிற்கு தளபதி மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.
8.10.1997இல் வேலூர் – திருவண்ணாமலை மாவட்ட இளைஞர் அணியின் பயிற்சிப் பாசறை ஏலகிரியில் நடைபெற்றது.
16.10.1997இல் இங்கிலாந்து நாட்டின் பேரரசியான இராணி எலிசபெத் சென்னை மாநகருக்கு வருகை புரிந்தார். அவருக்கு சென்னை மாநகரின் முதல் குடிமகனாம் மேயர் ஸ்டாலின் மலர்க்கொத்து அளித்து வரவேற்றார்.
27.10.1997இல் திண்டுக்கல், தேனி மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி பயிற்சிப் பாசறைக் கூட்டம் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் சிறப்புரையாற்றினார். இப்பயிற்சிப் பாசறையில் பேராசிரியர் நன்னன், கோவை மு.இராமநாதன், விடுதலை விரும்பி, திருச்சி செல்வேந்திரன், வெற்றிகொண்டான் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.
30.10.1997இல் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களின் தி.மு.க. இளைஞர் அணி பயிற்சிப் பாசறைக் கூட்டம் நடைபெற்றது.
22.11.1997இல் அமராவதி புதூர் குருகுலம் வளாகத்தில் சிவங்கை – இராமநாதபுரம் மாவட்டங்களின் தி.மு.க. இளைஞர் அணி பயிற்சி முகாம் நடைபெற்றது. தளபதி மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். தா.கிருட்டிணன், சுப.தங்கவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
1998
30.6.1998இல் மேயர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் நடைபெற்ற மேயர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
1999
3.1.1999இல் சென்னைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களை விமான நிலையத்தில் மேயர் ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
4.1.1999இல் சென்னையில் கடல்நீரைக் குடிநீராக மாற்றும் நிலையத்தினை மேயர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
30.8.1999இல் இளைஞர் அணியின் துணைச் செயலாளரும், தளபதி ஸ்டாலின் அவர்களின் உடன்பிறவா சகோதரரும், இளைஞர் அணித் தோழர்களின் உறவுப் பாலமாகவும் விளங்கிய அன்பில் பொய்யாமொழி மாரடைப்பில் காலமானார்.
2000
கடந்த 1991-1996இல் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா செய்த ஊழல்கள் எண்ணற்றவை. தொட்டில் குழந்தை திட்டம் முதல் சுடுகாட்டுக் கூரைத் திட்டம் வரை பல்வேறு ஊழல்கள் தலைவிரித்தாடின. டான்சி நில ஊழல் வழக்கு முதல் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக பல்வேறு வழக்குகள் வழக்கு மன்றங்களில் பதிவாகின. அவற்றுள் ஒன்றான கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று வழக்கு மன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது அ.தி.மு.க.வினர் நாட்டின் பல பகுதிகளில் பேருந்துகளின் மீது கல்வீச்சு – கட்டாய கடையடைப்பு போன்ற அராஜகங்களில் ஈடுபட்டனர்.
அந்நிகழ்ச்சிகளில் ஒன்றாக தருமபுரியில், கோவை வேளாண் பல்கலைக் கழக மாணவிகள் சென்ற பேருந்து தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. காட்டுமிராண்டிகள் கூட செய்ய அஞ்சும் அக்கொலை பாதகச் செயலாளர் அப்பேருந்தில் பயணம் செய்த ஹேமலதா, காயத்திரி, கோகிலாவாணி என்னும் மூன்று மாணவிகள் உயிருடன் எரிந்து சாம்பலாகினர். மற்றும் பல மாணவிகள் தீக்காயங்களுடன் உயிர் பிழைத்தனர். இக்கொடிய சம்பவத்தைக் கண்டித்து மாபெரும் கண்டனப் பேரணி மேயர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இப்பேரணியில் பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவியர் பங்கேற்றனர்.
2001
2001ஆம் ஆண்டு மார்ச் திங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தளபதி மு.க.ஸ்டாலின் ஆயிரம் விளக்குத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
எழும்பூர் தொகுதியில் வாக்குப்பதிவின் போது ஜான்பாண்டியனால் திட்டமிட்டு வன்முறை நடத்தப்பட்டது. ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்ற ஜெயலலிதா உடனடியாக கழக வெற்றி வேட்பாளர் பரிதி இளம்வழுதியை கைது செய்தார்.
அதன்பின் சட்டமன்றத்தில் கழக ஆட்சியில் கொள்முதல் செய்து வைக்கப்பட்ட பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அரிசி புழுத்துப் போய்விட்டதாகப் பொய் சொன்னார். அரசுக் கிடங்களில் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொள்முதல் செய்து வைக்கப்பட்டுள்ள அரிசி புழுத்துப் போனவை அல்ல என்பதை நிரூபித்த விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் க.பொன்முடி, செய்தியாளர்களுடன் சென்று மாதிரிகளை எடுத்து அவை நல்ல அரிசிதான் என்பதை நிரூபித்தார். இதனை அத்துமீறல் என்று கூறி ஜெயலலிதாஅரசு பொன்முடியைக் கைது செய்தது.
ஜெயலலிதாவின் ஏவல் துறையாக செயல்பட்ட காவல் துறையினர் ஜூன் 30ஆம் நாள் நள்ளிரவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தலைவர் கலைஞர் அவர்களை அறைக் கதவுகளை உடைத்து, அத்துமீறி அராஜகமான முறையில் கைது செய்தனர். இதனைத் தட்டிக் கேட்ட மத்திய அமைச்சர்களான முரசொலி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் மீது வன்முறைத் தாக்குதல் தொடுக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தளபதி ஸ்டாலின் அவர்களையும் கைது செய்யச் சென்றனர். அப்போது அவர் பெங்களூருக்கு சென்றிருந்ததால் கைது செய்யவில்லை. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையை சிங்காரச் சென்னையாக்கிட பத்து மேம்பாலங்களைக் கட்டிச் சாதனை படைத்ததை ஊழல் என்று கூறி கைது நடவடிக்கைகள் நடைபெற்றன. தலைவர் கைது செய்யப்பட்டதையும், தான் தேடப்படுவதையும் அறிந்த தளபதி ஸ்டாலின் உடன் சென்னை திரும்பி காவல்துறையிடம் தன் ஒப்படைப்பு செய்தார்.
தலைவர் கைது செய்யப்பட்டதை அறிந்து நாடே கொந்தளித்தது. பலர் நெஞ்சதிர்ச்சியாலும், நஞ்சருந்தியும், தீக்குளித்தும் மாண்டனர். நாடு முழுவதும் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் சிறையேகினர்.
தலைவர் கலைஞர் அவர்களை அக்கிரமமான முறையில் கைது செய்தததைக் கண்டித்து ஆகஸ்ட் 12ஆம் நாள் ஒரு மாபெரும் கண்டனப் பேரணி சென்னை சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலத்திலிருந்து கடற்கரையில் உள்ள சீரணி அரங்கம் வரை நடைபெற்றது. அமைதியான முறையில் தன் கண்டனத்தைத் தெரிவித்து நடைபெற்ற அந்தப் பேரணியை, காவல்துறைத் தலைவர் அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தபோது, ஆளுங்கட்சியால் ஏவப்பட்ட கூலிப் படைகளும், காலிப் படைகளும் அரிவாள், பட்டாக்கத்தி முதலான பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். இதில் ஆறு தோழர்கள் மரணமடைந்தனர். எண்ணற்ற கழகத் தோழர்கள் படுகாயமுற்றனர். சிதறியோடிய கழகத் தோழர்கள் மீது காவல் துறையினர் குண்டாந்தடி கொண்டு தாக்கினர். இக்காட்சிகளைப் படம் பிடித்த செய்தியாளர்களும் காவல் துறையின் தாக்குதலுக்கு ஆளாகினர். காவல்துறைத் தலைவர் அலுவலகத்தில் சிறை வைக்கப்பட்டனர். கழகத் தோழர்கள் வந்த வாகனங்கள் பல தீயிட்டு கொளுத்தப்பட்டன.
இப்பேரணியில் முழக்கமிட்டபடி தொழிலாளர் பேரணியை நடத்தி வந்த தொழிலாளர் முன்னேற்றக் கழக செயலாளரும், சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வை.பெருமாள் நெஞ்சதிர்ச்சியால் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாண்டார்.
செப்டம்பர் 15ஆம் நாள் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளன்று, வள்ளுவர் கோட்டத்தின் முன்பாக, தொண்டர் அணியின் அணிவகுப்பு நடைபெற்றது. அப்போது தொண்டர் அணியில் சிறப்பாகப் பணியாற்றியமைக்காக கலைஞர் விருது பொற் பதக்கம் வழங்கப்பட்டது. அப்பதக்கத்தை மிடுக்குடன் வந்து பெற்றுத் திரும்பிய தொண்டர் அணியின் செயலாளர் மாஸ்டர் தமிழ்ப்பித்தன் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து நெஞ்சதிர்ச்சியால் மாண்டார்.
தளபதி அவர்களின் தலைமையில் சிறப்பு மிகுந்த வெண்சீருடை அணிவகுப்பினை நடத்திக் காட்ட பயிற்சியளித்தவரும் தளபதி அவர்களின் தனியன்புக்கு உரியவருமாமன மாஸ்டர் தமிழ்ப்பித்தன் இழப்பு கழகத்திற்கு பேரிழப்பாகும்.
25.10.2001 சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் தளபதி மு.க.ஸ்டாலின் மீண்டும் வெற்றி பெற்றார்.

2002
22.04.2002 எம்.எல்.ஏ. பதவியில் இருப்பவர்கள் மேயர் போன்ற உள்ளாட்சி மன்ற பதவி வகிக்க முடியாதபடி 22.9.2002இல் அ.தி.மு.க அரசு சட்டம் கொண்டு வந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தளபதி ஸ்டாலின் அவர்களின் மேயர் பதவியைப் பறித்தது.
சென்னை மாநகர தலைவராக (மேயராக) இருந்த தளபதி ஸ்டாலின் அவர்களின் பதவியைப் பறித்தது செல்லாது என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சூடு கொடுத்தது. எனினும் இரண்டாவது முறையாக ஒருவரே மேயர் ஆக முடியாது என்று கூறியதால் மேயர் பொறுப்பை விடுத்தார்.
2003
தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பு வகித்த கழக தளபதி மு.க.ஸ்டாலின் கழகத்தின் 12ஆம் பொதுத் தேர்தலுக்குப் பின் 2.6.2003இல் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ஆனார்.
கழகத் துணைப் பொதுச் செயலாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் பெருமுயற்சியால் தி.மு.க. இளைஞர் அணி நடத்தி வந்த திராவிட இயக்க வரலாறு கண்காட்சி, நிரந்தரமான கண்காட்சியமாக அண்ணா அறிவாலயத்தில் உருவானது. வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பணிக்கு தஞ்சை இரத்தினகிரியும், பொள்ளாச்சி மா.உமாபதியும் துணை நின்றனர். கலைஞர் கருவூலம் என்னும் குளிரூட்டப்பட்ட 10,000 சதுர அடி பரப்பளவு தளத்தில் அமைந்த அக்கண்காட்சி இந்தியாவில் வேறு எந்த அரசியல் இயக்கத்திற்கும் இல்லாத பெருமை கொண்டது. கலைஞர் கருவூலத்தை மேனாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
2004
மே மாதத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தலைவர் கலைஞர் அவர்கள்தான் முதன் முதலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என பிரகடனம் செய்தார். தலைவரின் அறிவிப்புக்குப் பின் காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவு பெருகியது. இதன் விளைவாக நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் தி.மு.கழகம் தலைமையில் இக்கூட்டணி 40 இடங்களிலும் வென்று மகத்தான வரலாறு படைத்தது.
மத்திய அரசில் தமிழகத்தின் சார்பில் ஆறு கேபினட் அமைச்சர்களும், ஆறு இணை அமைச்சர்களுமாக 12 தமிழர்கள் அமைச்சரவையில் இடம் பெற்றனர். தலைவர் கலைஞர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. இதற்கு தலைவர் கலைஞர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தி.மு.க. இளைஞர் அணி பாராட்டுக் கூட்டம் நடத்தியது.


தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கைக்குறிப்பு பகுதி 1

தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கைக்குறிப்பு

பிறந்த தேதி: 01-03-1953 அன்று
பெற்றோர்: தலைவர் கலைஞர் தயாளு அம்மாள் ஆகியோர்க்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார்.
உடன் பிறந்தோர்: மு. க. அழகிரி (அண்ணன்), செல்வி (அக்காள்), மு.க. தமிழரசு (தம்பி)
கல்வி: சென்னை, மெட்ராஸ் கிறுஸ்டியன் கல்லூரிப் பள்ளியில் பள்ளிக்கல்வி
சென்னை, மாநிலக்கல்லூரியில் புதுமுக வகுப்பு மற்றும் இளங்கலை கலையியல் பட்டப்படிப்பு
திருமண நாள்: 25-08-1975
துணைவியார்: திருமதி. துர்கா
குழந்தைகள்: உதயநிதி (மகன்), செந்தாமரை (மகள்)
அரசியல் பணி: சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (1989-1991, 1996-2001, 2001-2006, 2006-இன்றுவரை)
@ 1996 முதல் 2002 வரை சென்னை மாகாண மேயர்.
@ 2006 முதல் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர்.
@ தி.மு.க வின் துணைப் பொதுச்செயலாளர்
@ தி.மு.க இளைஞர் அணி செயலாளர்.
பயணம் செய்த நாடுகள்: சிங்கபூர், மலேசியா, ஹாங்காங், தாய்லாந்து, ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான்…
எழுதியுள்ல நூல்: பயணச்சிறகுகள்
தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தியாக வரலாறு

1968
தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் 15 வயது மாணவராக இருக்கும் போதே கோபாலபுரம் பகுதியில் வசிக்கும் தன் வயதை ஒத்த இளைஞர்களை இணைத்து 1968ஆம் ஆண்டு இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பினை உருவாக்கினார். தலைவர் வீட்டுப்பிள்ளை என்று மட்டும் இருந்துவிடாமல் இயக்க வளர்ச்சிக்காக இளைஞர்களைக் கொண்ட இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பாக நடத்தி வந்தார். அந்தச் செயல்பாட்டின் தொடக்கமே இளைஞர் அணி வரலாற்றின் தொடக்கம்.
30.09.1968 அன்று அண்ணா பிறந்த நாள் விழாவை தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களே முன்னின்று கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. சார்பில் நடத்தினார். அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அப்போதைய பொதுப்பணி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் மு.கருணாநிதி அவர்களுடன், அமைச்சர்கள் ஏ.கோவிந்தசாமி, முத்துசாமி மற்றும் சிலம்புச் செல்வர் ம.பொ.சி., ப.உ.சண்முகம், இரா.சனார்த்தனம் முதலானோர் பங்கேற்றனர். மு.க.தமிழரசு அவர்கள் வருகை தந்து சிறப்பு விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றார். முரசொலி மாறன் அவர்களின் மகன் கலாநிதி மாறன் ஏழை எளியவர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கினார்.
முதல் தேர்தல் பணி
1968ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் – சென்னை 99ஆம் வட்டத்தில் டி.கே.கபாலி அவர்களும், 109ஆம் வட்டத்தில் இரா.சடகோபன் ஆகிய கழக வேட்பாளர்களை ஆதரித்து கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. பிரச்சாரப் பணியாற்றியது. தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் முதல் தேர்தல் பணி இதுவாகும்.
முதல் பொதுக்கூட்டம்
தளபதி மு.க.ஸ்டாலின் பங்கேற்ற முதல் தி.மு.க. பொதுக்கூட்டம் – 30.01.1969 அன்று சென்னை கோடம்பாக்கம் – மாம்பலம் நெடுஞ்சாலையில் நடைபெற்றதாகும். அக்கூட்டத்தில் நடிகமணி டி.வி.நாராயணசாமி, நீலநாராயணன், சா.கணேசன், நடிகர் ஓ.ஏ.கே. தேவர், செல்வரத்தினம், பாண்டியன் முதலானோரும் பங்கேற்றுப் பேசினர்.
1969
01.10.1969 பேரறிஞர் அண்ணாவின் மணிவிழா, கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது. இளைஞர் தி.மு.க.வினர் அண்ணா துயிலுமிடத்துக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அன்று மாலை வடபழனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு தளபதி மு.க.ஸ்டாலின் வரவேற்புரை வழங்கினார். அக்கூட்டத்தில் முதல்வர் கலைஞர் அவர்களுடன் ஆந்திர முதல்வர் பிரம்மானந்த ரெட்டி, புதுவை முதல்வர் பரூக் அப்துல்லா ஆகிய மூன்று மாநில முதல்வர்களும், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., முரசொலி மாறன் எம்.பி. உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
1970
13.01.1970ஆம் நாள் தி.மு.கழக முன்னணியினருக்கும், இளைஞர் தி.மு.க. அமைப்பு உறுப்பினர்கள் அனைவருக்கும் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து அனுப்பி வைத்தார்.
சென்னை 115ஆவது வட்டத்தில் எம்.எஸ்.மணி அவர்கள் தலைமையில் 22.04.1970 அன்று நடைபெற்ற தி.மு.கழகப் பொதுக்கூட்டத்தில் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராசேந்திரன், அமைச்சர் என்.வி.நடராசன், சைதை சம்பந்தம் முதலானோருடன் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
சென்னை 119ஆம் வட்டம் – கோட்டூர் எல்லையம்மன் கோயில் அருகில் என்.எஸ்.கே. நினைவு மன்றத்தின் சார்பில் – சா.கணேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தி.மு.கழகப் பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் மனோகரன் எம்.பி., கோவை செழியன், சைதை சம்பந்தம் முதலானோருடன் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
நாடகங்களில்…
நூறு பொதுக்கூட்டங்களுக்கு ஒரு நாடகம் ஈடானது என்பார்கள். அதனால்தான் பேரறிஞர் அண்ணா சந்திரோதயம், சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம் முதலான நாடகங்களை உருவாக்கி அவற்றில் நடிக்கவும் செய்தார். தலைவர் கலைஞர் காகிதப்பூ முதலான நாடங்களில் நடித்தார். அவர்களின் வழியிலேயே கழகக் கொள்கைப் பிரசாரத்திற்காக மு.க.ஸ்டாலின் அவர்களும் பல்வேறு நாடகங்களில் நடித்தார். அவற்றில் முதல் நாடகம் முரசே முழங்கு. சென்னை திருவல்லிக்கேணி என்.கே.டி.கலா மண்டபத்தில் நடைபெற்ற அந்நாடகத்திற்கு முதல்வர் கலைஞர் அவர்கள் முன்னிலை வகித்தார். புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். தலைமை வகித்தார். இந்நாடகம் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டது. 40ஆம் முறையாகவும், நிறைவாகவும் அதே அரங்கத்தில் நடைபெற்ற போது புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். தலைமை வகித்தார்.
சுற்றுச்சூழல் தூய்மையில் மிகுந்த அக்கறை கொண்ட மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை எலியட்ஸ் கடற்கரையில் தூய்மைப்படுத்தும் பணியினை நீலநாராயணன் அவர்கள் தலைமையில் தனி அதிகாரி பரமசிவம் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
1971
25.10.1971 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் இளைஞர் தி.மு.க. சார்பில் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பட்டிமன்றம் நடத்தப்பட்டது. அண்ணா என்றும் வாழ்வது எதனால்? மனிதாபிமான உணர்வாலா?, மொழிப் பற்றாலா? என்னும் இப்பட்டிமன்றத்திற்கு மனிதாபிமான உணர்வால் என்னும் தலைப்பில் அமைச்சர் அன்பில் தருமலிங்கம், ஔவை நடராசன், துரைமுருகன், ஏ.கே.வில்வம், என்.வி.என்.செல்வம் ஆகியோரும், மொழிப்பற்றால் என்னும் தலைப்பில் அமைச்சர் க.இராசாராம், திருப்பத்தூர் இராமமூர்த்தி, இரகுமான்கான், முரசொலி அடியார், வலம்புரிஜான் ஆகியோரும் வாதப்போர் புரிந்தனர். மாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் கலைஞர், கல்வியமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன், தமிழக அமைச்சர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கழக முன்னணியினர் பங்கேற்றனர். விழாவைச் சிறப்புற ஏற்பாடு செய்த ஸ்டாலின் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
1972 அண்ணா ஜோதி
1972ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற செங்கற்பட்டு மாவட்ட தி.மு.க. மாநாட்டிற்கு மு.க.ஸ்டாலின், இளைஞர் தி.மு.க.வின் சார்பாகத் தோழர்களை அழைத்துக் கொண்டு தொடர் ஓட்டமாக வந்து அண்ணா ஜோதியை தலைவர் கலைஞர் அவர்களிடம் வழங்கினார்.
1973
12.1.1973இல் இளைஞர் தி.மு.க. அலுவலகத்தை கழகத் தலைவர் முதல்வர் கலைஞர் அவர்கள் தலைமையில் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் திறந்து வைத்தார். தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பல்வேறு கழக மேடைகளில் எழுச்சி உரையாற்றி வந்தார்.
1973இல் ஏப்ரல் மாதத்தில் கொள்கை விளக்க நாடகமான திண்டுக்கல் தீர்ப்பு நாடகத்தில் தளபதி ஸ்டாலின் அவர்கள் கதாநாயகனாக நடித்தார்.
தேர்தல் ஆணையாளர்
இந்தியாவில் வேறு எந்த இயக்கத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு தி.மு.கழகத்தில் உள்ள ஜனநாயகப் பண்பான தேர்தல்தான். அடிப்படை உரிமைச் சீட்டுகளை உறுப்பினர்களுக்கு வழங்கி அந்த உறுப்பினர்கள் வாக்களித்து கிளைக் கழக நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பர். பின் கிளைக் கழக செயலாளர், மேலமைப்புப் பிரதிநிதிகள் ஆகியோர் வாக்களித்து நகர, ஒன்றிய கழக நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பர். நகர, ஒன்றிய செயலாளர்களும், மாவட்ட பிரதிநிதிகளும் வாக்களித்து மாவட்டக் கழக நிர்வாகிகளையும், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களையும் தேர்ந்து எடுப்பார்கள். அதன்பின் நகர, ஒன்றிய, மாவட்ட செயலாளர்களும், தலைமைப் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களும் வாக்களித்து தலைமைக் கழக நிர்வாகிகளையும், தணிக்கைக் குழு உறுப்பினர்களையும் தேர்வு செய்வார்கள். இந்த தேர்தல்களை கழகம் தொடங்கிய நாள் முதல் இன்று வரை முறையாக நடத்தி வருவது தி.மு.கழகத்தின் தனிச்சிறப்பு. 1973இல் புதுக்கோட்டை மாவட்டக் கழகத் தேர்தலை மு.க.ஸ்டாலின் ஆணையாளராகச் சென்று சிறப்புற நடத்தினார். அதுபோன்றே செங்கை மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத் தேர்தலையும் ஆணையாளராக இருந்து நடத்தி வைத்தார்.
1975
20.08.1975 அன்று தளபதி அவர்கள் துர்க்காவதி (எ) சாந்தா அவர்களை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டார். இத்திருமணம் கழக பொதுச் செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் தலைமையில் கழகப் பொருளாளர் பேராசிரியர் க.அன்பழகன் முன்னிலையில் நடைபெற்றது.
இந்திய குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது அவர்களுடன் மத்திய அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராம், பெருந்தலைவர் காமராசர், மத்திய, மாநில அமைச்சர்கள், அறிஞர் பெருமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வந்திருந்து வாழ்த்தினர்.
தி.மு.கழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஐந்தாம் மாநில மாநாட்டின் முதல் நாளில் மு.க.ஸ்டாலின் நடித்த வெற்றி நமதே நாடகம் நடைபெற்றது.
நெருக்கடி நிலை
1975ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் நாட்டில் நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தினார். அவரை எதிர்த்த அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சிறையிலடைத்தார். தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராசரை கைது செய்ய முயற்சி செய்தார். ஆனால் அப்போது தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த கலைஞர் இதற்கு ஒத்துழைக்கவில்லை. அத்துடன் கோவையில் நடைபெற்ற தி.மு.க. 5ஆம் மாநில மாநாட்டில் 
(Revoke Emergency – Release the Leaders and Restore Democracy)நெருக்கடி நிலையைத் திரும்பப் பெறுக – கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்களை விடுதலை செய்க – ஜனநாயகம் காத்திடுக என்று தீர்மானங்களை நிறைவேற்றியதாலும் – 30.01.1976 அன்று கழக ஆட்சி கவிழ்க்கப்பட்டது. நாடு முழுவதும் ஏராளமான கழக முன்னோடிகள் கைது செய்யப்பட்டனர். அவ்வகையில் தலைவர் கலைஞர் அவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக அவர் மகன் மு.க.ஸ்டாலினை கைது செய்ய காவல் துறையின் தலைவர் இல்லத்துக்கு விரைந்தனர். அப்போது ஸ்டாலின் ஊரில் இல்லாததால், தலைவர் கலைஞர், ஸ்டாலின் ஊர் திரும்பியதும் தகவல் தருகிறேன் – நீங்கள் கைது செய்து கொள்ளுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தார். மறுநாள் மு.க.ஸ்டாலின் ஊர் திரும்பியதும் தலைவர் கலைஞர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அவர்களும் தலைவர் இல்லம் வந்து மு.க.ஸ்டாலினைக் கைது செய்தனர். திருமணமாகி ஐந்து மாதங்களேயான நிலையில் சென்னை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு அனுபவித்த கொடுமைகளை சிறைச்சாலை சித்திரவதையால் உயிர்நீத்த கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் சிட்டிபாபு எம்.பி. அவர்களின் சிறைக் குறிப்புகள் பதிவாக்கியுள்ளன.
சிட்டிபாபுவின் சிறை டைரி
அன்றிரவு ஒரு மணி இருக்கும். என் தம்பி ஸ்டாலின் சிறைக்கு அழைத்து வரப்பட்டான். அவன் வந்தது எனக்குத் தெரியாது. தம்பி வந்தது முதல் தடவை, புதியவன் சிறைக்கு!
புரியாத காரணத்தால் அவன் குழம்பி இருப்பான். இரவெல்லாம் கண்விழித்து கிடந்திருக்கிறான். பாவம் புது திருமணப் பிள்ளை. முழு வாழ்வை அவன் பெறுவதற்கு முன்னால் அவனுக்கு முள்வேலி. ஆமாம்! அன்று இரவெல்லாம் அவன் உள்ளம் அவனை அப்படித்தான் எண்ணிடச் செய்திருக்கும்.
2.2.1976 காலை கண்விழித்தேன். கதவு திறக்கப்பட்டது. கைகால்கள் கழுவ, காலைக் கடன் தீர்க்க! – கண்டேன் சீதையை என்று கம்பன் காட்டினானே கருத்தை. அதைப்போல காணக் கிடைக்காத என் கண்ணின் கருவிழியைக் கண்டேன்.
உள்ளத்தில் சுமை ஆயினும் உதட்டில் புன்முறுவல். அவன் முகம் பார்த்தவுடன் அணைத்துக் கொண்டேன் அவனைப் பாசத்தால்; என்னோடு வா தம்பி என் அறைக்கு என்றேன்.
அவனைப் பார்த்துக் கொண்டே இருக்க கண்கள் விரும்பியது. அவனும் என் கண்களுக்கு தன் முத்துப் பல் வரிசை முறுவலைக் காட்டிக் காட்டி, இதயம் கவர் கள்வனாக மாறிக் கொண்டே இருந்தான். பாலுடன் கலந்த நீர் போல இரு உள்ளங்களும் இணைய ஆரம்பித்தன! சொற்களால் அல்ல பார்வையால்.
பத்து மணிக்கு காலை உணவு. ஆமாம் இருபது தட்டுகள் மட்டுமே ஐம்பது பேருக்கு! ஒருவர் உண்ட பிறகு பிரிதொருவர். அது என்ன எடுத்திடும் பொருளா இல்லையே. விரல்வரைதான் அந்த உறவு; வழித்திடும் கூழ்! சுவைக்குப் புளிகாரம். ஓர் இரவு உணவு அற்ற காரணம் ஒரு சிலரை சுவை பார்க்க உருவாக்கியது.
தம்பி (ஸ்டாலின்) சுவைத்தான். பசியோ என்றுகூட எண்ணினேன். இல்லை பழக்கப்படுத்திக் கொள்ளவே என்றான். இதுதானே இனிமேல் உணவு நமக்கு என்று என்னைக் கேட்டான். இல்லை இது எப்போதும் சிறையில் முதல்நாள் விருந்து, இனிமேல்தான் தெரியும் என்றேன். என் சிறை அனுபவங்களைக் கொண்டு இதனைச் சொல்லி வைத்தேன்.
உடன் அனைவரும் லாக்கப் என்றனர். ஏன் என்றோம். 24 மணி நேர லாக்கப்; நீங்கள் மிசா என்பதே பதில்!
இடையில் அறைகள் அறுவரை விழுங்கின. மூன்றாவது அறை ஆமாம் அதுதான் நானும் வீராசாமியும், வி.எஸ்.ஜி.யும், நீலநாராயணனும், எம் தம்பி (ஸ்டாலின்)யும் அடுத்த அறை!
ஐவர் உள்ளே, பெருக்க துடைப்பம், சிறுநீர் கழிக்க பானை பழையது. தரையெல்லாம் தகர்ந்த சிமெண்ட் காரைகள், பகல் உணவு – இரண்டு மணிக்கு. கீரைத்தண்டு சாம்பார் கட்டிச் சோறுடன். கொஞ்சம் களி, தொட்டுப் பார்த்து வைத்துவிட்டேன். எம்.பி. என்ற முறையில் எதையும் செய்துவிட முடியாது என்பது எனக்கே புரிந்து விட்டது.
இனிமேல் அடிக்கடி கைதியின் காரியத்தை ஆற்றினால்தான் தேவைகள் கிடைக்கும். அதற்கும் வழியில்லாமல் அருகில் யாரும் வராத வகையில் பலத்த காவல் காரணம். மிசா. என்ன மிசாவோ! அவர்களுக்கும் என்ன செய்து, எப்படி நடத்துவது என்பது புரியவில்லை.
கயூம் உருவில் காலன் வந்தான்
மாலை 5 மணி. மீண்டும் உணவு களியுடன் கூடிய தட்டு. யாரோ பயன்படுத்திய தட்டுக்கள்; பயன்படுத்திய சிறுநீர்ப் பானைகள்! யாரிடம் கேட்பது, கேட்டால் யார் பதில் சொல்வது.
இரவு 7.30 மணி. அறைக்குள்ளே இருட்டுத்தான். ஆயினும் வெளிவாசலில் ஓரிரு விளக்குகள். மங்கலான ஒளியில் 8 மணியளவில் சில உருவங்கள் வருவதைக் காண முடிந்தது!
காரணம் நான் இருந்த இடம் வருவோரைப் போவோரைப் பார்க்கும் வகையில் அமைந்திருந்தது. காக்கி உடைகள், வெள்ளை உடைகள், சற்றேறக் குறைய இருபதுக்கும் மேற்பட்டோர்! சிறை அதிகாரிகள் இருவர். கயூம் அழகான பெயர்! அன்பு என்ற சொல்லுக்கு அளித்திட்ட உருதுச் சொல்தான் கயூம்.
ஆமாம் அந்த அன்புதான் அரசியல் கைதிகளை அடித்திட ஆட்களுடன் அங்கே நின்றிருந்தார். அவர் மட்டுமல்ல, அவருக்குக் கீழ் உள்ள அதிகாரிகள் உட்பட அவரது கை அசைவில் அத்தனை பேரும் நாங்கள் இருக்கும் மண்டபத்திற்குள் நுழைந்தனர்!
எப்படி இருகோடுகள் தனித்தனியே படுக்க வைத்தால் இருக்குமோ அப்படிப்பட்ட அமைப்பில் அவர்கள் நின்றனர்! அவர்களது கையில் இருந்த தடிகளை அவர்கள் நீட்டினால் ஏற்படும் அளவே இரு கோடுகளுக்கு நடுவே உள்ள இடைவெளி!
பட்டாளத்தின் வீரர்களைப் போல அவர்கள் நின்றனர். இதற்குள் காக்கி உடை அணிந்த பள்ளி ஆசிரியர் கம்பீரமாக குரல் எழுப்பினர். அறை பத்து அருகில்! கண்களுக்குத் தெரியாமல் காலன் கவர வருவான் உயிரை என்பார்கள்; கட்டையாகி விழப் போகிறவர்கள். அதே போல் கதவருகே காக்கி உடையில் காவலாளிகள் காலனைப்போல்!
கதவு திறக்கப்படும் ஒலி!
கம்பீரமான குரல் பேசியது!
பெயர் சொல்லி அறைவிட்டு வருதல் வேண்டும். சர்ச் என்ற பெயரால் திறக்கப்பட்ட கதவு பளீர் என்ற சத்தத்துடன் துவங்கியது. ஏதோ சினிமாவில் காணும் காட்சி போல் இருந்தது!
கொலைகாரக் கைதிகளின் கைத்தடிகள் அரசியல்வாதிகளின் உடலைச் சுவைத்துக் கொண்டு இருந்தன! அலறல் அழுகுரல்கள். அய்யோ! அப்போ! அம்மா! – என்னும் அபயக் குரல்கள். ஓடு உள்ளே என்ற உத்திரவு! சர்க்கஸ் புலி ஆட்டுக் குட்டியின் தலையைத் தன் அகண்ட வாயில் வைத்து சுவைக்காமல் காண்போருக்கு வித்தை காட்டுவதுபோல் கணநேர அதிர்ச்சி! ஓடு என்றவுடன் தீ வளையத்தை தாண்டிச் செல்லும் சிங்கம் போல் கூண்டுக்குள் அடங்கியது!
அறை பத்து! அடுத்த அறை ஒன்பது! அப்படியே ஐந்து வரை வந்து கொண்டே இருந்தது! அடுத்து ஓர் அறைதான்! அதற்கு அடுத்து எனது அறைதான். அறையில் உள்ளவர்கள் அடுத்தடுத்து நடைபெற்றுக் கொண்டேயிருக்கும் காட்சியிலேயே அவர்கள் அடிபட்டது போன்ற உணர்வு! தங்களை அறியாமல் இது என்ன என்ற கேள்வி! அழுவதா சிரிப்பதா என்று இருக்கும் நிலை எனக்கு! காரணம் இதுபோன்ற காட்சிகளை நான் இரண்டு முறை கண்டவன் மட்டும் அல்ல. நானே ஓர் அங்கமாக அகப்பட்டு உள்ளவன்! அதனால் எனக்கு அதிர்ச்சி இல்லை!
ஆனாலும் எனது நண்பர்களைப் பார்த்து ஆடை அணிந்து கொண்டே வெளியே போக வேண்டும். அவன் சொல்வது போல் ஆடையைக் கழற்றிவிட்டுப் போகக் கூடாது என்று சொன்னேன். ஆனாலும் அனைவரும் மழையில் நனைந்த குழந்தைகள் போல் உடல் ஆடிக் கொண்டே இருப்பதைக் காணாமல் இருக்க முடியவில்லை!
அறை நான்கு முடிந்து பூட்டும் போடப்படுகிறது. அடுத்து நாம்தான். பூட்டுத் திறப்பது மட்டும் கேட்டது. கதவைத் தள்ளினார்கள். வாங்கடா என்ற குரல். கடைசி அறை – அது உக்கிரம் அதிகமாக உள்ள நிலை. அலுத்துப் போய்விட்டவர்கள் அல்ல அவர்கள்! அதிகாரி வேறு வெளியில் நின்றபடி, என்னடா மெதுவாக அடிக்கிறீர்கள் என்று அதட்டுகிறார். உத்திரவு உக்கிரமாக வருகிறபோது உதை வேகத்தைக் கேட்கவா வேண்டும்.
சிறையல்ல – சித்திரவதைக் கூடாரம்
கதவு திறந்தது. யார் முன்னே வெளியில் செல்வது என்ற நிலை! காலம் கதவுகளை மூடப் போவதில்லை! அர்ச்சனைக்குக் கொண்டு வந்த அரசியல் மலர்களல்லவா நாங்கள். எனவே திரும்பிப் பார்த்தேன். தீர்மானமான நானே முதலில் வெளியில் வந்தேன். பெயர் சொல்லி அழைத்தனர். எதிர்பார்த்த ஆள் அல்லவா நான்! எனவே, ஓர் அடி எடுத்து வைப்பதற்குள் கன்னத்தில் வீழ்ந்த அறைகள் அடடா… நிலைக் கண்ணாடி கல்பட்டு உடைந்து விழுந்தது போல் எனக்குத் தோன்றியது. கண்களால் கணநேரம் காண்பது எல்லாம் கார்இருள் போல் இருந்தது. இருகோடுகளுக்கு இடையில் தள்ளப்பட்ட எலி! ஆம் அவர்கள் அடித்ததும் அப்படித்தான்! அவர்கள் அசந்தனர்! இது எலி அல்ல புலி என்று!
காரணம் அத்தனை அடிக்கும் என் உடல் விழவில்லை – தரை நோக்கி. தள்ளினார்கள் மதில் சுவர்மீது; சட்டென்று திரும்பிக் கொண்டேன்! வயிற்றில் எட்டி உதைத்து விட்டான்! சுவரின் மீதே சாய்ந்து கீழே உட்கார நினைத்தேன். ஆனால் நீண்ட நெடுமரத்தை மதயானை இடக்காலாலும், வலக்காலாலும், துதிக்கையாலும் வெறிபிடித்து உதைப்பது போல் உதைத்தனர். வீராசாமி நெடுமரமாகக் கீழே சாய்ந்து கிடந்தார்.
வெறிக்கூட்டம் முரசு பறை அறைவது போல் இரு கைகளால் அடிகொடுத்து கொண்டிருந்தன. ஒருபுறத்தில் இக்காட்சி. பள்ளிக்கூட மாணவன் பெஞ்ச் மீது நிற்பது போல் இரும்பு ஏணி அருகில் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு கதறும் வி.எஸ்.ஜி. ஒரே குத்துத்தான் நீலத்துக்கு (நீலநாராயணன்). குள்ள உருவம் நீலம். மேலே நிமிர்ந்து பார்த்திட மார்பகத்தில் மற்றொரு குத்து! முதுகில் இரண்டு தடி அடி! அவ்வளவுதான். குலைநோயில் கேவிக் கொண்டு கீழே விழும் நோயாளிபோல் சுருண்டு விழுவதைக் கண்டேன்! கால் எடுத்து வைத்துகை கொடுக்க முடியுமா என்று அசைந்தேன்! தொண்டையில் ஒரு குத்து எனக்கு! மீண்டும் சுவற்றில் தள்ளப்பட்டேன்! அய்யோ என்று சாய்ந்தேன் நான்.
அருகே என் அன்புத் தம்பி! ஆமாம் ஸ்டாலின்தான். தமிழகத்து முதல் அமைச்சரின் மகன் என்று நேற்றுவரை அறிந்த அந்த ஆசிரியன் (சுருளிராஜன்) தன் கால் பூட்ஸால் அவன் அழகிய முகத்தைச் சுவை பார்க்க உதைத்தான். அடுத்து கொலைகாரன் ஒருவன் ஓங்கிய கோல் அவனது தோள்பட்டையில்! காக்கி உடை அணிந்த வார்டர் ஒருவன் ஸ்டாலின் கன்னத்தில் அறைந்தான். கொலை வெறியர்கள் தடிகளால் தாக்கினார்கள்.
கண்டேன் காட்சியை! இவர்கள் இவனை அடித்தே கொன்றுவிடுவார்கள் என்ற உணர்வு ஏற்பட்டது! மற்றவர்கள்தான் மண்ணுடன் சாய்ந்து கிடப்பவர்களாக இருக்கின்றனர்! உதவிக்கு எழ அவர்கள் முடியாதபடி அருகில் எமதூதர்கள்! என்ன செய்வது; எனக்கென்று ஓர் துணிவு! திடீரென்று குறுக்கே பாய்ந்தேன்! தம்பியை தள்ளிக் கொண்டே தடிகள் கழுத்தில்!
அவைகள் அடிகள் அல்ல! உலைக்களத்தில் பழுத்துக் காய்ச்சிய இரும்பை தட்டிப் பதப்படுத்தும் உளியாக மாற்றிவிடும் சம்மட்டி அடிகளாக எனக்கு அமைந்தது! கழுத்தில் அத்தனையும் தாங்கிக் கொண்டேன். அன்புத்தம்பி ஸ்டாலின் அறைக்குள்ளே ஓடிவிட வழி கிடைத்தது.
வீராசாமியை தூக்கி நிறுத்தி ஒரு குத்துவிட்டு உள்ளே தள்ளினர். நீலம் மூச்சுத் திணற வி.எஸ்.ஜி.யை தாங்கிப் பிடித்து அழைத்துச் சென்றார்!
தம்பி ஸ்டாலினோ தான் பட்ட அடிமறந்து, தன் உடன்பிறப்புகளை உள்ளே அழைத்துச் செல்லும் காட்சி கண்டேன். அவர்களைப் படுக்க வைக்க தன் தோள் துண்டை தரையில் போட்டு, தாக்கப்பட்டவர்களைத் தாங்கி படுக்க வைத்த காட்சி கண்டேன். என்னை ஒருவன் வாடா தம்பி, வா என்று வாயில் ஓர் குத்துவிட்டு உள்ளே தள்ளினான்.
சர்வாதிகாரத்தின் நச்சு நாக்கு
கொடிய காற்றில் நெடிய மரம் சாய்ந்து விழுவது போல் அறையில் நான் வீழ்ந்தேன்! இல்லை தள்ளப்பட்டேன். அறை முழுவதும் இருள் அல்லவா? நினைவு வேறு எனக்குப் பாதியாகத்தான் இருக்கிறது! பூட்டு பூட்டப்பட்டது! உள்ளே அழுகுரல்! முனகல்! அப்பா! அம்மா! என ஒலி.
அன்புத் தம்பி ஸ்டாலினோ அருகில் வந்தான். அண்ணன் நீலத்தை வி.எஸ்.கோவிந்தராசன் மார்பில் சாய்த்திவிட்டு, அவன்தன் பிஞ்சுக் கரங்களால் என் முகத்தை தடவிக் கொண்டே கேட்டான். அண்ணே இன்னும் உயிருடன் இருக்கிறீர்களா? ஆமாம்! அவன் கேட்டதில் நியாயம் இருக்கிறது! அடிக்க வந்தவர்கள் அல்லவே அவர்கள்! கொலை வெறித்தாக்குதல் அல்லவா நடத்தினார்கள்!
அன்புத் தம்பியோ அதிர்ச்சி அடைந்திடவில்லை, அழுகையில் என்னைக் காண்கிறான்! அவன் அச்சங்கொள்ளக் கூடாது என்று அன்பொழுகச் சொன்னேன். அடிபலமா உனக்கு என்றேன். அதெல்லாம் இல்லை அண்ணே என்று அனுபவம் பெற்றவன் போல் பேசினான்! தெம்பு குறையக் கூடாது என்பதற்காக. தம்பி உன்னையும் அடித்தார்களே பாவிகள் என்றேன்.
இருக்கட்டும் அண்ணே என்று சொல்லி அவன் என்னை தன் கரங்களால் அடிபட்ட இடங்களை தடவிக் கொடுத்துக் கொண்டே என் கிழிந்த சட்டையைக் கழற்றிட உதவி புரிந்தான்.
ஒருநாள் எங்களுக்கு உணவில் வேப்பெண்ணை ஊற்றிய சோற்றை வழங்கினார்கள். கசக்கிறது என்றனர் கழகத் தோழர்கள். கழுவிச் சாப்பிட வேண்டிய முறையை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தேன். அடுத்த நாள் இட்லி கொடுக்கப்பட்டது. நரநரவென்று மண்ணுடன் கூடிய மாவால் செய்யப்பட்டது. பகல் உணவு வந்தது. தட்டுடன் சென்றவர்கள் உப்பு அதிகம் உணவில் என்றனர். நீர் கலந்து கொள்ளுங்கள் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்? (தியாக தீபமாம் கொள்கை மறவர் சிட்டிபாபு எம்.பி. அவர்களின் சிட்டிபாபுவின் சிறை டைரியை முழுவதுமாகத் தர இயலவில்லை. சிறைச்சாலைச் சித்ரவதையில் சீறும் வேங்கையாகச் சிறை சென்ற தியாக மறவன் சிட்டிபாபு 5.1.1977 அன்று உயிர் நீத்தார்.)
1977
23.01.1977ஆம் நாள் சென்னை மத்திய சிறையிலிருந்து முரசொலி மாறன் எம்.பி., மு.க.ஸ்டாலின், சோமா. இராமச்சந்திரன் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். சிறை வாயிலில் அவர்களை அன்பில் தர்மலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் சென்று வரவேற்றனர்.
விடுதலை பெற்ற முரசொலி மாறன், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் நேராக முதலில் அறிஞர் அண்ணா துயிலுமிடம் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின் இல்லம் சென்று தலைவர் கலைஞரிடம் வாழ்த்துப் பெற்றனர்.
1977 மார்ச் மாதத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் சுழன்று பணியாற்றி கழகப் பிரச்சாரம் செய்தார். அதன் பின்னும் தொடர்ந்து கழகப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
1980
இந்நிலையில் கழகத்தில் உள்ள இளைஞர்களுக்கென ஒரு தனி அமைப்பு தேவையென கருதிய தலைவர் கலைஞர் தி.மு.க. இளைஞர் அணி என்னும் அமைப்பினை உருவாக்கினார். தி.மு.க. இளைஞர் அணியின் தொடக்க விழா, மதுரை மூதூரில், ஜான்சிராணி பூங்கா திடலில் 20.07.1980 அன்று நடைபெற்றது.
இளைஞர் அணி தொடக்க விழாவில் – அமைப்புச் செயலாளர் தென்னரசு, க. சுப்பு, வை.கோபால்சாமி, பி.டி.ஆர்.பழனிவேல்ராசன், துரைமுருகன், பொன்.முத்துராமலிங்கம், தா.கிருட்டிணன், வே.தங்கபாண்டியன், காவேரிமணியம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
1982
01.08.1982 தி.மு.க. இளைஞர் அணியின் அமைப்புக் குழு உறுப்பினர்களாக மு.க.ஸ்டாலின், திருச்சி சிவா, வாலாஜா அசேன், இளம்வழுதி, தாரை மணியன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.. 17.8.82 இல் ஜெயம் ஜுலியஸ், முகவை பஞ்சவர்ணம் ஆகிய இருவரும் அமைப்புக் குழுவில் கூடுதலாக அறிவிக்கப்பட்டனர். கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகனாரின் மணிவிழாவினை கழக இளைஞர் அணி சிறப்பாக நடத்தியது.
1983
10.04.1983 தி.மு.க. இளைஞர் அணிக்கு திரு. மு.க.ஸ்டாலின் அமைப்பாளராகவும், திருச்சி சிவா, பரிதி இளம்வழுதி, வாலாஜா அசேன், தாரை மணியன், முகவை பஞ்சவர்ணம், நெல்லை ஜெயம் ஜுலியஸ் ஆகியோர் அமைப்புக் குழு உறுப்பினர்களாகவும், பொதுச் செயலாளர் அவர்களால் நியமிக்கப்பட்டனர். இளைஞர் அணி அமைப்புக் குழு மாநிலம் முழுவதும் மாவட்டந்தோறும் சென்று அமைப்புக் கூட்டங்களை நடத்தி இளைஞர் அணி அமைப்புகளை உருவாக்கினர்.
1983 ஆகஸ்ட் 25ஆம் நாள் இளைஞர் அணிக்கு மு.க.ஸ்டாலின் செயலாளராகவும், திருச்சி சிவா, தாரை மணியன் இருவரும் துணைச் செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டனர். மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
1984
மே மாதத்தில் நடைபெற்ற அண்ணாநகர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் பம்பரமென சுழன்று தேர்தல் பணியாற்றினார். தொகுதி முழுவதும் சைக்கிள் பேரணி, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு என இளைஞர் அணியினரைத் திரட்டிப் பணியாற்றியதன் விளைவாக அத்தொகுதியில் கழகம் வென்றது.
தலைவர் கலைஞர் அவர்களின் மணிவிழாவினை தி.மு.க. இளைஞர் அணி மிகுந்த எழுச்சியுடன் ஏற்பாடு செய்தது. நாவுக்கரசர் நாஞ்சில் கி.மனோகரன் அவர்களை நடுவராகக் கொண்டு, தலைவர் கலைஞர் அவர்களின் தொண்டால் ஜனநாயக வளர்ச்சி அதிகமா? சர்வாதிகார வீழ்ச்சி அதிகமா? என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் வை.கோபால்சாமி, செ.கந்தப்பன், துரைமுருகன், இரகுமான்கான், பெ.சீனிவாசன், ஆலந்தூர் பாரதி, என்.வி.என்.சோமு ஆகியோர் வாதப்போர் புரிந்தனர்.
ஏப்ரல் மாதத்தில், தனித்தமிழ் ஈழத்தை அங்கீகரிக்கக் கோரி நாடு முழுவதும் தி.மு.கழகம் கையெழுத்து இயக்கப் பணியில் ஈடுபட்டுக் கோடிக்கணக்கான கையெழுத்துக்களைப் பெற்று ஐ.நா. மன்றத்திற்கு அனுப்பி வைத்தது. அப்பணியில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆயிரம் விளக்குப் பகுதியில் கையெழுத்து சேகரித்தார்.
1984ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திராகாந்தி அம்மையார் படுகொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட அனுதாப அலையால் தி.மு.கழகம் 20 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற மிதப்பில், எம்.ஜி.ஆர். சென்னை அரசினர் தோட்டத்தில் பல்லாண்டுகளாக இயங்கி வந்த தி.மு.கழகத்தின் சட்டமன்ற அலுவலகத்தினை பறித்துக் கொண்டார். இதனைக் கண்டித்த கழக முன்னணியினர் நீலநாராயணன், ஆர்க்காடு நா.வீராசாமி, செ.கந்தப்பன், மு.க.ஸ்டாலின், சி.டி.தண்டபாணி, எல்.கணேசன், நெல்லிக்குப்பம் வெ.கிருஷ்ணமூர்த்தி, துரைமுருகன், எஸ்.பி.சற்குணம் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர். சட்டமன்ற தி.மு.க. அலுவலகத்தை பலவந்தமாகக் கைப்பற்றி வெளியேற்றிய போது தலைவர் கலைஞர் உள்ளத்தில் மேற்கொண்ட உறுதியால், சூளுரையால் தேனாம்பேட்டை அண்ணாசாலையில் அண்ணா அறிவாலயம் உருவாயிற்று.
அண்ணா அறிவாலயம் திறப்பு விழாவின் போது தி.மு.க. இளைஞர் அணி வெண்சீருடையில் மாபெரும் அணிவகுப்பை அணியின் செயலாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடத்திக் காட்டியது.
1986
நவம்பர் 8, 9 ஆகிய நாள்களில் கோவை வ.உ.சி. பூங்கா திடலில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் கழக இளைஞர் அணி செயலாளர் தளபதி மு.க.ஸ்டாலின் தியாகிகள் திறந்து வைத்து உரையாற்றினார். அம்மாநாட்டில் நாடு முழுவதும் இந்தியை ஆட்சி மொழியாக்கும் அரசியல் சட்டப் பிரிவை கொளுத்துவது என்ற முடிவுக்கு அமைய அப்போராட்டத்தில் தலைமையேற்போரின் பெயர்களும், இடங்களும் அறிவிக்கப்பட்டன. நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் நாடு முழுவதும் எண்ணற்ற கழகத்தவர் சட்ட எரிப்புப் போரில் ஈடுபட்டுக் கைதாகினர். அவர்களுள் பேராசிரியர் உள்ளிட்ட 10 கழக சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியைப் பறிக்க எம்.ஜி.ஆரின் அரசு சட்டமன்றத்தில் நடவடிக்கை எடுத்தது. இப்பதவி நீக்கும் தீர்மானத்தை அவை முன்னவரான நாவலர் நெடுஞ்செழியன் வாயிலாகவே எம்.ஜி.ஆர். முன்மொழிய வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர்களில் ஒருவரான பரிதி இளம்வழுதி சென்னை மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளராவார்.
1987
பேராசிரியர் உள்ளிட்ட 10 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியைப் பறித்ததோடு நில்லாது – அ.தி.மு.க. அரசு கழகத்தின் மீது பழி சுமத்த வெடிகுண்டு சதி வழக்குகளையும் புனைந்தது. திருச்சியில், முத்தரசநல்லூர் வெடிகுண்டு வழக்கிலும், கோவை, சிங்காநல்லூர் வெடிகுண்டு வழக்கிலும் எல்.கணேசன், மலர்மன்னன், நாமக்கல் பழனிவேலன் போன்ற கழக முன்னணியினர் மீதும் கோவை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் மா.உமாபதி, துணை அமைப்பாளர் தம்புராசு, கோவை கார்த்திக், நவமணி, தங்கவேலு, ராமமூர்த்தி போன்ற இளைஞர் அணியினர் மீதும் பொய் வழக்குகள் தொடுக்கப்பட்டன. கோவை சிறையிலிருந்த இளைஞர் அணியினரை வழக்கு மன்றத்துக்கு விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்ட போது கைகளில் விலங்கிட்டு வீதிகளில் நடத்தியே அழைத்துச் சென்றனர். அப்புகைப்படக் காட்சியை கண்ட தலைவர் கலைஞர், சிங்கள ஜெயவர்த்தனா சிரித்து மகிழ்ந்திடுவான் என்ற தலைப்பில் முரசொலியில் கடிதம் தீட்டினார்.
1987ஆம் ஆண்டு நடைபெற்ற கழக பொதுக்குழு தேர்தலுக்குப் பின் கழக இளைஞர் அணி மாநில செயலாளராக – மு.க.ஸ்டாலின் அவர்களும், துணை செயலாளர்கள் திருச்சி சிவா, மா.உமாபதி ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.
அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்ட பின்னால் கழகத்தின் தலைமைக் கழகம் அங்கே செயல்படத் தொடங்கியது. அதுவரை தலைமைக் கழகம் இயங்கி வந்த அன்பகத்தினைப் பயன்படுத்த சென்னை மாவட்ட தி.மு.க., தொழிற்சங்க பேரவை, இளைஞர் அணி ஆகிய மூன்று அமைப்புகளும் விரும்பின. அப்போது தலைவர் கலைஞர் அவர்கள் யார் முதலில் 10 லட்சம் ரூபாயை கழகத் தலைமைக்கு நிதியாகச் செலுத்துகிறார்களோ அவர்களுக்கே அவ்வாய்ப்பு கிட்டும் என்று அறிவித்தார். மூன்று அமைப்புகளும் அதை ஆரோக்கியமான போட்டியாக எடுத்துக் கொண்டு களமிறங்கின. தளபதி ஸ்டாலின் நாடு முழுவதும் கடுமையான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு, கொடியேற்று விழாக்கள், பொதுக்கூட்டங்கள் வாயிலாக நிதி திரட்டி தலைவர் கேட்டதற்கும் மேலாக ரூபாய் 11 லட்சத்தை ஒப்படைத்து அன்பகத்தை பயன்படுத்தும் உரிமையைப் பெற்றார். 1988ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் நாள் அன்பகத்தில் தி.மு.க. இளைஞர் அணி தலைமை அலுவலகம் செயல்படத் தொடங்கியது.
1989
1989ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி கண்டு மத்திய அரசில் வி.பி.சிங் அவர்களின் தலைமையில் ஆட்சி அமைத்தது. அதுபோன்றே தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கழகம் மகத்தான வெற்றி பெற்று தலைவர் கலைஞர் அவர்கள் மூன்றாம் முறையாக ஆட்சி அமைத்தார். இத்தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் தி.மு.க. இளைஞர் அணி செயலார் மு.க.ஸ்டாலின், பெரம்பூர் தொகுதியில் சென்னை மாவட்ட அமைப்பாளர் பரிதி இளம்வழுதி முதலிய இளைஞர் அணி நிர்வாகிகளும் வெற்றி பெற்றனர்.
மூன்றாம் முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தலைவர் கலைஞர் அவர்கள் அடுக்கடுக்காக பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றிச் சாதனை புரிந்தார். தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றார். கழக ஆட்சியின் நூறு நாள் சாதனைகளை நாடறியச் செய்யும் வகையில் 1989ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் நாளில் கோவையில் கழக அரசின் சாதனை விளக்கப் பேரணி இளைஞர் அணியின் செயலாளர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கழக அரசின் நூறு சாதனைகளை விளக்கும் வகையில் நூறு அலங்கார வண்டிகள் பேரணியில் பங்கேற்றன.
1990

Thursday 23 August 2018

கலைஞரை அற்பத்தனமாக குறைசொல்லும் மூடர்கள் இதை படிக்கனும். 40000 ஈழமக்கள் இறந்தது எப்படி ? உண்மையில் யார் காரணம்.?

கலைஞரை அற்பத்தனமாக குறைசொல்லும் மூடர்கள் இதை படிக்கனும். 40000 ஈழமக்கள் இறந்தது எப்படி ? உண்மையில் யார் காரணம்.?

Read 👇

https://www.hrw.org/report/2009/02/19/war-displaced/sri-lankan-army-and-ltte-abuses-against-civilians-vanni



Report of the Secretary-General's Panel of Experts on Accountability in Sri Lanka was a 2011 report

Read 👇

https://en.m.wikipedia.org/wiki/Report_of_the_Secretary-General%27s_Panel_of_Experts_on_Accountability_in_Sri_Lanka

தொடரும் ஒரு தமிழ் பலவீனம் குறித்து… யதீந்திரா

By கிருபன், November 10, 2012 in அரசியல் அலசல்  November 10, 2012

தொடரும் ஒரு தமிழ் பலவீனம் குறித்து… யதீந்திரா

செல்ஹெய்மின் கூற்றுக்களும் அதனையடியொற்றி மேலெழுந்திருக்கும் வாதங்களும் – சில குறிப்புக்கள்.

படிங்க 👇



https://www.yarl.com/forum3/topic/111081-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E2%80%A6-%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/

Tuesday 21 August 2018

புலிகள் செய்த எல்லா தவறுகளையும் குற்றங்களையும் மறைக்க ஒருவர் தேவைப்பட்டார். அவர் தான் கலைஞர்.

புலிகள் செய்த எல்லா தவறுகளையும் குற்றங்களையும்
மறைக்க ஒருவர் தேவைப்பட்டார். அவர் தான் கலைஞர்.

ஆனால் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இறுதிப்போரில் (2006-2009) நடந்த உண்மைகள்
வெளிவந்துக் கொண்டுள்ளது.

உலக நாடுகள் முழுமையாக ஒன்றிணைந்து புலிகளை ஒழிக்க நடத்திய போரை தடுத்து நிறுத்த ஒரு மாநில முதல்வரால் முடியுமா?

எந்த ஒரு சூழலிலும் பிரபாகரனோ புலிகள் அமைப்போ கலைஞரால் போரை நிறுத்தமுடியும் என்று எண்ணவில்லை.

கலைஞரால் என்ன முடியும் என்பது புலிகளுக்கு தெரியும். புலிகளை தன்னால் காப்பாற்ற முடியாது என்பதும் கலைஞருக்கும் தெரியும்.

அதே சமயம் ராஜீவ் கொலைப்பழி சுமந்த கலைஞரால் புலிகளை நேரடியாக ஆதரிக்க முடியாது என்பதும் புலிகளுக்கு தெரியும்.

அவருடைய உண்ணாவிரதம் கூட அப்பாவி மக்கள் மீது கனரக ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்பதாகவே இருந்தது.

இலங்கை அரசின் கனரக ஆயுதத்தை பிரயோகிக்கமாட்டோம் என்ற உத்திரவாதத்தை பிரணாப் முகர்ஜி கலைஞருக்கு காண்பித்த பின்னரே கலைஞர் உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டது. மேலும் ஈழத்தந்தை செல்வாவின் மகனிடம் உரிய விவரம் கேட்டறிந்த பின்னரே கலைஞரின் 6AM to 1PM
உண்ணாவிரதம் வாபஸ் ஆனது.


கலைஞர் அனுமதியுடன் திமுக சார்பில் புலிகளை காப்பாற்ற  எடுக்கப்பட்ட  முயற்சிகள் பலனளிக்கவில்லை என்பதும் யாருக்கும் தெரியாது . அதற்கு புலிகள் உரிய ஒத்துழைப்பையும் அப்போது வழங்கவில்லை.

ஈழத்தமிழருக்கு கலைஞர் துரோகம் செய்து விட்டதாக பார்ப்பணர்களும் , பார்ப்பன அடிமைகளும் செய்து வருவது விஷமத்தனமான பொய்ப் பிரச்சாரம்

கலைஞர் இறந்த பின்னும் வன்மம் கொண்டு போலி தமிழ்தேசியவாதிகள் ஈழத்தமிழர் முகமூடியுடன் தூற்றிவருவதை
விபரம் தெரிந்த ஈழத்தமிழர்களே ஏற்கவில்லை.

கலைஞரின் எழுத்தும் பேச்சும்
ஈழத்தமிழர்களின் போராட்ட உணர்வை தட்டி எழுப்பியது எனினும் கலைஞரே ஈழமும் வாங்கித் தருவார் என்று நம்பி, ஈழத் தமிழர்கள் போராட்டத்தை தொடங்கவில்லை.

அவரது அரசியல் செல்வாக்கு தமிழ்நாட்டு எல்லைகளுக்குட்பட்டது என்பது அவர்களுக்கு எப்போதும் தெரிந்திருந்தது.


புலிகளால் டெலோ அழிக்கப்பட்ட சகோதர யுத்தம் காரணமாக தான் ஆதரவை விலக்கிக் கொண்டதாக
நினைக்கமுடியாது. அதன் பின்னரும் கலைஞர் புலிகளை ஆதரித்தார்.

இந்திய அமைதிப்படையை  எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்த புலிகளை, ஒரு இந்திய மாநில முதல்வர் ஆதரிப்பதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். அந்த ஆண்மை கலைஞரிடம் இருந்தது.

இந்திய அமைதிப்படையை வரவேற்க மறுத்து தேசத்துரோகி பட்டமும் சுமந்த கலைஞர் புலி ஆதரவு நிலைப்பாட்டால் ஆட்சியை இழந்தார். அதன் பின்னர் நடந்த ராஜீவ் படுகொலையால் 1991 தேர்தலில் மீண்டும் ஆட்சியை இழந்தது திமுக.

1991 ம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு தான், கலைஞர் தனது புலி ஆதரவு நிலைப்பாட்டை கைவிட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்.


அன்று கொண்டு வரப்பட்ட தடா சட்டத்தால் பெருமளவில் பாதிக்கப் பட்டவர்கள் திமுக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் தான்.


எந்த ஒரு காலத்திலும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட தயாராக இல்லாத ஒரு மிதவாதக் கட்சியான திமுக இடமிருந்து அதிகமாக எதிர்பார்க்க முடியாது.

அன்று நடந்த இறுதிப்போரை நிறுத்தும் வல்லமையும் கலைஞரிடம் இருக்கவில்லை என்பதே உண்மை


அன்று பதவியிலிருந்த கலைஞரும், திமுக உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்து சட்டசபையை கலைத்திருக்கலாம் .
ஆனால் எதுவும் நடந்திருக்காது.
அப்போதே ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பார்.


இறுதி போரின்போது  சர்வதேச நாடுகளின் பின்புலத்தில் நடந்து கொண்டிருந்த அரசியல் மற்றும் இராணுவ திட்டங்கள் தமிழ்தேசியவாத மூடர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

ராஜபக்சே கேட்டும் சிங்கள படை தளபதி பொன்சேகா மறுத்து விட்டதை இங்கிருக்கும் மூடர்கள் அறியமாட்டார்கள்.

கடைசி சில நாட்கள்  நடந்த இறுதிப் போர் முழுமையாக இராணுவ தளபதியின் கட்டுப்பாட்டில்தான் நடந்தது.ராஜபக்சே நினைத்து இருந்தாலும் அதை தடுத்திருக்க முடியாது.

ஏனென்றால் சிங்களத் தரப்பில் முப்படையினர் தரப்பிலுமாக, நான்கு கட்ட ஈழப்போர்களிலும், 24,693 படையினர் கொல்லப்பட்டிருந்தனர் அல்லது காணாமற்போயினர்.

மேலும் ஒட்டுமொத்தப் போரிலும், 82,104 சிங்கள படையினர் காயமுற்று உடல் ஊனமுற்றதாக கூறப்பட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது


இந்திய மத்திய அரசுக்கு கலைஞர் கொடுத்த அழுத்தத்தை விட, பல மடங்கு அதிக அழுத்தங்கள் மேற்கத்திய நாடுகளின் அரசுகள் மீது பிரயோகிக்கப் பட்டன.

கனடாவில், டொரோண்டோ நகரில் ஆயிரக்கணக்கில் கூடிய ஈழத்தமிழர்கள், நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்தை மறித்து ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர். இதை விட ஒவ்வொரு மேலைத்தேய தலைநகரத்திலும் நடந்த ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்களை, அந்நாட்டு காவல்துறையினர் தலையிட்டு அடக்குமளவிற்கு ஆக்ரோஷமாக நடந்து கொண்டிருந்தன.

இந்த அழுத்தங்கள் எல்லாம் இராஜதந்திர அரசியலில் தோல்வியுற்றதற்கு ஒரு பிரதானமான காரணம் இருந்தது.

இந்தியாவும், மேற்கத்திய நாடுகளும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அகப்பட்டிருந்த பொது மக்களை விடுவித்தால் மட்டுமே மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று அறிவித்திருந்தன. ஆனால், மக்களை செல்ல விடுவது தற்கொலைக்கு சமமானது என்று கருதிய புலிகள் அந்த நிபந்தனைகளுக்கு சம்மதிக்க மறுத்தனர்.

இதற்கிடையில் அப்போது நடக்கவிருந்த இந்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பாஜக வென்றால் பிரச்சினை தீர்ந்து விடும் என்று வைகோ புலிகளுக்கு தகவல் அனுப்பினார்.

அன்று புலிகள் தமக்கு நெருக்கமாக இருந்த வைகோ சொன்னதை நம்பி ஏமாந்தனர்.

புலிகளின் நம்பிக்கைக்குரிய முகவரான கேபி அனுப்பிக் கொண்டிருந்த ஆயுதக் கப்பல்கள் அனைத்தும் பிடிபட்டுக் கொண்டிருந்தது


மேற்கத்திய நாடுகளில் இயங்கிய புலிகளின் சர்வதேச கிளைகளை சேர்ந்தவர்களும், “அமெரிக்க கப்பல் வந்து காப்பாற்றும்” என்று சொல்லி நம்ப வைத்து ஏமாற்றினார்கள்.


இதுபோன்ற துரோகங்களை மறைப்பதற்காகவே இன்று பலர் கலைஞரை வசைபாடிக் கொண்டிருக்கிறார்கள்.

புலிகள் செய்த எல்லா தவறுகளையும் குற்றங்களையும்
மறைக்க ஒருவர் தேவைப்பட்டார். அவர் தான் கலைஞர்.


Antony Parimalam
கலையரசன்

Monday 20 August 2018

விடுதலை புலிகள் தோற்றது எப்படி? 2006ல் அமெரிக்காவால் சிதைக்கப்பட்ட புலிகளின் சர்வதேச ஆயுத கடத்தல்.

விடுதலை புலிகள் தோற்றது எப்படி? 2006ல் அமெரிக்காவால் சிதைக்கப்பட்ட புலிகளின் சர்வதேச ஆயுத கடத்தல். 

புலிகளை முடக்கிய அமெரிக்க FBI

புலிகளின் ஆயுத கடத்தல் பொறுப்பாளர் ஸ்டீபன் என்பவர் இந்தோனேசியாவில் கைதாகிறார்

இந்துதோனேசிய தீவுகள் நீண்டகாலமாகவே விடுதலைப் புலிகளின் ஆயுதக்கடத்தல் தளமாக இயங்கி வந்தது. புலிகளின் சில கப்பல்களும் அங்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது.

இதை அந்தநாட்டு காவல்துறையினர் அறிந்திருந்தனர். எனவே ஸ்டீபனும் புலிகள் அமைப்பை சேர்ந்தவராக என்ற சந்தேகத்தின் பெயரிலேயே அவரை தடுத்து வைத்தபடி சர்வதேச போலிசாரின் உதவயை நாடியிருந்தனர்.

உலகம் முழுதும் புலிகளுக்காக ஆயுத பேரத்தில் தொடர்புடைய அனைவருடைய விபரங்களையும் அவர்கள் வாங்க இருக்கும் ஆயுதங்களின் விபரங்களையும் சேகரித்தவர்கள் உடனடியாக யாரையும் கைது செய்யவேண்டாம் என முடிவெடுத்தார்கள்.

காரணம் இவர்களை கைது செய்தால் புலிகள் அமைப்பு உடனடியாக உசாரடைந்து வேறு புதியவர்களை நியமித்து தங்கள் வேலைகளை தங்குதடையின்றி செய்துகொண்டே இருப்பார்கள்.

எனவே அவர்களது சர்வதேச கடத்தல் வலையமைப்பை மீண்டும் கட்டியமைக்க முடியாத விதத்தில் அதனை முற்றாக அழித்து விடுவது தான் அவர்களது நோக்கம்.

அதற்கான திட்டத்தை வகுத்தார்கள்.

ஆயுத பேர வலையமைப்பில் இயங்கியவர்களில் அமேரிக்கா, கனடா நாடுகளில் வசிப்பவர்களே அதிகமாக இருந்ததால் அமெரிக்காவின் எப் .பி. ஐ. மற்றும் கனடாவின் சி .எஸ்.ஐ .எஸ் அதிகாரிகள் இணைத்து புலிகளின் சர்வதேச ஆயுதக் கடத்தல் வலையமைப்பை அழித் தொழிக்கும் திட்டத்தை வகுத்தவர்கள்.

தங்களுக்கு உதவியாக ஐரோப்பிய காவல்துறையினரின் உதவியையும் நாடியிருந்தார்கள்.

அதே நேரம் ஸ்டீபன் இந்தோனேசியாவில் கைதாகி அமெரிக்க அதிகாரிகளிடம் கையளிக்கப் பட்ட விடயம் புலிகளின் தலைமைக்கு தெரிந்திருக்கவில்லை.

அப்படியொரு சம்பவமே நடக்காத மாதிரி ஸ்டீபனை தங்கள் கட்டுப் பாட்டில் வைத்து இயக்கியபடியே அவருக்கு அடுத்த கட்டத்தில் இயங்கிய

1) சதாஜன் சரசந்திரன்

2) சகிலால் சபாரத்தினம்

3) திருத்தணிகன் தணிகாசலம்

4) நடராஜா யோகராஜா

5) முருகேசு விநாயகமூர்த்தி

6) விஜய்சாந்தர் பத்மநாதன்

7) நாச்சிமுத்து சோக்கிடடீஸ்

ஆகிய ஏழு பேரும் சி.பி.ஐ யின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர்.

இவர்கள் வாங்கிய ஆயுதங்கள் கப்பல்களில் ஏற்றப்பட்டு அவை சர்வதேச கடலை விட்டு முல்லைத்தீவு கடலுக்குள் நுழையும் போது இலங்கை அரசுக்கு கச்சிதமான தகவல்கள் வழங்கப்பட்டது.

இலங்கை கடற்படையும் வான்படையும் இணைந்து புலிகளின் ஆயுதக் கப்பல்களை துல்லியமாக தாக்கியழித்துக் கொண்டிருந்தார்கள்.

அத்தனை ஆயுதக்கப்பல்கள் அழிக்கப் பட்டுக் கொண்டிருக்கும்போதும் ஸ்டீபன் கைதான விடயம் புலிகளின் தலைமைக்கு தெரிந்து விடாதபடி இந்த கூட்டு நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய எப் .பி.ஐ அதிகாரிகள் பார்த்துக்கொண்டார்கள்.

புலிகளுக்கும் சந்தேகம் வரவில்லை.

அப்போதுதான் புலிகள் தங்கள் நீண்ட நாள் முயற்சியான குருஸ் ரக ஏவுகணைகளை வாங்கும் முயற்சியில் இறங்கியிருந்தார்கள்.

அதற்கிடையில் புலிகளின் ஒன்பது ஆயுதக் கப்பல்கள் இரண்டு சரக்கு கப்பல்கள் என பதினோரு கப்பல்கள் மூழ்கடிக்கப் பட்டிருந்தது.

இதற்கு மேலும் தொடர்ந்தால் புலிகள் வேறு வழிகளில் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள் எனவே இத்தோடு அனைத்தையும் முடிவுக்கு கொண்டுவரலாம் என நினைத்த அதிகாரிகள் ஏவுகணை வாங்க முகர்வர்களை தேடிக்கொண்டிருந்தவர்களிடம் தங்களை ஆயுதத் தரகர்கள் என்று சொல்லிக்கொண்டு அறிமுகமாகிறார்கள்.

ஏவுகணை வாங்கும் திட்டத்துக்கு டீல் போட லண்டனில் வாசித்த முருகேசு விநாயகமூர்த்தி என்பவரை வன்னியில் இருந்த காஸ்ட்ரோ நியமிக்கிறார்.

முருகேசு விநாயகமூர்த்தி ஏற்கனவே எப் பி ஐ யின் கண்காணிப்பிலேயே இருந்தபடியால் ஆயுத தரகர்கள் என்று சொல்லிக்கொண்டு லண்டனில் அவரை சந்திப்பதில் எப்.பி.ஐ யினருக்கு எவ்வித சிரமும் இருந்திருக்கவில்லை.

முருகேசு விநாயகமூர்த்தி ஒரு வைத்தியர் இவருக்கு வியாதிகள் பற்றி தெரியுமே தவிர விண்ணில் சென்று தாக்கும் ஏவுகணைகள் பற்றிய விபரங்கள் எதுவும் அறியாதவர்.

எதோ கோயம்பேடு மார்க்கட்டில் கத்தரிக்காய் வாங்குவது போலவே ஏவுகணைகளை வாங்கிவிடலாம் என்பதுபோலவே நினைத்து ஆயுதத் தரகர்கள் போல வந்திருந்த இரண்டு எப் பி ஐ அதிகாரிகளிடமும் ஏவுகணைகள், வான் எதிர்ப்பு துப்பாக்கிகள் என்பவற்றின் பட்டியல்களை கொடுத்துவிட்டு எங்கே எப்படி பெறலாம், பணத்தை எப்படி கை மாற்றுவது என்று கேட்கிறார்.

அடுத்த சந்திப்பில் சில ஏவுகணை மாடல்களை நேரடியாகவே காட்டுகிறோம் அவை இயங்கும் திறன் இந்த கட்லோக்கில் உள்ளது படித்துப்பாருங்கள்.

ஏவுகணை மாடலை நாங்கள் காட்டும் போது பாதிப்பணம் நாங்கள் சொல்லும் அக்கவுண்டுகளில் செலுத்திவிட வேண்டும்.

ஏவு கணைகள் உங்கள் கைகளுக்கு வந்ததும் மீதிப்பணத்தை செலுத்தி விடுங்கள் மீண்டும் சந்திப்போம் என விடை பெற்றவர்களிடம் ..அடுத்த சந்திப்பு எங்கே என்றார்.

அடுத்த சந்திப்பு அமெரிக்காவில் டெக்ஸ்சாஸ் மானிலத்தில் நாங்களே உங்களை தொடர்பு கொள்கிறோம் என்று விட்டு முகவர்கள் விடை பெற்றார்கள்.

அடுத்த சந்திப்புக்கான அழைப்பு வந்தது முருகேசு விநாயகமூர்த்தி அமெரிக்காவுக்கு பறந்தார்.

டேக்சாஸ் மாநிலத்தில் ஒரு பண்ணை வீட்டில் சந்திப்பு.

அதே இரண்டு பாகங்களாக பிரித்து எடுத்து வரப்பட்ட ஏவுகணை ஒன்றின் மாடலை பொருத்தி அவருக்கு முன்னால் வைத்தார்கள் முகவர்கள்.

விநாயகமூர்த்தியால் சந்தோசத்தை அடக்க முடியவில்லை ஒரு குழந்தையைப்போல் துள்ளிக்குதித்தவர் “தொட்டுப் பார்க்கலாமா” என்றதும் “ம் ..தாராளமாக ” என்றார்கள்.

ஆசை தீர தொட்டுத் தடவிப் பார்த்தவர் ஏவுகணை கிடைத்த மகிழ்ச்சியை உடனே வன்னிக்கு சொல்லிவிட நினைத்து கைத் தொலை பேசியை எடுத்தவருக்கு “மிஸ்டர் இங்கிருந்து எந்த தொலைபேசி அழைப்பும் வேண்டாம் உங்கள் தங்குமிடம் போனதும் தாராளமாக பண்ணிக்கொள்ளுங்கள் இப்போ பேரத்தை முடித்து விடலாம் என்றார்கள்”.

அவர்களாலேயே உருவாக்கப்பட்ட போலியான வங்கிக் கணக்குகளை கொடுத்து அதில் பாதிப் பணத்தை வைப்பிலிடும் படியும் ஏவுகணைகள் புலிகளின் கப்பலில் ஏற்றப் பட்டதும் மிகுதிப் பணத்தை செலுத்தி விடும்படியும் சொல்லி விடுகிறார்கள் .

அபோதுதான் விநாயகமூர்த்திக்கு ஒரு விடயம் நினைவுக்கு வந்தது புலிகள் அமைப்பு இதுவரை SAM ரக ஏவுகணைகளையே பயன்படுதியிருந்தார்கள்.

அதனை எவுவதட்காகவே சிலர் பயிற்ருவிக்கப் பட்டிருந்தனர்.

ஏவுகணைகள் மிகப் பெறுமதியானவை என்பதால் ஒன்றைக் கூட வீணடிக்க முடியாது.

எனவே அவற்றை சரியாகப் பயிற்சி எடுத்தவர்களால் இயக்கப் படவேண்டும் .

எனவே குருஸ் ரக ஏவுகணையை இயக்க உங்களில் ஒருவர் வன்னிக்கு சென்று சிலருக்கு பயிற்சியும் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

சில நிமிடங்கள் யோசித்த முகவர்கள் பிரச்சனையில்லை ஒருவரை அனுப்பி வைக்கிறோம் ஆனால் பத்திரமாக அவரை வன்னிக்கு அழைத்துச்சென்று மீண்டும் இங்கு கொண்டுவந்து விடவேண்டும் என்றதும்.

அதெல்லாம் பிரச்சனையில்லை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று விடை பெற்றனர்.

தங்கும் விடுதிக்கு வந்ததுமே முதல் வேலையாக வன்னிக்கு காஸ்ட்ரோவுக்கு போனடித்து ஏவுகணை வாங்கிவிட்ட செய்தியை சொல்லிவிட்டு விரைவில் வன்னிக்கு வருகிறேன்.

தலைவரை நேரில் சந்தித்து ஒரு படம் எடுக்க வேண்டும் அதற்கான ஒழுங்குகளை செய்யுமாறு கேட்டுக் கொண்டிருக்கும் போதே அறைக்கதவு தட்டப்பட தொலைபேசியை நிறுத்தி விட்டு கதவைத் திறந்தார்.

சி.பி.ஐ என அடையாள அட்டையை தூக்கி காட்டிய சிலர் அவரை இழுத்து விலங்கை மாட்டி அள்ளிப் போட்டுக்கொண்டு போய் ஒருவருக்கு முன்னால் நிறுத்தினார்கள்.

அவர் வேறு யாருமல்ல.. ஆயுத முகவர் போல பேரம் பேசிய அதே நபர் தான்.

இப்போதான் விநாயகமூர்த்திக்கு விடயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக புரியத் தொடங்கியது.

அதைத் தொடர்ந்து அமேரிக்கா,கனடா, ஐரோப்பா என எங்கும் கண்காணிப்பிலிருந்த முப்பதுக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப் படுகிறார்கள்.

அது மட்டுமல்லாது பல நாடுகளிலும் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த பல கப்பல்களும் பறிமுதல் செய்யப்படுகின்றது.

சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் உலக நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவி, சர்வதேச காவல்துறையினருக்கு தண்ணி காட்டி, உளவுத்துறையினருக்கெல்லாம் உச்சி விளையாடிய புலிகளின் சர்வதேச கடத்தல் வலையமைப்பானது அமேரிக்கா தலைமையில் 2006 ம் ஆண்டு முற்று முழுதாக சிதைக்கப் பட்டு முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றது.

அதன் பின்னர் வெளியே இருந்து ஒரு குண்டூசி கூட புலிகளுக்கு கிடைக்கவில்லை என்பதே உண்மை ..

வெளியே சர்வதேச நிலைமைகள் இப்படி இருக்கும்போது உள்ளே வன்னியிலும் புலிகளின் இராணுவக் கட்டமைப்பை உடைக்கும் வேலைகளையும் மேற்குலகம் செய்யத் தொடக்கி விட்டிருந்தது.

அது எப்படியென்றால் யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்து பேச்சு வார்த்தைகள் தொடங்கியதுமே மக்களுக்கு உதவுகிறோம் என்று சொல்லிக் கொண்டு சில தொண்டு நிறுவனங்கள் (N.G.O) வன்னிக்குள்ளே காலடி எடுத்து வைத்தனர் .

இப்போவெல்லாம் என் ஜி ஓக்கள் என்றாலே ஒரு நாட்டின் உளவு நிறுவனத்தின் முகவர்கள் என்கிற நிலைமையாகி விட்டது.

காரணம் உளவு நிறுவனங்கள் தங்கள் முகவர்களை இந்த என் ஜி ஓக்களின் ஊழியர்களாகவே அனுப்பி வைகிறார்கள்.

அப்படி பலர் வன்னிக்குள் நுழைந்ததும் மக்களுக்கு உதவியதை விட புலிகளின் தளபதிகள் முக்கிய உறுபினர்களை குறிவைத்து உதவத் தொடங்கினார்கள்.

சுனாமி தாக்கத்தின் பின்னர் உலகத்திலுள்ள அனைத்து என் ஜி ஓக்களும் வன்னிக்கு படையெடுத்தனர் .

இவர்கள் சுனாமியால் மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு வெறும் தரப்பாள்களும் பிளாஸ்ரின் கோப்பைகள் உணவுகள்.

படுக்க பாய்களை மட்டும் கொடுத்துக்கொண்டு புலிகளின் தளபதிகள் பொறுப்பாளர்களிற்கு கணணிகள் மடிக்கணிகள், கைத்தொலைபேசி அவர்கள் வீடுகளிற்கு மின்சாரம் பெற்றுக்கொள்ள ஜெனரேட்டர்கள் அல்லது இயற்கையில் சூரிய ஒளியில் மின்சாரம் பெறும் சோலார்கள் என சகல வசதிகளிற்கும் அவர்களை பழக்கப் படுத்திக்கொண்டிருந்தார்கள்.

காரணம் இன்னொரு சண்டை தொடங்கும் போது புலிகளின் முக்கிய பொறுப்பாளர்கள் இந்த வசதி வாய்ப்புக்களை துறந்து மீண்டும் கெரில்லாக்களாக காடுகளிற்குள் இறங்கி போராப் போய் விடக்கூடாது என்பதே இவர்களது நோக்கமாக இருந்தது.

அதே நேரம் சமாதான காலத்தில்  புலிகள் அமைப்பில் இணைக்கப் பட்ட வயதில் குறைந்த போராளிகள் புலிகள் இயக்க பொறுப்பாளர்களின் வீடுகளில் வேலைக்காக அமர்த்தப் பட்டிருந்தனர்.

அவர்களது வேலைகள் புலிகள் தளபதிகளின் பிள்ளைகளை பராமரித்தல் சமையல் செய்தல் அவர்களது துணிகளை துவைத்தல் என சம்பளமில்லாத தொழிலாளிகளாக புதிய போராளிகள் இருந்தார்கள்.

குழந்தைப் போராளிகளைப் பற்றி பக்கம் பக்கமாக அறிக்கை விட்ட மனிதவுரிமை அமைப்புக்களோ உலக நாடுகளோ இந்த குழந்தை போராளிகள் தளபதிகளின் வீடுகளில் வேலைக்கு அமர்த்தப் பட்டிருப்பவர்களைப் பற்றி வாயே திறக்கவில்லை.

காரணம் அது அவர்களிற்கு தேவையானதாக இருந்தது.

அதிகாரங்களிற்கு எதிராகப் போராடப் புறப்பட்ட ஒரு இயக்கம் அதே அமைப்பில் போராட வந்த போராளிகளை வீட்டு வேலைகளிற்காக அமர்த்தி அடிமைப் படுத்தத் தொடங்கியதை என்னவென்று சொல்ல??

இப்படி வீடுகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த போராளிகள் பற்றி ஒரு உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் ஒரு தளபதியிடம் கேட்டபோது இதுவும் போராட்டத்தின் ஒரு வடிவம்தான் என நகைச்வையாக பதில் சொல்லி நழுவிக்கொண்டார் .

நன்றி -சாத்திரி-

திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள் விபரம் தெரியுமா?

திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள் விபரம் தெரியுமா?






தமிழகத்தில் இன்றைய தேதியில் புதிய அணைகள் கட்ட வாய்ப்புகள் கிடையாது.நதிகள் இணைப்பு மட்டுமே சாத்தியம்.

பெரிய அணைகள் சுதந்தரத்திற்கு முன்பும் முதல் ஐந்தாண்டு திட்டத்திலும் கட்டப்பட்டுவிட்டதால்
1967 க்கு பின் சிறிய அணைகள் மட்டுமே கட்ட வாய்ப்பிருந்தது.அதை சிறப்பாகவே திராவிட கட்சிகள் செய்துள்ளன.

இன்றைய தேதியில் தமிழகத்தில் உள்ள மொத்த அணைகள் 116

அரசர் காலங்களில் வீராணம், செம்பரம்பாக்கம் கல்லணை மூன்றும் உருவானவை.

வெள்ளையர் ஆட்சியின் போது ரெட் ஹில்ஸ், சோழவரம், பூண்டி, வெலிங்டன், பெரியாறு, பேச்சிப்பாறை மேட்டூர் நீர்தேக்கங்கள் கட்டப்பட்டன.

காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்தில் 19 ஆண்டுகளில்  29 பெரிய அணைகள் கட்டப்பட்டது.

அதற்கான முக்கிய காரணங்கள்

(1)  1951-1956 முதல் ஐந்தாண்டு திட்டத்தில் நீர்பாசன வசதியை பெருக்க மின் உற்பத்தியை பெருக்க முக்கியத்துவம் தரப்பட்டது. அணைகள் கட்டுவதற்கு என மொத்த நிதியில் 27.2 % நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு செயல் படுத்தப் பட்டது.

(2)  அப்போது தமிழகத்தில் திராவிட இயக்கம் தனித் தமிழ்நாடு கோரிக்கை எழுப்பட்ட நேரம்.
காமராசர் முயற்சியுடன் திராவிட போராட்டங்களுடன் சேர்ந்ததால் திட்டமிடப்பட்ட அணைகள் தான் காமராசர் ஆட்சியில் மட்டும்   14 பெரிய அணைகள் கட்டப்பட்டது.

மேற்கண்ட அணைகள் போக மீதமுள்ள அனைத்து அணைகளுமே 1967 க்கு பின் கட்டப்பட்டவைகள்தான்.


1967 இல் ஆட்சிக்கு திமுக வந்தபோது 5 ஆண்டு திட்டங்கள் நிறுத்தப்பட்டு ஓர் ஆண்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் கலைஞரின் விடாமுயற்சியால் கீழ்க்கண்ட அணைகள் அவர் ஆட்சி செய்த 21 வருடங்களில் 36 அணைகள் துவங்கப்பட்டு  கொண்டுவரப்பட்டது.

1) உப்பாறு அணை
2)மேல் ஆழியாறு அணை
3) சோலையாறு அணை
4) மணிமுக்தநாதி அணை
5) சிற்றாறு அணை
6) கீழ்கொடையாறு
7)சிற்றாறு மிமி அணை
8)மேல்கொடையாறு அணை
9)கடான அணை
10)பரப்பலாறு அணை
11)பொன்னணி ஆறு அணை
12)ராமநதி அணை
13)சின்னாறு அணை
14)கருப்பாநதி அணை
15)எரவங்கலாறு அணை
16)குண்டேரிப்பள்ளம் அணை
17)ஹைவேயிஸ் அணை
18)மணலாறு அணை
19)பாலாறு பொருந்தலாறு அணை
20)வரதமநதி அணை
21)வரட்டுப்பள்ளம் அணை
22)வட்டமலைக்கரை ஓடை அணை
23)வெண்ணீர்ஆறு அணை
24)அனைக்குட்டம் அணை
25)குதிரையாறு அணை
26)நொய்யல்அதுபாளையம் அணை
27)ராஜதோப்புகனாறு அணை
28)பொய்கையாறு அணை
29)மொர்த்தனா அணை
30)சோத்துப்பாறை அணை
31)அடைவினைநர்கோவில் அணை
32)நன்காஞ்சியாறு அணை
33)செண்பகத்தோப்பு அணை
34)இருக்கண்குடி அணை
35)மாம்பழத்துறையாறு அணை
36)நொய்யல் ஒரத்துபாளையம் அணை.


மேலும் காவேரியில் கட்டப்பட்டுள்ள அணைகள் விபரம் :-

மேலும் சேலம் மாவட்டம் மேட்டூர் முதல் திருச்சி வரை காவேரி குறுக்கே உள்ள அணைகள் விவரம். மேட்டூர் அணை முதல் கல்லணை (டெல்டா ஆரம்பம்) வரை 14 அணைகள் உள்ளன. இதில் காலிங்கராயன் அணை மட்டும் பவானி காவேரி ஆற்றில் கலக்கும் இடத்தில் உள்ளது, மற்ற அணைகள் அனைத்தும் காவேரி குறுக்கே உள்ளது.


ஆதாரம்
http://www.india-wris.nrsc.gov.in/wrpinfo/index.php?title=Dams_in_Tamil_Nadu

Sunday 19 August 2018

ஈழப் போர் இறுதி தினங்கள்! புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்!

ஈழப் போர் இறுதி தினங்கள்! புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்!

 http://nadunadapu.com/?p=114260

உண்மையில் நடந்தது என்ன?

அனந்தி சசீதரன் குற்றச்சாட்டு உண்மையா?

இறுதி தினங்களில் விடுதலைப் புலிகள் சரணடைவானது இந்தியா மற்றும் சர்வதேச ஏற்பாட்டில் இடம்பெற்றது.

அப்போது எனது கணவர் எழிலனும் சரணடைந்தார். அதன்முன்பு, சரணடைவது தொடர்பாகத் தமிழகத்தின் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழியுடன், தொலைபேசியில் எழிலன் உரையாடினார்.

அதனை நான் கணவர் அருகில் இருந்து கேட்டேன். மேலும் நடேசன், புலித்தேவன் உள்ளிட்டவர்களுடனும் கனிமொழி பேசினார்.

முள்ளிவாய்க்காலில் வைத்து கனிமொழியுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னரே 2009 மே 16ஆம் திகதி காலை 8 மணியளவில் எனது கணவர் இராணுவத்திடம் சரணடைந்தார்’ எனக் கூறியுள்ளார். அதன்பின்னர் பல ஊடகப் பேட்டிகளிலும் இதனை உறுதிப்படுத்தினார்.

கனிமொழியின் மறுப்பு*

கனிமொழி
அனந்தியின் இந்தப் பேச்சை கனிமொழி மறுத்துள்ளார். ‘யாரையும் இலங்கை அரசாங்கத்தின் சார்பிலோ இந்திய அரசாங்கத்தின் சார்பிலோ சரணடையும்படி கூறும் அதிகாரம் எனக்கு இல்லை.

மேலும், எனக்குச் சசிதரன் யார் என்றே தெரியாது. இந்நிலையில், நான் தொலைபேசி மூலம் அவருக்கு ஆலோசனை கூறியதாகச் சொல்வது முற்று முழுதிலும் தவறானது.

யுத்தம் அதி உச்சகட்டத்தில் இருக்கும் போது, ஒருவரை இலங்கை இராணுவத்திடம் சரணடையும்படி யாராவது கூறுவார்களா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.




முன்னாள் போராளி சாத்திரி
சொல்வது என்ன?


‘2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ஈழத் தமிழர்களுக்காகத் தனது நாடாளுமன்றப் பதவியைத் துறப்பதற்குத் தயாராக இருப்பதாகக் கூறி தனது தந்தையிடம் கடிதம் ஒன்றை கனிமொழி கையளித்திருந்தார்.


அதைத் தொடர்ந்து நடேசனுக்கும் கனிமொழிக்கும் தொடர்ச்சியான மின்னஞ்சல் தொடர்புகள் இருந்தது. இக்காலகட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் புலிகளுக்கும் இந்திய மத்திய அரசுக்குமான தொடர்பாளராகக் கனிமொழி இருந்தார்’ என்றார் சாத்திரி.


சாத்திரி மேலும், ‘இந்தப் பேச்சுவார்த்தைகளில் புலிகள் தரப்பில் கலந்துகொண்ட கே.பி. மற்றும் உருத்திரகுமாரன் (இன்றைய நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர்) தரப்பினர் ஆமோதிப்புடன், உலக நாடுகளால் முன்மொழியப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவு – சரணாகதி திட்டத்தை அதிகாரபூர்வமயப்படுத்தும் அறிக்கை ஒன்று, 03.02.2009 அன்று இணைத்தலைமை நாடுகளால் வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இதே நிலைப்பாட்டுடன் 05.02.2009 அன்று இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரால் ஊடக அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டன.

07.04.2009 அன்று முற்பகல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருக்கான பதிலை கனிமொழி அனுப்பியிருந்தார்.

ஆங்கிலத்தில் அனுப்பி வைக்கப்பட்ட அந்தக் கடிதத்தின் தமிழ் வடிவம், ‘நடேசன் அண்ணன், நிலைமை மிகவும் மோசமாக இருப்பதை நான் அறிவேன்.

நீங்கள் அனுப்பிய மடல் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட எல்லோருடனும் பேசிவிட்டேன். குடியரசுத் தலைவரின் உரையில் தெரிவிக்கப்பட்டமை போன்று ஆயுதங்களைக் கீழே போடுவதற்கான ஒப்புதலை நீங்கள் வெளியிட வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

தயவுசெய்து அதைச் செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால் உங்களுக்கு இந்திய அரசாங்கம் உதவக்கூடும் போல் தோன்றுகின்றது. நான் சொல்வதைச் செய்ய முடியாதுவிட்டால் தயவுசெய்து டில்லியுடனேயே கதையுங்கள்.

மக்களைப் பற்றி உள்துறை அமைச்சரும் கரிசனையாக உள்ளார். கிடைக்கும் செய்திகள் கவலையளிக்கும் வகையிலும் தீர்க்கமானவையாகவும் உள்ளன. தயவுசெய்து தவறான வழிகாட்டல்களைப் பின்பற்றாதீர்கள்’ என்றிருந்தது.

சிதம்பரம் செய்த முயற்சி**

‘இலங்கை என்ற நாட்டைப் பிரித்து ஈழம் அமைவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. புலிகள் அந்த நிலைப்பாட்டில் இருக்கும் வரை எம்மால் உதவவும் முடியாது.

புலிகள் தற்போதைக்கு அந்த நிலைப்பாட்டைக் கைவிடத் தயாரா என்பதை நடேசனிடம் கேட்டுச் சொல்லுங்கள். அதன்பின், என்ன செய்ய வேண்டும் என்பதற்கு எம்மிடம் ஒரு திட்டம் உள்ளது’ என்றார் ப.சிதம்பரம்.

இந்தத் தகவல், பா.நடேசனிடம் தெரிவிக்கப்பட்டது. கிளிநொச்சி முற்றாக ராணுவத்திடம் வீழ்ந்து, விடுதலைப் புலிகள் கிளிநொச்சி மாவட்டத்தையே கைவிட்டு வெளியேறி, முல்லைத்தீவு மாவட்டத்துக்குள் மட்டும் இருந்த நாட்கள் அவை.

முல்லைத்தீவு மாவட்டத்துக்குள்ளும் நுழைந்த ராணுவம், புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களைக் கைப்பற்ற நெருங்கிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில், தலைவர் பிரபாகரன், பா.நடேசன், தீபன், சூசை மற்றும் சில முக்கியத் தளபதிகள் கலந்துகொண்ட அவசர ஆலோசனைக் கூட்டம் புதுக்குடியிருப்புப் பகுதியில் நடந்தது.


அப்போது தீபன், ‘ராணுவம் முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளைக் கைப்பற்றாமல் இன்னமும் சில வாரங்களே தடுக்க முடியும்.


அதன்பின் அவர்கள் கைப்பற்றி விடுவார்கள்’ என்ற நிஜ கள நிலைமையைத் தெரிவித்தார். ஆலோசனையில் கலந்துகொண்ட இரு தளபதிகள் அதை மறுத்து, முல்லைத்தீவை தக்க வைத்துக்கொள்ளும் பலம், புலிகளிடம் இருப்பதாகத் தெரிவித்தனர்.


நீண்ட ஆலோசனையில், ‘எம்மால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையைக் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான சமாதான ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில், அண்டன் பாலசிங்கம் தெரிவித்திருந்தது, ஒரு தளபதியால் குறிப்பிடப்பட்டது.

‘இப்போதும் அப்படியொரு நிலைப்பாட்டை எடுக்கலாம். ஈழம் கொள்கையைக் கைவிட்டால் இந்தியாவால் எந்தவிதத்தில் உதவ முடிகிறது என்று பார்க்கலாம்’ என்பது சில தளபதிகளின் கருத்து.


இந்நிலையில், ‘ஈழம் கொள்கையைக் கைவிடுவது தொடர்பான எமது அறிவிப்பை (அல்லது ப்ரபோசலை) புதுடில்லியே தயாரிக்கட்டும். அதை அவர்கள் எமக்கு அனுப்பி வைத்தால், நாம் படித்துப் பார்த்துவிட்டு, ஏற்றுக்கொள்ளும் வகையில் அது இருந்தால் வெளியிடலாம்’ என்று பிரபாகரன் தன் முடிவை அறிவித்தார்.


ப. சிதம்பரம்
இதையடுத்து, புலிகள் வெளியிடுவதற்கான ப்ரபோசலை டில்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாமே தம் கைப்படத் தயாரித்தார்.


மிக ரகசியமாகத் தயாரிக்கப்பட்ட அந்த ஆவணத்தைக் கொடுப்பதற்கு முன், சிதம்பரம் விதித்த நிபந்தனை, ‘இந்த ப்ரபோசலை புலிகள் ஏற்றுக்கொண்டாலும் சரி, ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி, இந்த ஆவணத்தில் உள்ள விபரம் குறித்து எக்காரணம் கொண்டும் இந்தியாவில் உள்ள யாருக்கும் தெரிவிக்கக்கூடாது’ என்பதுதான்.

சிதம்பரம் நிபந்தனையைப் பா.நடேசன் சீரியசாக எடுக்கவில்லையா அல்லது தமிழகத்தில் உள்ள தமக்குத் தெரிந்தவர்களுக்குக் கூறினால் தப்பில்லை என்று நினைத்தாரா தெரியவில்லை… விஷயத்தை வைகோவிடம் கூறிவிட்டார்.


இந்த விஷயங்கள் 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்தன. அதே ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் இந்திய நாடாளுமன்ற தேர்தல்கள் நடக்கவிருந்தன.


தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள், தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியும், மத்தியில் பா.ஜ.க. கூட்டணியும் அமோக வெற்றிபெறும் என்ற விதத்தில் இருந்தன.


இந்நிலையில் வைகோ, ‘நீங்கள் எக்காரணம் கொண்டும் காங்கிரஸ்காரர்களை நம்ப வேண்டாம். அவர்கள் ஆட்சியில் இருக்கப் போவதே இன்னமும் சில மாதங்கள்தான். மத்தியில் பா.ஜ.க. ஆட்சி வரப்போகிறது.



தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிப் பெறப்போகிறது. ஜெயலலிதா, ஈழத்துக்கு ஆதரவாக உள்ளார். இந்த நேரத்தில் ‘ஈழம் கொள்கையைக் கைவிடுகிறோம்’ என்று கூறி எல்லாவற்றையும் கெடுத்து விடாதீர்கள். மத்தியில் ஆட்சி மாறட்டும். மறுநாளே யுத்தத்தை நிறுத்திவிடலாம்’ என்றார். குழம்பிப் போனார் நடேசன்.

சிதம்பரத்தின் ஆவணத்தை நிராரித்த பிரபாகரன்***

நடேசன் அடுத்துப் பழ.நெடுமாறனை தொடர்புகொண்டார். அவரும் வைகோ சொன்னதையே சொன்னார். இவர்கள் இருவரது கருத்தும் பிரபாகரனிடம் சேர்க்கப்பட்டது.



அப்போது, இலங்கை ராணுவம் முல்லைத்தீவை கைப்பற்றாமல் இன்னும் சில மாதங்களுக்கு (இந்திய லோக்சபா தேர்தல் முடிவு வரும்வரை) தாக்குப்பிடிக்க முடியும் என்ற கருத்து சில தளபதிகளால் சொல்லப்பட்டது. பிரபாகரன் அதையே நம்பியதாகத் தெரிகிறது.


சில நிமிடங்கள் யோசித்த பிரபாகரன், தனது உதவியாளர் ஒருவரை அழைத்து, சிதம்பரம் தயாரித்துக் கொடுத்த ஆவணத்தில், ‘நிராகரிக்கப்பட்டது’ என எழுதி, கையெழுத்திட்டு, நடேசனிடம் கொடுத்தார்.


ப. சிதம்பரம் தயாரித்த ப்ரப்போசலின் ஆயுள் அத்துடன் முடிந்தது.

அமெரிக்க திட்டம்****

இதற்கிடையே அமெரிக்கத் திட்டம் ஒன்றும் ப்ரபோசல் அளவில் இருந்தது. இந்திய திட்டம், ‘ஈழம் கோரிக்கையைக் கைவிட வேண்டும்’ என்ற அளவில் இருந்தது.


அமெரிக்கத் திட்டமோ, ஒரு படி அதிகமாகி, ‘புலிகள் சரணடைய வேண்டும்’ என்ற வகையில் இருந்தது. அமெரிக்கா கப்பல் கொண்டுவந்து பிரபாகரனையும் தளபதிகளையும் வெளியேற்றும் அந்த ‘அமெரிக்கத் திட்டத்தை’யும் பிரபாகரன் நிராகரித்திருந்தார்.



யுத்தம் துரிதகதியில் நடந்து கொண்டிருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நகரங்கள் ஒவ்வொன்றாக ராணுவத்திடம் வீழ்ந்தன. புலிகள், சிறிய பகுதி ஒன்றுக்குள் முடக்கப்பட்டார்கள்.



அந்தப் பகுதியையும் ராணுவம் நெருங்கி வரத்தொடங்கியது. இந்த நிலையில், புலிகள் மீண்டும் இந்தியாவைத் தொடர்புகொள்ள முயன்றார்கள். இந்தியாவுடன் மீண்டும் பேசிப் பார்க்கும்படி கேபியிடம் பிரபாகரன் சொன்னார்.



வைகோ
26.04.2009 அன்று ஒருதலைப்பட்சமான முறையில் போர் நிறுத்தத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகள் பிரகடனம் செய்தனர். அதனை இலங்கை அரசு நிராகரித்தது.


இதற்கிடையே பா.நடேசனுடன் தொடர்பில் இருந்த வைகோ, “இன்னும் இரண்டு வாரங்கள் தாக்குப் பிடியுங்கள். மத்தியில் அரசு மாறிவிடும். ஆட்சி மாறினால், மறுநாளே யுத்த நிறுத்தம்’ என்றார்.


இரண்டு வாரங்கள் தாக்குப் பிடிப்பதே சிரமம் என்ற நிலை வன்னியில் இருந்தது. இந்திய லோக்சபா தேர்தல் முடிவுகள் மே 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. காங்கிரஸ் கூட்டணியே மீண்டும் ஜெயித்தது.


அதன்பின்னர் தமிழகத்தோடு மட்டுமல்ல இந்தியாவில் யாரோடும் தொடர்புகொள்வதில் பிரயோசனம் இல்லை என்கிற நிலைமை. அடுத்த 48 மணி நேரத்துக்குள் மே 18ஆம் தேதி விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்கு வந்தது.



இலங்கை ராணுவத்தின் 53ஆம் டிவிஷனின் கீழ் செயல்பட்ட 4ஆம் விஜயபாகு ரெஜிமென்ட் படைப்பிரிவு, லெப்டினென்ட் கர்னல் ரொஹித அலுவிஹர தலைமையில் தேடுதலை மேற்கொண்டபோது, நந்திக்கடல் ஓரம், கோரைப் புற்களில் சிக்கிய நிலையில் பிரபாகரனின் உடல் கிடைத்ததாக இலங்கை ராணுவம் மே 19ஆம் தேதி அறிவித்தது.


இதன்முன்னர், இறுதி நேரத்தில் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவில் இருந்தவர்கள், தங்களை யாராவது காப்பாற்ற மாட்டார்களா என்கிற அங்கலாய்ப்பில் உலகத்தில் தங்களுக்குத் தெரிந்தவர்களோடு எல்லாம் தொடர்புகளை ஏற்படுத்தினார்கள். அப்படிச் சிலர் கனிமொழியோடும் தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கலாம்.


புலிகள் சரணடையும் தீர்மானம் எடுத்தபோது முதலில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தையும் பேச்சுவார்த்தைக்கு அனுசரணை வழங்கிய நோர்வே, ஐ.நா. சபையின் தென்கிழக்காசிய பிராந்திய பிரதிநிதி ஆகியோரைத்தான் தொடர்புகொண்டார்கள்.


புலிகள் தலைமை சரணடையும் முடிவு, 2009 மே 15ஆம் தேதி அன்றைய சர்வதேச தொடர்பாளர் கே.பி. மூலமாக நோர்வேக்குத் தெரிவிக்கப்பட்டது.


அடுத்தடுத்த நாட்கள் விடுமுறை நாட்கள். ‘ஐநா சபை அதிகாரிகளோடு அலுவலகத்தில் தொடர்புகொள்ள முடியாது; எனவே இந்திய அரசோடு தொடர்புகொள்ளலாம் என நோர்வே அரசு வழங்கிய ஆலோசையின்படி அன்றைய மத்திய அமைச்சர் சிதம்பரத்தோடு தொடர்புகொள்ள முயன்றார்கள்.


அப்போது புலிகளுக்கும் இந்திய மத்திய அமைச்சருக்கும் இடையில் தொடர்பாளராக கனிமொழி இருந்தார்.


இந்நிலையில் இப்போது சிலர் கனிமொழி சொன்னபடிதான் புலிகள் சரணடைந்தார்கள் என்பது போலச் செய்திகளைப் பரப்புகிறார்கள். அவர் புலிகளைச் சரணடையும் படி சொல்லவும் முடியாது. அதற்கான அதிகாரமும் அவருக்கு இல்லை.


கனிமொழியை நம்பி சரணடையும் முடிவை எடுக்கும் அளவுக்குப் புலிகள் அமைப்பும் இல்லை.

 ஒரு நாட்டின் உள்நாட்டு யுத்தத்தை அடுத்த நாட்டின் முதலமைச்சரோ அவரின் வாரிசோ அடுத்த நாட்டின் மத்திய அமைச்சரோ தடுத்து நிறுத்திவிட முடியாது.


இவையெல்லாம் தெரிந்தும் அனந்தி சசிதரன் அண்மைக்காலமாகப் பேசி வருபவை தேர்தல் அரசியலைக் குறி வைத்ததாகவே தெரிகிறது’’ என்கிறார் சாத்திரி.

யுத்தத்தின் இறுதி நாட்கள் பேச்சுவார்த்தையில் புலிகள், இந்திய அரசு இரண்டு தரப்புக்கும் இடையே தொடர்பில் இருந்த பேராசிரியர் சுப. வீரபாண்டியன், அருட் தந்தை ஜகத் கஸ்பார் இருவரும்கூட ‘அனந்தி சசீதரன் பேச்சு தேர்தல் அரசியலை மையமாக வைத்தே நகர்த்தப்படுகிறது’ எனப் புதிய தலைமுறையிடம் தெரிவித்தனர்.


சுப. வீரபாண்டியன் சொல்வது என்ன?

சுப. வீரபாண்டியன், ‘போர் நிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்ய முடியுமா என மேற்கொள்ளப்பட்ட சில முயற்சிகளில் என் பங்களிப்பு இருந்தது.


கனிமொழி தூண்டுதலில் ப. சிதம்பரம் அதற்கான முயற்சிகளை முன்னெடுத்தார். அதனடிப்படையில் ஓர் ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு அதில் புலிகள் தரப்பில் கையெழுத்துப் போடுவார்களா என என்னிடம் கேட்டார்கள். அதனை நான் புலிகளுக்குத் தெரிவித்தேன்.


ஆனால், முயற்சி தொடரவில்லை. பின்னால், தமிழகத்தில் இருந்து சில தலைவர்கள் அதனைத் தடுத்துவிட்டார்கள் எனக் கேள்விப்பட்டேன்.

மே 17, 18இல் மீண்டும் 48 மணி நேரத்துக்காவது போர் நிறுத்தம் செய்ய முடியுமா என முயற்சி மேற்கொண்டோம். ஆனால், அந்த முயற்சியும் இப்போது குறிப்பிடப்படுவதுபோல் சரணடைவதற்கான முயற்சி அல்ல, போர் நிறுத்தத்துக்கான முயற்சிதான்.


மூன்று தலைமுறைகளாக நடைபெற்றுவரும் போராட்டம் அது. அந்தப் போராட்டத்தில் கனிமொழி முடிவு எடுக்க முடியுமா? ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் திமுகவுக்கு எதிராக எதாவது ஒன்று உருவாக்கப்படும்.


இப்போது அனந்தி மூலம் அது தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டு அரசியலுக்கு இன்னமும் ஈழ அரசியல் பயன்படுகிறது என்பதைத்தான் இது வெளிப்படுத்துகிறது’ என்றார்.

ஜெகத்கஸ்பர் சொல்வது என்ன?

ஜெகத் கஸ்பர், ‘ஜனவரி 28, 29, 30 தேதிகளையொட்டியும் மே 17,18 இறுதி நாட்களிலுமாக இரண்டு முறை போர் நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதில் ஜனவரி கடைசித் தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட சண்டை நிறுத்த முயற்சியில், இரண்டு பக்கமும் அரசியல் அதிகாரத்தில் இருந்தவர்களுடன் எனக்கு இருந்த தொடர்புகள் மூலம் ஒரு சிறு பங்களிப்பை நான் செய்தேன்.

அப்போது, இந்தியத் தரப்பில் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான விருப்பம் முன்வைக்கப்பட்டு அதனை இரு தரப்புமே ஒப்புக்கொள்ளப்பட்டு ஒரு வரைவு தயாரிக்கப்பட்டது.

இந்நிலையில் திடீரென இந்த முயற்சி மேற்கொண்டு நகராமல் நின்றுவிட்டது. அப்போது, புலிகள் தன்னிச்சையாகப் பேச்சுவார்த்தையைத் துண்டித்துக்கொண்டார்கள் என இந்தியத் தரப்பில் சொல்லப்பட்டது. இதற்கு அனந்தபுரம் சமர் மீது புலிகள் வைத்திருந்த ஒரு நம்பிக்கைக் காரணமாக இருக்கலாம் என நான் அனுமானித்தேன்.


ஜெகத் கஸ்பர்
அனந்தபுரம்தான் இறுதி யுத்தத்தில் கடைசித் திருப்புமுனையாக அமைந்தது. அந்த யுத்தத்தில் இலங்கை ராணுவம் ரசாயண ஆயுதங்களைப் பயன்படுத்தியதை புலிகள் எதிர்பார்க்கவில்லை.


அந்த யுத்தத்தில் புலிகளின் முக்கியமான தளபதிகள் பலரும் இறந்துவிட்டார்கள். இதனால், அனந்தபுரத்துடன் கிட்டத்தட்ட போர் முடிவுக்கு வந்துவிட்டது.


அதுவரைக்கும் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த முயற்சி என்பது அதன்பிறகு புலிகள் சரணடைவதற்கான முயற்சியாக மாறிவிட்டது. ஏனெனில், சண்டையை நிறுத்த வேண்டிய தேவை இலங்கை அரசுக்கு இருக்கவில்லை.

கடைசித் தினங்களில் சரணடையும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது பிரபல போர்ச் செய்தியாளர் மேரி கொல்வின், இலங்கை முன்னாள் எம்பி சந்திரா நேரு, விஜய் நம்பியார் உட்படப் பலர் அதில் ஈடுபட்டிருந்தார்கள்.


அதன் அடிப்படையில்தான், வெள்ளைக்கொடிகளைக் காண்பித்து நடேசன், புலித்தேவன் போன்றவர்கள் சரணடைய முன்வந்தார்கள். பொதுவாக இதுபோன்ற சரணடையும் சம்பவங்களில் ஐநா பிரதிநிதி ஒருவர் இருக்க வேண்டும்.


விஜய் நம்பியார் அப்போது கொழும்பில்தான் இருந்தார். ஆனாலும், ஐநா பிரதிநிதி ஒருவர்கூடக் களத்துக்கு வரவில்லை. ஐநா பிரதிநிதி இல்லாததைப் பார்க்கும்போது இதில் ஒரு சதி இருந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.

இலங்கை அரசைப் பொருத்தவரைக்கும் தமிழருக்காகப் பேச எவருமே உயிரோடு இருக்கக்கூடாது. நடேசனும் புலித்தேவனும் சரணடைந்து கைது செய்யப்பட்டாலும் அவர்கள் யுத்த கைதிகளாகவே நடத்தப்பட வேண்டும்.

நாளை அனைத்துலக ஏற்பாட்டில் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கும் போது புலிகள் தரப்பிலும் பிரதிநிதிகள் இருக்க வேண்டுமென உலக நாடுகள் நிச்சயம் வலியுறுத்தும்.

அத்தகு சூழலில் தகுதியோடு தமிழரை பிரதிநிதித்துவப்படுத்த எவருமே இருக்கக்கூடா தென்பதுதான் அவர்கள் கணக்கு’ என்று புதிய தலைமுறையிடம் தெரிவித்தார்.

வைக்கோ மறுப்பு**

ஆனால், இந்தியத் தரப்பில் முன்னெடுக்கபட்ட போர் நிறுத்த முயற்சிகளை வைகோ ஆலோசனைபடிதான் புலிகள் நிராகரித்தார்கள் என்ற செய்தியை ஏற்கெனவே வைகோ மறுத்துள்ளார்.


இது குறித்துக் குமரன் பத்மநாபன் கூறியிருந்ததற்கு மறுப்புத் தெரிவித்திருந்த வைகோ, ‘போர் நிறுத்தம் ஏற்பட்டால் என்னைவிட, பழ.நெடுமாறனை விட நிம்மதி அடைகிறவர்கள் யாரும் இருக்க முடியாது.

எவ்வகையிலாவது போர் நிறுத்தம் ஏற்பட்டுவிடாதா என்று நாங்கள் துடித்தோம். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் புலிகள் அமைப்புக்கும், அவர்கள் அங்கே எடுக்க வேண்டிய நிலைப்பாட்டைப் பற்றி, எந்தக் காலத்திலும் நாங்கள் யோசனை கூறியது கிடையாது.

ஈழத்தின் நிலைமைக்கு ஏற்ப, அம்மக்களின் நலனுக்கு ஏற்ற முடிவுகளைப் பிரபாகரன் மேற்கொள்வார்’ என்று கூறியுள்ளார்.


மேரி கொல்வின்**

இந்நிலையில், ஈழப் போராட்டம் குறித்துத் தொடர்ந்து எழுதிவரும் சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் (பெயர் வெளியிட விரும்பவில்லை), ‘இறுதி யுத்தத்தில் சரணடையும் முடிவை போராளிகளுக்குச் சொன்னது மேரி கொல்வின் தரப்பும் மேற்குலகமும்தான்.


அப்போது நடைபெற்ற புலிகளுக்கும் இந்திய மத்திய அரசுக்கும் இடையிலான பரிமாற்றங்கள் பல வழிகளில் நடந்தது.


அதில், கனிமொழி தரப்பு மட்டுமல்லாமல் புலிகளின் நெருங்கிய நண்பர்களாகத் தமிழகத்தில் இருந்த பல அரசியல் தலைவர்களும் ஈடுபட்டதோடு சில கடிதப் பரிமாற்றங்களையும் மேற்கொண்டனர்.

அவர்கள் இன்று மவுனமாக உள்ளனர். அவர்கள் மவுனம் கலைத்தால் பல விஷயங்கள் வெளிவரலாம்’ என்று புதிய தலைமுறையிடம் தெரிவித்தார்.


தமிழகத் தலைவர்கள் மவுனம் கலைப்பார்களா?



விடுதலைப்புலிகளும் சரணடைவும்***

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முக்கியப் பணியாற்றிய ஒருவர், முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் புலிகள் சரணடைவு குறித்து, தெரிவித்தவை இவை.

‘புலிகளின் சரணடைவு மூன்று நான்கு வகையில் நிகழ்ந்தது.

சண்டை நடந்து கொண்டிருக்கும்போதே உதிரிகளாக ஒரு தொகுதிப் புலிகள் படையினரிடம் சரணடைந்தார்கள். இவர்கள் கடல் மார்க்கமாகவும் தரை வழியாகவும் புலிகளுக்கே தப்பி, படையினரிடம் சரணடைந்தனர்.

குறிப்பாக, தங்கள் குடும்பத்தினருடன் இணைந்த நிலையில் இந்தச் சரணடைவு நடந்தது.

அடுத்தது, யுத்தத்தின் இறுதியின்போது நடந்த சரணடைவு. வெள்ளைக்கொடியுடன் நடந்த இதில் புலித்தேவன், நடேசன், ரமேஸ் என்ற இளங்கோ மற்றும் நடேசனின் குடும்பத்தினர் என ஒரு தொகுதியினர் சரணடைந்தனர்.

மூன்றாவது, யுத்தம் முடிந்த பிறகு அல்லது யுத்த ஓய்வுடன் நடந்த சரணடைவு.

இதன்போது புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒரு தொகுதியினர் (ஏறக்குறைய 100 பேருக்கு மேல்) சரணடைந்தனர்.

இதில்தான் எழிலன், நீதித்துறைப் பொறுப்பாளர் பரா, கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் கவிஞர் புதுவை இரத்தினதுரை, அரசியற்துறை துணைப் பொறுப்பாளர் தங்கன், அரசிற்துறை முக்கியஸ்தர் இளம்பரிதி, விளையாட்டுத் துறைப் பொறுப்பாளர் பாப்பா, நிதர்சனம் நிறுவனப் பொறுப்பாளர் மிரேஸ்,

தமிழீழத் தொலைக்காட்சிப் பொறுப்பாளர் திலகன், தமிழீழப் போக்குவரத்துக் கழகப் பொறுப்பாளர் குட்டி, நகை வாணிபப் பொறுப்பாளர் பாபு, தமிழீழக் கல்விக் கழகப் பொறுப்பாளரும் பிரபாகரனின் நெருங்கிய சகாவுமான பேபி சுப்பிரமணியம் (இளங்குமரன்), புலிகளின் முக்கியஸ்தர் யோகரட்ணம் யோகி எனப் பலர் சரணடைந்தனர்.

இவர்களைப் பற்றிய எந்த விவரமும் இன்றுவரை இல்லை. இவர்கள் முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் கிறிஸ்தவ மதகுருவான பிரான்ஸிஸ் யோசப்புடன் இணைந்து படையினரிடம் சரணடைந்திருந்தனர்.

முக்கியமான விடயம் என்னவென்றால், புலிகளின் தலைமைக்குரியவர்கள் – தளபதிகள் எல்லோரும் கொல்லப்பட்டு விட்டனர் அல்லது தங்களைத் தாங்களே மாய்த்துக்கொண்டனர். மிஞ்சிய முக்கியஸ்தர்கள்தான் மதகுருவுடன் சென்றனர்.

இதனை அடுத்தத் தொகுதியினர் பொதுவாகவே சரணடைந்தவர்கள். இவர்கள்தான் அதிகம். ஏறக்குறைய 10 ஆயிரத்துக்கு மேல். இன்னொரு தொகுதியினர் சரணடையாமல் மக்களோடு மக்களாக அகதி முகாம்களுக்குச் சென்றனர்.

இவர்களைப் பிற போராளிகளும் மக்களும் காட்டிக் கொடுத்தனர். எப்படியோ இவர்களைப் படையினர் முகாம்களில் வைத்துக் கைது செய்துகொண்டு சென்றனர்.

மற்றொரு தொகுதியினர் படையினரின் பகுதிக்கு மக்களோடு வந்தனர். ஆனால், படையினரிடம் சரணடையாமல் அவர்களுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டுத் தப்பிச் சென்றனர். ஏனையவர்கள் இடைநிலையாளர்கள். தப்பிச் சென்றவர்களும் இடைநிலையாளர்களே.

விதிவிலக்காக ஒரு சரணடைவு நடந்தது. ஈரோஸ் இயக்கத்தின் தலைவராக இருந்து பின்னர்ப் புலிகளுடன் இணைந்து கொண்ட வேலுப்பிள்ளை பாலகுமாரனின் சரணடைவு.

இவர் தனியாக மக்களுடன் இணைந்து சரணடைந்தார். இவருடன் இவருடைய மகன் சூரியதீபனும் பாலகுமாரனின் உதவியாளரும் கூடவே சரணடைந்தனர். இவர்களைப் பற்றிய விவரங்களும் இன்றுவரை இல்லை.

(புதிய தலைமுறை, 25-06-2015 இதழில் வெளியான கட்டுரையிது. போர் முடிந்து 9ம் வருட நினைவு தினத்தை முன்னிட்டு இக்கட்டுரை  மீள்பிரசுரிக்கப்படுகிறது)