Sunday 29 April 2018

கடந்த 70 ஆண்டுகளில் திமுக ஆட்சி வெறும் 21 ஆண்டுகளே என்ன காரணம் தெரியுமா?



கடந்த 70 ஆண்டுகளில் திமுக ஆட்சி வெறும் 21 ஆண்டுகளே
என்ன காரணம் தெரியுமா?

கடந்த இரண்டு நாட்களாக அமைச்சர்களின் காவேரி பேச்சை உற்றுக் கேளுங்கள். உண்மை புரியும்.

ஒரே பொய்யை திரும்ப திருப்ப சொல்லி மக்களின் மனதில் அதை உண்மை போல பதிய வைப்பதே அதிமுக மற்றும் திமுக எதிரிகள் செய்யும் முக்கிய வேலை. அதுவே அவர்களின் கடந்தகால வெற்றிகளின் ரகசியம்.


1972 முதல் இதுதான் நடக்குது. ஆனா இதை எதிர்கொள்வதில் MGR காலம் முதலே திமுக தோல்வியைதான் சந்தித்து இருக்கிறது. தான் திருடுவதை யாரும் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக கலைஞரை ஊழல்வாதியாக சித்தரித்து சினிமா கவர்ச்சி மூலம் மக்களை நம்பவைத்தார் MGR.


அதே வழியை பின்பற்றிய ஜெயலலிதா ஊழல் செய்து மாட்டிக்கொண்டாலும் சாகும்வரை தன்னை உத்தமியாகவே காட்டிக்கொண்டார்.


ஜெ வழியைதான் தமிழகத்தில் உள்ள சில்லரை சில்லுண்டி கட்சிகளும் இன்றும் பின்பற்றி வருகின்றன.


இன்று ஆட்சி செய்வது அதிமுக. ஆனால் சில்லரை கட்சிகள் அதிமுகவை கண்டுக்கொள்ளாமல் திமுக மீது பழி சுமத்துவதையே திட்டுமிட்டு செய்கின்றன.


ஆனால் திமுகவோ தனக்கு எதிரான அவதூறுகளை  சரியான முறையில் எதிர்கொண்டதேயில்லை என்பதே உண்மை.


கலைஞர் நல்ல நிலையில் இருந்தபோதாவது அவ்வப்போது நீண்ட அறிக்கைகள் வரும். ஆனால்  அதுவும் இப்போது வருவதில்லை.


காவேரி பிரட்சினை, மீத்தேன்/ ஹைடிரோ கார்பன், கச்சத்தீவு, கெயில்,  நியூட்ரினோ, சர்க்காரியா கமிசன்,ஈழப்பிரட்சனை என அனைத்திலும் திரும்ப திரும்ப அதிமுகவினரும் சில்லரை கட்சிகளும் ஏற்கனவே சொன்ன பழைய பொய்களையே திரும்ப திரும்ப தினமும் சொல்லி அவதூறு பரப்புகின்றனர்.


அந்த பொய்களையும் அவதூறுகளையும் திரும்ப திரும்ப வியாபார ஊடகங்கள் பணத்திற்காக பரப்புகின்றன.


ஆனா திமுக தரப்பில் இருந்து எப்போதாவது ஒரு பதில் அறிக்கை வருகிறது. திமுகவிற்கு ஊடகங்களின் பலமும் கிடையாது என்பது ஊரறிந்த விசயம். ஆனா திமுக இதையெல்லாம் கண்டுக்கொள்வதாக தெரியவில்லை.


எதிரிகளின் தினப்பொய்களை என்னைப் போன்ற திமுகஅனுதாபிகளாலேயே சகிக்க முடியவில்லையே திமுக கட்சி தொண்டர்களால் எப்படி சகித்துக்  கொள்ளமுடியும்?


எதிர் தரப்பினர் ஒரே பொய்யை தினம் தினம் சொன்னால் திமுகவினரும் தங்கள் தரப்பில் உண்மையை பதிலடியாக அறிக்கைகள் மூலம் திரும்ப திரும்ப சொல்ல வேண்டியதுதானே.


தினம் ஒரு பதிலடி அறிக்கையை பத்திரிக்கைகளுக்கு கொடுப்பதில் திமுகவிற்கு என்ன பிரட்சினை?


தினசரி அறிக்கைகள் தயாரிக்கும் பொறுப்பை திமுகவின் கொ.ப.செயலாளர்களிடமும் செய்தி தொடர்பாளர்களிடமும் கொடுப்பதில் திமுக தலைமைக்கு என்ன தயக்கம்?


இன்றைய இளைஞர்களுக்கு திமுக வரலாறு சென்றடையவே இல்லையே. எதிரிகளின் பொய் பிரட்சாரம் திமுக ஆதரவு இளைஞர்களை கூட பாதிக்குமே.


இதற்கு மேலும் திமுக அலட்சியமாக இருப்பது திமுகவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.


By A. Parimalam


மிடாஸ் உருவான கதையும் அதை ஊட்டி வளர்த்து ஆளாக்கிய ஜெயலலிதாவும்"

ஏன் தனியார் வசம் இருந்த மதுவிற்பனையை அரசு தன்வசம்
எடுத்துக் கொண்டது தெரியுமா?

"மிடாஸ் உருவான கதையும் அதை ஊட்டி வளர்த்து ஆளாக்கிய ஜெயலலிதாவும்"

"தான் திருடி பிறரை நம்பாள்'' என்பது பழமொழி. ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் பெயரில் புதிய சாராய தொழிற்சாலைகள் என்றால், அந்த தொழிற்சாலைகள் எங்கே இருக்கின்றன? அந்த தொழிற்சாலைகளுக்கு டாஸ்மாக் நிறுவனத்தின் சார்பில் அதிக அளவில் ஆர்டர் வழங்கப்பட்டது என்றால் எவ்வளவு? இந்த விவரங்களையெல்லாம் ஜெயலலிதா சொல்லத் தயாரா? நாம் சிலவற்றைச் சொல்லவேண்டாமென்று நினைத்தாலும், ஜெயலலிதா தனது அறிக்கை வாயிலாகவே நம்மைச் சொல்லி ஞாபகப்படுத்த வைக்கிறார்.

"மிடாஸ்'' தொழிற்சாலை ஜெயலலிதா ஆட்சி காலத்திலே தொடங்கப்பட்டதே, அது யாருடைய தொழிற்சாலை? அது யாருக்கு சொந்தம் என்பது ஊருக்கே வெளிச்சமானது உண்டா? இல்லையா? அது ஜெயலலிதாவிற்கு வேண்டியவர்களுக்கு என்பது உலகம் அறிந்த உண்மை என்ற போதிலும் நான்காண்டு கால கழக ஆட்சி காலத்தில் டாஸ்மாக்கின் ஆர்டர்கள் குறைக்கப்பட்டதுண்டா? இல்லையே! அப்படிப்பட்ட "அல்பப்புத்தி'' இந்த அரசுக்கு கிடையாது.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் "மிடாஸ்'' தொழிற்சாலைக்கு எப்படி அனுமதி கொடுக்கப்பட்டது, அந்த தொழிற்சாலையை ஊக்குவிக்க அந்த ஆட்சியிலே என்னவெல்லாம் செய்யப்பட்டது என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன். தமிழ்நாட்டில் இந்தியாவில் தயாராகும் வெளிநாட்டு மது வகையறாக்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்திலும், தொடர்ந்து 1996 முதல் 2001 வரை இருந்த தி.மு.கழக ஆட்சி காலத்திலும் ஐந்துதான் இருந்தன. அவையாவன: 1. மோகன் புரூவரீஸ், 2. சிவா டிஸ்டிலரீஸ், 3. பாலாஜி டிஸ்டிலரீஸ், 4. எம்.பி. டிஸ்டிலரீஸ், 5. சாபிள் டிஸ்டிலரீஸ்.

இந்த ஐந்தைத் தவிர ஜெயலலிதாவின் கடந்த ஆட்சி காலத்தில் மேலும் ஒரு தொழிற்சாலை தொடங்கப்பட்டது. அதுதான் மிடாஸ் டிஸ்டிலரீஸ். தற்போது ஸ்டாலின் பெயரிலும், கனிமொழி பெயரிலும் புதிய சாராயத் தொழிற்சாலைகள் மின்னல் வேகத்தில் உருவாகி வருவதாக அறிக்கை விட்டுள்ள ஜெயலலிதா ஆட்சியிலே அனுமதி வழங்கப்பட்டதுதான் இந்த மிடாஸ் தொழிற்சாலை. இந்த மிடாஸ்' டிஸ்டிலரீஸ் எப்படி வந்தது என்பதைப் பற்றி விவரமாகக் கூறவேண்டும். நான் தமிழக முதல்வராக இருந்தபோது, மேலே கூறிய ஐந்து மதுபான ஆலை அதிபர்களும் தங்களுடைய ஆண்டு மதுபான உற்பத்தித் திறனை அதிகரித்துக்கொள்ள அனுமதி வேண்டுமென்று அனுமதி கோரிய போது, நான் அதற்கு அனுமதி வழங்கவில்லை.

அப்போது கோல்டன் டிஸ்டிலரீஸ் என்ற தனியார் நிறுவனம் ஒன்று தமிழ்நாட்டில் மதுபான தேவைகள் அதிகமாக இருப்பதால், ஏற்கனவே உள்ள மது பான ஆலைகளுக்கு உற்பத்தித் திறனை அதிகப்படுத்திக்கொடுப்பதற்கு பதிலாக தங்களுக்கு மதுபானம் தயாரிக்க தனியாக உரிமம் தரவேண்டுமென்று கோரி, தமிழக அரசிடம் விண்ணப்பித்தது. புதிதாக யாருக்கும் அனுமதி அளிப்பதில்லை என்பதால், அந்த கோரிக்கை மறுக்கப்பட்டது. (அரசாணை எண்.55). உடனே அந்த தனியார் நிறுவனம் நீதிமன்றத்திற்கு சென்று அங்கே 30-3-2001 அன்று தங்களுக்கு சாதகமாக உத்தரவு பெற்றது; எனினும், தமிழக அரசின் சார்பில் வழங்க வேண்டிய சிறப்பு உரிமம் வழங்கப்படவில்லை. மாறாக நீதிமன்ற ஆணையை எதிர்த்து மேல் முறையீடும் செய்தது.

2001-ம் ஆண்டு ஜெயலலிதா அரசு பதவியேற்றவுடன், 1-2-2002 அன்று கோல்டன் டிஸ்டிலரீஸ் நிறுவனம் அரசுக்கு அளித்த கோரிக்கை மனுவில், தங்கள் கோரிக்கையை அரசாங்கம் மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்றும், நீதிமன்ற மேல் முறையீட்டைத் திரும்பப்பெற வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டது. ஜெயலலிதா அரசு, அந்த மனுவை உடனடியாக பரிசீலித்து அதாவது ஐம்பது நாட்களுக்குள்ளாகவே அதாவது 21-3-2002 அன்றே அந்த நிறுவனம் மலிவு விலை மதுபானம் தயாரிப்பதற்கான ஆணையைப் பிறப்பித்தது. இன்னும் சொல்ல வேண்டுமேயானால் 21-3-2002 அன்று அரசாணை தயாரிக்கப்பட்டு, அந்த ஒரே நாளில் அந்த கோப்பு அனைத்து அதிகாரிகளாலும் பார்க்கப்பட்டு, கையெழுத்திடப்பட்டு, அதே நாளிலேயே ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதியைப் பெற்றுக்கொண்ட கோல்டன் டிஸ்டிலரீஸ் நிறுவனம், அதற்கடுத்த மாதமே அதாவது 15-4-2002 அன்று மீண்டும் ஒரு மனுவினை அரசுக்கு தாக்கல் செய்தது. அந்த மனுவில் தங்களுக்கு மலிவு விலை மதுபானம் தயாரிக்கும் அனுமதி மட்டும் போதாது, இந்தியாவில் தயாரிக்கப்படும் அன்னிய நாட்டு மது வகையறாக்களைத் தயாரிக்கும் அனுமதி வேண்டு மென்று அரசைக் கேட்டுக்கொண்டார்கள். அந்த மனுவையும் ஜெயலலிதா அரசு பரிசீலித்து ஐம்பதே நாட்களில் அதாவது 30-5-2002-ல் அதற்கான அனுமதியை வழங்கி உத்தரவிட்டுள்ளது. (அரசாணை எண். 115)

30-5-2002-ல் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்ட பிறகு- பத்தே நாட்களில் மீண்டும் அந்த கோல்டன் டிஸ்டிலரீஸ் நிறுவனம் அரசுக்கு ஒரு கோரிக்கை மனுவினைத் தருகிறது. அந்த மனுவில் தங்கள் தொழிற்சாலையை திருப்போரூர் தாலுகாவில் உள்ள தையூர் கிராமத்திலிருந்து திருப்பெரும்புதூர் தாலுகாவில் உள்ள சிறுமாத்தூர் கிராமத்திற்கு மாற்றிட அனுமதிக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையும் ஒரே மாதத்தில் ஏற்று 10-7-2002 அன்று அந்த இடத்தை மாற்றிக்கொள்வதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது. (அரசாணை எண்.131).

தொடர்ந்து அந்த நிறுவனம் 26-9-2002 அன்று அரசுக்கு எழுதிய கடிதத்தில் தங்கள் நிறுவனத்தின் பெயரை "மிடாஸ் கோல்டன் டிஸ்டிலரீஸ்'' என்று மாற்றிக்கொண்டதாகத் தெரிவித்து, அதையும் அரசு ஏற்றுக்கொண்டது. இந்த பெயர் மாற்றம் வெளியே வந்த பிறகு, அரசாங்கம் இவ்வளவு அவசர அவசரமாக அந்த நிறுவனத்திற்கு என்ன காரணத்தால் (?) இந்த அனுமதியை வழங்கியது என்ற விவரங்கள் எல்லாம் வெளிஉலகத்திற்கு தெரிந்தது.

மதுபானங்களைத் தயாரிக்கும் இந்த ஆறு தொழிற்சாலைகளும் ஒரு ஆண்டுக்கு எவ்வளவு சரக்குகளைத் தயாரிக்கலாம் என்பது அரசினால் நிர்ணயிக்கப்படும். மோகன் புரூவரீஸ்- 42 லட்சம் பெட்டிகள், சிவா டிஸ்டிலரீஸ்- 66 லட்சம் பெட்டிகள், பாலாஜி டிஸ்டிலரீஸ்- 57 லட்சம் பெட்டிகள், எம்.பி. டிஸ்டிலரீஸ்- 30 லட்சம் பெட்டிகள், சாபிள் டிஸ்டலரீஸ்- 30 லட்சம் பெட்டிகள். ஆனால் மிடாஸ் டிஸ்டிலரீஸ் ஆண்டு ஒன்றுக்கு எத்தனை லட்சம் பெட்டிகள் வேண்டுமானாலும் தயாரிக்கலாம். அதற்கென்று ஒரு குழு அமைத்து அவர்களின் பரிந்துரைகளைப் பெற்று எவ்வளவு பெட்டிகள் தயாரிக்கலாம் என்று நிர்ணயிக்க வேண்டும். ஆனால் அ.தி.மு.க. ஆட்சி இருந்தவரை அந்த குழுவே நியமிக்கப்படவில்லை.

தி.மு.கழக அரசு இருந்தபோது ஒவ்வொரு ஆண்டும் மூலப்பொருள் வழங்குவது பற்றி அரசு ஆணை பிறப்பிக்கும். ஓராண்டு தேவைக்கான மூலப்பொருள் அதாவது ஏப்ரல் மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரை 12 மாதங்களுக்கான தேவையான மூலப்பொருள் பெற்றுக்கொள்ள அரசு ஒரே ஆணையில் அனுமதி வழங்கும். ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் இதில் பெரிய மாற்றம் செய்யப்பட்டது. ஜெயலலிதா அரசு பொறுப்பேற்ற 2001-ம் ஆண்டு, 2001-2002-ம் ஆண்டுக்கு மட்டும் ஓராண்டிற்கான அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இவர்களுடைய "மிடாஸ்'' நிறுவனம் தொடங்கப்பட்ட பிறகு, மூலப்பொருள் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்படும் ஆணை ஆண்டு ஒன்றுக்கு நான்கு தவணையாக மாற்றப்பட்டது.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மூலப்பொருள் வாங்குவதற்கான அனுமதி அரசிடமிருந்து பெற வேண்டும் என்கிறபோது, அரசின் தயவு அவர்களுக்கு எப்போதும் தேவைப்படும். தங்களுக்கு அனுசரணையாக எந்தவொரு நிறுவனமும் இல்லாவிட்டால், உடனடியாக அந்த நிறுவனத்திற்கான மூலப்பொருள் அனுமதி வழங்குவதில் அரசு தயக்கம் காட்டும். எனவே இந்த தொழிற்சாலைகள் எல்லாம் அரசின் தயவை நாடியே இருந்து வர வேண்டிய நிலைமை உண்டாயிற்று. மேலும் அந்த நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய மூலப்பொருள் வழங்குவதில் தாமதம் செய்தால், "மிடாஸ்'' நிறுவனத்தின் உற்பத்தி பெருகிவிடும் என்பதற்காகவே இந்த தந்திரம் கையாளப்பட்டு அதில் பெரும் வெற்றியும் பெற்றார்கள்.

நான் மிடாஸ் நிறுவன ஊழல் பற்றி ஏற்கனவே அறிக்கை வெளியிட்டபோது அந்த நிறுவனத்தின் உற்பத்தி, விற்பனை எவ்வளவு என்பதை ஆண்டு வாரியாக வெளியிடத் தயாரா? என்று கேட்டிருந்தேன். ஆனால் அ.தி.மு.க. அரசு அந்த விவரத்தை வெளியிடவில்லை. எனவே அந்த விவரத்தையும் அப்போதே நானே வெளியிட்டேன். ஆனால் அப்போது ஆட்சியிலே இருந்தவர்கள் நான் கூறிய எந்த தகவலையும் மறுக்கவில்லை.

மிடாஸ் நிறுவனம் 2003-2004-ம் ஆண்டில் விற்பனை செய்த சரக்குகள் 7 லட்சத்து 48 ஆயிரத்து 638 பெட்டிகள்தான். அந்த ஆண்டு வரை மதுபான சில்லரை விற்பனை தனியாரால் ஏலம் எடுத்து நடத்தப்பட்டது. சில்லரை விற்பனையை நடத்திய தனியார்; மிடாஸ் நிறுவனம் தயாரித்த சரக்குகளை அதிகமாக வாங்கிட முன்வரவில்லை. எனவே ஜெயலலிதா அரசு, அரசின் வருவாயைப் பெருக்குவதற்காக சில்லரை விற்பனையை அரசே எடுத்துக்கொண்டு செய்யப்போவதாக அறிவித்து, அமலாக்கிய போதிலும், உண்மையான எண்ணம் மிடாஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளை கட்டாயமாக டாஸ்மாக் நிறுவனத்தின் வாயிலாக சில்லரைக் கடைகளுக்கு கொண்டு போய் விற்று, அதிக லாபம் பெற்றிட வேண்டும் என்பதுதான்.

இவ்வாறு அவர்கள் செய்ததின் விளைவாக 2003-2004-ம் ஆண்டில் மிடாஸ் நிறுவனத்தின் விற்பனை 7 லட்சத்து 48 ஆயிரம் பெட்டிகள் என்பதற்கு மாறாக, 2004-2005-ம் ஆண்டில் மிடாஸ் நிறுவனத்தின் தரம் குறைந்த சரக்கு, 28 லட்சத்து 50 ஆயிரத்து 95 பெட்டிகள் என்று பெருகியது. ஒரே ஆண்டில் நான்கு மடங்கு அதிகமாக விற்பனை ஆனதற்கு காரணமே, சில்லரை விற்பனையை அரசாங்கமே எடுத்து நடத்தியதால்தான்.!

2003-2004-ம் ஆண்டு மிடாஸ் நிறுவனத்தின் விற்பனை மொத்த விற்பனையில் 4.68 சதவிகிதம் என்ற நிலையிலிருந்து 2004-2005-ம் ஆண்டு விற்பனை 14.79 சதவிகிதம் என்ற அளவிற்கு உயர்ந்தது. அடுத்து, 2005-2006ம் ஆண்டில் மிடாஸ் நிறுவனத்தின் விற்பனை எவ்வளவு தெரியுமா? 2003-2004-ல் 7 லட்சத்து 48 ஆயிரம் பெட்டிகள் என்பதற்கு மாறாக 2005-2006-ல் 51 லட்சத்து 22 ஆயிரம் பெட்டிகள். அதாவது எட்டு மடங்கு விற்பனை இரண்டே ஆண்டுகளில் அதிக மாயிற்று என்றால் அதற்கு என்ன காரணம்? சதவிகித அடிப்படையிலே சொல்ல வேண்டுமென்றால், 2003-2004-ம் ஆண்டு மொத்த விற்பனையில் 4.68 சதவிகிதமாக இருந்தது, 2005-2006-ல் 22.49 சதவிகிதம் என்ற அளவிற்கு பெருகக்கூடிய நிலையில் ஜெயலலிதா அரசு அவர்களுக்கு உதவி செய்தது.

மற்ற நிறுவனங்களோடு இதனை ஒப்பிட்டுச் சொல்ல வேண்டுமேயானால்- 2003-2004-ல் பாலாஜி டிஸ்டிலரீஸ் நிறுவனத்தின் விற்பனை 25.58 சதவிகிதம் என்பது 2005-2006-ல் 22.08 சதவிகிதமாக குறைந்தது. சிவா டிஸ்டிலரீஸ் நிறுவனத்தின் விற்பனை 2003-2004-ல் 25.34 சதவிகிதம் என்றிருந்தது, 2005-2006-ல் 19.40 சதவிகிதமாக குறைந்தது. மோகன் டிஸ்டிலரீஸ் நிறுவனத்தின் விற்பனை அது போலவே 25.43 சதவிகிதம் என்ற நிலையிலிருந்து 13.06 சதவிகிதமாக குறைந்தது. ஆனால் மிடாஸ் நிறுவனத்தின் விற்பனை மட்டும் 4.68 சதவிகிதம் என்பதிலிருந்து 22.49 சதவிகிதமாக பெருகியது என்றால், அ.தி.மு.க. அரசு இந்த நிறுவனத்திற்கு மட்டும் காட்டிய அக்கறை என்பது புரிகிறதா இல்லையா?

மிடாஸ் நிறுவனத்தின் சரக்குகளை மட்டும் இந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து ஜெயலலிதா அரசு விற்பனை செய்தது ஏன்? இதற்காகத்தான் சில்லரை வியாபாரத்தை அரசே எடுத்து நடத்தியதா? அரசின் வருவாயைப் பெருக்குவதாக கூறி, தனது பினாமி நிறுவனத்தின் விற்பனையை அதிகரித்தது எப்படிப்பட்ட குற்றம்? இதற்கு ஜெயலலிதாவின் பதில் என்ன? மதுபான வியாபாரமே ஒட்டுமொத்தமாக தமது பினாமியின் கஜானாவிற்கு போய்ச் சேரத் திட்டமிட்ட சதியா அல்லவா இது என்றெல்லாம் கடந்த கால ஆட்சியில் .கலைஞர் விடுத்த அறிக்கைக்கு அரசின் சார்பில் எந்த பதிலும் தரப்படவில்லை.

கலைஞர் அறிக்கைJuly 4 2010

Wednesday 18 April 2018

கலைஞர் மீது காவேரி விவகாரத்தில் அவதூறு பரப்பும் குள்ள நரிகளிடம் 13 கேள்விகள்*

கலைஞர் மீது காவேரி விவகாரத்தில் அவதூறு பரப்பும் குள்ள நரிகளிடம் 13 கேள்விகள்*

கேள்வி( 1)*
1956 ஆம் ஆண்டு இந்தியா மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டபோது துளு மொழி பேசும் குடகு மக்கள், தமிழகத்துடன் இணையவே தங்களின் விருப்பத்தை ஒருமித்த கருத்தாக வெளிப்படுத்தினர்.

அத்தகைய வாய்ப்பை மறுத்தது
யார்? விட்டுக் கொடுத்தவர்கள் யார் ? காங்கிரசும் முதல்வராக அப்போது தமிழகத்தை ஆண்ட பெருந்தலைவர் காமராஜரும்தானே
இதற்கு என்ன பதில்?

கேள்வி (2)*

ஹேமாவதி அணைகட்ட 1960 இல்
முடிவெடுக்கப்பட்டது. அதனை தடுக்க காமராஜரும் பக்தவச்சலமும் ஏன் முயற்சி செய்யவில்லை? 1967 வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் என்ன செய்தது?


கேள்வி(3)*

1968 இல் இந்திராவுடன் நட்பில் இருந்த காமராஜர் ஏன் ஹேமாவதி ஹேரங்கி அணை கட்டுமானத்தை தடுக்கவில்லை?

'70களில் இந்திராவுடன் நெருக்கமான இருந்த MGR,  காமராஜர் காவேரி பிரட்சினை தீர எந்த முயற்சியையும் எடுக்காமல் வாய் மூடி மௌனம் காத்தது ஏன்?

கேள்வி(4)*

காவேரி வழக்கு வாபஸ் பெறப்பட்டதோ 1972 வருட மத்தியில்தான்.  MGR கலைஞர் மேல் புகார் தந்ததோ நவம்பர் 1972 இல்தான்.
சர்க்காரியா கமிசன் அமைக்கப்பட்டதோ 1976 பிப்ரவரி மாதத்தில்தான்.

பிறகு எந்த அடிப்படையில் கலைஞர் சர்க்காரியா கமிசனுக்கு பயந்து காவேரிவழக்கை வாபஸ் பெற்றதாக சொல்கிறீர்கள் குள்ளநரிகளே?

கேள்வி(5)*

கலைஞர் அரசால் அனைத்து கட்சி கூட்டத்தின் முடிவின்படியே
வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தால் மீண்டும் வழக்குப் போடும் உரிமையை தக்க வைத்துக்கொண்டே தற்காலிகமாக  வழக்கு வாபஸ் பெறப்பட்டது எப்படி தவறாகும்?


கேள்வி(6)*

காவேரி வழக்கை வாபஸ் வாங்கினாதான் பேச்சுவார்த்தைக்கு உதவமுடியும் எனத் தெரிவித்துவிட்ட  பிரதமரின் கருத்தை கண்டுக்கொள்ளாமல் அலட்சியம் செய்ய முதலமைச்சரால் முடியுமா?

மேலும் வழக்கு போட்டாலும் தீர்ப்பு வர நீண்டகாலம் ஆகும் என்ற நிலையில் மீண்டும் பேசித்தான் பார்ப்போமே என கலைஞர் முடிவெடுத்ததில் என்ன தவறு?

 கேள்வி(7)*

ஹேமாவதி அணை கட்டப்படுவதை கலைஞர்  தடுக்க முயற்சி எடுக்கவில்லை எனும் முட்டாள்களே அதற்கு நீங்கள் தரும் ஆதாரங்கள் எங்கே?

"கர்நாடக அரசு ஹேமாவதி அணையைக் கட்டிக் கொள்வதில் தமிழக அரசுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை" என்று 6.3.1970 அன்று தமிழக பேரவையில் கருணாநிதி பேசி இருக்கிறார் என பொய் பரப்புகிறார்கள்.

அப்படி பேசியதற்கான ஆதாரத்தை கொடு. முழுமையான பேச்சு விபரத்தை கொடு.
ஒரே ஒரு வரிதான் பேசினாரா?  பேச்சை முழுவதுமாக வெளியிட வேண்டியதுதானே. வெட்டி ஒட்டி ஏன் சொல்லுற?

உன்னால் தரமுடியாது என்பதே உண்மை.


கர்நாடக அரசு 1968 ஆம் ஆண்டு ஹேமாவதி, ஹேரங்கி அணைகளைக் கட்டத் தொடங்கிவிட்டனர்.
ஹேமாவதி அணை கட்டி முடிக்கப்பட்டது 1979 ஆம் ஆண்டுதான்.

1968லேயே அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் இருந்த கழக அரசு, தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததுடன், மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டுமென்றும் கோரியது.

மத்திய அரசு செய்த ஏற்பாட்டின்படி 19-8-1968 அன்றும் 20-8-1968 அன்றும் டெல்லியில் காவிரித் தொடர்புடைய மாநில அரசுப் பிரதிநிதிகளின் கூட்டம் நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையை மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் திரு. கே.எல்.ராவ் அவர்கள் முன்னிலை வகித்து நடத்தினார். கர்நாடக முதலமைச்சர் திரு. வீரேந்திரபட்டீல் அவர்கள் பொதுப்பணித்துறைக்கும் அமைச்சர் என்றமுறையில் கலந்துக் கொண்டார். தமிழகத்தின் பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையில் சட்ட அமைச்சர் மாதவனுடன் சென்று கலைஞர் கலந்து கொண்டார்.   முக்கியமாக 1892 மற்றும் 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தங்கள் மீறப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் வாதமாக எடுத்து வைக்கப்பட்டது;  முடிவு எதுவும் தோன்றவில்லை.

பின்னர் 1969-ல் அண்ணா அவர்கள் மறைந்த பிறகு 1970 பிப்ரவரி 9 ஆம் நாள், மீண்டும் கே.எல்.ராவ் அவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

3.3.1970 அன்று கலைஞர் சட்டமன்றத்தில் ஒரு அறிக்கை சமர்பிக்கிறார்
அந்த அறிக்கையில் ஹேமாவதி அணை கட்டுவதால் தமிழகம் எதிர்கொள்ள போகும் ஆபத்துகளை விளக்கி அதை தடுக்க தனது அரசு எல்லாவித முயற்களையும் எடுத்து வருவதை விளக்குகிறார்.
அனைத்து கட்சிகளின் அரிய ஆலோசனைகளின் படி கலைஞரும் தொழில்துறை அமைச்சரும் டெல்லிக்குச் சென்று பிரதமரை சந்தித்து ஹேமாவதி அணை கட்டுவதை தடுக்க இந்த
பிரட்சினையில் தலையிட வேண்டியதையும் பிரதமர் நடவடிக்கை எடுப்பதாக சொன்னதையும் விவரிக்கிறார்.

மேலும் கர்நாடக அரசு Center water commission இடமோ மத்திய அரசிடமோ எந்த விதமான அனுமதியும் பெறாமல் திட்டகுழு அனுமதியும் பெறாமலேயே ஹேமாவதி அணையை கட்டி வருகிறது. ஆனால் மத்திய அரசு இதை கண்டுக்கொள்ளாமல் இருப்பது கண்டனத்துக்கு உரியது
என கலைஞர் சட்டமன்றத்தில் பதிவு செய்துள்ளார்

திரும்பத் திரும்ப நாம் வலியுறுத்தியதன் காரணமாக, 1970 ஏப்ரல் 17, மே 16, அக்டோபர் 12 மற்றும் அக்டோபர் 27 ஆகிய நாட்களில் மாநில முதலமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன; எனினும் அவை பலனளிக்கவில்லை.

இன்று அரசியல் காரணங்களுக்காக மோடி அரசு வஞ்சிக்கிறது.
அன்றும் அரசியல் காரணங்களுக்காக இந்திரா அரசு தமிழனை வஞ்சித்தது.

1972 ல் கலைஞர் பெறும் வெற்றி பெற்றவுடனேயே திமுகவை ஒழிக்க வேண்டும் என்பதே இந்திராவின் முக்கிய திட்டமாக இருந்தது.

**


முதன்முதலில் காவேரி நடுவர் மன்ற கோரிக்கை வைத்தது திமுகதான்.

ஹேமாவதி ஹாரங்கி அணைக்கட்டுமானத்தை நிறுத்தவும் மீண்டும் ஒப்பந்தத்தை புதுப்பிக்கவும் நடந்த பேச்சுவார்த்தை பலனளிக்காததால் 1971 ஜூலை 8-ஆம் நாள் காவிரிப் பிரச்சினைக்கு நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமென்று திமுக  அரசு சட்டப்பேரவையில் ஒரு தீர்மானத்தை  நிறைவேற்றியது.


 தொடர்ந்து 1971 ஆகஸ்ட் திங்களில் நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசிற்கு ஆணை வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.


கர்நாடக அரசு, புதிய அணை கட்டும் வேலைகளைத் தொடராமல் தடுக்கவும், நடுவர் மன்றத்திற்கு பிரச்சினையை விடவும் தஞ்சை விவசாயிகள் சார்பில் முரசொலி மாறன் ஒரு வழக்கு தொடுத்தார்.


 21-5-1972 அன்று தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் இந்திரா காந்தி அவர்கள், வழக்கு இல்லாமலே பேச்சுவார்த்தை மூலமே சுமுகத் தீர்வு காணலாம் என்று கூறினார்கள். அப்போது கூட கலைஞர் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்காமல், அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தைத் தலைமைச் செயலகத்திலே கூட்டி, கலந்துப்பேசி, அந்த வழக்கைத் தமிழக அரசு திரும்பப் பெறுவது என்று தீர்மானித்து - அப்படித் திரும்பப் பெறுகின்ற நேரத்திலே கூட மீண்டும் வழக்கு போட வழி வைத்துக் கொண்டுதான் அந்த வழக்கை, தற்காலிகமாகத் திரும்பப் பெறுவதென முடிவெடுக்கப்பட்டது.


 அதன் பிறகு 29-5-72, 29-4-73, 9-10-73 ஆகிய நாட்களில் மத்திய பாசன அமைச்சர்  கே.எல்.ராவ் முன்னிலையிலும்,  27-6-74 அன்று கே.சி.பந்த் முன்னிலையிலும், 29-11-1974 மற்றும் 15-2-75 ஆகிய நாட்களில் பாபு ஜெகஜீவன்ராம் முன்னிலையிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. பேச்சுவார்த்தைகள் பலனளிக்காததால் அனைத்துக் கட்சிகளைக் கலந்தாலோசித்து, தமிழக அரசு மத்திய அரசினை நடுவர் மன்றம் அமைக்குமாறு கோரி 1975 மே திங்களில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.


1976 ஜனவரியில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.


கேள்வி (8)*

வழக்கை வாபஸ் வாங்கி பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தபோது திமுக ஆட்சி கலைக்கப்பட்டிருந்தது.
1977 இல் ஆட்சிக்கு வந்த MGR ஏன் மீண்டும் அந்த வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை?

கேள்வி(9)

1977-1987 வரை ஆட்சி செய்த MGR காவேரி பிரட்சினையை தீர்க்க எந்த முயற்சியும் செய்யாதது ஏன்?

காவேரி தொடர்பாக தஞ்சை விவசாயிகள் 1983 இல் போட்ட வழக்கில் MGR அரசு 1986 இல்தானே தன்னை இணைத்துக்கொண்டது. 3 ஆண்டு காலதாமதம் ஏன்?

கேள்வி(10)

1924 ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது என எந்த நீதிமன்றம் சொல்லியிருக்கிறது?
உச்சநீதிமன்றமே தனது இறுதி தீர்ப்பில் 1924 ஒப்பம் செல்லும் எனத்தெரிவித்திருந்தும் எந்த அடிப்படையில் கலைஞரால் ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது என்கிறீர்கள்?
காலாவதியான ஒப்பந்தத்தை வைத்து நீதிமன்றம் இறுதி தீர்ப்பை எப்படி வழங்க முடியும்?

கேள்வி எண் (11)
காவேரி நடுவர் மன்ற தீர்ப்பு 2007ல் வந்தவுடன் அதனை எதிர்த்தவர் ஜெயலலிதா.
கேரளா, கர்நாடாகா, பாண்டிச்சேரி அரசுகள் அதனை எதிர்த்து உடனேயே உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துவிட்டது. தீர்ப்பையே எதிர்த்து
மேல்முறையீடு வழக்கு நிலுவையில் இருக்கும் போது
அதனை எப்படி மத்தியஅரசால் அரசிதழில் வெளியிடமுடியும்?
கேள்வி எண்(12)
2013 இல் காவேரியில் தண்ணீர் திறக்க கோரி மட்டுமே ஜெயலலிதா வழக்கு போட்டார். அப்போது நீதிபதி தானாக முன்வந்து காவேரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட மனுத்தாக்கல் செய்யும்படி தெரிவித்தார். தமிழக அரசும் மனுத்தாக்கல் செய்தது. அதன் பிறகே வழக்கு நிலுவையில் இருப்பினும் பரவாயில்லை என தெரிவித்து  நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
பிறகு எந்த அடிப்படையில் காவேரி பிரட்சினையில் துரும்பைக் கூட அசைக்காத ஜெயலலிதாவிற்கு காவேரிதாய் பட்டம் தந்தீர்கள்?
கேள்வி எண் (13)
காவேரி நடுவர் மன்ற தீர்ப்பு கெசட்டில் வெளிவந்தபின்னர் 2014-16 காலத்தில்
மோடியுடன் நெருக்கமா இருந்த ஜெயலலிதாவால் காவேரி பிரட்சினையில் எதுவும் செய்ய முடியாதது ஏன்?

By A.PARIMALAM (THE NEWS MAN)

Monday 9 April 2018

15 வது நிதிக்குழு தொடர்பாக தமிழக அரசியல்வாதிகளின் கள்ள மௌனம்

15 வது நிதிக்குழு தொடர்பாக தமிழக அரசியல்வாதிகளின் கள்ள மௌனம் அயோக்கியத்தனமானது. திரு.ஸ்டாலினை தவிர மற்றவர்கள் கண்டுக்கொள்ளாதது ஏன்?
ஏனென்றால் மக்களுக்கு இதெல்லாம் புரியாத விசயம்.இதனால் ஓட்டு இழப்பு ஏதும் வராது. அதனால் கள்ள மௌம்.
தமிழகத்தில் ஒரு தமிழன் மத்திய அரசுக்கு செலுத்தும் வரி 18500 ரூ
மத்திய அரசிடம் திரும்ப பெறுவது 6200ரூ மட்டுமே
அதே சமயம் பிகார் செலுத்துவது 7200ரூ பெறுவதோ 30400ரூ.
உபி செலுத்துவது 7000ரூ
திரும்ப பெறுவது 11200ரூ.
ராஜஸ்தான் செலுத்துவது 6600ரூ
திரும்ப பெறுவது7800ரூ.
13 வது நிதிக்குழு வரை மற்ற அம்சங்களுடன் 1971 மக்கள்தொகையை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு மத்திய அரசு
மாநிலங்களுக்கு பங்கு பிரித்தது
ஆனால் 14வது நிதிக்குழுவில்
1971 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 17.5% என்றும்
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 10% என்றும் எடுத்துக் கொண்டதால் தமிழகத்திற்கு மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய பங்குத்தொகையில்
19% குறைந்தது.
அதாவது 13 வது நிதிக்குழு வருவாயுடன் 14 வது நிதிக்குழு வருவாயை ஒப்பிட்டால் சுமார் 6000 கோடி தமிழகத்திற்கு நஷ்டம்.
இந்த லெட்சணத்தில் 15 வது நிதிக்குழுவில் 2011 சென்சஸ் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படப் போவதாக தகவல் வெளியாகவுள்ளது.
அது நடந்தால் 13 வது நிதிக்குழு வருவாயுடன் 15 வது நிதிக்குழுவை ஒப்பிடும் போது
தமிழகம் சுமார் 70% நிதிஇழப்பை சந்திக்க நேரிடும்
எந்தெந்த அடிப்படையில் மாநில அரசுகளுக்கு நிதி பிரித்து வழங்கப்படுகிறது என்ற விபரம் கீழே.
                    commission
Factor              13th                   14th  
Population
(1971)                25%                 17.5%
Population
(2011)                  0%                      10%
Fiscal
Discipline.          17.5%                    0%
Income
Distance            47.5%                  50%
Area.                   10%                     15%
Forest Cover.    0%                       7.5%
Total.                 100%                  100%
வரும் 15 வது நிதிக்குழுவில் 14 வது நிதிக்குழுவில் சொல்லப்பட்டுள்ள மற்ற அம்சங்களை மாற்றாமல் 1971 சென்சஸ் கணக்கை புறந்தள்ளிவிட்டு 2011 சென்சஸை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டால் தமிழகம் சந்திக்கப்போகும் நிதிஇழப்பு இப்போதைய 19% லிருந்து 70% மாக அதிகரிக்கும்.
2020 ஏப்ரலில்தானே அறிமுகமாகும் என்று இப்போது தூங்கினால் தமிழகத்தை காப்பாற்ற யாராலும் முடியாது.

By A.Parimalam ( THE NEWS MAN

Monday 2 April 2018

history of Katchatheevu?

What is the history of Katchatheevu?

This island seems to have been under the Kings of Ramanathapuram in modern Tamil Nadu. During the British era, the island was administered by both the sides. Sri Lanka claimed it mainly because of its strategic location; and this issue was discussed many a times before 1974.

In what circumstances, this island was given to Sri Lanka?

After the 1974 nuclear tests, India was under enormous international pressure and there was a need to garner support from neighbours. Sri Lanka was to host the NAM summit in 1976 and it was likely that president of UNGA may be from Sri Lanka. Thus, Indira Gandhi quickly signed an agreement with Sri Lanka and ceded the territory without any discussion with Indian people or parliament mainly to garner support from Sri Lanka.

In the year 1973 then indian prime minister indira gandhi travelled to sri lanka and also in the year 1974 sri lankan president sirimavo
bandaranaike came to india. And the agreement was signed between both of them. Katchatheevu was ceded to Sri Lanka without discussing with tamilnadu by Indira Gandhi in the year 1974 december 28.While gifting away the land, Indira Gandhi pointed out that Katchatheevu Island is being ceded not on the basis of records but for other political reasons.

the Emergency was in effect from 25 June 1975 until its withdrawal on 21 March 1977

What are the problems created by this transfer?

The dispute relating to the status of this island was settled in 1974 by an agreement and both countries examined the entire question from all angles and took into account historical evidence and legal aspects. This position was reiterated in the 1976 agreement.

This 1974 agreement had secured the rights of Indian fishermen only to dry their nets and use Church for religious observance. But then in 1976, delimitation of International Maritime Boundary Line (IMBL) was agreed upon as required by the UNCLOS. With this, Indian fishermen do not have any right to even engage in drying of nets and use of Church because 1976 agreement superseded 1974 agreement.

How the cessation of Katchatheevu is claimed to be illegal in India?

The Government of India maintains in courts that the settlement of the island was legal and final, though it was not ratified by Indian Parliament. However, in the Berubari Union case (1960), the Supreme Court had already ruled that cessation of Indian territory to other country had to be ratified by the parliament via a constitution amendment act. Thus, this cessation was unconstitutional and illegal because constitutional process was not followed.

What is Sri Lanka’s stand?

Sri Lankans also claim that they gave an island called “Wedgebank” to India in exchange.

1974 இல் தமிழகத்தின் எதிர்கட்சிகள் கலைஞரோடு சேர்த்து ஒற்றுமையாக இந்திராவை எதிர்த்து போராடியிருந்தால் 1976 இல் கட்சத்தீவு ஒப்படைக்கப்பட்டதை தடுத்து இருக்கலாம்.

அன்று ஒப்பந்தத்தை எதிர்த்த கலைஞரை வசைபாடிய எதிர்கட்சிகள்
அன்று இந்திராவுக்கு பயந்து கழிப்பறையில் ஒளிந்து கொண்ட எதிர்கட்சிக்கட்சிகள்
இன்று கலைஞரை குறை சொல்கின்றனர்

கட்சத்தீவு ஒப்படைக்கப்பட்ட போது திமுகவுடன் சேர்ந்து இந்திராவை எதிர்த்து கருத்து தெரிவிக்காத எவனுக்கும் கலைஞரை கேள்வி கேட்க யோக்கியதை இல்லை.

Sunday 1 April 2018

மக்கள் எதிர்ப்பை மீறி பிஜேபியின் மார்ச் மாத மற்றும் கடந்தகால அறிவிப்புகள்

#வானதியின்_பொய்கள்

திரு ஸ்டாலின் 2011 இல்
Great Eastern Energy Corporation Limited (GEECL) என்ற கம்பெனிக்கு மட்டும் மன்னார்குடியில் மீத்தேன் ஆய்வுக்கு அனுமதித்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டார்.
அந்த ஒப்பந்தத்தில் மக்களிடம் கருத்து கேட்கப்பட வேண்டும் என்பது முக்கியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் எதிர்த்ததால் தற்போது அந்த திட்டமே கைவிடப்பட்டுவிட்டது. அந்த திட்டம் தவிர வேறு எந்த திட்டத்திற்கும் திரு.ஸ்டாலின் கையொப்பமிடவில்லை.

ஆனா வழக்கம் போல ஒட்டுமொத்த ஹைடிரோ கார்ப்பனுக்கும் திமுக அனுமதித்தது போல் பொய் பரப்புகிறர்.

1959 முதல் 105 ஆயில் கிணறுகள் ONGCயால் தோண்டப்பட்டுள்ளது

தமிழகத்தில் Oil  and natural gas எடுக்கும் பணி 1986 முதல் நரிமனம் , களப்பாள் ஆகிய இடங்களில் தொடங்கி 35 இடங்களில் நடந்து வருகிறது.


2014-15 க்கு மட்டுமே, தமிழக அரசுக்கு , ONGC மீத்தேன் எடுத்ததற்காக 300 கோடி ராயல்டி கொடுத்ததாவது  தெரியுமா?

இன்றைக்கும் தினமும் காவேரி படுகையில்3.8 மில்லியன் கியூபிக் மீட்டர் மீத்தேனும் 700 டன் ஆயிலும் ONGC யால் எடுக்கப்படுவதாவது தெரியுமா ?

இதெற்கெல்லாம் திமுகவா காரணம்?

கடந்தகாலங்களில் மீத்தேன் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு கிடையாது.
தற்போது மக்கள் எதிர்க்கிறார்கள்.

ஆனா BJP யோ கடந்தகால அனுமதிகளை காட்டி இன்று தமிழக மக்களுக்கு தான் செய்யும்
துரோகங்களை மூடிமறைக்க முயற்சிக்கிறது.

ஸ்டெர்லைட் தொடங்கப்பட்டபோது எந்த அளவிற்கு சுற்று சூழல் பாதிக்கும் என்பதை மக்களோ அரசோ உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.

இன்று பாதிக்கப்பட்டோர் போராடுகிறார்கள். அதனால் ஸ்டாலின் உட்பட அனைவரும் ஸ்டெரிலைட்டை மூட ஆதரவு தருகிறார்கள். அதை தவறு என்று எப்படி சொல்லமுடியும்?

எந்த கட்சி எந்த திட்டம் கொண்டு வந்திருந்தாலும் மக்களுக்கு பாதிப்பு என்று கருதினால் தாங்கள் கொண்டு வந்த அனுமதித்த திட்டத்தை கைவிடுவதே ஒரு நல்ல கட்சிக்கு அழகு.

ஆனால் மத்திய அரசோ NEET ஐ தமிழக மக்கள் மீது திணித்தது போல மக்கள் விரும்பாத திட்டங்களை மேலும் மேலும் திணிக்கிறது.

#இதைத்தான்_திமுக_எதிர்க்கிறது

மக்கள் எதிர்ப்பை மீறி
பிஜேபியின் மார்ச் மாத மற்றும் கடந்தகால
அறிவிப்புகள்

1)தனியார் நிறுவனங்கள் மூலம் தமிழகத்தில் புதிதாக 24 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க BJP அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது.

2)நியூட்ரினோ திட்டத்திற்கு மார்ச் 2018 இல் பிஜேபி Ministry of Environment and Forests (MoEF) தானே environmental clearance வழங்கியிருக்கு.
மக்கள் எதிர்ப்பை மீறி
ஏன் வழங்கினீர்கள்?

3) தமிழகத்தில் 5 இடங்களில் பெட்ரோலிய மண்டலம்*
நெல்லை, எண்ணூர், சென்னை அருகே வல்லூர், ஆசனூர் மற்றும் தருமபுரி ஆகிய பகுதிகளில் பெட்ரோலிய எண்ணெய் மண்டலம் அமைக்க பரிந்துறை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

4)நெடுவாசல் திட்டம் தொடங்கப்பட்டு பிறகு கட்டுப்படியாகாது என காங்கிரஸ் அரசால் கைவிடப்பட்ட ஒன்று.

ஆனால் தற்போதைய BJP ஆட்சியில்தான் 2015 செப்டம்பரில்தான் நெடுவாசல் உட்பட 69 இடங்களில் Discovered Small Fields Policy திட்டத்தின் கீழ் ஹைடிரோ கார்பன் எடுக்க மத்திய பிஜேபி மந்திரிசபை முடிவெடுத்தது.