Saturday 23 February 2019

கொங்கு வேளாளர் சமுதாயத்தை தலைநிமிர செய்த கலைஞரை மறந்த கொங்கு வேளாளர்கள்

கொங்கு வேளாளர் சமுதாயத்தை தலைநிமிர செய்த
கலைஞரை மறந்த கொங்கு வேளாளர்கள்



1975ல் முதல்வர் கலைஞரின் அறிவிப்புதான் இருண்டு கிடந்த கொங்கு வேளாளர் சமுதாயத்திற்கு விடிவெள்ளி ஆனது. அனைத்து உட்பிரிவுகளையும் உள்ளடங்கிய கொங்கு வேளாளர் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து தெளிவான அரசாணையாக 16.05.1975 அன்று (பு.ழ.ஆ.ள. ழே 371.னவ.16.05.1975) கலைஞரின் தமிழக அரசு வெளியிட்டது.
அதன் பிறகுதான் கொங்கு வெள்ளாளர் இனத்தவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகைகள், மருத்துவம், பொறியியல் போன்ற கல்லூரிகளில் இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடும் கிடைக்க ஆரம்பித்தது. கொங்கு வேளாளர் சமுதாயம் புதிய அத்தியாயம் காணத் தொடங்கியது. ஒரு சமுதாயம் அடுத்த நிலைக்கு முன்னேறி இருக்கிறது. துரதிர்ஷடவசமாக இந்தப் பகுதி மக்கள் வாக்களிக்காமல் தான் கலைஞர் தொடர்ந்து ஆட்சியை பறிகொடுத்தார் என்பதுவும் மிகவும் வருத்தத்திற்குரியது.
கொங்கு வேளாளர் மட்டுமல்ல, தமிழகத்தின் பிற சாதி மக்களுக்கும் இட ஒதுக்கீட்டில் பிரதிநிதித்துவம் கிடைக்கச் செய்தவர் கலைஞர். ஒரு மாநில வளர்ச்சிக்கு சமூகநீதி எவ்வளவு முக்கியமானது என்பதை 60-70 களிலேயே உணர்ந்து செயல்பட்டவர் கலைஞர்
1) கொங்கு பகுதியில் வேளாண்மையை செழிக்கச் செய்ய பரம்பிக்குளம்-ஆழியாறு, வட்டமலைக் கரை, நல்லதங்காள் ஓடை திட்டங்களின் விரிவாக்கங்களை  கலைஞர் நிறைவேற்றினார்
 2) 1967 – 76 ஆட்சியின் காலக்கட்டத்தில் கொங்கு மண்டலத்தில், கோவையில் ஒரு சில பெரிய தனியார் தொழில் நிறுவனங்கள் மட்டுமே உண்டு.
பின்னலாடையினால் திருப்பூர் தொழில் நகரமானது பின்னாளில் தான்.
ஒட்டு மொத்த கொங்கு மண்டலமே விவசாயத்தை மட்டுமே நம்பி இருந்தது. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு இல்லை. சென்னைக்கோ, வெளி மாநிலங்களுக்கோ செல்ல வேண்டிய நிலைதான்.
கொங்கு பகுதியில் அதிக மக்கள் தொகை கொண்ட கவுண்டர்கள் முற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்தனர்.
1955 – ஆம் ஆண்டு திரு. காகா கலில்கார் தலைமையில் அமைக்கப்பட்ட முதல் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு கமிசன் அறிக்கையில் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் வகுப்பினர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப் பரிந்துரை செய்திருந்தது.
தமிழ்நாட்டில் மூன்று பெரிய சமுதாயமான கொங்கு வேளாளர், வன்னியர், முக்குலத்தோர், ஆகியோர் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் சமுதாயமாகும்.
அதில் வன்னியர், முக்குலத்தோர் வகுப்பினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தனர். ஆனால் கொங்கு வேளாளரை மட்டும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவில்லை.
அதனை தொடர்ந்து 1970 ஆம் ஆண்டு வெள்ளக்கோவில் சட்டமன்ற உறுப்பினரான மிசா சாமிநாதன், தன்னுடன் பலரையும் சேர்ந்துக் கொண்டு அந்தக் கோரிக்கையை முன் வைக்கிறார்.
1975ம் ஆண்டு கலைஞர், கொங்கு வெள்ளாளர் சமுதாயத்தை, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது சமுதாய வரலாற்றில் யாரும் மறக்க முடியாத நிகழ்வாகும்.
3)   தேர்வாணையக் குழுவில் (TNPSC) தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள் பதவி இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் மிகப் பெரிய சமுதாயமான கொங்கு வெள்ளாளருக்கு 1929 ஆம் வருடத்தில் இருந்து 1974 ஆம் வருடம் வரை ஒரு முறை கூட ஒரு உறுப்பினர் பதவி தரப்படவில்லை.
அந்த கோரிக்கைக்காக முதல்வர் கலைஞர் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அன்றைய முதல்வர் கலைஞர் அக்கோரிக்கையை மனமார ஏற்று கொண்டார்.
அதன்படி தமிழ்நாடு தேர்வாணை குழு உறுப்பினராக கொங்கு வேளாள சமுதாயத்தைச் சேர்ந்த திரு ஏ. பழனிசாமி அவர்களையே கலைஞர் அரசு நியமித்தது. அவர் 26 .06 .1974 அன்று அப்பதவியை ஏற்றுக் கொண்டார். கொங்கு வெள்ளாளர் சமுதாயத்தின் 44 ஆண்டுகால கனவு நினைவாகியது. அதன் பிறகுதான் குரூப்-1 தேர்வில் அச்சமுதாயத்தினர் தேர்வாகத் தொடங்கினார்கள்.
கார்த்திகேய சிவசேனாபதி
By Antony Parimalam

Tuesday 19 February 2019

கலைஞரால் தமிழக பெண்கள் அடைந்த நண்மைகள் எண்ணில் அடங்காது. 

கலைஞரால் தமிழக பெண்கள் அடைந்த நண்மைகள் எண்ணில் அடங்காது.

ஆனால் அவர்கள் அதனை அறிவார்களா என்பதே மிகப்பெரிய கேள்வி

(1)

ஆட்சிக்கு வரும் முன்பே கலைஞரது கதைகளும், கட்டுரைகளும், கவிதைகளும் மேடை முழக்கங்களும் பெண்ணுரிமையை பெரிதும் பேசியதை நாம் அறிவோம்

 (2)
விதவை என்ற சொல்லை மாற்றி கைம்பெண் என்று அழைக்கத் தொடங்கியவர் கலைஞர்.

ஆணைப் போலவே பெண்ணுக்கும் அனைத்திலும் சம உரிமை உண்டு என்பதை உணர்த்திய அவர் பெண்களின் மறுமணத்திற்கு பெரிதும் ஆதரவளித்தார்


(3)
வரதட்சணை நோய்க்கு மருந்திடும் வகையிலும் அதே வேளையில் பெண்கள் குறைந்த பட்ச கல்வியாவது கற்க வேண்டும் என்ற நோக்கிலும் 8 -ம் வகுப்பு படித்த பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டமொன்றை ஏற்படுத்தினார்.


(4)
கலைஞரது ஆட்சிக் காலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டன


(5)
சொத்துரிமையில் ஆணுக்கு நிகரான சம பங்குரிமை பெண்களுக்கு உண்டு என்பதை சொத்துரிமைச் சட்டம் மூலம் நிலை நாட்டினார் கலைஞர்


(6)
 உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவிகித ஒதுக்கீடு பெண்களுக்கு என்பதை உறுதி செய்தார்.


(7)
 தாய்மை அடைந்த பெண்களுக்கு உதவிட நிதி உதவியும் வழங்கினார்.


(8)
பெண் குழந்தை பிறப்பு முதல் இறுதிக்காலம் வரை சமூகப் பாதுகாப்புடன் வாழ வழிவகை செய்தவர் கலைஞர்.


(9)
 மகளிருக்கான இலவச பட்டப்படிப்பு திட்டம் மூலம் பெண் கல்வியை மேம்படுத்தினார்.


(10)
 கல்வியை மேம்படச் செய்ததோடு மட்டுமல்லாது அரசுப் பணியில் அவர்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடும் அளித்தார்.


(11)
 'பெண்கள் ஆணையதிற்கு சட்ட அந்தஸ்து வழங்கப்பட்டு அது செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டதும் கலைஞரால்தான்


(12)
பெண்கள் மீதான வன்முறைகளை களைவதற்கும் குறைப்பதற்குமான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது.

(13)
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு தனிப் பள்ளிகளும் விடுதிகளும் அரசால் நடத்தப்படுவது போல இஸ்லாமிய பெண் குழந்தைகளுக்கு விடுதி வசதி செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றியவர் கலைஞர்

 (14)
கலைஞர் முதல்வராக இருந்தபோதுதான் இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான் பெண்களுக்கான சொத்துரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது.

(15)
திருமண நிதி உதவி திட்டத்தில் நிதியை உயர்த்தி வழங்கினார்


(16)
திருநங்கைகளுக்கு நல வாரியம் அமைக்கப்பட்டது. அவர்களுக்கான அங்கீகாரத்தை உறுதி செய்தார்


(17)
பேரவையில்  டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அவர்களின் படத்தை புதிய சட்டப் பேரவையில் திறந்தார்.


 (18)
பெண்கள் மட்டுமே கல்வி பயிலும் அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களாகவும் பெண்களே இருக்கவேண்டும் என்பதை உறுதிப் படுத்தியவர் கலைஞர்

(19)
 கலைஞர்தான் அரசுப் பணியில் 33 % பெண்களுக்கான இட ஒதுக்கீடாக கொண்டுவந்தார்.


 (20)
இன்று பெண்கள் குடும்பத்தில் தங்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என்று உரிமையோடு கேட்பதற்கு காரணமே கலைஞர்தான்.

சொத்து குறித்து பேசும் பெண்கள் இன்று சொத்துரிமை சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டை குறிப்பிட்டே தங்களது வாதங்களையும் முன் வைக்கின்றனர்.


(21)
கலப்பு திருமணம் செய்யும் தம்பதியரில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவரின் பிரிவுக்கான முன்னுரிமை வழங்கப்பட காரணம் கலைஞரே