Monday 23 March 2020

கலைஞரே சாதனைகளின் தலைவன் by நித்யா






கலைஞரே சாதனைகளின் தலைவன்

“நவீன தமிழகத்தை செதுக்கிய சிற்பி” – திராவிட பேரரசன் #கலைஞர் 💥
கலைஞர் அப்படி என்ன கிழித்து விட்டார் என மனசாட்சியின்றி கேட்கும் மடையவர்களுக்கு இந்த மலைப்போன்ற பட்டியலை காணிக்கை ஆக்குகிறேன்
உருவாக்கம் :- @nithya_shre





01/01/2000
வள்ளுவன் தன்னை வானுயர செதுக்கித் தந்த #கலைஞர்
அறத்துப்பால் அதிகாரத்தை குறிக்கும் வகையில் 48 அடி பீடமும், பொருட்பால், இன்பத்துப்பால் குறிக்கும் வகையில் 95 அடி சிலையும் நிறுவப்பட்டது
3,681 கருங்கற்கலால் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது




15/09/2010
தெற்காசியாவின் மிகப்பெரிய நூலகம் “அண்ணா நூற்றாண்டு நூலகம்”
3.75 லட்சம் சதுரஅடி பரப்பில், 8 தளங்களை கொண்டது
யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடன் (World Digital Library) இணைக்கப்பட்டுள்ளது
பார்வையற்றோர் பிரிவில் 500+ பிரைய்லி புத்தகங்கள்




“சென்னை #அண்ணா_மேம்பாலம்”
ஜூலை 1, 1973
தமிழகத்தில் கட்டப்பட்ட முதல் மேம்பாலம், அன்றைய இந்தியாவின் முதல் மிக நீண்ட மேம்பாலம் இதுவே.





நவம்பர் 13, 1973
திருநெல்வேலி “திருவள்ளுவர் #இரட்டை_மேம்பாலம்”
*ஆசியாவிலேயே ரயில்வே துறை இருப்புப்பாதைக்கு மேல் கட்டப்பட்ட முதல் ஈரடுக்கு மேம்பாலம்
*இந்தியாவின் முதல் ஈரடுக்கு மேம்பாலம் (700 மீட்டர் நீளம்)
*குறள் போன்று இரண்டு அடுக்கு திருவள்ளுவர் பெயர்




ஏப்ரல் 17, 1973
“#பூம்புகார் சுற்றுலா நகரம்” சிலப்பதிகார கலைக் கூடம்.
இந்தியாவிலுள்ள ஒரே கடலடி அருங்காட்சியகம் “பூம்புகார் #கடலடி அருங்காட்சியகம்”
பழந்தமிழர் துறைமுகமான காவேரி பூம்பட்டிணத்தின் 7 தெருக்களை நினைவுகூறும் வகையில் 7 அடுக்கு கோபுரம் அமைப்பு.




“தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம்”
இந்தியாவில் முதல் சட்ட பல்கலைக் கழகத்தை உருவாக்கியவர் #கலைஞர்
(நவம்பர் 14, 1996)
இந்தியாவில் முதன்முதலில் ஒரு பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் #அம்பேத்கர் பெயரை சூட்டியவரும் #கலைஞரே




ஆசியாவின் மிகப்பெரிய தேர் #திருவாரூர்_ஆழித்தேர் 96அடி , 360டன்
“ஏரோட்டும் உழவரெல்லாம் ஏங்கி
தவிக்கையிலே உனக்கு தேரோட்டம்
தேவையா தியாகேசா” என்ற அதே கலைஞர்தான்,1948லிருந்து ஓடாமல் நின்ற தேரை பழுது பார்த்து டிஸ்க் பிரேக் வசதிகள் செய்து 1970ல் ஓடச்செய்தார்




இந்தியாவின் மிகப்பெரிய #கடல்நீரை #குடிநீராக்கும் #திட்டம் சென்னை மீஞ்சூரில் கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது (ஜூலை 30, 2010)
இந்த திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 10 கோடி லிட்டர் குடிநீர் சென்னை நகர மக்களுக்கு விநியோகிக்கலாம். 20 லட்சம் மக்கள் பயன் பெற.




குளித்தலை – முசிறி “தந்தை பெரியார் காவேரி பாலம்” கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்டது.(ஆகஸ்ட் 28, 1971)
ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தமிழகத்தின் மிக நீண்ட பாலம் (1450 மீட்டர் நீளம்)



:)

Friday 20 March 2020

நீதிக்கட்சியும் கலைஞரும் இந்துக்களுக்கு செய்த எண்ணற்ற பணிகள் தெரியுமா? கோயில் வருமானத்தில் கருணை இல்லங்களையும், மறுவாழ்வு இல்லங்களையும் அமைத்த கலைஞரா  இந்துக்களின் எதிரி?

நீதிக்கட்சியும் கலைஞரும் இந்துக்களுக்கு செய்த எண்ணற்ற பணிகள் தெரியுமா?
கோயில் வருமானத்தில் கருணை இல்லங்களையும், மறுவாழ்வு இல்லங்களையும் அமைத்த கலைஞரா  இந்துக்களின் எதிரி?
தமிழகக் கோயில்களின் நிர்வாகங்கள் எல்லாம் காலம்காலமாகப் பெரும் பணக்காரர்கள், பண்ணையார்களின் வசமே இருந்தன. அவர்களிடமிருந்து கையகப்படுத்துவதற்காக, சென்னை மாகாணத்தில் ஆட்சியில் இருந்த நீதிக்கட்சி, 1922-ம் ஆண்டு, இந்து அறநிலையச் சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது.
அது 1925-ம் ஆண்டு அமலுக்கு வந்ததையடுத்து, கோயில்கள் அரசு நிர்வாகத்துக்கு மாறின. 1927-ம் ஆண்டு இந்து சமய அறநிலைய வாரியம் அமைக்கப்பட்டது. 1951-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை உருவானது. நீதிமன்ற வழிகாட்டுதலை அடுத்து 1959-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி தமிழக அரசின் ஓர் அங்கமாக இந்து சமய அறநிலையத்துறை மாறியது. 
திருக்கோயில்களை முறைப்படுத்தி, அவற்றை நிர்வகிப்பதற்கென தனி அமைச்சகத்தை உருவாக்கியவர் கலைஞர்.
1971-ம் ஆண்டு முதன்முதலாக அறநிலையத்துறை அமைச்சராக எம்.கண்ணப்பனை நியமித்தார்.
கலைஞரின் முதல் ஆட்சிக்காலத்தில், திருக்கோயில் வருமானங்களில் குழந்தைகளுக்கான கருணை இல்லங்கள், பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லங்களை அமைத்தார். 
தந்தை பெரியார் இருந்தபோதே பரம்பரை அர்ச்சகர் முறையை ஒழித்து தகுதி அடிப்படையில், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று (2.12.1970) சட்டம் இயற்றினார் கலைஞர்.
உடனே சில அமைப்பினர்  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்தச் சட்டத்தை நிறுத்தினார்கள்.
36 ஆண்டுகள் கழித்து, `அனைத்துச் சாதியினரும் தமிழ்நாட்டிலுள்ள இந்து சமயத் திருக்கோயில்களில் அர்ச்சகர் ஆகலாம்' என்று திமுக அரசு முடிவுசெய்து அவசரச் சட்டம் ஒன்றை, 12.8.2006 அன்று சட்டப் பேரவையில் கொண்டுவந்தது.
அதன்படி சைவ, வைணவ ஆகமப் பாடங்களில் ஓராண்டு பட்டயம் பெற்ற 207 பேர் அர்ச்சகர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
ஆனால், இன்றைக்கும் அது நடைமுறைப்படுத்தப்படாமல் சட்டச் சிக்கலில் இருக்கிறது. 
திருக்கோயில்கள் மற்றும் திருமடங்களுக்குச் சொந்தமாக சுமார் ஐந்து லட்சம் ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன. இதில் பெரும்பாலான நிலங்கள் கலைஞர் ஆட்சிக் காலத்தில் மீட்கப்பட்டவை.
2006-2008 காலகட்டத்தில் மட்டுமே கருணாநிதி அரசின் சார்பில் 2,190 திருக்கோயில்களில் திருப்பணி செய்யப்பட்டு, குட முழுக்கு விழாக்கள் நடைபெற்றன.
2006-11-ம் ஆண்டு வரையான 5 ஆண்டுகாலத்தில் மொத்தமாக 5,000 க்கும் மேற்பட்ட கோயில்களுக்குத் திருப்பணியும் குடமுழுக்கு விழாக்களும் நடத்தப்பட்டன. 240 திருக்கோயில் தேர்கள் புதுப்பிக்கப்பட்டன. 
ஆசியாவின் பெரிய தேர்களில் ஒன்றாகப் போற்றப்படும் திருவாரூர் தியாகராஜர் கோயில் தேர் 1948-ம் ஆண்டுக்குப் பிறகு இயக்கப்படவில்லை. அதை பழுதுபார்த்து, புனரமைத்து 1970-ம் ஆண்டு மீண்டும் தேரோட்டத்தை நடத்தினார் கலைஞர்.
25 ஆண்டுகளுக்குப் பின் நடந்த இந்தத் தேரோட்டத்தில் 3 லட்சம் கிலோ எடை கொண்ட பிரமாண்ட தேர் மக்கள் வெள்ளத்துக்கு மத்தியில் நகர்ந்தது.
திருச்சி பெல் நிறுவனத்தின் ஹைட்ராலிக் பிரேக் கொண்ட, இரும்பினால் ஆன எந்திரத்தைக் கொண்டு தேர் இழுக்கப்பட்டது.
மேலும் இந்தக் கோயிலின் நீலோத்பலாம்பாள் அம்மனுக்கு ரூ.30 லட்சம் செலவில் புதிதாகச் செய்யப்பட்ட தேரின் வெள்ளோட்டம்  27-4-2008 அன்று நடைபெற்றது.
தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டுவிழா 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25, 26 ஆகிய நாள்களில் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.
2006-ம் ஆண்டு கிராமக் கோயில் பூசாரிகள் நலனுக்கென நல வாரியம் அமைக்கப்பட்டது.
இந்த வாரியத்தில் 65,000 க்கும் மேற்பட்ட கிராமப் பூசாரிகள் உறுப்பினர்களாக இருந்தனர். அந்தப் பூசாரிகளின் வாரிசுகள் திருமணத்துக்கு நிதியுதவி, மகப்பேறு நிதி, படிப்பு உதவித்தொகை, ஈமச்சடங்கு நிதி போன்றவை வழங்கப்பட்டு வந்தன.
2008-ம் ஆண்டு திருக்கோயில்களில் புனரமைப்புப் பணிகள் செய்வதற்காக ஆண்டுதோறும் அரசாங்கம் வழங்கும் மானியத் தொகை 75 லட்சம் ரூபாயிலிருந்து மூன்று கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.
புராதனச் சின்னங்கள் புனரமைப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு ஆலயங்களில் இருந்த பழைமையான ஓவியங்கள், சிற்பங்கள் புதுப்பிக்கப்பட்டன. 
கலைஞர் ஆட்சிக்காலத்தில் பழைமையான சிலைகள் பலவும் மீட்கப்பட்டன. 2010-ம் ஆண்டு மட்டும் 11 சிலைகள் மீட்கப்பட்டன.
ஒருமுறை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியில் இருந்த கருணாநிதி `தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில் கருவறைக்குள் செல்ல உரிமை இல்லை' என்று வருத்தப்பட்டுப் பேசினார்.
`கோயிலுக்கே போகாத கருணாநிதிக்கு ஏன் இந்தக் கவலை? என்றார் காங்கிரஸ் உறுப்பினர் அனந்தநாயகி. உடனே கருணாநிதி `கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குப் போகிறார்கள். வாதாடுபவர்களும்தானே போகிறார்கள்!' என்றார்.
எளிய மக்களின் வழிபாட்டுக்கு ஏற்றவகையில் கோயில்களை மாற்றியமைத்தவர் கருணாநிதி.
தமிழக மக்கள் தெய்வமாக வணங்கும் அண்ணன்மார் எனும் பொன்னர் சங்கரின் கதையை தனது அழகுத் தமிழில் வடித்துத் தந்தவர் கருணாநிதி.
வைணவ ஆச்சாரியார் ஸ்ரீராமாநுஜரின் முற்போக்குச் சிந்தனைகளை ஒன்றிணைத்த கருணாநிதி தனது இலக்கிய கைவண்ணத்தில் ராமாநுஜ காவியம் ஒன்றை இயற்றினார். அந்தக் காவியம் தொலைக்காட்சியில் வந்ததைப்பார்த்த திருப்பதி தேவஸ்தானம், அதை தெலுங்கில் ஒளிபரப்ப அனுமதி கேட்டது. அதற்கு சம்மதித்ததோடு அந்தத் தொடரை இலவசமாக மொழிமாற்றம் செய்துகொள்ளவும் அனுமதித்தார். 
கலைஞர் தனது வீட்டைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான மருத்துவமனையாக மாற்ற ஒப்புதல் தந்து பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார். ``எனது பள்ளிப் பருவத்தில், திருவாரூர் கோயில் சுவர்களில் நடமாடும் கோயில் திருப்பணி என்று ஆங்காங்கே  எழுதப்பட்டிருக்கும். நடமாடும் கோயில் திருப்பணி என்றால், நடமாடுகின்ற கோயில் கட்டப் போகிறார்கள் என்று அர்த்தமில்லை. மனிதனின் உடலே நடமாடும் கோயில். அதில் உண்டாகும் பிணிகளைத் தீர்ப்பதைத்தான் திருப்பணி என்கிறோம். நடமாடும் கோயில் திருப்பணி என்பது மருத்துவம்தான் என்று எனது ஆசிரியர் சொன்னார். அந்த நடமாடும் கோயில் திருப்பணியைத்தான் தி.மு.க ஆட்சிக்கு வரும்போதெல்லாம் செய்கிறது'' என்றார். அதுதான் கலைஞர்!
By மு.ஹரி காமராஜ்
August 09, 2018 at 6:24 PM

Wednesday 18 March 2020

திமுககேள்விக்குஎன்னபதில்No1 டுபாக்கூர் சொத்துப்பட்டியலுடன் சில்லறைகள்

கலைஞர் குடும்பச் சொத்துபட்டியல் என திட்டமிட்டு ஒரு நீண்ட கற்பனை பட்டியலை வாட்ஸ்அப்பில் பரப்பி வரும் திருட்டு பொறுக்கிகளிடம்  திமுகவினர் கேட்க வேண்டிய எதிர்
கேள்விகள் இதோ 👇

கேள்வி எண் (1)

15 வருசமா கலைஞர்சொத்து என்ற பட்டியல் வாட்ஸ்அப்பில் உலவுதே?

கலைஞரின் அக்கா மகன்
மாறனின் குடும்ப சொத்துக்கள் எப்படிடா கலைஞர் சொத்தாகும்?

1993 SUN tv போலிகம்பெனி அல்ல
ஒரு ரூபா ஊதியத்தில் ஆரம்பிக்கலடா

உன் அக்கா மகனின் சொத்தை உன் பேரில் எழுதிக்குவியா?

#திமுககேள்விக்குஎன்னபதில்No1

கேள்வி எண் (2)

கலைஞர் குடும்ப சொத்து பட்டியல் நீளமாயிருக்கே"

அது கப்சா பட்டியல்😜
நீளமாத்தான்டா இருக்கும்

மாறன் குடும்பம் உழைப்பில் வந்த
19100கோடி சொத்துப் பட்டியலும் நீளமாதான் இருக்கும்😁

அப்படியே
அம்பானி 3,80,700Cr சொத்தை கலைஞர் குடும்பத்து சொத்தா மாற்றலாமே?

#திமுககேள்விக்குஎன்னபதில்No1

கேள்வி எண் (3)

"வாட்ஸ் அப்பில் கலைஞர் சொத்து பட்டியல் உலவுதே"

2006ல் இருந்தே உலவுது

2011-20 அதிமுக ஆட்சி
2014-20 பிஜேபி ஆட்சி

பட்டியல் உண்மையெனில்
WhatsAppல் ஏன் அவதூறு பண்ற?
லஞ்ச ஒழிப்பு அமலாக்க,வருமான வரித்துறைக்கு அனுப்பலாமே?

உன் நோக்கம் அவதூறு பரப்புவதானே

#திமுககேள்விக்குஎன்னபதில்No1

கேள்வி எண் (4)

"கலைஞர் சயின்டிபிக்கா ஊழல் பண்ணிட்டார்"

Scientific என்றால் நிரூபிக்கத்தக்க என்று பொருள்
நிரூபிக்க வேண்டியதானே

1977முதல் 30 வருசம் ADMK ஆட்சி நடந்திருக்கே

FIR இல்லாம மேம்பால ஊழல் என அசிங்கப்பட்டது யாரு
கேவலம்..ஒரு Petty case கூட போட முடியாதது ஏன்?

#திமுககேள்விக்குஎன்னபதில்No1

கேள்வி எண் (5)

"கலைஞர் கண்டுபிடிக்க முடியாம ஊழல் பண்ணிட்டார்"

கலைஞர் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறையின் திறமையால்தானே ஜெயலலிதாவின் மேல் வழக்கு போட்டு தண்டனை வாங்கி கொடுத்தார்

அதே லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் ஜெயலலிதா 2001,2011ல் கலைஞர் மீது வழக்கு போட முடியாததேன்?

#திமுககேள்விக்குஎன்னபதில்No1

கேள்வி எண் (6)

1976 முதல் 43 வருசமா யாராலுமே கண்டு பிடிக்க முடியாதபடி
கலைஞர் ஊழல் பண்ணிட்டார்

இப்படி எவனாவது சொன்னா நமது லஞ்ச ஒழிப்புத்துறை, அமலாக்க பிரிவு, வருமானவரித்துறை,CBI திறமையற்ற அமைப்புகள் என்பதாக பொருள்

அவன் மீது சட்டப்படி ஏன் நடவடிக்கை
எடுக்கக் கூடாது?

#திமுககேள்விக்குஎன்னபதில்No1

கேள்வி எண் (7)

"கலைஞர் சொத்து சேர்த்துட்டார்"

சொத்து எதுக்குடா சேர்ப்பாங்க?
ஆடம்பர வாழ்க்கைக்காகத்தானே

கலைஞர் என்ன கொடநாடு மாதிரியான பங்களாவிலா வாழ்ந்தார்?

கடைசிவரை
சாதா வீட்டில்தானே

தனது கோபாலபுரம் வீட்டை மருத்துவமனைக்கு தானமாக தந்தவரா ஊழல்வாதி?

#திமுககேள்விக்குஎன்னபதில்No1

கேள்வி எண் (8)

கலைஞரை ஊழல்வாதியாக சித்தரித்தவர்கள்

இந்திரா
MGR
ஜெயலலிதா
ஆகியோர்

ஆனால் இந்த மூவருமே ஊழல் வழக்கில் சிக்கிய சிகாமணிகள்

கலைஞரால் பாதிக்கப்பட்ட ஜெயலலிதா கையில் கலைஞர் ஊழல் செய்ததாக சிறு ஆதாரம் சிக்கியிருந்தால் கலைஞரை ஒழித்திருக்கமாட்டாரா?

யோசிங்க

#திமுககேள்விக்குஎன்னபதில்No1

கேள்வி எண்(9)

யார் திருந்தாத ஜென்மங்கள்?

ஒரு பக்கம் வழக்கு..

இன்னொரு பக்கம்
மிடாஸ் கம்பெனி
1000 கோடி பீனிக்ஸ் தியேட்டர்
540 கோடி கண்டைனர் லாரிகள்
பணமதிப்பின் போது சொத்துக் குவிப்பு

மறைந்து விட்ட கலைஞரின் சொத்து பட்டியல் போடுறவன்
இதையெல்லாம் பேசாதது ஏன்?
💦

#திமுககேள்விக்குஎன்னபதில்No1

கேள்வி எண் (10)

கலைஞர் சொத்து பற்றி பட்டியல் போட்டவுடன் கலைஞர் தனக்கு சொத்து எப்படி வந்தது என்பதை தெளிவாக விளக்கி அறிக்கை வெளியிட்டார்

அந்த யோக்கியதை இங்கேயுள்ள எந்த தலைவனுக்கு இருக்கு?

சொல்லுங்கடா

இதோ அவரது தெளிவான விளக்கம்

https://t.co/Td0nZBsh9h

#திமுககேள்விக்குஎன்னபதில்No1

கேள்வி எண் (11)

கிறுக்கன் :- கலைஞர் சொத்து எப்படி வந்தது?

பதில்:- மடப்பயலே..இதுக்கு அவர் ஏற்கனவே
விபரமா பதிலும் கொடுத்திருக்கார்

வருமான வரித்துறைக்கு கணக்கும் கொடுத்திருக்கார்

உனக்கு சந்தேகம் இருந்தால் வருமானவரித்துறையிடம் உன் பட்டியலை கொடு
நடவடிக்கை எடுப்பர்

#திமுககேள்விக்குஎன்னபதில்No1

கேள்வி எண் (12)

கலைஞர் குடும்ப சொத்துப்பட்டியல் இருந்தா
அதை வைத்து வழக்கு போட வேண்டியதுதானே
சம்பந்தப்பட்டவர்கள் வழக்கை சந்திப்பர்

ஏன் டுபாக்கூர் பட்டியலை வாட்ஸ்அப்பில் போட்டு ஊரை ஏமாத்துற?

கலைஞர் ஜெ மீது வழக்குதானே போட்டார்

பட்டியல் தீர்ப்பில் வந்ததா இல்லையா?

#திமுககேள்விக்குஎன்னபதில்No1

By Antony Parimalam