Friday 30 June 2017

யாருடா தமிழன் ? யாருடா "இனத்துரோகி " ? கலைஞரை அப்படி சொல்ல உனக்கென்னடா யோக்கியதை இருக்கு?

 யாருடா தமிழன் ? யாருடா  "இனத்துரோகி " ?
கலைஞரை அப்படி சொல்ல உனக்கென்னடா யோக்கியதை இருக்கு?

பெரியாரியவாதியாக சொல்லிக்கொண்டு, கலைஞரை "இனத்துரோகி" என்று சொல்லிக்கொண்டு திரியும் முண்டங்களுக்கே இந்த பதிவு.

ஊரான் பிள்ளையை பெற்றவர்கள் ஒப்புதல் இல்லாமல் பலவந்தமாக பிடித்துப்போய் போரில் கொன்று குவித்தாரே பிரபாகரன் அவரை "பிள்ளை பிடி பிரபாகரன்" என்று ஈழத்தமிழர்கள் சொல்வதுபோல நாமும் சொல்லலாமா?

அதென்னடா "இனத்துரோகி"? இதில் இருக்கும் இனம் என்கிற சொல் யாரைக் குறிக்கிறது என்று உங்களால் தெளிவாக சொல்ல முடியுமா?

உலகில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களா, அல்லது யாழ்ப்பாண வெள்ளாளர்களும் அவர்களுக்கு ஏவல் செய்த ரவுடிகளும் மட்டுமே உங்கள் பார்வையின்படி தமிழ் இனமா?

இலங்கையில் எண்ணிக்கையில் அதிகம் இருக்கும் தமிழனான மலையகத் தமிழனுக்கும் பிரபாகரனுக்கும் என்ன தொடர்பு என்று உங்களுக்குத் தெரியுமா?

அந்த மலையகத்தமிழன் என்றாவது பிரபாகரனை ஏற்றானா?
2009இல் இறுதிப்போர் நடந்து கொண்டிருந்தபோது பிரதான மலையகத் தமிழ் கட்சிகள் இலங்கை அரசில், அமைச்சரவையில் இருந்தன என்று உங்களுக்குத்தெரியுமா?

இலங்கைக்குள் இருந்த அந்த மலையகத்தமிழ் கட்சிகள் கூட பிரபாகரனுக்கு ஆதரவாக ராஜபக்ஷே அரசில் இருந்து விலகவில்லை என்றாவது உங்களுக்குத் தெரியுமா?

 இலங்கையில் இருக்கும் மலையகத் தமிழனிடம்.
அந்த மலையகத் தமிழ் கட்சிகளைப் பார்த்து இனத்துரோகி என்று சொல்லிப்பாரேன். செருப்பால் அடிப்பான். அதுவும் பிய்ந்த செறுப்பால் சாணியில் முக்கி எடுத்து அடிப்பான்.

ஏனென்றால் பிரபாகரனின் பிள்ளைபிடி போராட்டம் பற்றி உன்னைவிட அவனுக்கு நன்கு தெரியும். புலிகளிடமிருந்து சொந்தப்பிள்ளைகளை பாதுகாக்க மலையகத்தமிழ் குடும்பங்கள் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல.

அதைவிட முக்கியமாக மலையகத்தமிழனை சக மனிதனாகக் கூட மதிக்காத யாழ்ப்பாணத்தமிழன்தான் பிரபாகரன் என்பதை பட்டுத்தெளிந்தவன் மலையகத் தமிழன்.

அதுமட்டுமல்ல, இலங்கை அரசும் இந்திய அரசும் சேர்ந்து குடியுரிமை பறித்து இலங்கையில் இருந்து விரட்டிவிட்ட லட்சக்கணக்கான மலையகத்தமிழனை வரவேற்று வாழவைத்தவர் கலைஞர் என்ற தமிழினத் தலைவர் என்கிற வரலாறு மற்றவனை விட நேரடியாகப் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழனுக்கு நன்றாகத் தெரியும்.
அந்த வரலாறெல்லாம் உங்களுக்குத் தெரியுமாடா முண்டங்களே?

மலையகத்தை விடு. கிழக்கு இலங்கைத் தமிழனையாவது சேர்த்துக் கொண்டாரா உன் பிரபாகரன்?
இலங்கையின் வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் என்கிறீர்களே? இலங்கை வரலாற்றில் வடக்கும் கிழக்கும் என்றாவது ஒன்றாக இருந்தது உண்டாடா ஞான சூனியங்களே?
இருந்ததே இல்லையடா முண்டங்களா!

அப்படி ஒன்றாக இல்லாத வடக்கையும் கிழக்கையும் ஒன்றாக்கியது இந்திய இலங்கை ஒப்பந்தம்.

 ராஜீவ் காந்தியை கொல்லப்பட்டபோது பாதிக்கப்பட்ட ஒரே அரசியல் கட்சி திமுக. ஊருக்கு ஊர் அடிபட்டவன் திமுககாரன். ஒன்றுக்கு மூன்றுநாள் சிலர் வீட்டில் அடுப்பெரியவில்லையடா அயோக்கியப் பயல்களே!!அதெல்லாம் யாரால்? பிரபாகரனால்.

ராஜீவ் கொலைக்கு கருணாநிதியும், திமுகவும் தான் காரணம் என்று போஸ்டர் அடித்து ஓட்டுக்கேட்டு முதல்வரான ஈனப்பிறவி ஜெயலலிதா உங்களுக்கு ஈழத்தாயாடா?

ராஜீவ் கொலையை வைத்தும், கொலையாளிகளை வைத்தும் 25 ஆண்டுகளாக அரசியல் செய்தது யார்? ஜெயலலிதாவா? கலைஞரா?

இதே நளினியின் தூக்குதண்டனையை ஆயுள்தண்டனையாக கலைஞர் அவர்கள் குறைத்தபோது அதை எதிர்த்து வானத்துக்கும் பூமிக்கும் குதித்தவர் யார்? இதே ஜெயலலிதா தானே?

கலைஞருக்கும் புலிகளுக்கும் தொடர்பு என்று சொல்லி திமுக ஆட்சியை தேசத்துரோக ஆட்சி என்று சதிராட்டம் போட்டவர் சாட்சாத் இதே ஜெயலலிதா தானே?

கலைஞரை இனத்துரோகி என்பவன் எந்தக் கொம்பனாக இருந்தாலும் அவன் "இனம்" என்று எதைச்சொல்கிறான் என்பதை முதலில் வரையறுக்கவேண்டும். அடுத்து அந்த "இனத்துக்கு" கலைஞர் என்ன "துரோகம்" செய்தார் என்பதை உரிய ஆதாரங்களுடன் நிறுவ வேண்டும். அதைவிட முக்கியமாக, அந்த "இனத்துக்கு" பிரபாகரன் செய்த நன்மைகள் என்ன என்றும் அவர்கள் பட்டியலிடவேண்டும்.

செய்யமுடியுமாடா?

(இந்த பதிவு #எதிரொலி என்ற பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது)

Tamilnad govt is the worst borrower with inefficient Financial Management .....Why? and How?

Tamilnad govt is the worst borrower with inefficient
Financial Management .....Why? and How?

Tamil nadu Government plans to borrow a net amount of
Rs.41,965 crore only against the estimated Net
Borrowing Ceiling of Rs.45,119 crore in 2017-2018.
The outstanding debt including provident fund will be
Rs.3,14,366 crore as on 31.3.2018. This will constitute
only 20.90% of GSDP.

தமிழகம்  ஆண்டு தோறும் எவ்வளவு வட்டிக்
கொடுக்கிறது தெரியுமா?
2017-18 க்கு வட்டி மட்டும் 25982 கோடி
2017 18 மானியத்திற்கு மட்டும் 72616 கோடி
எங்கே பிரட்சினை என்று புரிகிறதா?

In the Budget Estimates 2017-2018, the Interest
Payments have been estimated at Rs.25,982 crore,
which is 14.82% of the Total Revenue Expenditure.

It is estimated at Rs.21,397 crore in the Revised
Estimates 2016-2017. The increased estimation in
the Budget Estimates for 2017-2018 over the
Revised Estimates 2016-2017 is due to additional
commitment of the Government towards payment
of interest under the UDAY scheme.

 The ratio of Interest Payments to Total Revenue Receipts will
be 16.30% in 2017-2018. This is expected to be
16.77% in 2018-2019 and 17.38% in 2019-2020.

For Subsidies and Grants, Rs.72,616 crore is
allocated in the Budget Estimates for 2017-2018.

The allocation includes expenditure for various
ongoing welfare schemes like food subsidy, power
subsidy, scholarships, housing schemes, etc., and
additional commitments to new schemes like
co-operative loan waiver and free power to
domestic consumers up to 100 units, etc.

What happened in 2016-17 ?

The government is carrying out many welfare schemes and giving subsidies and grants for several sections of people. The subsidies and grants, which amounted to Rs 50,713 crore in the 2015-2016 budget had seen a rise of Rs 68,211 crore.

amount spent on distribution of mixies and grinders takes up Rs. 935 crore every year and the eight grams of gold scheme for marriage comes to Rs 703 crore, while the free distribution of laptops are given at a cost of Rs 889 crore. At present Rs 668 crore is spent on maternity assistance scheme and Rs 505 crore on free and concessional bus passes to students.

The state government is spending Rs 487 crore for free distribution of handloom cloth, Rs 409 crore on uniforms to students and Rs 264 crore on free supply of text books for students, besides giving free bicycles at a cost of Rs 232 crore. For rural people, sheep, goats and milch cows are given at an estimate of Rs 182 crore every year.

Among the subsidies, the one given to Tamil Nadu Electricity Board tops the list with Rs 9,007 crore and the MGREG scheme is given a subsidy of Rs 7,155 crore, while Rs 5,500 crore are given to food subsidy. Besides, transport depart gets a subsidy of Rs 200 crore on diesel.

Thursday 29 June 2017

ஈழ இயக்கங்கள் உருவான வரலாறும் தமிழக அரசியலும்


ஈழ இயக்கங்கள் உருவான வரலாறும் தமிழக அரசியலும்

LTTE இயக்கம் 5 May 1976 உமா மகேஸ்வரனை தலைவராகவும் பிரபாகரனை கமேன்டராகவும் கொண்டு தொடங்கப்பட்டது.
ஆனால் உமா மகேஸ்வரன் ஊர்மிளா என்னும் பெண்ணை காதலித்ததால் அவரை இயக்கத்திலிருந்து வெளியேற்றி 1979 இல் பிரபாகரன் தானே தலைவரானார். உமா மகேஸ்வரன் PLOT என்னும் இயக்கத்தை உருவாக்கினார்.
EROS (1975), TELO (1979), PLOTE (1980), EPRLF (1980) and TELA (1982) போன்ற இயக்கங்களும் உருவாயின.

'70 களில் கலைஞருடன் ஈழ மிதவாத தலைவர்கள் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தனர். கலைஞர் ஈழத்தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்

அப்போது Tamil Eelam Liberation Organisation (TELO) தலைவர் சபாரத்தினம் கலைஞரோடு நெருக்கமாக இருந்தார்.

கலைஞருக்கு எதிராக செய்யவேண்டும் என்பதற்காக ஆட்சியில் இருந்த M.G.R தானும் ஈழ ஆதரவாளர் எனக் காட்டிக் கொள்ள LTTE யுடன் நெருங்கினார். அதனால் விடுதலைப்புலிகள் அவருடன் நெருக்கமாக இருந்தனர்.

தமிழகமெங்கும் கலைஞர் ஈழவிடுதலை ஆதரவுநிதிதிரட்டி அனைத்து இயக்கங்களுக்கும் பகிர்ந்தளித்தபோது அதை வாங்கமறுத்தவர் பிரபாகரன். ஏனென்றால் எம்.ஜி.ஆரிடமிருந்து பெரும்தொகையினை நிதியாக பெற்றிருந்தார் பிரபாகரன். எனவே கலைஞர் கொடுத்த நிதியை பெற மறுத்துவிட்டார் பிரபாகரன்.


1986 இல் LTTE க்கும் TELO விற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது TELO தலைவர் சபாரத்தினம் உட்பட அவ்வியக்கத்தின் ஆயிரக்கணக்கான போராளிகள் பிரபாகரனால் கொல்லப்பட்டனர்.அதன் பிறகு
அவ்வாறே EPRLF இயக்கத்தினரும் கூண்டோடு புலிகளால் அழிக்கப்பட்டனர்.

1986ல்ஈழவிடுதலைஇயக்கங்களை ஒற்றுமையாக இருக்க வலியுறுத்தி என்டிராமராவ்,ஃபரூக்அப்துல்லா,
பிஜுபட்நாயக் என பல பெருந்தலைவர்களை அழைத்து மதுரையில் ஈழ ஆதரவுமாநாடு நடத்தினார் கலைஞர்.மறுவாரமே சிறீசபாரத்னத்தையும்அவரதுபடையணியினரையும் சதிசெய்து கொன்றனர் LTTEயினர்.

தமிழ் MP க்கள்
அமிர்தலிங்கம்
அருணாசலம் தங்கதுரை
ஆல்பிரட் துரையப்பா
M. கனகரத்தினம்
A. L.அப்துல் மஜீத்
S. சன்முக நாதன்
நிமலன் சவுந்தர நாயகம்
சாம் தம்பிமுத்து
நீலன் திருச்செல்வம்
G. யோகேஸ்வரி
V. யோகேஸ்வரன் எல்லோரும் LTTE ஆல் கொல்லப்படவர்களில்
சிலர்.

மேலும் மக்கள் சேவைப் பணியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் என LTTE யால் கொல்லப்பட்டவர்கள் பட்டியல் மிகப்பெரியது.

சபாரத்தினம் கொல்லப்பட்டப் பின்னரும் கூட கலைஞர் பிரபாகரனை தவறாக விமர்சித்ததில்லை. ஒவ்வொரு முறையும் சகோதர யுத்தம் வேண்டாம் என்றே வலியுருத்தினார். ஆனால் அதையெல்லாம் பிரபாகரன் ஒரு பொருட்டாக கூட மதித்ததேயில்லை.

   மிக நீண்ட காலத்திற்கு பின் திமுக 1989 இல் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. 1990 ஜூன் 19 இல் EPRLF தலைவர்கள் பத்மநாபா உட்பட 13 பேர் இலங்கையிலிருந்த வந்த LTTE யினரால் சென்னையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்கள்.

இது கலைஞருக்கு பேரிடியாய் அமைந்தது. கலைஞர் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக பேசப்பட்டு திமுக ஆட்சி இரண்டே வருடத்தில் கலைக்கப்பட பிரபாகரனே காரணமாயிருந்தார்.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் விடுதலைப் புலிகளுக்குக் கருணாநிதி எல்லா வசதிகளும் செஞ்சு கொடுத்தா. விடுதலைப் புலிகள் இங்கே பெட்ரோல் பங்க் நடத்துனா. கோயம்புத்தூரில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கிற தொழிற்சாலை வெச்சிருந்தா. எல்.டி.டி.ஈ.க்கு யூனிஃபார்ம் தைச்சுக் கொடுத்தா. இதைப்பத்தி எல்லாம் எனக்கு ரிப்போர்ட் வந்தது. நான்தான் சந்திரசேகர்கிட்ட எடுத்துச் சொல்லி, 'கருணாநிதி தீவிரவாதிகளுக்கு சப்போர்ட்ட பண்றா, அவா அரசைக் கலைச்சிடுவோம்னு' சொன்னேன்." என சுப்பிரமணியன் சுவாமி
('விகடன் மேடை' - வாசகர் கேள்விகள் பகுதி, 04.07.2012) இல்
தெரிவித்தை கொண்டு திமுக ஆட்சியில் LTTE யினர் வளமாக இருந்ததை புரிந்துக் கொள்ளலாம்.

சீருடைக்கு உதவி செய்தார் என்பதற்காகத்தான் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த சுப்புலட்சுமி ஜகதீசன் சிறையில் அடைக்கபட்டார்

1990 இல் அன்று முதல்வராக இருந்த கலைஞர் இலங்கை தமிழர்களை கொன்ற இந்தியப்படையை வரவேற்க முடியாது என திடமாக மறுத்தார் கலைஞர் அவர்கள்.

1991இல் LTTE இயக்கத்தை ஆதரித்ததற்காக கலைஞரின் திமுக அரசை ஜெயலலிதா கலைக்க போராடினார். திமுக அரசும் கலைக்க பட்டது.

அதன்பின்னர்1991மே 21 இல் ராஜீவ் காந்தி LTTE யால் கொல்லப்பட்டபோது அன்று ஆட்சியை மீண்டும் பிடிக்கும் வாய்ப்பை திமுக இழந்ததுடன் பிரபாகரனால் திமுக ராஜீவ் கொலைப்பழியையும் சுமக்க நேர்ந்தது.

திமுக ஆட்சியை இழந்து
மதிமுக ஆரம்பிக்கப்பட்டவுடன் ஏற்கனவேயிருந்த கள்ளத்தோனி உறவை பிரபாகரனுடன் பலப்படுத்திக் கொண்டார் வைக்கோ.

வைக்கோவின் அறிவுரைப்படி நடந்த பிரபாகரன் அதன் பின்னர் கலைஞரின் ஆலோசனையை காது கொடுத்து கேட்டதில்லை.

தன் அரசியல் சுயநவத்திற்காக பிரபாகாரனுக்கும் கலைஞருக்கும் இடையே எந்த நட்பும் புரிதலும் வராது பார்த்துக்கொண்டனர் வைக்கோ & கோ

கலைஞரை என்றுமே லட்சியம் செய்யாத பிரபாகரன் போரை துவங்கும் போதாவது அல்லது நடந்த போதாவது கலைஞரை தொடர்பு கொண்டதுண்டா ?
ஏன் செய்யவில்லை ?

   

வம்பு மணி தளபதியிடம் அடிக்கடி கேள்விகள் கேட்டுள்ளதால் அவரிடம் நாம் முன் வைக்கும் சில கேள்விகள்.

வம்பு மணி தளபதியிடம் அடிக்கடி கேள்விகள் கேட்டுள்ளதால்  அவரிடம் நாம் முன் வைக்கும் சில கேள்விகள்.
1) கட்சியை ஆரம்பித்து அக்கட்சியின் ஒட்டு மொத்த நிர்வாகத்தையும் தன் குடுப்பத்தினரிடமே வைத்துக் கொண்டு தன்னை சின்னவரென்றும், தன் தந்தையை பெரியவரென்றும் அப்பாவி சொந்த கட்சிக்காரர்களை  அழைக்க வைத்து சந்தோசப்படுகிறீரே ....  நீங்கள் எந்த சாராய சாம்ராஜ்யத்தின் ஜமீனென்று சொல்ல முடியுமா ?

2) திமுகதான் வாக்குறுதியை காப்பாற்றாத கட்சி எனத் தெரிந்து விட்டதே. அப்புறம் எதற்கு 2011 இல் திமுக தலைவரின் காலில் விழுந்து கூட்டணி பிச்சை எடுத்தீர்கள்? அப்படியென்றால் மதுவிலக்கை விட நோட்டும் சீட்டும்தானே உமக்கு முக்கியம்.

3) திமுக போட்ட பிச்சையால் மத்திய மந்திரியான வம்புமணி... மதுவை ஒழிக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்? அடிப்படை வசதி இல்லாத மெடிக்கல் காலேஜிக்கு வாங்க வேண்டியதை வாங்கிகிட்டு அனுமதி கொடுத்தீரே. அதுதானே உமது சாதனை. சம்பாதிக்க மட்டும்தான் நேரம் கிடைச்சுதா?

4) சித்திரை திருவிழா என்கிற பேரில் கட்சிக்காரர்களை அழைத்து தண்ணி பார்ட்டி வைத்து மதுவிற்பனையை அதிகரிக்கச் செய்த உமக்கு மதுவிலக்கு பற்றி பேச என் யோக்கியதை இருக்கு?
சொந்த கட்சிக்காரர்களை கூட திருத்த முடியாத உம்மால் எப்படி நாட்டையே திருத்த முடியும்?

5) இத்தனை வருடங்களில் மாறி மாறி கூட்டணிக்கு பேரம் பேசியபோது  மதுவிலக்கை ஒரு முக்கிய கூட்டணி நிபந்தனையாக முன் வைக்காதது ஏன்?

6) தமிழகத்தின் ஆளும் கட்சியாக இருக்கும் அதிமுக தலைவியிடம் மதுவிலக்கை கொண்டு வர கோரி எத்தனை முறை கடந்த 4 ஆண்டுகளில் மனு கொடுத்தீர்?  தேர்தல் வருகிறது என்பதுடன் ஏன் இந்த நடிப்பு?

7) கடந்த 6 ஆண்டுகளில் எத்தனை முறை பொது மக்களை கூட்டி பெரிய அளவிளான மது எதிர்ப்பு போராட்டத்தை நடத்தினீர். ? ஏன் கடந்த 6 ஆண்டுகளாக வாய் மூடி கண்மூடி செயல்படாது இருந்தீர் ?

8) கடந்த காலங்களில் சாதி வெறியை தூண்டி மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தி அதன் மூலம் கட்சி வளர்த்து பிழைப்பு நடத்தும் உமக்கு பலதரப்பட்ட சாதியினர் வாழும் நாட்டின் நிர்வாக அதிகாரத்தை எப்படி மக்கள் ஒப்படைப்பார்கள்.?

9) தர்மபுரி மக்களவை தொகுதிக்கு தேர்தெடுக்கப்பட்ட பின்னர் அந்த தொகுதி மக்களுக்கு சொல்லிக்கொள்ளும் படி எதுவுமே செய்யாத நீர் எந்த அடிப்படையில் தமிழகத்தை ஆள உரிமை கோருகிறீர்.?

10) கட்சி ஆரம்பித்து இத்தனை வருடங்களில் பொது நலத்திற்காக இதுவரை என்ன சாதனை உங்களால் நிகழ்ந்துள்ளது?  சொல்லமுடியுமா?

11) கட்சி ஆரம்பித்த போது தன் குடும்ப உறுப்பினர்கள் கட்சி பதவிகளுக்கு வரமாட்டார்கள் எனச்சொல்லி சொந்த கட்சிக்காரர்களையே ஏமாற்றிய நீர்
பதவிக்காக எதையும் செய்யும் நீர்
தேர்தலுக்கு முன் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர் என்று எப்படி நம்புவது?

12) இப்படி மக்களுக்காக எந்த போராட்டமும் செய்யாமல், எந்த தியாகமும் செய்யாமல் தந்தையின் நிழலில் வாழ்ந்து வரும் உமக்கு,  தளபதியிடமே பதவி பிச்சை பெற்ற உமக்கு.... தளபதியிடம் கேள்வி கேட்க என்ன தகுதியுள்ளது?

Wednesday 28 June 2017

GST யால் தமிழக அரசுக்கு வருவாய் என்ன பாதிப்பு?

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்புக்கு வகை செய்யும் ஜிஎஸ்டி வரி ஜூலை 1ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட இருக்கிறது.

 இவற்றில் வரி விதிப்பு 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 5, 12, 18, 28 சதவீதம் என நான்கு பிரிவாக வரி விதிப்பு இருக்கும்.

ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வரும்போது, சிஜிஎஸ்டி (CGST), எஸ்ஜிஎஸ்டி (SGST) மற்றும் ஐஜிஎஸ்டி (IGST) என 3 வகையான சரக்கு மற்றும் சேவை வரிகள் நடைமுறைக்கு வரும்.

 இதில் சிஜிஎஸ்டி என்பது மத்திய அரசின் ஜிஎஸ்டி (Central GST). இந்த வருவாய் ழுழுவதும் மத்திய அரசுக்குச் செல்லும். அடுத்தது, எஸ்ஜிஎஸ்டி என்பது மாநில அரசின் ஜிஎஸ்டி (State GST). இது மாநிலங்களில் நடைபெறும் விற்பனையின் மூலம் கிடைக்கும் வருவாய். இந்த வருவாய் மொத்தமும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்குச் செல்லும். அடுத்தது, ஐஜிஎஸ்டி என்பது மாநிலங்களுக்கு இடையேயான ஜிஎஸ்டி (Inter-State GST). இது, ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலங்களுக்கு இடையில் நடைபெறும் விற்பனையின் மூலம் வரும் கிடைக்கும் வருவாய். இந்த வருவாய் மத்திய, மற்றும் மாநில அரசுக்குப் பகிர்ந்து அளிக்கப்படும். இறுதியில் எந்த மாநிலத்தில் ஒரு பொருள் விற்பனை செய்யப்படுகிறதோ, அந்த மாநிலத்துக்கு வருவாய் பகிர்ந்து அளிக்கப்படும்.

உதாரணத்துக்கு, கர்நாடகாவில் உள்ள ஒரு வணிகர் சுமார் ரூ.10,000 மதிப்புள்ள பொருள்களை அதே மாநிலத்திலுள்ள ஒரு வாடிக்கையாளருக்கு விற்கிறார். இந்த விற்பனையில், சிஜிஎஸ்டி விகிதம் 9% மற்றும் எஸ்ஜிஎஸ்டி விகிதம் 9% இரண்டையும் உள்ளடக்கிய சரக்கு மற்றும் சேவை வரி 18% ஆகும். இந்த விற்பனையில் வணிகர் ரூ.1,800 வரியாகச் செலுத்துகிறார். இந்தத் தொகையானது கர்நாடகா அரசின் பங்கு ரூ.900 மற்றும் மத்திய அரசின் பங்கு ரூ.900.

இப்போது, கர்நாடகாவில் உள்ள ஒரு வணிகர் ஆந்திராவில் உள்ள ஒரு வணிகருக்குச் சுமார் ரூ.10,000 மதிப்புள்ள பொருள்களை விற்று உள்ளார். இந்த விற்பனையில், சிஜிஎஸ்டி விகிதம் 9% மற்றும் எஸ்ஜிஎஸ்டி விகிதம் 9% இரண்டையும் உள்ளடக்கிய சரக்கு மற்றும் சேவை வரி 18% ஆகும். இந்த விற்பனையில் வணிகர் ரூ.1,800யை ஐஜிஎஸ்டி வரியாகச் செலுத்துகிறார். இங்கு சிஜிஎஸ்டி மற்றும் எஸ்ஜிஎஸ்டி ஆகியவற்றைச் செலுத்த வேண்டி இருக்காது. இந்த வரி வருவாய் மத்திய மற்றும் மாநில அரசுக்குப் பகிர்ந்து அளிக்கப்படும். இங்கு ஆந்திராவில் உள்ள ஒரு வணிகருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு ஐஜிஎஸ்டி-ல் இருந்து ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் வருவாய் பகிர்ந்து அளிக்கப்படும்.


GST யால் தமிழகம் எப்படி பாதிக்கப்படுகிறது?

தமிழகத்தில் தொழிற்சாலைகள் அதிகம். இங்கு உற்பத்தியாகும் கார் முதலான அனைத்து உற்பத்தி பொருட்களையும் வேறு மாநிலத்திற்கு விற்க 2% வரியை தமிழக அரசு தற்போது வசூலிக்கிறது. ஆனால் இனி வசூலிக்க முடியாது.இதனால் மட்டுமே சில ஆயிரம் கோடி வருவாய் வருகிறது.

மாநிலங்களுக்கு இடையே நடக்கும் விற்பனையின் வரித் தொகை முழுவதும் இனி IGST மூலம் மத்திய அரசே வசூலிக்கும்.

ஜிஎஸ்டி வந்தால், இந்த வருவாய் இழப்பு ஏற்படும். வேறு பல வரிகளையும் தமிழகம் இழக்கும், எனவே, சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்படும் என்பது தமிழக அரசின் கணக்கு.

இதனை மத்திய அரசு முழுமையாக தரவேண்டும் என்று தமிழகம் கேட்கிறது. மேலும் GST அமல்படுத்துவதால் மாநிலங்கள் தாங்கள் வரி விதிக்கும் அதிகாரத்தை இழப்பதையும் தமிழகம் எதிர்க்கிறது.

இப்போது நிறைவேற்றப்பட்ட அரசியல் சட்ட திருத்தத்தில் ஒரு மாநிலத்திற்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஐந்து ஆண்டுகள் வரை மத்திய அரசு ஈடு செய்வதாகக் கூறுகிறது.

 ஆனால், இதனை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக குறைக்க சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு உரிமை உள்ளது என்பதை இந்த சட்ட திருத்தம் கூறுகிறது. இது தமிழகத்திற்கு ஏற்புடையதாக இல்லை

Impacts of GST on Tamilnad

The proposed Goods and Services Tax Bill will mean that states like Tamil Nadu, which have manufacturing industries, will lose out on own tax revenue collections. Instead of focussing only on indirect taxation reform, the centre must also consider sharing direct tax administration with states, which has been the practice in other federal arrangements internationally.
 There is finally light at the end of the tunnel for the Goods and Services Tax (GST) Bill in India. Tamil Nadu, a state with a substantial manufacturing sector, kept raising its genuine apprehensions from the time the Value Added Tax (VAT) was introduced, emphasising the revenue impact of shifting the levy of sales tax from origin to point of consumption. The Goods and Services Tax Bill will, when enacted, have a similar effect. Maharashtra, Gujarat and Madhya Pradesh stood with Tamil Nadu at different points in time, while now Tamil Nadu remains the lone consistent dissenter. Political dynamics have been influencing the positions of state governments.
Woes of Manufacturing States
For states with manufacturing industries, sharing the unified indirect tax base with the union government via the destination-based GST, will mean an outflow of tax revenue along with goods and services produced there, to states that consume the goods and services. In this sense, GST provides no incentive for manufacturing states.
The search for a revenue neutral rate (RNR) of GST may be relevant for central GST, as shifting the levy from one state to another is not going to disturb the cumulative collection of tax for the central government. But states cannot have a uniform RNR that will match their present own tax revenue trend, as manufacturing and consumption levels vary from state to state. At the same time the combined GST rate (central GST + state GST) should be fair, reasonable and not regressive. Therefore, the proposed RNR, that is, the standard rate of state GST is not going to neutralise the effects of GST on the revenue collection of all manufacturing states.
The worries of the manufacturing states have not been addressed properly by the union government. The revenue loss compensation assured by the union government for a specific period is a rocket booster, but it is doubtful that the proposed GST vehicle would launch the manufacturing states in the revenue trajectory they are travelling in now, especially after the booster runs out. If there is a failure in this mission, with no independent powers of taxation, such states may be left in the lurch.
The next major concern is that the GST distorts the basic structure of fiscal federalism provided in the Constitution. The proposed GST Council would become another institution for politicking rather than a rational think tank on indirect taxation.
Lopsided Tax Reforms
As the volume of business across the borders of the states and the nation keeps growing, the focus is more on the reforms in indirect taxation and there have been perceptible changes effected in the system of indirect tax levies in the form of Modified VAT (MODVAT) and Central VAT (CENVAT) in central excise, VAT in sales tax, allowing cross credit of CENVAT between goods and services, rationalisation of customs duties, reduction of the Central Sales Tax rate and now the GST.
No such radical reforms were attempted in direct taxes, as it mainly concerns personal income tax of local entities. Direct taxes are solely in the realm of the union government, which has shown no intent in reforming direct tax systems.
It was proposed that a Direct Tax Code (DTC) be introduced to unify and simplify the direct tax laws. The draft bill was released as early as August 2009. After much discussion on the bill, a revised bill was released in March 2014, including the draft General Anti Avoidance Rules. In the budget speech in February 2015, the finance minister explained that most of the provisions of the proposed DTC have already been integrated into existing tax law, and concluded that there was no merit in going ahead with the DTC.
The proposed reform of direct tax systems was given a silent burial.
Low Direct Tax Revenue Growth
This dichotomy in approach to tax reforms has really not done well for the public finances of the nation.
India’s tax-to-gross domestic product (GDP) ratio is at 16.6% and is well below the emerging market economy and Organization of Economic Co-operation and Development (OECD) country averages of about 21% and 34%, respectively.
The contribution of direct taxes to total tax revenue of the central government has fallen from 60.78% in 2009-10 to 51.05% in 2015-16 (provisional). The direct tax-to-GDP ratio declined from 6.30% in 2007-08 to 5.47% in 2015-16 (provisional).
In the assessment year 2004-05, only 4.87 crore people, that is, about 4% of the population have filed income tax returns with 14 lakh individuals paying 80% of the country’s individual income tax.
All these facts go to prove that there is a decline in the efficiency of income tax collections, whereas the compliance in indirect taxes is steadily increasing. No doubt, the sudden growth in service sector in the last decade has given momentum to indirect tax collections, but this growth should have been equally reflected in income tax collection, as more tax revenue from services is directly related to income. This opposite trend in direct and indirect tax collections has really hampered the overall tax-to-GDP ratio of the country.
Regressive Indirect Taxes
Indirect tax is more distributive and the GST would make the tax on goods and services completely a consumption tax. This consumption tax paid by the consumer on taxable goods and services is nothing but a “spending tax” or “expenditure tax,” similar to income tax.
One key difference is that for a consumption tax, the tax base is expenditure, not income. Everyone who consumes goods and services cannot avoid paying indirect tax, as it is built into the price. However, a majority of the population—poor and lower-middle class—consume such goods and services daily and tend to pay more indirect tax than the middle class and the rich. People in higher income groups easily avoid paying their income tax dues. This imbalanced compliance between direct and indirect tax in India makes the indirect tax regressive in nature.
Purpose of Tax Reform
Certainly, taxation should not be a hindrance to business, but the objective of tax reform cannot be confined to the demands of business alone. Tax reform is an important aspect of public finance management, as  taxation is used as an instrument of attaining certain social objectives, namely,  redistribution of wealth and thereby reduction of inequalities.
Taxation in a modern government is thus needed not merely to raise the revenue required to meet its ever-growing expenditure on administration and social services but also to reduce the inequalities of income and wealth. Therefore, partial tax reform to satisfy big business houses is not going to serve any purpose for the 30 crore poor people of this country living below the poverty line.
Fiscal prudence demands a matching reform in direct taxes also along with the introduction of GST to achieve a fair, equitable, elastic and progressive tax regime. A comprehensive tax reform keeping in mind the revenue requirement of the governments to meet their social and welfare objectives as well fair distribution of income, and wealth can be the only meaningful tax reform in the public interest.
Fragmentary tax reforms carried out only with business interests, ignoring the genuine concerns of  state governments are likely to create major hiccups in the public finance management of the governments in the long run.
Direct Tax Reform
Income tax law in India continues to remain one of the most complicated tax laws. Complexity of the income tax law has no justification and it serves the bureaucracy alone. Such complications have only increased the cost of compliance for the assessees and cost of administration to the government.
Direct taxes are only in the domain of the union government and if there is a political will, this law can also be simplified and rationalised without much difficulty. Since the consumption tax of GST is much nearer to income tax, assessees of income may be given a tax rebate of a certain percentage of GST paid by them on their consumption of taxable goods and services. This integration of GST with income tax would complete the chain of the audit trail and make the whole taxation system more self-enforcing.
Stabilisation of the present income tax law cannot be the ground for shelving the idea of DTC. If the same logic is applied, the indirect laws of the Centre and States have also been well established and there may not be a need for GST.
In June this year, while addressing tax officers in the first ever Rajasva Gyan Sangam, the prime minister sought to double the income tax base to 10 crore assessees. Taking a cue from this, there should be a serious attempt to review the efforts towards direct tax reforms either through the DTC or in any other manner, as we cannot remain silent spectators to large-scale tax evasion when the need for revenue is more than ever before.
Share the Direct Tax Base with States
GST is essentially a consumption or expenditure tax. Income and expenditure are related and there should be routine functional coordination between direct and indirect tax administrations. When both the centre and the states agree to share the indirect tax base, the direct tax base can also be shared between the two. This would widen the direct tax base and improve the level of compliance as income earners are monitored by both agencies with reference to their consumption of goods and services.
In the European Union (EU), from where we have borrowed many components of GST, direct taxation remains the sole responsibility of member states. However, the EU has established some harmonised standards for company and personal taxation, and member countries have taken joint measures to prevent tax avoidance and double taxation.
In Canada, another prominent federal nation where VAT has stabilised, both the federal and provincial governments impose income taxes on individuals. The federal government charges the bulk of income taxes, with the provinces charging a somewhat lower percentage, except in Quebec. Quebec administers its own personal income tax system.
In the United States, the federal government, most states, and some local governments levy income tax.
Following these international models, the Government of India also may share the direct tax base with willing states with due modifications to the devolution formula. This idea was mooted by the present Minister of Defence, Manohar Parrikar, when he was the Chief Minister of Goa in the beginning of 2014.  Now a rethinking has to be made on this important matter by the union as well as state governments.
Need for Public Interest in Tax Reform
Despite high economic growth, India ranks 130thin the Human Development Index of 2015, below Malaysia (62), Sri Lanka (73), Mexico (74), China (90), Egypt (108), Indonesia (110), Philippines (115), South Africa (116) and Namibia (126).
It is said that we are going to gain additional GDP growth of 1% to 1.5% thanks to the proposed GST.  Balanced growth in production as well as consumption could lead to sustainable growth. Without increasing the consumption power of a majority of the population, India cannot achieve sustainable economic growth. Therefore, tax reforms should not be aimed only at increasing production. Instead, the reforms should be aimed at augmenting revenue to assure alleviation of poverty and creating a more equitable society.
Source: http://www.epw.in/journal/2016/31/web-exclusives/gst-and-states-sharing-tax-administration.html

1996-2001 ஊழலற்ற திமுக ஆட்சியை அகற்றி ஊழல்ராணியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியது ஏன்?

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா மூடர்களே?
கலைஞர்தான் ஊழலை கொண்டுவந்தாராம். அதற்கு முன் அரசில்வாதிகளுக்கு ஊழலே தெரியாதாம். எல்லா பயலும் விரல் சூப்பிகிட்டு இருந்தானுங்களாம்.

2000 வருடங்களுக்கு முன்பு இயேசுநாதரை காட்டிக் கொடுக்க யூதாஸ் வாங்கிய 30 பொற்காசுகள் லஞ்சமில்லாமல் அன்பளிப்பா?

1969-75 மட்டுமே கலைஞர் ஆட்சி. அதன் பின் யோக்கியர் MGR நடத்திய 12 வருச ஆட்சி யோக்கிய ஆட்சியா?

நீங்கள் எல்லாம் புத்தர் யேசு மாதிரியும் இடையில் யாரோ கெடுத்தது மாதிரியும் பேசுகிறீர்களே
உங்களின் பிறவிக்குணமே லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதுமேதானே.
காரியம் ஆக எதையும் செய்யும் பிறவிகள் தானே மனிதர்கள்.

இதில் நீங்களெல்லாம் ஒன்றுமே தெரியாதா பப்பாக்கள். கலைஞர் வந்துதான் உங்களுக்கு ஊழல் செய்ய கற்றுத் தந்தாரா?

நீங்களெல்லாம் யோக்கியர்போலவும் அவர்தான் வந்து செய்ய சொன்னது போல
கதையளக்கிறீர்கள்.

1996-2001 கலைஞரால் லஞ்ச ஊழல் இல்லா ஆட்சி நடந்தது. அப்புறம் என்ன முடிக்கு திமுகவை தோற்கடித்து அதே ஊழல்ராணி ஜெ வை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினீர்கள்.
அதன் பிறகே சாராயம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது.

அச்சரப்பாக்கம் சாத்தான்குளம் உட்பட 5 சட்டசபை இடங்களுக்கு இடைத்தேர்தல் நடந்தபோதுதான் முதன்முதலாக வாக்காளர்களுக்கு பெரும் தொகை அன்பளிப்பாகவும் பணமாகவும் வழங்கப்பட்டு வெளியில் இருந்து பெண்கள் அழைத்து வரப்பட்டு கள்ள ஓட்டுகளும் போடப்பட்டது. இதையெல்லாம் மறைத்து விட்டு திருமங்கலம் பார்மூலா என கதை கட்டினீர்கள்.

2011-16 வரை தமிழகத்தில் பெரும் கொள்ளை வெளிப்படையாகவே நடந்தது. விகடனை தவிர அனைத்து ஊடகங்களும் வாயையும் சூ...யும்
பொத்திக்கொண்டன.

கேடுகெட்ட மனிதர்களாகிய நீங்களும் 200 ரூ வாங்கிக்கொண்டு அதே ஜெ வுக்குதானே ஓட்டுப் போட்டீர்கள்.

ஊழலை வளர்ப்பது நீங்கதான்டா அறிவில்லா ஜென்மங்களே. உங்க பேராசைக்கும் சுயநலத்திற்கும் தனிப்பட்ட யாரையும் குறை சொல்ல எவருக்கும் உரிமையில்லை.

மதவாத பாஜாகாவுடன் திமுக உறவு வைத்தது நியாயமா?

மதவாத பாஜாகாவுடன் திமுக உறவு வைத்தது நியாயமா?
பல அறிவாளி அரசியல்வாதிகள் இந்த கேள்வியை அடிக்கடி
கேட்கிறார்களே.  !!!!

இப்படி கேட்பவர்களுக்கு வாஜ்பாய்க்கும் மோடிக்கும் உள்ள வித்தியாசம் தெரிய வாய்ப்பில்லை.

இன்று மோடி நடத்தும் மதவெறி ஆட்டங்களை 1999 இல் ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் செய்யவில்லையே ஏன்?
வாஜ்பாய் தனிப்பட முறையில் மிதவாதி என்பதாலும்  அன்று திமுக வாஜ்பாய் அரசுக்கு கடிவாளமாக இருந்ததும் குறைந்தப்பட்ச செயல்திட்டம் நடைமுறையில் இருந்ததுமே
காரணம்.

அதுதான் திமுகவின் கெத்து.

சரி ....என்ன சூழ்நிலையில் திமுக பாஜாகாவை ஆதரிக்க நேரிட்டது?

அந்த நிலையை உருவாக்கியது யார்?

1998ம் ஆண்டு, பாஜக அரசில், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, அதில் அங்கம் வகித்த ஜெயலலிதா  பிரதமர் வாஜ்பாயிடம் இரண்டு நிபந்தனைகள் போட்டார்

1) தமிழகத்தில் திமுக ஆட்சியைக் கவிழ்க்க வேண்டுமென்றும்

2) ஜெயலலிதா மேல் இருந்த சொத்துக்குவிப்பு வழக்கை வாபஸ்
பெறவேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

இதற்காக ஜெயலலிதா வாஜ்பாய் அரசுக்கு தந்த அடாவடிகள் கொஞ்சநஞ்சம் அல்ல.

ஆனால்  கடைசி வரை அதனைக் கேட்க பாஜக வினரும், குறிப்பாக பிரதமர் வாஜ்பாயும் மறுத்து விட்டார்கள்.

இதனால் கோபத்தின் உச்சிக்கே போன ஜெயலலிதா ஒரே ஆண்டுக்குள் வாஜ்பாய் அரசையே கவிழ்க்க முடிவெடுத்தார்.

மத்திய உள்துறை அமைச்சராக இருந்த அத்வானியை தேச விரோதி என்று ஜெயலலிதா அப்போது விமர்சித்தார்.

வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஜெயலலிதா  திரும்பப் பெற்றுக் கொண்டதை அடுத்து, 16-4-1999ல் மக்களவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை வாஜ்பாய் முன்மொழிந்த போது, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவராக இருந்த முரசொலி மாறன் கீழ்கண்டவாறு பேசினார்.

 "  நேற்று வரை நான் இந்த அரசை எதிர்த்து வந்தேன். காவிரிப் பிரச்னை சிக்கலைத் தீர்த்த இந்த அரசுக்குரிய பெருமையைத் தவிர, இந்த அரசின் எந்தச் சாதனைகளையும் நான் பாராட்ட முடியாது. ஆனால் அதிமுக ஆதரவோடு நடைபெறும் ஆட்சிகவிழ்ப்பு முயற்சி தமிழகத்தின்  நலனுக்கும், இந்தியாவின் நலனுக்கும் எதிரானது. எனவே தற்போதைய அரசு தொடருவதை நாங்கள் ஆதரிக்கிறோம்"   என்று மாறன் பேசினார்.

"மதவெறியை மாய்ப்பதில் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல, அது எங்கள் குருதியோட்டத்தோடு கலந்த ஒன்று. பாஜக கொள்கையில் நாங்கள் சமரசமாகி அந்த அடிப்படையில் இந்த முடிவை எடுக்கவில்லை" என்று கலைஞர் பத்திரிக்கைளிடம்  விளக்கினார்

 1998ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று, மத்திய ஆட்சியிலும் அங்கம் வகித்து, பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் படாதபாடுபடுத்தி, கடைசியில் ஆதரவையும் விலக்கிக் கொண்டு ஆட்சியைக் கவிழ்த்திருக்காவிட்டால், திமுக, பாஜகவுடன் கூட்டணி சேருகின்ற நிலை ஏற்பட்டிருக்காது. பாஜக ஆட்சியைக் கவிழ்த்து, அவர்களை நிராதரவாக விட்டுவிட்ட நிலையில் மனிதாபிமான எண்ணத் தோடு, அதே நேரத்தில் சிறுபான்மைச் சமூகத்தினருக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படக்கூடாது என்ற எழுத்துப்பூர்வமான  உத்தரவாதத்தோடுதான் திமுக அந்த அணியோடு கூட்டு சேர நேரிட்டது.

எல்லாவற்றுக்கும் மேலாக திமுக வாஜ்பாயை ஆதரித்தது ஒரு #நன்றிக்கடனே.

வாஜ்பாய் ஜெயலலிதா பேச்சைக் கேட்டு அவரின் வழக்குகளை வாபஸ் வாங்கியிருந்தால் , திமுக ஆட்சியை கவிழ்த்து இருந்தால் ஜெயலலிதா பிஜேபி ஆட்சியை கவிழ்த்திருக்க மாட்டார்.

#எனவே_நேர்மையாக_நடந்துக்_கொண்ட_வாஜ்பாயின்_அரசை_காப்பற்ற_வேண்டிய_அவசியமும்_கடமையும்_அன்று_திமுகவிற்கு_இருந்தது. அது காலத்தின் கட்டாயம்.


சுதந்திர இந்தியா சந்தித்த முதல் ஊழல்

காமராஜர் மிகவும் நேர்மையானவர்தான். அவர் சார்ந்திருந்த காங்கிரஸ் கட்சி 1947 முதல் 1971 வரை செய்த மெகா ஊழல்கள் பற்றி தெரியுமா?
அந்த காலத்திலேயே ஊழல் சாம்ராஜ்யம் நடத்திய காங்கிரசில் காமராஜர் ஏன் இருந்தார்?

நல்லா இருந்த நாட்டை கலைஞர் வந்து ஊழல் செய்து கெடுத்துட்டாருன்னு இணையத்தில் புலம்பும் பழைய காங்கிரஸ்காரர்களை பார்த்திருப்பீர்கள்.

அந்தகால காங்கிரசை சேர்ந்தவர்களுக்கு கலைஞர்தான் ஊழலை ஆரம்பித்தார் எனச் சொல்ல அவர்களுக்கு யோக்கியதை உள்ளதா?

காமராஜர் சார்ந்திருந்த அன்றைய காங்கிரஸ் பெரிய ஊழல் கட்சியாக அன்று திகழ்ந்தது தெரியுமா?

தினம் தினம் இத்துப்போன சயின்டிபிக் கதையையும் ஆதாரமில்லாமல் தூக்கி எறியப்பட்ட சர்க்காரியா கமிசன் கதைகளையும் தினம் தினம் திமுகவினர் கேட்க வேண்டியுள்ளது .

இந்த விசயங்களை தலையில் வைத்துக் கொண்டு, திராவிட கட்சிகளிடம் பிச்சையெடுத்து பொறுக்கி தின்றதை மறந்த,  தமிழகத்தின் சாதி கட்சி தமிழ்தேசிய கட்சியினரும் கலைஞர் மீது சேற்றை வாரி பூசுவதையும் தினமும் Twitter,  Facebook இல் காணமுடியும்.

அதிலும் இந்த தமிழ்தேசிய கட்சிகள் காமராஜர் பெயரில் கலைஞரை கிண்டல் செய்வது கேனத்தனத்தின் உச்சம்.

சுதந்திர இந்தியாவில் நேரு இந்திரா காலத்தில் நடத்தப்பட்ட மெகா ஊழல்களையும் அதை மறைத்து ஊழலில் சம்பந்தப்பட்ட அதே நபருக்கு நேரு பதவி வழங்கிய லெட்சணத்தையும் இங்கே விவரிக்கிறேன்.

சுதந்திர இந்தியா சந்தித்த முதல் ஊழல்

1948ம் ஆண்டில் இங்கிலாந்துக்கான இந்திய தூதராக இருந்த கிருஷ்ண மேனன்  லண்டனைச் சேர்ந்த  ஒரு போலி நிறுவனத்திடமிருந்து 2000 ஜீப்புகள் வாங்க பரிந்துரை செய்தார்.

இதில் கொடுமை என்னவென்றால் அந்நிறுவனத்திற்கு மொத்த பணமும் முன்பணமாகவே வழங்கப்பட்டது


2000 ஜீப்புகளுக்கு பதிலாக வெறும் 155 ஜீப்புகள் மட்டுமே, அவையும் தரம் குறைந்ததாக வந்து சேர்ந்தது.

 பத்திரிக்கைகளில் பெரிய அளவில் செய்திகள் வந்தும், நேரு கிருஷ்ண மேனனை பாதுகாப்புத் துறை அமைச்சராக்கினார்.

யார் ஊழல் செய்தாரோ அவரையே அத்துறைக்கு மந்திரியாக்கிய நேருவுக்கு அந்த ஊழலில் தொடர்பில்லை என சொல்லமுடியுமா?

பலகோடி ரூபாய் ஊழல் என்பது ஏழாண்டுகள் கழித்துத் தெரியவந்தது.

2)  1949ல் ராவ் சிவ பகதூர் சிங் என்பவர், ஒரு வைரச் சுரங்க உரிமத்தை புதுப்பித்து தருவதற்காக சச்சேந்திர பாரன் என்ற வைர வியாபாரியிடம் ரூ.25,000 லஞ்சம் பெற்றதற்காக 3 ஆண்டுகள் சிறையில் இருந்தார். இந்த ராவ் சிவ பகதூர் சிங் யார் தெரியுமா ? மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்த அர்ஜுன் சிங்கின் தந்தை.

3)  1951ம் ஆண்டில், மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை செயலாளராக இருந்த எஸ்.ஏ.வெங்கட்ராமன் சம்பந்தப் பட்டது. ஒரே நிறுவனத்துக்கு சைக்கிளின் உதிரி பாகங்கள் அனைத்தையும் இறக்குமதி செய்ய ஆணையிட்டதில் ஊழல் நிரூபிக்கப் பட்டு, வெங்கட்ராமன் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தார்.( நன்றி சவுக்கு)

4) முந்த்ரா - டி.டி.கிருஸ்ணமாச்சாரி ஊழல்

1957 ல் T.T.K. நிதி மந்திரியாக இருந்தபோது ஹரிதாஸ் முந்திரா என்பவருக்குச் சொந்தமான நிறுவனங்களின் பங்குகளை ரூ. 1,26,86,100 க்கு (ஒரு கோடியே இருபத்தியாறு லட்சத்து எண்பத்தி ஆராயிரத்து நூறு ரூபாய்க்கு) L.I.C.  வாங்கியது.   நிதித் துறையின் முதன்மைக் காரியதரிசி திரு. H.M.பட்டேல் அப்போது  L.I.C. யின் சேர்மனாக இருந்த K.R. கமல்நாதை வாங்கும்படி கூறினார்.  முந்திராவின் நிறுவனங்களெல்லாம் கான்பூரில் இருந்தன.

முந்திரா ஒரு தொழிலதிபரே இல்லையென்றும் ஆகவே அவர் நிறுவனத்தின் பங்குகள் உண்மையானவை இல்லையென்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதற்கு நீதிபதி சாக்லா விசாரணைக் கமிசன் அமைக்கப் பட்டது.

நிதி அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி நிதித் துறைச் செயலரின் நடவடிக்கைகளுக்கு, நிதி அமைச்சர் என்ற வகையில் கிருஷ்ணமாச்சாரியும் பொறுப்பு என்று  நீதிபதி சாக்லா கூறினார்.

 கிருஷ்ணமாச்சாரி பதவி விலகினார்.
ஆனால் இதே கிருஸ்மாச்சாரிக்கு நேரு 1963 இல் மீண்டும் Finance மந்திரி பதவி வழங்கினார்.

இதைவிட கேவலம் உண்டா?

அதன் பிறகு 1971ம் ஆண்டில் நகர்வாலா ஊழல் என்று பிரபலமாக அழைக்கப் பட்ட ஊழல்  என எண்ணற்ற ஊழல்கள்..

இதெல்லாம்  காமராசர் காங்கிரசில் இருந்த காலத்தில்தான் நடந்தது என்பதை கலைஞரை திட்டித் தீர்க்கும் காமராஜரின் வழி வந்தவர்களாக சொல்லிக் கொள்பவர்களுக்கு தெரியுமா? தெரியாதா?

அத்தனை மோசமான காங்கிரசில் காமராசர் ஏன் இருந்தார்?

சொல்லுங்கடே

கலைஞர் காமராஜரை திட்டினார் என்பவர்கள் அவர் காமராஜரை போற்றியதை சொல்ல மறந்ததேன்?

கலைஞர் அன்றைய எதிர்கட்சித் தலைவராக இருந்த காமராஜரை திட்டியதாக சொல்பவர்கள் கலைஞர் அவரை எப்படி வாழ்த்தினார் என்பதையும் எப்படி மதித்தார்என்பதையும் ஏன் சொல்ல மறந்தனர்?

1) காமராஜரையும்,  காங்கிரசையும் கடுமையாகத் தாக்கிய ஈ.வே.ரா.,"பச்சைத்தமிழன்' என காமராஜரைப்  பாராட்டினார். காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைமையையும் துவக்க காலத்தில்  கடுமையாக விமர்சனம் செய்த கருணாநிதி ,அண்ணா ,எம்ஜிஆர்  போன்றோர் தனிப்பட்ட முறையில் காமராஜர் மீது மரியாதையையும் அன்பும் செலுத்தினர்.

2) காமராஜரின் பிறந்த தினத்தை, "கல்வி வளர்ச்சி தினமாக'  கடைபிடிக்கப்படுகிறது.
கலைஞர் #கருணாநிதி தனது ஆட்சிக்காலத்தில்தான் காமராஜர் பிறந்த தினத்தை  கல்வி வளர்ச்சி தினமாக அறிவித்து பள்ளிகள் தோறும் கொண்டாட  வைத்தார்.

3) முதன் முதலாக தமிழகத்திலே காமராஜர் அவர்களுக்கு சிலை அமைத்த பெருமை திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்பிலே இருந்த சென்னை மாநகராட்சியைச் சேர்ந்ததாகும்.

4) காவேரிப் பிரச்சினை, நெருக்கடி கால நிலை என்பன போன்றவற்றில் ஒவ்வொரு முடிவிற்கு முன்பும் காமராஜர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் ஆயிற்றே என நினைக்காமல், அனுபவத்தில் மூத்த அரசியல் தலைவர் என்ற முறையில் அவரை கலைஞர் அணுகி அவருடைய வீட்டிற்கே சென்று அவருடைய கருத்துக்களைத் தெரிந்துகொண்டு அவ்வாறே செயல்பட்டிருக்கிறார்.

5) பேரறிஞர் அண்ணா அவர்கள்தமிழகத்தின் முதல்வராக இருந்து நடத்திய இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டின்போது மாநாட்டிற்கு வந்தவர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றி அந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தவர் காமராஜர் அவர்கள்தான்.

6) தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் பிரதமர் வாஜ்பய் அவர்களிடம் வலியுறுத்தி, வாதாடிப் பெற்று குமரிக் கடற்கரையில், காமராஜருக்கு, ஏற்றமிகு மணி மண்டபம் ஒன்றை #கலைஞர் எழுப்பியதை எவர்தான் மறந்திட இயலும்?

7) சென்னை கடற்கரை சாலை, கழக ஆட்சியில் காமராஜர் சாலை ஆயிற்று. மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையம் காமராஜர் பெயர் தாங்கி நிற்பதற்கு காரணம் #கலைஞர்தான்

8) விருதுநகரில் காமராஜர் பிறந்த இல்லத்தை நினைவகம் ஆக்கியது, சென்னையில் அவர் உடலை அடக்கம் செய்ய கிண்டியில், அண்ணல் காந்தி அடிகளின் பெயரால் உள்ள மண்டபத்திற்குப் பக்கத்திலேயே இடம் தேடி அங்கே எழிலார் நினைவகம் அமைத்தது போன்றவை கர்ம வீரர் காமராஜர் நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் ஆற்றிய தொண்டுக்கு #கலைஞர் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட எளிய காணிக்கைகளாகும்.

9) தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்திற்கு காமராஜரின் தாயார் பெயர் நினைவில் நிலைத்திருக்கும் வகையில் “அன்னை சிவகாமி அம்மையார் வளாகம்” என்று பெயர் சூட்டியதும், அரசின் “பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட”திற்கு சிவகாமி அம்மையார் பெயரைச் சூட்டி அதை நடைமுறைப்படுத்தியதும், காமராஜரின் ஊழியராகப் பணியாற்றிய வைரவன் என்பவரை சென்னை காமராஜர் நினைவகத்தில் வழிகாட்டியாக அரசு ஊதியத்தில் அமர்த்தியதும், அவர் குடியிருக்க அரசு குடியிருப்பில் வீடு வழங்கியதும் #கலைஞர்தான்.
காமராஜர் பிறந்த நாளையொட்டி 15-7-1976இல் கலைஞர் எழுதிய ஒரு கவிதை :-

“பெருந்தலைவ;
இன்றைக்கு உன்றன் பிறந்தநாள் –
கொள்கைக் குன்றுக்கு எங்கணும் திருவிழா!
விருதையில் பிறந்து வீரனாய் வளர்ந்தாய்
சரிதையில் நிறைந்த தலைவனாய் நின்றாய்!
சிறையின் கொடுமையும் சித்ரவதையும்
சிரித்த முகத்துடன் ஏற்ற தியாகி
ஆயிரம் உண்டு கருத்து மோதல் – எனினும்
அழியாத் தொண்டு மறந்திடப்போமோ?

தமிழ்நிலம் மணக்க வந்த திருவே!
அமிழ்தெனும் பொதுப்பணியின் உருவே!
கருத்திருக்கும் உன்றன் உடல் என்றாலும் – நெஞ்சில்
கருத்திருக்கும் காலமெல்லாம் உழைப்பதற்கு!
கதராடை மேனிதனை அலங்கரிக்கும் –
கதறுகின்ற ஏழைகளைக் கரம் அணைக்கும்.

கட்சிகளை நோக்கி, நீ கடுமொழிகள் தொடுத்திடுவாய் – பிற
கட்சித் தலைவர்க்கோர் இன்னலென்றால் துடித்திடுவாய்!
பெரியாரின் கல்லறையில் உன் கண்ணீர்!
பேரறிஞர், மூதறிஞர் மறைந்த போதும் உன் கண்ணீர்!
பெற்ற தாய்தனை நான் இழந்தபோதும்
உற்றார் உறவுபோல் நீ வந்து உகுத்தாய் கண்ணீர்!
பெருமகனே! உனக்காக எம் கண்ணீர்
பேராற்றுப் பெருக்கெனவே பாய்ந்த தன்றோ?

தனி மனிதன் வாழ்வல்ல உன் வாழ்வு
தன்மானச் சரித்திரத்தின் அத்தியாயம்
குமரிமுதல் இமயம்வரை உன்கொடி பறக்கக்
கோலமிகு தமிழகத்தின் புகழ் பொறித்தாய்.
“குணாளா! குலக்கொழுந்தே!”” என்று பண்பின்
மணாளர் எங்கள் அண்ணன் உனை அழைத்தார்.
பச்சைத் தமிழன் எனப் பகுத்தறிவுத் தந்தை
இச்சையுடன் உன் உச்சி முகர்ந்தார்.
கருப்புக் காந்தியென உன்னை – இந்தக்
கடல்சூழ் நாடு கைகூப்பித் தொழுததன்றோ!

வாழ்க்கையின் ஓரத்தில் நீ எம்மிடம் வாஞ்சையும் காட்டினாய்! உன்
வாழ்வையே ஒரு பாடமாய் அனைவர்க்கும் நிலை நாட்டினாய்!
இன்றைக்கு உன்றன் பிறந்த நாள் –
என்றைக்கும் அது சிறந்த நாள்!

By. Antony Parimalam



தமிழகத்தில் மீத்தேன் எடுக்க தொடங்கியது எப்போது?

தளபதி திரு.ஸ்டாலின் அவர்கள்தான்  மீத்தேன் ஆய்விற்கு முதன்முதலில் அனுமதி கொடுத்தாரா?

மீத்தேன் என்பது Natural gas இல் 75% உள்ள CH4 hydro carbon ஆகும்.

தமிழகத்தில் Oil and natural gas எடுக்கும் பணி 1986 முதல் நடந்து வருகிறது.

கடந்த 50 வருடங்களாக ஆய்வுகள் நடத்தப்பட்டு களப்பால் உட்பட 35 இடங்களில் ONGC ஆயில் கிணறுகளை டெல்டா பகுதிகளில் தோண்டி இயற்கை வாயுவும் கச்சா எண்ணையும் எடுத்து வருகிறது .

ஒரு நாளைக்கு  டெல்டா பகுதிகளில் 700 tons of oil and extracts 3.8 million cubic metres of natural gas per day தற்போது எடுக்கப்பட்டு வருகிறது.

2014-15 இல் மட்டும் டெல்டாவில் Natural gas and oil எடுத்தற்காக
தமிழக அரசுக்கு ONGC 300 கோடியும் VAT 110 கோடியும் கொடுத்துள்ளது.

இதையெல்லாவற்றையும் மறைத்து செயல்தலைவர் திரு ஸ்டாலின் மீத்தேன் ஆய்வு செய்ய இப்போதுதான் முதன் முறையாக அனுமதி கொடுத்ததாக ஒரு மிகப்பெரிய பொய்யை அவிழ்த்துவிட்டு  அப்பாவி இளைஞர்கள் மனதில் நஞ்சை
விதைக்கின்றனர் அயோக்கிய அரசியல்வாதிகள்


மீத்தேன் எடுக்க ஸ்டாலின்தான் அனுமதி வழங்கினார் :-  மங்குனி மாங்கா மடையன்கள்

இயற்கை வாயுவில் இருந்து எடுக்கப்படுவதுதான் மீத்தேன். மன்னார்குடி பகுதியில் #மீத்தேன்ஆய்வுக்குதான் திரு ஸ்டாலின் அனுமதி வழங்கினார். #மீத்தேன்எடுப்பதற்கு அல்ல. தற்போது அனுமதி வழங்கப்பட்ட அந்த கம்பெனியே ஒதுங்கிக்கொண்டது. இது முடிந்து போன கதை.

 இப்படி  மீத்தேன் ஆய்வுக்கு வழங்கிய  அனுமதியை அப்படியே திரித்து மீத்தேன் எடுக்க அனுமதித்தது போல பொய்யை பரப்புகிறனர் மங்குனி மாங்கா மடையன்கள்..

கடந்த 50 வருடங்களாக காவேரி டெல்டாவில் நரிமனம் , களப்பாள் பகுதிகளில் ONGC நிறுவனத்தால் குரூட்ஆயிலும் இயற்கை வாயுவும் எடுக்கப்பட்டு வருகிறது. இன்றும் 25க்கும் மேற்பட்ட இடங்களில் ONGC மீத்தேன் ஆய்வு செய்து வருகிறது. இவ்வாறு எடுக்கப்படும் குரூட்ஆயில் மற்றும் இயற்கை வாயுக்களுக்கு ஆண்டுதோறும் ONGC தமிழக அரசிற்கு ராயல்டியும் வாட் வரியும் செலுத்துகிறது.

இந்த உண்மையெல்லாம் தெரிந்தே ஸ்டாலின் அவர்களின் மீது பொய் பழி சுமத்திகிறார்கள் இந்த பொய்யர்கள்.
திமுகவின் பிச்சையால் 5 வருடம் MPயாக மத்திய மந்திரியாக இருந்த அன்புமணி காவேரி டெல்டாவில் கடந்த 50 ஆண்டுகளாக ONGC யால் இயற்கைவாயு எடுக்கப்படுவதை ஒருமுறையாவது எதிர்த்தாரா?
ஏன் எதிர்க்கவில்லை?




The Narimanam oil field was discovered in 1986 and stopped production in the early 2000s. The Kuttalam field was discovered in the mid 1990s and is producing some gas.

உண்மை அறிய TOI வின் இந்த கட்டுரையை படிக்கவும்

ONGC steps on the gas, locals put brakes - The Times of India on Mobile
http://m.timesofindia.com/city/chennai/ONGC-steps-on-the-gas-locals-put-brakes/articleshow/48647239.cms

கலைஞருக்கும் கட்ச தீவு தாரை வார்க்கப்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.**

கலைஞருக்கும் கட்ச தீவு தாரை வார்க்கப்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.**
பக்தவச்சலம் காலத்திலேயே அப்போது மந்திரியாக இருந்த ராமநாதபுரம் ராஜா முன்னிலையிலேயே 1964 லேயே கட்சதீவை பற்றி பேசி முடிவெடுத்து விட்டனர்.

1974 ஜூனில் திடீரென்று இந்திராகாந்தி மந்திரிசபையை கூட்டி கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்படைக்க முடிவெடுத்து  விட்டார்.
சட்டப்படி மாநில அரசின் தீர்மானமோ லோக்சபா ஒப்புதலோ பெறப்படவேயில்லை.

கலைஞருக்கே பேப்பரை படித்துதான் விசயமே தெரியும். அந்த ஒப்பந்தத்தை எதிர்த்து கலைஞர் சட்டசபை தீர்மானம் இயற்றினார். ஆனால் அதிமுக அதில் கலந்துக்கொள்ளவில்லை.

உண்மை என்னவென்றால் எம்ஜிஆர் நெடுமாறன் உட்பட எந்த தமிழக கட்சியும் கட்சத்தீவு ஒப்பந்தத்தை எதிர்க்கவேயில்லை.
அதற்கு இந்திராவின் மீதான பயமும் ஒரு காரணம்.
அன்று ஆண்மையோடு எதிர்த்த திமுக மீது இந்திரா கடும் சினம் கொண்டு 1976 மத்தியில் எமர்ஜென்ஸி மூலம் பழி தீர்த்ததுடன் 1976 ஆரம்பத்தில் திமுக ஆட்சியையே கலைத்து விட்டார்.

1974 ஒப்பந்தம் இன்று இருந்திருந்தால் அதை வைத்து தமிழக மீன்பிடி உரிமையை இன்று கோரமுடியும்.

ஆனால் 1976 இல் திமுக ஆட்சியை கலைத்த இந்திரா அதே ஆண்டில் இலங்கையுடன் 1974 ஒப்பந்தத்தை திருத்தி புதிய கட்சத்தீவு ஒப்பந்தத்தை போட்டார். இந்த ஒப்பந்தத்தில்தான் தமிழக மீனவர்களின் மீன் பிடிக்கும் உரிமை எல்லை நிர்ணய அடிப்படையில் பறிபோனது.

1976 ஒப்பந்தம் போடபட்டபோது லோக்சபாவோ சட்டமன்றமோ கிடையாது என்பதால் அது சட்டப்படி செல்லும். மேலும் 1982 எம்ஜிஆர் ஆட்சியில் முறைப்படி இலங்கைக்கு அரசு உத்தரவு மூலம் கட்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது.

எனவே கச்சதீவை இந்திய நீதிமன்றம் மூலமாக இனி மீட்க இயலாது. எம்ஜிஆரால் தாரை வார்க்கப்பட்ட கட்சத்தீவை மீட்க போவதாக சொல்லி ஜெ போட்ட வழக்கு மக்களை ஏமாற்றப் போட்ட ஒரு நாடகம்தான்

மீனவர்களின்  மீன்பிடி உரிமை பறிபோனது 1976 இல் போடப்பட்ட இறுதியான கட்சத்தீவு ஒப்பந்தத்தான்.

முறையாக இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது 1982 இல்தான் .

1976 இல் கலைஞர் ஆட்சியிலேயே இல்லையே. அவருக்கும் கட்சத்தீவு ஒப்பந்தத்திற்கும் என்ன சம்பந்தம்.?

1974 இல் தமிழகத்தின் எதிர்கட்சிகள் கலைஞரோடு சேர்த்து ஒற்றுமையாக இந்திராவை எதிர்த்து போராடியிருந்தால் 1976 இல் கட்சத்தீவு ஒப்படைக்கப்பட்டதை தடுத்து இருக்கலாம்.

அன்று ஒப்பந்தத்தை எதிர்த்த கலைஞரை வசைபாடிய எதிர்கட்சிகள்
அன்று இந்திராவுக்கு பயந்து கழிப்பறையில் ஒளிந்து கொண்ட எதிர்கட்சிக்கட்சிகள்
இன்று கலைஞரை குறை சொல்கின்றனர்

கட்சத்தீவு ஒப்படைக்கப்பட்ட போது திமுகவுடன் சேர்ந்து இந்திராவை எதிர்த்து கருத்து தெரிவிக்காத எவனுக்கும் கலைஞரை கேள்வி கேட்க யோக்கியதை இல்லை

திராவிடம் இல்லாவிடில் மருத்துவத்துறையின் உள்ளே நீ நுழைந்திருப்பாயா தமிழா? ***

திராவிடம் இல்லாவிடில் மருத்துவத்துறையின் உள்ளே நீ நுழைந்திருப்பாயா தமிழா? ***
மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இதைப் படிப்பவர்கள் நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆங்கில மருத்துவப் படிப்பிற்கும் சமஸ்கிருதத்திற்கும் என்ன தொடர்பு? எந்தத் தொடர்புமில்லாத நிலையில் ஏன் அப்படி ஒரு நிலை இருந்தது? யாரால் அந்த நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கும்? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சமஸ்கிருத மொழி தெரியாத பார்ப்பனரல்லாத திராவிட மக்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பைப் பறிக்கும் சதி இதில் அப்பட்டமாகத் தெரிகிறதா இல்லையா?. ஆங்கிலேயர் ஆண்ட போதே இந்த நிலை என்பதைப் பார்க்கும் போது, ஆங்கிலேயரிடம் பார்ப்பனர்களுக்கு இருந்த செல்வாக்கு தெரிகிறதா இல்லையா? சிறிதளவு ஆட்சி அதிகாரம் பார்ப்பனரல்லாத இயக்கமான நீதிக் கட்சியின் கைகளுக்குச் சென்றபோது, மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு சமஸ்கிருதம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற தகுதியை நீக்கி, அனைவரும் மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு வாய்ப்பளித்தார்கள். இது தவறா? இதனால் பார்ப்பனர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரியில் அதிக இடம் கிடைக்கும் என்ற நிலை மாறிவிட்டதே என்று புலம்புவதில் என்ன நியாயம் இருக்கிறது?

1918ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக் குழு வித்வான் தேர்வுக்கு சமஸ்கிருதத்தைக் கட்டாயப் பாடமாக்க முடிவு செய்தது.

 சமஸ்கிருத அறிவு இல்லாத ஒருவரை திராவிட மொழிப் புலமை இருப்பவராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று வாதிட்டார்கள்.
பல்கலைக்கழகத் திட்டப்படி, இரண்டு திராவிட மொழிகளைத் தெரிவு செய்து படிக்கலாம் என்ற விதி இருந்தும், ஒரு திராவிட மொழியும் சமஸ்கிருதமும் சேர்த்துப் படிக்க மட்டுமே வசதிகள் செய்யப்பட்டிருந்தன. திராவிட மொழிப் படிப்பைத் தெரிவு செய்த குற்றத்துக்காக திராவிட மாணவர்கள் சமஸ்கிருதம் பயில வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்த நிலையெல்லாம் மாறி பார்ப்பனரல்லாதவர்கள் கல்வி பெற வாய்ப்பளித்தது திராவிடர்களின் இயக்கமான நீதிக் கட்சி. இதில் என்ன தவறு இருக்கிறது? மூன்றரை சதவிகிதம் உள்ள பார்ப்பனர்கள் மட்டுமே படித்து அறிவு பெற அதிகம் வாய்ப்பிருந்த நிலை மாறிவிட்டது குறித்துப் புலம்புவதில் என்ன நியாயம் இருக்கிறது?

1901ஆம் ஆண்டின மோசமான நிலையை மாற்றி அனைவருக்கும் கல்வி கிடைக்க வழிவகை செய்தது நீதிக்கட்சி.  கல்வியில் இந்த நிலை என்றால், வேலைவாய்ப்பு படுமோசம்.

சுமார் மூன்றரை சதவிகிதம் இருந்த பார்ப் பனர்கள், கல்வியையும், அரசுப் பணிகளையும் மொத்தக் குத்தகை எடுத்தது போல இருந்த நிலையை மாற்றி அனைவருக்கும் சமமான வாய்ப்பை திராவிடர் இயக்கமாம் ஜஸ்டிஸ் கட்சி எப்படி வழங்கியது என்பதற்குச் சான்று,  ஜஸ்டிஸ் மந்திரிகள் வந்த பிறகு நமது மாகாணத்தில் இலவசக் கல்வியும், கட்டாயக் கல்வியும் ஏற்பாடு செய்து அநேக இடங்களில் அமலில் கொண்டுவந்து இருக்கிறார்கள். 5 வயது முதல் 12வயது வரை ஒவ்வொரு குழந்தையையும் கண்டிப்பாய்ப் படிக்க வைக்க வேண்டும். இல்லா விட்டால் பெற்றோருக்குத் தண்டனை என்று சட்டமும் செய்து இருக்கிறார்கள். அதன் மூலம் படிக்கும் இலட்சக்கணக்கான பிள்ளைகளில் 100க்கு  99 பேர் பார்ப்பனர் அல்லாதோர் என்று குடிஅரசில் (26.10.1926) செய்தி வந்துள்ளது. மேற்கண்ட செய்தி பல தகவல்களை நமக்குத் தருகிறது. இன்றைக்கு வரலாறு தெரியாமல் திராவிட இயக்கம் என்ன செய்தது? என்று கேள்வி கேட்கும் பார்ப்பனரல்லாத இளைய தலைமுறை யின் கேள்விக்குமான பதிலும் இதில் அடங்கி யிருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து வெளியேறிப் போய் வேலை செய்யும் நிலை வந்துவிட்டதே,  இதற்கெல்லாம் காரணம் திராவிட இயக்கங்கள் தானே என்று புலம்புகிறார் பத்ரி சேஷாத்திரி. இது உண்மையா?

இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர் மனியின் கை ஓங்கியிருந்த போது, ஜெர்மனி தான் வெல்லும் என்ற நிலை இருந்தபோது, தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள் ஜெர்மன் மொழியைக் கற்றார்கள் என்பதுதானே வரலாற்றில் பதிவாகி யிருக்கும் செய்தி. ஜெர்மன் மொழியைக் கற்றுக் கொள்ளச் சொல்லி திராவிட இயக்கமா வலியுறுத்தியது?

சுயநலம், சந்தர்ப்பவாதம் நிரம்பிய பார்ப் பனர்கள் தங்கள் வசதிக்காக, உயர்வுக்காக இடம் மாறிச் சென்று பிழைப்பது இன்று நேற்றா நடக் கிறது? இந்தியா முழுவதும் பார்ப்பனர்கள் வசிப் பதில் இருந்தே தெரிந்துகொள்ளலாமே பிழைப் பதற்காக இடம் பெயரும் அவர்களின் இயல்பான குணத்தை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்த இடப் பெயர்வை ஏதோ எழுபதுகளில்தான் முதன்முதலில் நடந்தது போல நீலிக் கண்ணீர் வடிப்பது நியாயமா?

பார்ப்பனர்களைத் தவிர்த்து வேறு ஜாதியைச் சேர்ந்த யாரும் தமிழ்நாட்டை விட்டு வெளியேறி வேறு மாநிலங்களில், வேறு நாடுகளில் பணிபுரியாமலா இருக்கிறார்கள்?

பார்ப்பனர்கள் பஞ்சம் பிழைக்கவா இடம் பெயர்ந்து சென்றனர்? இல்லையே. தங்கள் வசதிக்காகச் சென்றனர்.

பத்ரி சேஷாத்திரி மற்றும் அவரைப் போன்ற சிந்தனை கொண்டுள்ள பலருக்குமான கேள்விகள் பின்வருமாறு :

மாதச் சம்பளம் வாங்காத பார்ப்பனர்கள் எத்தனை சதவிகிதம்?

மாதச் சம்பளம் வாங்காத மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை சதவிகிதம்?தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளில் உள்ள பார்ப்பனர்கள் எத்தனை சதவிகிதம்?

தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளில் உள்ள மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை சதவிகிதம்?

ஏசி அறையில் வேலை பார்க்கும் பார்ப்பனர் கள் எத்தனை சதவிகிதம்?

ஏசி அறையில் வேலை பார்க்கும் மற்ற சமூ கத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை சதவிகிதம்?

உடல் உழைப்பில் ஈடுபடும் பார்ப்பனர்கள் எத்தனை சதவிகிதம்?

உடல் உழைப்பில் ஈடுபடும் மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை சதவிகிதம்?

மூட்டை தூக்கியாவது சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே மற்ற ஜாதியைச் சேர்ந்தவர்கள். அவர்களைப் போல கூலித் தொழில் செய்யும் பார்ப்பனர்களை எங்காவது கண்டதுண்டா?

இவற்றுக்குப் பதில் சொல்ல முடியுமா?

இவற்றிற்கான பதில்களில் அடங்கியிருக்கிறது புலம்பல்களில் உள்ள நியாயமற்ற தன்மை. நாற்று நட்டாயா? களை பறித்தாயா? என்று வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்பட வசனம் போல பாரப்பனரல்லாதவர்கள் கேள்வி கள் கேட்டால், தலை குனிந்து நிற்க வேண்டி யிருக்கும் பார்ப்பனர்கள்.



வண்டி இழுக்காமல், வயலில் வேலை செய்யாமல், கல் உடைக்காமல், மண் சுமக்காமல், சிரைக்காமல், தைக்காமல், லாரி ஓட்டாமல், தெருப் பெருக்காமல், மலம் அல்லாமல், மரம் ஏறாமல், மீன் பிடிக்காமல், விறகு வெட்டாமல், மூட்டை தூக்காமல், அப்படி இல்லாமல், இப்படி இல்லாமல், மொத்தத்தில் உடல் நோவாமல், அழுக்குப் படியாமல், இத்தனை ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் சாமர்த்தியம் உள்ள பார்ப்பனர்கள், முட்டி மோதி முன்னேற முயற்சிக்கும் மற்ற ஜாதி மக்களைப் பார்த்துப் பொறாமை கொள்வது எந்த விதத்தில் நியாயம்? நேர்மையாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இடஒதுக்கீடு என்பது வாய்ப்பு மறுக்கப் பட்டவர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்பு. இடஒதுக்கீடு என்பது போடப்படும் பிச்சை அல்ல, பெறப்படும் உரிமை. இடஒதுக்கீடு என்ற முறை இல்லையென்றால், சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கும். ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்தால் குற்றங்கள் பெருகும், சட்டம் ஒழுங்கு சீர் கெடும். ஒரு நாள் பிரச்சினைகள் முற்றும், புரட்சி வெடிக்கும். புரட்சி வெடித்தால், சுரண்டிக் கொழுப்பவர்களின் தலைகள் கொய்து எறியப்படும், ஆதிக்கம் புரிபவர்கள் அழித்தொழிக்கப்-படுவார்கள். நாடே சிதறுண்டு போகும்.

இது வெறும் கருத்தல்ல, இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரானவர்களுக்கான எச்சரிக்கை! மத்திய அரசு சமஸ்கிருதத்தை வளர்க்க முயன்றால், அது பார்ப்பனர்களின் சதியா? என்று கேட்கிறார் பத்ரி சேஷாத்திரி. பார்ப்பனர்களின் சமஸ்கிருதத் திணிப்பு குறித்து தனியாக நீண்டதொரு கட்டுரையே எழுதக் கூடிய அளவிற்கு வரலாற்றுச் செய்திகளும் ஆதாரங்களும் நிறையவே இருக்கின்றன. அது ஒருபுறம் இருக்க, எங்கும் பேச்சுவழக்கில் இல்லாத சமஸ்கிருத மொழியை, அந்த மொழிக்குத் தொடர்பே இல்லாத திராவிட மொழியான தமிழ் மொழியைப் பேசும் மக்கள் மீது திணித்தால், அதை எப்படி எடுத்துக் கொள்வார்கள்?

சமஸ்கிருதம் சீனர்களின் மொழியென்றால், அதைச் சீனர்களின் சதி என்றழைக்கலாம், அது பார்ப்பனர்களின் மொழி என்பதால், அதைப் பார்ப்பனர்களின் சதி என்றுதானே சொல்லு வார்கள். பார்ப்பனர்களைத் தவிர வேறு யாராவது அவர்கள் மொழியை மற்றவர்கள் மீது திணிப்பார்களா? அப்படித் திணிப்பதால் அவர்களுக்கு என்ன லாபம்? எனவே அதைப் பார்ப்பனர்களின் சதி என்று கருதுவதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.

சமஸ் கிருதம் பார்ப்பனர்களின் மொழியல்ல, அது இந்தியர்களின் மொழி, கடவுளின் மொழி என்றெல்லாம் சொல்லி பத்ரி சேஷாத்திரி தப்பிக்க முடியாது. காரணம், கட்டுரையின் இறுதிப் பகுதியில் பார்ப்பனர்களும் மற்றவர்களைப் போல தங்கள் மொழியைப் பாதுகாக்கும் நிலை வேண்டும்   என்று விருப்பத்தைத் தெரிவித்துள் ளார். உங்கள் மொழியை உங்கள் வீட்டிற்குள் நீங்கள் பேசிக்கொள்ளுங்கள், அதை யாரும் தடுக்கவில்லை. ஆனால், உங்கள் மொழியை மற்றவர்கள் மீது திணிக்காதீர்கள் என்றுதானே சொல்லுகிறார்கள். இதில் என்ன தவறிருக்கிறது?

நன்றி
#திராவிடப்புரட்சி

திராவிட ஆட்சியில்தான் கல்வி, தொழில், சுகாதாரத்தில் தமிழகம் TOP. எனவே தமிழ் தேசியங்களின் கதைகள் எல்லாம் டூப்

திராவிட ஆட்சியில்தான் கல்வி,  தொழில், சுகாதாரத்தில் தமிழகம் TOP. எனவே தமிழ் தேசியங்களின் கதைகள் எல்லாம்
டூப்   ***
மெட்ராஸ் பிரஸிடென்ஸி என்பதை தமிழ்நாடு என்று சொல்ல வைத்தது திராடம்தானே . எந்த தமிழ்ப் பத்திரிகையும் உபாத்தியாயர் என்று எழுதுவதில்லை ஆசிரியர் என்று தான் எழுதுகின்றன. எல்லாவற்றிலும் தமிழ் என்பது இங்கு அங்கீகரிக்கப்பட்டு விட்டது.

‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்ற வாசகத்தை இங்குள்ள அரசியல்வாதிகள் அடிக்கடி பயன்படுத்தி வந்தனர். இன்று வட இந்தியர்கள் ‘தெற்கு வாழ்கிறது, வடக்கு தேய்கிறது’ என்று குறிப்பிடுகின்றனர்.

தொடர்ச்சியாக நடைபெற்று வந்த சமூக, பொருளாதார மாற்றங்களால் மற்ற மாநிலங்களை விட அதிகம் பயனடைந்தது தமிழக மக்கள் தான். அதற்குக் காரணம் திராவிட இயக்கம்தான்.

1950ல் இந்தியா குடியரசான பிறகு முதல் அரசியல் சட்டத்திருத்தமே இட ஒதுக்கீடுக்கானது. இதைச் சாதித்தது தமிழ்நாட்டின் திராவிட இயக்கம்தான். ஓமந்தூராரும், காமராசரும் நேருவை வற்புறுத்தி அதைக் கொண்டு வந்தார்கள். அவர்கள் இருவரும் காங்கிரஸைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் திராவிட இயக்க பாதிப்புடையவர்களாகவே இருந்தனர். அவர்களை நான் திராவிட இயக்கத்தினராகவே பார்க்கிறேன். இதைத்தான் கட்சியைத் தாண்டி இயக்கம் இருக்கிறது என்று சொன்னேன்.

இதை தொடர்ச்சியாகவே பார்க்கலாம். இந்த சட்டத்திருத்தத்திற்குப் பிறகு இலவச ஆரம்பக்கல்வி தமிழ்நாடு முழுவதும் வருகிறது. மாணவர்களைப் பள்ளிக்குக் கொண்டு வர மதிய உணவுத் திட்டம் காமராஜரால் கொண்டு வரப்படுகிறது. அடுத்தபடியாக தி.மு.க. ஆட்சிக்கு வருகிறது. கல்வியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் பொருட்டு அரசுக்கல்லூரிகள் நிறுவப்படுகின்றன. உயர்கல்வியும் இலவசமாக்கப்படுகிறது.

அடுத்தபடியாக 80களின் துவக்கத்தில் தமிழ்நாட்டில் தொழில்நுட்பக் கல்லூரிகள் புற்றீசல் போல் பெருகத் தொடங்கின. என்ன படித்து விட்டு வெளியே வந்தாலும் அடுத்து மேலே படிப்பதற்கு வசதியாக உயர் கல்வி நிலையங்களை ஏற்படுத்தினார்கள். இவையெல்லாம் வெவ்வேறு கட்சியினரால் வெவ்வேறு காலகட்டங்களில் செயல்படுத்தப்பட்டவை என்றாலும், அதற்கு ஊற்றுக்கண்ணாக இருப்பது திராவிட இயக்கமும், அதன் கொள்கைகளும்தான்.

இந்தியா முழுவதும் விவசாயிகள் தற்கொலை நடக்கிறது. தமிழ்நாட்டில் 2011 க்கு முன் விவசாயிகள் தற்கொலை இல்லை.  ஏனெனில் தமிழ்நாட்டில் மட்டும்தான் விவசாயத்தை மட்டுமே நம்பி யாருமில்லை.இன்றைய தற்கொலைகள் அதிமுக அரசின் செயலற்ற நிலையால் ஏற்பட்டுள்ளஒன்று.

 Non farm activities 25 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக இருப்பது தமிழ்நாட்டில் மட்டும்தான். இதற்குக் காரணம் திராவிட இயக்கத்திலிருந்து வந்த தி.மு.க.தான். 1967 முதல் 76 வரையிலான காலகட்டத்தில் அவர்கள் ஒரு முக்கிய முடிவை எடுத்து செயல்படுத்தினார்கள். மாநிலம் முழுவதும் தொழிற்சாலைகளை ஆரம்பித்தார்கள்.

மகாராஷ்டிராவை எடுத்துக் கொண்டால் பெரிய தொழிற்சாலைகள் இருக்குமிடம் மும்பை. அடுத்து புனே, நாக்பூரை குறிப்பிடலாம். இந்த மூன்று நகரங்களைத் தவிர வேறெங்கும் தொழிற்சாலைகள் கிடையாது. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் சென்னையைத் தவிரவும் ராணிப்பேட்டை, சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், ஓசூர், கரூர், கும்மிடிப்பூண்டி, எண்ணூர், மணலி, சிறுசேரி, கடலூர், மறைமலைநகர், திருச்சி, மதுரை, நெல்லை என தொழிற்சாலைகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு மாவட்டத்திலும் (இராமநாதபுரம் மாவட்டத்தைத் தவிர) ஒன்று அல்லது இரண்டு தொழிற்பேட்டைகள் இருப்பதைப் பார்க்க முடியும்.

இந்தியாவிலேயே சுகாதாரத்தில் தமிழகமே முன்னோடி மாநிலம். குழந்தைகள் இறப்பு விகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் குறைவு. மருத்துவத்துறையிலும் தமிழ்நாடே முதலிடம்.

எல்லாவற்றிக்கும் மேலாக இந்தியாவிலேயே ஒட்டு மொத்த உற்பத்தியில் GDP யில் தமிழகம் 2014-15 ஆண்டில் 9.76 லட்சம் கோடி உற்பத்தி மதிப்புடன் #2_வது இடத்தில் உள்ளதே.

இதைவிட திராவிடம் என்ன கிழிக்க வேண்டும் தமிழ் தேசியங்களே?



(A.S.Panneerselvan leading writer. regular columnist, அவர்களின் கட்டுரையின் அடிப்படையில் சிலமாற்றங்களுடன்)

திராவிட இயக்கம் பெரியார் காலத்தில் இருந்த வீச்சோடு இப்போதும் இருக்கிறதா?



திராவிட இயக்கம் பெரியார் காலத்தில் இருந்த வீச்சோடு இப்போதும் இருக்கிறதா?

பெரியார் மிகப்பெரிய அளவில் செயல்பட்டார் என்பதில்  எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அதே நேரத்தில் பெரியாருக்குப் பிறகு வந்த அவரது இயக்கத்தினர் அவரது எல்லாக் கொள்கைகளையும் உள்வாங்கிக் கொண்டு அவர் அளவுக்கு வீச்சாக இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.

இன்றைக்கு இயங்கிக் கொண்டிருப்பது ஒரு இயக்கம் உருவானதற்குப் பிந்தைய சமூகம். அந்த இயக்கத்தின் தாக்கம் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாக இருக்கும். சிலர் நாத்திகர்களாக இருக்கிறார்கள், சிலர் பெண்ணியவாதிகளாக இருக்கிறார்கள், சிலர் மொழிப்பற்று உடையவர்களாக இருக்கிறார்கள்.

பெரியார் வைத்த அடிப்படைக் கருத்து என்பது அதிகாரப் பங்கீடு, அதிகாரப் பரவலாக்கல்.

சனாதன தர்மம் அதிகாரத்தை ஒரு சாராரிடமே குவிக்காமல் இருந்திருந்தால் சுயமரியாதை இயக்கம் தோன்றியிருக்க வேண்டிய அவசியமில்லை. அவமரியாதை ஏற்பட்ட போது சுயமரியாதை இயக்கம் தோன்றியது. எனக்கு இன்றைக்கு அவமரியாதை இல்லை என்று தோன்றும்போது, அன்றைக்கு இருந்த வீச்சோடு இன்றைக்கும் செயல்பட வேண்டுமா என்ற கேள்வி வருகிறது.

இன்று அதிகாரத்தில் இருப்பது நாம்தான், முக்கிய முடிவுகளை எடுப்பதும் நாம்தான் எனும்போது அந்த அளவுக்கு வீச்சு தேவையில்லை.

அதிகாரப் பரவலாக்கம் தான் எல்லாப் பிரச்சனைக்கும் அடிப்படை. இந்த அதிகாரப் பகிர்வு பரவும்போது திராவிட இயக்கக் கொள்கைகள் நீர்த்தது போலத் தோன்றும். எல்லா இடங்களிலும் பார்ப்பனர்களே இருக்கும்போது அதை எதிர்த்து அதிகமாக இயங்க வேண்டிய அவசியம் இருந்தது. இன்று மாற்றங்கள் வந்திருக்கிறது. நமக்கான முடிவுகளை நாமே எடுக்க முடிகிறது எனும்போது இன்றும் அதே அளவு கூர்மையுடன் எப்படி செயல்பட முடியும்? அப்படி செயல்பட்டால் அது நமது வெற்றியை நாம் மதிக்கவில்லை என்றுதான் பொருள்.

67ல் அரசியல் அதிகாரம் வந்தது. 80களில் பொருளாதார ரீதியான மாற்றங்கள் வருகிறது. முன்பு பார்ப்பனர்களின் தொழில் நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக செட்டியார்களின் தொழில் நிறுவனங்கள் தான் இருக்கும். இன்று நிலைமை மாறி 70 சதவீத தொழில் நிறுவனங்கள் பார்ப்பனர், செட்டியார் அல்லாதவர்களிடம் தான் இருக்கிறது. இன்று அவமரியாதை குறைந்திருக்கிறது. அவமரியாதை குறைந்திருக்கும் போது சுயமரியாதை இயக்கம் அதே வேகத்தோடு செயல்பட வேண்டும் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

திராவிட இயக்கம் என்பது வெற்றிடத்தில் கட்டப்பட்டதல்ல, சமூக, பொருளாதார காரணிகளின் மீது கட்டப்பட்டது. இப்போது அந்தக் காரணிகள் மாறியிருக்கும்போது இயக்கம் மட்டும் எப்படி அதே வீச்சோடு இருக்க முடியும்? அந்த வீச்சு மாறக்கூடாது என்று சொல்பவர்கள், ‘மாற்றம் என்பதே வரக்கூடாது’ என்ற நிலைப்பாட்டில் இருப்பவர்களாகத்தான் இருக்க முடியும்.
நன்றி எழுத்தாளர் A.S.Panneerselvan

இந்தி எதிர்ப்பு ஏன்?


திமுக இந்தியை எதிர்ப்பதாக சொல்லிக் கொண்டு திராவிடம் ஆங்கிலத்தை திணித்து விட்டதா? இல்லை ...இந்தி படிப்பதை திராவிடம் தடுத்துவிட்டதா? ***

தமிழ் மக்கள் ஆங்கிலம் படிப்பது அவர்களது விருப்பம்
இந்தி கட்டாயமாக திணிக்கப்பட்டது,

இன்றும் இந்தி விருப்பத்தின் பேரில் தமிழர்களால் கற்கப்பட்டுதான் வருகிறது. அதை எந்த திராவிடமும் எதிர்க்கவில்லை.

ஏற்கனவே தமிழில் வடமொழி சொற்களும் ஆங்கிலமும் கலந்து மக்கள் தமிழை வித்தியாசமாக பேசிவரும் நிலையில் இந்தியும் கட்டாயமாக்கப்பட்டால் தமிழ் தன் உருவத்தை இழந்துவிடும்.
காலப்போக்கில் மறைந்தேவிடும்

தமிழ் மொழி மற்றும் இனத்தின் மேல் உள்ள அக்கறையால் திராவிடம் இந்தி திணிப்பை மட்டுமே எதிர்க்கிறதே தவிர
இந்தியை அல்ல.

அடுத்ததாக அதிகாரப் பங்கீடு. இந்த அதிகாரப் பங்கீடு என்பது வி.பி.சிங்கின் மண்டல் கமிஷனோடு நடந்து முடிந்து விட்டது. இனி யார் வந்தாலும் அதை மாற்ற முடியாது. அதிகாரப் பங்கீடு என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான கருத்து இருந்தாலும் அடிப்படை என்பது நிறுவப்பட்டுவிட்டது.

தமிழகத்தில் சேது சமுத்திரத்திட்டத்தை எதிர்த்தோ அல்லது
இட ஒதுக்கீட்டை எதிர்த்தோ போராட்டம் வந்துள்ளதா?

இன்று தமிழக மக்கள் தங்களுக்கு எதிரான மத்திய அரசின் திட்டங்களை எதிர்த்து தன்னிச்சையாக போராடுகிறார்கள்
 என்றால் அவர்களுக்கு அந்த விழிப்புணர்வு வரக்காரணம் திராவிடம்தானே. சினிமாவில் கூட திராவிட முகம்தானே
ஜெயிக்கிறது.

67ல் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறது. 74ல் சென்னை பல்கலைக்கழகத்தில் பெரியார் பேச்சுகள் பாடமாக்கப்படுகிறது. தவிரவும் பார்ப்பனரல்லாதவர்கள் 80களுக்குப் பிறகுதான் இந்த எழுத்துத்துறைக்குள் வருகிறார்கள். இதை திராவிடம்தானே செய்தது.

நேருவையும் கலைஞரையுமே ஒப்பிட்டுப் பாருங்கள். கலைஞர் திருவாரூரில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர். 12 வயதில் கையெழுத்துப் பத்திரிகை நடத்தி அதன் பிறகு எழுத்து, நாடகம் என அவரது பயணம் தொடங்குகிறது. பெரிய படிப்பெல்லாம் அவருக்கு இல்லை.

நேரு உலகின் மிகப்பெரிய பள்ளிக்கூடமான ‘ஹேரோ’விலும், அடுத்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் படித்தவர். இருவருக்கும் இடையேயான இடைவெளி மிகப்பெரியது. அந்த #இடைவெளி இப்போதுதான் நிரம்ப ஆரம்பித்துள்ளது.

ஒரு சாதாரண நபர் கூட அரசியலுக்கு வரலாம் முதலமைச்சர் ஆகலாம் என்பதும் திராவிடத்தால்தானே சாதிக்க முடிந்தது.

இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திலும் பெரியாரை போன்ற தலைவர்கள் இல்லை. பல்வேறு மாநிலங்களில் அநீதிக்கு எதிராக தலைவர்கள் தோன்றியிருந்தாலும் பெரியார் ஒருவர் தான் மிகப் பிரம்மாண்டமாய் எழுந்தார். அவர் ஒருவர் தான் சாதி என்ற அமைப்பையே எதிர்த்தார். (பார்ப்பனர் Vs பார்ப்பனரல்லாதவர்) என அவர் பிரித்தது தான் திராவிட இயக்கத்தின் வெற்றிக்குக் காரணம்.

ஜெயலலிதாவால் காஞ்சி சங்கராச்சாரியாரை பொம்பள பொறுக்கியாக உருவகம் செய்ய முடிந்ததே, அவரை கைதும் செய்து அடைக்க முடிந்ததே , இதை வடமாநிலங்களில் செய்திருந்தால் ஜெ நிலைமை என்ன ஆகி இருக்கும்?

(பதிவின் சில விபரங்கள் எழுத்தாளர் திரு. A.S.Panneerselvan கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டவை)











திமுகவையும் தலைவர் கலைஞரையும் கண்மூடித்தனமாக ஏன் ஆதரிக்கிறீர்கள்.? Written by Arivalagan kaivalyam

திமுகவையும் தலைவர் கலைஞரையும் கண்மூடித்தனமாக ஏன் ஆதரிக்கிறீர்கள்.?  Written by Arivalagan kaivalyam


பாலூற்றும் சினிமா ரசிகர்களைப் போலத் தான் நடந்து கொள்கிறீர்கள் என மனைவியில் இருந்து துவங்கி, நண்பர்கள் பலர் இப்போது இப்படித்தான் சொல்கிறார்கள்

#திமுக_ல_இருக்குறதும் கலைஞரை கண்மூடித்தனமாக ஆதரிக்கிறதும் பாலூற்றித் தேங்காய் உடைக்கும் ரசிக மனநிலை இல்லீங்க, அதுக்கு #வரலாற்றுப்_பூர்வமான_காரணங்கள் பல #இருக்கு.
#அது_ஒரு_வகையான_நன்றிக்_கடனுங்கோ சாமிகளா, ஒரு புள்ளிவிவரத்தோட அதை எல்லாம் உங்களுக்குச் சொன்னால் தான் புரியும்.

1) ஆடு மாடு மேச்சுகிட்டு, விவசாயத்தைத் தவிர எதுவுமே தெரியாம அடிமை வாழ்க்கை வாழ்ந்த எங்க ஊரோட  வரலாற்றில் "பெரியார்" என்கிற மகத்தான மனிதரின் வரவுக்குப் பின்னால தாங்க படிப்போட வாசனையே வந்தது, உள்ளூர்ல இருக்குற சாதிஅரசியல் கூடத் தெரியாம இருந்த எங்க குடிசைல மார்க்சும், லெனினும், டால்ஸ்ட்டாயும், சோவியத் யூனியனும், வெள்ளை வேட்டியும், வெளி உலகமும் வந்து சேந்ததே சுயமரியாதை_இயக்கம் தோன்றிய 1925 ஆம் ஆண்டுக்குப் பின்னால தாங்க.

2) ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் கல்வி கற்பதே குற்றம்னு சொன்ன மனுநீதியின் கவசங்களை உடைத்து அப்பாவ ஊரின் முதல் முதுகலைப் பட்டதாரியா மாத்துனது இதே அண்ணாவின் தலைமயிலான திராவிட_முன்னேற்ற கழகம் கொடையளித்த இடஒதுக்கீடும், சட்டத் திருத்தங்களும் தாங்க ராசாக்களா.

3) சில நூறு ஆண்டுகளா ஐயரும், ஐயங்காரும், செட்டியாரும், முதலியாரும் இன்னும் பல ஐயாமாரும் மட்டுமே அதிகாரிங்களா இருந்த வருவாய்த் துறைல அப்பாவ சார் பதிவாளரா உக்கார வச்சு அழகு பாத்தது இதே கலைஞரோட திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் ஒன்றியச் செயலாளரும் தாங்க ராசா.

4) பொருளாதாரச் செழுமையையும், போட்டியிடுகிற மனதையும், நமனை அஞ்சோம் என்கிற துணிவையும் அந்த இயக்கம் அப்பாவுக்குக் கொடுத்த வேலையும், அந்த இயக்கம் அப்பாவுக்குக் கொடுத்த அரசியல் அறிவும் தானேங்க ஐயா எங்களுக்கும் கொண்டு வந்து சேர்த்தது.

5) அதுமட்டுமில்லைங்கையா, அரசியல்ங்குறது வெறும் அதிகாரச் சண்டையோ, இல்லை, சுரண்டலோ இல்ல, அது ஒரு சக மனிதனின் வலியைப் புரிந்து கொள்கிற வாழ்க்கை முறைன்னு ஈழத்தமிழ் மக்களின் துயரங்களை ஊர் ஊராக புகைப்படக் கண்காட்சி வச்சு அறிமுகம் பண்ணினதும், #இலக்கியமும்_வரலாறும்_இசையும் இன்னும் எல்லாமும் கலந்தது தான் #அரசியல் என்கிற வாழ்க்கையோடு அற்புதமான பாடத்தையும் எங்களுக்குச் #சொல்லிக்_கொடுத்தது இப்பவும் "ஊழல்வாதி", ஊழல்வாதி என்று கீறல் விழுந்த ரிக்கார்ட் மாதிரி பினாத்துரீங்களே அதே தலைவர் #கலைஞர் தலைமையிலான இந்த #சமூகப்_பேரியக்கம் தான்லே அப்பரண்டிசுகளா.

6) அதுமட்டுமில்ல, தி.மு.க ல இருக்குறதும், கலைஞரைப் பின்பற்றுவதும் என்னைப் பொருத்தவரை அறிவியல் பூர்வமான வாழ்க்கை முறை, தி.மு.க ன்னு சொன்ன உடனேயே #சமூகநீதிக்கு எதிரான எவனும் உடனே எதிர்ப்பான், முக்கியமா பார்ப்பனன் பழிப்பான், கரிச்சுக் கொட்டுவான், குய்யோ, முறையோன்னு கூத்தாடுவான், ஊழல், ஹிந்தி, மொழித் தீவிரவாதம், இட ஒதுக்கீடு அது இதுன்னு நம்மளோட எப்பப் பாத்தாலும் சண்டைக்கு வருவான், அவனோட முட்டி மோதி தில்லா நிக்கும் போது ஒரு தன்னம்பிக்கையும், மிதப்பான அறிவாற்றலும் கூடவே வரும் பாருங்க, அந்த அனுபவத்துக்காகவே கலைஞரை இன்னும் பல தலைமுறைக்கு வழிபடலாம்.

7) அரசியல் மட்டுமில்லை வாழ்க்கை ஒரு தலைவனுக்கு, மொழிய சும்மா வாய் கிழியகெட்ட வார்த்தை போட்டு மேடைல பேசினாப் போதாது, தூசி தட்டி, எழுது உன் இலக்கியத்தை, படி உன் புறநானூற்றை, கற்றுக் கொள் உன் சங்கத்தமிழை என்று நெஞ்சு நிமிர்த்தி எம் உயிருக்கும் மேலான மொழியை எங்கள் கைகளில் தவழ விட்டார் பாருங்க, அதுக்காக நாங்க எங்க போனாலும் அவரைத் தலையில் வச்சுக் கொண்டாடுவோம் அப்பாடக்கர்களா, திரைப்படம், இசை, கவிதை, கதை, கட்டுரை, வரலாறு, மொழிபெயர்ப்பு என்று அறுபதாண்டு காலம் தொடர்ந்து ஒரு மொழிக்காக உழைக்கிற ஒரு மனிதனை மதிக்கக் கூட வேண்டாம்ல சுய அறிவு இல்லாத குருட்டுப் பசங்களா, வந்தேறி வடுகன்னு வாய் கூசாமச் சொல்றீங்களே, அதுக்காகவாவது அவரை நாங்க வழிபடுவோம்லே.

8) ஒருபக்கம் தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கு மேலாக எதிர்க்கும் பார்ப்பனீய ஊடகங்கள், இப்போது எதிர்க்கும் பார்ப்பன அடிவருடி ஊடகங்கள், இன்னொரு பக்கம் எங்கே சமூக நீதி, இட ஒதுக்கீடு என்று நம்ம சொகுசு வாழ்க்கைலயும் கை வச்சுருவரோன்னு பயந்து மக்களுக்குக் கிடைத்த நன்மையின் அலைக்கற்றை மானியத்தை 1,76,000 கோடி ஊழல், அது இதுன்னு அடிச்சு விடுற வடநாட்டு முதலாளிகளும், சுப்ரமணிய சாமிகளும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன லாபி, ஊழல் செய்வதற்காகவே ஆட்சி நடத்தும் ஜெயா, அரசியல் அரிச்சுவடியை அவரிடமே படித்து விட்டு இப்போது மக்கள் நலம் அது இதுன்னு அல்டாப் காட்டும் வை.கோ வைப் போன்ற துரோகிகள் என்று பல எதிர்ப்புக்கு இடையேயும் நின்னு விளையாடுற கிழட்டுச் சிங்கத்துகிட்ட தான்லே அரசியல் படிக்க முடியும், ஆத்தாகிட்டப் போயி அடிமைக் கூனா வாங்க முடியும்.

9) வாழ்க்கையை சுவாரசியம் ஆக்குகிற நக்கலும், நையாண்டியுமாக, நடைமுறைல சாதியையும் மத வேற்றுமைகளையும் கடந்து எல்லா மனிதர்களோடும் தலை நிமிர்ந்து வாழ்க்கையின் ஊடாக ஒரு அழகான பயணம் லேதி.மு.க காரனா இருப்பதும், கலைஞரைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பதும்......

10) எல்லாத்துக்கும் மேலே சொந்த சாதிக் கட்சியை மறந்து, மதங்களைக் கடந்து, மதவாத இந்துத்துவப் பார்ப்பணீயத்தை எதிர்த்து, எளிமையான உழைக்கும் மக்களின் பின்னே நிற்பதும், எனது இஸ்லாமிய சகோதரனின் வாழ்வுக்கு அரணாக எப்போதும் நின்று நான் ஒரு தி.மு.க  காரன் என்று சொல்வதும், கலைஞரை கண்மூடித்தனமாக ஆதரிப்பதும் ஒரு நேர்மையான நன்றிக் கடன் கொண்ட மானுட அறிவியல் என்னைப் பொருத்தவரை.

# # # ஜெயிக்கிறமோ, தோக்குறோமோ, அதெல்லாம் செக்கன்டரி பாஸ், ஓங்கி அடிச்சா சங்கத்தமிழ், ஒய்யாரமா உக்காந்தா புறநானூற்று வீரம், பார்லிமென்ட் போனா ஸ்பெக்ட்ரம் பாமரன் கைக்குப் போகும், அம்பானிக்கும், டாட்டாவுக்கும் போகாது, மொழியையும், இலக்கியத்தையும், சமூக அறிவியலையும், நக்கலையும், நையாண்டியையும் ஒரு அரசியல் கட்சில பாத்துருக்கியா ஒலகத்துல எங்கேயாச்சும், வந்து பார், வந்து பார்

Arivalagan kaivalyam. அவர்களால் எழுதப்பட்ட பதிவு

உழைப்பால் உயர்ந்த கலைஞர் ஊழல்வாதியா? மாறன் சொத்துக்களை கலைஞர் பெயரில் காண்பிக்கும் கேணயர்கள் **


உழைப்பால் உயர்ந்த கலைஞர் ஊழல்வாதியா?
மாறன் சொத்துக்களை கலைஞர் பெயரில் காண்பிக்கும் கேணயர்கள் **

75 சினிமா படங்களுக்கு கதை வசனம் எழுதியும் 21 படங்களுக்கு பாடல்கள் எழுதியும்
29 சினிமா படங்களை சொந்தமாக தயாரித்தும் வீடு கார் வசதிகளுடன் வாழ்ந்த கலைஞரை பார்த்து அசிங்கம் பிடித்த அற்பர்கள் கலைஞருக்கு எப்படி சொத்து வந்தது கேட்கிறார்கள்.

தலைவர் கலைஞர் தனது 24 வயதிலேயே மலைக்கள்ளன் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர். 28 வயதில் 1952 - ல் பாரதிர்ந்த "பராசக்தி" மூலம் பட முதலாளிகளின் பார்வையை தன்பக்கம் ஈர்த்தவர். இதற்கும் முன்பே, எத்தனைப் படங்கள். எம்.ஜி.ஆரை ஹீரோவாக்க மறுத்த இயக்குநர் எல்லீஸ் ஆர் டங்கனோடு, கலைஞர் வாதம்புரிந்து வென்றதை எத்தனைபேர் அறிவார்? 1957 - ல் தனது 33 - வது வயதில்தானே எம்.எல்.ஏ வானார். அதற்கும் முன்பே படவுலக முதலாளிகளின் வசூல்பட வசனகர்த்தாவாக வலம் வந்தவர் கலைஞர்!

புதையல், பராசக்தி படங்களுக்கு முன்பாகவே ‘மணமகள்’ படத்தின் திரைக்கதை-வசனம் எழுதிய கலைஞருக்கு படத்தயாரிப்பாளரான கலைவாணர் கார் வாங்கித் தந்ததுடன், அப்போது பெட்ரோல் தட்டுப்பாடு இருந்த காரணத்தால் அதற்குரிய டோக்கன்களையும் கொடுத்துவிட்டார். எழுத்தின் மூலமாக கார் சம்பாதித்த முதல் தமிழ்ப் படைப்பாளி அநேகமாக கலைஞராகத்தான் இருக்கும்.

கலைஞர் ஆட்சி 1969 -74 இல் ஊழல் நடந்ததாக எம்ஜிஆர் புகார் தந்த அடிப்படையில் சர்க்காரியா கமிசனை அமைத்தார் இந்திரா.

எம்ஜிஆர் 1977 இல் ஆட்சிக்கு வந்ததும் முதலில் அவர் சர்க்காரியா கமிசன் மீதுதான் மிகவும் அக்கறை கொண்டார்.

இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் சர்க்காரியா கமிசனே கலைஞர் மீதான வீராணம் திட்டம் உட்பட முக்கிய ஊழல் குற்றச்சாட்டுகளை ஒத்துக்கொள்ளவில்லை. அப்போதைய முதல்மந்திரி எம்ஜிஆர் 1977 நவம்பர் 15 இல் அப்போதைய அட்வகேட் ஜெனரல் V.P. ராமனிடம் சர்க்காரியா கமிசன் தொடர்பாக அவரது ஆலோசனையை கேட்கிறார். அதற்கு ராமன் வெறும் வழிமுறைகள் கடைபிடிக்கப்படாமை ( impropriety)  என்ற ஒரு விசயத்தை வைத்து கலைஞர் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கை எடுப்பது என்பது  சாத்தியமும் அல்ல எனவும் அதற்கு அறிவுரை செய்வதும் இயலாது எனவும் பதிலாக தெரிவித்து விட்டார்.

ஆனால் ஹெலிகாப்டர் மூலம் பூச்சி மருந்து அடித்தது தொடர்பானஎம்ஜிஆரின் குற்றச்சாட்டு வ.எண் 11(B) க்கு மட்டும் நடவடிக்கைக்கு பரிந்துரைத்தார்.

ஆனால் சிபிஐ ஆல் கையாளப்பட்ட அந்த வழக்கும் பதிவு செய்யப்பட்டு போதிய ஆதாரம் இல்லாததால் பின்னர் மத்திய அரசாலேயே வாபஸ் பெறப்பட்டது.

இதுதான் சர்க்காரியா கமிசன் தொடர்பாக நடந்தது. ஆனால் கடந்த 40 வருடங்களாக இந்த நீர்த்து போன உப்பு சப்பில்லாத சர்க்காரியா கமிசன் கதையை வைத்தே கலைஞரை ஊழல்வாதியாக தொடர்ந்து பிரட்சாரம் செய்து வருகிறார்கள். 
ஒரே பொய்யை 2G மாதிரி தொடர்ந்து சொல்ல சொல்ல உண்மை போலவே மனதில் பதிந்து விடும்.

1974 க்கு பின் 1989-91மற்றும் 1996-2001 திமுக ஆட்சியில் திமுக மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் கிடையாது.

2006-11 திமுக ஆட்சியில் 2 G விவகாரத்தை ஊதி பெருக்கி ஊழல் என்றார்கள். ஆனால் ராசா மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இது வரை நிருபிக்கப்படவேயில்லை. அவர் வீட்டில் இருந்து வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் எதுவுமே கைப்பற்றப்படவில்லை. விரைவில் 2G தீர்ப்பு வெளி வந்து உண்மையை உணர்த்தும்.

மாறன் குடும்பத்தினர் சொத்துக்களை கலைஞர் பெயருக்கு எழுதி வைத்து கலைஞர் சொத்துக்கள் என்கிறார்கள் இந்த அயோக்கியர்கள்.

அதிமுகவின் புரிந்துணர்வு ஒப்பந்தமும் உண்மை நிலையும்***


அதிமுகவின் புரிந்துணர்வு ஒப்பந்தமும் உண்மை நிலையும்***
2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் 73,298 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டன. ஆனால் அவற்றுள் வெறும் 235 கோடி ரூபாய் முதலீடு மட்டுமே தமிழகத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது. உண்மையில் வந்து சேர்ந்த முதலீடு 0.3 சதவிகிதம்தான் என்பதை அறிய அனைவரும் வெட்கப்பட வேண்டும்!

2012ஆம் ஆண்டில் 21,253 கோடி ரூபாய் முதலீட்டுக் கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. ஆனால் 524 கோடி ரூபாய் முதலீடு மட்டுமே செயலாக் கத்துக்கு வந்திருக்கிறது. செயலாக்கத்துக்கு வந்துள்ள முதலீடு
2.4 சதவீதம் மட்டுமே.

2013ஆம் ஆண்டில் 27,380 கோடி ரூபாய் முதலீட் டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, 2292 கோடி ரூபாய் முதலீடு மட்டுமே வந்திருக்கிறது. செய லாக்கத்துக்கு வந்துள்ள முதலீடு 8.3 சதவீதம்தான்.

2014ஆம் ஆண்டில் 14,596 கோடி ரூபாய் முதலீட்டுக் கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, 2500 கோடி ரூபாய் முதலீடு மட்டுமே தமிழகத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறது. செயலாக்கத்துக்கு வந்திருக்கும் முதலீடு 17 சதவீதம்தான்.

2015ஆம் ஆண்டில் ஜூலை மாதம் வரை 17,412 கோடி ரூபாய் முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, வெறும் 41 கோடி ரூபாய் முதலீட்டுக்கான பணிகள் மட்டுமேநிறைவேறியிருக்கின்றன. செயலாக்கத்துக்கு வந்திருக்கும் முதலீடு வெறும் 0.2 சதவீதம் தான் என்பது எவரையும் தலை குனிய வைப்பதாகும்.

கலைஞரும் மதுவிலக்கும்....உண்மையில் நடந்தது என்ன?

கலைஞர் ஆட்சியில் 1971 முதல் 1974 வரை மதுவிலக்கு நீக்கப்பட்டது.அச்சமயம் மிகுந்த கட்டுப்பாடுகள் இருந்தது. அதிகப்படியானவர்கள் கள்ள சாராயம் அருந்தி இறப்பதை தவிர்க்கவே மதுவிலக்கு தளர்த்தப்பட்டது. 
ஆனால் கலைஞர் அவர் ஆட்சியிலேயே 1974 இல் மீண்டும் மதுவிலக்கை அமல் படுத்திவிட்டார்.

ஆனால் சுமார் 9 ஆண்டுகள் கழித்து 1983 இல் எம்ஜி ஆர் மதுவிலக்கை ரத்து செய்ததுடன் 
TASMAC மற்றும் TASCO நிறுவனங்களை ஆரம்பித்தார். அதுவரை அரசுதான் உற்பத்தி மற்றும் விற்பனையை கவனித்து வந்தது. ஆனால் 1987 இல் தான் தனியார் நிறுவனங்கள் மது உற்பத்தியில் ஈடுபட அனுமதிக்கப்பட்டு பெரிய அளவில் மது விற்பனை அதிகரிக்க தொடங்கியது. அதிமுக ஆட்சி வந்தபோதெல்லாம் மிடாஸ் கொடி கட்டி பறந்தது.

By 1987 though, TASCO was abandoned and private companies were allowed to manufacture liquor. Around the same time tenders were issued for private shops to retail alcohol, which until then was only available at expensive hotels. It was the era of licence raj where even the consumer had to have a permit for a drink.
2003 இல் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியில்தான் உண்மையான மது சாம்ராஜ்யம் ஆரம்பமானது. சாராய ஆறு ஓட ஆரம்பித்தது.
2002 இல் மிடாஸ் ஆரம்பிக்கப்பட்டவுடன்தான் தமிழக அரசின் மதுக்கொள்கையும் 2003 இல் மாறுகிறது. 
In November 2003, the then chief minister J Jayalalithaa announced that the government would take over private retail sales of alcohol in the state — with TASMAC having the monopoly to buy liquor from manufacturers and sell it to consumers.
The state government's coffers began to fill — TASMAC contributed Rs 3,800 crore in revenues in 2002-03. Its revenues would grow massively each year — around 20% every year — to reach Rs 21,000 crore in 2012-13. Next year's (unofficial) target is estimated to be Rs 25,000 crore.
இப்போது சொல்லுங்கள் யார் மதுவை போற்றி வளர்க்கிறார்கள் என்று ????

கலைஞர் டிவிக்கு 200 கோடி எங்கிருந்து வந்தது ?

அறிவு ஜீவிகள் அடிக்கடி கேட்கும் கேள்வி கலைஞர் டிவிக்கு 200 கோடி எங்கிருந்து வந்தது ? என்ற கேள்விதான்.

பச்சமுத்து டிவிக்கும் ஜெயா டிவிக்கும் எப்படி பணம் வந்ததோ அதே மாதிரித்தான் கலைஞர் டிவிக்கும் பணம் வந்தது என பதில் சொன்னால் சரியாக இருக்குமா ? தவறாக போய்விடாதா? 

எனவே கேள்வி கேட்கும் அறிவு ஜீவிகளுக்கு சில கேள்விகளை அவர்களிடமே திருப்பிக் கேட்டு அவர்களுக்கு பதில் அளிப்போம்.

1) 200 கோடி பணம் வந்ததை உடனடியாக வருமானவரி துறைக்கு கலைஞர் டிவி நிர்வாகம் தெரிவித்தது தெரியுமா தெரியாதா ?

2) 200 கோடியை எதற்காக காசோலை மூலமாக வங்கி வரைவோலையாக வாங்க வேண்டும் ? பணமாக பெறுவதில் என்ன கஷ்டம்? 

3) மற்ற டிவிக்காரனுங்க செய்வது போல திருட்டுத்தனமாக பணம் வாங்கி கருப்புபணமாக தங்கள் டிவியில் முதலீடு செய்வதில் கலைஞர் டிவிக்கு என்ன கஷ்டம் ? என்ன பிரட்சினை? 

3) வந்த கடன் பணத்தை கலைஞர் டிவி தங்களது ஆண்டு கணக்குகளில் காண்பித்து Balance sheet லும் காண்பித்து உள்ளனர். முறையாக கணக்கு காண்பித்ததே தவறா? 

4) 2G லைசென்ஸ் கொடுத்து ஒரு வருடம் கழித்துதான் கலைஞர் டிவி 200 கோடி கடன் வாங்கியது. லஞ்ச பணம் என்றால் உடனடியாக வந்திருக்குமே.
ஒரு வருடம் கழித்து வந்த பணத்தை எதை வைத்து லஞ்சப்பணம் என்கிறீர்கள் ?

5) நான்கு கம்பெனி வழியாக பணபரிமாற்றம் நடைபெற்றதற்கு விளக்கத்தை பணம் கொடுத்தவர்கள்தான் விளக்க வேண்டும். கலைஞர் டிவி அதற்கு பதில் சொல்ல என்ன அவசியம்? 

கலைஞர் டிவி யாரிடம் பணம் பெற்றார்களோ அவர்களுக்கும் கலைஞர் டிவிக்கும் மட்டும்தான் சம்பந்தம்.

இந்த கேள்விக்கு உரிய பதிலை சம்பந்தப்பட்ட கம்பெனிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

6) கடன் தொகை 200 கோடி லஞ்சப்பணம்தான் என்பதற்கு இதுவரை CBI எந்த ஆதாரத்தை சமர்பித்துள்ளது ?

ஆதாரத்தை நீங்களாவது சொல்லுங்கப்பா அறிவு ஜீவிகளே.

இந்த வழக்கு 
Money laundering act இன் கீழ்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பு :- கலைஞர் டிவி 200 கோடியை திருப்பி வழங்கிவிட்டது. அதற்கான பணம் (வங்கி கடன் உட்பட) எந்தெந்த வழிகளில் பெறப்பட்டது என்ற முழு விபரத்தையும் CBI கோர்ட்டில் கலைஞர் டிவி சமர்ப்பித்துள்ளது.

திமுக அப்படி என்னதான் தமிழர்களுக்கு செய்தது என கேட்கும் மூடர்களுக்கான பதிவு

திமுக அப்படி என்னதான் தமிழர்களுக்கு செய்தது என கேட்கும் மூடர்களுக்கான பதிவு

என் தலைவர் கலைஞர் அவர்கள்
தமிழகத்திற்கு என்ன செய்தார்?
தெரியாத இளைய
தலைமுறைகளுக்கு இதோ..
*******
1) இந்தியாவிலேயே முதன் முதலில்
காவல் துறை ஆணையம்
அமைத்தது கலைஞர்.
2) குடியிருப்பு சட்டம்
அதாவது வாடகை நிர்ணயம்
போன்றவைகளை கொண்டுவந்தவர்
கலைஞர்.
3) இலவச கான்கிரீட்
வீடுகளை ஒதுக்கப்பட்டோரு
க்கு கொடுக்கும் திட்டம் வகுத்தவர்
கலைஞர்.
4) கையில் இழுக்கும் ரிக்
ஷா ஒழித்து இலவச சைக்கில் ரிக்
ஷா தந்தவர் கலைஞர்.
5) பிச்சைகாரர்களுக
்கு மறு வாழ்வுமையம்
அமைத்து கொடுத்தவர் கலைஞர்.
6) முதலில் இலவச கண் சிகிச்சை முகாம்
அமைத்து கொடுத்தவர் கலைஞர்.
7) குடிநீர் வடிகால் வாரியம்
அமைத்து கொடுத்தவர் கலைஞர்.
8) தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்
அமைத்து தந்தவர் கலைஞர்.
9) 1500பேர் கொண்ட கிராமங்களுக்கும்
சாலை வழித்தடம் அமைத்து தந்தவர்
கலைஞர்.
10) மின்சாரம்
அனைத்து கிராமங்களுக்கும் செல்ல
வழித்தடம் அமைத்து தந்தவர் கலைஞர்.
11.போக்குவரத்தை தேசியமயமாக்கிவர்
கலைஞர்.
12.போக்குவரத்து துறை என்ற
துறையை உருவாக்கியவர் கலைஞர்.
13. பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
தாழ்த்தப்பட்டோருக்கென
துறை அமைத்து தந்தவர் கலைஞர்.
14.அரசியலமைப்பில் பிற்படுத்தப்பட்
டோருக்கான அமைப்பை தந்தவர் கலைஞர்.
15.அரசியலமைப்பில் BC-31% , SC-18% ஆக
உயர்த்தி தந்தவர் கலைஞர்.

16. P.U.C வரை இலவச
கல்வி உருவாக்கி தந்தவர் கலைஞர்.
17. மே 1 சம்பளத்துடன் கூடிய
பொது விடுமுறையாய் அறிவித்தவர்
கலைஞர்.
18. வாழ்ந்த மனிதரான நபிகள்
நாயகத்தின் பிறந்த
நாளை விடுமுறை தினமாக
அறிவித்தவர் கலைஞர்.
19.முதல் விவசாயக்
கல்லூரியை உருவாக்கி தந்தவர்
கலைஞர்.(கோவை)
20. அரசு ஊழியர்கள் குடும்ப நலதிட்டம்
தந்தவர் கலைஞர்.
21. அரசு ஊழியர்களுக்கு மேலான
ரகசிய அறிக்கை முறையை ஒழித்தவர்
கலைஞர்.
22. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும்
திட்டம் தந்தவர் கலைஞர்.
23. கோயில்களில் குழந்தைகளுக்கான
கருணை இல்லம் தந்தவர் கலைஞர்.
24. சேலம்
இரும்பு தொழிற்சாலை அமைத்து தந்தவர்
கலைஞர்.
25. நில
விற்பனை வரையரை சட்டத்தை அமைத்தவர்
கலைஞர்.
26.இரண்டாம் அலகு நிலக்கரி மின்
உற்பத்தி நெய்வேலிக்கு கொண்டுவந்தவர்
கலைஞர்.
27.பெட்ரோல் மற்றும் ரசாயன
தொழிற்சாலையை தூத்துகுடிக்கு கொண்டுவந்தவர்
கலைஞர்.
28. SIDCO உருவாக்கியது கலைஞர்.
29. SIPCOT உருவாக்கியது கலைஞர்.
30.உருது பேசும்
இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டோரில்
தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தவர்
கலைஞர்.
31.பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம்
கொண்டுவந்தவர் கலைஞர்.
32. மனு நீதி திட்டம் தந்தவர் கலைஞர்.
33. பூம்புகார் கப்பல்
நிறுவனத்தை தந்தவர் கலைஞர்.
34. பசுமை புரட்சி திட்டத்தை தந்தவர்
கலைஞர்.
35. கொங்கு வேளாளர்
இனத்தை பிற்படுத்தப்பட்டோரில்
36. மிக பிற்படுத்தப்பட்டோரில் வன்னியர்
சீர் மரபினரை சேர்த்தவர் கலைஞர்.
37. மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20%
தனி இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
38. தாழ்த்தப்பட்டோருக்கு 18% தனி இட
ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
39. பழங்குடியினருக்கு 1% தனி இட
ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
40. மிக பிற்படுத்தப்பட்டோருக்கு இலவச
கல்வி தந்தவர் கலைஞர்.
41. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச
கல்வி இளகலை பட்டப்படிப்பு வரை தந்தவர்
கலைஞர்.
42. தாழ்த்தப்பட்டோர்களுக்கு இலவச
கல்வி தந்தவர் கலைஞர்.
43. இந்தியாவிலேயே முதன் முறையாக
விவசாயத்திற்கு இலவச மின்சாரம்
தந்தவர் கலைஞர்.
44. சொத்தில் பெண்ணுக்கும் சம
உரிமை உள்ளது என
சட்டமாக்கியது கலைஞர்.
45. அரசு வேலைவாய்ப்புகளில்
பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு தந்தவர்
கலைஞர்.
46. ஆசியாவிலே முதன் முறையாக
கால்நடை மற்றும் விலங்குகள்
அறிவியல் பல்கலைகழகம் அமைத்தவர்
கலைஞர்.
47. ஏழை பெண்களுக்கு திருமண
நிதி உதவி திட்டம் தந்தவர் கலைஞர்.
48. விதவை பெண்கள் மறுமண
நிதி உதவி திட்டம் தந்தவர் கலைஞர்.
49. நேரடி நெல் கொள்முதல் மையம்
அமைத்து தந்தவர் கலைஞர்.
50. நெல் கொள்முதலில்
ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம்
செய்தவர் கலைஞர்.

இணைத்தவர் கலைஞர்.

தமிழ்நாடு நுகர் பொருள்
வாணிபக்கழகத்தை அமைத்தவர்
கலைஞர்.
52.
கர்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டத்தை தந்தவர்
கலைஞர்.
53. பெண்கள் சுய
உதவிகுழுக்களை அமைத்து தந்தவர்
கலைஞர்.
54. மனோன்மணியம் சுந்தரனார்
பல்கலைகழகத்தை நிறுவியவர் கலைஞர்.
55. பாவேந்தர் பாரதிதாசன்
பல்கலைகழகத்தை நிறுவியவர் கலைஞர்.
56. டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ
கல்லூரியை நிறுவியவர் கலைஞர்.
57. முதன் முதலில் காவிரி நீதிமன்றம்
அமைக்க முற்பட்டவர் கலைஞர்.
58. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல்
கொண்டு வந்தவர் கலைஞர்.
59. உள்ளாட்சி பதவிகளில் 33%
பெண்களுக்கு இட ஒதுக்கீடு தந்தவர்
கலைஞர்.
60. இரு பெண் மேயரில் ஒருவர்
தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர
செய்தவர் கலைஞர்.
61. மெட்ராஸ் சென்னையாக்கியது
கலைஞர்.
62. முதல் முறையாக
விதவை பெண்களுக்கும் பொறியியல்
மற்றும் மருத்துவ கல்லூரியில்
இடமளிக்க வழிவகை செய்தது கலைஞர்.
63. தொழிற்சாலைகளுக்கான
வெளிப்படை கொள்கை அமைத்து தந்தவர்
கலைஞர்.
64. முதல் முறையாக விதவை பெண்கள்
தொழில் தொடங்க உதவியவர் கலைஞர்.
65. கிராமங்களில் கான்கீரிட்
சாலை அமைத்து தந்தவர் கலைஞர்.
66. 24 மணி நேரமும் மருத்துவ
சேவை தந்தவர் கலைஞர்.
67. தொழில்முறை கல்வியில் கிராமபுற
மாணவர்களுக்கு 15% இட
ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
68. சமத்துவபுரம் தந்தவர் கலைஞர்.
69. கிராமங்களில் மினி-பஸ்
சேவையை கொண்டு வந்தவர் கலைஞர்.
70. இந்தியாவிலேயே முதன் முறையாக
டாக்டர் அம்பேத்கார் பெயரில் சட்ட
கல்லூரியை நிறுவியவர் கலைஞர்.

71. பெரியார் பல்கலைகழகம் நிறுவியவர்
கலைஞர்.
72. உலக தமிழர்களுக்கு உதவ தமிழ்
மெய்நிகர் பல்கலைகழகத்தை தந்தவர்
கலைஞர்.
73. உருது அக்காடமி தந்தவர் கலைஞர்.
74. சிறுபான்மையினர் பொருளாதார
வளர்ச்சி அமைப்பை ஏற்படுத்தியவர்
கலைஞர்.
75. உழவர்சந்தை திட்டத்தை தந்தவர்
கலைஞர்.
76. வருமுன் காப்போம் திட்டத்தை தந்தவர்
கலைஞர்.
77.
கால்நடை பாதுகாப்பு திட்டத்தை தந்தவர்
கலைஞர்.
78. 133 அடி திருவள்ளுவர்
சிலை கன்னியாகுமாரியில் வைத்தவர்
கலைஞர்.
79. டைடல் பார்க் சென்னையில்
அமைத்தவர் கலைஞர்.
80. வீட்டுமனை வழங்கும்
திட்டத்தை தந்தவர் கலைஞர்.
81. மாவட்ட,மாநில அளவில் முதல்
மூன்று இடங்களில்
வருவோருக்கு மேற்படிப்பு உதவி தொகை தந்தவர்
கலைஞர்.
82. ஆசியாவிலேயே மிக பெரிய
பேருந்து நிலையம்
சென்னை கோயம்பேடு நிலையம்
அமைத்து தந்தவர் கலைஞர்.
83. விவசாய
கூலி வேலை செய்வோர்களுக்கு
நலவாரியம் அமைத்து தந்தவர் கலைஞர்.
84. பொது கூலிவேலை செய்வோர்
நலவாரியம் அமைத்து தந்தவர் கலைஞர்.
85. அறிஞர்களுக்கும்,தியாகிகளுக்கும்
மணிமண்டபம் கட்டிதந்தவர் கலைஞர்.
86. 20 அணைகள் கட்டி தந்தவர் கலைஞர்.
87. பள்ளிகளில்
உணவோடு முட்டை தந்தவர் கலைஞர்.
88. மதுரை நீதிமன்றம் கட்டி தந்தவர்
கலைஞர்.
89. இலவச பஸ் பாஸ் தந்தவர் கலைஞர்.
90.அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை தந்தவர்
கலைஞர்.
91. நமக்கு நாமே திட்டத்தை தந்தவர்
கலைஞர்.
92. நலிவுற்ற குடும்பநல
திட்டத்தை தந்தவர் கலைஞர்.
93. 9 மாவட்டங்களில் புதிய
மாவட்டாச்சியர்
அலுவலகங்களை கட்டி தந்தவர் கலைஞர்.
94. 104 கோடி ரூபாயில்
சென்னை பொது மருத்துவமணை புதிய
கட்டிடம் தந்தவர் கலைஞர்.
95. 13000 மக்கள் நலப்பணியாளர்கள்
நியமனம் செய்தவர் கலைஞர்.
96. முதல் முறையாக 10000
சாலை பணியாளர்களை நியமனம்
செய்தவர் கலைஞர்.
97. சென்னையில்
போக்குவறத்து நெரிசலை தவிர்க்க 9
மேம்பாலங்களை கட்டி தந்தவர் கலைஞர்.
98. ரூ.1500 கோடியில் 350
துணை மின்நிலையங்களை உருவாக்கியவர்
கலைஞர்.
99. ஒப்பந்த பணியாளர்களுக்கு
ஓய்வூதிய திட்டத்தை தந்தவர் கலைஞர்.
100.
போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய
திட்டத்தை தந்தவர் கலைஞர்.

01. வேலூர்,தூத்துகுடி,கன்னியாகுமார
ியில் புதிய மருத்துவ
கல்லூரிகளை அமைத்து தந்தவர்
கலைஞர்.
102. ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்.
திட்டத்தை தந்தவர் கலைஞர்.
103. பொது விநியோக திட்டத்தின் மூலம்
சமையல் எண்ணை மற்றும் பல
வீட்டு பொருட்க்கள் நியாயவிலையில்
தந்தவர் கலைஞர்.
104: free professional education (engg,medical,l
aw,...) For first generation graduates : Plan
implemented by @kalaignar89 @pugalmani55
104. நியாயவிலைக்டையில் 10 சமையல்
பொருட்க்களை ரூ.50 க்கு தந்தவர் கலைஞர்.
105. விவசாய கடன் 7000
கோடியை தள்ளுபடி செய்யவைத்தவர்
கலைஞர்.
106. சரியான நேரத்தில்
வங்கி கடனை திருப்பி செலுத்தும்
விவசாயிகளுக்கு வட்டி இல்லை என்றவர்
கலைஞர்.
107. மேம்படுத்தப்பட்ட நெல் கொள்முதல்
விலை ரூ.1050 ஆக உயர்த்தியவர்
கலைஞர்.
108. வகைப்படுத்தப்பட்ட நெல் கொள்முதல்
விலை ரூ.1100 ஆக உயர்த்தியவர்
கலைஞர்.
109. 172 உழவர் சந்தைகளாக
உயர்த்தியவர் கலைஞர்.
110. ஒரு டன் கரும்பின் கொள்முதல்
விலை ரூ.2000 ஆக உயர்த்தியவர்
கலைஞர்.
111. மாவட்டத்திற்குள் நதிநீர்
இணைப்பு திட்டம் தந்தவர் கலைஞர்.
112. ரூ.189 கோடி செலவில் காவிரி-
குண்டூர் நதிநீர் இணைப்பு திட்டம்
தந்தவர் கலைஞர்.
113. ரூ.369 கோடி செலவில் தாமிரபரணி-
கருமேனியாரு-நம்பியாரு நதிநீர்
இணைப்பு திட்டம் தந்தவர் கலைஞர்.
114. காமராஜர் பிறந்த
நாளை கல்வி மேம்பாட்டு தினமாக
அறிவித்தவர் கலைஞர்.
115. பொது நுழைவுத்
தேர்வை ரத்து செய்தவர் கலைஞர்.
116. 10 ம் வகுப்பு வரை தமிழ்
கட்டாயபாடமாக்கியது கலைஞர்.
117. 623 கோடி செலவில் 5824 கோவில்கள்
புனரமைத்து கும்பாபிஷேகம்
பணி செய்தவர் கலைஞர்.
118. அர்ச்சகர்கள்,பூசாரிகளுக்கு இலவச
சைக்கிள் வழங்கியவர் கலைஞர்.
119. ரூ.2 லட்சம் மதிப்புள்ள இலவச
மருத்துவ காப்பீடு திட்டம் தந்தவர்
கலைஞர்.
120. இதயநோய்,சர்க்கர
ைநோய்,புற்று நோய்க்கான நலமான
தமிழகம் திட்டம் தந்தவர் கலைஞர்.
121. மத்திய அரசோடு இணைந்து 108
ஆம்புலன்ஸ் சேவையை தந்தவர்
கலைஞர்.
122. 25 புரிந்துணர்வு ஒப்பந்தம்
கையெழுத்தாகி 37 புதிய
நிறுவனங்களை வர செய்து 41,090
கோடி முதலீடை கொண்டுவந்தவர்
கலைஞர்.
123. 37 நிறுவன அனுமதியால் 3 லட்சம்
பேர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தந்தவர்
கலைஞர்.
124. 5 லட்சம்
இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு தந்தவர்
கலைஞர்.
125. புதிய டைடல் பார்க்
திருச்சி,கோவை,மதுரை,திருநெல்வே
லியில் உருவாக்கியவர் கலைஞர்.
126. அனைத்து கிராம
முறுமலர்ச்சி திட்டம் தந்தவர் கலைஞர்.
127. பேருந்து கட்டணம் ஏற்றாமல் 13000
புதிய பேருந்துகளை தந்தவர் கலைஞர்.
128. அருந்ததியினர் இனத்திற்கு 3%
தனி இடஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
129.
அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளோடு 10,096
கிராம பஞ்சாயத்தை உருவாக்கியவர்
கலைஞர்.
130. 420 பேரூராட்சிகள்
உருவாக்கி அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம்
தந்தவர் கலைஞர்.

131. அனைத்து இனத்தினரும் அர்ச்சகர்
ஆகும் உரிமையை பெற்று தந்தவர்
கலைஞர்.
132. உலக தரம் வாய்ந்த
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை நிறுவியவர்
கலைஞர்.
133.
ஆசியாவையே திரும்பி பார்க்கவைத்த
புதிய சட்டமன்றம் நிறுவியவர் கலைஞர்.
134. அடையார் சூழியல்
ஆராய்ச்சி பூங்கா அமைத்தவர் கலைஞர்.
135.
சென்னை செம்மொழி பூங்கா அமைத்து தந்தவர்
கலைஞர்.
136. கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம்
தந்தவர் கலைஞர்.
137. ஜப்பான்
நாட்டு வங்கி உதவியோடு மெட்ரோ ரயில்
திட்டம் தந்தவர் கலைஞர்.
138. ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்
தந்தவர் கலைஞர்.
139. ராமநாதபுரம்-பரம
க்குடி கூட்டு குடிநீர் திட்டம் தந்தவர்
கலைஞர்.
140. கலைஞர் வீடு திட்டம் தந்தவர்
கலைஞர்.
141. முதல் உலக தமிழ்
செம்மொழி மாநாடு நடத்தியவர் கலைஞர்.
142.
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர்
கலைஞர்.
143. 119 புதிய
நீதிமன்றங்களை உருவாக்கியவர்
கலைஞர்.
144. மாலை நேரம் மற்றும்
விடுமுறை தின
நீதிமன்றங்களை உருவாக்கி தந்தவர்
கலைஞர்.
145. அண்ணா தொழில்நுட்ப
பல்கலைகழகம் திருச்சி,கோவை,ம
துரை,திருநெல்வேலியில்
உருவாக்கி தந்தவர் கலைஞர்.
146. தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய
ஆணையம் அமைத்து தந்தவர் கலைஞர்.
147. சமச்சீர் கல்வி தந்தவர் கலைஞர்.
148. இலவச வண்ண
தொலைக்காட்சி பெட்டி வழங்கும் திட்டம்
தந்தவர் கலைஞர்.
149. முதல்
பட்டதாரிக்கு ஆண்டுக்கு 20,000 வீதம் 4
ஆண்டுகளுக்கு 80,000 பொறியியல்
கல்வி கட்டணம் வழங்கியவர் கலைஞர்.
150. இஸ்லாமியர்களுக்கு 3.5% தனி இட
ஒதுக்கீடு வழங்கியவர் கலைஞர்.
151. இலவச
எரிவாயு உருளை வழங்கியவர் கலைஞர்.
152. பேருந்து,பால்,மின்சார
கட்டணங்களை உயர்த்தாதவர் கலைஞர்.
# ஏன் என்றால் அது ஏழை,நடுத்தரவர்க
்கங்களின் அவசிய பயன்பாடு.
153. மாவட்ட தலைநகரங்களில் மருத்துவ
கல்லூரி,பொறியியல்
கல்லூரி துவக்கியவர் கலைஞர்.
இப்படி இன்னும் பல கலைஞர் வகுத்த
மக்கள் நலத் திட்டங்கள் அதிகம்
இருக்கிறது நண்பர்களே #தமிழக
மக்களின் நலமே கலைஞரின் நலம்.
# நன்றி.