Saturday 26 May 2018

ஈழத்தாய் ஜெயா 20 வருடங்கள் தந்த செருப்படிகளும் சொரணைகெட்ட ஈழக்குஞ்சுகளும்*

ஈழத்தாய் ஜெயா 20 வருடங்கள் தந்த செருப்படிகளும்
சொரணைகெட்ட ஈழக்குஞ்சுகளும்**

1) ராஜீவ் கொலைக்கு பின் பிரேமதாசா ஈழமக்கள் மீது பொருளாதாரத் தடையை விதித்தார்.  ஈழத்தில் கடும் பஞ்சம்.தமிழகத்தில் இருந்து பொருட்கள் போக முடியாதபடி சிறப்புக் காவல் படை அமைத்து தடுத்தார் ஜெயலலிதா.

2)1991- இல் ஈழத்தமிழ் அகதிகள் தமது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டுமென அரசாணையைப் பிறப்பித்தார்.

3)ஈழத் தமிழர்களைக் கைது செய்து அகதி முகாம்களைத் திறந்த வெளிச்சிறைச்சாலையாக மாற்றினார். அதுவரை ஈழ அகதிகளின் பிள்ளைகளுக்காக தொழிற்கல்லூரிகளில் இருந்து வந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்தார். ஈழ அகதிகளின் குழந்தைகள் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் சேர்வதைத் தடை செய்தார்.
4)ஈழப்போரில் அடிபட்டு சிகிச்சைக்காக தஞ்சம் புகுந்த புலிகள், அவர்களின் ஆதரவாளர்களையும், கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தி.கவினரையும் தடாவில் பிடித்து சிறையில் தள்ளினார்.
5)ஜெயா-வாழப்பாடி கும்பல் கரடியாய்க் கத்தியதால் ராஜீவ் கொலைக்கு பின்னர் ஈழ அகதிகள் வாரம் ஒரு கப்பல் வீதம் கட்டாயாப்படுத்தி ஈழத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்

6)தமிழர் வாழ்வுரிமை மாநாடு நடத்தி, புலிகளை ஆதரித்துப் பேசியமைக்காக பா.ம.க தலைவர் ராமதாசு, பண்ருட்டி ராமச்சந்திரன், த.தே.கட்சியின் தலைவர் ப.நெடுமாறன் உட்பட 7 பேர் தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டாகக் குற்றம் சாட்டப்பட்டு ஜெ.அரசால் கைது செய்யப்பட்டனர்.

7)1992- செப்டம்பர் 10,11,12 தேதிகளில் பா.ம.க நடத்திய ‘தமிழர் வாழ்வுரிமை மாநாட்டினை’ அடுத்து ராமதாசு, பண்ருட்டி ராமச்சந்திரன், மற்றும் மாநாட்டில் தீவிரமாகப் பேசியதாகக் கூறி சுப.வீரபாண்டியன், பெ.மணியரசன், தியாகு, நெடுமாறன் ஆகியோரைக் கைது செய்தார். ராமதாசுக்கு பிணை கொடுத்த சென்னை கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்ற பொறுப்பு நீதிபதி டி.வி.சுப்ரமணியத்தை மிரட்டி விடுப்பில் வீட்டுக்கு அனுப்பிவிட்டு நீதிபதி கந்தசாமிபாண்டியனை அமர்த்திப் பிணையை ரத்து செய்ய வைத்து சி.பி.சி.ஐ.டி மூலம் 124-ஏ (தேசத்துரோகம்) சட்டத்தின் கீழ் கைது செய்ய வைத்தார்.
1993

8)கிட்டுவின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்ததகாக ப.நெடுமாறன் போன்றோரை ‘தடா’வின் கீழ் சிறை வைத்தார்.
கோவை ராமகிருஷ்ணன் (தி.க )  இரண்டாண்டுகளுக்கும் மேலாக கொடிய தடா சட்டத்தின் கீழ் ஜெ சிறையில் வைத்தார். விடுதலைப் புலிகளுக்கு வெடிமருந்தும், ஆயுதத் தளவாடங்களும் தயாரித்துக் கொடுத்ததாகப் பொய் வழக்குப் போட்ட ஜெ அரசு இவர்களைப் பிணையில் கூட வெளியில் விட மறுத்தது.

9) கனடா நாட்டுக் குடியுரிமை பெற்ற சி.பாலச்சந்திரன்
ஈழத் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக 12.3.91 இல் க்யூ பிரிவு போலீசால் பிடித்துச் செல்லப்பட்டார். தி.மு.கவை வன்முறைக்கட்சி எனச் சித்தரிக்க ஐ.பி தயாரித்திருந்த சதித் திட்டத்திற்கு ஒத்துழைக்க அவரை மிரட்டின.அவர் அதற்கு மறுக்கவே, சட்ட விரோதக் காவலில் அவரை பல வருடங்கள்  ஜெயிலில் அடைத்து வைத்தனர்.

10)1995 – இல் தஞ்சையில் ஜெ நடத்திய உலகத்தமிழ் மாநாட்டுக்கு அழைப்பின் பேரில் வருகை தரவிருந்த கா.சிவத்தம்பி உள்ளிட்ட ஈழத் தமிழ் அறிஞர்கள், புலி ஆதரவாளர் என முத்திரை குத்தி வெளியேற்றப்பட்டனர்.

11) 2002 இல் புலிகளும் சிங்கள அரசுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தை சமயத்தில் சர்க்கரை நோயினாலும், சிறுநீரகக் கோளாறினாலும் அவதிப்பட்டு வந்த புலிகளின் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் சிகிச்சை பெற அனுமதி கோரினார்.

ஜெயாவின் பினாமியான அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மூலம் புலிகளின் பயங்கரவாதப் படுகொலைகளைப் பட்டியல் போட்டு, ஒருக்காலும் புலிகளை அனுமதிக்கக் கூடாது என மைய அரசுக்குக் கடிதம் எழுதினார். அவரின் கோரிக்கையை இந்திய அரசும் ஏற்றுக் கொண்டது.

12) அதே 2002  ஆண்டில் ஜெயா சட்டசபையில் ‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி-தலைவர் பிரபாகரனைப் பிடித்து இங்கே கொண்டு வரவேண்டும்’ என்று தீர்மானமும் நிறைவேற்றினார்

13) ஜூலை 2002:விடுதலைப் புலிகளை ஆதரித்து மதுரை திருமங்கலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதைக் காரணம் காட்டி வை.கோ மற்றும் 8பேர்கள் மீது ஜெ கொடிய பொடா சட்டத்தை ஏவிச் சிறையில் அடைத்தார்.

14)செப்டம்பர் 2002 ஆள்பலமோ, மக்கள் செல்வாக்கோ இல்லாத நெடுமாறனின் கட்சி தடை செய்யப்பட்டு, அலுவலகங்கள் அதிரடிப்படை போலீசால் சோதனை இடப்பட்டு சீல் வைக்கப்பட்டன.

16) செப்டம்பர் 2007இல் தமிழ்ச்செல்வன் கொலை செய்யப்பட்ட பிறகு, அவருக்கு நினைவேந்தல் கூட்டமும், வீரவணக்கக் கூட்டமும் நடத்தியவர்கள் மீது தேசத் துரோகக் குற்றத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று ஜெ கூறினார். கருணாநிதி எழுதிய இரங்கற்பாவை வைத்து தி.மு.க ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று கூறினார். பதிலுக்கு கருணாநிதி ‘இலங்கையில் கொல்லப்படுவது ஒரு தமிழன். என் உடம்பில் ஓடுவது தமிழ் ரத்தம். அதனால்தான் இரங்கல் தெரிவித்தேன்’ என்றார். அதற்கு ஜெ ‘நானும் தமிழச்சிதான்’ என்று கூறி விடுதலைப் போராளிகளைக் கொச்சைப்படுத்தினார்.

17)2008 இல் ஈழத்தமிழ் மக்கள் செத்து மடிவதைப் பற்றி ‘போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என திமிராகப் பேசினார். திரைத்துறையினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சீமான், அமீர் போன்றோர் பயங்கரவாதத்திற்கு ஆதரவாகப் பேசினார்கள் அவர்களை கைது செய்யவேண்டுமென கருணாநிதிக்கு உத்தரவுபோட்டார். அதன்பிறகு திருமாவைக் கைது செய்யவேண்டுமென்றார். கடைசில் கருணாநிதியையும் கைது செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

இப்படி பத்தொன்பது ஆண்டுகளாக ஈழத்திற்கு எதிராகவும், தமிழ்நாட்டுத் தமிழருக்கு எதிராகவும் ஆட்டம் போட்ட பாசிசப் ஜெயலலிதாவை நம்பி 2011 இல் வெற்றி ஈழத்தாய் பட்டம் கொடுத்தனர் ஈனப்பிறவி தேசிய குஞ்சுகள்.

நாற்பது சீட்டையும் வெற்றிபெற வைத்தால் தன் முந்தானையில் முடிந்துவைத்திருக்கும் ஈழத்தை தூக்கித் தருவதாக கூக்குரலிட்டார் ஜெ.

ஈழப்பிரச்சினைக்காக அ.தி.மு.கவை ஆதரிக்க முடிவெடுத்த ஈழக்குஞ்சுகள்  இதுவரை கண்ட பலன் என்ன?

இதையெல்லாம் மறந்து விட்டு பிரபாகரன் பலமுறை தன் முதுகில் குத்தியபோதும் அதை பொறுத்துக் கொண்ட கலைஞர்
பிரபாகரனை ஒரு வார்த்தை தவறாக பேசியதில்லை.

கலைஞர் வீட்டு கழிப்பறை தண்ணீரை குடிங்கடா தினமும்
அப்படியாவது உங்களுக்கு புத்தி வருதா எனப் பார்ப்போம்.

Thursday 24 May 2018

கலைஞர் உண்ணாவிரதம் நாடகமா? அப்போது என்ன நடந்தது. முழு விபரமும் கீழே.

கலைஞர் உண்ணாவிரதம் நாடகமா?
அப்போது என்ன நடந்தது. முழு விபரமும் கீழே.
இலங்கையில் போர் கடுமையாக நடக்கிறது என்று கேள்விப்பட்ட உடனே 14.10.2008ல் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியது கலைஞர்
அந்த கூட்டத்தில் ‘போர் நிறுத்தம் செய்ய முன்வராவிட்டால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள்’ என்று தீர்மானம் நிறைவேற்றியது கலைஞர்
அந்த தீர்மானத்தை உடனடியாக பிரதமருக்கு அனுப்பியது கலைஞர். அதற்கு பிரதமர் அரசியல் தீர்வுகாண அனைத்து நடவடிக்கைகளையும் அரசு விரைவாக எடுத்திடும் என்று உறுதியளித்தார்.
தீர்மானத்தைப் பார்த்தால், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் மக்கள் மனதில் எழுந்துள்ளது என்றவர் ஜெயலலிதா.
இலங்கைப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை 5 முறை முதலமைச்சரான கருணாநிதி புரிந்து கொள்ளாதது விந்தையாக உள்ளது. இலங்கை விஷயத்தில் இந்தியா தலையிட்டால், பின்னர் நம் உள்விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடும் வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பதாக அமையும். அடுத்த நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளாது என்றும் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார்.
கலைஞரின்  வேண்டுகோளினை ஏற்று இந்திய பிரதமர் 18.10.08ல் இலங்கை அதிபருடன் பேசினார்.
ஈழப்போரை நிறுத்த திமுக 24.10.08ல் சென்னையில் பிரமாண்டமான மனிதச் சங்கிலி நடத்தியது
26.10.08ல் பிரணாப் சென்னை வந்து கலைஞரை சந்தித்தார்.
12.11.08ல் இலங்கை போர் நிறுத்த தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் முன் மொழிந்து நிறைவேற்றியதும்,
4.12.08ல் அனைத்துக் கட்சி தலைவர்களையும் பிரதமரிடம் அழைத்துச் சென்று பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி பேசச் சொன்னதும்,
அவ்வாறே பிரணாப் சென்று பேசியதும், 27.12.08ல் திமுக பொதுக்குழுவில் இலங்கைத் தமிழர்களுக்காக தீர்மானம் நிறைவேற்றியதும்
கலைஞர்தானே
26-4-2009 அன்று விடுதலைப் புலிகள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஐ.நா.சபை ஆகியவற்றின் கோரிக் கையை ஏற்று போர் நிறுத்தம் செய்கிறோம். இந்தக் காலவரையற்ற போர் நிறுத்தம் உடனே அமலுக்கு வரும். இலங்கை ராணுவம் நடத்தி வரும் போரால் தமிழ்மக்கள் அனுபவிக்கும் துன்பம் உச்ச நிலையை எட்டியுள்ளது. இலங்கை அரசும் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்கள்.
26ஆம் தேதி வந்த இந்தத் தகவல்களுக்குப் பின் அன்றிரவு முழுவதும் கலைஞர் தூங்கவில்லை. போர் நிறுத்தம் பற்றி இலங்கை அரசு ஏதாவது அறிவித்ததா என்று டெல்லியிலே தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டே இருந்தார். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை பலமுறை தொடர்பு கொண்டார். பிரதமரும் கலைஞரோடு தொடர்பு கொண்டார். வெளிநாடுகளிலிருந்து ஏராளமான தமிழர்கள் கலைஞரை  தொலைபேசியிலே தொடர்பு கொண்டு பேசிக் கொண்டே இருந்தார்கள்.
அதிகாலை 4 மணி வரையிலே தொலைக்காட்சியில் நல்ல செய்தி வருமா என்று எதிர்பார்த்தார் கலைஞர். எந்தச் செய்தியும் வரவில்லை. இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை என்ற செய்திதான் கிடைத்தது. அதற்குப் பிறகுதான் 5 மணி அளவில் தன் வீட்டாரிடம் அறிவாலயம் செல்கிறேன் என்று கூறிவிட்டு, அண்ணா நினைவிடத்திற்குச் சென்றார் கலைஞர்.
அதே ஆண்டு ஜனவரி மாதத்தில் மிகப் பெரிய அறுவை சிகிச்சை ஒன்றை என் முதுகிலே இந்த வயதிலே செய்து கொண்டு, நடக்க முடியாத நிலையில் சக்கர வண்டியிலே பயணம் செய்து கொண்டிருந்த கலைஞர் தன் உடல் நிலையைப் பற்றியோ வேறு எதைப் பற்றியோ கவலைப் படாமல் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பது என்ற முடிவோடுதான் யாருக்கும் கூறாமல், கூறினால் அனுமதிக்க மாட்டார்கள் என்பதால், தானாக முடிவெடுத்துச் சென்றார்
அதே நாளில் பகல் 12 மணி அளவில் இலங்கை அரசு ஓர் அறிக்கையினை வெளியிட்டது. அந்த அறிக்கையில் இலங்கை வடக்கில் நடைபெற்று வந்த போர் முடிந்து விட்டது. வடக்கு பகுதியில் இனி கனரக ஆயுதங்களை பயன் படுத்த வேண்டாம் என்று ராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விமானத்தில் இருந்து குண்டு வீசுவதும் நிறுத்தப்படுகிறது. வடக்கில் சிக்கியுள்ள பொது மக்களை பாதுகாப்புடன் மீட்கும் பணிகளில் இலங்கை ராணுவத்தினர் ஈடுபடுவார்கள். இனி அப்பாவி மக்களை பாதுகாக்கும் பணிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இலங்கை அரசு வெளியிட்ட அந்த அறிக்கையின் அடிப்படையிலும்; பிரதமரும், சோனியா காந்தி அம்மையாரும் கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலும், மற்றும் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், நண்பர்களும் நேரில் வந்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி வலியுறுத்தியதன் அடிப்படையிலும் மதியம் 1 மணி அளவில் கலைஞர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
28.4.09 தினத்தந்தியின் தலைப்பு: ‘மத்திய அரசின் கோரிக்கையை ராஜபக்சே ஏற்றார்'
"கருணாநிதி உண்ணாவிரதம் வெற்றி போரை நிறுத்தி விட்டதாக இலங்கை அறிவிப்பு’'
இதைத் தவிர 2ம் பக்கத்தில் ‘போர் நடவடிக்கை முடிவுக்கு வந்தது; இலங்கை ராணுவம் அறிவிப்பு’ என்ற தலைப்பில் இலங்கை அதிபர் ராஜபக்சே அலுவலகத்தில் இருந்து வெளியான அறிக்கை முழுவதுமாக வெளியிடப்பட்டிருக்கிறது.
இலங்கை-புலிகள் போர் பற்றி ஒரு இலங்கை ராணுவ தளத்தின் கட்டுரை கண்ணில் பட்டது. அதிலிருந்து ஒரு excerpt:
"6A day before the Dravida Munnettra Kazhagam (DMK) supremo and Tamil Nadu Chief Minister M Karunanidhi went on a fast on April 27, 2009 at the Anna Memorial in Chennai protesting against the SLAF offensive against the LTTE, Menon called me on my cell phone at 4.30 pm. The Indian team wanted to visit Colombo for urgent talks. I went straight to the President’s office and got his sanction and called Menon back within five minutes. Within six hours of Karunanidhi going on fast we could defuse the crisis in Tamil Nadu by issuing a statement announcing the end of combat operations and shelling inside the ‘No Fire Zone’, which led to the Tamil Nadu Chief Minister ending his fast. This was a classic example of quiet, corrective diplomacy between two officially designated government teams"
அப்படியென்றால் கலைஞர் மட்டும் ஏமாந்தார் என அர்த்தமா?
ஒட்டு மொத்த இந்தியாவையும் இலங்கை ஏமாற்றியது என்பதே உண்மை.
இதெல்லாம் நாடகமா?
கலைஞர் உண்ணாவிரதம்
முடிந்தவுடன் நடேசன் சொன்னது இதுதான்.
"LTTE are very strong and are in brink of victory and this fast by MK is an attempt to prevent their victory "
அப்போது இலங்கை அரசு புலிகள் ஆயுதங்களை   ஒப்படைத்தால் புலிகளை பத்திரமாக நாட்டை விட்டு வெளியேற அனுமதிப்பதாக தெரிவித்தது. அதை புலிகள் ஏற்கவில்லை.
தாங்கள் போரில் வெற்றி பெறும் நிலையில் உள்ளதாகவும் கலைஞர் அதை தடுக்க பார்ப்பதாகவும் நடேசன் சொன்னாரே. அது சரியான பேட்டியா?
விரைவில் பிஜெபி ஆட்சியை பிடிக்கும். தனி ஈழ அறிவிப்பு வரும். அதுவரை காத்திருங்கள் என்று தமிழகத்தில் இருந்து வந்த தகவலைத்தானே புலிகள் நம்பினார்கள்.
2009ல் திமுக மத்திய அரசிலிருந்து வெளியேறியிருந்தால்
இலங்கைத் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள் என்பதெல்லாம், திமுக மீது பழியைப் போடுகின்ற செயலே. அனுமானத்தின் அடிப்படையில் ஒரு கருத்தை உறுதி செய்வதை, வரலாறு அறிந்தவர்கள் ஏற்கமாட்டார்கள்.
போர் உச்சநிலையின் போது மத்திய அரசுக்கான ஆயுள் இன்னும் ஒன்றிரண்டு மாதங்களே உள்ள நிலையில் தி.மு.க. வெளியேறுவதால் டெல்லியைப் பொறுத்தவரை இருதரப்புக்கும் எந்த நட்டமும் இல்லை.
ஆனா மாநிலத்தில் உள்ள தி.மு.க. அரசுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால் அது காங்கிரஸ் கட்சியின் 35 எம்.எல்.ஏக்களின் தயவில்தான் நீடித்துக் கொண்டிருந்தது.
ஈழத்தமிழர் பிரச்சினைக்காக பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு, தேர்தலைச் சந்தித்தால் பெரும்பான்மை பெறலாமே என்பீர்கள்.
அப்படியே திமுக ஆட்சியை ராஜினாமா செய்து இழந்திருந்தாலும் போர் நின்றிருக்க வாய்ப்பே இல்லையே.
பதிலாக ஈழத்தாய்  2009 லேயே மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பார்.
ஆனால் இதற்கு முன் ஈழத்தமிழர் பிரச்சினைக்காக இரண்டு ஆட்சியை இழந்த கட்சி தி.மு.க. மட்டும்தான்.
ஆனால் மக்கள் திரும்ப திமுகவிற்கு வாக்களித்தனரா?
அதுமாத்திரமல்ல. திமுக ஆட்சியில் இருந்த போதும், இல்லாத போதும் ஈழத் தமிழர்களுக்காக எத்தனையோ போராட்டங்களையும் நடத்தியுள்ளது
ஆட்சிக்கு வருவதைப் பற்றி கற்பனைகூட செய்துபார்க்காத 1956ம் ஆண்டிலேயே, சிதம்பரத்தில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் ஈழத் தமிழர்களுக்காக தீர்மானத்தை முன்மொழிந்தது திமுக.
16.4.02ல் தமிழக சட்டசபையில் ‘பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும்’ என்று ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியதை தமிழ்நாட்டு மக்கள் மறந்து விடுவார்களா?
17.1.09ல் இலங்கைத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது ‘போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான்’ என்று ஜெயலலிதா கூறியதை மறந்தது ஏன்?

பதில் சொல்லுங்க  தமிழ் தேசியவாதிகளே?

Friday 18 May 2018

புலிகளோ பிரபாகரனோ எந்த காலத்திலும் எந்த சூழலிலும் கலைஞரை விமர்சித்ததில்லை.

கலைஞருக்கு ஈழ விசயத்தில் கெட்ட பெயர் ஏற்பட காரணமே கலைஞர் புலிகளின் அடாவடி செயல்களை கண்டிக்காததும் , கண்டுக்கொள்ளாததுமேதான்
புலிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்து குறைந்த பட்சம் ஒதுங்கியாவது கலைஞர் இருந்திருக்கலாம்.
ஆரம்பத்தில் கலைஞர் கோரிக்கை விடுத்தும் மதிக்காமல் அவர் ஆதரித்த டொசோ அமைப்பினரை கொன்றனர் புலிகள்.
அமிர்தலிங்கம் உட்பட மிதவாத ஈழத்தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
MGR க்கு பயந்து கலைஞர் மக்களிடம் வசூலித்த நன்கொடைகளை கூட வாங்க மறுத்தனர் புலிகள்.
ராஜீவ் கொலை ,  பத்மனாபா கொலை என வரிசையாக நடந்தது.
ஈழப்பிரட்சினையால்
கலைஞர் பேராசிரியர் MLA பதவிகளை துறந்தனர்
திமுகவினர் சிறைநிரப்பும் போராட்டம் நடத்தினர்
விடுதலைபுலிகளை ஆதரித்ததாக 1991 இல் திமுக ஆட்சி டிஸ்மிஸ்
ராஜீவ் கொலை பழி சுமந்து 1991ல் தேர்தலில் படுதோல்வி
2011 தேர்தலில் பாதிப்பு
திமுக ஈழப்பிரட்சினையால் இழந்தது ஏராளம்
ஒவ்வொரு முறையும் கலைஞரை மதிக்காமல் எதிராக நடந்தனர் புலிகள்
கலைஞரோ அவர்களை பற்றி விமர்சிக்கவேயில்லை. பதிலுக்கு புலிகள் இறந்தால் இரங்கற்பா எழுதுவார். ஜெயாவால் கண்டிக்கப்படுவார்.
புலிகள் எப்படி அலட்சியம் செய்தாலும் கலைஞர் வலிய போய் அவர்களை ஆதரிப்பார் என்பதே உலக தமிழர் கணக்கு.
புலிகள்தான் அணையை மூடி போரை ஆரம்பித்தனர் .போர் நடந்த காலத்தில் புலிகள் கலைஞரிடம் ஒருமுறை கூட தொடர்பு கொண்டதில்லை.
கடைசி நேரத்தில் எல்லாம் கைநழுவி போன நேரத்தில் சில முயற்சிகள் கனிமொழி சிதம்பரம் மூலம் நடந்தது.
போர் சைனா பாகிஸ்தான் போன்ற வெளிநாட்டின் உதவியால் நடந்தது. இந்தியா ரேடார் கொடுத்தது மட்டுமே உண்மை. சில வருட போரில் ஏகப்பட்ட சிங்களப் படையினர் இறந்துள்ளனர். அந்த சமயத்தில் இந்தியா சொன்னால் சிங்களன் ஏற்பானா?
புலிகளை ஒழிக்க கிடைத்த கடைசி வாய்ப்பை கைவிட அத்தனை இளிச்சவாயனா சிங்களன்?
கலைஞருக்கு தன்னால் எதுவும் செய்ய முடியாது என்பது தெரியும்
சோனியா தன் புருசன் ராஜீவை புலிகள் கொன்றதா அந்த அம்மா நினைச்சிகிட்டு இருக்கு. அந்த அம்மாவிடமே போய் அவங்க புருசனை கொன்ற புலிகளை காப்பாறுங்க எந்த முகத்தோடு கேட்பார் கலைஞர்.
திமுகவில் இருந்த ஈழ ஆதரவாளர்கள் கொதித்தனர். கலைஞருக்கு அப்பாவிகள் கொல்லப்பட்டது பெரும் துன்பத்தை தந்தது. அவரும் யாரிடமும் சொல்லாமல் 87 வயதில் உண்ணாவிரதம் இருந்தார். போரை நிறுத்துவதாகவும் அப்பாவி மக்கள் கொல்லப்பட மாட்டார்கள் என உறுதியளிக்கப்பட்டது. காலை 6 To 2 மணி உண்ணாவிரதம் வாபஸ் ஆனது.
கலைஞருக்கு தன்னால் போரை நிறுத்த முடியாது என்பதும் எல்லாம் எல்லை மீறி விட்டது என்பதும் தெரியும். ஆனால்
அந்த வயதில் அதுதான் முடியும்.
சில கேள்விகள்
ஒரு முறை கூட உண்ணாவிரதம் இருக்காத நாய்கள் கலைஞரின்
8 மணி நேர உண்ணாவிரத்தை கிண்டலடிக்கலாமா?
போர் நடக்கும் போது கூடவே அப்பாவி மக்களையும் ஏன் அழைத்து சென்றனர் புலிகள்?
மக்களை விட்டு விலகிச் சென்று சிங்களனுடன் காட்டில் சண்டை போட்டிருந்தால் மக்கள் செத்திருக்க மாட்டார்களே
கலைஞரா முள்ளிவாய்க்காலுக்கு பொது மக்களை அழைத்துச் சென்று அடைக்கச் சொன்னார்.?
என்றைக்கு புலிகள் கலைஞர் ஆதரித்த டெசோ அமைப்பினர் அனைவரையும் கலைஞர் வேண்டுகோளையும் மதிக்காது அழித்தனரோ அத்தோடு கலைஞருக்கும் போராளிகளுக்குமான தொடர்ப்பு முடிந்தது
புலிகள் கலைஞரை மதித்ததுமில்லை
உதவி கோரியதுமில்லை
8 மணிநேர உண்ணாவிரம் அப்பாவி மக்களுக்காகதான்
புலிகளை காப்பாற்ற அல்ல.
பத்மநாபாவை தமிழகம் போய் கொலை செய்கிறோமே திமுகவிற்கு பாதிக்குமே என புலிகள் நினைத்தனரா?
ராஜீவை தமிழகத்தில்தான் கொல்லனுமா?
அன்று கொலை பழி விழுந்து திமுகவினரின் சொத்துக்கள் எரிக்கப்பட்டதே, திமுகவினர் அடிபட்டனரே எவன் வந்துடா திமுககாரனை காப்பாத்துனான்?
திமுகவால் முடியுமா என்பது வேறு விசயம்.
தங்களை காப்பாற்றுங்கள் என புலிகள் கோரிக்கை எதுவும் வைத்தனரா?
எந்த கோரிக்கையும் வரவில்லை
புலிகளோ பிரபாகரனோ எந்த காலத்திலும் எந்த சூழலிலும்
கலைஞரை விமர்சித்ததில்லை.
கலைஞரும் விமர்சித்ததில்லை.
கலைஞரை விமர்சிப்பதெல்லாம்
சில்லரைகளும் சில்லுண்டிகளுமேதான்
பாவம் .. இந்த தமிழ்தேசியவாதிகள் ஈழத்தை வைத்து பிழைத்து போகட்டும்
😄😄

A.PARIMALAM 

Saturday 12 May 2018

உண்மையில் ஓட்டுக்கு பணம் என்பது காமராஜர் பார்முலா தம்பிகளா.

உண்மையில் ஓட்டுக்கு பணம் என்பது காமராஜர் பார்முலா தம்பிகளா.

1962 ல் காமராஜர் காஞ்சிபுரத்தில் அண்ணாவை தோற்கடிக்க பஸ்முதலாளி நடேசமுதலியாரை நிறுத்த அவர் வெங்கடாஜலபதி படத்தில் சத்தியம் வாங்கி ஓட்டுக்கு 10ரூ தந்து 9190 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார்.

2003 ல் சாத்தான்குளம் தேர்தலில் ஜெயலலிதா வீட்டுக்கு வீடு பணம் தந்து வென்றார்
2005 பிப்ரவரியில் காஞ்சிபுரம், கும்மிடிபூண்டியில் ஓட்டுக்கு மூக்குத்தி கொடுத்தது ஜெயலலிதாதான்.

https://thewire.in/politics/wiping-out-tamil-nadus-cash-for-votes-syndrome-is-no-easy-task-for-election-commission

ஓட்டுக்கு பணம் தந்த காமராஜரையும் ஜெயலலிதாவையும் விட்டு விட்டு திருமங்கலத்தில்தான் முதன் முதலில் பணம் கொடுத்தது போல திமுகவை குறையடிக்கின்றனர் கபட மதியுள்ளோர்.

2011 ல் நாங்கள் செய்த சாதனைகளுக்கு மக்கள் ஓட்டு போடுவார்கள் என இருந்தது திமுக. மின்சார பிரட்சினை,  2G திமுகவை காலை வாரிவிட்டது.

2016 ல் ஜெயலலிதா பல ஆயிரம் கோடிகளை தந்துதான் வென்றார். திமுக வேட்பாளர்களில் சிலர் பணம் தந்தனர். அது அதிமுகவுடன் ஒப்பிடும் போது மிக குறைவு. பல திமுக வேட்பாளர்கள் வெற்றி உறுதி என நினைத்து கட்சி தந்த பணத்தை கூட செலவு செய்யாது அமுக்கி விட்டனர்.

விளைவு அதிமுக ஆட்சி.

அடுத்த முறையும் மதுவை ஒழிப்பேன் ஓட்டுக்கு பணம் தர மாட்டேன் என திமுக நினைத்தால் விளைவு எப்படி இருக்கும் என சொல்ல முடியாது.

By A.Parimalam

Friday 4 May 2018

திராவிடத்தால் வாழும் தமிழகம்* ( Complete statistics)

திராவிடத்தால் வாழும் தமிழகம்*
( Complete statistics)
1967 வரை தமிழகத்தின் வளர்ச்சி என்பது இந்திய சராசரியை விட குறைவு.  காங்கிரஸ் ஆட்சியில்தான் தமிழகம் பெரும் பஞ்சத்தை சந்தித்தது. அதைத்தான் பொற்கால ஆட்சி என்று உளறுகிறர் மூடர்கள்.
தமிழகம் வளர ஆரம்பித்ததே 1970 முதல்தான். அதே தமிழகம் 1977-87 வரை MGR ஆட்சியில் மீண்டும் வளர்ச்சியில் இந்திய சராசரியை விட பின்தங்கியது.
திமுக ஆட்சி வந்தபோதெல்லாம் வளர்ச்சி அடைந்த தமிழகம் அதிமுக ஆட்சியில் வளர்ச்சியில் பின் தங்கியது.
NSDP of Tamilnad at current prices
அதிமுக ஆட்சி 2005-06:-51.8.     
                                           (billion US$)
திமுக ஆட்சி 2010-11:- 128.6
                                           (billion US$)
அதாவது ஒன்னரை மடங்குக்கு மேல் திமுக ஆட்சியில் நிகர உற்பத்தி திறன் பெருகியுள்ளது.
தமிழகம் ஒட்டு மொத்த நிகர உற்பத்தியில் (net state domestic product ) இந்தியாவிலேயே மகாராஸ்டிராவிற்கு அடுத்து இரண்டாவது இடம்.
எப்படியோ இருந்த தமிழகம் இப்படி வளர்ந்ததே கலைஞரால்தான்.
In 1960, the average person in West Bengal earned Rs.390 per annum; the average person in Tamil Nadu earned Rs.330.
But in 2014, the average Bengali earned Rs.80,000 while the average Tamilian earned Rs.1,36,000.
Tamil Nadu went from being the fourth poorest among these 12 States in 1960 to the second richest in 2014.
Tamil Nadu has 37 universities, 552 (in 2014) engineering colleges. and 1150 arts college, 2550 schools and 5000 hospitals. 
Tamil Nadu is one of the most literate states in India. The state's literacy rate is 80.33% in 2011, which is above the national average.
A survey conducted by the Industry body Assocham ranks Tamil Nadu top among Indian states with about 100% Gross Enrollment Ratio (GER) in primary and upper primary education.
“Tamil Nadu has set up industrial parks and special economic zones (SEZs) and offers tax incentives. FDI is allowed in the manufacturing industries based in the SEZs. With a good influx of talented human resources, Tamil Nadu has been able to attract incentives,”
  Tamil Nadu is the second largest state economy after Maharashtra with a gross state domestic product(GSDP) of ₹976,703 crore(US$150 billion).
With GDP per capita of $2,464 it ranks sixth among Indian states. It is second most industrialized state in India next to Maharashtra.
It ranks second in per capita income (2004–2005) among large states. It ranks third in foreign direct investment (FDI)approvals (cumulative 1991–2002) of ₹22,582.6 crore (US$3.5 billion), next only to Maharashtra (₹33,602.4 crore (US$5.1 billion)) and Delhi (₹30,303.8 crore (US$4.6 billion)).
The State's investment constitutes 9.12% of the total FDI in the country.
 According to the 2001 Census, Tamil Nadu has the highest level of urbanisation (43.86%) in India, which accounts for 6% of India's total population and 9.6% of the urban population.
Tamil Nadu has most number of engineering Institutions in India. Chennai is referred as the Gateway of South India. Chennai is the second leading Software exporter in India. Companies such as Cognizant, Covansys, Xansa, Verizon, iSoft, Invensys, Schneider Electric and many others are Chennai based companies in India.
 Infosys has set up India's largest software development centre to house 25,000 software professionals at an estimated investment of Rs 12.50 billion (Rs 12.5 billion) in Chennai.
Chennai has become the most preferred BPO hub in India and South Asia.
Chennai is sometimes referred to as the Health Capital of India or the Banking Capital of India, having attracted investments from International corporations and the World Bank and it is called as Detroit of Asia.
Tamil Nadu has a network of about 110 industrial parks/estates that offer developed plots with supporting infrastructure.
Also, the Government is promoting other industrial parks like Rubber Park, Apparel Parks, Floriculture Park, TICEL Park for Biotechnology,Siruseri IT Park, Agro Export Zones among others.
The heavy engineering manufacturing companies are centred around the suburbs of Chennai.
Chennai boasts presence of global car manufacturing giants like Ford, Daimler, Hyundai, BMW, Mitsubishi, Komatsu, Yamaha, Nissan and Renault as well as home grown companies like MRF, JK Tyre, TI Cycles of India, Ashok Leyland TVS and Mahindra and Mahindra.
Chennai is also home to one of the Indian Institutes of Technology, IIT Madras.
The Koyambedu Bus Stand (Asia's largest bus stand) operated by CMDA is the first bus stand in India to get (The Global Positioning System) which will use sensors to track vehicles on the move.
Kalpakkam nuclear power plant, Neyveli Lignite Corporation, and the Narimanam natural gas plants provide sources of fuel and energy for the nation.
55% of electricity from wind power produced in India from wind mills comes from Tamil Nadu.
The Kalpakkam Mini Reactor(Kamini) is the only U-233fueled operating reactor in the world.
Coimbatore, also known as the Manchester of South India, is one of the fast developing cities in India and the second largest city in Tamil Nadu. Coimbatore is also known for its textile factories, engineering firms, automobile parts manufacturers, health care facilities, educational institutions, wet grinders and water pumps. 76% of India's total textile market is from Erode (Loom City) and Tirupur(Textile City).
It exports much of its production to South East Asian and European countries. Karur (Home Textile City) is the India's hub for home textiles production & export. It contributes over 60% of total production of India. Karur is also known for its bus body building (contributes 80% of South Indian bus body building). 
Karur TNPL is the Asia's largest eco friendly paper mill in production. Erode is also known as the Turmeric City, since it has the Asia's largest market for Turmeric. 
Gobichettipalayam is one of the largest producers of White silk with the country's first automatic silk reeling unit established here. 
Namakkal is one of the largest producers of poultry in the country. 
Salem is called as steel city and has many sago producing units, mineral wealth.
 Sivakasiis the leader in printing, fireworks, safety matches production in India. It contributes 80% of India's total safety matches production and 90% of India's total fireworks production.
Thoothukudi is the gateway of Tamil Nadu. it is a major chemical producer only next to chennai. As of 1980's Asia's largest chemical industry DCW Ltd, is situated in the district. And many more chemical industries such as SPIC, Sterlite copper, VV Titanium pigments, Tuticorin Alkali Chemicals, HWP-Tuticorin, Ferron Steels, etc.
Biovalleys in Tamil Nadu include Biotechnology Incubator Park Near Chennai, Women's Biotechnology Park Kelambakkam,[33] Medicinal Plants Biotechnology Park, Madurai, Marine Biotechnology Park, Mandapam and Bioinformatics and Genomics Centre (BGC), Chennai.
Tiruchirappalli is a major engineering equipment manufacturing hub in Tamil Nadu. The Golden Rock Railway Workshop, moved to Tiruchirappalli from Nagapattinam in 1928, is one of the three railway workshop–cum–production unit in Tamil Nadu.
 The workshops produced 650 conventional and low-container flat wagons during the year 2007-08.
இது போதுமா இன்னும் வேணுமா

A.Parimalam ( The News Man)

Tuesday 1 May 2018

அதிமுகவிடம் ஊடகங்களும் சில்லுண்டி சில்லரை கட்சிகளும் கேட்க மறந்த கேள்விகள்😁



அதிமுகவிடம் ஊடகங்களும் சில்லுண்டி சில்லரை கட்சிகளும் கேட்க மறந்த கேள்விகள்😁

1)1972-77 வரை இந்திராவுடன் நெருக்கமாக இருந்த MGR காவேரி பிரட்சினையை தீர்க்க எடுத்த முயற்சிகள் என்ன?

2)இந்திரா முன்னெடுத்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில் 1977 ல் ஆட்சிக்கு வந்த MGR காவேரி வழக்கை மீண்டும் உச்சநீதிமன்றத்தில் போடலாம் என்ற உரிமை இருந்தும் ஏன் வழக்கு போடவில்லை?

3)1977 முதல் 1987 வரை MGR ஏன் நடுவர் மன்றம் அமைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை?

1983 ல் மன்னார்குடி ரெங்கநாதன் போட்ட வழக்கில் கூட 1986 வரை MGR அரசு தன்னை
இணைந்துக் கொள்ளாதது ஏன்?

4)பிரதமர் வாஜ்பாய் அவர்கள் இரண்டு நாட்கள் தொடர்ந்து நடத்திய  கூட்டத்தின் இறுதியில்தான், 7-8-1998 இல் தானே தி.மு.கழக ஆட்சியில், இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டது.

காவேரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பை பெற அப்போது 1991-96 வரை காங்கிரசுடன் நெருக்கமா இருந்த  ஜெயலலிதா ஏன் முயற்சிக்கவில்லை?

1991-1996 மற்றும் 2001-06 ஆட்சியிலிருந்த ஜெயலலிதா காவேரி பிரட்சினையை தீர்க்க செய்த முயற்சிகள்தான் என்ன?

5) 2007 நடுவர் தீர்ப்பு வந்தவுடன் கர்நாடகா CIVIL APPEAL NO. 2453 OF 2007 வழக்கை தமிழக அரசு மீது போட்டது

கலைஞர் தலைமையிலான தமிழக அரசு கர்நாடக அரசு மீது CIVIL APPEAL NO. 2456 OF 2007 போட்டது

கேரள அரசு CIVIL APPEAL NO. 2454 of 2007 மூலம் தமிழக அரசு மீது வழக்கு போட்டது.

இந்த வழக்கெல்லாம் முடிவுக்கு வராத நிலையில் கலைஞரால் எப்படி காவேரி பிரட்சினையை தீர்த்திருக்க முடியும்?

6)காவேரி நடுவர் மன்ற தீர்ப்பு கெசட்டில் வெளிவர அடிப்படையே
கலைஞர் போட்ட Civil Appeal No. 2456 of 2007 தான் காரணம்.

மேலும் காவேரி நடுவர் மன்ற தீர்ப்பை கெசட்டில் வெளியிட நீதிமன்றத்தை  ஜெயலலிதாவா கோரினார்?

நீதிபதிதானே தமிழக அரசிடம்
நடுவர் மன்ற தீர்ப்பை கெசட்டில் வெளியிட மனுதாக்கல் செய்ய சொன்னார்.

பிறகு எந்த அடிப்படையில் காவேரி நடுவர் மன்ற தீர்ப்பை கெசட்டில் வெளியிட ஜெயலலிதா காரணம் என்கிறீர்கள்?

7) 2011 முதல் 2018 வரை அதிமுகதானே ஆட்சியில் இருந்துள்ளது. அப்படியிருந்தும் உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பில் 192 டி.எம்.சி யிலிருந்து 177.25 டி.எம்.சி யாக குறைக்கப்பட்டதற்கு அதிமுக சரியாக வாதாடவில்லை என்பதுதானே காரணம். இதை மறுக்க முடியுமா?

8) கடந்த 27 ஆண்டுகளில் வழங்கப்படாத இறுதி தீர்ப்பு 2018ல் தானே வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் வழங்கப்பட்ட எந்த தீர்ப்பும் இறுதி தீர்ப்பு கிடையாதே.

பிறகு எந்த அடிப்படையில் கலைஞரை குறையடிக்கிறீர்கள்?

காவேரிக்காக எதுவுமே செய்யாத அதிமுக இறுதி தீர்ப்பை அமல்படுத்த எந்த முயற்சியும் எடுக்காமல் மற்றவர்களை குறை கூறியும் விமர்சித்தும் பொழுது போக்குவது ஏன்?