Friday 18 May 2018

புலிகளோ பிரபாகரனோ எந்த காலத்திலும் எந்த சூழலிலும் கலைஞரை விமர்சித்ததில்லை.

கலைஞருக்கு ஈழ விசயத்தில் கெட்ட பெயர் ஏற்பட காரணமே கலைஞர் புலிகளின் அடாவடி செயல்களை கண்டிக்காததும் , கண்டுக்கொள்ளாததுமேதான்
புலிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்து குறைந்த பட்சம் ஒதுங்கியாவது கலைஞர் இருந்திருக்கலாம்.
ஆரம்பத்தில் கலைஞர் கோரிக்கை விடுத்தும் மதிக்காமல் அவர் ஆதரித்த டொசோ அமைப்பினரை கொன்றனர் புலிகள்.
அமிர்தலிங்கம் உட்பட மிதவாத ஈழத்தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
MGR க்கு பயந்து கலைஞர் மக்களிடம் வசூலித்த நன்கொடைகளை கூட வாங்க மறுத்தனர் புலிகள்.
ராஜீவ் கொலை ,  பத்மனாபா கொலை என வரிசையாக நடந்தது.
ஈழப்பிரட்சினையால்
கலைஞர் பேராசிரியர் MLA பதவிகளை துறந்தனர்
திமுகவினர் சிறைநிரப்பும் போராட்டம் நடத்தினர்
விடுதலைபுலிகளை ஆதரித்ததாக 1991 இல் திமுக ஆட்சி டிஸ்மிஸ்
ராஜீவ் கொலை பழி சுமந்து 1991ல் தேர்தலில் படுதோல்வி
2011 தேர்தலில் பாதிப்பு
திமுக ஈழப்பிரட்சினையால் இழந்தது ஏராளம்
ஒவ்வொரு முறையும் கலைஞரை மதிக்காமல் எதிராக நடந்தனர் புலிகள்
கலைஞரோ அவர்களை பற்றி விமர்சிக்கவேயில்லை. பதிலுக்கு புலிகள் இறந்தால் இரங்கற்பா எழுதுவார். ஜெயாவால் கண்டிக்கப்படுவார்.
புலிகள் எப்படி அலட்சியம் செய்தாலும் கலைஞர் வலிய போய் அவர்களை ஆதரிப்பார் என்பதே உலக தமிழர் கணக்கு.
புலிகள்தான் அணையை மூடி போரை ஆரம்பித்தனர் .போர் நடந்த காலத்தில் புலிகள் கலைஞரிடம் ஒருமுறை கூட தொடர்பு கொண்டதில்லை.
கடைசி நேரத்தில் எல்லாம் கைநழுவி போன நேரத்தில் சில முயற்சிகள் கனிமொழி சிதம்பரம் மூலம் நடந்தது.
போர் சைனா பாகிஸ்தான் போன்ற வெளிநாட்டின் உதவியால் நடந்தது. இந்தியா ரேடார் கொடுத்தது மட்டுமே உண்மை. சில வருட போரில் ஏகப்பட்ட சிங்களப் படையினர் இறந்துள்ளனர். அந்த சமயத்தில் இந்தியா சொன்னால் சிங்களன் ஏற்பானா?
புலிகளை ஒழிக்க கிடைத்த கடைசி வாய்ப்பை கைவிட அத்தனை இளிச்சவாயனா சிங்களன்?
கலைஞருக்கு தன்னால் எதுவும் செய்ய முடியாது என்பது தெரியும்
சோனியா தன் புருசன் ராஜீவை புலிகள் கொன்றதா அந்த அம்மா நினைச்சிகிட்டு இருக்கு. அந்த அம்மாவிடமே போய் அவங்க புருசனை கொன்ற புலிகளை காப்பாறுங்க எந்த முகத்தோடு கேட்பார் கலைஞர்.
திமுகவில் இருந்த ஈழ ஆதரவாளர்கள் கொதித்தனர். கலைஞருக்கு அப்பாவிகள் கொல்லப்பட்டது பெரும் துன்பத்தை தந்தது. அவரும் யாரிடமும் சொல்லாமல் 87 வயதில் உண்ணாவிரதம் இருந்தார். போரை நிறுத்துவதாகவும் அப்பாவி மக்கள் கொல்லப்பட மாட்டார்கள் என உறுதியளிக்கப்பட்டது. காலை 6 To 2 மணி உண்ணாவிரதம் வாபஸ் ஆனது.
கலைஞருக்கு தன்னால் போரை நிறுத்த முடியாது என்பதும் எல்லாம் எல்லை மீறி விட்டது என்பதும் தெரியும். ஆனால்
அந்த வயதில் அதுதான் முடியும்.
சில கேள்விகள்
ஒரு முறை கூட உண்ணாவிரதம் இருக்காத நாய்கள் கலைஞரின்
8 மணி நேர உண்ணாவிரத்தை கிண்டலடிக்கலாமா?
போர் நடக்கும் போது கூடவே அப்பாவி மக்களையும் ஏன் அழைத்து சென்றனர் புலிகள்?
மக்களை விட்டு விலகிச் சென்று சிங்களனுடன் காட்டில் சண்டை போட்டிருந்தால் மக்கள் செத்திருக்க மாட்டார்களே
கலைஞரா முள்ளிவாய்க்காலுக்கு பொது மக்களை அழைத்துச் சென்று அடைக்கச் சொன்னார்.?
என்றைக்கு புலிகள் கலைஞர் ஆதரித்த டெசோ அமைப்பினர் அனைவரையும் கலைஞர் வேண்டுகோளையும் மதிக்காது அழித்தனரோ அத்தோடு கலைஞருக்கும் போராளிகளுக்குமான தொடர்ப்பு முடிந்தது
புலிகள் கலைஞரை மதித்ததுமில்லை
உதவி கோரியதுமில்லை
8 மணிநேர உண்ணாவிரம் அப்பாவி மக்களுக்காகதான்
புலிகளை காப்பாற்ற அல்ல.
பத்மநாபாவை தமிழகம் போய் கொலை செய்கிறோமே திமுகவிற்கு பாதிக்குமே என புலிகள் நினைத்தனரா?
ராஜீவை தமிழகத்தில்தான் கொல்லனுமா?
அன்று கொலை பழி விழுந்து திமுகவினரின் சொத்துக்கள் எரிக்கப்பட்டதே, திமுகவினர் அடிபட்டனரே எவன் வந்துடா திமுககாரனை காப்பாத்துனான்?
திமுகவால் முடியுமா என்பது வேறு விசயம்.
தங்களை காப்பாற்றுங்கள் என புலிகள் கோரிக்கை எதுவும் வைத்தனரா?
எந்த கோரிக்கையும் வரவில்லை
புலிகளோ பிரபாகரனோ எந்த காலத்திலும் எந்த சூழலிலும்
கலைஞரை விமர்சித்ததில்லை.
கலைஞரும் விமர்சித்ததில்லை.
கலைஞரை விமர்சிப்பதெல்லாம்
சில்லரைகளும் சில்லுண்டிகளுமேதான்
பாவம் .. இந்த தமிழ்தேசியவாதிகள் ஈழத்தை வைத்து பிழைத்து போகட்டும்
😄😄

A.PARIMALAM 

No comments:

Post a Comment