Wednesday 20 September 2017

கலைஞர் டிவி எப்படி 231 கோடி கடனை அடைத்தது என்பதற்கான விபரம்.

கலைஞர் டிவி எப்படி 231 கோடி கடனை அடைத்தது என்பதற்கான விபரம்.
India Cements.   60. கோடி ,United Spirits Limited   Rs.24.5 crore and Rs.69.62 crore from a subsidiary of Kalaignar TV while Rs.30.41 crore was received as the chaannel's daily collection.
 Rs.46.83 crore was received as open cash credit account with Indian Bank.
மேற்கண்ட விபரப்படியே கடனும் வட்டியும் 231 கோடி சினியூக் நிறுவனத்திற்கு 2010-11 இல் திருப்பி  வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 2007 ஆம் ஆண்டு இறுதியிலேயே 2G லைசென்ஸ்கள் அனுமதிக்கப்பட்டு 2008 முதல் வாரத்தில் உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் சுமார் பத்து மாதம் கழித்தே 2008 அக்டோபருக்கு பின்னரே கலைஞர் டிவி சினியூக் நிறுவனத்திடம் கடன் வாங்குகிறது.இது லஞ்சம் என்றால் 2007 கடைசியிலேயே பணம் கலைஞர் டிவிக்கு வந்திருக்க வேண்டுமே .
மேலும் உலகில் எந்த முட்டாளும் லஞ்சத்தை காசோலையாக வாங்கி  கணக்கில் காட்டி
வருமானவரி அலுவலத்திலும் காண்பிக்கமாட்டான். பணமாக லஞ்சத்தை பெறுவதில் கலைஞர் டிவிக்கு என்ன கஷ்டம்? மற்ற டிவிக்காரர்கள் போல பணமாக பெட்டியில் வாங்கி டிவியில் முதலீடு செய்திருக்கலாமே. !!!!!
கடன் என்பதால்தான் கலைஞர் டிவி அப்பணத்தை கணக்கில் காட்டினார்கள்.

Sunday 17 September 2017

நவோதயா பள்ளிகளால் நன்மையா அல்லது தீமையா ?- ஓர் அலசல்



நவோதயா பள்ளிகளால் நன்மையா அல்லது தீமையா ?- ஓர் அலசல்

நவோதயா பள்ளிகளுக்கு 6 ஆம் வகுப்பிற்கு ஆண்டிற்கு 80 மாணவர்கள் தேர்தேடுக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் 30 பள்ளிகள் துவங்கினால் 30×80=2400 மாணவர்களை ஒரு ஆண்டில் தமிழகத்தில் சேர்க்கலாம்.

நவோதயா பள்ளியில் சேர 5 ஆம் வகுப்பிலேயே Jawahar Navodaya Vidyalaya Selection Test(JNVST) என்ற Entrance Test அதாவது Neet மாதிரி தேர்வு எழுத வேண்டும். எழுதுபவர்களில் 100 க்கு 2 பேரே மற்ற மாநிலங்களில் தேர்வாகின்றனர்.

தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சுமார் 20,00,000 குழந்தைகள் 5 ஆம் வகுப்பில் பாஸ் ஆகிறார்கள்( 2010 இல் Primary enrollment 9797264 குழந்தைகள்)

இந்த 20 லட்சம் குழந்தைகளில் 2400 பேரை மட்டும் நவோதயா பள்ளிகளில் சேர்ப்பார்கள். அவர்களுக்கு சிறப்பான கல்வி கிடைக்கும். மீதமுள்ள 19,97,600 குழந்தைகளுக்கு சாதாரண கல்வி.
அந்த 2400 பேரில் பலர் Neet எழுதி பாஸ் ஆகமுடியும்.  மற்றவர்கள் கதி?

1) கல்வி கற்பதில் ஏற்றத்தாழ்வை
உண்டாக்காதே

நமது கோரிக்கை ஒரு மாநிலத்தில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் சிறப்பான கல்வி கற்க சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதுதான்

CBSE பள்ளிகளில் கேந்திரிய வித்யாலாயா பள்ளிகளில் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் போல அரசுப்பள்ளி குழந்தைகளுக்கும் சமச்சீரான கல்வி வழங்கப்பட நடவடிக்கை எடுப்பதே மத்திய அரசின் கடமை.
அதை விடுத்து கல்வி கற்பதில் நவோதயா போன்ற பள்ளிகளை நுழைத்து கல்வியில் ஏற்றத்தாழ்வை உருவாக்க வேண்டாம் என்கிறோம்.

தரம் பிரித்து வித்தியாசம் பார்ப்பதால்தான் அனிதா போன்றவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

பல நூறு கோடி ரூபாய்களை ஒரு குறிப்பிட்ட பள்ளிக்கு மட்டும் செலவழிப்பதற்கு பதில், அனைத்துப் பள்ளிகளுக்கும் சமமாக செலவழிப்பது தான் பொதுப்பள்ளி முறை. இதைத்தான் கோத்தாரி குழு பரிந்துரை செய்திருந்தது.  

எனவே நவோதயா  பள்ளிகளைத் தொடங்கி ஏற்றத்தாழ்வை விதைக்காதீர்கள். நியாயப்படுத்தாதீர்கள்

2) நவோதயா பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NEET மாதிரி தேர்வு வைப்பது சரியான நடைமுறையா?

படிக்கவே லாயக்கில்லை என பள்ளியில் இருந்து வெளியே துரத்தப்பட்ட ஆல்பர்ட் ஈன்ஸ்டீன் போன்றவர்கள்தான் பிற்காலத்தில் பெரிய விஞ்ஞானிகள் ஆனார்கள்.

3)நவோதயா பள்ளிகளில் மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் இயங்கும் இந்தப் பள்ளிகளில் மும்மொழிப் பாடத்திட்டம் கடைபிடிக்கப்படுகிறது. அதில் இந்தி மொழி கட்டாயமாகவும், அந்தந்த மாநில மொழியை கற்பிக்கும் மொழியாகவும், அறிவியல், கணிதத்துக்கு ஆங்கிலமும், மனிதவளம் சார்ந்த ஒழுக்கப் பாடங்கள் போன்றவை இந்தியிலும் கற்றுத்தரப்படுகின்றன.

தமிழ்நாட்டின் இரு மொழி கொள்கை இருக்கிறது. நவோதயா பள்ளிகளில் மும்மொழி கொள்கை உள்ளது.
இந்தித் திணிப்பு என்பதை விடவும், நவோதையா பள்ளிகளில் கற்பிக்கப்படும் சமூக அறிவியல் பாடத்தில் தமிழ் மொழி சார்ந்த, தமிழ்நாடு சார்ந்த பண்பாடு, வரலாறு எதுவுமே இல்லை. இதை எப்படி நாம் ஏற்றுக்கொள்ள முடியும். தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளிகளிலும் வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று கோத்தாரி குழு பரிந்துரை செய்த து. இந்த சூழலில் நவோதயா பள்ளிகள் என்ற பெயரில், தகுதி வாய்ந்த குழந்தைகளுக்கு தனியாக பயிற்சி அளித்து உருவாக்குவது சரியான விஷயமாக இருக்காது.

4) நவோதயா பள்ளிகளில் BC, MBC க்கு இட ஒதுக்கீடு கிடையாது. இது தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிரானது

ஒவ்வொரு மாநிலமும் தங்கள் தேவைக்கேற்ப மாநில பாடத்திட்டத்தை வகுத்துக்கொள்ளவும், கற்பித்தலை மேம்படுத்தவும் உரிமை பெற்றுள்ளன. பயிற்று மொழியைத் தீர்மானிக்கும் உரிமையும் மாநில அரசுகளுக்கு உண்டு. ஆனால், மத்திய அரசு அரசியல் சட்டம் அளித்துள்ள சமத்துவம், சமநீதி உரிமைகளை மறுக்கும் வகையில் மத்திய பள்ளிகளை மாநிலங்களில் திணிக்க முற்படுவது ஏற்கத்தக்கது அல்ல.

By Antony Parimalam / A Parimalam

Thursday 14 September 2017

திமுக தமிழுக்கு என்ன செய்தது? செய்ததை எல்லாம் சொல்ல ஒரு புத்தகமே எழுதலாம் ஒரு சிலவற்றை கீழே தந்துள்ளேன்.

திமுக தமிழுக்கு என்ன செய்தது?
செய்ததை எல்லாம் சொல்ல ஒரு புத்தகமே எழுதலாம்
ஒரு சிலவற்றை கீழே தந்துள்ளேன்.

1)1970ஆம் ஆண்டில் தமிழ்த் தாய் வாழ்த்தை உருவாக்கியது

2) தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறைக்காக ஒரு தனி அமைச்சகத்தை உருவாக்கி அந்தத் துறை 13-5-1996 முதல் செயல்பட்டு வருகின்றது.

3) 1974இல் அன்றைய கழக அரசில் “செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்” நிறுவப்பட்டு, மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர் அவர்கள் அதன் முதல் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

4) 1999 பிப்ரவரியில் உலகத் தமிழ் இணைய மாநாடு தமிழக அரசினால் நடத்தப்பட்டு, கணினியின் விசைப்பலகை ஒரே சீராக்கப்பட்டதுடன், உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

5) ஊர்திகளில் காணப்படும் பதிவெண் பலகைகளில் ஆங்கில எழுத்துக்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது அவற்றைத் தமிழில் எழுதிக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டு ஆணையிடப்பட்டது
6) ஆட்சிமொழித் திட்ட விதிமுறைகளின்படி தலைமைச் செயலகத்தில் 65 சதவீதம் தமிழ்த் தட்டச்சுகள் இருக்க வேண்டும்.

7)திராவிடப் பல்கலைக் கழகம்: தென்னக மொழிகளையும், அவற்றிடையே உள்ள உறவுகளையும், ஊடாடி நிற்கும் பண்பாட்டுக் கூறுகளை யும் உறுதி செய்யும் வகையில் ‘குப்பம்’ எனும் நகரில் “திராவிடப் பல்கலைக் கழகம்” தொடங்கப்பட்டது.

 8) சிறப்புச் சொல் துணையகராதி: 1972 முதல் புதுப்பிக்கப்படாத அகராதிகளில் துறையின் புதிய சொற்கள் சேர்க்கப்பட்டு முதலில் 10 துறைகளுக்குரிய சிறப்புச் சொல் துணை அகராதிகளைப் புதுப்பித்து வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன

9)தமிழக அரசு எடுத்த முயற்சியின் விளைவாக அனைத்து புகை வண்டிகளிலும் தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டன.‘கம்பன் விரைவு வண்டி’, ‘மலைக்கோட்டை விரைவு வண்டி’, வேகத் தொடர் வண்டி’ முதலிய சொற்றொடர்களை புகை வண்டிகளில் இப்போது காணலாம்

10) :தமிழ்நாட்டில் தமிழ்மொழியை ஒரு பாடமாகச் சொல்லித்தரும் மழலையர், தொடக்க நிலைப் பள்ளிகளுக்கே அரசின் ஏற்பு வழங்கப்படும் என்றும், தாய்த்தமிழ் தொடக்கப் பள்ளிகளுக்குக் கட்டணங்களில் சலுகை வழங்கப்படும் என்றும் ஐந்தாம் வகுப்புவரை அனைத்துப் பாடங்களும் தமிழ் அல்லது தாய்மொழியிலேயே பயிற்று விக்கப்படும் என்றும் முதன்மை மொழியாக தமிழ் அல்லது தாய்மொழியே இருக்குமென்றும் அரசு ஆணையிட்டது

11) தமிழறிஞர்களின் நூற்றாண்டு விழாக்கள்: 19.2.97இல் இ.மு. சுப்பிரமணியன்பிள்ளை, மே.வி.வேணுகோபால் பிள்ளை, 24.12.98இல் மங்கலங் கிழார், 4.8.97இல் மனோன்மணியம் சுந்தரனார், 30.10.1999இல் ராய சொக்கலிங்கம், 13.3.2000இல் கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகியோரின் நூற்றாண்டு விழாக்கள் கொண்டாடப்பட்டன.

12) தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெறப்பட்டது

13)மும்மொழித்திட்டத்தை அகற்றி தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளித்து, தமிழகப் பள்ளிகளிலிருந்து இந்திமொழியை அறவே நீக்கியது அண்ணாதான்

14)Tamilnad TAMIL learning Act 2006 ஐ கொண்டுவந்தது
9-6-2006 திமுகதான். இதன் மூலமே தமிழகத்தில் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட்டது.

15) Indian Administrative Exam: If Tamils write the Indian Administrative exam in Tamil, there is a possibility of many getting through the exam. The erstwhile government did not publish any books with this point in mind. A decision to publish books on Tamil Language, history of literature, geography, and history in Tamil was taken and as a first step, the history of Tamil Language was first published.

16) Grammar committee: A grammar committee was formed to write and publish new grammar books for the benefit of modern era students of schools and colleges. The change made was based on the ancient Tamil grammar texts from books such as Tolkāppiyam and Nannul.

17) Encyclopedia: Volumes of the encyclopedia on plays were compiled by Tamil university. Three volumes on music were compiled by Bharathidasan University. Five volumes on medicine were compiled and published by Tamil development board.

18) Tamil shorthand book: About 5,000 copies of Tamil shorthand books were printed and published on 24.12.1998 keeping in mind the necessity of making Tamil shorthand books.   

19) Recruitment board: Arrangements have been made so that the question papers would have Tamil questions followed by the English ones.
20) History of Tamil Nadu: The period of Pallavas – Pandiyas part 2, the period of Cholas Part 1and Part 2 were published. The task of compiling the entire history of Tamil Nadu in a single edition is in process.

தமிழில் கையெழுத்திட அரசு ஊழியர்களுக்கு ஆணை பிறபித்தது

கடைகளில் தமிழில் பெயர் கட்டாயமாக எழுத வேண்டும் என உத்தரவிட்டது
ஐயன் திருவள்ளுவருக்கு 133 அடி சிலை

மொழிப்போர் தியாகிகளுக்கு ஓய்வூதியம் வழங்கியது.அவர்களின் வாரிசு ஒருவருக்கு மேற்படிப்பில்,வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கியது.

தமிழ் வளர்ச்சி துறை எனும் புதிய அமைச்சகத்தை உருவாக்கி அதற்கு முதன் முதலாக தமிழ்குடிமகனை அமைச்சராக்கியது.

கல்லூரிகளில் தமிழ் மன்றம்
தமிழ் வழி மாணவர்களுக்கு ஊக்க தொகை
தமிழ்வழியில் பொறியியல் படிப்பு
தமிழ் வழி பயின்றோருக்கு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் ஒதுக்கீடு
தமிழ்நாட்டின் வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் பலகை
என்ற கட்டாய உத்தரவு

தமிழ்நாடு, சென்னை என பெயர் மாற்றம் செய்தது...