Thursday 29 March 2018

கலைஞர் & திமுக யோக்கியமா? அவர்கள் சம்பாதிக்கவில்லையா? எனக் கேட்கிறார்கள்

கலைஞர் & திமுக யோக்கியமா?
அவர்கள் சம்பாதிக்கவில்லையா? எனக் கேட்கிறார்கள்

1) கலைஞர் ஆட்சி 19 வருடம்தான்
MGR மற்றும் ஜெயலலிதா ஆட்சி 12 + 17 = 29 வருடம் நடந்திருக்கு.
அத்தனை அடாவடித்தனமும் சர்வாதிகாரமும் பழிவாங்கல்களும் நடந்திருக்கு.
கேவலம் ஒரு FIR கூட கலைஞர் மேல் போடமுடியவில்லையே
ஏன்?

2) ஏறத்தாழ 13 வருசம் இந்திராவை எதிர்த்துதான் கலைஞர் அரசியல் செய்தார். இடையிலே எமர்ஜென்சி வேறு.
இந்திராவிற்கு சிறிய ஆதாரம் கிடைத்திருந்தால் அப்போதே
எமர்ஜென்சியை எதிர்த்த கலைஞரை இருந்த இடம் தெரியாமல் செய்திருப்பாரே.
ஏன் வெட்டியா சர்க்காரியா கமிசன் போடனும்?

3) ஜெயாவுக்கு எதிராய் ஆதாரபூர்வமாக சொத்துக்குவிப்பு வழக்கை போட்டு, இருபது ஆண்டுகாலம் விடாது நடத்தி, உச்ச நீதிமன்றம் மூலம் இறுதி தீர்ப்பையும் பெற்று, ஜெயலலிதா ஒரு ஊழல் குற்றவாளி என நிரூபித்ததை போல கலைஞர் மேலும்
வழக்கு போட்டிருக்க வேண்டியதுதானே
ஏன் போடமுடியல?

46 ஊழல் வழக்குகள் தொடுக்கப்பட்ட ஒரே முதல்வர் ஜெயாதான்.
இருமுறை முதல்வர் பதவியிலிருந்து ஊழலுக்காக தண்டிக்கப்பட்டு கீழே இறங்கியவரும் ஜெயாதான்

கலைஞரால் நிம்மதியின்றி 20 வருடம் வாழ்க்கை நடத்திய ஜெயலலிதாவிற்கு கலைஞர் ஊழல் செய்தார் என சிறு துரும்பு
ஆதாரம் கிடைத்திருந்தாலும் அதை தூணாக மாற்றி கலைஞரை பழிவாங்கியிருக்கமாட்டாரா ஜெயலலிதா?

இதையெல்லாம் சொன்னால் எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்காத சர்க்காரியா சயின்டிபிக் ஊழல் என்று சொன்னாதாக இவனுங்களா கதை விடுவானுங்க.

சயின்ஸ் என்றாலே சோதனையில் நிரூபிக்கக் கூடிய ஒன்று என்றே அர்த்தம். சயின்டிபிக் ஊழல் என்றால் சோதனையின் மூலம் நிரூபிக்க வேண்டியதுதானே.
ஏன் முடியல?

குப்பிற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலை கதைதான்.

கலைஞரே தனக்கு சொத்து வந்த கதையை விளக்கியிருக்கிறார்
http://antonyparimalam.blogspot.in/2017/07/blog-post_3.html?m=1


இதை படித்து அறிவை வளர்த்துங்க மூடர்களே

By A.Parimalam / The News man

Sunday 4 March 2018

ஈழப்போரும் திமுகவும்*** எழுப்பப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும்

ஈழப்போரும் திமுகவும்***

எழுப்பப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும்

டெல்லியில் சொந்த மகளை வெறும் விசாரணை கைதியாக அநியாயமாக சாட்சியங்களை கலைத்து விடுவார் எனச் சொல்லி சொல்லியே ஜெயிலில் 6 மாதங்களாக வைத்திருந்தார்களே ஒரு முதல்வராக இருந்த கலைஞரால்  தடுக்க முடியலையே ஏன்? சொந்த நாட்டில் சொந்த மகளுக்கு ஏற்பட்ட அநீதியையே தடுக்கமுடியாத கலைஞரால் ஈழத்தில் நடந்த போரை எப்படி நிறுத்தியிருக்க முடியும்?

(1)கேள்வி :- கலைஞரால் சோனியாவிடம் பிரபாகரனை காப்பற்றுமாறு கோரமுடியுமா?

ராஜீவ் கொலையில திமுகவின் மீதும் களங்கம் சுமத்தப்பட்டது அதையும் மீறிதான் சோனியா திமுகவுடன் உறவு வைத்துக்கொண்டார்

ராஜீவை கொன்றது LTTE தான் என்பது உறுதியில்லை எனினும்
தன் கணவன் இறப்பிற்கு பிரபாகரன்தான் காரணம் என நம்பும் சோனியாவிடமே போய் பிரபாகரனை காப்பாற்று என கலைஞர் கேட்கமுடியுமா?

(2) கேள்வி:- கலைஞர் சொன்னா இந்திய அரசு கேட்டு போரை நிறுத்தி இருக்குமா?

பதில் :- 2008 வாக்கிலேயே திமுக மேல் காங்கிரஸ் தலைவர்களுக்கு கசப்புணர்வு மேலோங்கிவிட்டது.  2009 ல் காங்கிரசுடன்  அதிமுக கூட்டணி வைக்க பல்வேறு தூதுவர்களை சோனியாவுக்கு அனுப்பிக் கொண்டிருந்த நேரம் அது. இலங்கை பிரட்சினைக்காக திமுக ஆதரவை விலக்கினால் ஆதரவளிக்க தயார் என முலாயம்சிங் வெளிப்படையாகவே அறிவித்தார்.

மேலும் காங்கிரசுக்கு தானும் ஆதரவளிப்பதாக ஜெயலலிதா தன் பங்கிற்கு காங்கிரஸ் கட்சிக்கு தூதுவிட்டார்.

2009 ஆரம்பத்தில் திமுகவை கழற்றி விடும் நோக்கத்தில்தான் காங்கிரஸ் தலைவர்கள் இருந்தனர்.

எனவே திமுக என்ன செய்திருந்தாலும் அது காங்கிரஸ் காதில்
விழுந்திருக்காது என்பதே உண்மை.

2008 இல் கூட காங்கிரஸ் திமுக ஆதரவை நம்பி இல்லை. மத்தியில் ஆதரவை விலக்கியிருந்தால் ஒன்றும் நடந்திருக்காது.


(3)கேள்வி :-திமுக எம்பிக்கள் ஏன் ராஜினாமா செய்யவில்லை?

பதில் :-இலங்கையில் உச்சகட்ட ஈழப்போர் நடந்தது ஏப்ரல்,மே 2009 மாதங்களில்தான் மே 18ல் போர் முடிந்துவிட்டது

அதே சமயம் இந்தியாவில் 15வது லோக்சபா தேர்தல் 5 கட்டங்களாக 16 ஏப்ரல் 2009 to 13 மே 2009 வரை நடந்தது

மன்மோகன் பதவியேற்பு 22 மே 2009

பதவியே முடியும் நேரத்தில் திமுக MPக்கள் ராஜினாமா செய்ய அவசியமே இல்லையே.

(4) கேள்வி :- திமுக ஆட்சியை ராஜினாமா ஏன் செய்யவில்லை?

பதில் :-2009 இல் கலைஞர் தன் அரசை ராஜினாமா செய்திருக்கலாம். அதனால் மீண்டும் தேர்தல் வந்து நீங்களெல்லாம் ஈழத்தாய்க்கு ஓட்டு போட்டு மீண்டும் ஈழத்தாய் அப்போதே ஆட்சிக்கு வந்திருக்கும். அதை தவிர வேற எதுவும் நடந்திருக்காது.

போரின் போது நீங்கள் சொல்வது போல ராஜினாமா செய்திருந்தால் மீண்டும் ஜெயா ஆட்சிக்கு வந்திருப்பார். அது சரி கலைஞர் அரசு எத்தனை முறை ஈழப்பிரட்சினையால் பதவி இழப்பது?

திமுக ஈழத்தமிழர்களுக்கு சாதகமாக நடந்து ராஜீவ் கொலை பழி வரை சுமந்ததே அதற்கு யார் என்ன நன்றி காண்பித்தார்கள்?


(5)கேள்வி :- என்ன செய்திருந்தா ஈழப்போரை நிறுத்தியிருக்கலாம்?

பதில் :-என்ன செய்திருந்தாலும் யாராலும் போரை நிறுத்தி இருக்க முடியாது.

தனது நெடுங்கால எதிரியை ஒழித்துக்கட்ட கிடைத்த சந்தர்ப்பத்தை இழக்க சிங்கள ராணுவமோ ராஜபக்சேவோ தயாரில்லை.

உச்சக்கட்ட போரின்போது சிங்கள வீரர்களை அச்சமயம் ராஜபக்சேவால் கூட கட்டுப்படுத்தியிருக்க முடியாது.

அத்தனை பெரிய இழப்புகளை சிங்களப்படை சந்தித்துள்ளது.

இந்தியாவோ, UNO வோ, அமெரிக்காவோ
யார் நினைத்திருந்தாலும் போரை நிறுத்தியிருக்க வழியில்லை

(6) கேள்வி :- திமுகவை கேள்வி கேட்க யாருக்கு யோக்கியதை
உள்ளது?

ஈழத் தமிழர்கள் விசயத்தில் திமுகவை குறை கூறுவோர்
தங்கள் கட்சி ஈழத்தமிழர்களுக்கு என்ன செய்தது என்பதை சொல்லிவிட்டு அல்லவா குறை சொல்லனும்

தமிழ்நாட்டில் மல்லாக்க படுத்துகிட்டு சிங்களனை திட்டி அவனுக்கு வெறியேற்றியதும்
வெளிநாடு தமிழர்களிடம் பணம் வசூலிச்சதும்தானே நீங்க செஞ்ச ஈழப்பணி😁

கலைஞர் 85 வயதில் 1/2 நாள் உண்ணாவிரதம் இருந்து எதிர்ப்பை காட்டினார். ஆனால் அதை கூட செய்யாத தமிழ் தேசியவாதிகளுக்கு கலைஞரை நோக்கி கைக்காட்ட. குறைசொல்ல என்னடா யோக்கியதை இருக்கிறது?

அப்போது நீங்கள் செய்தது மிகச்சிறந்த உள்நாட்டு வெளிநாட்டு வசூல் வேட்டைதானே.


பிரபாகரன் தந்த கடைசி Interview இது.

https://m.rediff.com/news/2008/oct/26ltte2.htm

இதிலும் ஜெயாவை பிரபாகரன் விமர்சித்துள்ளார்

விலகியிருப்பினும் கலைஞர் எந்த சூழலிலும் பிரபாகரனை தவறாக பேசியதில்லை. அவ்வாறே பிரபாகரனும் கலைஞரை விமர்சித்ததில்லை

டேய் கேணப்பசங்களா ....ராஜீவ் காந்தி இறந்த போது உடமைகளை இழந்து அடியும் உதையும் வாங்கி இழப்பை சந்தித்ததது நாம்தமிழர் , பாமக,  அதிமுக கட்சியினர் இல்லடா... திமுககாரன்தான்டா.

அதைவிட பெரிய தியாகத்தை எவனும் செய்ததில்லை.