Tuesday 27 June 2017

உச்சக்கட்ட போரில் கலைஞர் அடக்கு முறையை கையாண்டாரா?

"யாராவது_திமுக_அடிமைகள்_பதில்_தரமுடியுமா...? "

இப்படியொரு கேள்வியை கேட்டுவிட்டு உச்சக்கட்ட போரின் போது கலைஞர் கையாண்ட அடக்குமுறைகளாக பல விசயங்களை பட்டியலிட்டுள்ளனர்.

அதற்கு உரிய பதில்:-

தமிழக மக்கள் தமிழகத்தை வழி நடத்தத்தான் அப்போது திமுகவிற்கு வாக்களித்திருந்தனர். நீங்கள் அடிக்கும் தெருக்கூத்துக்களுக்கும் நாடகங்களுக்கும் துணை போவதற்கு அல்ல.

ஈழத்திற்கு போராடுவதாக நாடகம் நடத்தி நீங்கள் கலவத்தை தூண்டுவீர்கள். கலைஞர் அரசு அதை விரல் சூப்பிக்கொண்டு வேடிக்கை பார்க்க வேண்டுமா?

உங்களுக்கு உண்மையான அக்கறை இருப்பின் 2006 இல் இருந்து மூன்று வருடங்களாக நடந்த போரில் போய் கலந்துக் கொண்டிருக்க வேண்டியதுதானே?
ஏன் ஈழம் சென்று போரிடவில்லை?

தமிழகத்தின் அமைதியை குலைத்து நீங்கள் குளிர்காய  திட்டமிட்டால் கலைஞர் அரசு அதற்கு சாமரம் வீசவேண்டுமா?
1991 இல் ஆட்சியை இழந்தது போல மீண்டும் ஆட்சியை இழக்க வேண்டுமா?

திமுகவினரை எந்தனை முறை இளிச்சவாயர்கள் ஆக்க முயற்சிப்பீர்கள்? ஈழப்பிரட்சினையில் திமுக பட்ட சூடுகள் போதும்.

இலங்கை போர் உச்சத்தில் இருந்தபோது தமிழகத்தில் இருந்த சில குழுக்கள் அதை தங்களது சொந்த தொழில் லாபத்திற்காக பயன்படுத்த எண்ணி ஆங்காங்கே சிறிய அளவில் போராட்டங்கள் நடத்தின.

 யாராவது அப்பாவி இறந்தால் அங்கே போய் நீலிக்கண்ணீர் வடிப்பது உண்டியல் குலுக்குவது போன்ற வேலைக்காகாத வெட்டி வீர வசனம் பேசுவது போன்ற வேலைகளை செய்து கொண்டிருந்தனரே தவிர உண்மையான ஈடுபாடு காட்டவில்லை.

அந்த சமயத்தில் எந்த ஈழ ஆதரவு தலைவராவது சாகும்வரை உண்ணாவிரம் இருந்தாரா? ஏன் இருக்கவில்லை? வைக்கோ போன்றவர்கள் பிஜேபி ஆட்சி வரப்போகுது அதுவரை போரை நடத்துங்கள் என்றுதானே புலிகளுக்கு ஆலோசனை  வழங்கினார்.

மேலும் எல்லா ஈழ ஆதரவு தலைவர்களும் வெளிநாட்டு, உள்நாட்டு வசூலில்தானே தீவிரமாக இருந்தனர்.

இலங்கை தமிழர்கள் அழிப்பை உங்களது சொந்த அரசியல் லாபத்திற்காக பயன்படுத்த நினைத்தால் அதை கலைஞர் உட்பட எந்த அரசியல்வாதியும் ஏற்க மாட்டார்.

கலைஞர் இருந்ததால்தான் மேற்கண்ட அனைத்து தடைகளும் அடக்கியே வாசிக்கப்பட்டது.
அந்த நேரத்தில் ஈழத்தாய் முதல்வராக இருந்திருந்தால் உங்க நிலை என்னவாயிருக்கும் என சொல்லவேண்டியதில்லை.
எல்லோரையும் பொடாவில் உள்ளே வைத்து மிதிமிதியென்று மிதித்திருக்கும். தப்பித்து விட்டீர்கள் ஈழக்குஞ்சுகளே.

மேலும் பிரபாகரன் கலைஞரிடமோ தமிழக அரசிடமோ எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை. சொல்லப்போனால் ராஜீவ் இறப்பிற்கு பின் கலைஞருக்கும் பிரபாகரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

கலைஞர் ஈழப்பிரட்சினையில் தன் கட்சிக்காரர்களை திருப்தி படுத்த சில அறிக்கைகளை அவ்வப்போது வெளியிட்டார்.
மற்றபடி அவரால் இலங்கை விசயத்தில் எதுவும் செய்திருக்கவே முடியாது.

ஆட்சியில் யார் இருப்பினும் அடக்கு முறைகளைதான் கையாண்டு இருப்பார்கள்.
சட்டம் ஒழுங்கை காப்பாற்ற நடவடிக்கை எடுத்துதான் ஆக வேண்டியிருக்கும். அது ஒரு முதல்வரின் கடமை.

பிரபாகரன் செயல்களால் அதிகம் பாதிக்கப்பட்டவர் கலைஞர்.
பிரபாகரனும் தவறு செய்யாதவர் அல்ல.
அவரை பற்றி இங்கே ஒருவர் விரிவாக சொல்லியுள்ளார்.
படித்து பாருங்களேன்

http://savithrikannan.blogspot.in/2009/06/blog-post.html?m=1

மேற்காணும் போஸ்டை படித்தால் பிரபாகரனை ஏன் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் தோன்றும்.

மேலும் உண்மையில் மக்களிடம் ஈழ ஆதரவு இருந்திருக்குமேயானால் உச்சக்கட்ட போரின் போதே மிகப்பெரிய வன்முறையில் மக்கள் தானாகவே இறங்கியிருப்பர்.அதை கலைஞர் உட்பட யாராலும் தடுத்து நிறுத்தியிருக்கவே முடியாது.

என்று ராஜீவ் காந்தி கொல்லப்பட்டோரோ அன்றே தமிழர்கள் விடுதலைப்புலிகளை விட்டு விலக ஆரம்பித்து விட்டனர்.
பத்மநாபாவை தமிழகம் வந்தே கொலை செய்தது போன்ற விசயங்கள் மக்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.

இன்று ஈழ ஆதரவு என்பதை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.

திமுக ஒரு கட்சி என்பதை விட அது ஒரு இயக்கம். ஆட்சியே இல்லாவிட்டாலும் திமுக தமிழக மக்களுக்கான பணிகளை தொடரும்.

No comments:

Post a Comment