Wednesday 28 June 2017

1996-2001 ஊழலற்ற திமுக ஆட்சியை அகற்றி ஊழல்ராணியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியது ஏன்?

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா மூடர்களே?
கலைஞர்தான் ஊழலை கொண்டுவந்தாராம். அதற்கு முன் அரசில்வாதிகளுக்கு ஊழலே தெரியாதாம். எல்லா பயலும் விரல் சூப்பிகிட்டு இருந்தானுங்களாம்.

2000 வருடங்களுக்கு முன்பு இயேசுநாதரை காட்டிக் கொடுக்க யூதாஸ் வாங்கிய 30 பொற்காசுகள் லஞ்சமில்லாமல் அன்பளிப்பா?

1969-75 மட்டுமே கலைஞர் ஆட்சி. அதன் பின் யோக்கியர் MGR நடத்திய 12 வருச ஆட்சி யோக்கிய ஆட்சியா?

நீங்கள் எல்லாம் புத்தர் யேசு மாதிரியும் இடையில் யாரோ கெடுத்தது மாதிரியும் பேசுகிறீர்களே
உங்களின் பிறவிக்குணமே லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதுமேதானே.
காரியம் ஆக எதையும் செய்யும் பிறவிகள் தானே மனிதர்கள்.

இதில் நீங்களெல்லாம் ஒன்றுமே தெரியாதா பப்பாக்கள். கலைஞர் வந்துதான் உங்களுக்கு ஊழல் செய்ய கற்றுத் தந்தாரா?

நீங்களெல்லாம் யோக்கியர்போலவும் அவர்தான் வந்து செய்ய சொன்னது போல
கதையளக்கிறீர்கள்.

1996-2001 கலைஞரால் லஞ்ச ஊழல் இல்லா ஆட்சி நடந்தது. அப்புறம் என்ன முடிக்கு திமுகவை தோற்கடித்து அதே ஊழல்ராணி ஜெ வை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினீர்கள்.
அதன் பிறகே சாராயம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது.

அச்சரப்பாக்கம் சாத்தான்குளம் உட்பட 5 சட்டசபை இடங்களுக்கு இடைத்தேர்தல் நடந்தபோதுதான் முதன்முதலாக வாக்காளர்களுக்கு பெரும் தொகை அன்பளிப்பாகவும் பணமாகவும் வழங்கப்பட்டு வெளியில் இருந்து பெண்கள் அழைத்து வரப்பட்டு கள்ள ஓட்டுகளும் போடப்பட்டது. இதையெல்லாம் மறைத்து விட்டு திருமங்கலம் பார்மூலா என கதை கட்டினீர்கள்.

2011-16 வரை தமிழகத்தில் பெரும் கொள்ளை வெளிப்படையாகவே நடந்தது. விகடனை தவிர அனைத்து ஊடகங்களும் வாயையும் சூ...யும்
பொத்திக்கொண்டன.

கேடுகெட்ட மனிதர்களாகிய நீங்களும் 200 ரூ வாங்கிக்கொண்டு அதே ஜெ வுக்குதானே ஓட்டுப் போட்டீர்கள்.

ஊழலை வளர்ப்பது நீங்கதான்டா அறிவில்லா ஜென்மங்களே. உங்க பேராசைக்கும் சுயநலத்திற்கும் தனிப்பட்ட யாரையும் குறை சொல்ல எவருக்கும் உரிமையில்லை.

No comments:

Post a Comment