Wednesday 28 June 2017

2G மறு ஏலம் மிகப்பெரிய தோல்வி


சமீபமாக 2G மற்றும் 3G அலைக்கற்றை 380+5=385 MHz. டெலிகாம் துறையால் ஏலம் விடப்பட்டது. அதில் அரசுக்கு 385 MHz க்கு 1,09000 கோடி கிடைத்துள்ளது. அதாவது ஒருMHz சராசரியாக. சுமார் 290 கோடிக்கு ஏலம் போயிருக்கிறது.

ஆனால் வினோத்ராய் ஒருMHzக்கு 3350 கோடிக்கு ஏலம் போகும் என கணக்கிட்டதன் அடிப்படையில்  385 MHzக்கு 12,89,750 கோடி வருமானம் ஏலத்தில் வந்திருக்க வேண்டுமே. ஆனால் வந்திருப்பது  வெறும் 109000 கோடிதானே.  இதன் மூலம் வினோத்ராய் என்னும் பொய்யரின் கணக்கு தவறு என நிரூபணமாகியுள்ளது.

          2007-08 ஆம் ஆண்டிலேயே ராஜாவால் டெலிகாம் துறைக்கு 52 MHz க்கு ஒரு MHzக்கு 269 கோடி வீதம்  சுமார் 14000 கோடி  வருமானம்  வந்துள்ளது.

ராஜா விற்பனை செய்த 52 MHz ஐ ஏலம் விட்டால் அரசுக்கு 174000 கோடிகள் கிடைத்திருக்கும் என ஒரு மெகா பொய்யை திட்டமிட்டே சொன்னவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். 2G வழக்கு முடிந்த பின்னர் அதை எதிர்பார்க்கலாம்.

No comments:

Post a Comment