Wednesday 28 June 2017

ராமதாஸ் பாமாக வின் சத்தியம்

ராமதாஸ் ஆகிய நான் வன்னிய மக்களாகிய உங்களுக்கு ஐந்து சத்தியங்களை செய்து தருகிறேன். இது என் தாய் மீதான சத்தியம்:

1)நான் எந்த காலத்திலும் சங்கத்திலோ(வன்னியர்) அல்லது கட்சியிலோ, எந்த ஒரு பதவியையும் வகிக்கமாட்டேன்!

2.சங்கத்தின்பொதுக்கூட்டங்களுக்கும்
பொதுநிகழ்ச்சிகளுக்கும்,எனது சொந்தச் செலவில் தான் வந்து போவேன். ஒருகாலகட்டத்தில் என்னிடம் காசு இல்லாமல்போனால் நான் ஓய்வு எடுத்துக் கொள்வேனே யொழிய, ஒருபோதும் மற்றவர் செலவில் வந்துபோகமாட்டேன்!

3) எனது வாழ்நாளில் நான் எந்தத்தேர்தலிலும் போட்டியிடமாட்டேன். எனது கால்செருப்புக்கூட சட்டமன்றத்திற்குள்ளும் பாராளுமன்றத்திற்குள்ளும் நுழையாது!

4).எனது வாரிசுகளோ, எனது சந்ததியினரோ, யாரும் – எந்தக்காலத்திலும் சங்கத்திலோ (வன்னியர்) அல்லது கட்சியிலோ, எந்தஒருபதவிக்கும்
வரமாட்டார்கள்!

எனக்கு இந்தநாட்டின் பிரதமர் பதவி கொடுத்தாலும் சரி; ஸ்விஸ்வங்கியில்ஆயிரம்கோடிரூபாய் என்பெயரில் போடுவதாக பேரம்பேசினாலும் சரி. இந்த ராமதாஸ் விலை போகமாட்டான்- இதுசத்தியம்! என்தாய்மீதுசத்தியம்!

இதையெல்லாம் உங்கள்டைரியில் எழுதிவைத்துக்கொள்ளுங்கள். என்தாய் மீதுசெய்துகொடுத்த இந்தசத்தியத்தை மீறி, நான் நடந்தால் என்னை நடுரோட்டில் நிறுத்திவைத்து, சவுக்கால்அடியுங்கள்!

இப்படிக்கு
ராமதாஸ்

No comments:

Post a Comment