Wednesday 28 June 2017

கலைஞர் டிவிக்கு 200 கோடி எங்கிருந்து வந்தது ?

அறிவு ஜீவிகள் அடிக்கடி கேட்கும் கேள்வி கலைஞர் டிவிக்கு 200 கோடி எங்கிருந்து வந்தது ? என்ற கேள்விதான்.

பச்சமுத்து டிவிக்கும் ஜெயா டிவிக்கும் எப்படி பணம் வந்ததோ அதே மாதிரித்தான் கலைஞர் டிவிக்கும் பணம் வந்தது என பதில் சொன்னால் சரியாக இருக்குமா ? தவறாக போய்விடாதா? 

எனவே கேள்வி கேட்கும் அறிவு ஜீவிகளுக்கு சில கேள்விகளை அவர்களிடமே திருப்பிக் கேட்டு அவர்களுக்கு பதில் அளிப்போம்.

1) 200 கோடி பணம் வந்ததை உடனடியாக வருமானவரி துறைக்கு கலைஞர் டிவி நிர்வாகம் தெரிவித்தது தெரியுமா தெரியாதா ?

2) 200 கோடியை எதற்காக காசோலை மூலமாக வங்கி வரைவோலையாக வாங்க வேண்டும் ? பணமாக பெறுவதில் என்ன கஷ்டம்? 

3) மற்ற டிவிக்காரனுங்க செய்வது போல திருட்டுத்தனமாக பணம் வாங்கி கருப்புபணமாக தங்கள் டிவியில் முதலீடு செய்வதில் கலைஞர் டிவிக்கு என்ன கஷ்டம் ? என்ன பிரட்சினை? 

3) வந்த கடன் பணத்தை கலைஞர் டிவி தங்களது ஆண்டு கணக்குகளில் காண்பித்து Balance sheet லும் காண்பித்து உள்ளனர். முறையாக கணக்கு காண்பித்ததே தவறா? 

4) 2G லைசென்ஸ் கொடுத்து ஒரு வருடம் கழித்துதான் கலைஞர் டிவி 200 கோடி கடன் வாங்கியது. லஞ்ச பணம் என்றால் உடனடியாக வந்திருக்குமே.
ஒரு வருடம் கழித்து வந்த பணத்தை எதை வைத்து லஞ்சப்பணம் என்கிறீர்கள் ?

5) நான்கு கம்பெனி வழியாக பணபரிமாற்றம் நடைபெற்றதற்கு விளக்கத்தை பணம் கொடுத்தவர்கள்தான் விளக்க வேண்டும். கலைஞர் டிவி அதற்கு பதில் சொல்ல என்ன அவசியம்? 

கலைஞர் டிவி யாரிடம் பணம் பெற்றார்களோ அவர்களுக்கும் கலைஞர் டிவிக்கும் மட்டும்தான் சம்பந்தம்.

இந்த கேள்விக்கு உரிய பதிலை சம்பந்தப்பட்ட கம்பெனிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

6) கடன் தொகை 200 கோடி லஞ்சப்பணம்தான் என்பதற்கு இதுவரை CBI எந்த ஆதாரத்தை சமர்பித்துள்ளது ?

ஆதாரத்தை நீங்களாவது சொல்லுங்கப்பா அறிவு ஜீவிகளே.

இந்த வழக்கு 
Money laundering act இன் கீழ்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பு :- கலைஞர் டிவி 200 கோடியை திருப்பி வழங்கிவிட்டது. அதற்கான பணம் (வங்கி கடன் உட்பட) எந்தெந்த வழிகளில் பெறப்பட்டது என்ற முழு விபரத்தையும் CBI கோர்ட்டில் கலைஞர் டிவி சமர்ப்பித்துள்ளது.

No comments:

Post a Comment