Tuesday 27 June 2017

கலைஞருக்கும் பிரபாகரனுக்கும் என்ன சம்பந்தம்?

இரு கை தட்டினால்தான் ஓசை வரும். கலைஞரின் ஒரு கை தமிழகத்தில் காத்திருக்க ஈழத்திருந்து பிரபாகரன்  கை கலைஞர் கையை தட்டவேயில்லையே.!!!

திமுக தனது தரப்பு வாதத்தை 2G விவகாரத்தில் முன் வைக்காதது போல ஈழ விசயத்திலும் அவதூறுகளை ஏற்றுக்கொண்டு மௌனமாகத்தான் இருக்க வேண்டுமா?

2009 இல் நடந்த விசயத்தை 2017இல் மிக அதிக அளவில் திமுகவிற்கு எதிராக கலைஞரை அவதூறு செய்து சிறு நரிகள் கூட்டம் விசத்தை பரப்பினால் அதை வாய்மூடி கைக்கட்டி வேடிக்கை பார்க்கனுமா?

இன்றைய இளைஞர்களின் மனதில் பிரபாகரனை தலைவனாக காட்டி கலைஞரை அவரின் எதிரியாக காட்டி கொடிய நஞ்சை விதைக்கும் ஈழப்பொறுக்கிகளையும் அவர்களிடம் வாங்கி குடிக்கும் தமிழக ஈழவியாபாரிகளையும் சொரணை கெட்டு வேடிக்கை பார்க்க வேண்டுமா?

டிவிட்டரிலும் Facebook லும் திமுகவிற்கு எதிராக விசமப்பிரச்சாரத்தை திட்டமிட்டு அரங்கேற்றுபவர்களை எதிர்க்காமல் பல்லிளிக்க வேண்டுமா?

2G பிரட்சாரத்தை முறியடிக்காமல் போனதின் விளைவாகவும் மிகக் கடுமையான மின் வெட்டாலுமே 2011 இல் திமுக தோற்றது.

ஈழப்பிரட்சினையால் தோற்றிருக்க வேண்டுமென்றால் 2009 மே 13 தேர்தலியே திமுக கூட்டணி தோற்றிருக்கும்.அன்று 42.45% வாக்குகள் பெற்று திமுக கூட்டணி பெரும் வெற்றி பெற்றது எப்படி?

2016 தேர்தலிலும் அதிமுகவின் பணபலத்தையும் மீறி 1,71,75,374 வாக்குகளை திமுக பெற்றது எப்படி?

தமிழக மக்களை முட்டாள்களாக நினைக்கக் கூடாது. ஈழப்பிரட்சினையை முன் வைத்து தமிழக தேர்தல் முடிவுகள் வர இனி வாய்ப்பேயில்லை.

 மாறாக யாழ்ப்பான தமிழனின் தூண்டுதல் காரணமாகத்தான் இந்திய மீனவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தமிழன் உணர்ந்துள்ளான்.  இனி ஈழப்பருப்பெல்லாம் தமிழகத்தில் வேகாது.

அதே சமயம் விபரம் அறியா கல்லூரி இளைஞர்களை குள்ளநரிகள் திசை திருப்புவதை வேடிக்கை பார்க்க முடியாது.

இரு கை தட்டினால்தான் ஓசை வரும். கலைஞரின் ஒரு கை தமிழகத்தில் காத்திருக்க ஈழத்திருந்து பிரபாகரன்  கை கலைஞர் கையை தட்டவேயில்லையே.!!!

அப்புறம் எப்படி ஓசை வரும். கலைஞரால் ஒரு கை ஓசை எழுப்ப முடியுமா.? எப்படி ஈழப் பிரட்சினையை தீர்க்க முடியும்?

திமுககாரன் கோபப்படத்தான் வேண்டும் அவனுக்கு எதிராக சதிகள் நடக்கும் போதெல்லாம்.

Antony Parimalam

No comments:

Post a Comment