Tuesday 27 June 2017

கலைஞர் தந்த IT park

யார் ஐடி தொழிலை தமிழகத்திற்கு கொண்டு வந்தது? மெத்த படித்த மேதாவிகளுக்கு சமர்ப்பணம்.***

தமிழகத்தில் முதன் முறையாக 1997 இல் IT policy திமுக ஆட்சியில்தான் உருவாக்கப்பட்டது.

கலைஞரின் முயற்சியால்தான் தமிழகத்தில் முதன் முறையாக தரமணியில் 1999 இல் ரூ 338 கோடியில்
ஐடி பார்க் 1 கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டு 2000 இல் முடிக்கப்பட்டது. 4-7-2000 இல் திறந்து வைக்கப்பட்டது.


அதன் பின்னர் டைடல் பார்க் 2 மற்றும் 3 பிராஜக்ட்டுகள் திட்டமிடப்பட்டது.

அவ்வாறே திமுக ஆட்சியில்தான் கோயம்பத்தூரில் டைடல் பார்க் 380 கோடியில் 2007 ஆரம்பிக்கப்பட்டு 2010 முடிக்கப்பட்டது.
மேலும் திமுக ஆட்சியில் 200 ஏக்கரில் ஓசூரில் ஆரம்பிக்கப்பட்ட ஐடி வளாகம் பாதியில் நிற்கிறதாக தகவல்

இவ்வாறு தமிழகத்தின் ஓட்டுமொத்த ஐடி வளர்ச்சிக்கும் காரணம் திமுகதான்.

ஆனால் தங்களை மெத்தபடித்த மேதாவிகளாக நினைத்துக் கொண்டு இருக்கும் ஐடி பணியாளர்கள் கலைஞரை இகழ்ந்து கொண்டுள்ளார்கள்.

No comments:

Post a Comment