Tuesday 27 June 2017

கலைஞரை விமர்சிக்க நீ யார் ஈழத் தமிழா?

ஈழத்தமிழா என அன்போடு அழைத்த உடன்பிறப்புகளை பல வருடங்களாக தீண்டி தீண்டியே உன்னை ஈனத்தமிழா என உடன்பிறப்புகள் அழைக்கும்படி செய்து விட்டாய்.

ஈழத்தமிழர்கள் ஆகிய நீங்கள் இன்றும் இலங்கை மலேசிய இந்திய தமிழர்களை" தோட்டக்காட்டான்" என்று கேவலமாக அழைப்பதை நாங்கள்
அறிவோம்.

ஆண்டுதோறும் கலைஞர் உண்ணாவிரத படத்தை போட்டு அவரை ஆபாசமாக அர்ச்சனை செய்கிறீர்கள். உண்ணாவிரதத்தை அரசியல் நாடகம் என்கிறீர்கள். உங்களை பொறுத்தவரை அது நாடகமாகவே இருக்கட்டும்.

அதை விமர்சிக்க நீயார் ஈழத்தமிழா?

2006 இல் உடன்பிறப்புகளுடன் வந்து திமுகவிற்காக ஓட்டுக்கேட்டாயா ?

இல்லை தெரு தெருவா திமுக கொடிப்பிடித்தாயா ?

இல்லை உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டுப்போட்டாயா?

கலைஞரின் உண்ணாவிரதம் பற்றி விமர்சிக்க அவருக்கு ஓட்டுப்போட்ட உடன்பிறப்புக்களுக்குதான் உரிமை.

உனக்கு என்ன யோக்கியதை இருக்கு கலைஞரை கேள்வி கேட்க?

கலைஞர் எங்கள் தலைவர். அவர் எதற்காக உங்களுக்காக ராஜினாமா செய்யவேண்டும்?
எதற்காக மத்திய மந்திரிகள் ராஜினாமா செய்யவேண்டும்?

கலைஞர் நடத்தியது நாடகமென்றால் சீமான் உங்களிடம் வசூல் செய்து தனிஈழம் வாங்கித்தருவதாக ஏமாற்றி வருகிறாரா அதற்கு என்ன பெயர் ?

1992 முதல் வைக்கோ உங்கள் தலைவன் பெயரை சொல்லி தமிழகத்தில் அடித்துக் கொண்டிருக்கும் கூத்துக்கு என்ன பெயர்?

2011 இல் ஆட்சிக்கு வந்தவுடன் ஈழப்பிரட்சினையை தீர்ப்பேன் எனச் சொல்லி உங்களை ஏமாற்றிய ஈழத்தாய் நடத்திய ஏமாற்று வித்தைக்கு பெயர் என்ன?

கலைஞர் நடத்தியது நாடகமாக இருக்கட்டும். அதைப்பற்றி கவலைப்பட வேண்டியது உடன்பிறப்புகளே.

இன உணர்வில்லா அதிமுககாரன் உங்களை சீண்டுவதேயில்லை. இன உணர்வுடன் இருந்த திமுககாரர்களையும் கலைஞரை திட்டி திட்டி உங்களை ஈனத்தமிழர்கள் என அழைக்கும்படி செய்து விட்டீர்கள். இனி உங்களுக்கு தமிழகத்தில் நாதி கிடையாது.

பிரபாகரனை நாங்கள் இன்றும் விமர்சிக்க விரும்பவில்லை.ஆனால் தொடர்ந்து எங்கள் தலைவர் கலைஞரை விமர்சிப்பதால் உங்கள் தலைவர் பிரபாகரனை விமர்சிக்க உடன்பிறப்புகளை மறைமுகமாக தூண்டி வருகிறீர்கள் ஈழத்தமிழர்களே.

No comments:

Post a Comment