Tuesday 19 February 2019

கலைஞரால் தமிழக பெண்கள் அடைந்த நண்மைகள் எண்ணில் அடங்காது. 

கலைஞரால் தமிழக பெண்கள் அடைந்த நண்மைகள் எண்ணில் அடங்காது.

ஆனால் அவர்கள் அதனை அறிவார்களா என்பதே மிகப்பெரிய கேள்வி

(1)

ஆட்சிக்கு வரும் முன்பே கலைஞரது கதைகளும், கட்டுரைகளும், கவிதைகளும் மேடை முழக்கங்களும் பெண்ணுரிமையை பெரிதும் பேசியதை நாம் அறிவோம்

 (2)
விதவை என்ற சொல்லை மாற்றி கைம்பெண் என்று அழைக்கத் தொடங்கியவர் கலைஞர்.

ஆணைப் போலவே பெண்ணுக்கும் அனைத்திலும் சம உரிமை உண்டு என்பதை உணர்த்திய அவர் பெண்களின் மறுமணத்திற்கு பெரிதும் ஆதரவளித்தார்


(3)
வரதட்சணை நோய்க்கு மருந்திடும் வகையிலும் அதே வேளையில் பெண்கள் குறைந்த பட்ச கல்வியாவது கற்க வேண்டும் என்ற நோக்கிலும் 8 -ம் வகுப்பு படித்த பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டமொன்றை ஏற்படுத்தினார்.


(4)
கலைஞரது ஆட்சிக் காலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டன


(5)
சொத்துரிமையில் ஆணுக்கு நிகரான சம பங்குரிமை பெண்களுக்கு உண்டு என்பதை சொத்துரிமைச் சட்டம் மூலம் நிலை நாட்டினார் கலைஞர்


(6)
 உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவிகித ஒதுக்கீடு பெண்களுக்கு என்பதை உறுதி செய்தார்.


(7)
 தாய்மை அடைந்த பெண்களுக்கு உதவிட நிதி உதவியும் வழங்கினார்.


(8)
பெண் குழந்தை பிறப்பு முதல் இறுதிக்காலம் வரை சமூகப் பாதுகாப்புடன் வாழ வழிவகை செய்தவர் கலைஞர்.


(9)
 மகளிருக்கான இலவச பட்டப்படிப்பு திட்டம் மூலம் பெண் கல்வியை மேம்படுத்தினார்.


(10)
 கல்வியை மேம்படச் செய்ததோடு மட்டுமல்லாது அரசுப் பணியில் அவர்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடும் அளித்தார்.


(11)
 'பெண்கள் ஆணையதிற்கு சட்ட அந்தஸ்து வழங்கப்பட்டு அது செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டதும் கலைஞரால்தான்


(12)
பெண்கள் மீதான வன்முறைகளை களைவதற்கும் குறைப்பதற்குமான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது.

(13)
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு தனிப் பள்ளிகளும் விடுதிகளும் அரசால் நடத்தப்படுவது போல இஸ்லாமிய பெண் குழந்தைகளுக்கு விடுதி வசதி செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றியவர் கலைஞர்

 (14)
கலைஞர் முதல்வராக இருந்தபோதுதான் இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான் பெண்களுக்கான சொத்துரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது.

(15)
திருமண நிதி உதவி திட்டத்தில் நிதியை உயர்த்தி வழங்கினார்


(16)
திருநங்கைகளுக்கு நல வாரியம் அமைக்கப்பட்டது. அவர்களுக்கான அங்கீகாரத்தை உறுதி செய்தார்


(17)
பேரவையில்  டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அவர்களின் படத்தை புதிய சட்டப் பேரவையில் திறந்தார்.


 (18)
பெண்கள் மட்டுமே கல்வி பயிலும் அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களாகவும் பெண்களே இருக்கவேண்டும் என்பதை உறுதிப் படுத்தியவர் கலைஞர்

(19)
 கலைஞர்தான் அரசுப் பணியில் 33 % பெண்களுக்கான இட ஒதுக்கீடாக கொண்டுவந்தார்.


 (20)
இன்று பெண்கள் குடும்பத்தில் தங்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என்று உரிமையோடு கேட்பதற்கு காரணமே கலைஞர்தான்.

சொத்து குறித்து பேசும் பெண்கள் இன்று சொத்துரிமை சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டை குறிப்பிட்டே தங்களது வாதங்களையும் முன் வைக்கின்றனர்.


(21)
கலப்பு திருமணம் செய்யும் தம்பதியரில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவரின் பிரிவுக்கான முன்னுரிமை வழங்கப்பட காரணம் கலைஞரே



No comments:

Post a Comment