Sunday 12 August 2018

விவசாயிகளுக்காக கலைஞர் நடத்திய நங்கவரம் போராட்டம் 1956

விவசாயிகளுக்காக கலைஞர் நடத்திய நங்கவரம் போராட்டம் 1956

 நங்கவரம்,மேல நங்கவரம்,சூரியனூர்,காவகாரப்பட்டின்னு 50 க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் மூனு வேளைச் சோறு சாப்பிடுறாங்கன்னா,அதுக்கு காரணம் கலைஞர்தான். நங்கவரம் பண்ணையை எதிர்த்து அவர் நடத்திய மாபெரும் போராட்டம்தான். 1953 ம் ஆண்டு இந்தத் கிராமங்களை சேர்ந்த 20000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் நங்கவரம் பகுதியைச் சேர்ந்த என்.ஆர்.ராமநாதய்யர்,என்.ஆர்.ரெங்கநாதய்யர் என்கிற இரண்டு பண்ணையார்களை எதிர்த்து போராட்டம் நடத்தினாங்க.

 அதாவது,அந்தப் பண்ணையார்களுக்கு சொந்தமான 33412 ஏக்கர் நிலங்களை இந்தத் பகுதி விவசாயிகளுக்குக் குத்தகைக்கு விட்டிருந்தாங்க. பல வருடங்களாக விவசாயிகள் பயன்பாட்டில் அந்த நிலங்கள் இருந்தன.

அப்போது,காமராஜர் 60 க்கு நாற்பதுன்னு ஒரு சட்டம் போட்டார். அதாவது,நிலங்களின் உரிமையாளர்களுக்கு 60 சதவிகிதமும்,உழுத விவசாயிகளுக்கு 40 சதவிகித நிலங்களையும் பிரிச்சு தரணும்ன்னு சொல்லிய சட்டம் அது.

 ஆனால்,ராமநாதய்யர் அப்படிச் செய்யாமல்,விவசாயிகளின் பயன்பாட்டில் இருந்த அத்தனை நிலங்களையும் பிடுங்க முயன்றார்.

 இதனால்,விவசாயிகள் நங்கவரம் பண்ணையார்களை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள். மூன்று வருடம் அந்தப் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்து கவுண்டம்பட்டி முத்து நடத்தினார்.

1956-ல் இந்தத் போராட்டம் உக்கிரம் அடைந்தது. அப்போது, தி.மு.கவின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட செயலாளராக இருந்த அன்பிலாரை கூப்பிட்ட அண்ணா,'கலைஞரை அழைத்துப் போய்,நங்கவரம் விவசாயிகள் போராட்டத்தை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்து வைக்க ஏற்பாடு செய்ய சொன்னார். கலைஞர் களத்திற்கு வந்தார்.


 நேராக வயல்களுக்கு 10000 விவசாயிகளை திரட்டிட்டு போய்,தானே ஏரைப் பூட்டி ஓட்டியதோடு,'உழுதவனுக்கே நிலம் சொந்தம்','நாடு பாதி நங்கவரம் பாதி' என்று கோஷம் போட்டார். தொடர்ந்து ஆறு நாள்கள் வயல்களிலேயே இருந்து கடுமையான போராட்டம் நடத்தினார்.

 அதன் காரணமாக,மாவட்ட நிர்வாகமும்,ராமநாதய்யரும் கவுண்டம்பட்டி முத்துவையும் ,கலைஞரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.

அங்கே விவசாயிகள் சார்பாக அவங்க வைத்த கோரிக்கையை பண்ணையார் ஏத்துக்கிட்டார். இதனால்,மூன்று வருட விவசாயிகளின் உரிமை போராட்டம் முடிவுக்கு வந்தது.

 எத்தனையோ பொதுவுடைமை கட்சித் தலைவர்களின் போராட்ட வியூகங்களால் சாதிக்க முடியாத விஷயத்தைத் தனது வீரியமான போராட்டத்தால் சாதித்துக் காட்டினார் கலைஞர்.

 இதனால்,அந்த நிலங்களை மேல்மடையில் உள்ள நிலங்களுக்கு ஏக்கருக்கு 1000,நடுமடை பாசன நிலங்களுக்கு 750,கடைமடை பாசன நிலங்களுக்கு ஏக்கருக்கு 500 என்று பணையாருக்கு கொடுத்து,நிலங்களை விவசாயிகள் தங்கள் பெயர்களில் பட்டா பண்ணிக் கொண்டார்கள்

https://www.vikatan.com/amp/news/tamilnadu/133720-he-is-the-reason-for-my-growth-karunanidhi-says-about-kaundampatti-muthu-to-stalin.html?__twitter_impression=true

No comments:

Post a Comment