Friday, 10 August 2018

காவேரி பற்றி இதுவரை முழுமையாக வெளிவராத விபரங்கள்*

காவேரி பற்றி இதுவரை முழுமையாக வெளிவராத விபரங்கள்*
கலைஞர் 1969 ல் ஆட்சிக்கு வரும் முன் என்ன நடந்தது? முழு விபரமும் கீழே.
காவேரி ஒப்பந்தம் 1924
THE 1924 AGREEMENT
The main clauses among the 15 operative clauses of the Agreement
are as follows:
1. Mysore Government may construct KRS reservoir to a height of 124 ft above the river bed and to an effective capacity of 44.827 TMC ft to irrigate 1.25
lakh acres.
2. Mysore Government agrees to regulate discharges through and from KRS reservoir strictly in accordance with the rules and regulations which forms part
of this Agreement.
3. Madras Government is permitted to construct a reservoir at Mettm" to an efective capacity of 93.5 TMC ft to extend irrigation by 3.01 lakh acres in the delta area.
4. There should be mutual exchange of returns of technical details and extension of irrigation at the close of each official year
5. Mysore Government may make further extension of irrigation to the tune of 1,10,000 acres by constructing reservoirs of aggregate capacity of 45 TMC
ft on the Cauvery and its tributaries without infiinging the accepted rules and regulations of discharges at KRS.
6. Mysore Government is also permitted to extend irrigation by improvement of duty under each one of the irrigation channels to the extent of 1/3 of what was being irrigated prior to 1910.
7. Mysore should furnish all particulars of reservoirs it proposes to build against the permissible limit of 45 TMC ft to Madras Government.
8. Madras Government may construct new irrigation reservoirs on the tributaries like Bhavani, Amaravati, and Noyil rivers. If they do so, Mysore may construct an off set reservoir of capacity not exceeding 60% of the new
reservoir constructed by Madras. The impounding should not however diminish the supplies to which Madras and Mysore are entitled under this
Agreement including the divisible surplus.
9. Both Governments agree that the limitations and arrangements embodied in Clause IV and V i.e., in respect of extension of irrigation by both Governments set out shall after the expiry of 50 years (in 1974) be opened to reconsideration in the liglit of the experience, gained and for an examination of the possibilities of further extension of irrigation within the territories of the respcctive Govenrments and to such modifications and
additions as may be mutually agreed upon as a result of such reconsideration
10. In case of a dispute between the two Governments touching the interpretation or operation or carrying out this Agreement, such a dispute shall be referred
to arbitration or to Government oflndiaifboth parties agree for settlement.
Thus the 1924 Agreement was in the nature of follow up action on the original 1892 Agreement, the validity of which continued to survive.
In short, Madras gave its assent under Clause 3 of the 1892 Agreement to Mysore to construct KRS reservoir and secured the right to construct its Mettur Project and both Madras and Mysore obtained additional right to extend irrigation to new 39 areas.
IRRIGATION DEVELOPMENT ( POST 1924 )
In Mysore, irrigation from major and medium works under the Cauvery
which was 1.1 lakh acres at the beginning of the century increased to 3 lakh acres by 1930 with the extension of irrigation under the KRS.
By 1970, it had further risen to about 4.4 lakh acres. About half of this increment of 1.4 lakh
acres was contributed by new irrigation from small reservoirs, Anicuts and channels on the tributaries, and the other half by extension of irrigation under the
KRS Anient and Channels.'"
In Tamilnadu, ayacut development in this period was more fast and
significant. The initial pre-Mettur extent of 14.4 lakh acres of irrigation was augmented by Mettur to an extent of 3.2 lakh acres and to an equal extent by projects implemented in the first plan (1951-56) and Second Plan (1956-61) periods.
The first plan projects were the Lower Bhavani Project (covering 2.1 lakh acres) and the Mettur Canal Project (0.5 lakh acres).
The three Second Plan projects, the Amaravathy, the New Kattalai High Level Canal and the Pullambadi Canal were to add about 0.2 lakh acres each.
Mysore objected these
new projects on the ground that they were not permissible under the 1924 Agreement.
Madras maintained that irrigation from the Mettur Canal was within
the acreage limit allowed for the Cauvery-Mettur project.
The other two projects were cleared by the Planning Commission on the assurance of the Madras Government that these projects would utilise only surplus waters or waters saved by economy and would not entail the creation of any new prescriptive rights.
Overall, the Mettur and other 1934-1972 projects added 6.4 lakh acres to the pre-Mettur extent of 14.4 lakh acres.
In addition, the area under a second crop was increased to a total extent of 4.5 lakh acres of this, 2.5 lakh acres was located in the old Cauvery delta, 0.8 lakh acres in the Coleroon system, 0.8 lakh
acres under the canals in Salem and Tiruchinapalli districts and 0.4 lakh acres in the Bhavani and the Amaravathy sub-basins.
Madras did not seek any extra waters on account of extensions to irrigation beyond what had been assured to it under the 1924 rules of regulation.
The Karnataka Government under its development plans took up
constructional work on some irrigation projects to utilise its share of water under the 1924 Agreement.
Work on the Kabini reservoir was commenced in 1959, although the project had been discussed in 1933 itself.
Later projects began with dams and reservoirs on tributaries including the Harangi (1964), Swamavathy (1965), the Hemavathy (1968), the Varuna Canal (extension from KRS, 1979) and the Yagachi (1983). The total irrigation potential under these schemes upto 1990 was expected to be about 13 lakh acres with actual established irrigation until then being 11.2 lakh acres.
The contention of Tamilnadu is that the projects undertaken by Karnataka are not within the stipulated limits and were in excess of the allowances made
in the 1924 Agreement for new irrigation in Karnataka. It also opined that the new projects under taken by Karnataka would reduce the assured supplies to
Tamilnadu through limit flows from KRS and that the 1924 Agreement covers storages in non-scheduled rivers only if they do not affect Tamilnadu's prescriptive right.
Owing to Tamilnadu's objections, the above projects were not cleared by the Central Water Commission or by the Union Planning Conmission for inclusion under Plan Schemes in Karataka.
Expenses on them have been
met from non-Plan allocations and Karataka argues that this has resulted in loss of Central assistance, improper funding and execution delays.
Along with requirements of 85.2 TMC ft for minor irrigation, 50 TMC ft for water supply and 7 TMC ft for power peojects, Karataka has projected its requirements at
465 TMC ft.
1924 முதல் 1990 வரை கர்நாடகா மற்றும் தமிழகம் எப்படி அணைகள் கட்டின எப்படி விவசாய பரப்பை அதிகரித்தன என்ற விபரம் இணைப்பில் உள்ளது.



கச்சத்தீவு விவகாரம் குறித்து தினத்தந்தி அதன் செய்திகளை தொகுத்து வெளியிட்டவை..

கச்சத்தீவு விவகாரம் குறித்து தினத்தந்தி அதன் செய்திகளை தொகுத்து வெளியிட்டவை..
https://m.facebook.com/story.php?story_fbid=1125876617453357&id=100000930886545




Thursday, 9 August 2018

காமராஜரை கவுரவப்படுத்தினார் கருணாநிதி; இளைய தலைமுறை புரிந்துக்கொள்ளுங்கள்: பழ.நெடுமாறன்

காமராஜரை கவுரவப்படுத்தினார் கருணாநிதி; இளைய தலைமுறை புரிந்துக்கொள்ளுங்கள்: பழ.நெடுமாறன்

https://tamil.thehindu.com/tamilnadu/article24643454.ece/amp/?__twitter_impression=true

முகநூல், வலைதளங்களில் காமராஜருக்கு மெரினாவில் அடக்கம் செய்ய கருணாநிதி அனுமதி மறுத்ததாக வரும் செய்திகளை இளைய தலைமுறையினர் நம்பி ஷேர் செய்கின்றனர். உண்மை என்ன என்று அப்போதைய காங்கிரஸ் செயலாளர் பழ நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இன்று இலங்கை பிரச்சினை, தமிழனப்பிரச்சினை முதல் அனைத்திலும் முன்னிற்கும் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் ஒரு காலத்தில் காங்கிரஸ் தலைவர் என்பது இன்றைய இளம் தலைமுறை அறியாத ஒன்று. காமராஜர்பால் பற்றுக்கொண்டு தீவிர காங்கிரஸ்காரராக இருந்தவர் பழ.நெடுமாறன். இந்திரா காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளராக இருந்தார்.

1973 முதல் 1979 வரை காமராஜர் மறைவின்போதும், இந்திரா தமிழகம் வந்தபோது மதுரையில் திமுக கருப்புக்கொடி காட்டி நடந்த கல்லெறி சம்பவத்திலும், கல்லெறியிலிருந்து இந்திரா காந்தியை தலையணையால் மூடி காத்தபோது மண்டை உடைந்து ரத்தம் ஆறாக பெருகிய நிலையிலும் அகலாது நின்றார்.  பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 1979-ல் காங்கிரசிலிருந்து விலகினார்.

கருணாநிதி மறைவின்போது அவருக்கு மெரினாவில் இடம் தர தமிழக அரசு மறுத்தபோது அதற்கு ஆதரவாக முகநூல், வலைதளங்களில் காமராஜருக்கு மெரினாவில் இடம் தர மறுத்தவர் கருணாநிதி, அதனால் இது சரிதான் என்று மீம்ஸ்களும், செய்திகளும் பரப்பப்பட்டது.

இதை பலரும் மறுத்தாலும் அப்போதைய காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளராக இருந்த பழ.நெடுமாறனிடம் கேட்டறிந்தால்தான் சரியாக இருக்கும் என ஆங்கில நாளேடு ஒன்று பேட்டி கண்டுள்ளது.

அதில் பழ நெடுமாறன் கூறியதாக அந்த செய்தியில் வந்திருப்பதாவது:

“காமராஜர் மறைந்ததும், அவரது உடலுக்கு தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் இறுதி சடங்குகள் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், அப்போதைய முதல்வர் கருணாநிதி, காமராஜர் ஒரு சுதந்திர போராட்ட வீரர் என்பதால், காந்தி மண்டபத்தில் வைத்து இறுதி சடங்குகள் செய்யுங்கள், அதுவே பொருத்தமாக இருக்கும் என்று தானே முன்வந்து கூறினார்.

பின்னர் அங்குதான், காமராஜர் உடல் தகனம் செய்யப்பட்டது. மேலும், காந்தி மண்டபத்தில், காமராஜருக்கு நினைவிடம் அமைக்க நிலம் அளித்தவரும் கருணாநிதிதான். மெரினாவில் காமராஜருக்கு இடம் ஒதுக்க காங்கிரஸ் சார்பில் கோரிக்கைவிடுக்கப்படவில்லை.

இப்போதுள்ள தலைமுறையினர், பேஸ்புக், வாட்ஸ்அப்பில் வரும் அறியாத கருத்துக்களை உண்மை என நினைக்கிறார்கள். அதை பரப்புகிறார்கள். உண்மையை கண்டறிய அக்கறை காட்டுவதில்லை.” என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் ஆவல் கணேசனிடம் கேட்டபோது நெடுமாறன் தெரிவித்தது உண்மைதான், கருணாநிதி காமராஜருக்கு உரிய மரியாதை அளித்தார், வலைதளங்களில் வரும் தகவல்கள் தவறானது என்று தெரிவித்தார்.


https://tamil.thehindu.com/opinion/columns/article24651563.ece/amp/?__twitter_impression=true

பெரியார், ராஜாஜி, காமராஜர், ஜானகிக்கு மெரினாவில் இடம் மறுத்தாரா கருணாநிதி?

கருணாநிதி மரண நாளில் அவருக்கான நினைவிடம் தொடர்பில் நடந்த இழுபறி கூடவே பெரியார், ராஜாஜி, காமராஜர், ஜானகி மரணங்களையும் விவாதத்துக்குக் கொண்டுவந்தது. இவர்களுக்கெல்லாம் மெரினாவில் இடம் கொடுக்க மறுத்தார் என்பது கருணாநிதி மீதான குற்றச்சாட்டு. நடந்தது என்ன? உடனிருந்தவர்கள் சொல்கிறார்கள்.

ராஜாஜி

"சென்னை பொது மருத்துவமனையில் மூதறிஞர் ராஜாஜி இறந்தது 25.12.1972 அன்று. கிருஷ்ணாம்பேட்டையில் அவரது உடல் எரியூட்டப்பட்டது. ராஜாஜிக்கு மெரினாவில் இடம் தர கருணாநிதி மறுத்துவிட்டார் என்ற குற்றச்சாட்டே அர்த்தமற்றது. ஏனென்றால், நாங்கள் மெரினாவில் இடம் கேட்கவே இல்லை. நாங்கள் எங்கள் சுதந்திரா கட்சியின் சார்பில், முதல்வராக இருந்த கருணாநிதியிடம் எதைக் கோரினோம் என்றால், ராஜாஜிக்குக் கிண்டியில் நினைவிடம் கோரினோம்.

குறிப்பாக, ராஜாஜி ராம பக்தர் என்பதால் நினைவில்லத்தின் வடிவமைப்பு அதையொட்டி இருக்குமாறு கேட்டோம். கோரிக்கையை ஏற்ற கருணாநிதி அவ்வாறே அமைத்துக் கொடுத்தார். தொடர்ந்து காமராஜர், பக்தவத்சலம் என்று அடுத்தடுத்த காங்கிரஸ் தலைவர்களுக்கும் அதே பகுதியில் நினைவில்லங்கள் அமைக்கப்பட்டன. காந்தி மண்டபம் அங்கிருப்பது காங்கிரஸ் தொடர்பான நினைவுகளை ஒன்றாக்குகிறது" என்கிறார் ராஜாஜி இறந்தபோது சுதந்திரா கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்தவரான டாக்டர் ஹெச்.வி.ஹண்டே.

காமராஜர்

"பெருந்தலைவர் காமராஜர் சென்னையில் 2.10.1975 அன்று காந்தி ஜெயந்தி நாளில் இறந்தார். காமராஜர் உடலை தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான திடலில் (தற்போது காமராஜர் அரங்கம் உள்ள இடத்தில்) எரியூட்டுவது என்று முடிவுசெய்திருந்தோம். முதல்வர் கருணாநிதியிடம் நாங்கள் எந்த இடத்தையும் கேட்கவில்லை. ஆனாலும், கருணாநிதி தாமாகவே முன்வந்து கட்சி இடத்தில் காமராஜருக்கு நினைவிடம் அமைவதைக் காட்டிலும் பொது இடத்தில் நினைவில்லம் அமைக்கலாமே என்று கேட்டார். ஒப்புக்கொண்டோம். கிண்டியில் ராஜாஜி நினைவில்லம் இருந்த பகுதியிலேயே காந்தியின் சீடரான காமராஜருக்கும் நினைவில்லம் அமைய எல்லா ஏற்பாடுகளையும் அரசுத் தரப்பில் செய்து கொடுத்தார்" என்கிறார் காமராஜருக்கு அக்காலத்தில் தளபதியாக இருந்த பழ.நெடுமாறன்.


"காமராஜரின் உடலை இந்து மத முறைப்படி எரியூட்ட வேண்டும் என்று குடும்பத்தினர் கருதியதால், அவரது தங்கை பேரன் எரியூட்டினார். அஸ்தியை கன்னியாகுமரி கடலில் கரைக்கும் முன், அங்குள்ள காந்தி மண்டபத்தில் 3 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்குமாறு கூறி, இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அஸ்தியை காந்தி மண்டபத்துக்குள்ளேயே வைத்தால், பின்னாளில் தனி நினைவிடம் எழுப்புவது கடினம் என்பதால், வெளியே ஒரு பீடம் அமைத்து அதில் அஞ்சலிக்கு வைக்க ஏற்பாடு செய்யுமாறு முதல்வர் கருணாநிதியைக் கேட்டேன். அவ்வாறே செய்தார். பிறகு, எனது கோரிக்கைப்படி மணி மண்டபம் கட்ட மத்திய அரசிடம் கருணாநிதி அனுமதி கோரினார். பிற்பாடு வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில்தான் அதற்கான அனுமதி கிடைத்தது. காமராஜருக்கு உரிய மரியாதையோடு அந்த நினைவு மண்டபத்தைக் கட்டியும் கொடுத்தார்" என்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவரான குமரி அனந்தன்.

பெரியார்

"பெரியார் 24.12.1973-ல் வேலூர் மருத்துவமனையில் மறைந்தார். அப்போதே அன்னை மணியம்மையாரும், நாங்களும் பெரியாருடைய உடலை, பெரியார் திடலில்தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டோம். அதை முதல்வர் கருணாநிதியிடத்திலே சொன்னோம். இப்போது சமூக வலைதளங்களில் மட்டுமல்ல; அரசுத் தரப்பிலேயே தவறான வாதத்தை நீதிமன்றத்தில் வைத்திருக்கிறார்கள். பெரியாருக்கு கருணாநிதி மெரினாவில் இடம் தர மறுத்துவிட்டார் என்பது ஒரு தவறான, பொய்யான, புரட்டான வாதம்" என்கிறார் திக தலைவர் வீரமணி.


ஜானகி

"எம்ஜிஆரின் மனைவியும், இடைக்கால முதல்வராக 23 நாட்கள் இருந்தவருமான ஜானகி ராமச்சந்திரன் 19.5.1996-ல் மறைந்தார். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியிடம் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவோ, மற்றவர்களோ மெரினாவில் இடம் கேட்கவில்லை. எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்தில் உள்ள அன்னை சத்யா நினைவிடம் அருகிலேயே ஜானகி அம்மாளின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது " என்கிறார் முன்னாள் மத்திய அமைச்சரும், அதிமுகவின் மூத்த நிர்வாகியுமான கடம்பூர் ஆர்.ஜனார்த்தனன்.

மெரினாவில் உள்ள 4 முன்னாள் முதல்வர்களின் உடல்களும் எரியூட்டப்படவில்லை; திராவிட இயக்கத்தினரின் பாரம்பரியப்படி அடக்கம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.



Wednesday, 8 August 2018

கருணாநிதி அப்படி என்ன சாதனைகள் செய்தார் என்று கேட்பவரா நீங்கள்? அப்போ இது உங்களுக்குத்தான்

கருணாநிதி அப்படி என்ன சாதனைகள் செய்தார் என்று கேட்பவரா நீங்கள்? அப்போ இது உங்களுக்குத்தான்

சென்னை: திமுக தலைவராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி இந்திய அளவில் மிகப்பெரிய அரசியல் ஆளுமையாக கோலோச்சியவர். பிற அரசியல்வாதிகளை போல சொல்வது ஒன்றும், செய்வது ஒன்றும் இவர் பாணி இல்லை.

செய்ய முடிந்ததை சொல்வார். அதை செய்தும் முடிக்கும் அசாத்திய துணிச்சலும், உழைப்பும் அவரிடம் இருந்தன.

கருணாநிதி மிகப்பெரிய சாதனையாளர் என்று கூறுவார்கள். ஆனால் கடந்த பல வருடங்களில் அந்த சாதனைகளை மக்களிடம் திமுகவினர் சரியாக கொண்டு போய் சேர்க்கவில்லையோ என்ற சந்தேகம் அரசியல் பார்வையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பது போன்ற குரல்கள் தமிழத்தில் அதிகரிக்க, தக்க புள்ளி விவரங்களோடு மறுப்பதில் திமுக உடன் பிறப்புகள் சோர்வடைந்துவிட்டது ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

அப்படி கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட டாப் சாதனைகள் சிலவற்றை உங்கள் பார்வைக்கு தருகிறோம்.



முதல் முறை முதல்வர்

தமிழகத்தில் 40 ஆண்டுகாலம் தொடர்ந்து நீடித்த காங்கிரஸ் ஆட்சியை அகற்றி 1967 பொதுத் தேர்தலிலில் முதல் முறையாக திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியை பிடித்தது. வென்ற தொகுதிகள் 138 இடங்கள். அக்கட்சியின் பொதுச்செயலாளரான அறிஞர் அண்ணா முதல்வராக பொறுப்பேற்றார். இந்தியாவில் ஒரு மாநிலக் கட்சி முதன்முறையாக ஆட்சி அமைத்த வரலாற்று சாதனையை திமுக அப்போது படைத்தது. 1969ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி அண்ணா மரணமடைந்தார். அவரைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்றார். 1969 முதல் 1971 வரையிலும் முதல்வராகப் பொறுப்பு வகித்த கருணாநிதி, அதற்கு பிந்தைய பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற்று 1971 முதல் 1976 வரை இரண்டாவது முறையாகத் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பு வகித்தார். இந்த ஆட்சி காலத்தில், கருணாநிதி பல புரட்சிகர திட்டங்களை கொண்டு வந்தார்.

கை ரிக்ஷா ஒழிப்பு

மனிதர்களை மனிதனே இழுத்துச் செல்லும் வகையிலான கைரிக்ஷாக்கள் அப்போது அதிகளவில் இருந்தன. மனிதனை மனிதனே மாடு போல இழுத்துச்செல்வது சுயமரியாதைக்கு இழுக்கு என்பதால் கை ரிக்ஷாக்கள் ஒழிக்கப்பட்டன. அவற்றிற்குப் பதிலாக சைக்கிள் ரிக்ஷாக்கள் வழங்கப்பட்டன. இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்த தமிழகத் திட்டங்களில் இது. குடிசைகளில் வாழ்வோருக்கு நிரந்தர வீடுகள் கட்டித் தருவதற்காக குடிசை மாற்று வாரியம் என்ற அமைப்பை கருணாநிதி தொடங்கினார். இதன் மூலம் பெருநகரங்களில் குடிசைகள் அகற்றப்பட்டு, அங்கு வாழும் மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்பட்டன. இத்திட்டமும் இந்திய அளவில் முன்னோடித் திட்டம்தான்.


தேசிய கொடி

சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் மாநில ஆளுநர்களே தேசியக் கொடியை ஏற்றும் உரிமையுடையவர்களாக இருந்தனர். தேசிய அளவில், சுதந்திர தினத்தில் பிரதமரும், குடியரசு தினத்தில் ஜனாதிபதியும் கொடியேற்றும் உரிமையுடையவர்களாக இருக்கும்போது, மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத் தலைமை வகிக்கும் முதல்வர்களுக்கு கொடி ஏற்றும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தவர் கருணாநிதி. இதனால், 1972ம் ஆண்டு சுதந்திரத்தின் வெள்ளி விழாவையொட்டி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சுதந்திர தினத்தில் அந்தந்த மாநில முதல்வர்கள், தலைமைச் செயலகத்தில் கொடியேற்றுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த உரிமையைப் பெற்றுத் தந்தவர் கருணாநிதி.

இத்தனை திட்டங்களா?

அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, பார்வையற்றோருக்கு அறுவை சிகிச்சை செய்து கண்ணாடிகள் வழங்கும் கண்ணொளி திட்டம், பிச்சைக் காரர்கள் மற்றும் தொழுநோயாளிகளின் மறுவாழ்வுக்காக இரவலர் இல்லங்கள் அமைத்தது, இந்தியாவிலேயே முதன்முறையாக கோவையில் வேளாண் பல்கலைக்கழகம், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கென தனி அமைச்சரவை, நில உச்சவரம்பு சட்டம், விவசாயத் தொழிலாளர்களுக்கான கூலி நிர்ணயம் , உயர் படிப்பு வரை மாணவர்களுக்கு இலவசக் கல்வி, விதவைகள் மறுமணத்திற்கு நிதியுதவி, கலப்பு மணத் தம்பதிகளுக்கு ஊக்கத் தொகை ஆகியவை 1969 முதல் 1976 வரையிலான கருணாநிதி தலைமையிலான திமுக அரசின் முற்போக்குத் தன்மை கொண்ட முக்கியமான மக்கள் நலத் திட்டங்கள் ஆகும்.


இலவச மின்சாரம்

எம்ஜிஆர் ஆட்சி காலம் இடைமறித்த நிலையில், 13 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, 1989ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலிலில் திமுக மீண்டும் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக தமிழக முதல்வரானார் கருணாநிதி. 1989முதல் 1991 வரையிலான இரண்டு ஆண்டுகாலம் மட்டுமே நீடித்த இந்த ஆட்சி அப்போதைய மத்திய அரசால் கலைக்கப்பட்டது. இருப்பினும் இந்த இடைவெளியிலும் நிறைய மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. சிறு மற்றும் குறு விவசாயிகளின் பாசன வசதிக்காக மின்மோட்டார்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் 1989ல் நடை முறைக்கு வந்தது.

பெண்களுக்கு சொத்தில் சம பங்கு

1989ல் பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உண்டு என்ற சட்டம் தமிழகத்தில் கொண்டு வரப்பட்டது. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் கல்வி, வேலைவாய்ப்புகளைப் பெற்று உயர்வதற்காக தமிழகத்தில் நிலவி வந்த இடஒதுக்கீட்டு அளவை 69 சதவீதமாக உயர்த்தியது கருணாநிதி தலைமையிலான அரசு. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20%, மிகவும் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 30%, தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18%, பழங்குடியினருக்கு 1% என 69% இடஒதுக்கீடு 1989 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.

சத்துணவுடன் முட்டை

1989ம் ஆண்டு தர்மபுரியில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் முதன்முறையாகத் தொடங்கி வைக்கப்பட்டன. பெண்கள் ஒருங்கிணைந்து சுயதொழில் வாய்ப்பைப் பெருக்கும் இத்திட்டம் இன்று மாநிலம் முழுவதும் பெரும் வளர்ச்சி கண்டு பெண்களை தற்சார்பு கொண்டவர்களாக மாற்றியுள்ளது. சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டம், ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவி வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் தொகைத் திட்டம், அரசு நிறுவனங்களின் பணியிடங்களில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு ஆகியவை இந்த 2 ஆண்டுகால ஆட்சியில் நிறைவேற்றப் பட்ட முக்கிய திட்டங்களாகும்.

சென்னையாக மாறிய மெட்ராஸ்

தமிழக முதல்வராக 1996ம் ஆண்டில் நான்காம் முறையாகப் பொறுப்பேற்ற கருணாநிதி மற்றொரு புரட்சிகர திட்டத்தையும் அமல்படுத்தினார். மெட்ராஸ் என்று ஆங்கிலத்திலும் ஏனைய அன்னிய மொழிகளிலும் அழைக்கப்பட்டு வந்ததை மாற்றி சென்னை என அனைத்து மொழிகளிலும் அழைக்கும்படி பெயர் மாற்றம் செய்தார். விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருளை அவர்களே சந்தையில் விற்று நேரடியாகப் பலன் பெறும் வகையில் உழவர் சந்தைகளை தமிழகத்தின் பல பகுதிகளிலும் திறந்து வைத்தார் கருணாநிதி.


சமத்துவபுரம்

தமிழர்கள் என்ற உணர்வை மறந்து சாதிவாரியாக மக்கள் பிரிந்திருப்பதை போக்க வேண்டும் என்பதற்காக, தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் சமத்துவபுர குடியிருப்புகளைத் திறந்து வைத்தார். பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டுடன் தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன. குக்கிராம மக்கள் எளிதில் சுற்றியுள்ள நகரப் பகுதிகளை அடைவதற்கு வசதியாக தனியார் மூலம் சிற்றுந்துகள்/மினி பஸ்கள் இயக்கும் திட்டத்தை திமு.க அரசு நடைமுறைப்படுத்தியது.

அசத்தும் பஸ் பாஸ் திட்டம்

பள்ளி மாணவர்கள் தங்கள் கல்விக்காகப் பயணம் செய்வது சுமையாக இருக்கக்கூடாது என இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. தமிழகத்தில்தான் இப்படி முதல் முறையாக இலவச பஸ் பாஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. பல கிராமப்புற ஏழை மாணவர்கள் இதனால் கல்வி பயின்று இன்று, நல்ல நிலைக்கு வந்துள்ளனர். ஆனால் பெற்ற பலன்களை அறியாத அவர்களில் சிலர், திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற கோஷத்தில் மதி மயங்கியுள்ளனர்.

ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்

2006ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலிலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராக ஐந்தாவது முறையாகப் பொறுப்பேற்றார் கருணாநிதி. 2006 மே 13ம் நாள் பதவியேற்பு விழா நடந்த மேடையில் வைத்தே, தனது தேர்தல் வாக்குறுதிப்படி 1 கிலோ அரிசி 2 ரூபாய், விவசாயிகளின் கூட்டுறவுக்கடன் 7000 கோடி ரூபாய் தள்ளுபடி, சத்துணவுத் திட்டத்தில் வாரம் இரண்டு முட்டைகள் ஆகிய திட்டங்களை நிறைவேற்றக் கையெழுத் திட்டு நடைமுறைப்படுத்தினார்.

பட்டினியில்லா தமிழகம்

தேர்தல் வாக்குறுதியின்படி , ரேஷன் கார்டுகள் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவசமாக கலர் டிவிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது. விறகு அடுப்பு-மண்ணெண்ணெய் அடுப்பு இவற்றைப் பயன்படுத்தும் ஏழைப் பெண்கள் படும் அவதியைத் தவிர்க்கும் விதத்தில் அவர்களுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்பு வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப் படுகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு அரசாங்கம் என்ன செய்யவேண்டும் என ஐ.நா.மன்றம் வழிகாட்டியிருப்பதை இந்தியாவிலேயே முதன்முறையாகச் செயல் படுத்தியிருக்கும் மாநிலம் தமிழகம்தான். அண்ணா நூற்றாண்டு தொடக்க தினமான 2008ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி முதல் 1 கிலோ அரிசி 1ரூபாய் என்ற விலையில் மாதம் 20 கிலோ அரிசி நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படுகிறது. இதன் மூலமாக, பட்டினிச்சாவு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது.

நன்றி Oneindia

Monday, 6 August 2018

புலிகளை ஆதரிப்போர் தேச விரோதிகள்-ஜெயலலிதா October 23 2008,

புலிகளை ஆதரிப்போர் தேச விரோதிகள்-ஜெயலலிதா
October 23 2008, 10:10 [IST]

https://tamil.oneindia.com/news/2008/10/23/tn-ltte-supporters-are-anti-nationals-says-jayalalitha.html

விடுதலைப் புலிகளை எதிர்ப்பவர்கள் தமிழ் துரோகிகள் என்றால், விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் தேசத் துரோகிகள் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மேலும் வைகோவையும் அவர் மறைமுகமாக கடுமையாக கண்டித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான செயல்கள் தமிழ்நாட்டில் தற்போது மீண்டும் நடைபெற்று வருகின்றன. இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திரைப்பட இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் இந்திய இறையாண்மைக்கு எதிரான பல ஆட்சேபகரமான, தேசவிரோத கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.

தனித் தமிழ்நாடு' என்ற அளவுக்குத் துணிச்சலாகப் பேசியிருக்கிறார்கள் (மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன் பேசியது). இத்தகைய பேச்சுக்கள் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. ஆயுதம் ஏந்தவும் தயார்' என்ற அளவுக்கெல்லாம் தற்போது பேச ஆரம்பித்துவிட்டார்கள் (மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியது).

இப்படி இந்திய இறையாண்மைக்கு எதிரான தேச விரோத கருத்துகளைத் தெரிவிப்பவர்கள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு என்ன செய்யப் போகிறது என்று தெரியவில்லை.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் ஆகியும், நளினி உள்பட சிலருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. மாறாக, நளினிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக ஆக்கப்பட்டுவிட்டது.

இவ்வாறு நளினியை காப்பாற்றியது படுகொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி.

மேற்படி நளினியை, கொலை செய்யப்பட்ட முன்னாள் பாரதப் பிரதமரின் மகள் ப்ரியங்கா சிறையில் சென்று பார்க்கிறார். இப்படிப் போய் பார்க்கலாமா? இது அடுக்குமா?. இப்போது நளினி ஏதோ உரிமைக்காகப் போராடுவது போல் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனு போடுகிறார். உலகத்திலேயே வேறு எந்த நாட்டிலும் நடக்காதது எல்லாம் இந்தியாவில் நடக்கிறது!.

இது சோனியா காந்தி மற்றும் பிரியங்கா ஆகியோருடைய சொந்தப் பிரச்சினை அல்ல. அவர்களுடைய குடும்பப் பிரச்சினை அல்ல. இது ஒரு நாட்டுப் பிரச்சினை. ஒரு முன்னாள் பாரதப் பிரதமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்த நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால். யாருடைய தனிப்பட்ட உரிமையும் இதில் இல்லை.

தற்போது தமிழகத்தில் எனது தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தால், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசியிருப்பவர்களை நிச்சயமாக கைது செய்திருப்பேன். எனது ஆட்சிக் காலத்தில் இது போன்று பேசியவர்கள் மீது பொடா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து அவர்களை சிறையில் அடைத்தேன்.

தற்போது பொடா சட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது என்ற அசட்டு தைரியத்தில் சிலர் பகிரங்கமாகவே தேச விரோத கருத்துகளைப் பேச ஆரம்பித்துவிட்டனர். பொடா இல்லாவிட்டாலும், தற்போதுள்ள சட்டவிரோதமான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.

தீவிரவாதம், பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஆகியவற்றை எதிர்ப்பது என்ற கொள்கையில் அதிமுக தொடர்ந்து உறுதியாக உள்ளது. தமிழ் நாட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பை எதிர்க்கின்ற ஒரே தலைவர் நான் தான்.

பிரபாகரனை நம்பி இலங்கைத் தமிழர்கள் இல்லை. பிரபாகரன் ஒரு அழிவு சக்தி. போர் நிறுத்தம் என்று சொல்லி, ஆயுதங்களையும், தனக்குத் தேவையான பொருட்களையும் சேகரித்துக் கொள்வார்.

விடுதலைப் புலிகள் அமைப்பை நான் தீவிரமாக எதிர்ப்பதற்கு காரணம், அந்த அமைப்பு இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடுகிறது. எல்லாவிதமான தேசவிரோத சக்திகளுக்கும் அந்த அமைப்பு ஊக்கம் அளிக்கிறது. முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியை இந்திய மண்ணிலேயே, தமிழ் நாட்டு மண்ணிலேயே கொலை செய்த அமைப்பு விடுதலைப் புலிகள் அமைப்பு.

இந்தியாவைத் துண்டாட நினைக்கின்ற தேச விரோத அமைப்பு விடுதலைப் புலிகள் அமைப்பு, மக்கள் போர் பிரிவு, நக்சலைட், உல்பா, லஷ்கர்-ஏ-தொய்பா, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ போன்ற சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு தொடர்பு இருந்து வருகிறது.

விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம் ஆகும். விடுதலைப் புலிகளை எதிர்ப்பவர்கள் தமிழ் துரோகிகள் என்றால், விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் தேசத் துரோகிகள்.

பிரிவினைவாதம், தனித் தமிழ்நாடு போன்ற தேச விரோதச் செயல்களை அதிமுக கடுமையாக எதிர்க்கும். இதில் எந்த விதமான சமரசத்திற்கும் இடமில்லை என்பதை நான் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

அகதி முகாமும் திமுகவும்

அகதி முகாமும் திமுகவும்
*************************
எழுதியவர் : கணன் சுவாமி (அகதியாக தமிழகம் வந்த ஈழ தமிழர்)

இங்கு பத்மநாபா கொலையால் திமுக ஆட்சியை இழந்ததை குறிப்பிடவில்லை அதை தொடர்ந்து ராஜீவ் கொலையையும் அதன்பிறகான திமுகவின் வீழ்ச்சியையும் கண்ணால் கண்டவன்.

கலைஞர் எம்மாம் பெருமனிதன் 80க்கும் அதிகமான மீன்பிடி படகுகளை வாராவாரம் அனுப்பி அகதிகளை இலவசமாக கொண்டுவந்து சேர்த்தது திமுகவே.

அப்படி ஒரு படகில் நானும் இலவசமாக அகதியாய் வந்து பதினைந்து வருடம் அகதிமுகாமில் வளர்ந்தவன். அப்போ அகதிக்கு 57 பைசாவுக்கு அரிசியை அறிவித்தவர் கலைஞர். அந்த அரிசியை இன்றும் லட்சம் இலங்கை அகதிமக்கள் வாங்கிட்டு தான் இருக்கிறார்கள்.

இரண்டு லட்சம் பேர் அகதியாக இருந்த பொழுது 20 மெடிக்கல் சீட் 20 எஞ்சினிரிங் சீட் அறிவித்தவர் கலைஞர்.

ஜெயலலிதாம்மா காலம் அகதிமுகாம் ஜெயிலாக மாறும் கலைஞர்காலத்தில் ஒரு போலீஸ்காரன் கூட இருக்கமாட்டான்

அகதிகள் கடற்கரையோரங்களில் மீன்பிடித்தொழிலுக்கு செல்வர் ஏதோ அவனவன் அவனவன் பாடு பார்ப்பான் அதெல்லாம் ஒரு காலம் இப்போ நெனைச்சுக்கூட பார்க்க முடியாது என்னவோ போங்க கலைஞர் காலத்தில் நான் மிகவும் சுதந்திரமான அகதியாய் இருந்தேன்.

அவர் எனக்கு தன்னாலான எல்லாவற்றையும் கொடுத்து கெளரவித்தார் எங்க ஊராளுங்களில் சிலர் மரியாதை தெரியாத பயலுக அவரை எழுந்தமானாத்துக்கு தூற்றுவார்கள்.

அவர்கள் புத்தி அவ்வளவு தான் தலைவர் கலைஞரை பற்றி கேட்கணும்னா பழைய அரசியல்வாதி தந்தை செல்வா அவர்களின் மகன் சந்திரகாசனைத்தான் கேட்கணும் இன்றுவரை மிக நெருக்கமாக இருப்பார்.

அந்த அரை நாள் உண்ணாவிரதத்தை முடிக்க வைத்ததே சந்திரகாசன் தான். தலைவர் அந்த முடிவில் சொன்னது “ தந்தை செல்வாவின் மைந்தன் போர் முடிந்தது என்று சொல்கிறார் நான் அவரை நம்புகிறேன் போர் முடிந்த பின்னர் இந்த உண்ணாவிரதத்தைதொடர்வதில் அர்த்தமில்லை” என்றார்

நன்றி Prakash JP

கடந்த 2008ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு கப்பல் மூலமாக முதல் கட்டமாக 80 ஆயிரம் குடும்பங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை, சோப்பு மற்றும் துணிவகைகள் கொண்ட 10 கோடியே ஆறுலட்சம் ரூபாய் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது.

இந்த நிவாரணப் பொருட்களுடன் இலங்கையில் துயருறும் தமிழ் மக்களுக்காக தமிழக அரசு திரட்டிய நிதியில் எஞ்சிய 25 கோடி ரூபாய் நிதி உதவியாக வழங்கப்பட்டது.

கடந்த 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன், அகதிகள் முகாம்களில் தங்கியிருப்போருக்கு வழங்கப்பட்ட நிதியுதவி உயர்த்தப்பட்டது. முகாம்களில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி, வண்ண அடையாள அட்டைகள், இரண்டு வருடங்களக்கு ஒருமுறை சமையல் பாத்திரம், ஈமச்சடங்கு செய்வதற்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை ரூ.2,500ஆக உயர்த்தப்பட்டது என பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டது.

2004-2005ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் அகதிகள் முகாம்களுக்கு செலவிடப்பட்ட மொத்த தொகை 28 கோடி ரூபாய்தான். ஆனால் கடந்த 2008-2009ஆம் ஆண்டில் 48 கோடியே 58 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது.

திமுக அரசு ஐந்தாவது முறையாக பதவியேற்றவுடன், இலங்கை தமிழர்கள் தமிழகத்தில் தங்கியுள்ள முகாம்களை பார்வையிட்டு அளித்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் பிரச்சனை குறித்து தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Wednesday, 1 August 2018

இலங்கை மலையக தமிழர்களின் பரிதாப வரலாறு

இலங்கை பிரச்சினை என்றால் ஈழதமிழர் என்பார்கள், சிங்களகொடுமை, புலிகள், போர் , மறக்காமல் காங்கிரஸ் கலைஞர் துரோகம்  இப்படித்தான் செய்திகள் வரும்

இலங்கையில் மூவிதமான தமிழர்கள் உண்டு, ஈழதமிழர், இஸ்லாமிய தமிழர், மலையக தமிழர்

இதில் ஈழதமிழரை பற்றித்தான் எல்லோரும் பேசுவார்கள், இஸ்லாமிய தமிழரும், மலையக தமிழரும் மறக்கபட்டவர்கள்

இஸ்லாமிய தமிழர்களின் பிரச்சினை வேறுமாதிரியானது, முதலில் சிங்களனும் யாழ்பாண தமிழனும் அவர்களை போட்டுத்தான் அடித்துக்கொண்டிருந்தான்,

பின் சிங்கள யாழ்பாண மோதல் வந்தபின் புலிகள் மட்டும் அடித்துகொண்டிருந்தனர் அல்லது பிடுங்கிகொண்டிருந்தனர். ஓரளவு வசதியான இனம் அது, அதுதான் காரணம்.

இந்த  மலையக தமிழர்கள்தான் தமிழகத்தின் தொப்புள் கொடி உறவு, ஈழ தமிழர் அந்த  மண்ணை சார்ந்தவர்கள், வெள்ளையர் ஆட்சியில் தேயிலைக்காக மலையகம் கொண்டு செல்லபட்டவர் வம்சம் மலையக தமிழர்கள்

அடிமைபட்டு கிடக்கும் அவலம்

இவர்களை மேலாதிக்கம் செய்த வெள்ளையனின் அதிகாரிகள் யாழ்பாண தமிழர்கள், இந்த யாழ்பாண தமிழருக்கும் இந்த தமிழர்களை அடிமையாகவே வைத்திருப்பதில் ஒரு ஆனந்தம்,

தமிழன் இன்னொரு தமிழனை அடக்கி வைத்திருப்பதில் வெள்ளையனுக்கும் மகிழ்ச்சி

                                                 

அவர்கள் பெரும்பாலும் தமிழக அடித்தட்டு மக்கள், இலங்கையில்நிலவிய சாதிபாகுபாடு அவர்களை அங்கும் அடித்தது

ஈழதமிழருக்கு அவர்கள் ஒதுக்கபட்டவர்கள், புலிகளின் ஈழ வரைபடத்தில் கூட மலையகம் வராது,

ஈழபோராட்டம் மலையக தமிழர்களை அருகிலே சேர்க்கவில்லை என்பது வேறுவிஷயம், பத்மநாபா கம்யூனிஸ்ட் என்பதால் அவர் கொஞ்சம் முயற்சி எடுத்தார் அவரோடு சரி

புலிகள் ஒருகாலும் மலையக தமிழர் உரிமை வாழ்வு பற்றி கனவிலும் சிந்தித்ததில்லை,

மலையகத்தார் மனிதர்களே இல்லை என்பது போல இருந்தார்கள் அவர்கள் கனவு யாழ்பாணம், கிளிநொச்சி இன்னபிற‌

ஈழவிடுதலை வெறி அவர்களிடம் இருந்ததே தவிர மலையக மக்கள் எப்படியும் போகட்டும் என்ற எண்ணம்தான் இருந்தது, 

மலையகத்தார் தமிழர்கள்தான் ஆனால் ஈழத்தவர் அல்ல என்பதால் புலிகள் அதுபற்றி சிந்திக்கவில்லை, புலிகள் அப்படித்தான்

சிங்களமோ ஈழதமிரையே விரட்ட துணிந்த நிலையில் மலையக தமிழர்களை எங்கே நினைக்கும்?

1960களில் மலையக மக்களில் ஒரு பகுதியினரை நாடற்றவர்களாக்கி, இந்தியாவிற்கு அனுப்பி மகிழ்ந்தது சிங்களம், யாழ்பாணத்தாரும் தடுக்கவில்லை மாறாக சென்று தொலையட்டும் எனும் மனநிலையில் இருந்தார்கள்

அப்போதைய இந்திய காங்கிரஸ் அரசும் அவர்களை ஏற்றிருக்க கூடாது, மல்லுகட்டியிருக்க வேண்டும் ஆனால் செய்யவில்லை, மாறாக ஏற்றுகொண்டது, இது பெரும் தவறு

மலையக மக்கள் பெருகினால் அது நம் வோட்டு வங்கிக்கு பாதிப்பு என சிங்களமும், யாழ்பாண தமிழனுக்கு ஆபத்து என ஈழமும் நினைத்து செய்த கூட்டு சதி அது.

குடியுரிமை பறிக்கபட்டு அனுப்புவது என்பது ஒரு அவமான செயல், கிட்டதட்ட நிர்வாண கோலம்

அந்த கொடுமையினை அன்று சிங்களம் செய்தபொழுது எல்லா தரப்பும் வேடிக்கை பார்த்தது, பெரும் வரலாற்றுகொடுமை அது.

பின்பு ஈழபிரச்சினையில் இந்திராவும், ராஜிவும் தலையிட்டபொழுதும் அம்மக்களை மறந்துவிட்டார்கள் அல்லது புறக்கணித்தார்கள்

இந்த மலையக அடிமை தமிழர்கள் பரிதாபத்திற்குரியவர்கள் சிங்களம், ஈழம், தமிழகம், இந்தியா என எல்லா தரப்பு மக்களாலும் கண்டுகொள்ளபடாத அபலைகள்

சொந்த நாட்டு உறவும் இன்றி, வாழும் நாட்டில் உரிமை இன்றி ஒரு வகையான சிறை அகதி வாழும் வாய் பேசும் அடிமைகள், மிக மிக பரிதாபத்திற்குரியவர்கள்,

இங்கிருந்து 1840 களில் இலங்கை சென்றவர்கள் கண்டி, ஹட்டன், மாத்தளை, புஸல்லாவ, நுவரேலியா எனப் பல்வேறு இடங்களிலும் அடர்வனங்களைத் திருத்திப் பெருந் தோட்டங்களாக மாற்றினார்கள். மலைகளில் சாலை களை உருவாக்கினார்கள். சுரங்கங்களை வெட்டி ரயில் பாதை உருவாக்கினார்கள். கடுங்குளிரிலும் பனியிலும் ஓயாத மழையிலும் அட்டை, பூரான் கடிக்கு மத்தியில் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வரை உழைத்தார்கள். ஆனால், இவர்கள் வாழ்நிலையோ குரூரமான கொத்தடிமைகளின் நிலையிலேயே இருந்தது.

மலையகத் தமிழர்கள் இலங்கையின் பொருளாதாரத்தைத் தூக்கிச் சுமந்தனர். இலங்கையர்களோ கள்ளத்தோணி, தோட்டக் காட்டான், வடக்கத்தியான், பறத்தமிழன், என்று பல வசைச் சொற்களைச் சொல்லி இழிவு படுத்தினார்கள். இந்திய வம்சாவளித் தமிழர்களை நாட்டை விட்டுத் துரத்த வேண்டும் என்று பேசினார்கள்.

இந்திய வம்சாவளித் தமிழர்கள் 1935 காலகட்டத்தில் அநீதிகளை எதிர்த்துப் போராட்டத்தில் இறங்கினர். தஞ்சாவூரிலிருந்து ஹட்டனில் குடியேறிய கோ. நடேசய்யர், மலையக மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார். சி.வி. வேலுப்பிள்ளை, இளஞ்செழியன், இர. சிவலிங்கம் என அடுத்தடுத்துப் பல தலைவர்கள் மலையக மக்களின் அரசியலை முன்னெடுத்தனர்.

இலங்கையிலிருந்து மலையகத் தமிழர்களைத் துரத்துவதில் முனைப்பாக இருந்த அரசு, ஒருகட்டத்தில் 10 லட்சம் மலையகத் தமிழர்களை நாடற்றவர்களாக ஆக்கியது. ஏறத்தாழ 130 ஆண்டுகளாக இலங் கைக்காக உழைத்தவர்கள் அநாதைகளாக ஆக்கப் பட்டார்கள்.

இந்த 10 லட்சம் பேரையும் இந்தியாவுக்கு அனுப்ப முயன்றது இலங்கை. இந்தியாவோ ஏற்க மறுத்தது. ஒருகட்டத்தில் வேறு வழியில்லாமல், கிட்டத்தட்ட ஆளுக்குப் பாதி என்பதுபோல, இரு அரசுகளும் ஒரு ஒப்பந்தத்தைச் செய்தன. இதன்படி 5.25 லட்சம் பேர் இந்தியாவுக்குத் திரும்ப அழைக்கப்பட்டார்கள். 1964-ல் இலங்கை அதிபர் சிறீமாவும், இந்தியப் பிரதமர் சாஸ்திரியும் செய்துகொண்ட ஒப்பந்தம் நேற்றோடு 50 ஆண்டுகளை நிறைவுசெய்தது. உறவுகளை, உடைமைகளை, உரிமைகளை என இடைப்பட்ட 130 ஆண்டுகளில் கொஞ்சநஞ்சம் கிடைத்தவற்றையும் பறிகொடுத்து இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டனர் மலையகத் தமிழர்கள்.

இலங்கை 1948, பிப்ரவரி 4-ல் சுதந்திரம் அடைந்தது. டி.எஸ். சேனநாயகா அதிபர் ஆனார். இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமையைப் பறிக்கும் சட்ட மசோதாவை அவர் கொண்டுவந்தார். அதை ஆதரித்த 53 உறுப்பினர்களில் சுந்தரலிங்கம், எஸ். மகாதேவன் உள்ளிட்டவர்களும் அடக்கம். ஆனால், ஈழத்தந்தை செல்வநாயகம், “இன்று இந்திய வம்சாவளித் தமிழர் களுக்கு ஏற்பட்ட அவலம், நாளை ஈழத் தமிழர் களுக்கும் ஏற்படும்” என்று அன்றே எச்சரித்ததோடு, அதை எதிர்த்தும் வாக்களித்தார்.

இலங்கையின் பூர்விகத் தமிழர்களால் இவர்களுக்கு ஆதாயங்கள் இல்லை என்றாலும், தீமைகள் காததிருந்தன. சிங்கள இனவெறி எப்போதெல்லாம் பூர்விகத் தமிழர்களைக் குறிவைத்ததோ, அப்போதெல்லாம் இவர்களையும் குறிவைத்தது. சிங்களவர்களின் கைக்கெட்டும் தூரத்திலிருந்த இவர்களது வீடுகளும் வணிகக் கூடங்களும் உயிர்களும் அவர்களின் வன்முறைக்கு இலக்காயின.

2012 கணக்குபடி இலங்கை மலையக தமிழர்கள்
8,42,323 பேர் உள்ளனர். ஆனால் 1989 கணக்குபடி 8,73,000 பேர்
மலையக தமிழர்

இன்றும் மலையகத்தமிழர்களின் 40000 வீடுகளுக்கு மேல் கழிப்பறை கூட கிடையாது

பத்திரிக்கை செய்திகள்