Friday, 20 March 2020

நீதிக்கட்சியும் கலைஞரும் இந்துக்களுக்கு செய்த எண்ணற்ற பணிகள் தெரியுமா? கோயில் வருமானத்தில் கருணை இல்லங்களையும், மறுவாழ்வு இல்லங்களையும் அமைத்த கலைஞரா  இந்துக்களின் எதிரி?

நீதிக்கட்சியும் கலைஞரும் இந்துக்களுக்கு செய்த எண்ணற்ற பணிகள் தெரியுமா?
கோயில் வருமானத்தில் கருணை இல்லங்களையும், மறுவாழ்வு இல்லங்களையும் அமைத்த கலைஞரா  இந்துக்களின் எதிரி?
தமிழகக் கோயில்களின் நிர்வாகங்கள் எல்லாம் காலம்காலமாகப் பெரும் பணக்காரர்கள், பண்ணையார்களின் வசமே இருந்தன. அவர்களிடமிருந்து கையகப்படுத்துவதற்காக, சென்னை மாகாணத்தில் ஆட்சியில் இருந்த நீதிக்கட்சி, 1922-ம் ஆண்டு, இந்து அறநிலையச் சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது.
அது 1925-ம் ஆண்டு அமலுக்கு வந்ததையடுத்து, கோயில்கள் அரசு நிர்வாகத்துக்கு மாறின. 1927-ம் ஆண்டு இந்து சமய அறநிலைய வாரியம் அமைக்கப்பட்டது. 1951-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை உருவானது. நீதிமன்ற வழிகாட்டுதலை அடுத்து 1959-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி தமிழக அரசின் ஓர் அங்கமாக இந்து சமய அறநிலையத்துறை மாறியது. 
திருக்கோயில்களை முறைப்படுத்தி, அவற்றை நிர்வகிப்பதற்கென தனி அமைச்சகத்தை உருவாக்கியவர் கலைஞர்.
1971-ம் ஆண்டு முதன்முதலாக அறநிலையத்துறை அமைச்சராக எம்.கண்ணப்பனை நியமித்தார்.
கலைஞரின் முதல் ஆட்சிக்காலத்தில், திருக்கோயில் வருமானங்களில் குழந்தைகளுக்கான கருணை இல்லங்கள், பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லங்களை அமைத்தார். 
தந்தை பெரியார் இருந்தபோதே பரம்பரை அர்ச்சகர் முறையை ஒழித்து தகுதி அடிப்படையில், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று (2.12.1970) சட்டம் இயற்றினார் கலைஞர்.
உடனே சில அமைப்பினர்  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்தச் சட்டத்தை நிறுத்தினார்கள்.
36 ஆண்டுகள் கழித்து, `அனைத்துச் சாதியினரும் தமிழ்நாட்டிலுள்ள இந்து சமயத் திருக்கோயில்களில் அர்ச்சகர் ஆகலாம்' என்று திமுக அரசு முடிவுசெய்து அவசரச் சட்டம் ஒன்றை, 12.8.2006 அன்று சட்டப் பேரவையில் கொண்டுவந்தது.
அதன்படி சைவ, வைணவ ஆகமப் பாடங்களில் ஓராண்டு பட்டயம் பெற்ற 207 பேர் அர்ச்சகர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
ஆனால், இன்றைக்கும் அது நடைமுறைப்படுத்தப்படாமல் சட்டச் சிக்கலில் இருக்கிறது. 
திருக்கோயில்கள் மற்றும் திருமடங்களுக்குச் சொந்தமாக சுமார் ஐந்து லட்சம் ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன. இதில் பெரும்பாலான நிலங்கள் கலைஞர் ஆட்சிக் காலத்தில் மீட்கப்பட்டவை.
2006-2008 காலகட்டத்தில் மட்டுமே கருணாநிதி அரசின் சார்பில் 2,190 திருக்கோயில்களில் திருப்பணி செய்யப்பட்டு, குட முழுக்கு விழாக்கள் நடைபெற்றன.
2006-11-ம் ஆண்டு வரையான 5 ஆண்டுகாலத்தில் மொத்தமாக 5,000 க்கும் மேற்பட்ட கோயில்களுக்குத் திருப்பணியும் குடமுழுக்கு விழாக்களும் நடத்தப்பட்டன. 240 திருக்கோயில் தேர்கள் புதுப்பிக்கப்பட்டன. 
ஆசியாவின் பெரிய தேர்களில் ஒன்றாகப் போற்றப்படும் திருவாரூர் தியாகராஜர் கோயில் தேர் 1948-ம் ஆண்டுக்குப் பிறகு இயக்கப்படவில்லை. அதை பழுதுபார்த்து, புனரமைத்து 1970-ம் ஆண்டு மீண்டும் தேரோட்டத்தை நடத்தினார் கலைஞர்.
25 ஆண்டுகளுக்குப் பின் நடந்த இந்தத் தேரோட்டத்தில் 3 லட்சம் கிலோ எடை கொண்ட பிரமாண்ட தேர் மக்கள் வெள்ளத்துக்கு மத்தியில் நகர்ந்தது.
திருச்சி பெல் நிறுவனத்தின் ஹைட்ராலிக் பிரேக் கொண்ட, இரும்பினால் ஆன எந்திரத்தைக் கொண்டு தேர் இழுக்கப்பட்டது.
மேலும் இந்தக் கோயிலின் நீலோத்பலாம்பாள் அம்மனுக்கு ரூ.30 லட்சம் செலவில் புதிதாகச் செய்யப்பட்ட தேரின் வெள்ளோட்டம்  27-4-2008 அன்று நடைபெற்றது.
தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டுவிழா 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25, 26 ஆகிய நாள்களில் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.
2006-ம் ஆண்டு கிராமக் கோயில் பூசாரிகள் நலனுக்கென நல வாரியம் அமைக்கப்பட்டது.
இந்த வாரியத்தில் 65,000 க்கும் மேற்பட்ட கிராமப் பூசாரிகள் உறுப்பினர்களாக இருந்தனர். அந்தப் பூசாரிகளின் வாரிசுகள் திருமணத்துக்கு நிதியுதவி, மகப்பேறு நிதி, படிப்பு உதவித்தொகை, ஈமச்சடங்கு நிதி போன்றவை வழங்கப்பட்டு வந்தன.
2008-ம் ஆண்டு திருக்கோயில்களில் புனரமைப்புப் பணிகள் செய்வதற்காக ஆண்டுதோறும் அரசாங்கம் வழங்கும் மானியத் தொகை 75 லட்சம் ரூபாயிலிருந்து மூன்று கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.
புராதனச் சின்னங்கள் புனரமைப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு ஆலயங்களில் இருந்த பழைமையான ஓவியங்கள், சிற்பங்கள் புதுப்பிக்கப்பட்டன. 
கலைஞர் ஆட்சிக்காலத்தில் பழைமையான சிலைகள் பலவும் மீட்கப்பட்டன. 2010-ம் ஆண்டு மட்டும் 11 சிலைகள் மீட்கப்பட்டன.
ஒருமுறை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியில் இருந்த கருணாநிதி `தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில் கருவறைக்குள் செல்ல உரிமை இல்லை' என்று வருத்தப்பட்டுப் பேசினார்.
`கோயிலுக்கே போகாத கருணாநிதிக்கு ஏன் இந்தக் கவலை? என்றார் காங்கிரஸ் உறுப்பினர் அனந்தநாயகி. உடனே கருணாநிதி `கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குப் போகிறார்கள். வாதாடுபவர்களும்தானே போகிறார்கள்!' என்றார்.
எளிய மக்களின் வழிபாட்டுக்கு ஏற்றவகையில் கோயில்களை மாற்றியமைத்தவர் கருணாநிதி.
தமிழக மக்கள் தெய்வமாக வணங்கும் அண்ணன்மார் எனும் பொன்னர் சங்கரின் கதையை தனது அழகுத் தமிழில் வடித்துத் தந்தவர் கருணாநிதி.
வைணவ ஆச்சாரியார் ஸ்ரீராமாநுஜரின் முற்போக்குச் சிந்தனைகளை ஒன்றிணைத்த கருணாநிதி தனது இலக்கிய கைவண்ணத்தில் ராமாநுஜ காவியம் ஒன்றை இயற்றினார். அந்தக் காவியம் தொலைக்காட்சியில் வந்ததைப்பார்த்த திருப்பதி தேவஸ்தானம், அதை தெலுங்கில் ஒளிபரப்ப அனுமதி கேட்டது. அதற்கு சம்மதித்ததோடு அந்தத் தொடரை இலவசமாக மொழிமாற்றம் செய்துகொள்ளவும் அனுமதித்தார். 
கலைஞர் தனது வீட்டைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான மருத்துவமனையாக மாற்ற ஒப்புதல் தந்து பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார். ``எனது பள்ளிப் பருவத்தில், திருவாரூர் கோயில் சுவர்களில் நடமாடும் கோயில் திருப்பணி என்று ஆங்காங்கே  எழுதப்பட்டிருக்கும். நடமாடும் கோயில் திருப்பணி என்றால், நடமாடுகின்ற கோயில் கட்டப் போகிறார்கள் என்று அர்த்தமில்லை. மனிதனின் உடலே நடமாடும் கோயில். அதில் உண்டாகும் பிணிகளைத் தீர்ப்பதைத்தான் திருப்பணி என்கிறோம். நடமாடும் கோயில் திருப்பணி என்பது மருத்துவம்தான் என்று எனது ஆசிரியர் சொன்னார். அந்த நடமாடும் கோயில் திருப்பணியைத்தான் தி.மு.க ஆட்சிக்கு வரும்போதெல்லாம் செய்கிறது'' என்றார். அதுதான் கலைஞர்!
By மு.ஹரி காமராஜ்
August 09, 2018 at 6:24 PM

Wednesday, 18 March 2020

திமுககேள்விக்குஎன்னபதில்No1 டுபாக்கூர் சொத்துப்பட்டியலுடன் சில்லறைகள்

கலைஞர் குடும்பச் சொத்துபட்டியல் என திட்டமிட்டு ஒரு நீண்ட கற்பனை பட்டியலை வாட்ஸ்அப்பில் பரப்பி வரும் திருட்டு பொறுக்கிகளிடம்  திமுகவினர் கேட்க வேண்டிய எதிர்
கேள்விகள் இதோ 👇

கேள்வி எண் (1)

15 வருசமா கலைஞர்சொத்து என்ற பட்டியல் வாட்ஸ்அப்பில் உலவுதே?

கலைஞரின் அக்கா மகன்
மாறனின் குடும்ப சொத்துக்கள் எப்படிடா கலைஞர் சொத்தாகும்?

1993 SUN tv போலிகம்பெனி அல்ல
ஒரு ரூபா ஊதியத்தில் ஆரம்பிக்கலடா

உன் அக்கா மகனின் சொத்தை உன் பேரில் எழுதிக்குவியா?

#திமுககேள்விக்குஎன்னபதில்No1

கேள்வி எண் (2)

கலைஞர் குடும்ப சொத்து பட்டியல் நீளமாயிருக்கே"

அது கப்சா பட்டியல்😜
நீளமாத்தான்டா இருக்கும்

மாறன் குடும்பம் உழைப்பில் வந்த
19100கோடி சொத்துப் பட்டியலும் நீளமாதான் இருக்கும்😁

அப்படியே
அம்பானி 3,80,700Cr சொத்தை கலைஞர் குடும்பத்து சொத்தா மாற்றலாமே?

#திமுககேள்விக்குஎன்னபதில்No1

கேள்வி எண் (3)

"வாட்ஸ் அப்பில் கலைஞர் சொத்து பட்டியல் உலவுதே"

2006ல் இருந்தே உலவுது

2011-20 அதிமுக ஆட்சி
2014-20 பிஜேபி ஆட்சி

பட்டியல் உண்மையெனில்
WhatsAppல் ஏன் அவதூறு பண்ற?
லஞ்ச ஒழிப்பு அமலாக்க,வருமான வரித்துறைக்கு அனுப்பலாமே?

உன் நோக்கம் அவதூறு பரப்புவதானே

#திமுககேள்விக்குஎன்னபதில்No1

கேள்வி எண் (4)

"கலைஞர் சயின்டிபிக்கா ஊழல் பண்ணிட்டார்"

Scientific என்றால் நிரூபிக்கத்தக்க என்று பொருள்
நிரூபிக்க வேண்டியதானே

1977முதல் 30 வருசம் ADMK ஆட்சி நடந்திருக்கே

FIR இல்லாம மேம்பால ஊழல் என அசிங்கப்பட்டது யாரு
கேவலம்..ஒரு Petty case கூட போட முடியாதது ஏன்?

#திமுககேள்விக்குஎன்னபதில்No1

கேள்வி எண் (5)

"கலைஞர் கண்டுபிடிக்க முடியாம ஊழல் பண்ணிட்டார்"

கலைஞர் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறையின் திறமையால்தானே ஜெயலலிதாவின் மேல் வழக்கு போட்டு தண்டனை வாங்கி கொடுத்தார்

அதே லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் ஜெயலலிதா 2001,2011ல் கலைஞர் மீது வழக்கு போட முடியாததேன்?

#திமுககேள்விக்குஎன்னபதில்No1

கேள்வி எண் (6)

1976 முதல் 43 வருசமா யாராலுமே கண்டு பிடிக்க முடியாதபடி
கலைஞர் ஊழல் பண்ணிட்டார்

இப்படி எவனாவது சொன்னா நமது லஞ்ச ஒழிப்புத்துறை, அமலாக்க பிரிவு, வருமானவரித்துறை,CBI திறமையற்ற அமைப்புகள் என்பதாக பொருள்

அவன் மீது சட்டப்படி ஏன் நடவடிக்கை
எடுக்கக் கூடாது?

#திமுககேள்விக்குஎன்னபதில்No1

கேள்வி எண் (7)

"கலைஞர் சொத்து சேர்த்துட்டார்"

சொத்து எதுக்குடா சேர்ப்பாங்க?
ஆடம்பர வாழ்க்கைக்காகத்தானே

கலைஞர் என்ன கொடநாடு மாதிரியான பங்களாவிலா வாழ்ந்தார்?

கடைசிவரை
சாதா வீட்டில்தானே

தனது கோபாலபுரம் வீட்டை மருத்துவமனைக்கு தானமாக தந்தவரா ஊழல்வாதி?

#திமுககேள்விக்குஎன்னபதில்No1

கேள்வி எண் (8)

கலைஞரை ஊழல்வாதியாக சித்தரித்தவர்கள்

இந்திரா
MGR
ஜெயலலிதா
ஆகியோர்

ஆனால் இந்த மூவருமே ஊழல் வழக்கில் சிக்கிய சிகாமணிகள்

கலைஞரால் பாதிக்கப்பட்ட ஜெயலலிதா கையில் கலைஞர் ஊழல் செய்ததாக சிறு ஆதாரம் சிக்கியிருந்தால் கலைஞரை ஒழித்திருக்கமாட்டாரா?

யோசிங்க

#திமுககேள்விக்குஎன்னபதில்No1

கேள்வி எண்(9)

யார் திருந்தாத ஜென்மங்கள்?

ஒரு பக்கம் வழக்கு..

இன்னொரு பக்கம்
மிடாஸ் கம்பெனி
1000 கோடி பீனிக்ஸ் தியேட்டர்
540 கோடி கண்டைனர் லாரிகள்
பணமதிப்பின் போது சொத்துக் குவிப்பு

மறைந்து விட்ட கலைஞரின் சொத்து பட்டியல் போடுறவன்
இதையெல்லாம் பேசாதது ஏன்?
💦

#திமுககேள்விக்குஎன்னபதில்No1

கேள்வி எண் (10)

கலைஞர் சொத்து பற்றி பட்டியல் போட்டவுடன் கலைஞர் தனக்கு சொத்து எப்படி வந்தது என்பதை தெளிவாக விளக்கி அறிக்கை வெளியிட்டார்

அந்த யோக்கியதை இங்கேயுள்ள எந்த தலைவனுக்கு இருக்கு?

சொல்லுங்கடா

இதோ அவரது தெளிவான விளக்கம்

https://t.co/Td0nZBsh9h

#திமுககேள்விக்குஎன்னபதில்No1

கேள்வி எண் (11)

கிறுக்கன் :- கலைஞர் சொத்து எப்படி வந்தது?

பதில்:- மடப்பயலே..இதுக்கு அவர் ஏற்கனவே
விபரமா பதிலும் கொடுத்திருக்கார்

வருமான வரித்துறைக்கு கணக்கும் கொடுத்திருக்கார்

உனக்கு சந்தேகம் இருந்தால் வருமானவரித்துறையிடம் உன் பட்டியலை கொடு
நடவடிக்கை எடுப்பர்

#திமுககேள்விக்குஎன்னபதில்No1

கேள்வி எண் (12)

கலைஞர் குடும்ப சொத்துப்பட்டியல் இருந்தா
அதை வைத்து வழக்கு போட வேண்டியதுதானே
சம்பந்தப்பட்டவர்கள் வழக்கை சந்திப்பர்

ஏன் டுபாக்கூர் பட்டியலை வாட்ஸ்அப்பில் போட்டு ஊரை ஏமாத்துற?

கலைஞர் ஜெ மீது வழக்குதானே போட்டார்

பட்டியல் தீர்ப்பில் வந்ததா இல்லையா?

#திமுககேள்விக்குஎன்னபதில்No1

By Antony Parimalam

Friday, 28 February 2020

தமிழ்நாட்டை கடன்கார நாடாக மாற்றியது திமுகவா...அதிமுகவா..அதிர்ச்சி அளிக்கும் உண்மை நிலை

தமிழ்நாட்டை கடன்கார நாடாக மாற்றியது திமுகவா...அதிமுகவா..அதிர்ச்சி அளிக்கும் உண்மை நிலை
2020-21 க்கு தமிழக அரசின் சொந்த வரி வருமானம்  ₹1,33,530.30 கோடி என கணிக்கப்படுகிறது.  இதில் 2020-21 ஆம் ஆண்டிற்கு  37,120.33 கோடி வட்டியாக மட்டும் தமிழகம் செலுத்த வேண்டியுள்ளது.
தமிழக அரசின் வட்டி (கோடிகளில்)
2017-18. ...26011.5 (Gross)
2018-19....28703.9 (RE)
2019-20.....32461
மேலும் நம்முடைய வரி வருவாயில் பெரும்பகுதி டாஸ்மாக் மூலம் வருவதை கணக்கில் கொள்க.
இப்போது தமிழக அரசிற்கு இவ்வளவு கடன் எப்படி வந்தது என்பதை பார்ப்போம்
1967 வரை காங்கிரஸ் ஆட்சியில் 453.21 கோடி Public debt இருந்தது
திமுக ஆட்சியில் வாங்கப்பட்ட கடன்
முழு விபரம்( கோடிகளில்)
1967-76...368.79 (822-453.21)Public Debt only
1989-91...1606 (5501-3895)Public debt only
1996-2001...19407 (34541-15134) Total liability
2006-2011 ....50622 (114470-63848 )
Total liability
ஆக மொத்தம் திமுகவின் 21 வருட ஆட்சியில் வாங்கப்பட்ட கடன் 72003.79 கோடிகள் மட்டுமே.
மேலும் MGR ன் ஆட்சியில்1977-1987 வரை 2535 கோடிகள் (3445-910)
ஜெயலலிதா 1991-96 ஆட்சியில் 8090(15134-7044) கோடிகள் கடனும் 2001-2006 ஆட்சியில் 29307(68848-34541)கோடிகள் கடனும் வாங்கப்பட்டுள்ளது.
2011 முதல் 2021 வரை மட்டும் தமிழக அரசு 342190 கோடிகள் கடன் வாங்கவிருக்கிறது
2011 ல் தமிழக கடன் 114470 கோடிகள் 2021 ல்  456660 கோடிகளாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
அதாவது அதிமுக ஆட்சியில் மட்டும்
ஒட்டுமொத்தமாக கீழ்கண்டவாறு கடன்கள் வாங்கப்பட்டுள்ளது
1977-88.  ...2535 கோடிகள்
1991-96.....8090.      "
2001-06....29307.      "
இத்துடன் உரிய புள்ளிவிபரங்கள் அட்டவணை மற்றும் இணைப்புகள்
உள்ளது





Monday, 13 January 2020

சென்னை மாநகரில் திமுக கட்டிய பாலங்கள்.. 

சென்னை மாநகரில் திமுக கட்டிய பாலங்கள்..
முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் சமர்பித்த பட்டியல்*
நெடுஞ்சாலைத் துறையே தமிழகத்தின் சமூக, பொருளாதார தொழில் வளர்ச்சிகளுக்குத் தேவையான அடித்தளங்களை உருவாக்கிடும் முயற்சிகளில் சாலை வசதிகளை மேம்படுத்துவதும் முக்கியமான ஒன்றாகுமென கருதியதன் விளைவாக 01-08-1996இல் தனித்துறையாகவும், 26-03-1998இல் அதற்கான தனி அமைச்சகமும் அன்றைய முதல்வர் தலைவர் கருணாநிதியால் உருவாக்கப்பட்டதுதான்.
பின்னர் அத்துறையின் வாயிலாக, தலைநகர் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உருவாக்கப்பட்ட மேம்பாலங்கள், தரைப்பாலங்கள், மேம்படுத்தப்பட்ட சாலை வசதிகளை எடுத்துரைத்தால் ஏடுகள் போதாது.
பொதுப்பணித்துறை*
1996இல், ஏறத்தாழ 23 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மாநகராட்சியைத் தி.மு.க கைப்பற்றும் வரை மேம்பாலங்கள், தரைப்பாலங்கள், சுரங்கப் பாதைகள் போன்றவற்றை கட்டமைக்கும் பணி மத்திய அரசின் சாலைப் போக்குவரத்துத் துறை, தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித்துறை இவற்றின் வாயிலாகவே நிறைவேற்றப்பட்டு வந்தது.
மேயருக்கே அதிகாரம்*
இந்த நிலையினை மாற்றி, மக்களே நேரடியாக மேயரைத் தேர்ந்தெடுத்த 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு, சென்னை மாநகரில் மாநகராட்சியின் வாயிலாகவே முதன் முறையாக பத்து மேம்பாலங்கள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டு,
பீட்டர்ஸ் சாலை, பாந்தியன் சாலை, சர்தார் பட்டேல் சாலை உள்ளிட்ட ஒன்பது சாலை சந்திப்புகளில் புதியதாக மேம்பாலங்கள் கட்டப்பட்டது.
தொழிநுட்பம் சார்ந்த காரணங்களால் பெரம்பூரில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாலப் பணி மாத்திரமே, தடைப்பட நேர்ந்தது.
மீதி பணம் திருப்பி கொடுத்தோம்
மேற்கண்ட பாலங்கள் கட்டுவதற்கான மதிப்பீட்டுத் தொகை 94.50 கோடி ரூபாயில் 60.70 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டு, 33.72 கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் வீணாக்கப்படாமல் மீண்டும் மாநகராட்சியில் சேர்க்கப்பட்டதும், அத்தகையப் பாலங்களில் ஒன்றான சர்தார் பட்டேல் சாலையில் அமைக்கப்பட்ட பாலத்தின் சிறந்த வடிவமைப்பைப் பாராட்டி மும்பையைச் சார்ந்த ‘Indian Institute of Bridge Engineers' எனும் நிறுவனம் ‘Best of Bridge' எனும் சிறந்த பாலத்திற்கான விருது வழங்கியது.
பெரம்பூர் மேம்பாலம் திறப்பு*
தொடர்ந்து 2006இல், மீண்டும் சென்னை மாநகராட்சியைத் திமுக கைப்பற்றியப் பிறகு தடைப்பட்ட பெரம்பூர் மேம்பாலத்தின் பணி மீண்டும் தொடங்கப்பட்டு 28-3-2010இல் அன்றைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.
அத்தோடு மாத்திரமல்லாமல் 30-3-2008இல், 9 கோடியே 72 லட்சம் செலவில், வடக்கு உஸ்மான் சாலை - மகாலிங்கபுரம் சாலை சந்திப்பிலும்;
14-8-2008இல் 19 கோடியே 80 லட்சம் செலவில் துரைசாமி சாலை - உஸ்மான் சாலை சந்திப்பிலும்;
29-12-2008இல், 16 கோடியே 50 லட்சம் செலவில் கோபதி நாராயணா சாலை - திருமலைச் சாலை சந்திப்பிலும்;
11-12-2009இல், 19 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் செனடாப் சாலை - டர்ன்புல்ஸ் சாலையில் ‘திரு. ஜி.கே. மூப்பனார் பெயரிலும்';
11-12-2009இல், ரூபாய் 6 கோடியே 3 லட்சம் செலவில் அடையாறு ஆற்றின் குறுக்கே சைதை மார்க்கெட் -கிண்டி தொழிற்பேட்டையை இணைக்கும் வகையில் ஆலந்தூர் சாலையில் ‘மிசா ஆபிரகாம்' பெயரிலும்
மேம்பாலங்கள் கட்டிமுடிக்கப்பட்டு அன்றைய உள்ளாட்சித்துறை மற்றும் துணை முதல்வராக இருந்த வணக்கத்திற்குரிய தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் தலைவர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.
ஆற்றுப்பாலங்கள்*
மேலும் 12 கோடியே 20 லட்சம் செலவில் கத்திவாக்கம் நெடுஞ்சாலை காக்ரேன் பேசின் சாலை,
இரயில்வே இருப்புப் பாதையினைக் கடக்கும் வகையில் மேம்பாலமும்,
3 கோடியே 52 இலட்சம் செலவில் கிருஷ்ணமூர்த்தி நகர் - மகாகவி பாரதி நகர் இடையே செல்லும் கேப்டன் காட்டன் கால்வாயின் குறுக்கே ஒரு பாலமும்,
2 கோடியே 9 லட்சம் செலவில் ஓட்டேரி நல்லா கால்வாயின் குறுக்கே, எம்.எஸ்.கே. நகர் மற்றும் நரசிம்மா நகரை இணைக்கும் பாலமும்,
3 கோடியே 38 லட்சம் செலவில் கூவம் ஆற்றின் குறுக்கே, மேத்தா நகர் ஆபிசர்ஸ் காலனி முதல் தெருவையும் - வெங்கடாசலபதி தெருவையும் இணைக்கும் பாலமும்,
2 கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில் ஓட்டேரி நல்லா ஆற்றின் குறுக்கே இணைப்புப் பாலமும்,
3 கோடியே 12 இலட்சம் செலவில் அடையார் இந்திராநகர் பகுதியில் பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே இணைப்புப் பாலமும்,
1 கோடியே 43 இலட்சம் ரூபாய் செலவில் விருகம்பாக்கம் கால்வாயின் குறுக்கே வளைவுப் பாலமும் அமைக்கப்பட்டது.
மத்திய கைலாஷ் பாலம்*
மேலும் 10 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில், மணியக்காரச் சத்திரத் தெருவில் ஒரு சுரங்கப்பாதையும்,
4 கோடியே 33 லட்சம் ரூபாய் செலவில், சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் ஒரு சுரங்கப்பாதையும்,
13 கோடியே 39 லட்சம் செலவில், வில்லிவாக்கம் ரயில் பாதையைக் கடப்பதற்கான ஒரு சுரங்கப்பாதையும் கட்டப்பட்டது.
1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் வாலாஜா சாலை பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே அமைந்த பாலமும், 2 கோடியே 13 லட்சம் ரூபாய் செலவில் மத்திய கைலாஷ் அருகில் இருந்த பாலமும் அகலப்படுத்தப்பட்டது.
போராடி திறந்தோம்
மேலும் 15 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் ரங்கராஜபுரம் ரயில் பாதையின் குறுக்கே கட்டத் தொடங்கிய மேம்பாலம் 80 சதவிகிதப் பணிகள் நிறைவடைந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அப்பாலம் தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ளது.
சென்னை மாநகராட்சியில் தி.மு. கழக நிர்வாகத்தின்போது 23 கோடி ரூபாய் செலவில் தங்கச்சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டு பணி நிறைவடையும் தருவாயில் இருந்தது.
அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றப் பிறகும், அப்பாலம் திறக்கப்படாததால் தி.மு. கழகத்தின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு, அதன் விளைவாக அப்பாலம் திறந்து வைக்கப்பட்டது.
கத்திப்பாரா மேம்பாலம்*
மத்திய அரசில் தி.மு. கழகம் அங்கம் வகித்ததன் விளைவாக, தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் அம்பத்தூர் அருகே அமைந்த பாடி மேம்பாலமும்,
கோயம்பேட்டில் அமைந்த மேம்பாலமும்,
மீனம்பாக்கத்தில் அமைந்த மேம்பாலமும்,
பல்வேறு காரணங்களுக்காகச் சென்னைக்கு வருகைத் தரும் வெளிநாட்டவரும் வியந்து பார்க்கும் வகையில் தெற்காசியாவிலேயே மிகப் பெரிய அளவில் அமைந்த கத்திப்பாரா மேம்பாலமும் தி.மு.கழகத்தின் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டது.
பல பாலங்கள்
தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் அண்ணாநகரில் ஒரு மேம்பாலமும்
வடபழனியில் ஒரு மேம்பாலமும்,
மேற்கு அண்ணாநகர் திருமங்கலம் பகுதியில் ஒரு மேம்பாலமும்,
வடச்சென்னை மூலக்கடை அருகில் ஒரு மேம்பாலமும்,
வியாசர்பாடி கொல்கத்தா நெடுஞ்சாலையில் ஒரு மேம்பாலமும் கட்டப்பட்டது.
போரூர் அருகில் கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட மேம்பாலம் கட்டும் பணி தற்போது முடிவுறும் தறுவாயில் உள்ளது.
இவற்றில் பல மேம்பாலங்கள் அன்றைய உள்ளாட்சித்துறை மற்றும் துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டதை நாட்டு மக்கள் நன்கு அறிவர்.
ஜெயலலிதாவே ஒப்புக்கொண்டார்
இது தொடர்பாக, சட்டசபையில் நடைபெற்ற ஒரு விவாதத்தில், அன்றைய தமிழக முதல்வர் மறைந்த ஜெயலலிதா, ஒரே ஒரு எடுத்துக்காட்டாக, கொருக்குப்பேட்டை காக்ரேன் பேசின் சாலை மேம்பாலம் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது என்று குறிப்பிட்டார்.
அதுவும் தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது என்பதை எடுத்துக்கூறி மறுப்பு தெரிவிக்கப்பட்டது இன்றளவும் அவைக் குறிப்பில் உள்ளது.
ஆதாரம்

Saturday, 28 December 2019

தொழில் துறையில் பின் தங்கிய தமிழகம்*

தொழில் துறையில் பின் தங்கிய தமிழகம்*
2011 திமுக ஆட்சியின் முடிவில்
மத்திய அரசின் புள்ளிவிவர நிறுவனம் செய்த ஆய்வில், மொத்த முதலீடு, தொழில் உற்பத்தி, தொழிற்சாலைகள் வரிசையில், தமிழகம் மூன்றாம் இடம் வகுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
"வால்ஸ் ஸ்டீரிட் ஜேனல்' என்ற வெளிநாட்டு பத்திரிகையும், ஆக்ஸ்போடு அனாலிட்டிகா என்ற பன்னாட்டு தனியார் ஆலோசனை நிறுவனமும், அன்னிய முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் முதன்மையாக உள்ளது என குறிப்பிட்டுள்ளன. 
ஆனால் இன்றைய அதிமுக ஆட்சியில்
வணிகத்துறையில் பதினான்காவது இடம் பெற்றிருக்கிறது தமிழ்நாடு.
வியாபாரம் செய்வதற்கு எளிய திட்டங்கள் வகுப்பதும், தொழிற்சாலை வளர்ச்சி விகிதங்களும், சிறு தொழிற்கூடங்களையும் கணக்கில் கொள்ளும் இந்தத் துறையில் தமிழகம் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இதில், முதல் இடத்தில் ஜார்க்கண்டும், இரண்டு மூன்றாம் இடங்களைத் தென்னிந்திய மாநிலங்களான ஆந்திராவும் தெலங்கானாவும் பிடித்துள்ளன.
முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி நான்கு வருடம் ஆகிறது. இரண்டாம் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 5.85 லட்சம் கோடி ரூபாய் போடப்பட்ட 402 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், இதுவரை எந்த முதலீடும் வராத நிலையில் இந்தத் துறையில் பெரிய அடி வாங்கியுள்ளது தமிழகம்.(https://www.vikatan.com/government-and-politics/policies/good-governance-index-for-states-released-by-central-government)
2017-ஆம் ஆண்டிற்கான தொழில் மற்றும் வணிகம் செய்வதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலை நேற்று வெளியிட்டது.
இந்தப் பட்டியலில் வழக்கம் போலவே ஆந்திரப் பிரதேசம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.
ஆந்திரத்திலிருந்து பிரிந்த தெலுங்கானா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
ஹரியானா, சத்தீஸ்கர், குஜராத் ஆகிய மாநிலங்கள் முறையே 3 முதல் 5 வரையிலான இடங்களைப் பிடித்துள்ளன.
கர்நாடகம் எட்டாவது இடத்தையும், இராஜஸ்தான் 9-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
 தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த மாநிலமான தமிழகத்தால் முதல் 10 இடங்களுக்குள் வர முடியவில்லை. 
மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் போன்ற தொழில்துறையில் பின்தங்கிய மாநிலங்களுக்கு பின்னால் 15-ஆவது இடத்தை தமிழகம் பிடித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழகம் 18-ஆவது இடத்தில் இருந்தது.
 இப்போது சில  இடங்கள் முன்னேறியுள்ளது என்றாலும் கூட, இது போதுமானதல்ல.
இதற்கு முன் 2015-ஆம் ஆண்டுக்கான பட்டியலில் 12-ஆவது இடத்திலிருந்தது தமிழ்நாடு.
2016-ஆம் ஆண்டு  ஏற்பட்ட சரிவிலிருந்து இன்று வரை மீண்டு வர முடியவில்லை.



Tuesday, 3 December 2019

திமுக சாதியை ஒழிக்கவில்லையா?

திமுக சாதியை ஒழிக்கவில்லையா?
திமுக சாதியை ஒழிக்கவில்லை ஏன்??
ஒரு பாஜக பிரமுகரின் கேள்விக்கான பதில் (1)


தென்னிந்திய மக்களிடம் சாதிகள் உருவானதே ஆரியர்களின் படையெடுப்புக்கு பின்னர்தான் என்பதை அறிவீர்.
சாதியை உருவாக்கியது ஆரியர்களான நீங்கள்தானே...உங்களின் வேதங்கள்தானே...
அப்படியெனில் சாதி அமைப்பின் வேர்கள் ஆரிய வேதங்களும் அதை உருவாக்கிய ஆரியர்களும்தானே.
உங்களது வேதங்களும் அவை சொல்லும் சாஸ்திர சம்பிரதாயங்களும் உயிரோடு இருக்கும் பொழுது சாதி எப்படி ஒழியும்?
நீங்கள் அவ்வளவு எளிதாக சாதியை  ஒழிக்க அனுமதித்து விடுவீர்களா?
சாதியை வைத்து குளிர்காயும் கூட்டமே நீங்கள்தானே
நீங்கள் நான்கு வர்ணங்களாக திராவிடர்களை கூறுபோட்டதே ...அவர்களே ...அவர்களுக்குள் யார் உயர்ந்தவர் என்று அடித்துக் கொண்டு அழிய வேண்டும் என்பதற்காகத்தானே...
அதுதானே இப்போதைய சாதிசண்டைகளுக்கு காரணம்.
ஆரியர்கள் எந்தக் காலத்திலும் நேரடியாக யாருடனும் மோதுவதில்லை என்பது ஊருக்கே தெரியும்.. ராஜகுரு பணி உங்களுடையதுதானே. தூண்டி விட்டு சண்டை மூட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதுதானே தங்களது பரம்பரை வழக்கம்.
திடீரென சாதியை திமுக ஒழிக்கவில்லை என்று நீலிக்கண்ணீர் வடிப்பது ஏன்?
1947 க்கு பின் திமுக ஆட்சி என்பது வெறும் 21 வருடங்கள்தான். அதுவும் தொடர்ச்சியாக கிடையாது. 1500 ஆண்டுகளாக நீங்கள் வளர்த்து வைத்திருக்கும் சாதி வெறி வெறும் 21 வருட ஆட்சியில் மறைந்து விடுமா?
இல்லை ..ஆரியர்களாகிய நீங்கள் சாதி ஒழிய விட்டுவிடுவீர்களா?
சாதிய ஒழிப்பு என்பது சாதிச்சான்றிதழ் ஒழிப்பில் இல்லை என்பது உங்களுக்கு தெரியும். இருந்தும் சாதி சான்றிதழை ஒழித்தால் சாதி ஒழிந்து விடும் என்ற பொய்யை பரப்புகிறீர்கள்.
இது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.
இன்றும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி அறிவும் பொருளாதார நிலையும் படுபாதாளத்தில் உள்ளது. அவர்களுக்கு கல்வியை தந்து வேலை வாய்ப்பை தந்து அதிகாரத்தை பகிர்ந்து தந்து பொருளாதாரத்தில் மேம்பட செய்ய கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை தர சாதிச் சான்றிதழில் அடிப்படையாக தேவைப்படுறது.
ஆனால் அவர்கள் கல்வியில் முன்னேறினால் பொருளாதாரத்தில் மேம்பட்டால் ஆரியர்களின் இன்றைய ஆதிக்கம் மண்ணோடு மண்ணாகிடும் என்பதால்தானே நீங்கள் விபரம் அறியா இடைச்சாதியினரை தூண்டிவிட்டு சாதிச் சான்றிதழ் ஒழிப்பை பற்றி பேசுகிறீர்கள்.
(1)
சாதி ஒழிப்பில் அக்கறையுள்ள
ஆரியர்களாகிய நீங்கள் உங்களுக்கு பூணூல் அணுவித்துக் கொண்டு உங்களை மற்றவர்களிடமிருந்து பிரித்து தனிமை படுத்தி காண்பித்துக் கொள்வது ஏன்?
(2)
சாதி ஒழிப்பில் ஆரியர்களாகிய உங்களுக்கு உண்மையில் அக்கறை இருந்தால் முதலில் அதை கோயில் கருவறையிலிருந்து ஆரம்பிக்கலாமே.
அனைத்து சாதியினரையும் கோயில் கருவறைக்குள் அனுமதிக்கலாமே? அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கலாமே?
நீங்களே முன்னுதாரமாக இருந்து அதை செய்து காட்டுங்கள் முதலில்.
(3)
தமிழ் மேலும் தமிழர்கள் மேலும் அக்கறையுள்ளதாக காண்பித்துக் கொள்ளும் ஆரியர்களே ..அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சணையும் தமிழ் பாடல்களுடன் தமிழ் வழிபாடுகளை ஆரம்பிக்கலாமே
(4)
சாதியை ஒழிக்க பிராமணர்களே கலப்பு திருமணங்களை செய்து மற்றவர்களுக்கு வழிகாட்டலாமே
இதையெல்லாம் நீங்கள் செய்தால் ஆரியர்கள் சாதிய ஒழிப்பில் அக்கறையுள்ளவர்கள் என்பதை ஏற்கிறேன்.
வெறும் 21 வருடம் ஆட்சி செய்த திமுகவை கைகாட்டும் உமது கையின் மற்ற நான்கு விரல்கள் ஆரியர்களாகிய உங்களைத்தானே கைக்காட்டுகிறது.
1967-1975 திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பெரும் சமுதாய சீர்திருத்தம் கண்டுதானே ஆரியர்களாகிய நீங்கள் உங்களது பினாமியான அதிமுகவை உருவாக்கி அதை இன்றுவரை போன்றி பாதுகாத்து வருறீர்கள்.
அதிமுக வழியாக இன்றும் நீங்கள்தான் ஆட்சி நடத்துகிறீர்கள்.
இந்தியா முழுவதும் ஆட்சி செய்வது அரசியல்வாதிகள் அல்ல. உயர் அதிகாரிகளாக இருக்கும் ஆரியர்கள்தான்.
பிரதமரும் ஜனாதிபதியும் ஆட்சி செய்வதாக மக்களை நீங்கள் ஏமாற்றலாம். ஆனால் ஆட்சியை நடத்துவது அதிகாரிகள் பொறுப்பில் இருக்கும் உயர்சாதினர்தான்.
உங்களது ஆலோசனையின்றி அனுமயின்றி அரசியல்வாதிகள் நினைத்தாலும் செயல்பட முடியாது
இந்தியாவின் அனைத்து துறையிலும் ஆதிக்கம் செலுத்தும் ஆரியர்களே சாதிகளை ஒழிக்க நீங்கள் இதுவரை என்ன செய்துள்ளீர்கள்?
சாதிய ஒழிப்பில் உங்களது பங்களிப்புதான் என்ன?

பதில் (2)
Madhav 🇮🇳@mahesh10816 அவர்களே
திமுக தெலுங்கர்களை வந்தேறி என்று அழைத்ததா !!!!!
இதுதான் மிகப்பெரிய காமெடி. பாஜகவின் வளர்ப்பு பிள்ளையான நாம் தமிழர் கட்சிதான் தமிழகத்தில் வாழும் மற்ற மொழி பேசுபவர்களை வந்தேறி என பிரிவினை பேசி வருகிறது.
அவர்களை தூண்டி விட்டு திராவிடகட்சியான திமுகவை இழிவு செய்வது பாஜகதான்.
திமுக என்பது மதங்களுக்கும் சாதியினருக்கும் அப்பாற்பட்ட கட்சி.
பிராமணர்களாகிய நீங்கள் திமுகவை எதிர்ப்பது என்பதே திமுகவின் சமநீதி சாதி ஒழிப்பு கொள்கைகளுக்காகத்தானே.
நீங்கள் 3% எதிர்ப்பதாலேயே திமுக மற்ற 97% க்கான கட்சி என்பது தெளிவு.
பதில்(3)
Madhav 🇮🇳@mahesh10816 அவர்களே
மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் திமுகவா தாலி அறுப்பு போராட்டம் நடத்தியது.
தி.க வினர் திமுகவை ஆதரிக்கிறார்கள் என்பதற்காகவே அவர்களது அனைத்து செயல்களுக்கும் திமுக பொறுப்பேற்க முடியுமா?
எந்த நீதிமன்றமாவது தந்தை செய்த தவறுக்கு மகனுக்கு தண்டனை வழங்கியுள்ளதா?
தி.க வினரின் போராட்டம் என்பது பெண்ணுரிமை சம்பந்தப்பட்டது. பெண்களை அடிமை என்னும் வேதங்களை போற்றுபவர்கள் நீங்கள். அதை எதிர்ப்பதில் ஆச்சரியம் இல்லை 
பதில் (4)
Madhav 🇮🇳@mahesh10816 அவர்களே
திமுகவை விட இந்து மதத்தின் மேல் அக்கறையுள்ள கட்சியை காட்டத் தயாரா?
திமுக பிராமணர்களை எதிர்க்கவில்லை
பிராமணீயத்தையே எதிர்க்கிறது.
எனவே உண்மையை மறைத்து அப்பாவிகளை ஏமாற்ற வேண்டாம்
மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் இந்துக்களுக்கு நன்மை செய்து வருவது திமுகவா?
பாஜகாவா?
️திமுக எல்லா இந்துக்களையும் கோவிலுக்குள் அழைத்துச் சென்ற திராவிட இயக்கத்துக் கட்சி
கோவில்கள் கயவர்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாது என்பதற்காக போராடும் கட்சி திமுக
திமுக இந்துக்கள் அனைவரும்  படிக்க இடஒதுக்கீடு வாங்கித்தந்து அனைத்து இந்துக்களும் படித்து முன்னேற வழிவகுத்த கட்சி.
️திமுக இந்துக்கள் மட்டுமின்றி முஸ்லிம்களும் கிறுஸ்தவர்களும் ஒன்று பட்டு  வாழ வேண்டும் என நினைக்கும் கட்சி.
️திமுக இந்துப் பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்தக் கட்சி.
திமுக இந்துக்களின் எதிரியென்றால் கீழ்கண்ட கோவில் பணிகளே நடந்திருக்காதே.
2006-2011 ல் திமுக ஆட்சியில் நடந்த திருப்பணிகள் பட்டியல் இதோ..
இந்துக்களுக்கும் இந்து கோவில்களுக்கும் திமுக செய்த நற்காரியங்கள் எண்ணில் அடங்காது.
திமுக ஐந்து ஆண்டு( 2006-11) கால ஆட்சியில் 550 கோடி ரூபாய் செலவில் 5 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு செய்தும் திருப்பணி வேலைகளை தொடங்கியும் வைத்துள்ளது. கலைஞரின் ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு 550 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் 147 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் திருடப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள 11 சிலைகள் திருட்டு கும்பலிடமிருந்து திமுக ஆட்சியில் 2010 ல் மீட்கப்பட்டன
1) சீரங்கம் கோயில் கும்பாபிஷேகம் நடத்தியது திமுகதான்
Temple duties started on 06/05/2000 and Kumbabishekam done on 03/15/2001.
2)Kottaimedu கோயில்
Although ADMK started the temple duties on 05/06/2003, DMK conducted the Kumbabishekam 07/03/2007. Chariot on 01/20/2011.
3)Thirunaraiyur கோயில்
Kumbabishekam took place in 2008, after 23 years. Temple duties were slow due to shortage of funds
4)Elumiyan Kottur
DMK started the temple duties in 2008. The cost of Kumbabishekam was INR 3.3 million.
5)சிதம்பரம் நடராஜர் கோயில்
There are 4 entrances. Kumbabishekams for them were conducted successively, 2006-08.
6)02/18/2010: Karuvoorar Temple Kumbabishekam
https://t.co/iy8f1kd9yV
Ayyanar Temple Pudukkotai:
https://t.co/X7M1gaHUDT
Kumbabishekam - 2010.
7)Samayapuram Mariamman Temple:
https://t.co/HNhajO6vm8
Temple duties started on 07/05/2010, but DMK was voted out in 2011.
8)Renovation of Tiruvarur's temple:
https://t.co/jjTQtRxkvX
Vadamadurai Mariamman Temple duties started 04/2010:
https://t.co/ibpsLfBFgT
...
9)Thiruvattar Temple duties started in 2009:
https://t.co/AbE9L2Kdkk
Thiruvannamalai Kumbabishekam, 2009:
https://t.co/9zkBoaAKz7
...
10)Thamarankottai Temple duties 01/28/2007:
https://t.co/bKEk4o92tK
Sankarankoil:
https://t.co/V3wvAmy2BA
Nallur: https://t.co/OY5FinW9Zr
...
This is just a very small list of Kumbabishekams, Temple duties and chariot runs conducted by the DMK govt from 2006-11, and also 1996-2001.
The DMK govt conducted much more. Nobody can ever forget this incident: Devaram sang after a very long time in the first DMK govt (1967-76). https://t.co/0pUyFk5Ytp
During 2006-11, 1,376 renovations/duties were conducted in 842 Temples.
1996-2001: An equal number of duties were conducted in Temples.
Mylapore 06/06/1996, Sriperumbudur 07/0501996, Thiruneermalai 03/23/1997, Thirupapuliyur 03/26/1997, Cuddalore 03/27/1997, Tiruvenkadu
Periyapalayam 06/07/1998, Alwaythirunagar 07/01/1998, Chennakesava Perumal 01/29/1999, Vallakottai & Tiruverkadu 03/26/1999, Kumbakonam Sarangapani 06/30/199900, b. Adi Kumbeswarar 12/12/1999
Ariyakudi Thiruvengadam 09/16/1999, Alwar Thirunagari Adinadhalvar 02/10/2000.
Chennai Kurangaleeswarar 02/11/2000, Madurai Kalamega Perumal 03/16/2000, Chennai Agatheeswarar 04/16/2000, Vedaranyam 07/14/2000.
Thottiyam Thirunarayanapuram 07/07/2000, Thiruvannamalai & Thiruvanaikaval 07/12/2000, Palani 07/05/2000, Thiruparankundram 06/11/2000.
Bhavani Shiva, Kangeyam Murugan & Thanthonri Malai Perumal Temples, all on 09/10/2000.
DMK used funds for developmental purposes. For instance, Chennai's Tidel Park. But also achieved the above!
https://t.co/R0dfD3o0s3
Thirumutam & Sivayam were conducted on 09/15/2000.
Kumbakonam Swamimalai Temple: 11/10/2000.
and many more smaller Temples.
some mischievous elements are blaming DMK for missing idols. I ask them to see this page:
https://t.co/WzQBGgkbuN
A thousand year old Narasimha statue was retrieved by cops during the DMK years 2006-11. Also see this:
https://t.co/Yh8P7iPFjV
Smuggled Lanka statue recovered.
Moreover it was JJ who specialized in stealing idols!
https://t.co/jsEGgVpIg8
Stolen 1992, retrieved 2009.
I also ask them to see this page:
https://t.co/2to9JHsxmZ
Jayalalithaa & Sasikala stole Emerald & Onyx Lingams in 1992 & 1993 respectively.
If you still doubt me, see this:
https://t.co/IwGwBC1ZPS
Temples are falling apart, after 6 years of negligence by the ADMK govt.
DMK setup 12 Thirumurai classes to revive Tamil Saivite culture. DMK also setup 4,000 Divya Prabandham classes for Tamil Vaishnavism.
DMK rescued Temple properties from illegal encroachments. They also insured the families of priests and temple workers.
Valluvar Kottam:
https://t.co/HCSonYRQpE
1,330 Thirukkural verses inscribed in it. Built by DMK, early 1970s.
Highlight of Tamil culture. https://t.co/fV3F9nM9KV
By.  A.PARIMALAM

Thursday, 31 October 2019

திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்ட மற்றும் திறக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள்

திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்ட மற்றும் திறக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள்

1997 திருச்சி மருத்துவக்கல்லூரி
2000 தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி
2001வேலூர் மருத்துவக்கல்லூரி

2010திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆரம்பம்

2007 தர்மபுரி மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டப்பட்டது

2011 விழுப்புரம் மருத்துவக்கல்லூரி

2009 அரசு ஆயூர்வேத மருத்துவக்கல்லுரி கோட்டார்
நாகர் கோயில்

26.2.2011 ல் 400 கோடி ஒதுக்கி
அடிக்கல் நாட்டப்பட்ட மருத்துவ கல்லூரிகள்

சிவகங்கை
விருதுநகர்
புதுக்கோட்டை
திருவண்ணாமலை

மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என்ற திட்டம் கொண்டு வந்ததே திமுகதான்

நாகர்கோயில் மருத்துவமனை அடிக்கல் 2001ல் நாட்டியது திமுக

 கடலூர், திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி 2011ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது
1988ல் அடிக்கல் நாட்டப்பட்ட சேலம் மருத்துவகல்லூரிக்கு நிதி ஒதுக்கி செயல்பாட்டிற்கு கொண்டு வந்து  மருத்துவமனை Super specialty ஆக மாற்றியதும் திமுக

2010 பெரம்பலூர் மருத்துவ கல்லூரி இடம் கையகப்படுத்தி நிதி ஒதுக்கீடு செய்து  அடிக்கல் நாட்டப்பட்டதும்  திமுக ஆட்சியில்தான்


திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட மருத்துவ கல்லூரியை தொடங்க அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை தமிழக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு  சொன்னதற்கான ஆதாரம்