Monday 30 October 2017

கலைஞர் எப்போது ஊழல்வாதியானார்?

"என்னய்யா இந்த அதிமுக இப்படி ஊழல் பண்ணுதேன்னு கேட்டால்"

"ஆமா கலைஞர் மட்டும் யோக்கியமா" அப்படீன்னு பதில் வரும்.

இதற்கு என்ன அர்த்தம்?
அதிமுக என்ன ஊழல் செஞ்சாலும் யாரும் கேட்க கூடாதுன்னு அர்த்தமா?

உண்மையில் அப்படித்தான் பொது மக்களுக்கே ஒரு எண்ணம் வந்துவிட்டது.

"அது சரி ..கலைஞர் எப்ப ஊழல்வாதியானார்" எனக் கேட்டா
"அதான் சர்க்காரியா கமிசன் போட்டாங்களே" என பதில் வரும்.

"சர்க்காரியா கமிசன் அறிக்கையில் சொல்லப்பட்ட சில குற்றச்சாட்டுகள் மீது விசாரணை செய்து 10 வருசம் கழித்து எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் குப்பையில் போட்டதும் தெரியுமா"
எனக் கேட்டால் அதற்கு " அதான் சயின்டிபிக் ஊழல்னு சர்க்காரியாவே சொல்லிட்டாரே" என பதில் வரும்.

" சயின்டிபிக் என்றால் சோதனையில் நிரூபிக்கக் கூடியது என்றுதானே அர்த்தம். கலைஞரின் ஊழல்களை நிரூபிக்க வேண்டியதுதானே" எனக் கேட்டால் பதிலே வராது.

" சரி Ok.. 1989-91 ,1996-2001 இல் கலைஞர் மீது எந்தக் குற்றச்சாட்டும் யாரும் சொல்லவில்லையே ஏன் மீண்டும் கலைஞருக்கு வாய்ப்பு வழங்காமல் 1991-96 இல் ஊழலுக்கு ஆளான அதிமுகவையை தேர்ந்தெடுத்தீர்கள்.?

உங்களுக்கு ஊழல் ஒரு பொருட்டே இல்லை என்றுதானே அர்த்தம்.

"பிறகு ஏன் மீண்டும் மீண்டும் 45 வருடங்களுக்கு முன்பு நடந்ததாக சொல்லப்பட்டு நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டை சொல்லி சொல்லி இன்றும் கலைஞரை ஊழல்வாதி என்கிறீர்கள் " எனக் கேட்டால் மீண்டும் சர்க்காரியா என ஆரம்பித்து கீறல் விழுந்த ரிகார்டு மாதிரி பேச ஆரம்பித்து விடுவார்கள்.

2G வழக்கிலும் ராசா மற்றும் கனிமொழி மீதான குற்றச்சாட்டுகளுக்கு CBI முறையான ஆதாரத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவில்லை என்பது ஊரறிந்த விசயம். தீர்ப்பு ராசாவிற்கு எதிராக வந்தாலும் கூட ராசா மேல்முறையீட்டால் நிச்சயம் விடுவிக்கப்படுவார்.

"1969-1972 வரையிலான காலத்தில் நடந்ததாக MGR கொடுத்த ஆதரமற்ற ஊழல் பட்டியலைத்தானே சொல்றீங்க. அதை மட்டுமே சொல்லி1977-1989 1991-96,2001-06, 2011-17 என எல்லா ஆட்சியிலும் தொடர்ந்து அதிமுக ஊழல் பண்ணுவது சரியா" எனக் கேட்டா சரியான பதிலே வராது.

"ஆட்சியில் இருந்தவனுங்களுக்கு ஊழல் மூலம் பணம் வந்திருக்கலாம். ஆனா கட்சி ஆரம்பிச்சி ஒரு முறை கூட ஆட்சிக்கே வராத சிறு கட்சிக்காரன் எல்லாம் வைத்திருக்கும் கோடிக்கனக்கான பணம் எங்கிருந்து வந்தது.? ஆட்சிக்கே வராம கோடிகளில் புரளும் அவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்தால் தமிழகம் என்ன ஆகும்?" எனக் கேட்டால் கெட்டவார்த்தையால் ஆபாசமா திட்டுவானுங்க.

ஊழல் ஊழல் என்று சொல்லிக் கொண்டே தொடர்ந்து அதிமுகவிற்கே பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டளித்த மக்களுக்கு ஊழல் பற்றி பேசவோ மற்றவர்களை கை காட்டவோ யோக்கியதை இல்லை.

முதுகில் முன்னூறு ஊழல்களை சுமந்துக் கொண்டு கலைஞரை ஊழல்வாதி என்கின்றனர் ஊழல்வாதிகள்.

திமுகவினர் மட்டுமின்றி மற்ற அனைத்து கட்சியிருக்கு மேலே சொல்லப்பட்ட உண்மைகள் புரியும்.
ஆனால் புரியாதது போல
ஊரை ஏமாற்ற நடிக்கிறார்கள்.

No comments:

Post a Comment