Tuesday 1 January 2019

கலைஞரால் திருவாரூர் பெற்ற எண்ணற்ற வசதிகள்

கலைஞரால் திருவாரூர் பெற்ற எண்ணற்ற வசதிகளை இந்த பதிவில் விபரத்துள்ளேன்

திருவாரூர் தொகுதிக்கு ஓட்டுக் கேட்க வரும் ஆளும் அதிமுகவிடம்
தஞ்சாவூர் -நாகை சாலை ஏன் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது?
சாலைப் பணியை முடித்து விட்டு வந்து ஓட்டுக் கேளுங்கள் என மக்கள் சொல்ல வேண்டும்

பிரசித்திப் பெற்ற திருவாரூர் தேரை புதுப்பித்து ஓட வைத்தவர் கலைஞரே

(1) அரசு கலைக்கல்லூரி உருவாக்கி தந்தார்.
(2) பஸ்நிலையம் கட்டித்தந்தார்.
(3) ஓடம்போக்கி ஆற்றில் பாலம் கட்டிதந்தார்.
(4) 1989ல் ஆட்சிக்கு வந்தபோது 13 ஆண்டு கிடப்பில் போடப்பட்ட பைபாஸ் சாலை பணியை முழுமையாக்கி தந்தார்.
(5) 4வது முறையாக முதல்வரானபோது தனிமாவட்டமாக ஏற்படுத்தி தந்தவர்.
(6) மாவட்ட ஆட்சியரகம், மாவட்ட தலைமை காவல் கண்காணிப்பு கட்டிடம் கட்டி தந்தார்.
(7) தமிழகத்தில் முதன்முறையாக திருவாரூர் மாவட்டத்தை கணினி மாவட்டமாக்கி தந்த பெருமைக்குரியவர்.
(8) கமலாலய குளத்தை தூர்வாரி சீரமைத்து தந்தார்.
(9) நீண்ட கால கோரிக்கையான ரயில் பாதை அகலபாதை திட்டத்தை கலைஞரின் முயற்சியால் மத்திய அரசிடம் பெற்று நிறைவேற்றி தந்தவர்.
(10) மேலும் அரசு மருத்துவ கல்லூரியை பெற்றுத்தந்தார்.
(11) முக்கிய சிகரமாக மத்திய பல்கலைக்கழகத்தை திருவாரூருக்கு பெற்று தந்தார்.
எப்போதெல்லாம் அதிமுக அரசு வருகிறதோ, முதல்வராக ஜெயலலிதா வரும்போதெல்லாம் புறக்கணிப்பட்ட மாவட்டமாக திருவாரூர் உள்ளது.
கலைஞர் ஆட்சி காலத்தில் திருவாரூருக்கு புதிய பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்து இடமும் தேர்வு செய்யப்பட்டது.
ஆட்சி மாறியபின்னர் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
வேளாண் கல்லூரி கொண்டுவர முயற்சிஎடுத்தவர் கலைஞர். அது ஜெயலலிதா ஆட்சியில் முடக்கப்பட்டது.
திருவாரூரை ஒரு கல்வி மையமாக
மாற்றிய பெருமை கலைஞர்  அவர்களையே சேரும்
1)திருக்குவளையில் அரசுப் பள்ளியை நிறுவ அரசுக்கு பங்குத் தொகை செலுத்தி, அஞ்சுகம் முத்துவேலர் நினைவு தொடக்கப் பள்ளியைத் தொடங்கினார்.
2) தனது மணிமகுடம் நாடகத்தின் வாயிலாகத் திரட்டிய நிதியைப் பங்குத் தொகையாக அரசுக்குச் செலுத்தி, காட்டூரிலும் ஒரு அரசுப் பள்ளியைத் தொடங்க ஏற்பாடு செய்தார்.
அதே ஊரில் மேல்நிலைப் பள்ளி யைத் தொடங்கவும் நடவடிக்கை எடுத்தார்.
3)தான் படித்த வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் தனது சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் வகுப்பறைக் கட்டிடங்களைக் கட்டிக்கொடுத்தார்.
4)2008-ல், தமிழகத்தில் 16 இடங் களில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கிளைகள் நிறுவப்பட்டன. திருக் குவளையிலும் ஒரு கிளையைத் தொடங்க வேண்டும் என்று கலைஞர் விரும்பினார். போதுமான இட வசதி அரசிடம் இல்லாத நிலையில், தருமபுர மடத்துக்குச் சொந்தமான நிலத்தை அறநிலையத் துறை மூலம் அரசுக்கு விலைக்கு வாங்க தனியாக அரசாணையை வெளி யிட்டார்.
5)அப்படித் தொடங்கியதுதான் அண்ணா பல்கலைக்கழகத் திருக் குவளை கிளை.
6) அந்தத் தொகையைத் திருக்குவளை கோயிலுக்கும் பெற்றுத் தந்தார் என்று நினைவுகூர்கிறார் திருக்குவளையைச் சேர்ந்த கோசி. குமார்.
7) இன்றைக்கு, திருக்குவளை கிளை மூலம் ஆண்டுக்கு 420 மாணவர்கள் பொறியியல் பட்டம் பெறுகிறார்கள்.
8) திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருவாரூர் பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமப்புற மாணவர்களே இங்கு அதிகம் பயின்று வருகின்றனர்.
9) திருக்குவளையில் அதிகளவு பொறியியல் பட்டதாரிகள் உருவாகி யிருப்பதன் விளைவாக அருகில் உள்ள தனியார் கல்லூரி ஒன்று, ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்பைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது.
இது ஒன்றே இப்பகுதி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குச் சான்று என்கிறார் திருக்குவளை பொறியியல் கல்லூரி யின் டீன் துரைராஜன்.
10) திருவாரூரில் 2010-ல் அரசு மருத்துவக் கல்லூரியைத் தொடங்கிய கலைஞர், அடித்தட்டு மக்களுக்கு மருத்துவ சிகிச்சை சென்றடையவும், தமிழகத்தில் மருத்துவப் படிப்பு களுக்கான எண்ணிக்கை அதிகரிக்க வும் காரணமாக விளங்கினார். இந்த மருத்துவக் கல்லூரி மூலம் ஆண்டுக்கு 100 பேர் மருத்துவப் படிப்பு பயின்று வருகிறார்கள்.
11) 2009-ல் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு தொடங்கப்பட்ட ஏழு மத்தியப் பல்கலைக்கழகங்களில் ஒன்று திருவாரூர் அருகே நீலக் குடியில் இயங்கிவரும் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம். சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் இயங்கிவரும் இப்பல்கலைக்கழகத்தில் 22 துறை கள் உள்ளன. ஒருங்கிணைந்த 5 ஆண்டு பட்டப் படிப்புகள், ஒருங்கிணைந்த 4 ஆண்டு கல்வியியல் பட்டப் படிப்புகள். 22 துறைகளில் எம்.ஃபில், பிஹெச்டி படிப்புகள், பல்வேறு பல்கலைக் கழகங்களுடனான புரிந்துணர்வின் அடிப்படையில் பட்டயப் படிப்புகள் என்று மாணவர்களின் கல்விக் கனவுகளைச் சாத்தியமாக்கும் பல்கலைக்கழகம் இது.
மத்தியப் பல்கலைக்கழகத் தொடக்க விழாவில் கலந்துகொண்ட மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை யின் அப்போதைய அமைச்சர் கபில் சிபலிடம், மத்தியப் பல்கலைக் கழகத்தில் 50 ரூ இடஒதுக்கீட்டைத் தமிழகத்துக்கு, குறிப்பாக இந்தப் பகுதி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் கலைஞர்.
அந்தக் கோரிக்கை இதுவரை நிறைவேற வில்லை. அது நிறைவேறும் போது கலைஞர் அவர்களின் இன்னொரு கல்விக் கனவும் பூர்த்தியாகும்

2007-08-ம் கல்வி ஆண்டு முதல், பட்டப்படிப்பு மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தை ரத்து செய்தது கலைஞர் அரசு
2010-11ல் அரசுக் கல்லூரிகளில் பயிலும் பட்ட மேற்படிப்புக்கான கட்டணத்தை ரத்து செய்ததும் கலைஞர் அரசே
பட்டதாரி அல்லாத குடும்பங்களைச் சேர்ந்த முதல் தலைமுறை மாணவர்கள் தொழிற்கல்வி படிப்பில் சேர்வதற்குக் கட்டணத்தை ரத்துசெய்ததும் கலைஞர் அரசே
மேலும் 7000 கோடி விவசாய கடன்கள் ரத்து செய்யப்பட்டதால் பலன் பெற்றதும் திருவாரூர் மாவட்டமே
இதைவிட கலைஞர் திருவாரூருக்கு வேறு என்ன செய்ய வேண்டும்?

(பல்வேறு பத்திரிகை தகவல்களின் தொகுப்பு)

No comments:

Post a Comment