Thursday 4 June 2020

சமூகச்சீர்திருத்தமும் கலைஞரும்

சமூகச்சீர்திருத்தமும் கலைஞரும்

தமிழகத்தின் காவிரி பாசனப் பகுதியில் விவசாயத் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியத்தை உறுதிப்படுத்துவதற்கும், அவர்களைச் சுரண்டும் நிலவுரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும், தமிழ்நாடு வேளாண் தொழிலாளர் நியாயக் கூலிச் சட்டம் – 1969 கொண்டுவரப்பட்டது

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

தமிழ்நாடு நிலச் சீர்திருத்த (நில உச்சவரம்பு குறைப்பு) சட்டம் -1970 நிறைவேற்றியது கலைஞர்.

நில உரிமைகளில் இருந்த பாகுபாட்டைக் குறைப்பதற்கான அந்தச் சட்டம் 30 ஏக்கர் என்ற உச்சவரம்பை 15 ஏக்கர் எனக் குறைத்தது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

 1969ல், குத்தகை விவசாயிகளின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கிற சட்டம் கொண்டுவரப்பட்டது.

அது, முதன்முறையாக, வருவாய்த் துறைப் பதிவேடுகளில் குத்தகை விவரங்கள் பதிவு செய்யப்படுவதை உறுதிப்படுத்தியது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

ஏ.என்.சட்டநாதன் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டது.  பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 25 % லிருந்து 31% மாகவும், பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடிகளுக்கான இட ஒதுக்கீட்டை 16 % லிருந்து 18 % மாகவும் அரசு அதிகரித்தது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

ஆர்.ஏ.கோபால்சாமி தலைமையில், காவல் துறை ஆணையம் ஒன்றை அமைத்தார் கலைஞர். அதன் அறிக்கையைத் தொடர்ந்து, காவலர் ஊதிய விகிதங்கள் கணிசமாக உயர்த்தப்பட்டன. சிறப்பாகப் பணிபுரியும் காவல் துறையினரைப் பாராட்டி ஆண்டுதோறும் விருது வழங்குவது தொடங்கியது

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

கலைஞர் பி.வி. ராஜமன்னார் தலைமையில் மூன்று உறுப்பினர் குழு அமைக்கப்பட்டிருப்பதை அறிவித்தார். 1971 மே 27 அன்று ஒப்படைக்கப்பட்ட ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள், மேலும் கூடுதலான கூட்டாட்சி சார்ந்த அரசமைப்பு சாசனத்தை நோக்கிச் செல்வதற்கான சாலை வரைபடத்தை அளிக்கின்றன

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

கலைஞர் ஆட்சியில் தொடர்ச்சியாகப் பள்ளிக்கு வரும் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்குப் பரிசுகள் புத்தாடைகளாக வழங்கப்பட்டன. இதேபோல், 100% மாணவர் வருகையை நிலைநாட்டிய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு வெள்ளிப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

கலைஞர் ஆட்சியில் 1974-75ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் ஆதி திராவிடர் நலப் பள்ளிகளின் மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்திற்கென ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

கலைஞர் ஆட்சியில் 9, 10ஆம் வகுப்புத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு அரசுத் திட்டத்தின் மூலம் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.
 1969 முதல் 1975 வரையிலான காலகட்டத்தில் ஊக்கத் தொகை அடிப்படையிலான திட்டங்கள், கடன் வசதிகள், கல்வி உதவித்தொகைகள் ஆகியவை விரிவுபடுத்தப்பட்டன.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

 1970இல் ஓர் அரசாணை மூலம், பல்கலைக்கழகப் பட்டப்படிப்புக்கு முந்தைய வகுப்பு (பியுசி) வரையில் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடிச் சமூகங்களின் மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

தொழில்சார் படிப்புகளைத் தேர்வு செய்த மாணவர்களுக்கு 1972இல் அரசாணை ஒன்றின் மூலம் வட்டியில்லாக் கடன் வழங்கப்பட்டது. 1970-71 முதல் 1974-75 வரையில் 377 மாணவர்கள் இத்திட்டத்தால் பலனடைந்தனர். அவர்களுக்கு மொத்தம் ரூ.4,46,200 வழங்கப்பட்டது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

பட்டியலின மாணவர்களில் ஐந்து பேர் வழக்குரைஞர் பயிற்சி பெறவும், ஐந்து பேர் கணக்குத் தணிக்கையாளர் பயிற்சி பெறவும் நிதியுதவி வழங்கப்பட்டது.  தமிழ்நாடு அரசு பொதுத் தேர்வாணையத் தேர்வுகளை எழுதுவதற்குப் பயிற்சியளிக்க மையங்கள் 4 லிருந்து  1973-74இல் 30 ஆக அதிகரிக்கப்பட்டது

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

1989ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு இந்து வாரிசுரிமைச் சட்டம், சமமான வாரிசுரிமைகளை உறுதியாக்கியது. , பெண்கள் இயல்பாகவே குடும்பத்துக்குள் பொருளாதாரப் பங்காளிகளானார்கள், முடிவெடுக்கிற இடத்தைப் பெற்றனர். தேசிய அளவில், இத்தகைய சட்டத் திருத்தம் 2005இல்தான் கொண்டுவரப்பட்டது.



மாற்றுத்திறனாளிகளின் நலன்களைப் பாதுகாப்பதிலும் கலைஞரே முன்மாதிரி.

 2007இல் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியச் சட்டம் கொண்டுவரப்பட்டது, 2009ஆம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கென்றே ஒரு தனித் துறை ஏற்படுத்தப்பட்டது

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

மாற்றுப் பாலினத்தவர்களுக்காக என தமிழ்நாடு அரசின் சமூகநலத் துறையின் கீழ் 2008, ஏப்ரல் 15 அன்று திருநங்கையர் நல வாரியம் அமைக்கப்பட்டது. திருநங்கையர் சமூகத்துக்குப் பாதுகாப்பையும் சமூக மதிப்பையும் உறுதிப்படுத்தும் திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்துகிற பணி இந்த வாரியத்திற்கு அளிக்கப்பட்டது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

சிறிய அளவிலான நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவிட 1970இல் தமிழ்நாடு சிறு தொழில் மேம்பாட்டுக் கழகம் (சிட்கோ) ஏற்படுத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு தொழில் மேம்பாட்டுக் கழகம் (சிப்காட்) நிறுவப்பட்டதானது, வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் 730 ஏக்கர் நிலப் பரப்பில் ஒரு தொழிற்பேட்டை உருவாக வழி செய்தது.

இந்த நடவடிக்கையால் 107 புதிய தொழில் நிறுவனங்கள் உதயமாகின, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகின.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

தொழில் நிறுவனங்களின் வேகமான, முறைப்படுத்தப்பட்ட வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவிடும் வகையில், 1997ஆம் ஆண்டில், தமிழ்நாடு தொழிற்சாலை நகரிய வட்டார மேம்பாட்டு ஆணையச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

தொழில் நிறுவனங்களின் வேகமான, முறைப்படுத்தப்பட்ட வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவிடும் வகையில், 1997ஆம் ஆண்டில், தமிழ்நாடு தொழிற்சாலை நகரிய வட்டார மேம்பாட்டு ஆணையச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

பெருந்தொழில் நிறுவனங்களை ஏற்படுத்துவதற்கு நிலம் கையகப்படுத்தப்படுவது ஒரு முக்கியத் தேவை என்பதால், 1998இல் தமிழ்நாடு தொழில் துறை நோக்கங்களுக்கு நிலம் கையகப்படுத்துதல் சட்டம் நிறைவேற்றப்பட்டது முன்னோடி நடவடிக்கையாகும்.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

டிட்கோ (தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம்), எல்காட் (தமிழ்நாடு மின்னணுக் கழகம்) ஆகிய இரண்டு அரசுத் துறைகளுக்கும் இடையேயான கூட்டுத் திட்டமாக, நவீன தகவல் தொழில்நுட்பப் பூங்கா ஒன்றை கலைஞர் அரசு ஏற்படுத்தியது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

 2000, ஜூலையில் அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் திறந்துவைத்த டைடல் பூங்கா, மென்பொருள் நிறுவனங்கள் மிகவும் விரும்பி நாடுகிற இடமாக சென்னையை மாற்றியது.

பயிற்சி பெற்ற தொழிலாளர்கள், சட்டத்தின் ஆட்சி, செயல்திறன்மிக்க அதிகாரிகள், அனைத்து மட்டத்திலுமான சமூக உள்கட்டமைப்பு ஆகியவையுமாகச் சேர்ந்து, தமிழகம் முதலீடுகளுக்கு இணக்கமான மாநிலமாக உருவெடுப்பதை உறுதிப்படுத்தின.


2008ல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்களில் 23% லாரிகள் மற்றும் இருசக்கர வண்டிகளில் 15% சென்னை, ஓசூர் நகரங்களிலிருந்து வந்தவை

அந்த ஆண்டில் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு புதிய முதலீடுகள்

தயாரிப்புத் துறையில் ஒரு தலைமையிடத்தை பிடித்த சென்னை மாநகரம் 'தெற்கு ஆசியாவின் டெட்ராய்ட்' என்று பெயர் பெற்றது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

1972 -ம் ஆண்டு தமிழக மாணவர்கள் விவசாயப் பொறியியல் கற்க தென்னிந்தியாவில் முதன் முதலில் விவசாயக் கல்லூரி ஆரம்பித்தவர் கலைஞர்.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

கால்நடைப் பிரிவை தனியாகப் பிரித்து, 1989-ம் ஆண்டு ஆசியாவிலேயே முதன்முதலாகக் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தவர் கலைஞர்.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

 1969 முதல் 1976 வரையிலான ஆட்சிக் காலத்தில் பதினைந்து ஏக்கர் நில உச்ச வரம்பு சட்டம் மூலம் 1 லட்சத்து 78 ஆயிரத்து 880 ஏக்கர் உபரி நிலங்கள் கைப்பற்றப்பட்டு 1,37,236 விவசாயிகளுக்குக் கொடுத்தார் கலைஞர்

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

விவசாயிகள் பாசன நீரை எடுத்துச் செல்ல பாதைக் கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. ஆனால், அரசு நிலங்களில் பதிக்கும் விவசாயக் குழாய்களுக்காக விதிக்கப்பட்ட பாதைக் கட்டணம் 2000-2001-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

பயிர்க் காப்பீடு திட்டத்தில் 2006-ம் ஆண்டு 50 சதவிகிதம் காப்பீட்டுத் தொகையை அரசே மானியமாகக் கொடுத்து ஒரு லட்சம் விவசாயிகளைப் பயனடைய வைத்தது. 2009-2010-ம் ஆண்டுகளில் 7 லட்சத்து 80 ஆயிரம் விவசாயிகள் அரசின் மானிய உதவி பெற்று பயிர் காப்பீடு செய்தனர்.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

2006-2010- ஆட்சிக் காலத்தில் ஆதி திராவிட விவசாயிகள் தாட்கோ நிறுவனம் மூலம் 2000-ம் ஆண்டு வரை பெற்ற கடன் தொகை வட்டி உட்பட 5 கோடியே 25 லட்சம் முழுவதுமாக தள்ளுபடி. 1 லட்சத்து 57 ஆயிரத்து 57 நிலமற்ற ஏழை விவசாயிகளின் குடும்பங்களுக்கு 2,11,356 ஏக்கர் இலவச நிலம் வழங்கப்பட்டது

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்







No comments:

Post a Comment