Friday 18 December 2020

விவசாயிகள் நண்பன் திமுக

 #விவசாயிகள்_நண்பன்_திமுக  1) விவசாயிகள் வாங்கிய 7 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவு விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு - 22 ,40, 739 விவசாயக் குடும்பங்கள் பயன் அடைந்துள்ளன. வங்கிகளில் விவசாயிகளின் நகைக்கடன்களும் தள்ளுபடி #விவசாயிகள்_நண்பன்_திமுக


 2) விவசாயி பயிர்க் கடன் வட்டி 2005-2006-ல் 9 சதவீதம் .அதை 2006-2007 ல் கழக அரசு 7% எனக் குறைத்தது  6,31,283 பேருக்கு 1250 கோடியே 62 லட்ச ரூபாய் கடன்  2007-2008-ல் 5 சதவீதமாகக் குறைத்து, 6,48,397 பேருக்கு 1393 கோடியே 97 லட்ச ரூபாய் கடன் வழங்கப்பட்டது #விவசாயிகள்_நண்பன்_திமுக 


 3) விவசாய பயிர் கடன் வட்டி 2008-2009-ல் 4 சதவீதமாகக் குறைத்து, 6,91,192 பேருக்கு 1570 கோடியே 99 லட்ச ரூபாயும் கடன் வழங்கப்பட்டது  2009-2010-ல் பயிர்க்கடன் களை முறையாகத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியை முற்றிலும் ரத்து செய்தார் கலைஞர் #விவசாயிகள்_நண்பன்_திமுக 

 திமுக ஆட்சியில் 2006- 2011வரை மொத்தம் 36 லட்சத்து 71 ஆயிரத்து 372 விவசாயிகளுக்கு 8,838 கோடியே 6 லட்ச ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டது நிலுவையில் உள்ள மேலும் 2 லட்சம் பம்பு செட்டுகளுக்கு படிப்படியாக இலவச மின் இணைப்பு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது #விவசாயிகள்_நண்பன்_திமுக 


 வேளாண் துறைக்காக 2001-2006 ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் 4 ஆயிரத்து 137 கோடியே 34 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது 2006-2011 ஐந்தாண்டு கால திமுக கழக ஆட்சியில் 7 ஆயிரத்து 437 கோடியே 23 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது #விவசாயிகள்_நண்பன்_திமுக


 2005-2006-ல் அ.தி.மு.க. அரசு நெல்லுக்கு வழங்கிய கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூபாய் 600; திமுக அரசு ஆண்டுக்காண்டு இதனை உயர்த்தி, 2009-2010-ல் சாதா ரக நெல் விலை 1,050 ரூபாய் என உயர்த்தி வழங்கியது #விவசாயிகள்_நண்பன்_திமுக 


 2009-2010-ல் 9.5 % சர்க்கரை பிழிதிறன் உள்ள கரும்புக்கு மைய அரசு நியாய மற்றும் ஆதாய விலையாக 1,077 ரூபாய் 60 காசு என அறிவித்த போது திமுக அரசு போக்குவரத்துக் கட்டணம் மற்றும் ஊக்கத் தொகை உட்பட டன் ஒன்றுக்கு 1,650 ரூபாய் என வழங்கியது. #விவசாயிகள்_நண்பன்_திமுக

 பெரியாரின் பிறந்த நாளான 17.9.2006 முதல் நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இலவச நிலம் வழங்கும் திட்டத்தின்கீழ் 1,78,796 நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்கள் - விவசாயிகளுக்கு 2,12,853 ஏக்கர் நிலம் பண்படுத்தப்பட்டு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது; #விவசாயிகள்_நண்பன்_திமுக 


 2006-2011 திமுக ஆட்சியில் 7 லட்சத்து 74 ஆயிரத்து 386 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. #விவசாயிகள்_நண்பன்_திமுக 


 திமுக ஆட்சியில் உழவரும், நுகர்வோரும் பெரும்பயன் அடைந்திட 1999-ல் அறிமுகப் படுத்தப்பட்ட உழவர் சந்தைத் திட்டத்தின்கீழ் 2001 மே வரை 103 உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டு மக்களின் பாராட்டுகளை ஈர்த்தன; 2006-11-ல் மேலும் 50 உழவர் சந்தைகள் திறக்கப்பட்டது #விவசாயிகள்_நண்பன்_திமுக


 பழைய பம்பு செட்டுகளுக்கு பதிலாக 50% மானியத்தில் புதிய பம்பு செட்டுகள் வழங்கும் திட்டத்தில் 2006-ம் ஆண்டு முதல் 62,772 பழைய பம்பு செட்டுகளுக்கு பதிலாக புதிய பம்பு செட்டுகள் வாங்க 39 கோடியே 57 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மானியம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது #விவசாயிகள்_நண்பன்_திமுக

 2006-11 திமுக ஆட்சியில்... தேசிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 282 கோடியே 63 லட்சம் ரூபாய் இழப்பீடாகவும், தேசிய பேரிடர் நிவாரண நிதியின்கீழ் 213 கோடியே 80 லட்சம் ரூபாய் நிவாரணமாகவும், ஆக மொத்தம் 496 கோடியே 43 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. #விவசாயிகள்_நண்பன்_திமுக 


 திமுக ஆட்சியில் 2007-08 ஆண்டை விட 2008-2009-ம் ஆண்டில் கூடுதலாக 2 லட்சத்து 93 ஆயிரம் ஏக்கரில் ராஜராஜன் 1000 தொழில்நுட்பத்தைப் பின்பற்றிய காரணத்தால் அரிசி உற்பத்தியில் பின்னடைவு ஏதுமில்லாமல் 51 லட்சத்து 83 ஆயிரம் மெட்ரிக் டன் பெற முடிந்தது. #விவசாயிகள்_நண்பன்_திமுக 


 ராஜராஜன் 1000 திட்டத்தின்கீழ், திமுக ஆட்சியில் 3 லட்சத்து 63 ஆயிரம் கோனோ களையெடுக்கும் கருவிகளும், 2 லட்சத்து 43 ஆயிரம் மார்க்கர்களும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது இத்திட்டத்தால் 30%-40% மகசூல் அதிகரித்தது ஆய்வுகளில் தெரிகிறது #விவசாயிகள்_நண்பன்_திமுக

 தமிழகத்தின் காவிரி பாசனப் பகுதியில் விவசாயத் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியத்தை உறுதிப்படுத்துவதற்கும், அவர்களைச் சுரண்டும் நிலவுரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும், தமிழ்நாடு வேளாண் தொழிலாளர் நியாயக் கூலிச் சட்டம் – 1969 ல் கொண்டுவரப்பட்டது #விவசாயிகள்_நண்பன்_திமுக

 தமிழ்நாடு நிலச் சீர்திருத்த (நில உச்சவரம்பு குறைப்பு) சட்டம் -1970 நிறைவேற்றியது கலைஞர். நில உரிமைகளில் இருந்த பாகுபாட்டைக் குறைப்பதற்கான அந்தச் சட்டம் 30 ஏக்கர் என்ற உச்சவரம்பை 15 ஏக்கர் எனக் குறைத்தது. #விவசாயிகள்_நண்பன்_திமுக 

 திமுக ஆட்சி 1969ல், குத்தகை விவசாயிகளின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கிற சட்டம் கொண்டுவரப்பட்டது. அது, முதன்முறையாக, வருவாய்த் துறைப் பதிவேடுகளில் குத்தகை விவரங்கள் பதிவு செய்யப்படுவதை உறுதிப்படுத்தியது. #விவசாயிகள்_நண்பன்_திமுக 

 1972 -ம் ஆண்டு தமிழக மாணவர்கள் விவசாயப் பொறியியல் கற்க தென்னிந்தியாவில் முதன் முதலில் விவசாயக் கல்லூரி ஆரம்பித்தவர் கலைஞர். #விவசாயிகள்_நண்பன்_திமுக


 கால்நடைப் பிரிவை தனியாகப் பிரித்து, 1989-ம் ஆண்டு ஆசியாவிலேயே முதன்முதலாகக் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தவர் கலைஞர். #விவசாயிகள்_நண்பன்_திமுக

 1969 முதல் 1976 வரையிலான ஆட்சிக் காலத்தில் பதினைந்து ஏக்கர் நில உச்ச வரம்பு சட்டம் மூலம் 1 லட்சத்து 78 ஆயிரத்து 880 ஏக்கர் உபரி நிலங்கள் கைப்பற்றப்பட்டு 1,37,236 விவசாயிகளுக்குக் கொடுத்தார் கலைஞர் #விவசாயிகள்_நண்பன்_திமுக 

 விவசாயிகள் பாசன நீரை எடுத்துச் செல்ல பாதைக் கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. ஆனால், அரசு நிலங்களில் பதிக்கும் விவசாயக் குழாய்களுக்காக விதிக்கப்பட்ட பாதைக் கட்டணம் 2000-2001-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. #விவசாயிகள்_நண்பன்_திமுக


 பயிர்க் காப்பீடு திட்டத்தில் 2006-ம் ஆண்டு 50 சதவிகிதம் காப்பீட்டுத் தொகையை அரசே மானியமாகக் கொடுத்து ஒரு லட்சம் விவசாயிகளைப் பயனடைய வைத்தது. 2009-2010-ம் ஆண்டுகளில் 7 லட்சத்து 80 ஆயிரம் விவசாயிகள் அரசின் மானிய உதவி பெற்று பயிர் காப்பீடு செய்தனர். #விவசாயிகள்_நண்பன்_திமுக


 2006-2010- ல் ஆதி திராவிட விவசாயிகள் தாட்கோ நிறுவனம் மூலம் 2000-ம் ஆண்டு வரை பெற்ற கடன் தொகை வட்டி உட்பட 5 கோடியே 25 லட்சம் முழுவதுமாக தள்ளுபடி. 1 லட்சத்து 57 ஆயிரத்து 57 நிலமற்ற ஏழை விவசாயிகளின் குடும்பங்களுக்கு 2,11,356 ஏக்கர் இலவச நிலம் வழங்கப்பட்டது #விவசாயிகள்_நண்பன்_திமுக

 விவசாயிகளுக்கு 1990ல் இலவச மின்சாரம் தந்தவர் கலைஞர் தமிழகத்தில் விவசாயிகள் பயன்படுத்துகிற 21.4 லட்சம் பம்ப் செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது #விவசாயிகள்_நண்பன்_திமுக

 1996 முதல் 2001ம் ஆண்டில் 32 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை 2 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் தமிழக முழுவதிலும் அமைத்தார் கலைஞர் #விவசாயிகள்_நண்பன்_திமுக 


 1996-ல் வந்த கலைஞர் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை 25 % 27% அதிகரித்தார். 1996-2001-க்கு இடைப்பட்ட காலத்தில் இயற்கைச் சீற்றத்தால் இறக்கும் ஆடுகளுக்கு 1000 ரூபாயும், மாடுகளுக்கு 5,000 ரூபாயும், கன்றுக்கு 3,000 ரூபாயும் நிவாரணத் தொகையாக வழங்கியவர்.  #விவசாயிகள்_நண்பன்_திமுக

 தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளுக்கு நவீன வங்கிக் கட்டிடங்கள், 10,000 எக்டேர் தரிசு நிலத்தினை மேம்பாடு செய்து மரக்கன்று சாகுபடி, நிலமற்ற விவசாயிகளுக்கு வயதின் அடிப்படையில் மாத ஓய்வூதியம்.. தந்தது கலைஞர்

 #விவசாயிகள்_நண்பன்_திமுக  


கூட்டுறவு வங்கிகள் நகைக் கடனை 1 லட்சமாக உயர்த்தியது, யூரியா உரத்திற்கு விற்பனையாக இருந்த 4 விழுக்காட்டு வரியை 2 விழுக்காடாகக் குறைப்பு, பழைய ஆயில் இஞ்ஜின்களுக்குப் பதிலாக புதிய ஆயில் இஞ்சின் வழங்குதல், செய்தது கலைஞர் #விவசாயிகள்_நண்பன்_திமுக 


 இதைவிட செய்ய வேறு என்ன இருக்கிறது? 


 Antony Parimalam

No comments:

Post a Comment