Sunday, 16 June 2019

திமுக ஆட்சியில் குடிநீர்த் திட்டங்கள்

திமுக ஆட்சியில் குடிநீர்த் திட்டங்கள்
ராமநாதபுரத்தின் வறட்சியைக் கணக்கில் கொண்டு 1996-ல் திமுக ஆட்சியில் ரூ. 72.20 கோடியில் உவர் நீரை நன்னீராக்கும் 11 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது
இதன் மூலம் 237 கிராமங்கள் குடிநீர் வசதியைப் பெற்றன.


ரூ. 671 கோடி மதிப்பிலான ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு 30-1-2007-ல் பரமக்குடியில் நடைபெற்ற விழாவில் கலைஞர் அடிக்கல் நாட்டினார்


இத்திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, கீழக்கரை ஆகிய நகராட்சிகள், மண்டபம், சாயல்குடி, முதுகுளத்தூர், கமுதி, அபிராமம் ஆகிய போரூராட்சிப் பகுதிகளுக்கும் 27-6-2009-ல் குடிநீர் வழங்கப்பட்டன.


2வது கட்டமாக இத்திட்டத்தின் வழியோரப் பகுதிகளான புதுக்கோட்டை மாவட்டத்தில் 32 குடியிருப்புகளுக்கும், சிவகங்கை மாவட்டத்தில் 799 குடியிருப்புகளுக்கும், ராமநாதபுரத்தின் ஊரகப் பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கப்பட்டன.
மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே திமுக ஆட்சியில் 1971ம் ஆண்டு குடிநீர் வடிகால் வாரியம் தொடங்கப்பட்டது.


1995-96ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் குடிநீர் வழங்கும் பணிகளுக்காக ரூ. 213.82 கோடி செலவிடப்பட்டது. ஆனால், 2000-01-ல் திமுக ஆட்சியில் குடிநீர் பணிகளுக்காக ரூ. 842 கோடி ஒதுக்கப்பட்டது.


ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் திமுக ஆட்சியில் ரூ. 51 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டு, 27-6-1999-ல் தொடங்கி வைக்கப்பட்டது.
கிருஷ்ணா குடிநீர்த் திட்டம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஆகியவற்றை நிறைவேற்றுவதற்கான பணிகள் திமுக ஆட்சியில்தான் நடைபெற்றன.



மீஞ்சூரில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டாலும் அது திமுக ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டது.

நெம்மேலியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் பெருமளவு பணிகள் திமுக ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டன.

Saturday, 8 June 2019

திமுக மீதான சில வீண் பழிகளும் அதற்கான சில பதில்களும்

அப்பப்பா ...
எத்தனை எத்தனை அபாண்டங்கள்  எத்தனை எத்தனை அவதூறுகள்  எத்தனை எத்தனை பொய் பிரச்சாரங்கள்
அத்தனையும் திமுகவின்  மேல்  அதன் தலைவர்கள் மேல்..
எல்லாமே  ஊடகங்கள் வழியாக செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட  பார்ப்பன சதி.
அத்தனை சதிகளுக்கும் திமுகதான் பலிகடா...
அவற்றில் சிலவற்றை பார்ப்போம்
(1)திருட்டு ரயில் புருடா**
கலைஞர் திருட்டு ரயிலேறி சென்னை போனாராம். உண்மையில்  அவர் சென்னைக்கு போக வில்லை. திருவாரூரில் இருந்து சேலம் தான் சென்றார்.  மாடர்ன் தியேட்டர்ஸில் பணியில் சேர்ந்தார். கண்ணதாசன் தனது வனவாசம் புத்தகத்தில் தான் திருட்டு ரயில் ஏறி சென்றதாக குறிப்பிட்டு இருக்கிறாரே தவிர  கலைஞரை அல்ல.
கண்ணதாசன் 8th Grade dropout.
கலைஞர் SSLC ல் தோல்வி
கண்ணதாசன்  8th grade dropout என்றும் தன்னை நான் என்று சொல்லாமல் "அவன்" என்றே வனவாசம் புத்தகம் முழுவதிலும் சொல்கிறார்.
தான் திருட்டு ரயிலேறி சென்றதையும் தன் சுயசரிதையில் விளக்கியுள்ளார்
பொறுக்கிகள் அதை அப்படியே திரிச்சிட்டானுங்க https://t.co/JLHb187HAU
(2) பாவாடை நாடா அவதூறு**
கலைஞர் பாவாடை நாடா பற்றி சொன்னதாக அவர் மேல் வதந்தி பரப்பினர். விஜயகாந்தும் அப்படி சொல்ல.. கலைஞர் அவர் மீது அவதூறு வழக்கு போட... கடைசியில் சட்டசபை குறிப்பில் அப்படி ஏதும் இல்லை எனக் கண்டறிந்த விஜயகாந்த் கடைசியில் மன்னிப்பு கேட்டுள்ளார்
(3) மாதவிடாய் கதை**
இந்திரா நெற்றியில் மாதவிடாய்   என கலைஞர் விமர்சித்ததாக சொன்னார்கள் .
இந்திராவுக்கு சிறு காயம் கூட படவில்லை என்கிறார் நெடுமாறன்  அவரது பேட்டியில்.  காயமே படாத போது ரத்தம் எப்படி வந்திருக்கும் .  என்ன ஒரு பொறுக்கித்தனம் பாருங்கள்.
(4) விஞ்ஞான ஊழல் கப்சா**
இந்திரா மத்திய அமைச்சர் ஓம் மேத்தா என்பவரை தூதுவராக 1975 வருட இறுதியில் கலைஞரை சந்திக்க அனுப்புகிறார்.
கலைஞரை சந்தித்த மத்திய அமைச்சர் கலைஞர் எமர்ஜென்சியை ஆதரித்தால் கலைஞரின் அரசை மேலும் ஒரு வருடம் நீடித்து தருவதாக கலைஞரிடம் தெரிவிக்கிறார்.
கலைஞர் திட்டவட்டமாக எமர்ஜென்சியை ஆதரிக்க மறுக்கவே அதன் பிறகே கலைஞர் அரசும் கலைக்கப்பட்டு 1972 MGR புகாரை தூசிதட்டி 1976 ல் சர்க்காரியா கமிசன் போடப்படுகிறது.
சர்க்காரியா கமிசனில் எந்த இடத்திலும் விஞ்ஞான ஊழல் என்ற வார்த்தையே இல்லாதபோதும் கலைஞர் மீது அவதூறு இன்றும் பரப்பப்படுகிறது.

பொறுக்கிகள்
24 மணி நேரமும் சர்க்காரியா கமிசன் பத்தி பேசுவர்.
MGR மீதான பால் கமிசன், ரே கமிசன், ராபின்சன் ஊழல், பால்டிகா கப்பல் பேர ஊழல், சாராய ஊழல், ஏரிகள் தாரை வார்ப்பு, மருத்துவக்கல்லூரி இட ஒதுக்கீட்டு ஊழல், ஜெ-சசி கூட்டுக் கொள்ளை பற்றி பேசவே மாட்டான்.
அவன்தான்
தமிழ்தேசிய பார்ப்பனீய அடிமை.
(5) GAIL பைப் லைன் திரிப்பு**
GAIL பைப் லைன் ஜெயலலிதா முன்னிலையில்தான் 2012 ல்
கையொப்பம் ஆனது என்பதற்கான ஆதாரம் இதுதான்
படிக்க. 👇
(6) மீத்தேன் வீண் பழி**
மீத்தேன் என்றாலே உடனே ஸ்டாலினை திட்டுகிறார்கள். 1984 ல் ஸ்டாலினா முதல் மந்திரி?
திரு.ஸ்டாலின் கையொப்பமிட்டது ஒரே ஒரு மீத்தேன் திட்டம்தான். அது GEECL கம்பெனியுடன் போடப்பட்ட MOU மட்டுமே. அது ஆய்வுக்காக போடப்பட்டது
அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள்
கீழே உள்ளது
வேறு எந்த மீத்தேன்/ ஹைடிரோ கார்பன் திட்டத்திலும் திரு.ஸ்டாலின்  கையெழுத்து இடவில்லை.
👇
மீத்தேன் இரண்டு வழிகளில் எடுக்கப்படுகிறது
1)Conventional method
2)UnConventional method
திரு ஸ்டாலின் கையொப்பமிட்ட Coalbed மீத்தேன் பணி என்பது unconventional method.
அது தமிழகத்தில் நடைபெறவில்லை.
உண்மை நிலவரம் இதோ👇
https://t.co/c5iUorwZxM
(7) கட்சத்தீவு கப்சா கதை**
ஒரு முதல்வரால் எப்படிடா கட்சத்தீவை தாரை வார்க்க முடியும்?
கட்சத்தீவு ஒப்பந்தத்தை கலைஞரை தவிர வேறு யாருமே எதிர்க்காத போது கலைஞரை கைக்காட்ட எவருக்கும் யோக்கியதை இல்லை
1974 கட்சத்தீவு ஒப்பந்தம் article 8 இன் படி பார்லிமென்டால்
அங்கீகரிக்கப்படாததால் அந்த ஒப்பந்தம் செல்லாது
அதில் உள்ள உரிமைகள்
Atl 5 pilgrimage
Atl 6 traditional rights
எமர்ஜென்சியில் கலைஞர் ஆட்சிக் கலைப்பிற்கு பின்1976 ல் எல்லை நிர்ணயம் போதே கச்சத்தீவு இலங்கை எல்லைக்குள் போனது.
1974 ஒப்பந்தமே செல்லாது என்பதும் 1976 எல்லை நிர்ணயத்தால்தான் கட்சத்தீவு இந்திராவால் இலங்கைக்கு கொடுக்கப்பட்டது என்பதுமே உண்மை
1976 ல் கலைஞர் ஆட்சியிலேயே இல்லை
புளுகினி பொறுக்கிகள் கலைஞர் தாரை வார்த்தார் என புளுகி தள்ளுறானுங்க.
ஆட்சியிலேயே இல்லாத போது எப்படிடா தாரை வார்த்தார்?
(8)நில அபகரிப்பு டுபாக்கூர் புகார்**
நிலஅபகரிப்பை செய்தது யார்?
A) கொட நாடு நிலத்தை மிரட்டி நில அபகரிப்பு செய்தது ஜெ -சசி கும்பல்
B) இசை அமைப்பாளர் கங்கை அமரனின் பையனூர் பங்களாவை மிரட்டி எழுதி வாங்கியதும் அதே கும்பல்தான்
C) சென்னையில் உள்ள பீனீக்ஸ் மால், ஜாஸ் சினிமாஸ் அபகரிக்கப்பட்டது யாரால்?
4) பாலு ஜுவல்லர்ஸ் உரிமையாளரை மிரட்டி இறுதியில் அவர் தற்கொலை செய்து கொண்டாரே அது யாரால்?
5) புதுப்படங்கள் வரும் போது அந்த படத்தின் ஒளிபரப்பு உரிமை ஜெயா டிவிக்கே தர வேண்டும் என்று மிரட்டப்பட்ட தயாரிப்பாளர்கள் பட்டியல் தெரியுமா?
எல்லாவற்றுக்கும் மேலாக
அரசுக்கு சொந்தமான டான்சி நிலத்தையே குறைந்த விலைக்கு
அபகரித்தவர்கள் இந்தக் கும்பல்தான்
இந்த உத்தமர்கள்தான் திமுக ஆட்சியில் நிலஅபகரிப்பு நடந்ததாக கூறி அதற்காக தனி பிரிவையே காவல் துறையில் ஏற்படுத்தினர்.
அதன் மூலம் எத்தனை திமுகவினர் தண்டனை பெற்றனர் என்பதை யாராவது சொல்லமுடியுமா?
ஆனால் கொடநாட்டு வழக்கில் தீர்ப்பு வந்து தண்டனையும் வழங்கப்பட்டு விட்டது தெரியுமா இல்லை தெரியாதா குருடர்களே
(9) நியூட்ரினோ பித்தலாட்ட கதை**
நியூட்ரினோக்கு அனுமதி வழங்கியது மோடி மந்திரிசபை
(5 Jan2015).
On 19 Mar 2018,Ministry of Environment (India) overturned the NGT verdict as a special case
அதற்கு முன் Feb 2012 நியூட்ரினோவிற்கு இடம் ஒதுக்கியது ADMK அரசே
காங்கிரஸ்18 Oct 2010ல் சுற்றுசூழல் அனுமதி மட்டுமே வழங்கியது https://t.co/CsxsW438BT
(10) "இடுப்புகிள்ளிதிமுக" என பொறுக்கிகள் சொல்றானுங்க
யாருன்னு பார்த்தா
பூரா பொம்பள பொறுக்கி பயலுக
இடுப்பை கிள்ளியதாக சொன்ன பெண் காவல்துறையில் தன்னை யாரும் கிள்ளவில்லை என்று எழுதி தந்துள்ளது
ஒழுங்கு மரியாதையா அந்த வழக்கில் திமுககாரன் மீது அதிமுக போலிஸ் எடுத்த நடவடிக்கையை சொல்லுங்கடா


11)ஓட்டுக்கு பணம் என்பதை யார் தொடங்கியது? எந்த ஆண்டில்?
திருமங்கலம் பார்முலா என்பது சரியா? ஜெ பார்முலா என்பது சரியா?
1954 ல் முதல்வராகிறார் காமராஜர். அதன் பின் நடந்த குடியாத்தம் இடைத்தேர்தலில் காங்கிரசால் ஓட்டுக்கு ஒரு ரூபாயும் ஓட்டலில் உப்புமா காபி சாப்பிட டோக்கனும் வழங்கப்பட்டது.
1962 ல் காஞ்சிபுரத்தில் அண்ணாவை தோற்கடிக்க காங்கிரஸ் நடேச முதலியார் ஓட்டுக்கு 5 ரூ தந்து வெங்கடாஜலபதி படத்தில் சத்தியம் வாங்குகிறார்.
ஆதாரம்.
MGR 1982 சட்டசபை தேர்தலில் பணம் கொடுத்து வென்றார்
The fledgling party, backed by the Janata Party, was voted to power in the post-Emergency 1977 election. The victory was short-lived. In the subsequent Lok Sabha election his party was routed, and Indira Gandhi, who became Prime Minister again in 1980, dismissed the MGR government together with seven other non-Congress ruled states.
In the following Tamil Nadu Assembly election in 1982, MGR paid cash for votes for the first time and set a bad precedent which has now spread to other states as well
ஜெயலலிதாவின் Cash for Vote
Story 

2003 சாத்தான் குளம் இடைத்தேர்தல் அதிமுகவால்
வாக்காளர்களுக்கு சேலை, டி சர்ட், பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது
2005 பிப்ரவரி காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல்களில்
அதிமுகவால் லட்டுக்குள் மூக்குத்தி வைத்து வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது
இதற்கு பிறகு 2009 ல் தான் திருமங்கலம் தேர்தல்.
1954 ல் இருந்து 2008 வரை நடந்த எல்லாவற்றையும் விட்டு விட்டு 2009 திருமங்கலத்தில்தான் ஏதோ பணப்பட்டுவாடா புதிதாக நடந்தது போல் ஏன் கதையளக்கிறார்கள் வஞ்சகர்கள்?
திமுக நடத்தியது ஒரு திருமங்கலம் மட்டுமே அதுவும் அழகிரி பொறுப்பு வகித்ததால்.
அதிமுகவோ 232 திருமங்கலத்தை 2016 இல் நடத்திக்காட்டியதுடன் 3 கண்டைனர்கள் 570 கோடியுடன் பிடிபட்டு பின்னர் மாயமாய் மறைந்ததும் அதிமுக ஆட்சியில்தான்.


கலைஞரின் தனிப்பட்ட வாழ்க்கையை பேசுகிறார்கள்.
அதுபோல எம்ஜிஆர் ஜெயலலிதா சீமான் வாழ்க்கையை பற்றி பேசினால் என்ன ஆகும்?
ரொம்ப கேவலமாக அல்லவா போய்விடும்
இன்னும் பல நூறு கட்டுக் கதைகள்
உள்ளது. பதில் சொல்லி தீராது

Antony Parimalam 

Friday, 7 June 2019

திரு ஸ்டாலின் கையொப்பமிட்ட Coalbed மீத்தேன் பணி என்ன ஆனது? உண்மை நிலவரம் இதோ👇

திரு ஸ்டாலின் கையொப்பமிட்ட Coalbed மீத்தேன் பணி என்ன ஆனது? உண்மை நிலவரம் இதோ👇


ஹைடிரோ கார்பன் எடுக்கும் பணி ONGC யால் தொடங்கப்பட்ட ஆண்டு 1984

1985 ல் நரிமணம் மற்றும் களப்பால் ஆகிய இடங்களில் இயற்கை எரிவாயு( மீத்தேன்) மற்றும் பெட்ரோலியம் கண்டு பிடிக்கப்படுகிறது.

அந்த பகுதியில் 1986 ல் மத்திய மாநில அரசுகளால் எண்ணை எடுக்க லைசென்ஸ் வழங்கப்படுகிறது.
1989 முதல் எண்ணை உற்பத்தி வியாபார ரீதியில் தொடங்கப்படுகிறது.


அதன் பின்னர் இன்று வரை 712 கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன.

இன்றைய தேதியில் 181 கிணறுகளில் எண்ணை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த 181 கிணறுகளில் கதிராமங்கலமும் ஒன்று.
அதற்காக ONGC தமிழக அரசுக்கு ராயல்டியாக ரூ250-350 கோடி வரை ஆண்டுதோறும் கொடுத்து வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில்   ரூ1,816.43 கோடி தமிழக அரசிற்கு ராயல்டி மற்றும் வாட் ஆக கொடுக்கப்பட்டுள்ளது


தற்போதைய அதிமுக அரசு 2017 லேயே டெல்டாவை பெட்ரோலிய மண்டலமாக அறிவித்து உத்தரவு போட்டு விட்டது.

மே 12, 2019ல் காவேரி டெல்டா பகுதியில்
மத்திய அரசு யாரும் எதிர்பாராத வகையில் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான வேதாந்தா நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டே மத்திய பெட்ரோலியம் அமைச்சகத்துடன் இணைந்து ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்ட அனுமதி பெற்று விட்டது.


274 கிணறுகளும் பூமியின் கீழ் உள்பகுதிக்கு ஏற்ப 3,500 மீட்டர் முதல் 4,500 மீட்டர் ஆழம் வரை தோண்டப்படும். காவிரிப் படுகையில் கடல் பகுதியில் சுமார் 4 ஆயிரம் கி.மீ. பரப்பளவுக்கு இந்த கிணறுகளில் பல இடங்களில் அமைக்கப்படும்.


 நிலப்பகுதிகளைப் பொருத்த வரை நாகை, காரைக்கால், விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் கிணறுகள் அதிகம் அமையும்.


இவ்வாறு மீத்தேன் எடுக்கும் தொழில்நுட்பத்தை "Conventional natural gas reservoir Method" என்பர்.


ஆனால் 2011 ஜனவரி 5 ல் திரு ஸ்டாலின் ஆய்வு மட்டுமே MOU கையொப்பம் இட்டது
"Unconventional natural gas" தொழில் நுட்ப முறையில் Coalbed methane
எடுப்பதற்காக GEECL என்ற கம்பெனியுடன். 


Coalbed methane is an unconventional natural gas, and its reservoir has distinctly different characteristics compared with the conventional natural gas reservoir.


இத்திட்டம் விவசாயிகளால் கடுமையாக எதிர்க்கப்பட்டது.


மேலும் இத்திட்டத்தால் சுற்று சூழலும் கடுமையாக பாதிக்க வாய்ப்புள்ளது எனத் தெரிந்ததால்
திரு.ஸ்டாலின் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.


செப்டம்பர் 2012 ல்  மத்திய அரசின் சுற்று சூழல் அனுமதி இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நம்மாழ்வார் தலைமையில் COALBED மீத்தேன் எதிர்ப்பு கிளம்பியதால் ஜெயலலிதா இத்திட்டத்தை 2013 லேயே நிறுத்தி விட்டார்.

 GEECL கம்பெனியும் விலகிவிட்டது.


10 நவம்பர் 2016 ல் தர்மேந்திர பிரதான் இத்திட்டத்தை கைவிட்டதாக அறிவித்தார்.
இத்துடன் ஸ்டாலின்-GEECL  ஒப்பந்தம் முடிந்து விட்டது


திரு ஸ்டாலின் ஒப்புதல் அளித்த முதல் மற்றும் கடைசி ஒப்பந்தம் இன்று நடைமுறையில் இல்லை.


அதாவது COALBED மீத்தேன் பணி தமிழகத்தில் எங்குமே தொடங்கப்பட வில்லை.


ஆனால் 1986 முதல்
"Conventional natural gas reservoir Method" மூலம் மீத்தேன் மற்றும் கச்சா எண்ணெய் எடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதிதான் டெல்டாவை
பெட்ரொலிய மண்டலமாக அறிவித்து 274 இடங்களில் மீத்தேன் எடுக்கும் பணிக்காக தற்போது மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள அனுமதி.


வித்தியாசம் புரியுதா

A.Parimalam

Monday, 3 June 2019

கலைஞர் இலங்கை இறுதிப்போரில் பிரபாகரனையும் புலிகளையும் காப்பாற்றியிருக்க முடியுமா? 

கலைஞர் இலங்கை இறுதிப்போரில் பிரபாகரனையும் புலிகளையும் காப்பாற்றியிருக்க முடியுமா? - என். ராம் பேட்டி

கேள்வி : இலங்கை தமிழர்கள் - விடுதலை புலிகள் மீதான கருணாநிதியின் நிலைப்பாடு குறித்த உங்களின் பார்வை என்ன?

என். ராம் : ''விடுதலை புலிகள் எப்போதுமே கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் ஆட்சியை விரும்பியது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. டெலோ தலைவர் சிறீ சபாரத்தினம் கொலை செய்யப்பட்டதிலிருந்து அவருக்கு விடுதலை புலிகள் மீதிருந்த மரியாதை தகர்ந்தது .

ராஜிவ் காந்தியை விடுதலை புலிகள் கொன்றது மன்னிக்க முடியாதது என ஒரு பேட்டியில் கூட கூறியிருந்தார் கருணாநிதி. அவர் முதல்வராக இருந்தபோது ஆக்கப்பூர்வமாகவே செயல்பட்டார்.

இலங்கை இறுதிக்கட்ட போரின்போது கூட அவரால் முடிந்த அளவு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்தார். அப்போது கூட அவர் விடுதலை புலிகளை நேரடியாக ஆதரிக்கவில்லை. இறுதிக்கட்ட போருக்கு பிறகு கருணாநிதி மீதே வசவுகள் விழுந்தன''.

''இலங்கை விஷயத்தை பொருத்தவரையில், அவருடன் நான் பலமுறை பேசியிருக்கிறேன். அதனால்தான் சொல்கிறேன் அவர் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை கொண்டவர்.

 அவர் வெளியில் ஈழத்துக்கு தீவிர ஆதரவு தருவதுபோல சொல்லி வந்தாலும் அவருடைய நிலை என்னவெனில், இலங்கைக்குள் தமிழர்கள் தங்களது அரசியல் உரிமைகளைப் பெற வேண்டும். தங்களின் வாழ்க்கையை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் நிலை உருவாக வேண்டும். வேறு வழியில்லையென்றால், ஈழம் மலர வேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருந்தது. சிலர் பிடிவாதவே தமிழ் ஈழம் மட்டுமே வேண்டும் எனச் சொல்வது போன்றதோர் நிலை எடுப்பவராக அவர் இருந்ததில்லை.''

"இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு சுயாட்சி மேற்கொள்ளும் வாய்ப்பு அமைய வேண்டும் என்பதே அவரது உண்மையான கோரிக்கையாக இருந்தது. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என தெரியும்போது தமிழீழம் தான் ஒரே தீர்வு என்ற வெளிப்படையான நிலையை எடுக்கும்போது அவர் பிடிவாதமாகவோ திடமாகவோ அம்முடிவை எடுக்கவில்லை என்பதை நான் நன்றாகவே அறிவேன். அவர் விடுதலை புலிகளின் அட்டூழியங்களை ஆதரிக்கவில்லை".

''ஒருமுறை நான் அவரிடம் பேசும்போது, 'ஒரு முட்டாள்தனமான தவறு, குற்றத்தை விட மோசமானது' என ஒருவரின் மேற்கோளை காட்டி ராஜிவ் காந்தி கொலை குறித்து சொல்லிக்கொண்டிருந்தேன். விடுதலை புலிகளின் முட்டாள்தனமான தவறுகள் குறித்து நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். ஒன்று, இந்திய அமைதி காப்புப் படையுடன் விடுதலை புலிகள் வெறித்தனமாக போர் நடத்தியது. இரண்டு, ராஜீவ் காந்தி படுகொலையை கட்டாயமாக பிரபாகரனே திட்டமிட்டது. அது ஒரு மிகப்பெரிய குற்றம். மேலும் முட்டாள்தனமான தவறு" என்றேன்.

''மூன்றாவதாக, ராஜபக்சவைத் தேர்ந்தெடுத்தது என்றேன்''. எப்படி? என கேட்டார்.

''ரணில் விக்ரமசிங்க Vs ராஜபக்சே மோதிய அந்த அதிபர் தேர்தல் கடும் போட்டி நிறைந்ததாக இருந்திருக்கும். ஆனால் தேர்தலை புறக்கணிக்கச் சொல்லி தமிழர்களிடம் கூறியது விடுதலை புலிகள். இதனால் கணிசமாக ரணிலுக்கு கிடைக்க வேண்டிய ஆதரவு வீணாய்ப்போனது என்றேன்.''

''அவர்கள் இன்னொரு தவறு செய்தார்கள் அது என்ன தெரியுமா?'' என்று கருணாநிதி என்னிடம் கேட்டார்.

''சிறீ சபாரத்தினம் என்னுடைய சகோதரர் மாதிரியானவர். அவரை கைது செய்து கொல்லப்போகிறார்கள் எனக் கேள்விப்பட்டேன். அதைச் செய்யக்கூடாது என நான் சொல்வதாய் பிரபாகரனிடம் சொல்லுங்கள் என பேபி சுப்ரமணியத்திடம் பேசினேன். ஆனால் சபாரத்தினத்தை சித்திரவதை செய்து படுகொலை செய்தனர். இதனால் விடுதலைபுலிகள் மீது பெரும் ஏமாற்றம் உண்டானது.'' என்று சொல்லி கருணாநிதி என்னிடம் கவலைப்பட்டார்.

''ஆகவே கருணாநிதிக்கு கண்மூடித்தனமான விடுதலை புலிகள் ஆதரவு நிலை இருந்ததில்லை. அதே நேரத்தில் விடுதலை புலிகள் மற்றும் ஈழத் தமிழர்கள் குறித்து அவர் குழப்பிக்கொள்ளவில்லை.''

''ஈழத்தமிழர் நலன், உரிமைகள் மற்றும் அவர்களது அரசியல் உரிமைகள், மனித உரிமைகள் ஆகியவற்றை காப்பதுதான் கருணாநிதியின் நோக்கம்''.

''ஈழத்தமிழர்கள் குறித்து நாங்கள்தான் ஒரே பிரதிநிதிகள் என விடுதலை புலிகள் எடுத்த நிலையை அவர் ஒப்புக்கொண்டதாக எனக்குத் தெரியவில்லை.''

''இலங்கையில் இறுதிக் கட்ட போரில் யாரும் விடுதலை புலிகளையும் பிரபாகரனையும் காப்பாற்ற முடியாது என்பது எனக்குத் தெரியும். ஏனெனில், பிரபாகரன் அசட்டையாக ஓர் நிலையை எடுத்துவிட்டார்.''

''அந்த நேரத்தில் பிரபாகரனையும் புலிகளையும் உலகில் யாருமே காப்பாற்றியிருக்க முடியாது என்பதே உண்மை. அந்நேரத்தில் இந்தியா தலையிடும் என பிரபாகரனுக்கு யாரோ நம்பிக்கை அளித்ததாக கேள்விப்பட்டோம். ஆனால் ஆதாரமில்லை. இந்த நிலையில், திமுகவால் மட்டும் காப்பாற்றியிருக்க முடியுமா என்ற கேள்வியே தேவையற்றது.''

Saturday, 4 May 2019

திமுகதான்... கலைஞர்தான்...தளபதிதான்  சென்னையில் உள்ள பெரும்பாலான மேம்பாலங்களை கட்டியது

திமுகதான்... கலைஞர்தான்...தளபதிதான்  சென்னையில் உள்ள பெரும்பாலான மேம்பாலங்களை கட்டியது
1973
அண்ணா மேம்பாலம்
2000 ( திரு ஸ்டாலின் மேயராக இருந்தபோது)
அடையாறு மேம்பாலம்

காந்தி மண்டபம் மேம்பாலம்
ஆழ்வார்பேட்டை மேம்பாலம்
டாக்டர் ராதாகிருஸ்ணன் சாலை
( மியூசிக் அகாடமி அருகில்)மேம்பாலம்
மற்றும் சிட்டி சென்டர் அருகில்
மேம்பாலம்
பீட்டர்ஸ் சாலை( ராயப்பேட்டை மருத்துவமணை) மேம்பாலம்
மற்றும் சரவணபவன் ஓட்டல் அருகில் மேம்பாலம்
பெரம்பூர் மேம்பாலம்
2006-11 திமுக ஆட்சியில் கட்டப்பட்டவை
ஜி.கே.மூப்பனார் மேம்பாலம்
கோமதி நாராயணச்செட்டித்தெரு மேம்பாலம்
கோடம்பாக்கம் உஸ்மான்சாலை மேம்பாலம்
தியாகராஜாநகர் குமரன் ஸ்டோர்ஸ் மேம்பாலம்
T.R.பாலு அமைச்சராக அனுமதித்த மேம்பாலங்கள்
மீனம்பாக்கம் எதிரில் உள்ள சாலை மேம்பாலம்
கத்திப்பாரா மேம்பாலம்
கோயம்பேடு மேம்பாலம்
பாடி மேம்பாலம்
புழல் மேம்பாலம்
பூவிருந்தவல்லி மேம்பாலம்
இது தவிர
வேளச்சேரி காமாட்சி மருத்துவமனை அருகில் மேம்பாலம் திமுக ஆட்சியில் கட்டப்பட்டதே.
ஆக மொத்தம் திமுக ஆட்சியில் 22 மேம்பாலங்கள் சென்னையில் மட்டுமே கட்டப்பட்டது
மேலும் 2011 திமுக ஆட்சி முடிவில்  சென்னை பெருநகரத்தில் 5 பல்வழிச்சாலை மேம்பாலப் பணிகள் 291.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வந்தன
போரூர் மேம்பாலம்
மூலக்கடை மேம்பாலம்
அண்ணாநகர் 2 வது நிழற்சாலை மேம்பாலம்
திருமங்கலம் முகப்பேர் சாலை- உள்வட்டசாலை சந்திப்பில் பாலம்
வடபழனியில் உள்வட்டசாலை
NSK சாலை சந்திப்பு மேம்பாலம்
நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பு மேம்பாலம்
அண்ணாநகர் 3 வது நிழற்சாலை சந்திப்பு மேம்பாலம் என 5 மேம்பாலப் பணிகள் 2011 ல் நடைபெற்று வந்தது
மொத்தத்தில் சென்னை வளர்ச்சிக்கு வித்திட்டது திமுக மட்டுமே

Antony Parimalam 

Sunday, 7 April 2019

கடந்த காலங்களில் வன்னியர்களுக்கு நன்மை செய்தவர்கள் திமுகவா? அதிமுகவா?

அய்யா மருத்துவர் ராமதாசே
கடந்த காலங்களில் வன்னியர்களுக்கு நன்மை செய்தவர்கள் திமுகவா? அதிமுகவா?

1)
*வன்னியர் சங்கம் இட ஒதுக்கீடு கேட்டு போராடியபோது ஆட்சியில் இருந்தவர்கள் யாருமே உங்களை அழைத்துப் பேசாத நிலையில் உங்களை அழைத்து கோரிக்கையை ஏற்று வன்னியர்களுக்கும் நம்மைப்போல் மிகவும் பின்தங்கிய 107 சாதியினருக்கும் MBC என பிரித்து 20% இடஒதுக்கீடு தந்தது திமுகவா? அதிமுகவா?

2)
*அதிமுக ஆட்சியில் ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் வன்னியர்கள் மீது போடப்பட்ட 11ஆயிரம் வழக்குகளை தள்ளுபடி செய்தது திமுகவா? அதிமுகவா?


3)
*ஒருவார சலைமறியலில் உயிர் இழந்த 24 வன்னியர்கள் குடும்பத்துக்கு 3 லட்சம் நிதியும், மாதம் 3000 பென்ஸனும் வழங்கியது திமுகவா? அதிமுகவா?


4)
*சட்டமன்றத்தில் வன்னியர்கள் மரம் வெட்டிகள் என்று சொன்ன ஜெயலலிதாவுக்கு, இல்லை வன்னியர்கள் இட ஒதுக்கீட்டுப் போராளிகள் என்று அதே சட்டமன்றத்தில் முழங்கியது (கலைஞர் ) திமுகவா? அதிமுகவா?

5)
*ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நீங்கள் போராட்டம் நடத்திய போது உங்களை வேலூர் சிறையில் அடைத்தாரே! அப்போது உங்கள் துணைவியார் சரஸ்வதி சென்று ஜெயலலிதாவை சந்தித்து என்கணவரை விடுதலை செய்யுங்கள் அவர் உடல் நலமில்லாமல் இருக்கிறார் என்று கேட்டதாகவும், பொதுவாழ்க்கைக்கு வருபவர்கள் இதற்கெல்லாம் தயாராக இருக்கவேண்டும் என்று சட்டமன்றத்திலேயே கிண்டல் செய்தவர் ஜெயலலிதாவா? கலைஞரா?


6)
*வன்னியர் சமுதாயத் தலைவர் திரு. ராமசாமி படையாச்சியாருக்கு சென்னையில் சிலை வைத்தது திமுகவா? அதிமுகவா?


7)
*தென்னாற்காடு மாவட்டமாக இருந்ததை இரண்டாகப் பிரித்து ஒரு மாவட்டத்திற்கு திரு. இராமசாமி படையாச்சியார் மாவட்டம் என பெயர்வைத்தது திமுகவா? அதிமுகவா?


8)
*ஒருசாதிக்கு ஒரு மாவட்டமா என அரியலூர் மாவட்டத்தை எடுத்த ஜெயலலிதாவின் ஆணையை ரத்துசெய்து அரியலூரை தனி மாவட்டமாக அறிவித்தது (கலைஞர்) திமுகவா? அதிமுகவா?


9)
*வன்னிய வள்ளல்களின் (செங்கல்வராய நாயக்கர் அரக்கட்டளை) சொத்துக்களை ஒருங்கிணைத்து வன்னிய அறக்கட்டளை அமைத்துக்கொடுத்தது திமுகவா? அதிமுகவா?

10)
*பிற்படுத்தப்பட்டோர் & மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என தனி இலாக்காவை துவங்கி அதற்கு ஒரு அமைச்சரையும் நியமித்து ( எம். ஆர். கே. பன்னீர்செல்வம் ) அந்தத்துறையில் முறையாக இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறதா என கண்காணித்தது திமுகவா? அதிமுகவா?


11)
*மூன்று ஆண்டுகளுக்கு முன் மாமல்லபுறத்தில் நடைபெற்ற வன்னியர் இளைஞர் மாநாட்டின்போது ஏற்பட்ட கலவரத்தில் வன்னியர்கள் மீது சுமார் 150 வழக்குகள் போட்டது திமுகவா? அதிமுகவா?


12)
*மாமல்லபுரம் கலவரத்தில் சுமார் 8000 வன்னியர்கள் மீது வழக்கு போட்டது திமுகவா? அதிமுகவா?


13)
*அதே சம்பவத்தில் 122 வன்னியர்களை குண்டர் சட்டத்திலும், தேசியபாதுகாப்பு சட்டத்திலும் கைது செய்தது திமுகாவா? அதிமுகவா?


14)
*அந்த விழாவே இனி மாமல்லபுரத்தில் வன்னியர்கள் நடத்தக்கூடாது என தடை விதித்தது திமுகவா? அதிமுகவா?


15)
*முதன் முதலாக தேர்தலிலேயே நிற்காமல் அன்புமணிக்கு மாநிலங்களவை உறுப்பினர் தந்து மத்தியில் சுகாதாரத்துறை கேபினேட் அமைச்சர் பதவியும் வாங்கித்தந்தது திமுகவா? அதிமுகவா?


இப்படி பலவழிகளில் வன்னியர்களுக்கு உதவிய திமுகவின் பக்கம் ஒட்டுமொத்த வன்னியர்களும் நிற்கிறார்கள்.

நீங்களோ எச்சை சீட்டுக்கும், பிச்சை நோட்டுக்கும் பச்சையாய் விலை பேசி பாமகவை வித்து விட்டீர்கள்.
'நன்றியை நான்மறவேன்'

நன்றி
மு.ஞானமூர்த்தி

Friday, 5 April 2019

நீட் தேர்வின் கொடூர முகம்...


நீட் தேர்வின் கொடூர முகம்...
மருத்துவப்படிப்பில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தனைபேர்? ஆர்.டி.ஐ. தரும் அதிர்ச்சித் தகவல்
தமிழகத்தில், அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நீட் தேர்வு தகர்த்து வருகிறது.
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில், 2018-19-ம் கல்வி ஆண்டில், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 4 மாணவர்களுக்குத்தான் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது.
அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்தவர்களில் 3 பேருக்குத்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.
தனியார் பள்ளி மாணவர்களில் 20 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.
அதேநேரத்தில், சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களில் 611 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.
மேலும், தமிழகத்தின் பல்வேறு நகரங்களின் இருப்பிடச் சான்றிதழைச் சமர்ப்பித்து, வெளிமாநிலங்களில் பள்ளிப் படிப்பை முடித்த 191 மாணவர்களுக்கு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளதாக RTI தகவல் மேலும் தெரிவிக்கிறது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஒரே ஒரு மாணவருக்குத்தான் இடம் கிடைத்துள்ளது.
அதேநேரத்தில் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 3 பேருக்கும், சி.பி.எஸ்.இ பள்ளிகளைச் சேர்ந்த 283 பேருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.
தமிழக இருப்பிடச் சான்றிதழை சமர்ப்பித்து, வெளிமாநிலங்களில் பள்ளிப் படிப்பை முடித்த 70 பேருக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.
மேலும், கடந்த ஆண்டுகளில் மருத்துவப் படிப்பை முடித்து, இந்த ஆண்டு அரசு மருத்துவக்கல்லூரிகளில் 1,277 பேருக்கும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 557 பேருக்கும் இடம் கிடைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறிவியல் பாடத்தை எடுத்துப் படித்த 3 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களிலிருந்து, 5 பேருக்குத்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்துள்ளது

குறிப்பாக, கடந்த ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, பின்னர் ஓராண்டு நீட் பயிற்சி எடுத்து 1,834 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
மொத்தமுள்ள 3,456 இடங்களில் இது 50 சதவிகிதத்துக்கும் அதிகம். நீட் தேர்வில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக, வெளிமாநிலங்களில் கோச்சிங் எடுக்கின்றனர்.
தமிழகத்தில் முன்பெல்லாம் 99 சதவிகிதம் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்குத்தான் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்து வந்தது. ஒரு சில இடங்களிலேயே சி.பி.எஸ்.இ மாணவர்களுக்குக் கிடைக்கும்.
தற்போது கோச்சிங் சென்டர் செல்பவர்கள் மற்றும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படிப்பவர்களுக்குத்தான் மருத்துவ சீட் என்ற நிலையை நீட் ஏற்படுத்தியுள்ளது

தனியார் கோச்சிங் சென்டர்கள் வருடம் முழுவதும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன
ஆனால், தமிழக அரசின் கோச்சிங் சென்டர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே இயங்கி வருகின்றன.
நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள தீமைகள்
1) ஏழை மாணவர்களுக்கு பெரும் அநீதி
மருத்துவப் படிப்பில் சேருவோரில் 99 விழுக்காட்டினர் தனியார் பயிற்சி மையங்களில் படித்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள மாற்றம் என்பது கோடீஸ்வரர்களால் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடியும் என்பது தான்.
2) அரசுப்பள்ளியில் தமிழக அரசின் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களாக அதிகம் செலவு செய்து பயிற்சி வகுப்புகளில் சேர இயலுமா?
அல்லது
மீண்டும் அடுத்த வருடம் செலவு செய்து NEET தேர்வை எழுத காத்திருக்க முடியுமா?
3) 12 ஆண்டுகள் ஒரு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களிடம் வேறு ஒரு பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்டது அயோக்கியத்தனமில்லையா?
4) அது மட்டுமின்றி வெளிமாநிலங்களுங்கு அனுப்பி அலைக்கழிதல் வேறு
இது உளவியல் ரீதியாக அவர்களை பாதிக்காதா?
ஏழைகளுக்கு சமவாய்ப்பு தராத எந்த தேர்வும் ஒழிக்கப்பட வேண்டும்.
இது காலப்போக்கில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

இந்த நிலையை மாற்ற நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும்.
Antony Parimalam