Wednesday, 6 December 2017

69% இட ஒதுக்கீட்டில் ஜெ உண்மையில் அக்கறை காட்டினாரா? அக்கறை காட்ட வைத்தவர் கலைஞருங்க.

உண்மை என்னவென்றால் 69 சதவீத இடஒதுக்கீட்டில் ஜெய‌ல‌லிதா தானாக அக்கறை காட்டவில்லை அவரை அந்த நிலைப்பாட்டை எடுக்க வைத்தது கலைஞர்தான்.
இடஒதுக்கீடு 69சதவீதம் என்பதற்கு மாறாக 50சதவீத அளவுக்கு மட்டுமே செல்லும் என உச்சநீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியது.
இதன்விளைவாகத்  தொழிற்கல்விகளில் 69சதவீத அளவுக்கு இடங்களை ஒதுக்குவது குறித்த போராட்டம்  மாணவர்கள்   மத்தியில்  பெரிதாக எழுந்தது.
இடஒதுக்கீடு எத்தனை சதவீதம் என்பதை நிர்ணயிக்கும் உரிமையை அந்தந்த மாநில அரசுகளுக்கே வழங்கும் வகையில்  அரசியல்  சட்டத்தில் திருத்தம்  கொண்டு வரவேண்டும் என முதலில் குரல் எழுப்பியது திமுகதான்.
இடஒதுக்கீடு பிரச்சனையில்  ஜெயலலிதா அரசு அப்போது இரட்டைவேடம் போடுவதைப் போல ஒரு கருத்து பத்திரிகையாளர்கள் மத்தியில் இருந்தது.
இதற்குக்  காரணம், 1993இல் உச்சநீதிமன்றத்தில் அளித்த ஒப்புதல் பிரமாணப்பத்திரத்தில் , நீதிமன்றத்தின்  தீர்ப்பையேற்று தமிழகத்தில் 1993-1994 ஆம்ஆண்டுக்கு 50சதவீத இடஒதுக்கீடு வழங்க அதிமுக அரசின் சார்பில் சம்மதம் கொடுத்ததுதான்.
இதனால் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்படும் நேரத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50சதவீத இடஒதுக்கீடுதான் என அறிவிக்கப்படும் நிலை ஏற்பட்டது
இடஒதுக்கீட்டை நீட்டிக்கச் செய்ய அரசியல் அமைப்புச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும் எனவும், இடஒதுக்கீட்டின் அளவு எவ்வளவு என்பதை உள்ளூர் நிலைமைகளின் அடிப்படையில் மாநில அரசே முடிவெடுக்க வழி செய்யும் வகையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் உடனடியாகக்கூட்டி, அரசியல்  சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்து நிறைவேற்ற ஆதரவு அளிக்கக்கோரி கலைஞர் வலியுறுத்தினார்.
அரசியல் சட்டத்தைத் திருத்த ஆதரவு  கேட்டு முன்னாள் பிரதமர்வி.பி.சிங், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் என்.டி.ராமராவ், அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பா.ஜ.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு அப்போது கடிதம் எழுதினார் கலைஞர்.
அந்தக்கடிதங்களுக்கு பா.ஜ.கதலைவர் வாஜ்பாய், வி.பி.சிங், இந்திரஜித்குப்தா, ஜார்ஜ்பெர்னாண்டஸ், ஹர்கிஷண்சிங்சுர்ஜித், சுப்பிரமணியசுவாமி ஆகியோர் ஆதரவு தெரிவித்து கடிதங்களை அனுப்பினர்.
இடஒதுக்கீடுபிரச்சனைக்காக 1994 இல் தி.மு.க உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் மத்திய -மாநிலஅரசு அலுவலகங்கள் முன்பாக மறியல் நடத்தப் போவதாக அறிவித்தன. 
அப்போது அதேநாளில் பந்த் நடத்தப் போவதாக ஜெயலலிதா அறிவித்தார்.
இதனால்,எதிர்க்கட்சியினர் தங்களது மறியல் போராட்டத்தை ஒத்திவைத்தனர். அதற்கும்  ஜெ அரசு அனுமதி மறுத்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை கைதுசெய்து காவ‌ல்துறை பின்னர் விடுவித்தது.
இடஒதுக்கீட்டுப் பிரச்சனையில் தி.மு.க. காட்டிய அக்கறை குறித்தும், அப்போதைய அ.தி.மு.கஅரசு நடந்து கொண்டவிதம் பற்றியும் பத்திரிகைகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.

திமுக ஏற்படுத்திய நிர்ப்பந்தகளாலும் அழுத்தத்தாலுமே முதலில் உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொண்ட  ஜெ பின்பு வேறு வழியின்றி 69% இட ஒதுக்கீட்டிற்கு ஏற்பாடு செய்தார்.

Friday, 10 November 2017

மின் வெட்டுக்கு திமுகவா காரணம்? வீண் பழி சுமந்த திமுக**

மின் வெட்டுக்கு திமுகவா காரணம்?
வீண் பழி சுமந்த திமுக**
ADMK Govt's lack of initiatives to set up new power projects during their regime( 2001-06 ) was the main reason for the power crisis in the State during the DMK regime from 2006-2011.
DMK Government allotted fund to establish 11 new power generation projects during 1996-2001 to generate 1,200 MW of electricity.
This saved the State from power crisis from 2001 to 2006.
But the AIADMK did not invest on any such project 2001-06 five years. This hit the people badly when the DMK was back in power from 2006-2011.
Moreover  Dmk govt attracted a lot of investments for setting up industries for generating new employment opportunities. But, there was no adequate electricity generation to support their needs and this resulted in severe power crisis.
From 2006 to 2011 DMK initiated a host of power projects such as the 600 MW plant at Rs. 3,136 in Ennore, the Rs. 2,475-crore 600 MW thermal power plant in North Chennai, the 800 MW plant at Udankudi at an investment of Rs. 8,362 crore, a 600 MW power plant in Mettur and 183 MW generation through cooperative sugar mills.

All the above projects were expected to be completed by 2013-15 and put an end to power crisis though Dmk were not in power.

Monday, 30 October 2017

கலைஞர் எப்போது ஊழல்வாதியானார்?

"என்னய்யா இந்த அதிமுக இப்படி ஊழல் பண்ணுதேன்னு கேட்டால்"

"ஆமா கலைஞர் மட்டும் யோக்கியமா" அப்படீன்னு பதில் வரும்.

இதற்கு என்ன அர்த்தம்?
அதிமுக என்ன ஊழல் செஞ்சாலும் யாரும் கேட்க கூடாதுன்னு அர்த்தமா?

உண்மையில் அப்படித்தான் பொது மக்களுக்கே ஒரு எண்ணம் வந்துவிட்டது.

"அது சரி ..கலைஞர் எப்ப ஊழல்வாதியானார்" எனக் கேட்டா
"அதான் சர்க்காரியா கமிசன் போட்டாங்களே" என பதில் வரும்.

"சர்க்காரியா கமிசன் அறிக்கையில் சொல்லப்பட்ட சில குற்றச்சாட்டுகள் மீது விசாரணை செய்து 10 வருசம் கழித்து எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் குப்பையில் போட்டதும் தெரியுமா"
எனக் கேட்டால் அதற்கு " அதான் சயின்டிபிக் ஊழல்னு சர்க்காரியாவே சொல்லிட்டாரே" என பதில் வரும்.

" சயின்டிபிக் என்றால் சோதனையில் நிரூபிக்கக் கூடியது என்றுதானே அர்த்தம். கலைஞரின் ஊழல்களை நிரூபிக்க வேண்டியதுதானே" எனக் கேட்டால் பதிலே வராது.

" சரி Ok.. 1989-91 ,1996-2001 இல் கலைஞர் மீது எந்தக் குற்றச்சாட்டும் யாரும் சொல்லவில்லையே ஏன் மீண்டும் கலைஞருக்கு வாய்ப்பு வழங்காமல் 1991-96 இல் ஊழலுக்கு ஆளான அதிமுகவையை தேர்ந்தெடுத்தீர்கள்.?

உங்களுக்கு ஊழல் ஒரு பொருட்டே இல்லை என்றுதானே அர்த்தம்.

"பிறகு ஏன் மீண்டும் மீண்டும் 45 வருடங்களுக்கு முன்பு நடந்ததாக சொல்லப்பட்டு நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டை சொல்லி சொல்லி இன்றும் கலைஞரை ஊழல்வாதி என்கிறீர்கள் " எனக் கேட்டால் மீண்டும் சர்க்காரியா என ஆரம்பித்து கீறல் விழுந்த ரிகார்டு மாதிரி பேச ஆரம்பித்து விடுவார்கள்.

2G வழக்கிலும் ராசா மற்றும் கனிமொழி மீதான குற்றச்சாட்டுகளுக்கு CBI முறையான ஆதாரத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவில்லை என்பது ஊரறிந்த விசயம். தீர்ப்பு ராசாவிற்கு எதிராக வந்தாலும் கூட ராசா மேல்முறையீட்டால் நிச்சயம் விடுவிக்கப்படுவார்.

"1969-1972 வரையிலான காலத்தில் நடந்ததாக MGR கொடுத்த ஆதரமற்ற ஊழல் பட்டியலைத்தானே சொல்றீங்க. அதை மட்டுமே சொல்லி1977-1989 1991-96,2001-06, 2011-17 என எல்லா ஆட்சியிலும் தொடர்ந்து அதிமுக ஊழல் பண்ணுவது சரியா" எனக் கேட்டா சரியான பதிலே வராது.

"ஆட்சியில் இருந்தவனுங்களுக்கு ஊழல் மூலம் பணம் வந்திருக்கலாம். ஆனா கட்சி ஆரம்பிச்சி ஒரு முறை கூட ஆட்சிக்கே வராத சிறு கட்சிக்காரன் எல்லாம் வைத்திருக்கும் கோடிக்கனக்கான பணம் எங்கிருந்து வந்தது.? ஆட்சிக்கே வராம கோடிகளில் புரளும் அவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்தால் தமிழகம் என்ன ஆகும்?" எனக் கேட்டால் கெட்டவார்த்தையால் ஆபாசமா திட்டுவானுங்க.

ஊழல் ஊழல் என்று சொல்லிக் கொண்டே தொடர்ந்து அதிமுகவிற்கே பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டளித்த மக்களுக்கு ஊழல் பற்றி பேசவோ மற்றவர்களை கை காட்டவோ யோக்கியதை இல்லை.

முதுகில் முன்னூறு ஊழல்களை சுமந்துக் கொண்டு கலைஞரை ஊழல்வாதி என்கின்றனர் ஊழல்வாதிகள்.

திமுகவினர் மட்டுமின்றி மற்ற அனைத்து கட்சியிருக்கு மேலே சொல்லப்பட்ட உண்மைகள் புரியும்.
ஆனால் புரியாதது போல
ஊரை ஏமாற்ற நடிக்கிறார்கள்.

Wednesday, 11 October 2017

BJP ஆட்சி வந்தது முதல் இந்திய வங்கிகள் மிகப்பெரிய அழிவை சந்தித்துக் கொண்டுள்ளது.




BJP ஆட்சி வந்தது முதல் இந்திய வங்கிகள் மிகப்பெரிய அழிவை சந்தித்துக் கொண்டுள்ளது.
ஆண்டாண்டிற்கு வாராக் கடன் தள்ளுபடி கற்பனை பண்ண இயலாத அளவு எகிறிவிட்டது ஏன்?
பல லட்சம் கோடிகள் எந்த அடிப்படையில் வாராக்கடன்கள் ஆனது?

ஏன் வங்கிகள் மிகப்பெரிய தொகைகளை உரிய சொத்துக்களை அடமானம் பெறாமல் வழங்கின?

காங்கிரஸ் ஆட்சியில் மிகக் குறைவாக இருந்த வாராக்கடன்கள் BJP ஆட்சியில் பல நூறு சதவீதம் பெருகுவது ஏன்?

எல்லாம் புரியாத புதிர்கள்.

2012 மார்ச் இறுதியில் இந்திய வங்கிகளின் வாராக்கடன் Rs 15,551 crore மட்டுமே.

2004 முதல்2015 வரை 11 ஆண்டுகளுக்கு வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்ட மொத்த  கடன் சுமார்  Rs 2.11 லட்சம் கோடிகளே.

அந்த 2.11லட்சம் கோடிகளில் 2013-14 மற்றும்
2014- 2015 வரையிலான இரண்டாண்டுகளில் மட்டுமே  Rs 1,14,182 கோடிகள்
கடன் வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அதாவது 2004 முதல் 2012 வரை
வங்கிகளின் வாராக்கடன் சதவீதம்  4 % மட்டுமே.


ஆனால் 2013 முதல் 60% எனவும் 2015 இல் 85% எனவும் கடுமையாக உயர்ந்து விட்டது.

வங்கிகளின் கடன் தள்ளுபடி
2012-13.    27231 கோடிகள்
2013-14.    34409
2014-15.    49018
2015-16.    57586
2016-17.    81683

வங்கிகளால் வாராக்கடன் 2015-16 க்குRs 57,586 crore தள்ளுபடி .

அதே வங்கிகளின் வாராக்கடன் 2016-17 க்கு மட்டுமே  Rs 81,683 crore.

வங்கிகளின் மொத்த நிகர லாபம்

2012-13.         45849 கோடிகள்
2013-14.         31513  
2014-15.         30868
2015-16.    ( -)20003 ( நஷ்டம்)
2016-17.             474

எப்படியிருந்த வங்கிகள் இப்படி ஆயிட்டே !!!
என உண்மையில் வருத்தமாகவுள்ளது.

In contrast to the write off amount of Rs 27,231 crore in 2012-13, when banks earned combined net profit of Rs 45,849 crore, the amount of loans written off in 2016-17 trebled to Rs 81,683 crore and the banks combined profits were a Rs 474 crore. Banks have written off a total of Rs 2.46 lakh crore worth of loans in the last five years, the finance ministry data show.

In the past couple of years, PSBs incurred combined net losses of over Rs 19,529 crore, even as the government capital infusion during these two years, at Rs 47,915 crore, was the highest in the last decade. The gross NPA of banks has risen to 9.6 per cent (of total advances) in March 2017, from 9.2 per cent in September 2016, as per the RBI data. The stressed advances ratio declined marginally from 12.3 per cent to 12 per cent due to fall in restructured standard advances, especially in agriculture, services and retail sectors, the data showed


The Reserve Bank of India (RBI) on Thursday announced that it will transfer Rs 30,659 crore as surplus to the government for the year ended June 2017, less than half the amount transferred last year.

For the year 2015-16, the RBI board had approved the transfer of surplus amounting to Rs 65,876 crore to the government. In the previous year 2014-15, the Central bank had paid Rs 65,896 crore to the government, which came as a boon to the government in covering the deficit. The surplus transferred to the government was Rs 52,679 crore in 2013-14. The RBI did not give reasons of the sharp fall in the surplus income for the year ended June 2017.


Despite a series of steps to contain non-performing assets (NPAs), public sector banks (PSBs) wrote off a record Rs 81,683 crore worth of bad loans in the financial year ended March 2017, a jump of more than 41 per cent over the previous year’s write-off amount of Rs 57,586 crore, as per the finance ministry data.

As per a recent analysis by rating agency Crisil, banks are likely to take a haircut of 60 per cent, worth Rs 2.40 lakh crore, to settle 50 large stressed assets with debt of Rs 4 lakh crore.


Even as the government has been trying to shore up public sector banks through equity capital and other measures, bad loans written off by them between 2004 and 2015 amount to more than Rs 2.11 lakh crore. More than half such loans (Rs 1,14,182 crore) have been waived off between 2013 and 2015

In other words, while bad loans of public-sector banks grew at a rate of 4 per cent between 2004 and 2012, in financial years 2013 to 2015, they rose at almost 60 per cent. The bad debts written off in financial year ending March 2015 make up 85 per cent of such loans since 2013.

  Taking suo motu cognizance of The Indian Express report that Rs 1.14 lakh crore of bad loans had been written off by state-owned banks between 2013 and 2015, the Supreme Court Tuesday ordered the Reserve Bank of India (RBI) to share with it names of all defaulters who owe over Rs 500 crore and continue to lead “lavish lifestyle”.

“People are owing thousands of crore to the public banks… it is a big fraud. Top ten public sector banks have written off Rs 40,000 crore alone in 2015.
Defaulters owe 27% of total amount to SBI alone, PNB nextNon-performing assets: Govt-run banks write off record Rs 81,683-crore bad loans in FY17RBI refuses to disclose list of loan defaulters

On February 9, The Indian Express reported that a RTI response from the RBI revealed that while bad loans stood at Rs 15,551 crore for the financial year ending March 2012, they shot up over three times to Rs 52,542 crore by the end of March 2015.

http://indianexpress.com/article/business/banking-and-finance/rbis-dividend-to-government-falls-by-almost-half-to-rs-30659-crore-4791420/

http://indianexpress.com/article/business/business-others/non-performing-assets-govt-run-banks-write-off-record-81683-crore-bad-loans-in-fy17-4785497/

Wednesday, 20 September 2017

கலைஞர் டிவி எப்படி 231 கோடி கடனை அடைத்தது என்பதற்கான விபரம்.

கலைஞர் டிவி எப்படி 231 கோடி கடனை அடைத்தது என்பதற்கான விபரம்.
India Cements.   60. கோடி ,United Spirits Limited   Rs.24.5 crore and Rs.69.62 crore from a subsidiary of Kalaignar TV while Rs.30.41 crore was received as the chaannel's daily collection.
 Rs.46.83 crore was received as open cash credit account with Indian Bank.
மேற்கண்ட விபரப்படியே கடனும் வட்டியும் 231 கோடி சினியூக் நிறுவனத்திற்கு 2010-11 இல் திருப்பி  வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 2007 ஆம் ஆண்டு இறுதியிலேயே 2G லைசென்ஸ்கள் அனுமதிக்கப்பட்டு 2008 முதல் வாரத்தில் உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் சுமார் பத்து மாதம் கழித்தே 2008 அக்டோபருக்கு பின்னரே கலைஞர் டிவி சினியூக் நிறுவனத்திடம் கடன் வாங்குகிறது.இது லஞ்சம் என்றால் 2007 கடைசியிலேயே பணம் கலைஞர் டிவிக்கு வந்திருக்க வேண்டுமே .
மேலும் உலகில் எந்த முட்டாளும் லஞ்சத்தை காசோலையாக வாங்கி  கணக்கில் காட்டி
வருமானவரி அலுவலத்திலும் காண்பிக்கமாட்டான். பணமாக லஞ்சத்தை பெறுவதில் கலைஞர் டிவிக்கு என்ன கஷ்டம்? மற்ற டிவிக்காரர்கள் போல பணமாக பெட்டியில் வாங்கி டிவியில் முதலீடு செய்திருக்கலாமே. !!!!!
கடன் என்பதால்தான் கலைஞர் டிவி அப்பணத்தை கணக்கில் காட்டினார்கள்.

Sunday, 17 September 2017

நவோதயா பள்ளிகளால் நன்மையா அல்லது தீமையா ?- ஓர் அலசல்



நவோதயா பள்ளிகளால் நன்மையா அல்லது தீமையா ?- ஓர் அலசல்

நவோதயா பள்ளிகளுக்கு 6 ஆம் வகுப்பிற்கு ஆண்டிற்கு 80 மாணவர்கள் தேர்தேடுக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் 30 பள்ளிகள் துவங்கினால் 30×80=2400 மாணவர்களை ஒரு ஆண்டில் தமிழகத்தில் சேர்க்கலாம்.

நவோதயா பள்ளியில் சேர 5 ஆம் வகுப்பிலேயே Jawahar Navodaya Vidyalaya Selection Test(JNVST) என்ற Entrance Test அதாவது Neet மாதிரி தேர்வு எழுத வேண்டும். எழுதுபவர்களில் 100 க்கு 2 பேரே மற்ற மாநிலங்களில் தேர்வாகின்றனர்.

தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சுமார் 20,00,000 குழந்தைகள் 5 ஆம் வகுப்பில் பாஸ் ஆகிறார்கள்( 2010 இல் Primary enrollment 9797264 குழந்தைகள்)

இந்த 20 லட்சம் குழந்தைகளில் 2400 பேரை மட்டும் நவோதயா பள்ளிகளில் சேர்ப்பார்கள். அவர்களுக்கு சிறப்பான கல்வி கிடைக்கும். மீதமுள்ள 19,97,600 குழந்தைகளுக்கு சாதாரண கல்வி.
அந்த 2400 பேரில் பலர் Neet எழுதி பாஸ் ஆகமுடியும்.  மற்றவர்கள் கதி?

1) கல்வி கற்பதில் ஏற்றத்தாழ்வை
உண்டாக்காதே

நமது கோரிக்கை ஒரு மாநிலத்தில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் சிறப்பான கல்வி கற்க சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதுதான்

CBSE பள்ளிகளில் கேந்திரிய வித்யாலாயா பள்ளிகளில் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் போல அரசுப்பள்ளி குழந்தைகளுக்கும் சமச்சீரான கல்வி வழங்கப்பட நடவடிக்கை எடுப்பதே மத்திய அரசின் கடமை.
அதை விடுத்து கல்வி கற்பதில் நவோதயா போன்ற பள்ளிகளை நுழைத்து கல்வியில் ஏற்றத்தாழ்வை உருவாக்க வேண்டாம் என்கிறோம்.

தரம் பிரித்து வித்தியாசம் பார்ப்பதால்தான் அனிதா போன்றவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

பல நூறு கோடி ரூபாய்களை ஒரு குறிப்பிட்ட பள்ளிக்கு மட்டும் செலவழிப்பதற்கு பதில், அனைத்துப் பள்ளிகளுக்கும் சமமாக செலவழிப்பது தான் பொதுப்பள்ளி முறை. இதைத்தான் கோத்தாரி குழு பரிந்துரை செய்திருந்தது.  

எனவே நவோதயா  பள்ளிகளைத் தொடங்கி ஏற்றத்தாழ்வை விதைக்காதீர்கள். நியாயப்படுத்தாதீர்கள்

2) நவோதயா பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NEET மாதிரி தேர்வு வைப்பது சரியான நடைமுறையா?

படிக்கவே லாயக்கில்லை என பள்ளியில் இருந்து வெளியே துரத்தப்பட்ட ஆல்பர்ட் ஈன்ஸ்டீன் போன்றவர்கள்தான் பிற்காலத்தில் பெரிய விஞ்ஞானிகள் ஆனார்கள்.

3)நவோதயா பள்ளிகளில் மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் இயங்கும் இந்தப் பள்ளிகளில் மும்மொழிப் பாடத்திட்டம் கடைபிடிக்கப்படுகிறது. அதில் இந்தி மொழி கட்டாயமாகவும், அந்தந்த மாநில மொழியை கற்பிக்கும் மொழியாகவும், அறிவியல், கணிதத்துக்கு ஆங்கிலமும், மனிதவளம் சார்ந்த ஒழுக்கப் பாடங்கள் போன்றவை இந்தியிலும் கற்றுத்தரப்படுகின்றன.

தமிழ்நாட்டின் இரு மொழி கொள்கை இருக்கிறது. நவோதயா பள்ளிகளில் மும்மொழி கொள்கை உள்ளது.
இந்தித் திணிப்பு என்பதை விடவும், நவோதையா பள்ளிகளில் கற்பிக்கப்படும் சமூக அறிவியல் பாடத்தில் தமிழ் மொழி சார்ந்த, தமிழ்நாடு சார்ந்த பண்பாடு, வரலாறு எதுவுமே இல்லை. இதை எப்படி நாம் ஏற்றுக்கொள்ள முடியும். தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளிகளிலும் வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று கோத்தாரி குழு பரிந்துரை செய்த து. இந்த சூழலில் நவோதயா பள்ளிகள் என்ற பெயரில், தகுதி வாய்ந்த குழந்தைகளுக்கு தனியாக பயிற்சி அளித்து உருவாக்குவது சரியான விஷயமாக இருக்காது.

4) நவோதயா பள்ளிகளில் BC, MBC க்கு இட ஒதுக்கீடு கிடையாது. இது தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிரானது

ஒவ்வொரு மாநிலமும் தங்கள் தேவைக்கேற்ப மாநில பாடத்திட்டத்தை வகுத்துக்கொள்ளவும், கற்பித்தலை மேம்படுத்தவும் உரிமை பெற்றுள்ளன. பயிற்று மொழியைத் தீர்மானிக்கும் உரிமையும் மாநில அரசுகளுக்கு உண்டு. ஆனால், மத்திய அரசு அரசியல் சட்டம் அளித்துள்ள சமத்துவம், சமநீதி உரிமைகளை மறுக்கும் வகையில் மத்திய பள்ளிகளை மாநிலங்களில் திணிக்க முற்படுவது ஏற்கத்தக்கது அல்ல.

By Antony Parimalam / A Parimalam

Thursday, 14 September 2017

திமுக தமிழுக்கு என்ன செய்தது? செய்ததை எல்லாம் சொல்ல ஒரு புத்தகமே எழுதலாம் ஒரு சிலவற்றை கீழே தந்துள்ளேன்.

திமுக தமிழுக்கு என்ன செய்தது?
செய்ததை எல்லாம் சொல்ல ஒரு புத்தகமே எழுதலாம்
ஒரு சிலவற்றை கீழே தந்துள்ளேன்.

1)1970ஆம் ஆண்டில் தமிழ்த் தாய் வாழ்த்தை உருவாக்கியது

2) தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறைக்காக ஒரு தனி அமைச்சகத்தை உருவாக்கி அந்தத் துறை 13-5-1996 முதல் செயல்பட்டு வருகின்றது.

3) 1974இல் அன்றைய கழக அரசில் “செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்” நிறுவப்பட்டு, மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர் அவர்கள் அதன் முதல் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

4) 1999 பிப்ரவரியில் உலகத் தமிழ் இணைய மாநாடு தமிழக அரசினால் நடத்தப்பட்டு, கணினியின் விசைப்பலகை ஒரே சீராக்கப்பட்டதுடன், உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

5) ஊர்திகளில் காணப்படும் பதிவெண் பலகைகளில் ஆங்கில எழுத்துக்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது அவற்றைத் தமிழில் எழுதிக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டு ஆணையிடப்பட்டது
6) ஆட்சிமொழித் திட்ட விதிமுறைகளின்படி தலைமைச் செயலகத்தில் 65 சதவீதம் தமிழ்த் தட்டச்சுகள் இருக்க வேண்டும்.

7)திராவிடப் பல்கலைக் கழகம்: தென்னக மொழிகளையும், அவற்றிடையே உள்ள உறவுகளையும், ஊடாடி நிற்கும் பண்பாட்டுக் கூறுகளை யும் உறுதி செய்யும் வகையில் ‘குப்பம்’ எனும் நகரில் “திராவிடப் பல்கலைக் கழகம்” தொடங்கப்பட்டது.

 8) சிறப்புச் சொல் துணையகராதி: 1972 முதல் புதுப்பிக்கப்படாத அகராதிகளில் துறையின் புதிய சொற்கள் சேர்க்கப்பட்டு முதலில் 10 துறைகளுக்குரிய சிறப்புச் சொல் துணை அகராதிகளைப் புதுப்பித்து வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன

9)தமிழக அரசு எடுத்த முயற்சியின் விளைவாக அனைத்து புகை வண்டிகளிலும் தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டன.‘கம்பன் விரைவு வண்டி’, ‘மலைக்கோட்டை விரைவு வண்டி’, வேகத் தொடர் வண்டி’ முதலிய சொற்றொடர்களை புகை வண்டிகளில் இப்போது காணலாம்

10) :தமிழ்நாட்டில் தமிழ்மொழியை ஒரு பாடமாகச் சொல்லித்தரும் மழலையர், தொடக்க நிலைப் பள்ளிகளுக்கே அரசின் ஏற்பு வழங்கப்படும் என்றும், தாய்த்தமிழ் தொடக்கப் பள்ளிகளுக்குக் கட்டணங்களில் சலுகை வழங்கப்படும் என்றும் ஐந்தாம் வகுப்புவரை அனைத்துப் பாடங்களும் தமிழ் அல்லது தாய்மொழியிலேயே பயிற்று விக்கப்படும் என்றும் முதன்மை மொழியாக தமிழ் அல்லது தாய்மொழியே இருக்குமென்றும் அரசு ஆணையிட்டது

11) தமிழறிஞர்களின் நூற்றாண்டு விழாக்கள்: 19.2.97இல் இ.மு. சுப்பிரமணியன்பிள்ளை, மே.வி.வேணுகோபால் பிள்ளை, 24.12.98இல் மங்கலங் கிழார், 4.8.97இல் மனோன்மணியம் சுந்தரனார், 30.10.1999இல் ராய சொக்கலிங்கம், 13.3.2000இல் கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகியோரின் நூற்றாண்டு விழாக்கள் கொண்டாடப்பட்டன.

12) தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெறப்பட்டது

13)மும்மொழித்திட்டத்தை அகற்றி தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளித்து, தமிழகப் பள்ளிகளிலிருந்து இந்திமொழியை அறவே நீக்கியது அண்ணாதான்

14)Tamilnad TAMIL learning Act 2006 ஐ கொண்டுவந்தது
9-6-2006 திமுகதான். இதன் மூலமே தமிழகத்தில் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட்டது.

15) Indian Administrative Exam: If Tamils write the Indian Administrative exam in Tamil, there is a possibility of many getting through the exam. The erstwhile government did not publish any books with this point in mind. A decision to publish books on Tamil Language, history of literature, geography, and history in Tamil was taken and as a first step, the history of Tamil Language was first published.

16) Grammar committee: A grammar committee was formed to write and publish new grammar books for the benefit of modern era students of schools and colleges. The change made was based on the ancient Tamil grammar texts from books such as Tolkāppiyam and Nannul.

17) Encyclopedia: Volumes of the encyclopedia on plays were compiled by Tamil university. Three volumes on music were compiled by Bharathidasan University. Five volumes on medicine were compiled and published by Tamil development board.

18) Tamil shorthand book: About 5,000 copies of Tamil shorthand books were printed and published on 24.12.1998 keeping in mind the necessity of making Tamil shorthand books.   

19) Recruitment board: Arrangements have been made so that the question papers would have Tamil questions followed by the English ones.
20) History of Tamil Nadu: The period of Pallavas – Pandiyas part 2, the period of Cholas Part 1and Part 2 were published. The task of compiling the entire history of Tamil Nadu in a single edition is in process.

தமிழில் கையெழுத்திட அரசு ஊழியர்களுக்கு ஆணை பிறபித்தது

கடைகளில் தமிழில் பெயர் கட்டாயமாக எழுத வேண்டும் என உத்தரவிட்டது
ஐயன் திருவள்ளுவருக்கு 133 அடி சிலை

மொழிப்போர் தியாகிகளுக்கு ஓய்வூதியம் வழங்கியது.அவர்களின் வாரிசு ஒருவருக்கு மேற்படிப்பில்,வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கியது.

தமிழ் வளர்ச்சி துறை எனும் புதிய அமைச்சகத்தை உருவாக்கி அதற்கு முதன் முதலாக தமிழ்குடிமகனை அமைச்சராக்கியது.

கல்லூரிகளில் தமிழ் மன்றம்
தமிழ் வழி மாணவர்களுக்கு ஊக்க தொகை
தமிழ்வழியில் பொறியியல் படிப்பு
தமிழ் வழி பயின்றோருக்கு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் ஒதுக்கீடு
தமிழ்நாட்டின் வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் பலகை
என்ற கட்டாய உத்தரவு

தமிழ்நாடு, சென்னை என பெயர் மாற்றம் செய்தது...