Tuesday 4 September 2018

பட்டியலின மக்களுக்கு நன்மைகள் செய்த ஒரே கட்சி திமுகதான்* ஒரே தலைவர் கலைஞர்தான்*

பட்டியலின மக்களுக்கு நன்மைகள் செய்த ஒரே கட்சி திமுகதான்* ஒரே தலைவர் கலைஞர்தான்*

முதன்முதலாக கலைஞர் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட ஒரு சில மாதங்களில் ஏ.என்.சட்டநாதன் தலைமையில் இந்தியாவிலேயே முதன் முதலாக பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அக்குழு வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் 1971-ம் ஆண்டில் ஆதிதிராவிடர்களுக்கும், பழங்குடியினருக்கும் சேர்த்துப் பல ஆண்டு காலமாக இருந்த இட ஒதுக்கீடு 16 சதவீதம் என்பது 18 சதவீதம் என உயர்த்தப்பட்டது.

பின்னர், 1990-ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பினையொட்டியும், தமிழ்நாட்டிலுள்ள பழங்குடியின மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான 18 சதவீதம் முழுவதையும் ஆதிதிராவிடர் மக்களுக்கென (செட்யூல்ட் வகுப்பினர்) ஒதுக்கீடு செய்ததுடன், பழங்குடியின மக்களுக்கென (செட்யூல்ட் டிரைப்) தனியே ஒரு சதவீதமும் ஒதுக்கீடு செய்து 22.6.1990 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்) ஆணை 1950-ன் கீழ் திருத்தச் சட்டம் 1976 (சட்டம் 108/1976)-ன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 36 சாதியினர் பழங்குடியினர் எனவும், 76 சாதியினர் ஆதிதிராவிடர் இன மக்கள் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீடுகள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் திமுக அரசு மிகுந்த முனைப்புடன் செயல்பட்டது

தமிழ்நாட்டில் வாழும் ஆதி திராவிடர் இன மக்களில் 76 பிரிவினர் உள்ளனர். அவற்றில் அருந்ததியர் ஒரு பிரிவினர் ஆவர். ஆதிதிராவிடர் இன மக்களில் அருந்ததியினர் தமக்கு உள் இட ஒதுக்கீடு கோரி வந்தனர்.

76 பிரிவினர்களாக உள்ள ஆதிதிராவிட இன மக்களில் ஆதிதிராவிடர், பள்ளர், பறையர், சக்கிலியர், மற்றும் அருந்ததியர் ஆகிய 5 பிரிவினர் பெரும்பான்மையினராக உள்ளனர். இந்த 5 பிரிவினர் மொத்த ஆதி திராவிட இன மக்கள் தொகையில் 93.5 சதவீதம். 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் அருந்ததியர் மக்கள் தொகை 7 லட்சத்து 71 ஆயிரத்து 659. சக்கிலிய மக்கள் தொகை 7 லட்சத்து 77 ஆயிரத்து 139. அருந்ததியர் மற்றும் சக்கிலியர் ஆகிய 2 பிரிவுகளையும் சேர்த்தால் அவர்களின் மக்கள் தெகை 15 லட்சத்து 48 ஆயிரத்து 798. இந்த இரு பிரிவினரும் ஆதிதிராவிடரின் மொத்த மக்கள் தொகையில் 13.06 சதவீதம் ஆகும்.

மொத்த ஆதிதிராவிட மக்கள் தொகையான ஒரு கோடியே 18 லட்சத்து 58 ஆயிரம் பேருக்கு 18 சதவீதம் இட ஒதுக்கீடு எனும்போது, அவர்களில் 13.06 சதவீதமான 15 லட்சத்து 48 ஆயிரம் பேரைக் கொண்ட அருந்ததியர் மற்றும் சக்கிலியருக்கு 2.35 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டி வரலாம். தமது கோரிக்கையில், உள் ஒதுக்கீட்டில், இந்து அருந்ததியர்கள், இந்து சக்கிலியர்கள், இந்து மாதாரி, இந்து பகடை என 4 உட்பிரிவுகள் உள்ளன எனவும், இவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக திருமணம் மற்றும் இதர, சமூகச் சடங்குகளை வேறுபாடின்றி நடத்தி வருகின்றனர் எனவும், எனவே அருந்ததியர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்படும்பொழுது இந்து அருந்ததியர், இந்து சக்கிலியர், இந்து பகடை, இந்து மாதாரி என்ற 4 சாதிகளுக்கும் ஒரே அரசாணையாக அறிவிக்கப்பட வேண்டும் எனவும் கோரினர்.

அதை ஏற்று அருந்ததியினருக்கு 3 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கு வதற்கான கொள்கை முடிவு கடந்த 2008-ம் ஆண்டு திமுக ஆட்சியில்தான் எடுக்கப்பட்டது.


பின்னர் அருந்ததியர் சமுதாய மக்களின் முன்னேற்றம் கருதி அவர்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி கலைஞர் கடந்த 29.5.2009 அன்று ஆணையிட்டார்.

இந்த இட ஒதுக்கீட்டின்படி, அருந்ததியர் சமுதாய மக்கள் தமிழக அரசின் கல்வி நிறுவனங்களிலும், வேலை வாய்ப்புகளிலும் அதிக இடங்களைப் பெற்று முன்னேறி வருகின்றனர்.

இந்த 3 சதவீத இட ஒதுக்கீட்டின் செயல்பாட்டினைத் தொடர்ந்து கண்காணித்து, ஆய்வு செய்வதற்காக தமிழக அரசின் தலைமைச் செயலாளரைத் தலைவராகவும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளரை செயல் உறுப்பினராகவும், உள்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைச் செயலாளர், ஆசிரியர் தேர்வாணையக் குழுத் தலைவர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர், ஆதிதிராவிடர் நல ஆணையர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட குழு ஒன்றை அமைத்து கலைஞர்
உத்தரவு பிறப்பித்தார்.

ஆதிதிராவிட மக்களுக்கு சலவைத் தொழிலைச் செய்து, அவர்களுடைய பிறப்பு இறப்புச் சடங்குகளிலே பங்காற்றி, இன்னும் படிப்பறிவிலும், வேலை வாய்ப்பிலும் மிகவும் பின்தங்கியிருக்கின்ற மக்கள், புதிரை வண்ணார்கள் என்று அழைக்கப்படுகின்ற மக்களாவார்கள்.

அவர்களின் மேம்பாட்டிற்கான நல வாரியம் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது. (அரசாணை – G.O.Ms.No.1 14, AD & TW(ADW_6) Department, dated 15.10.2009).

எந்த அரசும் ஏறெடுத்துப் பார்க்காத புதிரை வண்ணார் மக்களுக்காக நல வாரியம் உருவாக்கித் தந்த தலைவர் கலைஞர்.

திமுக ஆட்சியிலிருந்த சுமார் 21 ஆண்டுகளில்  திமுக பட்டியலின மக்களுக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து விட்டதா?

நிச்சயமாக இல்லை. ஆனால் தமிழகத்தை ஆண்ட மற்ற எல்லா கட்சிகளையும்  விட பல மடங்கு அதிகமாக திமுகதான் செய்துள்ளது.


தாட்கோ நிறுவப்பட்டது 1974 இல் திமுக ஆட்சியில்தான்.


இந்நிறுவனம் மூலமாக ஆண்டு தோறும் லட்சக்கணக்கில் பயன் பெறுகிறார்கள். எல்லாவற்றிலும் 50% மானியம் உண்டு. பல திட்டங்கள் இலவசம்.


(Tamil Nadu Adi Dravidar Housing and Development Corporation Limited (TAHDCO) was incorporated in 1974 under the Companies Act, 1956 with a objective to improve socio economic status in Tamilnadu of Adi Dravida people)


தலித் மக்களின் கல்வியறிவை மேம்படுத்த ஆதிதிராவிட பள்ளிகளை உருவாக்குதல்,


ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் அளித்தல்,


தாட்கோ & குடிசைமாற்று வாரியத்தின் மூலம் வீடுகளை கட்டித் தருதல்,


 உயர்கல்வி பெறுவதற்கு சிறப்பு உதவித் தொகை மற்றும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க சிறப்புப் பயிற்சி -

நாட்டிலேயே ஆதிதிராவிடருக்கு என்று தனியாக நலத்துறை அமைத்ததும் அமைச்சரை நியமித்ததும் திமுகதான்

ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோருக்கு தனித்தனி துறைகள்.

ஆதிதிராவிட நலத்துறை அலுவலர்கள் நியமனம்

ஆதிதிராவிடர்களுக்கு இலவச கான்கிரீட் வீடுகள்.

1989,கலைஞர் அரசு, பிஏ, பிஎஸ்சி,பிகாம் படிக்க விரும்பும் பட்டியலினத்திருக்கும், மலை வாழ் சாதியினருக்கும் இலவச கல்வி வழங்கிட சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டார். மேலும் குடும்பத்தில் முதல் வாரிசு யாராவது தொழிற்கல்வி படித்தால், அவர்கள் குடும்பம் ஆண்டிற்கு 15000 ரூபாய்க்கு கீழ் உள்ள பட்டியலினத்தாருக்கும், மலை வாழ் சாதியினருக்கும் கல்வி செலவை அரசே ஏற்கும் என்று அளித்து உத்தரவிட்டார்.

கலைஞர், ஆதி திராவிடருக்கு முந்தைய 1974 ஆட்சியில் 30000 வீடுகளை கட்டி கொடுத்தார், 13 ஆண்டுகளில் வெறும் 36,000 வீடுகளை கட்டி கொடுத்தது அதிமுக அரசு . மீண்டும் 1989-90ல் திமுக ஆட்சியில் 42000 வீடுகளும், 1990-91ல் அதுவே 47000 வீடுகளை கட்டிக்கொடுத்தார். ஆதி திராவிடர்கள் தொழில் முனைவோர் இருந்தால் அவர்களுக்கும் ஆண்டுக்கு 10000 ஊக்கத்தொகை, பிற்பாடு 15000 என்றாக்கி உத்தரவிட்டார்.


2007-ல் தூய்மைப் பணி புரி வோர் நல வாரியத்தை திமுக அரசு தொடங்கியது.


அனைத்து மத்திய மாநில அரசுத் திட்டங்களிலும் ஆதிதிராடர்களுக்கு 33% ஒதுக்கீடும் சிலவற்றில் 50% ம்
வழங்கப்படுகிறது. அது
கட்டாயம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

இந்திரா வீட்டுவசதித் திட்டம் மூலம் வீடுகள் மற்றும்
பெரியார் சமத்துவபுரம் கொண்டு வந்து அனைரும் சமம் என்பதை நிறுவவில்லையா? அதுவும் கலைஞர்தானே.

அம்பேத்கார் பெயரில் சட்டப்பல்கலை கழகம் அமைத்தது கலைஞரே.

கலப்பு திருமண ஆதரவும் ஊக்கத்தொகையும் திமுகதான் வழங்கியது. திமுக ஆட்சியில்தான் மிக அதிக அளவில் பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது

மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்தவர்களுக்கும் இடஒதுக்கீடு என்கிற ஆணையை பிறப்பித்தது திமுகதான்


* முதன்முறையாக தாழ்த்தப்பட்ட வகுப்பாரான வரதராசன் அவர்களை நீதிபதியாக நியமனம்
 *பள்ளி இறுதியாண்டு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் பாணவர்களுக்கு சிறப்பு ஊக்க தொகை
*18 சதவீத ஒடுக்கப்பட்ட மாணவர்களின் இடங்கள் புர்த்தியாகாமல் இருக்கும் நிலையில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களை நியமிக்க தடை விதித்தார்
*இரட்டை மலை சீனிவாசன் நினைவு தபால் தலை வெளியிட்டார்
*உழுபவர்களுக்கு நிலம் சொந்தம் என்ற திட்டத்தின் படி இரண்டு லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தலா இரண்டு ஏக்கர் விவசாய நிலம் வழங்கப்பட்டது
*தாழ்த்தப்பட்ட இனத்தவர் விமான ஓட்டியாக உருவாக இலவச பயிற்சியை தந்தார்
*அறங்காவலர் குழுவிலும் , கூட்டுறவு நிர்வாகத்திலும் கட்டாயமாக தாழ்த்தப்பட்ட இன பிரநிதி கட்டாயம் அறிவித்தார்
*கலை அறிவியல் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சேர்வதற்கு பள்ளி இறுதி தேர்வில் தேர்ச்சி பெற்றாலே போதும் என ஆணை கொண்டு வந்தார் ,பின்னர் இது பொறியியல் கல்லூரிகளிலும் கொண்டு வந்தார்
*சீனிரிட்டி அடிப்படையில் தாழ்த்தப்பட்ட முதன்மை  காவலர்கள் சிறப்பு SIகளாக கலைஞர் காலத்தில் பதவியுயர்வு பெற்றனர்
*கல்நார் வீடுகளை கட்டி தந்தார்
*தமிழ்நாடு தேர்வாணையக்குழுவகன் தலைவராக ஆதிதிராவிடர் முருகராஜ் அவர்களை தலைவராக நியமித்தார்
*தன் இல்லங்களில் தாழ்த்தப்பட்டவர்களை சம்மந்தம் செய்தவர் கலைஞர்.....


இன்னும் செய்வதற்கு ஏராளம் இருப்பினும் 21 வருட ஆட்சியில் இதைத்தான் செய்யமுடியும்.


இதில் வேடிக்கை என்னவென்றால் உயர்சாதியினர் திமுகவை வெறுக்க முக்கிய காரணங்கள்

1) திமுக கலப்பு திருமணத்தை ஆதரிப்பது

2) தீண்டாமையை எதிர்க்கிறது

3) திமுக சாதி ஒழிப்பை முன்னெடுக்கிறது


நடுத்தர சாதியினரில் சிலரும் உயர்சாதியினர் பலரும் திமுக சாதி ஒழிப்பிற்கான கட்சி என நினைத்து திமுகவிற்கு ஓட்டே போடுவதில்லை.


#திமுக_என்னும்_மத்தளத்திற்கு_இரண்டு_பக்கமும்_இடிதான்

Antony Parimalam 

No comments:

Post a Comment