Wednesday, 20 September 2017

கலைஞர் டிவி எப்படி 231 கோடி கடனை அடைத்தது என்பதற்கான விபரம்.

கலைஞர் டிவி எப்படி 231 கோடி கடனை அடைத்தது என்பதற்கான விபரம்.
India Cements.   60. கோடி ,United Spirits Limited   Rs.24.5 crore and Rs.69.62 crore from a subsidiary of Kalaignar TV while Rs.30.41 crore was received as the chaannel's daily collection.
 Rs.46.83 crore was received as open cash credit account with Indian Bank.
மேற்கண்ட விபரப்படியே கடனும் வட்டியும் 231 கோடி சினியூக் நிறுவனத்திற்கு 2010-11 இல் திருப்பி  வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 2007 ஆம் ஆண்டு இறுதியிலேயே 2G லைசென்ஸ்கள் அனுமதிக்கப்பட்டு 2008 முதல் வாரத்தில் உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் சுமார் பத்து மாதம் கழித்தே 2008 அக்டோபருக்கு பின்னரே கலைஞர் டிவி சினியூக் நிறுவனத்திடம் கடன் வாங்குகிறது.இது லஞ்சம் என்றால் 2007 கடைசியிலேயே பணம் கலைஞர் டிவிக்கு வந்திருக்க வேண்டுமே .
மேலும் உலகில் எந்த முட்டாளும் லஞ்சத்தை காசோலையாக வாங்கி  கணக்கில் காட்டி
வருமானவரி அலுவலத்திலும் காண்பிக்கமாட்டான். பணமாக லஞ்சத்தை பெறுவதில் கலைஞர் டிவிக்கு என்ன கஷ்டம்? மற்ற டிவிக்காரர்கள் போல பணமாக பெட்டியில் வாங்கி டிவியில் முதலீடு செய்திருக்கலாமே. !!!!!
கடன் என்பதால்தான் கலைஞர் டிவி அப்பணத்தை கணக்கில் காட்டினார்கள்.

Sunday, 17 September 2017

நவோதயா பள்ளிகளால் நன்மையா அல்லது தீமையா ?- ஓர் அலசல்



நவோதயா பள்ளிகளால் நன்மையா அல்லது தீமையா ?- ஓர் அலசல்

நவோதயா பள்ளிகளுக்கு 6 ஆம் வகுப்பிற்கு ஆண்டிற்கு 80 மாணவர்கள் தேர்தேடுக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் 30 பள்ளிகள் துவங்கினால் 30×80=2400 மாணவர்களை ஒரு ஆண்டில் தமிழகத்தில் சேர்க்கலாம்.

நவோதயா பள்ளியில் சேர 5 ஆம் வகுப்பிலேயே Jawahar Navodaya Vidyalaya Selection Test(JNVST) என்ற Entrance Test அதாவது Neet மாதிரி தேர்வு எழுத வேண்டும். எழுதுபவர்களில் 100 க்கு 2 பேரே மற்ற மாநிலங்களில் தேர்வாகின்றனர்.

தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சுமார் 20,00,000 குழந்தைகள் 5 ஆம் வகுப்பில் பாஸ் ஆகிறார்கள்( 2010 இல் Primary enrollment 9797264 குழந்தைகள்)

இந்த 20 லட்சம் குழந்தைகளில் 2400 பேரை மட்டும் நவோதயா பள்ளிகளில் சேர்ப்பார்கள். அவர்களுக்கு சிறப்பான கல்வி கிடைக்கும். மீதமுள்ள 19,97,600 குழந்தைகளுக்கு சாதாரண கல்வி.
அந்த 2400 பேரில் பலர் Neet எழுதி பாஸ் ஆகமுடியும்.  மற்றவர்கள் கதி?

1) கல்வி கற்பதில் ஏற்றத்தாழ்வை
உண்டாக்காதே

நமது கோரிக்கை ஒரு மாநிலத்தில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் சிறப்பான கல்வி கற்க சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதுதான்

CBSE பள்ளிகளில் கேந்திரிய வித்யாலாயா பள்ளிகளில் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் போல அரசுப்பள்ளி குழந்தைகளுக்கும் சமச்சீரான கல்வி வழங்கப்பட நடவடிக்கை எடுப்பதே மத்திய அரசின் கடமை.
அதை விடுத்து கல்வி கற்பதில் நவோதயா போன்ற பள்ளிகளை நுழைத்து கல்வியில் ஏற்றத்தாழ்வை உருவாக்க வேண்டாம் என்கிறோம்.

தரம் பிரித்து வித்தியாசம் பார்ப்பதால்தான் அனிதா போன்றவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

பல நூறு கோடி ரூபாய்களை ஒரு குறிப்பிட்ட பள்ளிக்கு மட்டும் செலவழிப்பதற்கு பதில், அனைத்துப் பள்ளிகளுக்கும் சமமாக செலவழிப்பது தான் பொதுப்பள்ளி முறை. இதைத்தான் கோத்தாரி குழு பரிந்துரை செய்திருந்தது.  

எனவே நவோதயா  பள்ளிகளைத் தொடங்கி ஏற்றத்தாழ்வை விதைக்காதீர்கள். நியாயப்படுத்தாதீர்கள்

2) நவோதயா பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NEET மாதிரி தேர்வு வைப்பது சரியான நடைமுறையா?

படிக்கவே லாயக்கில்லை என பள்ளியில் இருந்து வெளியே துரத்தப்பட்ட ஆல்பர்ட் ஈன்ஸ்டீன் போன்றவர்கள்தான் பிற்காலத்தில் பெரிய விஞ்ஞானிகள் ஆனார்கள்.

3)நவோதயா பள்ளிகளில் மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் இயங்கும் இந்தப் பள்ளிகளில் மும்மொழிப் பாடத்திட்டம் கடைபிடிக்கப்படுகிறது. அதில் இந்தி மொழி கட்டாயமாகவும், அந்தந்த மாநில மொழியை கற்பிக்கும் மொழியாகவும், அறிவியல், கணிதத்துக்கு ஆங்கிலமும், மனிதவளம் சார்ந்த ஒழுக்கப் பாடங்கள் போன்றவை இந்தியிலும் கற்றுத்தரப்படுகின்றன.

தமிழ்நாட்டின் இரு மொழி கொள்கை இருக்கிறது. நவோதயா பள்ளிகளில் மும்மொழி கொள்கை உள்ளது.
இந்தித் திணிப்பு என்பதை விடவும், நவோதையா பள்ளிகளில் கற்பிக்கப்படும் சமூக அறிவியல் பாடத்தில் தமிழ் மொழி சார்ந்த, தமிழ்நாடு சார்ந்த பண்பாடு, வரலாறு எதுவுமே இல்லை. இதை எப்படி நாம் ஏற்றுக்கொள்ள முடியும். தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளிகளிலும் வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று கோத்தாரி குழு பரிந்துரை செய்த து. இந்த சூழலில் நவோதயா பள்ளிகள் என்ற பெயரில், தகுதி வாய்ந்த குழந்தைகளுக்கு தனியாக பயிற்சி அளித்து உருவாக்குவது சரியான விஷயமாக இருக்காது.

4) நவோதயா பள்ளிகளில் BC, MBC க்கு இட ஒதுக்கீடு கிடையாது. இது தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிரானது

ஒவ்வொரு மாநிலமும் தங்கள் தேவைக்கேற்ப மாநில பாடத்திட்டத்தை வகுத்துக்கொள்ளவும், கற்பித்தலை மேம்படுத்தவும் உரிமை பெற்றுள்ளன. பயிற்று மொழியைத் தீர்மானிக்கும் உரிமையும் மாநில அரசுகளுக்கு உண்டு. ஆனால், மத்திய அரசு அரசியல் சட்டம் அளித்துள்ள சமத்துவம், சமநீதி உரிமைகளை மறுக்கும் வகையில் மத்திய பள்ளிகளை மாநிலங்களில் திணிக்க முற்படுவது ஏற்கத்தக்கது அல்ல.

By Antony Parimalam / A Parimalam

Thursday, 14 September 2017

திமுக தமிழுக்கு என்ன செய்தது? செய்ததை எல்லாம் சொல்ல ஒரு புத்தகமே எழுதலாம் ஒரு சிலவற்றை கீழே தந்துள்ளேன்.

திமுக தமிழுக்கு என்ன செய்தது?
செய்ததை எல்லாம் சொல்ல ஒரு புத்தகமே எழுதலாம்
ஒரு சிலவற்றை கீழே தந்துள்ளேன்.

1)1970ஆம் ஆண்டில் தமிழ்த் தாய் வாழ்த்தை உருவாக்கியது

2) தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறைக்காக ஒரு தனி அமைச்சகத்தை உருவாக்கி அந்தத் துறை 13-5-1996 முதல் செயல்பட்டு வருகின்றது.

3) 1974இல் அன்றைய கழக அரசில் “செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்” நிறுவப்பட்டு, மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர் அவர்கள் அதன் முதல் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

4) 1999 பிப்ரவரியில் உலகத் தமிழ் இணைய மாநாடு தமிழக அரசினால் நடத்தப்பட்டு, கணினியின் விசைப்பலகை ஒரே சீராக்கப்பட்டதுடன், உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

5) ஊர்திகளில் காணப்படும் பதிவெண் பலகைகளில் ஆங்கில எழுத்துக்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது அவற்றைத் தமிழில் எழுதிக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டு ஆணையிடப்பட்டது
6) ஆட்சிமொழித் திட்ட விதிமுறைகளின்படி தலைமைச் செயலகத்தில் 65 சதவீதம் தமிழ்த் தட்டச்சுகள் இருக்க வேண்டும்.

7)திராவிடப் பல்கலைக் கழகம்: தென்னக மொழிகளையும், அவற்றிடையே உள்ள உறவுகளையும், ஊடாடி நிற்கும் பண்பாட்டுக் கூறுகளை யும் உறுதி செய்யும் வகையில் ‘குப்பம்’ எனும் நகரில் “திராவிடப் பல்கலைக் கழகம்” தொடங்கப்பட்டது.

 8) சிறப்புச் சொல் துணையகராதி: 1972 முதல் புதுப்பிக்கப்படாத அகராதிகளில் துறையின் புதிய சொற்கள் சேர்க்கப்பட்டு முதலில் 10 துறைகளுக்குரிய சிறப்புச் சொல் துணை அகராதிகளைப் புதுப்பித்து வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன

9)தமிழக அரசு எடுத்த முயற்சியின் விளைவாக அனைத்து புகை வண்டிகளிலும் தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டன.‘கம்பன் விரைவு வண்டி’, ‘மலைக்கோட்டை விரைவு வண்டி’, வேகத் தொடர் வண்டி’ முதலிய சொற்றொடர்களை புகை வண்டிகளில் இப்போது காணலாம்

10) :தமிழ்நாட்டில் தமிழ்மொழியை ஒரு பாடமாகச் சொல்லித்தரும் மழலையர், தொடக்க நிலைப் பள்ளிகளுக்கே அரசின் ஏற்பு வழங்கப்படும் என்றும், தாய்த்தமிழ் தொடக்கப் பள்ளிகளுக்குக் கட்டணங்களில் சலுகை வழங்கப்படும் என்றும் ஐந்தாம் வகுப்புவரை அனைத்துப் பாடங்களும் தமிழ் அல்லது தாய்மொழியிலேயே பயிற்று விக்கப்படும் என்றும் முதன்மை மொழியாக தமிழ் அல்லது தாய்மொழியே இருக்குமென்றும் அரசு ஆணையிட்டது

11) தமிழறிஞர்களின் நூற்றாண்டு விழாக்கள்: 19.2.97இல் இ.மு. சுப்பிரமணியன்பிள்ளை, மே.வி.வேணுகோபால் பிள்ளை, 24.12.98இல் மங்கலங் கிழார், 4.8.97இல் மனோன்மணியம் சுந்தரனார், 30.10.1999இல் ராய சொக்கலிங்கம், 13.3.2000இல் கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகியோரின் நூற்றாண்டு விழாக்கள் கொண்டாடப்பட்டன.

12) தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெறப்பட்டது

13)மும்மொழித்திட்டத்தை அகற்றி தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளித்து, தமிழகப் பள்ளிகளிலிருந்து இந்திமொழியை அறவே நீக்கியது அண்ணாதான்

14)Tamilnad TAMIL learning Act 2006 ஐ கொண்டுவந்தது
9-6-2006 திமுகதான். இதன் மூலமே தமிழகத்தில் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட்டது.

15) Indian Administrative Exam: If Tamils write the Indian Administrative exam in Tamil, there is a possibility of many getting through the exam. The erstwhile government did not publish any books with this point in mind. A decision to publish books on Tamil Language, history of literature, geography, and history in Tamil was taken and as a first step, the history of Tamil Language was first published.

16) Grammar committee: A grammar committee was formed to write and publish new grammar books for the benefit of modern era students of schools and colleges. The change made was based on the ancient Tamil grammar texts from books such as Tolkāppiyam and Nannul.

17) Encyclopedia: Volumes of the encyclopedia on plays were compiled by Tamil university. Three volumes on music were compiled by Bharathidasan University. Five volumes on medicine were compiled and published by Tamil development board.

18) Tamil shorthand book: About 5,000 copies of Tamil shorthand books were printed and published on 24.12.1998 keeping in mind the necessity of making Tamil shorthand books.   

19) Recruitment board: Arrangements have been made so that the question papers would have Tamil questions followed by the English ones.
20) History of Tamil Nadu: The period of Pallavas – Pandiyas part 2, the period of Cholas Part 1and Part 2 were published. The task of compiling the entire history of Tamil Nadu in a single edition is in process.

தமிழில் கையெழுத்திட அரசு ஊழியர்களுக்கு ஆணை பிறபித்தது

கடைகளில் தமிழில் பெயர் கட்டாயமாக எழுத வேண்டும் என உத்தரவிட்டது
ஐயன் திருவள்ளுவருக்கு 133 அடி சிலை

மொழிப்போர் தியாகிகளுக்கு ஓய்வூதியம் வழங்கியது.அவர்களின் வாரிசு ஒருவருக்கு மேற்படிப்பில்,வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கியது.

தமிழ் வளர்ச்சி துறை எனும் புதிய அமைச்சகத்தை உருவாக்கி அதற்கு முதன் முதலாக தமிழ்குடிமகனை அமைச்சராக்கியது.

கல்லூரிகளில் தமிழ் மன்றம்
தமிழ் வழி மாணவர்களுக்கு ஊக்க தொகை
தமிழ்வழியில் பொறியியல் படிப்பு
தமிழ் வழி பயின்றோருக்கு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் ஒதுக்கீடு
தமிழ்நாட்டின் வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் பலகை
என்ற கட்டாய உத்தரவு

தமிழ்நாடு, சென்னை என பெயர் மாற்றம் செய்தது...

Friday, 21 July 2017

ஹைடிரோ கார்ப்பன் திட்ட பொய் பரப்புரைகளும் அதற்கான உண்மை விபரங்களும்

இணையத்தில் சில திருட்டு பசங்க தழிழகத்தில் ஒரு மெகா பொய்யை கீழ்கண்ட கேள்வி பதிலை எழுப்பி பொய்யை பரப்பி வருகிறார்கள்.
அவருடைய கேள்விகளுக்கும் அவர்களே தந்த பதில்களுக்கும் நமது பதில்கள் தரப்பட்டள்ளது.

*************************************
1)கேள்வி =- இந்த நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எப்ப தொடங்கினாங்க?
பதில்= 1996 இல்
கேள்வி = -அப்ப யார் ஆலங்குடி எம்எல்ஏவா இருந்தா
பதில் = -ராஜசேகர்
கேள்வி= -அவர் எந்தகட்சி?
பதில் =- கம்யூனிஸ்ட் கட்சி.
*************************************நமது பதில் *

நெடுவாசல் திட்டம் தொடங்கப்பட்டு பிறகு கட்டுப்படியாகாது என காங்கிரஸ் அரசால் கைவிடப்பட்ட ஒன்று.
ஆனால் தற்போதைய BJP ஆட்சியில்தான் 2015 செப்டம்பரில்தான் நெடுவாசல் உட்பட 69 இடங்களில் Discovered Small Fields Policy திட்டத்தின் கீழ் ஹைடிரோ கார்பன் எடுக்க மத்திய பிஜேபி மந்திரிசபை முடிவெடுத்தது. அப்போது தமிழகத்தில் அதிமுக ஆட்சி இருந்தது.

சாதாரண MLA  இதை தடுக்க வாய்ப்பேயில்லை.

-------------------------------------------------
2)  கேள்வி =-ஆலங்குடி எந்த பாரளுமன்ற தொகுதிக்குட்பட்டது
பதில் = - சிவகங்கை தொகுதி
கேள்வி =சிவகங்கை தொகுதி எம்பியா அப்ப இருந்தது யாரு?
பதில் = சிதம்பரம்
கேள்வி= அவர் எந்த கட்சி?
பதில் = காங்கிரஸ்
-------------------------------------------------
நமது பதில்*
Discovered Small Fields Policy திட்டத்தின் கீழ் ஹைடிரோ கார்பன் எடுக்க மத்திய பிஜேபி மந்திரிசபை முடிவெடுத்தது என்ற போது நெடுவாசல் திட்டத்திற்கும் காங்கிரஸ் மற்றும் சிதம்பரத்திற்கும் சம்பந்தமேயில்லை.

*************************************
3) கேள்வி = இந்த திட்டத்துக்கு அனுமதி கொடுத்த மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி யாரு?
பதில்= - ஆ.ராசா
கேள்வி - அவர் எந்த கட்சி?
பதில்= - தி.மு.க
-------------------------------------------------
நமது பதில்*

1996 இல் ராசாவா சுற்று சூழல் மந்திரி?
2004 இல்தான் ஆ.ராசா சுற்று சூழல் மந்திரி
ஆகி 3 வருடம் மட்டுமே அப்பொறுப்பில் இருந்தார்.

நெடுவாசல் திட்டத்திற்கு 2015 இல் மத்திய BJP அரசின் சுற்று சூழல் துறை மந்திரிதான் அனுமதி தந்துள்ளார்.

**********************************
4) கேள்வி =1996ல் மத்திய அரசு யார்?
பதில். = காங்கிரஸ் ஆட்சி
கேள்வி = தமிழ்நாட்டில் அப்போது யார் ஆட்சி ?
பதில் = திமுக ஆட்சி
-------------------------------------------------
நமது பதில்*

இந்த கேள்வி சகுனித் தனமானது.
 தமிழகத்தில் Oil  and natural gas எடுக்கும் பணி 1986 முதல் நரிமனம் , களப்பாள் ஆகிய இடங்களில் தொடங்கி 35 இடங்களில் நடந்து வருகிறது.
அப்போது அதிமுக ஆட்சி

 அதற்கு முன் 1959 வாக்கிலேயே   ஆய்வு பணிஆரம்பிச்சாச்சி.

1977 இல் இருந்து 2017 வரை அதிமுக 29 வருசம் ஆட்சியில் இருந்துள்ளது. திமுக 12 வருடமே ஆட்சியில் இருந்துள்ளது.

இந்த 41 வருட காலத்தில்தான் 35 இடங்களில் கிணறுகள் தோண்ட அனுமதிக்கப்பட்டு மீத்தேன்  எடுக்கப்பட்டு வருகிறது.

1985 லேயிருந்து இவ்வாறு எடுக்கப்படும் குரூட்ஆயில் மற்றும் இயற்கை வாயுக்களுக்கு ஆண்டுதோறும் ONGC தமிழக அரசிற்கு ராயல்டியும் வாட் வரியும் செலுத்துகிறது என்பதாவது தெரியுமா மடையர்களே.?

2014-15 க்கு மட்டுமே, தமிழக அரசுக்கு , ONGC மீத்தேன் எடுத்ததற்காக 300 கோடி ராயல்டி கொடுத்ததாவது எவனுக்காவது தெரியுமா?

இன்றைக்கும் தினமும் காவேரி படுகையில்3.8 மில்லியன் கியூபிக் மீட்டர் மீத்தேனும் 700 டன் ஆயிலும் ONGC யால் எடுக்கப்படுவதாவது தெரியுமா  ?

1959 முதல் 105 ஆயில் கிணறுகள் தோண்டப்பட்டுள்ளது.

அதற்கு மத்தியில் காங்கிரஸ்,  பாஜாகா அரசுகளே அனுமதி வழங்கியுள்ளன.

*************************************
5) கேள்வி = இப்ப போராட்டம் செய்யும் கட்சிகள் யார் யார்?
பதில் = திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்
கேள்வி =- அப்ப எதுக்கு போராட்டம் பன்னுறீங்க ???
பதில்= பாஜக தமிழ் நாட்டில் காலூன்ற கூடாது..
கேள்வி =- அப்ப என்னதான் இதற்கு முடிவு
பதில் = - அது தெரிஞ்சா நாங்க ஏன் தமிழ்நாட்டுல பொறக்கிறோம்
ஓ...அப்படியா?
************************************
நமது பதில்:-

தற்போதுதான் மக்களிடம் விழிப்புணர்வே வந்துள்ளது.
BJP யையும் அதன் அடிமையான அதிமுகவையும் எதிர்த்தே போராட்டம் நடக்கிறது ஏன் தெரியுமா?

ONGC தமிழகத்தில் கதிராமங்கலம் போல மேலும் 110
இடங்களில் எண்ணை எடுக்க
மத்திய Power ministry அனுமதி வழங்கியுள்ளது தமிழக பிஜேபி குஞ்சுகளுக்கு தெரியுமா

http://m.dailyhunt.in/news/india/english/asianet+newsable-epaper-asnewsab/ongc+plans+to+construct+wells+in+tamil+nadu-newsid-69517675

The Ministry of Power கீழ்கண்ட இடங்களில் எண்ணை கிணறுகளை தோண்ட போகிறது.

 5 கிணறுகள் காளி என்னுமிடத்திலும் குத்தாலத்தில் 10,  நரிமணத்தில் 10, அடியக்கமங்களத்தில் 5 , கீவளூரில் 3 , நன்னிலத்தில் 5, ஆதிச்சப்புரம் 4 , வடக்கு கோவில் களப்பாள்10, மாத்தூர் 3, பந்தநல்லுர்10, காஞ்சிரன்குடியில் 10, பெருங்குளம் பெரிய பட்டினம்10 இங்களிலும் பாக் ஜலசந்தியிலௌ 5 இடங்களிலும்
இனி வருங்காலங்களில் ONGC கிணறுகள் தோண்டப்போகிறது.

தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் தாண்டியே மேற்கண்ட திட்டங்களை தீட்டியுள்ளது BJP அரசு.
அதற்கு இதுவரை அதிமுக அரசு அனுமதி வழங்காவிடினும் பிஜெபியின் அழுத்தத்திற்கு அடிபணியாது என்று சொல்ல முடியாது.


http://m.timesofindia.com/city/chennai/ONGC-steps-on-the-gas-locals-put-brakes/articleshow/48647239.cms

Monday, 17 July 2017

நன்றி கெட்டவர்களே*** கலைஞர் இல்லையென்றால் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி என்பது பூஜ்யமே. இன்றைய தொழில் வளர்ச்சி கலைஞர் தந்த நன்கொடை .

நன்றி கெட்டவர்களே***
கலைஞர் இல்லையென்றால் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி என்பது பூஜ்யமே. இன்றைய தொழில் வளர்ச்சி கலைஞர் தந்த நன்கொடை .

தமிழகத்தில் திமுக ஆட்சி வரும் முன் பெரிய தொழிற்சாலைகள் மட்டுமே உருவானது. ஆனால் சிறு தொழில்கள் மீது அக்கறை காட்டப்படவில்லை.

சிறுதொழில்கள் வளர்ந்தால் மட்டுமே ஒட்டு மொத்த சமுதாயமே வளர்ச்சி பெறும் என்பதை முதன் முதலாக உணர்ந்தவர் கலைஞரே.
அவரே தொழில்துறை புரட்சிக்கு வித்திட்டவர்.

தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி கழகம் The Tamil Nadu Small Industries Development Corporation Limited (SIDCO)
 16.3.1970 அன்று திமுக ஆட்சியில் கலைஞரால் தமிழக சிறுதொழில் வளர்ச்சிக்கென உருவாக்கப்பட்டது

#நோக்கங்கள்

தமிழகம் முழுவதும் தொழில் பேட்டைகள் அமைத்து அதனை பராமரித்தல்

தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களை
வழங்கல்

மார்க்கெட்டிங் அமைப்புகளை அமைத்து பொருள் விற்பனைக்கு உதவுதல்

தமிழக அரசு ஆரம்பத்தில்  35  தொழிற்பேட்டைகளை உருவாக்கியது.

பின்னர் நிர்வாகம்
 agency terms அடிப்படையில் சிட்கோவிடம் 1974 இல் ஒப்படைக்கப்பட்டது
. SIDCO இதுவரை தானாக 59 தொழிற்பேட்டைகளை 1970
முதல் உருவாக்கி இன்று 94 தொழிற்பேட்டைகள் தமிழகத்தில் உள்ளது என்றால் அதற்கு கலைஞர் மட்டுமே காரணம்.

அவ்வாறே திமுக ஆட்சியில்தான் கலைஞரால்
State Industries Promotion Corporation of Tamilnadu Ltd (SIPCOT) என்ற தொழில் வளர்ச்சி கழகமும்  1971ஆம் ஆண்டு தமிழகத்தில் பெரும் தொழில்கள் உட்பட ஒட்டு மொத்த தொழிற் வளர்ச்சிக்கென உருவாக்கப்பட்டது.

SIPCOT தமிழகம் முழுமையாக இதுவரை 20 Industrial Complexes ஐ 12 மாவட்டங்களில் உருவாக்கியுள்ளது.  ஆறு செக்டார்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்கியுள்ளது  Special Economic Zones (SEZs).

பெண் தொழிற் முதலீட்டாளர்களை உருவாக்கியது திமுகதான்

தொழில் வளர்ச்சியில் பெண்களுக்கு என தனியே தமிழகத்தில் கீழ்கண்ட 5 இடங்களில்
Women Industrial Parks  developed
5 இடங்களில் உருவாக்கப்பட்டது

1)கருப்பூர்  (Salem Dist.)
 வாளவந்தான் கோட்டை  (Trichy )
2) திருமுல்லைவாயில் (Thiruvallur )
3) திருமுடிவாக்கம்  (Kancheepuram )
4)கப்பலுர் (Madurai )
இதில்  Micro
Enterprises  G.O.Ms.No.7 MSME.Dept. dated 31.01.2009 படி 30% இடம் ஒதுக்கப்பட்டதுடன்

• 30% for பெண் Entrepreneurs
• 10% for Ex-servicemen
• 10% for SC/ST and Transgender.
 எனவும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டது.

1973ஆம் ஆண்டில் இராணிப்பேட்டையில் 729.78 ஏக்கர் பரப்பில் ஒரு தொழில் வளாகம் உருவாக்கப்பட்டு அங்கே 168 கோடி ரூபாய் முதலீட்டில் 107 புதிய தொழில்கள் தொடங்கப்பட்டது.

1974ஆம் ஆண்டில் ஓசூரில் 1236 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டாவது தொழில் வளாகம் அமைக்கப்பட்டு, அதில் 500 கோடி ரூபாய் முதலீட்டில் 186 தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டது.


1989ஆம் ஆண்டில் கழக ஆட்சியில் இராணிப்பேட்டையில் இரண்டாம் பிரிவு தொழில் வளாகம் 133 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டு அங்கே 99 புதிய தொழில்கள் தொடங்கப்பட்டு 3400 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது.

 ஓசூரிலும் இரண்டாம் பிரிவு தொழில் வளாகம் 457 ஏக்கர் நிலப்பரப்பில் 64 புதிய தொழில்களுடன் தொடங்கப்பட்டு, அங்கே ஏறத்தாழ 6 ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெற்றனர்.

1996இல் நான்காவது முறையாக கழக அரசு அமைந்த பின், திருப்பெரும்புதூர், இருங்காட்டுக் கோட்டை, கும்மிடிப்பூண்டி ஏற்றுமதி வளாகம் ஆகிய இடங்களில் சிப்காட் நிறுவனத்தால் புதிய தொழில் வளாகங்கள் அமைக்கப்பட்ட்டது.

ஆனால் 1975 க்கு பின் மீண்டும் 1989-91 மற்றும் 1996-2001 காலங்களில் தான் ஆட்சிக்கு வரமுடிந்தது. இடைப்பட்ட காலம் தமிழக தொழிற் வளர்ச்சியின் இருண்ட காலம்.

தமிழகத்தில் #தகவல்_தொழில்நுட்பத்_துறையின்_தந்தை_கலைஞர் . அவரது ஆட்சிக் காலத்தில் தான் தமிழகத்தில் ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் உருவாகின. கடந்த திமுக ஆட்சியில் தொழில் தொடங்குவதில் ஐ.டி.நிறுவனங் களுக்கு முன்னுரிமை அளிக்கப் பட்டது.

முதல்முதலாக தகவல் தொழிற்நுட்ப கொள்கை கலைஞரால்தான் 1997 இல் உருவாக்கப்பட்டது.

டைடல் பூங்கா (Tidel Park) சென்னையின் தரமணி பகுதியில் அமைந்த தகவல் தொழில்நுட்பக் கட்டிடம் ஆகும்.இதை உருவாக்கியது #கலைஞர்தான். ராஜீவ் காந்தி சாலையில் அமைந்துள்ள இக்கட்டிடம் 2000இல்
திறக்கப்பட்டது. டைடல்பார்க், ஆசியாவில் உள்ள மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பக் கட்டிடங்களில் ஒன்றாகும். இக்கட்டிடம், 119,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது

கடந்த தி.மு.க., ஆட்சியின் போது, சென்னைக்கு அடுத்ததாக, கோவையில் 380 கோடி ரூபாய் மதிப்பில், பிரமாண்டமான தகவல் தொழில் நுட்பப் பூங்கா (டைடல் பார்க்) கட்டப்பட்டது. மொத்தம் 17 லட்சம் சதுர அடி பரப்பில், எட்டு தளங்களுடன், சென்னை “டைடல் பார்க்’கை விட இது பெரிய அளவில் அமைக்கப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சியினர் அதை சரியான பயன்பாட்டிற்கு இதுவரை கொண்டுவரவில்லை.

ஐ.டி. துறையில் முதல் 3 மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்ந்தது. அதிமுக அரசிடம் தொலைநோக்குப் பார்வை இல் லாததால் தமிழகத்தில் ஐ.டி. துறை பின்தங்கியுள்ளது. புதிய ஐ.டி. பூங்காக்கள் எதுவும் உரு வாகவில்லை. இருக்கும் ஐ.டி. நிறுவனங்களும் செயலிழந்து காணப்படுகின்றன. தமிழகத்தில் ஐ.டி. துறையில் தேர்ச்சி பெற்ற ஏராளமான இளைஞர்கள் இருக் கிறார்கள். அவர்கள் மூலம் ஐ.டி. துறையில் புரட்சியை ஏற்படுத்த முடியும்.

 இன்றைய தேதியில் 3,50,000 பேர் 1750 ஐ.டி கம்பெனிகளில் தமிழக ஐ.டி. துறையில் வேலைப் பார்க்கிறார்கள். 2010-11 இல் மட்டும் 42100 கோடி சாப்ட்வேர் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி ஆகியிருந்தது.

அது மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான தொழிற்சாலைகள் திமுக ஆட்சியில்தான் அனுமதி பெற்று துவங்கப்பட்டது.

இப்படி தமிழகத்தின் தொழிற்வளர்ச்சிக்கு வித்திட்ட கலைஞரை தமிழக தொழிற்புரட்சியின் தந்தை எனலாம்.

ஆனால் இந்த உண்மைகளை யாரும் பேசுவதில்லை என்பதே வருத்தமளிக்கும் செய்தி.


Tuesday, 11 July 2017

இன்னைக்கு நேத்தாடா மீத்தேன் எடுக்குறான்? 1986 இல் இருந்து தமிழ்நாட்டில் மீத்தேன் எடுக்குறான் ONGC காரன்.

இன்னைக்கு நேத்தாடா மீத்தேன் எடுக்குறான்? 1986 இல் இருந்து தமிழ்நாட்டில் மீத்தேன் எடுக்குறான் ONGC காரன்.

இவனுங்க என்னோமோ
தமிழகத்தில் மீத்தேன் எடுக்கிற வேலை இன்னைக்கு தொடங்கியது மாதிரியே பேசுறானுங்க பிராடு பசங்க.

மீத்தேன் என்பது Natural gas இல் 75% உள்ள CH4 hydro carbon ஆகும்.

தமிழகத்தில் Oil  and natural gas எடுக்கும் பணி 1986 முதல் நரிமனம் , களப்பாள் ஆகிய இடங்களில் தொடங்கி 35 இடங்களில் நடந்து வருகிறது.

 அதற்கு முன் 1977 வாக்கிலேயே   ஆய்வு பணிஆரம்பிச்சாச்சி. அப்போது MGR ஆட்சிதானே நடந்தது. முதன்முதலில் மீத்தேன் எடுக்க அனுமதி தந்ததே MGR தானேடா.

1977 இல் இருந்து 2017 வரை அதிமுக 29 வருசம் ஆட்சியில் இருந்துள்ளது. திமுக 12 வருடமே ஆட்சியில் இருந்துள்ளது.

இந்த 41 வருட காலத்தில்தான் 35 இடங்களில் கிணறுகள் தோண்ட அனுமதிக்கப்பட்டு மீத்தேன்  எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த 35 கிணறுகளுக்கும் திரு ஸ்டாலினா அனுமதி தந்தார்.?

உண்மை என்னவென்றால் அவர் ஒரு கிணறுக்குமே அனுமதி தந்ததில்லை.

1985 லேயிருந்து இவ்வாறு எடுக்கப்படும் குரூட்ஆயில் மற்றும் இயற்கை வாயுக்களுக்கு ஆண்டுதோறும் ONGC தமிழக அரசிற்கு ராயல்டியும் வாட் வரியும் செலுத்துகிறது என்பதாவது தெரியுமா மடையர்களே.?

2014-15 க்கு மட்டுமே, தமிழக அரசுக்கு , ONGC மீத்தேன் எடுத்ததற்காக 300 கோடி ராயல்டி கொடுத்ததாவது எவனுக்காவது தெரியுமா?

இன்றைக்கும் தினமும் காவேரி படுகையில்3.8 மில்லியன் கியூபிக் மீட்டர் மீத்தேனும் 700 டன் ஆயிலும் ONGC யால் எடுக்கப்படுவதாவது தெரியுமா மரமண்டைகளே ?

மன்னார்குடி பகுதியில் #மீத்தேன்ஆய்வுக்குதான் திரு ஸ்டாலின் அனுமதி வழங்கினார். #மீத்தேன்எடுப்பதற்கு அல்ல. தற்போது அனுமதி வழங்கப்பட்ட அந்த கம்பெனியே ஒதுங்கிக்கொண்டது. இது முடிந்து போன கதை.

 இப்படி  மீத்தேன் ஆய்வுக்கு வழங்கிய  அனுமதியை அப்படியே திரித்து மீத்தேன் ஆய்வு செய்ய இப்போதுதான் முதன் முறையாக அனுமதி கொடுத்ததாக ஒரு மிகப்பெரிய பொய்யை அவிழ்த்துவிட்டு  அப்பாவி இளைஞர்கள் மனதில் நஞ்சை
விதைக்கின்றனர் அயோக்கிய அரசியல்வாதிகள்.

திமுகவின் பிச்சையால் 5 வருடம் MPயாக மத்திய மந்திரியாக இருந்த அன்புமணி காவேரி டெல்டாவில் கடந்த 41 ஆண்டுகளாக ONGC யால் இயற்கைவாயு எடுக்கப்படுவதை ஒருமுறையாவது எதிர்த்தாரா?
ஏன் எதிர்க்கவில்லை?

நெடுவாசலுக்கு பின்தானே உங்க எல்லோருக்கும் ஞானதோயமே வந்தது?  அதற்கு முன் ஏன்டா கடந்த 40 வருசமா எவனுமே போராடல?

நாற்பது வருசமா குறட்டை விட்டு தூங்குவானுங்களாம். திடீரென விழிச்சிகிட்டு திமுக மேலேயும் திரு. ஸ்டாலின் மேலேயும் பழி போட்டு இவனுங்க எல்லாம் புனிதர் ஆயிடுவானுங்களாம்.

போங்கடா ...போய் இனிமேல் ஆக வேண்டியதை பாருங்கடா.


C N S Kumar, deputy general manager incharge of ONGC's corporate communications, told TOI, adding that the firm produces 700 tons of oil and extracts 3.8 million cubic metres of natural gas per day . "Last financial year 2014-15 alone we contributed `300 as royalty and `110 crore as VAT to Tamil Nadu government," he said.

By Antony Parimalam

MOU அப்படீன்னா என்ன?
இது வெறும் ஆரம்ப நிலை. அதாவது சாதாரண புரிந்துணர்வு ஒப்பந்தம்.  தமிழக அரசால் இது மாதிரி ஆயிரக்கணக்கில் ஒப்பந்தம்  போடப்பட்டு தூங்கிட்டு இருக்கு.
GEECL proposed to invest Rs.100 crore initially for the exploration activity and once the commercial viability and feasibility was established, it would further invest Rs.3500 crore on production of CBM.
இந்த ஒப்பந்தம் GEECL யுடன் 2011 ஜனவரியில் போடப்பட்டது. இதில் 100 கோடி செலவில் ஆய்வுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது.
அதாவது Exploration பணிக்கு மட்டுமே.
எண்ணை கிடைத்தால் மேலும் 3500 கோடி முதலீடு செய்யப்படும் என்றே சொல்லப்பட்டுள்ளது.

மக்கள் எதிர்ப்பால் இந்த ஆய்வு பணியே தற்போது நிறுத்தப்பட்டு விட்டுவிட்டது.

நிச்சயம்தான் நடந்தது. ஆனா கல்யாணம் நடந்து புள்ளையே பெற்றதாக பேசிகிட்டு திரியாதீங்க

மேலும் அந்த ஒப்பந்தத்தில் மக்களிடம் அனுமதி பெற வேண்டும் என்ற நிர்பந்தம் உள்ளதை மறந்து பேசக் கூடாது

எனவே ஆய்வுக்கு தந்த அனுமதியை மீத்தேன் எடுக்க தந்த அனுமதியாக திரிக்கக் கூடாது

Monday, 10 July 2017

கலைஞர் வன்னியருக்கு செய்தது துரோகமா? ஏன் இந்த பிதற்றல்? 40000 வழக்குகளை வாபஸ் பெற்றது யார்?

கலைஞர் வன்னியருக்கு செய்தது துரோகமா? ஏன் இந்த பிதற்றல்? 40000 வழக்குகளை வாபஸ் பெற்றது யார்?

MBC பிரிவில் 144 to 252 வரை 109 சாதிகள் உள்ளன.

இந்த மொத்த சாதிகளின் மக்கள் தொகையையும் சேர்த்தால் அதில் வன்னியர்கள் 90% இருப்பர். மற்ற 108 சாதிகளையும் சேர்த்தால் 10% கூட தேறாது.

இட ஒதுக்கீடு கேட்டு போராடாத அந்த 10% மக்களை கலைஞர் MBC யில் சேர்த்தது தப்பாம் ,துரோகமாம்.

அந்த 10% பிரிவினர் சமுதாயத்தில் வன்னிய மக்களை விட மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களே.

அவர்கள் சிறு குழுவினரே. போராடும் அளவிற்கு வலிமை பெற்றவர்கள் அல்ல. அவர்களை கலைஞர் விட்டு விட்டு MBC ஒதுக்கீடு செய்திருந்தால் அது சட்டப்படி செல்லாது.

அந்த 10% இல் உள்ளவர்கள் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட மிகவும் மோசமான நிலையில் உள்ளவர்களும் அடங்கும். அவர்கள் நீதிமன்றம் சென்று எளிதாக MBC இட ஒதுக்கீடு ஆணைக்கு தடை வாங்கிவிட முடியும்.

இதெல்லாம் தெரிந்தே கலைஞர் மிக மோசமான நிலையில் இருந்த அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து MBC யை உருவாக்கினார்.

உண்மையில் இன்று MBC கோட்டா மூலம் பயன் பெறுபவர்களில் 80% வன்னிய மக்களே.

மேலும் MGR ஆட்சியில் போராட்டம் நடத்திய வன்னிய மக்கள் மீது 40000 வழக்குகள் போடப்பட்டிருந்தன.
1989 இல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னரே 40000 வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டது.

மேலும் போராட்டத்தால் இறந்த 23 நபர் குடும்பங்களுக்கும் 3000 ரூ
மாதாந்திர solatium வழங்கவும் கலைஞரால்தான் உத்தரவிடப்பட்டது.

வன்னிய மக்களுக்கு வீரப்பாண்டியார் வேண்டுகோள் ஏற்று நன்மை செய்தது கலைஞர்.
ஆனால் அதை வைத்து கட்சி ஆரம்பித்து பலனடைந்தது ராமதாஸ். ஆனால் அத்துடன் நிறுத்தினாரா? வன்னியர்களுக்கு துரோகம் செய்த அதே அதிமுகவின் ஊழல் தலைவி 2001 இல் ஆட்சிக்கு வர உழைத்தவர் ராமதாஸ்தான்.

2001 க்கு பின்தான் தமிழகத்தில் சாராயம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது. அதாவது ஜெயா மூலம் மிடாஸ் சாராயம் பெருக்கெடுத்து ஓட துணை நின்றவர் இதே ராமதாஸ்தான்.

2011 வரை நண்பர்களாக தெரிந்த கலைஞரும் தளபதியும் இன்று துரோகிகளாக தெரிகின்றனர்.
இதை விட கலைஞருக்கு வேறு யாரும் துரோகம் செய்ய முடியாது.


நீங்க கலைஞருக்கு நன்றி சொல்ல வேண்டாம். ஆனால் ஆபாச அருவெறுப்பான வார்த்தைகளால் திட்டாமலாவது இருங்கள்.