Sunday 2 July 2017

1972 முதல் தினமலர் தினமனி இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற எண்ணற்ற அவாள் சார்பு பத்திரிக்கைகள் பார்த்த பார்ப்பு வேலைகள்**

1972 முதல் தினமலர் தினமனி இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற எண்ணற்ற அவாள் சார்பு பத்திரிக்கைகள் பார்த்த பார்ப்பு வேலைகள்**

தமிழகத்தின் இன்றைய மோசமான நிலைக்கு காரணம் இவர்களே.
அய்யகோ கலைஞர் வந்துட்டாரே.... இனி நமது சித்து வேலைகளுக்கு முடிவு வந்துடுமே என நினைத்து பதுங்கி கிடந்த அந்த ஆதிக்கசாதியினருக்கு தெய்வம் போல கிடைத்தவர் MGR.

இந்திராவின் மிரட்டலுக்கு அஞ்சி கட்சி ஆரம்பித்த எம்ஜிஆரை நம்பி பெரிய சினிமா ரசிக கூட்டமும் பெண் ரசிகைகளும் பட்டியலின மக்களில் பெரும்பகுதியினர் என பெருங்கூட்டமே அவருடன் சென்றனர். தன்னை அரசியலில் நிலைநிறுத்திக் கொள்ள MGR கையில் எடுத்த ஆயுதம்தான் "கலைஞர் ஊழல்வாதி " என பொய் பரப்புரை.

எப்போது கலைஞரை ஒழித்துக்கட்டலாம் என காத்திருந்த அவாள் கையிலிருந்த ஆதிக்க ஊடகங்கள் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எம்ஜிஆரை உத்தமராகவும் கலைஞரை ஊழல்வாதியாகவும் முத்திரை குத்தி தொடர்ந்து பிரட்சாரம் செய்ய ஆரம்பித்தன.

10 வருசம் ஆட்சியில் இருந்தும் சர்க்காரியா கமிசன் அறிக்கையை வைத்து எம்ஜிஆரால் , கலைஞர் மீதான புகார்களுக்கு ஆதாரம் இல்லாததால் , எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. அதை மறைக்க சயின்டிபிக் கதைகளை அவிழ்த்து விட்டனர் ஊடகத்தினர். அந்த சயின்டிபிக் கதையை வைத்துதான் 45 வருசமாக இன்றும் ஓடிக்கொண்டுள்ளனர் பொறுக்கி ஊடகத்தினர்.

MGR உத்தமர் வேடம் பூண்டிருந்ததால் பத்திரிக்கைகள் அவர் மீதான சாராய ஊழல் முதல் எண்ணற்ற ஊழல்களை மூடி மறைத்தனர்.

அவர்களது ஒரே எண்ணம் எம்ஜிஆர் ஜெயலலிதா பன்னீர் எடப்பாடீ ஆகியோர்களை திராவிடர்களாக முன்னிறுத்தி ஆரியர்கள் ஆட்சியை மறைமுகமாக நடத்துவது.

இதற்காக இந்த ஆரியஊடகங்கள் 45 வருடங்களாக செய்து வரும் பார்ப்பு வேலைகள் பல்லாயிரங்களை தொடும்.

1) திமுக ஊழல் கட்சி என தொடர்ந்து பிரட்சாரம் செய்தால்
அதிமுக சுத்தமான கட்சின்னு மக்கள் மனதில் பதிய வைத்தனர்

2) திமுகவில் மாறன் குடும்ப சொத்துக்களை பட்டியலிட்டு கலைஞர் சொத்துக்கள் என நம்ப வைத்தனர்.
அதே சமயம் ஜெ பெயரில் உள்ள சொத்துக்களை மட்டும் காட்டிவிட்டு அவரது உடன் பிறவா சகோதரியின் பல லட்சக் கோடி சொத்துக்களை மறைத்தனர்.

3) கலைஞர் தள்ளு வண்டியில் முடங்கி விட்டார் எனவும் வயதாகி விட்டதால் மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்தாலும் செயல்படமாட்டார் எனவும் செல்வி ஜெயாதான் ஆரோக்கியமானவர் எனவும் 2016 தேர்தலில் மக்களிடம் பரப்பினர்.

4)திமுக குடும்ப கட்சின்னு நம்ப வச்சு சசி & கோ மற்றும் அமைச்சர்களின்  குடும்பங்கள் அடிச்ச கொள்ளைகளை மூடி மறைத்தன ஊடகங்கள்.

5) ஜெயலலிதாவை மிகச்சிறந்த நிர்வாகியாகவும் எதை கண்டும் அஞ்சாதவராகவும் ஒரு பிம்பத்தை உருவாக்கியதே இந்த ஊடகங்கள்தான்.

6)2G ன்னு இல்லாத ஒன்றை, இருப்பதாய் நம்ப வைத்ததிலும் ஆ.ராசா போன்றவர்களின் வீடுகளில் சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்றவைகள் பலமுறை நடத்திய ரெய்டுகளில் ஒத்த ரூபாய கூட கைப்பற்றபடவில்லை என்ற போதிலும் 176000 கோடி இழப்பு என்பதை ஊழலாக மாற்றி
மக்கள் மனதில் பதிய வைத்ததிலும் ஊடகங்களின் பங்குதான் பிரதானமானது.இன்றும் தொடருகிறது.

7) அதிமுகவை சேர்ந்த கரூர் அன்புநாதன் தொடங்கி, சேகர் ரெட்டிவரை, அதிமுக தலைவர்களின் பினாமிகளிடமிருந்து நேரடியாக பிடிபட்டுள்ளவைகள் பல நூறு கோடி ரொக்க பணம் & கிலோ கணக்கிலான தங்கம் ஊடகங்கள் நேர்பட பேசுவதேயில்லை

8)கலைஞர் மீதோ ஸ்டாலின் மீதோ எந்த ஊழல் வழக்கும் நிலுவையில் கூட இல்லை.

ஆனால் OPS, எடப்பாடி பழனிசாமி, விஜயபாஸ்கர்ன்னு எல்லா அதிமுக அமைச்சர்களும் ஆயிரக்கணக்கான கோடிகள குவிச்சத ஊடகங்கள் விவாதிப்பதேயில்லை.

9)40 வருசமாக பொதுவாழ்வில் ஈடுபட்டுவரும் ஸ்டாலின் மீது குடும்ப வாரிசு அரசியல் பட்டம்.
ஆனால் சசி தீபா போன்றவர்களை ஜெயாவோட வாரிசுகளாக மாற்றவும் ராமதாசின் வாரிசாக அன்புமணியை காட்டவும் ஓடி ஓடி உழைக்கின்றன இந்த பார்ப்பு ஊடகங்கள்

10) கடந்த 6 வருடங்களில் தமிழகத்தில் நடந்த சில லட்சக்கோடி  மெகா ஊழல்கள் பற்றி விகடன் தினகரன் பத்திரிக்கைகள் தவிர எந்த ஒரு ஊடகமும் வாய்திறக்கவில்லை.

அவர்களுக்கு வியாபாரம்தான் முக்கியம். அவாள் ஊடகங்களுக்கு திமுக என்றால் அலர்ஜி.
ஆனால் மற்ற ஊடகங்கள்?

எந்த ஆதாரமும் இன்றி 45 வருடங்களாக கலைஞர் மீது ஊழல்வாதி முத்திரை குத்தும் ஊடங்கள் கடந்த 6 வருடங்களாக வெளியே வந்த எந்த ஊழலை பற்றியும் விவாதிக்காதது ஏன்?

No comments:

Post a Comment