Wednesday 5 July 2017

ஆரியம் வளர்க்கும் நடிகர் சேகருக்கு ஒரு திராவிடனின் பதில்**

ஆரியம் வளர்க்கும் நடிகர் சேகருக்கு ஒரு திராவிடனின் பதில்**

கேள்வி :- திராவிடம்னா என்னா அண்ணே..?

பதில் :-  ஆரியம் என்ற அடிமைத்தனத்தை இருளை போக்க வந்த சூரியன்தான் திராவிடம்.


கேள்வி :- மது ஆலைகளை நடத்திக்கொண்டே மது ஒழிப்பு பேசுறது..திராடவிடம்

பதில்:-  மிடாஸ் என்னும் சாராய கம்பெனியின் முதலாளியே ஆரியத்தாய் ஜெயலிதாதானே . அக்கம்பெனிக்கு MD யாக ஜெயாவால் நியமிக்கப்பட்ட ஆரியர் சோ என்னும் ஆரியர்தானே.
இங்கே திராவிடம் எங்கே வந்தது?
.
கேள்வி :-  ஊரார் தாலியை மேடை போட்டு அறுத்துவிட்டு தன் குடும்பத்து திருமணத்தை தாலிகட்டி நடத்துவது..திராவிடம்

பதில் :- ஆரிய குடும்பத்தில் இளம் விதவைகளுக்கு மொட்டையடித்து வெள்ளை புடவை கட்டி அவர்களை கடைசி வரை வீட்டின் மூலையில் அமங்கலியாக அமரவைத்தது ஆரியம்.

இளம் விதவைகளுக்கு மறுமணம் செய்து அழகு பார்த்தது திராவிடம்

பெண்ணுக்கு தாலி கட்டி அடிமையாக நடத்தியது ஆரியம்
பெண்களுக்கு சமஉரிமைகள் தந்து ஆதரித்தது திராவிடம்


 கேள்வி :-மணல் கொள்ளை அடித்துக் கொண்டே நதிகள் பாதுகாப்பு பற்றி பேசுவது..திராவிடம்

பதில்:-  ஆரியத்தாய் ஜெயலலிதா ஆட்சியில்தான் பெரும் கமிசனுக்கு மணல் கொள்ளை உரிமைகள் வழங்கப்பட்டது.


கேள்வி :- சாதி மத ஒழிப்பு பேசிக்கொண்டு சாதி பார்த்தே தேர்தலில் வாய்ப்பு தருவது..திராவிடம்

பதில் :-  ஆயிரம் ஆண்டு சாதி வளர்த்து போற்றி இன்றும் மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி வரும் ஆரிய கூட்டத்தின்
ஆட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாத்தான் அழிக்க முடியும்.

ஆரியத்தின் விஷ வித்துக்களை கொஞ்சம் கொஞ்சமாக ஒழிக்க திராவிடமும் சில சமரசங்களை செய்துதான் ஆக வேண்டும். கலப்புத் திருமணம் என்னும் சாதி இன்னும் சில வருடங்களில் தமிழகத்தின் மிகப்பெரும் சாதியாக உருவாகப்போகிறது.

அப்போது ஆரியம் பல் இளிக்கப்போவது நிச்சயம்.

கேள்வி:- ஏரி குளத்தை எல்லாம் பட்டா போட்டு காலி பண்ணிட்டு இப்ப தூர் வாரி நடிக்கிறது..திராவிடம்

ஆரியத்தின் பினாமி MGR ஆட்சியில்தான் ஜேப்பியார் முதல் சாராய உடையார் வரை ஏரிகள் தாரை வார்க்கப்பட்டது. அதற்கு  உதவியது அன்றைய ஆரிய IAS அதிகாரிகள்தான்.

கேள்வி :- மாறி மாறி ஆட்சியில் இருந்தாலும் ஆளுங்கட்சி என்ன செய்கிறதுன்னு கேள்வி கேக்கிறது.. திராவிடம்

பதில் :-  1967 முதல் 2017 வரை திராவிட ஆட்சி திமுகவால் நடத்தப்பட்டது 21 வருடங்கள்

மீதி 29 வருடங்கள் அதிமுக என்னும் ஆரிய அடிமை கட்சியால் நடத்தப்பட்ட ஆரிய பினாமி ஆட்சி. அதில் ஜெயாவே ஒரு முழு ஆரியர் என்பதை மறந்து விட்டீரே.


கேள்வி :- சாதி மாறி கல்யாணம் பண்ண சொல்லிட்டு தான் மட்டும் தன் சாதியிலேயே கல்யாணம் கட்டுறது..திராவிடம்

பதில்:-  திராவிடத்தலைவர் கலைஞர் வீட்டில் அனைத்தும் கலப்புத் திருமணம்தானே. அவரே சாதி மறுப்பின் அடையாளம்.

கேள்வி  :-பெண்ணுரிமை பேசிக்கொண்டே மூணு நாலு கல்யாணம் பண்றது..திராவிடம்

பதில் :- இந்த விசயத்தில் திராவிடம் தேவலாம். அந்த காலத்தில் ஆரிய கடவுகளுக்கு பலதாரங்கள் இருந்ததே. ஆரிய இதிகாசங்களில் ஒரே பொண்ணுக்கு 5 கணவர்கள் போன்ற விஷயங்கள் திராவிடத்தில் கிடையாதே.

இந்த காலத்தில் எந்த திராவிடனும் பலதார திருமணம் செய்வதில்லை. சட்டமும் அனுமதிப்பதில்லை.


கேள்வி :- விஞ்ஞான ஊழல்,2G ஊழல் செய்துவிட்டு ஊழலை ஒழிப்பேன் என்று கூறுவது..திராவிடம்

பதில் :- நீங்கள்  சொல்லும் இரண்டும் ஆரியர்களால் கற்பனையாக உருவாக்கப்பட்ட அயோக்கியத்தனம்.
இந்த பருப்பெல்லாம் இனிவேகாது.

கேள்வி :- தமிழன் தமிழன் என்று சொல்லிக்கொண்டே தமிழை அழிக்கும் எல்லா வேலையையும் பார்க்கிறது..திராவிடம்

தமிழகத்தில் பிறந்து தமிழர்களை ஏமாற்றி பிழைத்து வரும் 3% ஆரியக் கூட்டம் தமிழை ஒழிக்க சமஸ்கிருதம் இந்திக்கு வரவேற்பளித்து செய்து வரும் துரோகம் ஊரே நாறுதே
ஆரியரே

கேள்வி :-இப்படி கூச்சப்படாம நடிப்பதற்கு பேருதான் #திராவிடம்னு சொல்றாங்கப்பா...

பதில் :- நாடகம்  போடுவது,  நடிப்பது , காட்டிக்கொடுப்பது, சண்டை மூட்டி கலவரத்தை ஏற்படுத்துவது,  சாதிக்கலவரம், மதக்கலவரம் உண்டாக்குவது போன்ற தகிடுதத்தம் செய்வது
எல்லாம் அசிங்கப்பிடித்த ஆரியம்தானே

அனைத்து விதமான ஏமாற்று வேலைகளுக்கும் பித்தலாட்டத்திற்கும் அடிப்படையே #ஆரியம்தான்

No comments:

Post a Comment