Sunday 2 July 2017

உங்களுக்கு #திராவிடம் என்ற வார்த்தை பிரட்சினையா? இல்லை #திராவிட_கட்சிகள் பிரட்சினையா? இல்லை #திராவிடக்கொள்கைகள் பிரட்சினையா?....தமிழ் தேசிய குஞ்சுகளே

 உங்களுக்கு #திராவிடம் என்ற வார்த்தை பிரட்சினையா?  இல்லை #திராவிட_கட்சிகள் பிரட்சினையா? இல்லை #திராவிடக்கொள்கைகள் பிரட்சினையா?....தமிழ் தேசிய குஞ்சுகளே

உன்னுடைய நோக்கம் ஆட்சிக்கு வருவது மட்டுமே. அதற்கு திராவிட கட்சிகள் தடையாக உள்ளது. அதற்கு ஏன் திராவிடம் என்ற வார்த்தைக்கு பல்வேறு அர்த்தத்தை கண்டுபிடித்து களங்கத்தை கற்பிக்கிறாய்.

திராவிடம் என்ற வார்த்தைக்கு வரலாற்றில் அர்த்தம் தேடி பக்கம் பக்கமாய் எழுதுகிறார்கள் தமிழ்தேசிய மூடர்கள்.

திராவிடம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா? உனக்கு மட்டுமல்ல எவருக்குமே தெரியாது. ஒவ்வொருவரும் அவரவர் அறிவுக்கு ஏற்றபடி யானையை குருடன் தடவி பார்த்து கருத்து சொன்னது போல சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

திராவிடம் என்ற சொல்லுக்கு எந்த அர்த்தமாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும். ஆனால் திராவிட கட்சிகளால் உனக்கு கிடைத்த #சமத்துவத்தையும் #சமூகநீதியையும் நீ இல்லையென சொல்லிவிட முடியுமா?

சூத்திரனாகவும் பஞ்சமனாகவும் தீண்டாமையால் கைக்கட்டி வாழ்ந்த நீ இன்று IAS IPS அதிகாரிகளானது எப்படி? அதை தந்தது நீதிகட்சி ,திக, திமுகதான்.
அதிமுகவை இதில் சேர்க்க முடியாது. அது ஆரியர்களால் திராவிட அடிமைகளை வைத்து உருவாக்கப்பட்ட கட்சி.

ஆரியர்கள் திராவிடம் என்ற வார்த்தையை வெறுப்பதில் அர்த்தம் உண்டு. ஆனால் திராவிடத்தால் பலன் பெற்ற நீ அந்த வார்த்தையால் வீழ்ந்தோம் எனச் சொல்வது கேடு கெட்டதனம் இல்லையா?

#ஆரியம் என்பது அடிமைத்தனத்தை மதத்தின் பெயரால் உருவாக்கும் கருவி
#திராவிடம் என்பது அடிமைத்தனத்தை உடைந்தெறிந்து சமத்துவத்தை உருவாக்கும் கருவி.

திராவிட ஆட்சியில் ஆயிரம் குறைகள் இருக்கலாம். திராவிட தலைவர்கள் மீதும் ஆயிரம் குறைகள் இருக்கலாம். அதை நீ சுட்டிக்காட்டி ஓட்டு வாங்கு. அதை விட்டு விட்டு திராவிடம் என்ற வார்த்தைக்கு வரலாற்றில் அர்த்தம் தேடி என்ன செய்யப்போகிறாய்?

திராவிடம் என்ற சொல்தான் உனக்கு சமத்துவம் தந்தது. எனவே இன்றைய சூழலில் திராவிடம் என்றால் சமத்துவமே என்றே பொருள் கொள்க.

இன்று நாம் தமிழன் என்பாய்
நாளை நாம் தேவர் , நாம் நாடார் என்பாய். பின்னர் நாம் சென்னை, நாம் கன்னியாக்குமரி என்பாய்.
இப்படியே போனால் வட்டாள் நாகராஜ் மாதிரி குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட வேண்டியதுதான்.

ஒரு உண்மையை சொல்லவேண்டுமென்றால் தமிழகத்தில் உங்கள் கணக்குப்படி 70% பேர் வந்தேறிகளே. அவர்கள் ஓட்டு இல்லாமல் நீங்கள் ஆட்சிக்கே வரமுடியாது.

தமிழ் தேசிய குஞ்சுகளே .....

நீங்கள் கலைஞரின் சாதியை பேசுவீர்கள். ஆனால் ஜெ யின் சாதியை பேசமாட்டீர்கள். மாறாக ஈழத்தாய் பட்டம் கொடுத்து அவர் காலில் விழுந்து பெருமையடைவீர்.

45 வருடம் முன்பு நடந்த சர்க்காரியா கமிசனை பற்றி வாய் கிழிய பேசுவீர்கள். ஆனால் சொத்து குவிப்பு வழக்கென்றால் அனைத்து துவாரங்களையும் பொத்திக் கொள்வீர்கள்.

2G இழப்பு என்பதை 176000 கோடி ஊழல் என்று திரிப்பீர்கள்.
ஆனால் 2011-17 வரை அதிமுக அடித்த பகல் கொள்ளை பற்றி பேசாமல் வாய் மூடி மௌனம் சாதிக்கிறீர்கள்.

திமுகவை குடும்பக்கட்சி என்பீர்கள். ஆனால் சசிகலா குடும்பம் கண்ணுக்கே தெரியாது. அப்படித்தான் ராமதாஸ் குடும்பம்தான் பாமாகா.
பாமகாதான் குடும்பமே.

ஏன் இந்த இரட்டை வேடம்?

இதெல்லாம் பெட்டி படுத்தும் பாடா? இல்லை செலக்டிவ் அம்னீசியா?

கலைஞரை தளபதி ஸ்டாலினை எதிர்த்து அரசியல் செய்ய ஆயிரம் நேர்மையான வழிகள் உள்ளனவே. அதில் ஒன்றை தேர்தெடுக்கலாமே!  அதை விட்டு விட்டு திராவிடம் என்ற வார்த்தையை நோண்டுவது அறிவிலிகள் செய்யும் வேலை.

இன்றைய சூழலில் அதிமுக என்ற அடிமைகள் கூட்டம் திக்குத் தெரியாத காட்டில் சுழன்று திரிகிறது. சாதி வெறியர்களும் மத வெறியர்களும் தலைதூக்கியுள்ள இந்த நேரத்தில் தமிழ்தேசியம் பேசி வெட்டியாக பொழுதை போக்காமல் அடிமைகளை திருத்தி திமுகவிற்கு சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட நல்ல அமைப்பை நல்ல கட்சியை உருவாக்க முயற்சி செய்யுங்கள்

வரவேற்கிறோம்
வாழ்த்த தயாராக இருக்கிறோம்.

By Antony Parimalam

No comments:

Post a Comment